Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கை விரைவில் பான் கீ மூனிடம்! செவ்வாய், 25 ஜனவரி 2011 16:02 இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு, விரைவில் தமது அறிக்கையை பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று இடம்பெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அதன் இணை பேச்சாளர் பர்ஹான் ஹக் இதனை செய்தியாளர்களிடம் அறிவித்தார். இதேவேளை குறித்த நிபுணர்கள் குழுவின் செயற்பாடுகளை முன்கூட்டியே அனுமானிக்க முயல்வது தேவை அற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். tamilcnn.com

  2. இந்திய நாகப்பட்டிண மாவட்ட வேதார்ணயத்திற்கு அருகில் உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த 500 மீனவர்கள் இலங்கையிடம் தஞ்சம் கோரவுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மத்திய அரசிடமோ, இந்திய கடற்படையிடமோ மீனவர் பாதுகாப்பு பிரச்சினைக்கு தீர்வு இல்லாததனால் நாங்கள் இலங்கையிடம் தஞ்சம் கோர தீர்மானித்துள்ளதாக கிராம பஞ்சாயத்தஞ தலைவர் எம்.கதிர்வேல் தெரிவித்துள்ளார். மேலும், 100 வைபர் படகுகளில் அனைத்து மீனவர்களும் கடல் எல்லைக்குச் சென்று இலங்கையிடம் தஞ்சம் கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையிலாவது, மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு சரியான தீர்வு கிடைக்குமா என தான் எதிர்பார்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Add new comment Eelanatham

  3. இந்தியா மீதான தனது நீண்டநாள் வெறுப்பை தமிழர்களைத் தாக்குவதன் மூலம் தீர்த்துக் கொள்கிறது இலங்கை அரசு. இதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்ரகுமாரன் கூறியுள்ளார் இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழக மீனவர்கள் மீது சிறிலங்காப் படையினர் கட்டவிழ்த்து விட்டு வரும் கொலை வன்முறையின் தொடர்ச்சியாக ஜெயக்குமார் எனும் நமது சகோதரன் சிறிலங்கா கடற்படையினரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் எனும் செய்தி நம்மையெல்லாம் கடும் கோபத்திலும் பெருந்துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. சிறிலங்காப் படையினரின் இக் காட்டுமிராண்டித்தனத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டனம் செய்வதுடன், கொலை செய்யப்பட்ட சகோதரனின் குடும்பத்தின…

  4. மீனவர் பாதுகாப்பிற்கு ஒரே வழி ஆயுத பயிற்சி வழங்குதல் - நெடுமாறன் செவ்வாய்க்கிழமை, ஜனவரி 25, 2011 1983 ஆ‌ம் ஆ‌ண்டி‌லிரு‌ந்து 27 ஆ‌ண்டுகளாக த‌‌மிழக ‌மீனவ‌ர்களை ‌இலங்கை கட‌ற்படை தொட‌ர்‌ந்து தாக்கி வருகின்றது. இதுவரை 400‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌மீனவ‌ர்க‌ள் படுகொலை செ‌ய்ய‌‌ப்‌ப‌ட்டிரு‌க்‌கிறா‌ர்‌க‌ள் என இல‌ங்கை‌‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன் அறிக்கை வெளியிட்டுள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே, ந‌ம்முடைய கட‌ல் எ‌ல்லை‌க்கு‌ள்ளாகவே ‌இலங்கைக் கட‌ற்படை அ‌த்து‌மீ‌றி நுழை‌ந்து ‌மீனவ‌ர்களை‌‌த் தா‌க்‌கி வரு‌‌கிறது. ஆனா‌ல் இ‌ந்த 27 ஆ‌ண்டுகால‌த்‌தி‌ல் ஒருமுறைகூட இ‌ந்‌திய‌க் கட‌லோர‌க் காவ‌ல…

  5. அனுராதபுரம் சிறையில் தற்போது பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளன:- 24 ஜனவரி 2011 அனுராதபுரம் சிறையில் தற்போது பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டவண்ணம் இருப்பதாக சிறையில் இருந்து ஜீரீஎன்னிற்குக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. GTN

    • 9 replies
    • 2k views
  6. திங்கட்கிழமை, ஜனவரி 24, 2011 முறிகண்டி பிள்ளையார் கோயிலுக்கு அருகில் அமைக்கப்பட்ட ஹொட்டேல் அமைக்கும் போது எவ்வளவோ தடுத்துப் பார்த்ததாகவும் அது பயனற்று போனதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். ஹோட்டல் கட்டுவதனை கூட இந்த அரசாங்கத்துடன் பேசி தடுக்க முடியவில்லையே என கூறிய சங்கரி புலிகளின் காலத்திலும் கருத்து சுதந்திரம் இருக்க வில்லை என கூறினார். சங்கரி அவர்களே புலிகளின் காலத்தில் கருத்து சுதந்திரம் இல்லை என்றால் எப்படி கிளினொச்சிக்கு போய் புலிகளுடன் பேசினீர்கள். புலிகள் காலத்தில் நீங்கள் எவ்வளவோ அறிக்கைவிட்டும் புலிகள் உங்களை அச்சுறுத்தவும் இல்லை கொலை செய்யவும் இல்லையே. இப்போதுதான் புலிகள் இல்லையே இப்போ நடக்குற விசயத்தை பேசுங்க…

    • 4 replies
    • 1.3k views
  7. செவ்வாய்க்கிழமை, ஜனவரி 25, 2011 சென்னை எழும்பூரிலுள்ள புத்த மடாலயம் தாக்கப்பட்டதற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பில்லை என, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையர்களால் நட‌த்த‌ப்படு‌ம் பு‌த்த மடாலய‌ம் ‌மீது நேற்று நள்ளிரவு தா‌க்கு‌த‌ல் நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது. நம் மீனவர்கள் ஒவ்வொரு முறை சுடப்படும் பொழுதும் தமிழக மீனவரை சுட்டுக் கொன்றது இலங்கை கடற்படையினர் அல்ல என்றும் இலங்கை கடற்படை ஒரு போதும் எல்லையைத் தாண்டுவது இல்லை என்றும் இலங்கை அரசு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது. 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட…

  8. தமிழ் உணர்வாளர் கவிஞர் தாமரை அவர்கட்கு! வணக்கம். உங்கள் தமிழ் உணர்வை மெச்சுகிறேன். உங்களைப் போன்ற இனப் பற்றாளர்கள் இருப்பதால்தான் தமிழனின் மானம் மொத்தமாகக் கப்பால் ஏறாமல் கொஞ்சமாவது மிஞ்சியிருக்கிறது! நீங்கள் கூறிய பல யோசனைகளை சீமான் ஏற்றுக் கொண்டால் அது முதல்வர் கருணாநிதியையும் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதற்குச் சமமாகிவிடும். தமிழினப் படுகொலைக்கு காங்கிரஸ்தான் காரணம் திமுக அல்ல. அம்மாவை விட அய்யா நல்லவர். அதன் அடிப்படையில் காங்கிரசை எதிர்ப்போம் திமுக வை (மறைமுகமாக) ஆதரிப்போம் என்கிறீர்கள். இதைத்தான் சுபவீ காரணம் காட்டுகிறார். அய்யாவை விட அந்த அம்மா மோசமானவர் என்கிறார். அதைத்தான் நீங்களும் வழிமொழிகிறீர்கள். இது எப்படி இருக்கிறதென்றால…

  9. மஹிந்தர் விடயத்தில் மென்மையான போக்கு, மூனுக்கு கண்டனம்! செவ்வாய், 25 ஜனவரி 2011 02:54 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விவகாரத்தில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அமைதி வழியிலான இராஜதந்திரம் என்கிற போர்வையில் மெத்தனப் போக்கைக் கடைப் பிடிக்கின்றார் என்று அமெரிக்காவின் தலைநகர் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டி உள்ளது. இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஆராயும் ஐ.நா நிபுணர் குழு அதன் அவதானங்களை வரும் நாட்களில் பான் கீ மூனுக்கு சமர்ப்பிக்க உள்ள நிலையில் இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உள்ளது. கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களில் ஒருவரான Kenneth Roth இக்குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார். மனித உரிமைகள…

  10. இந்தக் குரலுக்கு உரியவளுக்கு 22வயது. இவளுக்கு ஒரு 3வயது ஆண் குழந்தை இருக்கிறான். வன்னிக்குள் வாழ்ந்து வன்னிக்குள்ளேயே வாழ்வை ஆரம்பித்தவளின் வாழ்வு இன்று எங்கே செல்வதெனத் தெரியாத நிலமையில் இருக்கிறாள். இவளது காதல் கணவன் முள்ளிவாய்க்காலில் காணாமற்போய்விட்டான். அவள் உயிருடன் இருப்பதற்கான தடயங்கள் எதுவுமற்று ஒன்றரை வருடங்கள் சென்ற பின்னும் அவனைத் தேடிக்கொண்டிருக்கிறாள். தனது குழந்தைக்காக அன்றாடத் தேவைகளுக்கு யாராவது உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் உதவிகள் கோரியவளை ஏமாற்றியோர் தான் அதிகமென அழும் இந்த 22வயதுப் பெண்ணின் கதைகளிலிருந்து இதோ…. ஒலிப்பதிவைக் கேட்க இணைப்பில் அழுத்துங்கள். இந்த 22 வயதுப் பெண்ணுக்கு ஒரு சுயதொழில் முயற்சிக்கு இலங்கை ரூபா 30ஆயிரம் ர…

    • 4 replies
    • 2.3k views
  11. Jan 24, 2011 / பகுதி: செய்தி / உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஒஸ்திரேலிய வில்வூட் ஈழத்தமிழர் ஒருவர் ஒஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் உள்ள வில்லாவுட் தடுப்பு முகாமில், கதிர் என்ற புனைப்பெயரை கொண்ட ஈழத்தமிழர் கடந்த ஐந்து வாரங்களாக உணவுத்தவிரப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்முடைய ஏதிலி உரிமை கோரிக்கைக்கு விதிக்கப்பட்டுள்ள அசாதாரண நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தமிழர் போராட்டத்தை நடத்தி வருகிறார். கதிர், 1990 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் தமது இரண்டு சகோதரர்களை இழந்துள்ளார். இதில் ஒருவர் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஸ்ரீலங்காப் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டவராவார். 1990 ஆம் ஆண்டு கதிரின் தந்தை கடத்திச்செல்லப்…

  12. இந்தியாவிலிருந்து 100 பஸ்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானம் _ வீரகேசரி இணையம் 1/25/2011 8:44:16 AM Share இலங்கை போக்குவரத்துச் சபைக்கு இந்தியாவிலிருந்து புதிதாக 100 பஸ்களை இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவின் ஆலோசனையின் பிரகாரமே இந்த பஸ்களை இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் பந்துசேன தெரிவித்தார். இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: போக்குவரத்து அமைச்சரின் ஆலோசனையின் கீழ் 100 பஸ்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பஸ் ஒன்றின் …

  13. இனச்சாவில் கடை போட்டவன், மீள இனம் வழிதத்தளிக்கையில் கலங்கரைதான் ஆவானா? புலிஎதிர்ப்பு என்ற தன்நோய்க்கு, மொத்த இனச்சாம்பலில் மருந்தைத் தேடுவான், மெத்தவலி சுமந்த இனப்புண்ணுக்கு, மருந்துதான் இவன் ஆவானா? புலி முடிந்தகதை என்ற பின்னும், பழி முடிந்துவிடும் இவன் கதைக்கு, நன்மை கரையேறும் நிலை யார்கு? சிங்களம் தலை சுமக்கும் பாவம் குறைப்பு, செய்திடல் தானெ இவர் உயிர்த்துடிப்பு! உண்ணல் மறுத்து புலிச்சாவுக்கு விரதம் இருந்தவன், புலித்தோல்விக்கு அறிவுவெளிச்சம் பிடிக்கின்றான். அதில் துளிவெளிச்சம் அப்பவே உனக்கு நீ பிடித்திருந்தால், அது ‘புலித்துவெசம்’ அருவெருக்கத்தக்க அழுக்காக காண்பித்திருக்கும். கூட்டணி, இப்போதுதான் கோட்டைத் தாண்டுகிறது. மக்களின் பிடிப்பு …

  14. வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் ஐ.நா சபையில் கேள்வி. வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் படைத்தரப்பினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையில் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் நாளாந்த செய்தி விபரிப்பின் போது, பேச்சாளர் மார்டின் நெசர்ஸ்கியிடம் செய்தியாளர்கள் இந்த கேள்வியை எழுப்பியுள்ளனர். அண்மையில் இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றில் வெள்ளைக் கொடிகளுடன் வந்த புலிகளின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சரணடைவதற்கு முன்னர் செய்மதி தொலைபேசியின் ஊடாக விடுதலைப்புலிகளின் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி ஏன் …

  15. URGENT - Your participation is needed to support the Galle Appeal by Reporters Without Borders (RSF) and JDS Next to IIFA and Tamil Literary Conference, Srilanka is now preparing itself to host the Galle Literary Festival, an International event on Literature. RSF and JDS have involved well known personalities like Noam Chomsky and Arundathi Roy who have personally initiated this campaign requesting those invited for the event to keep themselves away from it, keeping in mind the anti-human atrocities and the genocide by the Srilankan Government against the Tamils. Please take a minute to sign this petition to show our solidarity http://en.rsf.org/sri-…

  16. பாரததேசத்து பாசத்தமிழா விழித்தெழு---சங்கிலியன் இந்தியதேசத்தில் சிறையுண்ட தமிழா எழுந்திடு தமிழன் என்ற பெயருக்குள் தயக்கம் என்ற சொல் இல்லை, இமயத்தில் கெடி நட்டோம்.எல்லையற்றகடல் தொட்டோம் என்றெல்லாம் பெருமைகொள்ளும் உன் சாதி இன்று நாதியற்றுப்போனதடா ,,,,,,,,,,,,,,,,,,,,,,,, குமரிக்கண்டத்தில் கருவுற்றோம் கடலினால் பிரியுற்றோம் பிரிந்தது ஈழதேசம் ஈழம் என்ற தேசமதில் காலத்தின் கட்டளைக்காய் சிங்களவன் மகுடம் சூட செந்தமிழன் கைகளுக்கு வந்ததடா கைவிலங்கு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, யார் இந்தச்சிங்களவன் ஓடிவந்த விஜயனிடம் நாடி வந்த வாரிசுகள் சிங்கத்தின் பிள்ளைகட்கு செந்தமிழ் செருப்பாகிப்போய் விடுமோ பெரும் தலவன் படையதினில் பகைவிரட்டப்புறப்பட்டோம்,,,…

  17. தொடரும் மீனவர்கள் படுகொலை - தொலையட்டும் இந்தக் குடும்பம்..! என் இனிய வலைத்தமிழ் மக்களே..! மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஆட்சி இது என்று வாய் கூசாமல் புழுகிக் கொண்டிருக்கும் தி.மு.க. ஆட்சியின் மக்கள் நலச் சேவைகள் இதோ இன்றைக்கும் தொடர்ந்திருக்கிறது. இதுவரையிலும் 500-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையிலும் இந்தியா இன்றைக்கும் அமைதிப் புறாவாக "ஏன் ராசா என் மக்களை கொல்றீங்க?" என்று புலம்பலை மட்டும் செய்து கொண்டிருக்கிறது..! இந்தியா முழுமைக்குமே இப்படியா? என்று கேட்காதீர்கள். இது தமிழர்களுக்கு மட்டும்தான்.. ஒரு பஞ்சாபியனுக்கோ, வங்காளனுக்கோ, மராத்தியருக்கோ இந்தக் கதி நடந்திருந்தால் இந்தியாவே கொந்தளி…

  18. ஜனாதிபதி மஹிந்தவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை: நாடு திரும்புவதும் தாமதம். [Monday, 2011-01-24 05:49:31] அமெரிக்கா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, அங்குள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள எம்.டி என்டர்சன் கென்சர் சென்டர் என்ற வைத்திய சேவைகளைக் கொண்ட நிறுவனத்தில் இவர் சிகிசை பெற்று வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது குறிப்பிட்ட வைத்திய நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பெப்ரவரி மாதம் நான்காம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வகையில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந…

  19. Started by Panangkai,

    சாதீ! பனங்காயின் பனக்காய்த்தனமான ஆய்வு. இன்று இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லாமையினால்.. சாதி வேறுபாடுகள் தலைதூக்கத்தொடங்கியிருப்பத்தாக எமது யாழ்ப்பாண நிருபர் அறியத்தந்தார் ( அதான் பச்சை சட்டை போட்டு மூனாவில் தொடங்கும் தெருவுக்கு பக்கத்து தெருவில் இருப்பவர்) இந்தியாவினால் மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழர்கள் இதை உக்கிரமாக பரப்புவதாக சொல்கிரார்கள். ஐரோப்பாவில் இருக்கும் மூளை சலவை செய்யப்பட்ட தமிழர்களும் இதில் அடக்கம்.. எமக்கு இருக்கும் சுயநலம், விண்ணானம் ஆகியவற்றுடன் சாதிவெறியும் சேர்ந்தால் ரத்த ஆறு ஓடுவதை தடுக்கமுடியாது. இந்த சாதி பிரச்சினையை நுளைப்பதில் லோக்கல் தமிழ் அரசியல்வாதிகள் ஆதரிப்பதாகவும் தெரியவருகிறது. விடுதலை, போர…

    • 20 replies
    • 3.4k views
  20. அமெரிக்கத் தகவல் கூடம் யாழில் திறந்து வைப்பு!செவ்வாய், 25 ஜனவரி 2011 00:33 .அமெரிக்க தகவல் நிலையம் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில முதன் முதலாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா ஏ புட்டினிஸால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர் அமெரிக்க தகவல் கூடம் தான் யாழ்ப்பாணத்தில் செயற்படும் முதலாவது உயர்தர இணைய இணைப்பு கொண்ட நிலையமாகும். அமெரிக்க தகவல் கூடமானது திறக்கப்படுவதானது நாம் யாழ்.மக்களோடு கொண்டுள்ள தளராது தொடரும் அர்ப்பணத்தின் ஒரு அடையாளமாகும். அமெரிக்க தகவல் கூடம் என்பது வெறுமனே புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் வாசிக்கும் ஒரு இடமன்று, மாறாக டிஜிட்டல் தொலை தொடர்பு வசதிகள் மூலம் உலகம் முழுவரையும் இணைக்கும் ஒரு இட…

    • 0 replies
    • 1.4k views
  21. சென்னை: சென்னையில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்ற மீனவ சமுதாய பெண்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தினந்தோறும் மீனவர்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்காமல், நாங்கள் தாலி அறுப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் ப.சிதம்பரம் என்று அவர்கள் ஆவேசமாக குற்றம் சாட்டினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை கொன்று குவித்து வருகிறது. கடலுக்குள் போகும் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இந்த செயலைக் கண்டித்தும், தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கண்டித்…

  22. பிரான்சில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்-பெருமளவு தமிழ் மக்கள் ஒன்றுகூடினர் 22 ஜனவரி 2011 சனிக்கிழமை பிற்பகல் பிரான்ஸ் தமிழீழ மக்களவை ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு, தமிழ் மக்கள்மீது இனப்படுகொலை புரிந்த சிங்கள அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஷேவையும், அவரது சகாக்களையும் அமெரிக்க அரசு கைது செய்து, அவர்மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும் என்ற கொட்டொலிகளை முழங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், அமெரிக்க அரசுக்கான மனு ஒன்று அமெரிக்க தூதராலயத்தில் கையளிக்கப்பட்டது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இலங்கைத் தீவில் இடம்பெற்ற தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் கொல்லப்பட்ட, அல்லது காணாமல…

  23. சென்னையில் சிங்களவர்கள் மீது தமிழுணர்வாளர்கள் தாக்குதல்…? சென்னை எழும்பூரிலுள்ள சிங்களவர்களின் மகா போதி சபையில் புகுந்து அங்குள்ள சிங்களவர்கள் மீது தமிழுணர்வாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தமிழகத்தில் செய்தி பரவியுள்ளது… மேலதிக தகவலுக்கு மீனகம் தளத்துடன் இணைந்திருங்கள்… http://meenakam.com/

  24. தமிழக மீனவர் ஜெயகுமாரின் படுகொலையை கண்டித்து சென்னையில் சத்தியமூர்த்திபவன் முன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தமிழின பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த க.அய்யநாதன், மே பதினேழு இயக்க சேர்ந்த திருமுருகன், ஓவியர் சந்தானம் உள்ளிட்ட பல தமிழுணர்வாளர்கள் கலந்துகொண்டனர். மீனவர் படுகொலைக்கு காரணம் காங்கிரஸ் அரசாங்கமே என்பதை வலியுறுத்தியும், இதன் பின்னணியில் உள்ள பிரணாப் முகர்ஜி, எல்.கே.அந்தோணி, எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் பதவிவிலககொரியும் இந்த போராட்டம் நடைபெற்றது. முடிவில் போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களை காவல்துறை கைதுசெய்தது. http://www.youtube.com/watch?v=A8tdqABkh5Q http://www.youtube.com/watch?v=vkhJzrEzVzU http://www.youtube.com/watch?v=KiqSkVPTPbM http…

  25. முத்துக்குமார் இனவெழுச்சி சுடர் ஊர்திப்பயணம் தூத்துக்குடியில் துவக்கம் வீரத்தமிழன் முத்துக்குமார் இனவெழுச்சி சுடர் ஊர்திப்பயணம் இன்று காலை முத்துக்குமரனின் சொந்த ஊரான தூத்துக்குடி கொழுவைநல்லூரில் தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறை தோழர்கள் அருண்சோரி, இரணியன் தலைமையில் தொடங்கியது. இன்று (24.01.2011) காலை 10.30 மணியளவில் முத்துக்குமாரின் சொந்த ஊரான கொழுவை நல்லூரில் அவரது வீட்டில் அவரது பாட்டி சுடரினை ஏற்றிவைக்க சுடர் பயணத்தை இந்தியப்பொதுவுடைமைக்கட்சியின் தோழர் நல்லக்கண்ணு சிறப்புரையாற்றி தொடங்கிவைத்தார். பயணத்தின் பொழுது தூத்துக்குடி ஆத்தூரில் ஆதித்தமிழர்பேரவையின் தோழர் மனோகரன் சிறப்புரையாற்றினார். தூத்துக்குடி காமராசர் கலைக்கல்லூரி முன்னர் மக்கள் உரிமைக்கூட்டமைப்பின் தோ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.