ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
மக்கள் தொலைக்காட்சிக்கு மிரட்டல் இலங்கைத் தமிழர்களின் உண்மை நிலையை ஒளிபரப்பியதால் மக்கள் தொலைக்காட்சியை தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் இனப்படுகொலையை விளக்கும் படக்காட்சிகளை உடனே நிறுத்துமாறு நள்ளிரவில் காவல்துறையினர் வற்புறுத்தினர். இலங்கைத் தமிழர்களின் அவலநிலை குறித்த குறுந்தகடுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, இலங்கைத்தமிழர்களின் உண்மை நிலை குறித்த காட்சிகள் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. சிறிது நேரத்திலேயே தொலைபேசியிலும், நேரிலும் மிரட்டல்கள் வரத்தொடங்கின. இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வந்த நுங்கம்பாக்கம் துணை ஆணையர் ஜாபர் ஜ…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழ அரசுக்கு அனுமதியில்லை இலங்கைக்கு தூதரகம் ! ஆறு கோடி இறந்துவிட்டதா ? தாய் தமிழகமே ! எங்கள் கண்ணீர் கொஞ்சம் துடைக்க இன்றாவது முன் வருகிறீர் !! அதற்கு எம் நன்றிகள் ! தாய் தமிழகம் வேட்டிக்கும் பணத்துக்குமாய் ஒட்டு போட்டு எங்கள் குழந்தைகளை கருவிலேயே சிங்களம் கொல்ல வைத்துவிட்டீரே என்று உங்களை அன்று திட்டி தீர்த்தவன் நான் ! உலக நாடுகள் எல்லாம் எங்களை பார்த்து பரிதாபப்பட , நீங்கள் மானாட மயிலாட பார்த்து மயங்கி கிடந்த பொது , எப்படி எங்களை பொறுத்து கொல்ல சொல்வீர் ? ஒரு ஆயிரம் அமெரிக்கர் இறந்ததற்காய் ஈராக் , ஆப்கானிஸ்தான் , என்று மத்திய கிழக்கே இன்று அடக்க பட்டதே ! ஒரு யூதன் கொல்லபட்டால் உலக போறே வெடிக்கும் அளவுக்கு ஒரு அரசியல் உருவாக்க பட்டதே ! இவை எல்லாம் எப்படி …
-
- 0 replies
- 968 views
-
-
Jan 27, 2011 / பகுதி: செய்தி / இராணுவ நீதிமன்றம் சட்டபூர்வமானது - சிறீலங்கா உயர் நீதிமன்றம் தீர்ப்பு இலங்கையில் இராணுவ நீதிமன்றம் சட்டபூர்வமானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வெளியிட்டது. அதில் பொன்சேகாவுக்கு தண்டனை விதித்த இராணுவ நீதிமன்றம் நாட்டின் அரசமைப்புக்கு உட்பட்டது என்று தெரிவித்துள்ளது. இராணுவத்தில் இருந்த போதே அரசியலில் ஈடுபடுவதற்கு முயன்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இராணுவ நீதிமன்றம் சரத் பொனசேகாவுக்கு 30 மாத கடுங்காவல் தண்டனை விதித்தது. இதனை அடுத்து அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்துச் செய்யப்படுவதாக சபாநாயகர் அற…
-
- 0 replies
- 441 views
-
-
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்த சுவிட்சர்லாந்து தீர்மானம்:- 26 ஜனவரி 2011 புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்துவதற்கு சுவிட்சர்லாந்து அசராங்கம் தீர்மானித்துள்ளது. புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு மீளவும் அனுப்பி வைப்பது குறித்து சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. வடக்கு கிழக்கு நிலைமைகள் சுமூகமடைந்துள்ளதாகவும், இதனால் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வன்னிப் பிரதேசத்தைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு புகலிடம் வழங்கப்பட மாட்டாது…
-
- 0 replies
- 892 views
-
-
வடமராட்சி, பொலிகண்டியில் தந்தை மகன் ஆகிய இருவரும் வெள்ளைவான் ஆயததாரிகளால் கடத்தல்:- 26 ஜனவரி 2011 வடமராட்சி, பொலிகண்டி பகுதியின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மகன் ஆகிய இருவர், வெள்ளை வான் ஆயுததாரிகளால் அடுத்தடுத்து கடத்தப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்களால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்களையடுத்து, சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை வழங்க குடும்பத்தவர்கள் பின்னடிக்கின்றனர். கடத்தப்பட்ட மகனுக்கு சுமார் 35 வயது வரையில் இருக்குமென அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். வன்னி யுத்தத்தினில் அகப்பட்டு, வவுனியா நலன்புரி நிலையமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த இவர், அண்மையிலேயே வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. முன்னதாக ஆயுதங்கள் சகிதம் வீட்டிற்கு வந்…
-
- 0 replies
- 546 views
-
-
செந்தமிழைக் கலப்பு மொழியாக்க முயன்றால் நாம் தமிழர் கட்சி களத்தில் இறங்கிப் போராடும்! கணினித் தமிழ் பயன்பாடு - என்கிற போர்வையில், செந்தமிழ் மொழியில் கணினியில் சமக்கிருத ஒலிகளுக்கான தனி எழுத்து வடிவைத் திணிக்க நடக்கும் சதியை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கையில் கலப்பினம் தான் இருக்கமுடியும் என்கிற இனவெறியன் ராசபட்சேவின் பாசிசக் கருத்துக்கும், கணினியில் கலப்பு மொழி அவசியம் என்கிற குழப்பவாதிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று நாம் தமிழர் குற்றஞ்சாட்டுகிறது. உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் உள்ள எல்லா ஒலிகளையும் உள்ளடக்கிய எழுத்து வடிவம், எந்த மொழியிலும் இல்லை. தங்கள் மொழியில் இல்லாத ஒலிகளுக்கான எழுத்துவடிவைத் தங்கள் மொழியில் உள்ள எழுத்துக்களைக் கொ…
-
- 0 replies
- 901 views
-
-
தமிழர்கள் என்ற காரணத்தினாலேயே, ஈழத் தமிழர்கள் கேட்பாரற்று வேட்டையாடப்பட்டு வருகின்றனர்! அனுராதபுரம் சிறையிலும் அதுவே நிகழ்த்தப்பட்டுள்ளது! அனுராதபுரம் சிறைச்சாலையில் இன்னொரு இனக்கொடூரம் சிங்கள வன்முறையாளர்களால் தமிழ்க் கைதிகள்மீது நடாத்தப்பட்டுள்ளது. தமிழர்கள் என்ற காரணத்தினாலேயே, ஈழத் தமிழர்கள் கேட்பாரற்று வேட்டையாடப்பட்டு வருகின்றனர்! அனுராதபுரம் சிறையிலும் அதுவே நிகழ்த்தப்பட்டுள்ளது! சிறைச்சாலைகளில் ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைகள் போலவே, இதுவும் உலகின் மனச்சாட்சிக்கு ஒரு உறுத்தலைக் கொடுத்துவிட்டு நீங்கிவிடும். ஆனாலும், தமிழர்கள் என்பதால் அவர்கள்மீது நடாத்தப்படும் கொடூரங்கள் சிறைச் சாலைகளையும் விட்டு வைக்கப் போவதில்லை. எங்களுக்காகக் குரல் கொட…
-
- 0 replies
- 551 views
-
-
27ம் தேதி, சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் அமிதாபுக்கு நன்றி தெரிவித்து தந்தி கொடுக்கின்றனர் சென்ற ஆண்டு கொழும்பு நகரில் சிங்கள இனவெறி அரசின் தயவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கலந்து கொள்ள மறுத்தார் இந்தியாவின் மூத்த நடிகர் திரு. அமிதாப் பச்சன் அவர்கள். அவரது துணிச்சலான முடிவை ஒட்டுமொத்தத் தமிழினமும் பாராட்டியது. அந்த திரைப்பட விழாவை நடத்துகிற அமைப்போ, மன சாட்சியே இல்லாமல், அமிதாபை அந்த விழாவின் சிறப்புத் தூதுவர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. இதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் தமிழரின் உணர்வுகளை மதித்த அமிதாபுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், ஆயிரக்கணக்கான நன்றி கூறும் தந்திகளை ந…
-
- 0 replies
- 760 views
-
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போர், யுத்தம் ஆகியவற்றை பின் சீற்றில் வைத்துவிட்டேன். இப்போ அபிவிருத்தியும் பொருளாதார வளர்ச்சியும்தான் எனது முதல் வேலை. அதற்காகவே இந்தியாவுடனும் சீனாவுடனும் புதிய அத்தியாயத்தினை ஆரம்பித்துள்ளேன். இந்த புதிய உறவில் கல்வி, தொழில் நுட்பம், வாணிபம், ஆகிய துறைகளில் கூட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனூடாக அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இவ்வாறு கூறியுள்ளார் பராக் ஒபாமா. இந்த புதிய அத்தியாயமும், புதிய வாணிபமும்தான் தமிழர் பிரச்சினைகளில் தலையிடுவதற்கான செல்வாக்கினை மட்டுப்படுத்தவும் அல்லது புறக்கணிக்கவும் காரணமாக அமைந்துவருகின்றதா? அல்லது அமைந்துவிடுமா? எல்லா கள்ளர்களும் சேர்ந்து கைகுலுக்கிக்கொண்டால் எல்லோருக்கும் நலம் தானே தமிழர…
-
- 1 reply
- 720 views
-
-
இலங்கை ஜெயசூர்யாவை எதிர்த்து நாம் தமிழர் மேற்கொண்ட முற்றுகை போராட்டத்தின் காணொளி - தமிழ் தேவன் தமிழீழத்தை அழித்து தமிழ் மக்களை கொன்று குவித்த, சிங்கள ராஜபட்சேவின் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர், மட்டை பந்தாட்ட வீரர் ஜெயசூர்யா, புதிய தலைமுறை பத்திரிகை நடத்தும் , சென்னை சிக்ஸ் சூப்பர் மட்டை பந்தாட்ட போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள சென்னை வருவதாக இருந்தது. இதை அறிந்த நாம் தமிழர் கட்சியுன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியை ரத்து செய்ய வேண்டும் மீறி நடத்தினால் நாம் தமிழர் மைதானத்தை சுற்றி முற்றுகை போராட்டம் நடத்தும் என எச்சரித்து கண்டன அறிக்கை வெளியிட்டார். இதைஅடுத்து பல்வேறு அமைப்புகளும்,.கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தன…
-
- 0 replies
- 758 views
-
-
தன்கிழமை, ஜனவரி 26, 2011 சென்னை மகாபோதி விகாரை மீதான தாக்குதல் சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்க உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், மீனவர்கள் கொல்லப்படுவதன் பிரதிபலிப்பாகவே இத்தாக்குதலுக்கான நோக்கமாக இருக்கும் என அச் செய்தியிலே தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் குறித்து பட்டியல் இடப்பட்டுள்ளதாகவும், அவர்களை இரண்டொரு நாட்களில் கைது செய்ய நடவடிக்கை இடுக்கப்பட்டு வருவதாகவும் சென்னை பொலிஸ் உயரதிகாரி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், பிக்குமாருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், விகாரை சுற்றுவட்டாரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என ஐ.பி.என் செய்தி அறிக்கையில்…
-
- 6 replies
- 985 views
-
-
அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் அமெரிக்க-கனடிய தமிழர்களின் போராட்டம். அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ள, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவை கைது செய்யக் கோரி, வெள்ளை மாளிகை முன் அமெரிக்க-கனடிய தமிழர்கள் ஆர்பாட்டமொன்றை நடாத்தியுள்ளனர். திங்கட்கிழமை (24-01-2011) காலை 11மணி முதல் மாலை 3 மணி வரை இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில், ஈழத்தமிழ் மக்களுடன் இணைந்து இந்திய தமிழகத்து உறவுகளும் பங்கெடுத்திருக்கின்றனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் திரு.விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் ' மனித குலத்துக்கு எதிரான, இனப்படு கொலையிலும், போர் குற்றங்களிலும் சம்பந்தப்படுகின்றவர்கள் மீது, உலக நாடுகளும், உலகப் பொது மன்றமும் தார்மீகரீதிய…
-
- 0 replies
- 720 views
-
-
இன்று இந்தியாவின் 62-ஆவது குடியரசுத் திருநாள். இன்றைக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்தியப் பெருங்கடலில் தமிழ் மீனவர் ஜெயக்குமார் இலங்கை ராணுவத்தால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். மீனவர் வீரபாண்டியனின் குருதியால் சிவந்த கடல் நீர் நிறம் மாறுவதற்குள் இதோ மேலும் ஒரு கொலை! வீரபாண்டியன் கொலை பற்றிய செய்தியையே தமிழ்நாட்டின் முன்னணி நாளேடான தினத்தந்தி 10-ஆம் பக்கத்தில்தான் வெளியிட்டது. ஒரு நாட்டின் குடிமக்கள் இன்னொரு நாட்டின் ராணுவத்தால் தாக்கப்படுவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? ஆனால் உள்ளூர்ப் பத்திரிகையிலேயே 10-ஆம் பக்கத்தில் வெளியிடுகிற அளவுக்கு இங்கு இது ஒரு சர்வசாதாரண நிகழ்வாகி விட்டது. ஆனால் இதற்காக அந்த நாளேட்டின் மீது குறை கூற ஏதும் இல்லை. பங்குச் ச…
-
- 2 replies
- 1.1k views
-
-
வணக்கம். ‘இனியவளே’ படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு உங்களை நான் சந்தித்த அந்த நாட்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். நீங்களும் நானும் உங்கள் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அந்தப் பேச்சில் பெரும்பான்மை தமிழைப் பற்றியதாக, தமிழினம் பற்றியதாக, தமிழீழம் பற்றியதாகவே இருக்கும். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நானும் நீங்களும் நிற்கும் இடம் பற்றி யோசிக்கிறேன். திரைப்படத்துறை நம் தமிழ் உணர்வுகளை எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. வெற்றியோ தோல்வியோ, புகழோ பெயரோ… எதனாலும் நம் போராட்ட உணர்வு மழுங்கிப் போய்விடவில்லை. அன்றும் இன்றும் நம்மை ஒருங்கிணைத்தது, இணைப்பது மொழி- இன உணர்வும் தமிழீழ வேட்கையும்தான்! திரைக்கலைஞர்களாக இருந்து …
-
- 4 replies
- 1.3k views
-
-
கடும் யுத்த காலமாக இருந்த கடந்த 30 ஆண்டுகளில் கூட யாழ்ப்பாணம் குடிநீருக்காக கொழும்பை நம்பி இருந்ததில்லை. ஆனால் தற்போது டசின், டசினாக தண்ணீர் போத்தல்களை வெளிமாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யும் நாதியற்ற நிலையினை யாழ்ப்பாணம் அடைந்து வருகின்றது என்று தெரிவித்தார் யாழ். வர்த்தக கைத்தொழில் சங்கத்தின் தலைவர் பூரணச்சந்திரன். யாழ். நகரில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச வர்த்தகக் கண்காட்சியினை முன்னிட்டு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் 'வடக்கு மாகணத்தில் பொருளாதார வர்த்தகச் சூழல்' எனும் தலைப்பில் கருத்தரங்கு இடம்பெற்றது. இதனை யாழ். வர்த்தக கைத்தொழில் சங்கத்தின் தலைவர் புவனேந்திரன் ஆரம்பித்து வைத்தார். "ஆனையிறவில் உற்பத்தி செய்யபட்ட உப்பினை இலங்…
-
- 2 replies
- 912 views
-
-
உள்ளூராட்சி தேர்தலில் கலாநிதி விக்கிரமபாகுவுடன் கஜேந்திரன் தலைமையிலான தமிழ்தேசியத்திற்கான மக்கள் முன்னணியும், சிவாஜிலிங்கம் தலைமையிலான கட்சியும் சேர்ந்து போட்டியிடவுள்ளதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. ஆனால் இதுதொடர்பாக தமிழ்த்தேசியத்திற்கான முன்னணி எதுவித அறிக்கைகளையும் விடவில்லை. My link
-
- 0 replies
- 585 views
-
-
சூடானிய நாட்டுப்பற்றுள்ள விடுதலை அமைப்பு மீது நோர்வே அதிக செல்வாக்கினைச் செலுத்திவரும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு இந்த அமைப்பு அழைப்பினை விடுத்திருப்பதன் அடிப்படையில் நோக்குமிடத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வரவேற்றும் வகையிலே நோர்வே செயல்படுகிறது என எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் டெயிலிமிரர் ஆங்கில ஏட்டில் அதன் பத்தி எழுத்தாளர் Gomin Dayasiri எழுதியுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. அப்பத்தியின் முழுவிபரமாவது, "ஜேசுவும் புத்தரும் வந்திருந்தால் கூட இதுபோல ஒன்றை இலகுவில் அடைந்திருக்கமுடியாது" என 2004ம் ஆண்டு கிளிநொச்சிக்குச் சென்று தமிழ்ச்செல்வனைச் சந்தித்த பின்னர் எரிக் சொல்கெய்ம…
-
- 1 reply
- 1.3k views
-
-
புதன்கிழமை, ஜனவரி 26, 2011 எமது உறவுகள் கடத்தப்பட்டு காணாமல் போய் ஒன்றரை வருடங்களாகின்றன. எமது உறவினரை தேடிக்கண்டுபித்து தாருங்கள், நாங்கள் வெள்ள நிலைமையில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் இன்று பிச்சையெடுத்தே எமது பிள்ளைகளுக்கு உணவு வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாவடிவேம்பு பிரதேசத்தில் உள்ளோர் தமது கவலையை தெரிவித்துள்ளனர். அப்பகுதிக்கு சென்ற கருணாவிடம் மக்கள் இந்த கவலையினை தெரிவித்துள்ளனர். தமது குடும்பம் அன்றாடம் கூலி வேலை செய்தே தமது வாழ்நாளை கொண்டு நடாத்தியதாகவும் தமது கணவர் காணாமல் போனது முதல் தனது தாயார் பிச்சையெடுத்தே எனக்கும் எனது குழந்தைக்கும் உணவு பெற்றுத்தந்ததாக ஒரு இளம் தாயார் கண்ணீர் மல்க பிர…
-
- 2 replies
- 1.2k views
-
-
http://www.yarl.com/files/110125_thol-thirumavalavan.mp3
-
- 1 reply
- 770 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதை நோக்கிப் பயணிக்கிறது? என்பதில் பல தரப்பட்ட அபிப்பிராயங்கள் கிளப்பப்பட்டு வருகின்றன. விடுதலைப் புலிகள் உச்ச நிலைப் பலத்துடன், உலகம் வியக்கும் சாதனைகளை நிகழ்த்திய காலத்தில் சிங்கள அரசியல் தளத்தில் தமது குரலைப் பதிவு செய்யும் முயற்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் தளத்தை உருவாக்குவதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருந்தார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியில் பிளவும், தலைமைத்துவப் பொட்டியும் உச்ச நிலையை அடைந்து அழியும் நிலையில் இருந்த காலகட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் சக்தி உருவாக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டுக்குள் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் கட்சி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ …
-
- 0 replies
- 679 views
-
-
புதன்கிழமை, ஜனவரி 26, 2011 யாழ்.கொட்டடிப்பகுதியில் பனை மரத்தில் கட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. பண்ணையில் ரெலிகொம் கட்டிடத்துக்குப் பின்புறமாக உள்ள கூழாவடி வயிரவர் ஆலய வீதியிலுள்ள வீடு ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கழுத்தில் கயிறு சுருக்கிட்டவாறும் கால்கள் நிலத்தில் தொங்கிய நிலையிலும் இச்சடலம் காணப்பட்டது. யாழ்.நீதிவான் ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைகள் நடைபெற்றது. ஐந்து பிள்ளைகளின் தந்தையான க.தவச்செல்வம் (42 வயது) என்பவரின் சடலமே இதுவென அடையாளம் காட்டப்பட்டது. இவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காணாமல் போயிருந்தார் எனவும் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் வீட்டின் பின்புறமாக பனை மரத்தில் கட்ட…
-
- 1 reply
- 793 views
-
-
மாத்தையாவின் மரணம் தொடர்பாக புதிய கதை! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவராக இருந்த மகேந்திர ராஜா அல்லது மாத்தையா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக புதிய கதை ஒன்று வெளி வந்து உள்ளது. ஜேர்மனியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரை மேற்கோள் காட்டி இச்செய்தி வெளியாகி உள்ளது. பாஸ்கரன் யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் என்றும் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனின் பால்ய நண்பர்களில் ஒருவர் என்றும் கூறப்படுகின்றது. இவர் யாழ்ப்பாணத்தில் சஞ்சிகை ஒன்றில் வேலை பார்த்து உள்ளார். கொழும்பில் பத்திரிகை ஒன்றில் பணியாற்றி இருக்கின்றார். சிங்களவர் மீது புலிகள் இயக்கம் தாக்குதல் நடத்துவதை மாத்தையா கண்டித்தார் என்றும் இதனால் பிரபாகரன் ஆத்திரம் அட…
-
- 2 replies
- 3.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “வியாபாரத்துக்கான திறவுகோல்” எனும் வர்த்தகக் கண்காட்சியை 40,000 க்கும் அதிகமானோர் கண்டுகளித்ததாக, யாழ். வர்த்தக கைத்தொழில் சங்கத் தலைவர் பூரணச்சந்திரன் தெரிவித்தார்.
-
- 0 replies
- 691 views
-
-
மஹிந்தரின் அமெரிக்க விஜயத்துக்கு புதிய காரணம்! ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒரு வகையான நோயால் பீடிக்கப்பட்டு உள்ளார் என்று லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் அதற்கு கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு செய்தி பிரசுரித்து உள்ளது. நோயின் கொடுமையை தாங்க முடியாத நிலையில் சிகிச்சை பெறுகின்றமைக்காகதான் அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு சென்று உள்ளார் என்றும் இச்செய்தி கூறுகின்றது. அங்கு புற்று நோய் வைத்தியசாலை ஒன்றில் இவர் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் இச்செய்தி தெரிவிக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டில் கடந்த இரு மாதங்களாக வைத்தியர்களின் மருத்துவ ஆலோசனைப் பெற்று வந்திருக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது. ஜனாதிபதியின் உடல் நிலை மோசமாக இல்ல…
-
- 7 replies
- 1.7k views
-
-
யாழ் ஆரியகுளம் சந்தியில் இயங்கிவந்த படையினரின் வர்த்தகநிலையம் இன்று 25.01.2011மதியம் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளது. ஆரியகுளம் சந்தியில் உள்ள படையினரின் ' வெஸ்ரா' என்ற பெயரில் அமைந்த வர்த்தக நிலைய மேல்மாடிப் பகுதியியே எரிந்து நாசமாகியுள்ளது.
-
- 0 replies
- 796 views
-