Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப்புலி உறுப்பினர்களென்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பான வழக்குகளை ஆராய்ந்து பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்காக பிரதி சொலிசிற்றர் ஜெனரல் சவிந்திர பெர்னாண்டோ தலைமையில் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை மகிந்த ராஜபக்ஷ நியமிக்கின்றாராம். சிரேஷ்ட அரச சட்டத்தரணிகளான பி.குமாரரெட்ணம்,சேத்திய குணசேகர,டினால் இரட்நாயக்க ஆகியோர் இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவானது அண்மையில் ஜனாதிபதியிடம் கையளித்திருந்த இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த பரிந்துரையைத் தொடர்ந்தே இந்தக் குழுவை ஜனாபதி ராஜபக்ஷ நியமித்துள்ளார். என தென் இலங்கை பத்திரிகைகள் கூறுகின்றன. இந்தக் குழுவின் உ…

  2. மஹிந்தவினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எதிர்வரும் 31ம் திகதியுடன் தமது கடமைகளை நிறைவுக்கு கொண்டுவரவுள்ளது. எனினும் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் கணிப்பீடுகள் தொடர்பில் எதிர்காலத்தில் சாட்சிகள் அளிக்க சந்தர்ப்பம் வழங்கப்படுமென ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார். இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் அநுராதபுரம் மாவட்ட மக்களிடம் சாட்சிங்களைப் பெற கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளதுதாம். சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் சாட்சியங்களைப் பெறுவது தொடர்ந்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி.சில்வா குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மே மாதத்திற்குள…

  3. வடக்கில் மேலும் 1000 தமிழ் பொலிசாரை இணைக்கும் முகமாக நேர்முக தேர்வினை அரசாங்கம் அண்டாத்திவருகின்றது. இந்த நேர்முகத்தில் தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகள் பங்குபற்றுகின்றனராம். எற்கனவே 336 தமிழ் பொலிசார் பயிற்சி முடித்து கடமையில் ஈடுபட்டுள்ளனராம். இந்த பொலிஸ் வேலைக்கு சிறிலங்காவில் ஏற்கனவே பொலிஸ் வேலைகளில் இருந்து 1983 காலப்பகுதியில் விலகிய தமிழர்களின் பிள்ளைகள் ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

  4. தமிழ் கட்சிகளின் ஒரு பாரிய கூட்டணி அமைக்கின்ற முயற்சிகளின் இறுதிகட்ட தீர்மானம் நாளை நண்பகல் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் கட்சிகளின் ஒரு பாரிய கூட்டணி அமைக்கின்ற ஒரு முயற்சியிலே தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணி, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஆகிய நான்கு கட்சிகள் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து எடுகின்ற முயற்சிகளின் பலனாக ஈபிடியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலை கூட்டமைப்பு ஆர்வம் காட்டமையால் அவர்களுடன் சந்திப்பு சாத்தியப்படவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பல சுற்று கூட்…

  5. இலங்கையில் யுத்தம் முடிவடைந்து சுமார் இரண்டு வருடம் ஆகியுள்ள நிலையிலும் இன்னமும் வடக்கிலும் கிழக்கிலும் வசிக்கும் சிறுபான்மையினரான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒருவித அச்ச சூழலிலேயே வாழ்கின்றனர் என்று கூறும் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது என பிபிசி செய்திச்சேவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அச்செய்தியில் வடபகுதி சிங்களமயமாக்கப்படுகிறது என்கிற அச்சம் நிலவுவதாக அறிக்கை கூறுப்படுகிறது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் சிறுபான்மையினர் உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் கருத்து கூறப்பட்டுள்ளது. வடகிழக்கில் சில மாவட்டங்களில் நான்கு பொதுமக்களுக்கு ஒரு இராணுவத்தினர் என்கிற எண்ணிக்கை நிலவுகிறது என்றும் அப்பகுதிகள் இராணுவமயமாக்கப்பட்டு வருவதாகவும…

  6. போலி வீசாவுடன் தமிழ் வாலிபர்கள் ஐவர் விமான நிலையத்தில் கைது: உடந்தையான அதிகாரியும் கைதானார்... வியாழக்கிழமை, 20 ஜனவரி 2011 01:13 ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணிப்பதற்காக போலி வீசா மற்றும் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்திய ஐந்து தமிழ் இளைஞர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி வீசா மற்றும் கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு விமான நிலைய நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதவண்ணம் உடந்தையாக செயற்பட்ட விமான நிலைய அதிகாரியொருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ஐந்து வாலிபர்களில் ஒருவர் இத்தாலிக்கும் மற்றொருவர் லண்டனுக்கும், மற்றைய மூவரும் பெல்ஜியத்துக்கும் பயணிக்க முற்பட்ட போதே விமான நிலையப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்…

  7. ஐ.நா. இணைப்பாளர் கதரின் அம்மையாருக்கு வவுனியா அகதிமுகாங்களுக்கு செல்ல அனுமதி மறுப்பு? வியாழக்கிழமை, 20 ஜனவரி 2011 01:23 இலங்கை வந்துள்ள ஐ.நா.வின் அவசர நிவாரணப் பணி இணைப்பாளர் கதரின் அம்மையாருக்கு மெனிக் பார்ம் நலன்புரி முகாமுக்குச் செல்வதில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேரடியாக அதற்கான அனுமதி மறுக்கப்படாத போதிலும், அவரை அங்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் எதனையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று தெரிய வருகின்றது. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் நிமித்தம் இலங்கை வந்துள்ள அவர், வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிடவும் செல்லவுள்ளார். ஆயினும் அதன் போது அரசாங்கம் திட்டமிட்ட வகையில் மெனிக் பார்ம் முகாமுக்கு அவரை …

  8. கப்பலில் வரும் தமிழர்களை பிடிக்க கனேடிய அமைச்சர் சபதம்! கனடாவுக்கு கப்பல்களில் நிறைய ஆட்களை கடத்தி வர சட்டவிரோத கும்பல்கள் முயற்சி செய்கின்றன என்று அந்நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Vic Toews தெரிவித்து உள்ளார். கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுக்க்கின்றமை மூலம் கனடாவுக்குள் பிரவேசித்து அகதி அந்தஸ்து கோருகின்ற ஆட்கள் குறித்து கனேடிய அரசு மிகவும் விழிப்புடன் உள்ளது என்றும் இவர் கூறி உள்ளார். ஆட்கடத்தல்களை முறியடிப்பதற்காக அரசினால் கொண்டு வரப்பட இருக்கும் புதிய குடிவரவு சட்டத்துக்கு எதிர்க் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று இவர் கோரி உள்ளார். இப்புதிய சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் கடத்தல்காரர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்படும் என்கின்றார்…

  9. யாழில் வீடுவீடாகச் சென்று வசிப்பவர்களின் விவரங்களைத் திரட்டும் படையினர் ! Thursday, January 20, 2011, 1:5 யாழ் தூப்பாக்கி சூட்டுச் சம்பவங்களையடுத்து பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இடம்பெற்றது போல பொலிஸாரும் இராணுவத்தினரும் வீடுவீடாகச் சென்று வீட்டில் வசிப்பவர்களின் விவரங்களைத் திரட்டி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக யாழ். மாவட்டத்தில் பல இடங்களில் இரவு, பகல் என்ற வேறுபாடின்றி துப்பாக்கி முனையில் கொலை, கொள்ளை போன்ற குற்றசெயல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தச் சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட் கிழமை இரவு மானிப்பாயில் இடம்பெற்ற து…

  10. தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான என். ஸ்ரீகாந்தாவை தலைவராகவும் எம்.கே. சிவாஜிலிங்கத்தை பொதுச் செயலாளராகவும் கொண்டு இக்கட்சி பதிவு செய்யப்படுவதற்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக எம்.கே. சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பை ஒரு கட்சி, புதிய சட்டத்தின் கீழ் கோரப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்வது கடினமாகும் எனத் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/15197-2011-01-19-21-54-11.html

  11. வெளிநாடுகளில் தொழில் புரிந்து அதிகளவு செலாவனியை ஈட்டி தருபவர்களே அண்மை காலமாக எமது பொருளாதார வளர்ச்சியில் பாரிய பங்களிப்பை செய்துள்ளனர். இவர்கள் ஆயுதம் ஏந்தாத பொருளாதார வீரர்கள் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். இன்று (நண்பகல் 12 மணி) கண்டி மலைநாட்டு கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்ற வெளிநாட்டு வேலைவயர்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டவர்களது பிள்ளைகள் 247 பேருக்கு புலமை பரிசில் வழங்கும் வைபவத்திலேயே அவர் இதனை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது : கடந்த நான்கு வருடங்களாக தொடர்நது எமது பொருளாதார வளர்ச்சி ஆறு சத வீதத்தை தாண்டி உள்ளது.; வெளி நாட்டில் தொழில் புரிவோரும் இதற்கு காரணமாக உள்ளனர். 2009 ம் ஆண்டு…

    • 0 replies
    • 1.2k views
  12. இலங்கையில் புது சர்ச்சை: நடிகைக்கு கோத்தபய கார் அன்பளிப்பு 19 Jan 2011 03:33:29 PM IST கொழும்பு, ஜன.19- இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலரும் அதிபர் ராஜபட்சயின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச சிங்கள நடிகை ஒருவருக்கு கார் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சபீதா பெரேராவே சிங்கள திரைப்படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச அவருக்கு ஒரு கார் அன்பளிப்பாக வழங்கியிருப்பதாக தெரிய வருகிறது. அந்த கார் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான அதிநவீன சொகுசு காராகும். இந்த செய்தி இலங்கைத் தமிழ் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. 5565 என்ற எண்ணுள்ள அந்த வெள்ளை நிற பென்ஸ் கார் ஆடம்பர ரகத்தைச் சேர்ந்தது என்…

  13. யாழ் பொங்கல் விழாவில் மகிந்த அணிந்திருந்த தலைப்பாகை பொங்கல் பானையில் விழுந்தது அபசகுணமாம் * Wednesday, January 19, 2011, 18:38 யாழ்ப்பாணத்தில் கடந்த 17ம் திகதி நடைபெற்ற தைப் பொங்கல் விழாவில் ஜனாதிபதி, சம்பிரதாய முறைப்படி ஒரு பிடி அரிசை பொங்கல் பானையில் போடுவதற்குத் தயாரான போது அவர் கட்டியிருந்த தலைப்பாகை பொங்கல் பானையில் விழுந்துள்ளது. இந்தச் சம்பவம் அபசகுணமானது என வைபத்தில் கலந்துகொண்டிருந்த ஒட்டுக்குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தனக்கு அருகில் இருந்த நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். tamilthai.com

  14. கையொப்பத்தை நீக்கிவிடுமாறு கோருகிறேன்.. சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்க்கிறோம் என்கிற அறிக்கை தொடர்பான கையொப்ப பட்டியலில் இருந்து எனக்கு கையொப்பத்தை நீக்கிவிடுமாறு கோருகிறேன். அதன் அர்த்தம் எனது அனுமதி இல்லாமல் என்னுடைய பெயர் இணைக்கப் பட்டுள்ளது என்பதல்ல. என்னிடம் பேசி அனுமதி பெற்றுத்தான் சோபாசக்தி என்னுடைய கையொப்பத்தை இணைத்தார். இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மெல்ல மெல்ல உயிர்க்கவும் சுதந்திரமான கலை இலக்கிய மாநாடுகள் நடத்தவும் உரிமை¨ உள்லவர்கள். ஆனால் அத்தகைய மாநாடுகளின் அரசியல் விமர்சனங்களுக்கு அப்பாற்ப் பட்டதல்ல. தமிழ் பேசும் மக்களான ஈழத் தமிழர்கள் முஸ்லிம்கள் மலையக தமிழர்களின் மையம் புலம் பெயர்ந்த நாடுகளல்ல இலங்கைத் தீவு என்பத…

    • 12 replies
    • 2.1k views
  15. 'எத்தனை தமிழனைக் கொன்று குவித்தாலும், சிங்கள ராணுவத்தின் ரத்த தாகம், தணியவே தணியாதா?’ என்று கேவிக் கதறுகிறார்கள், தமிழக மீனவர்கள். மீண்டும் ஒரு மீன​வனின் உயிர் குடித்துள்ளது, சிங்கள ராணுவம்! புதுக்கோட்டை மாவட்டத்​தின் கடைக்கோடி மீனவக் கிராமம், ஜெகதாப்பட்டினம். நாகை மாவட்டம் சின்னங்குடி கிராமத்தை சேர்ந்த பாண்டியனும் அவரது தங்கை ரேவதியும் ஜெகதா​பட்டினத்துக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வந்தனர். உறவினர் படகைக் கடன் வாங்கி மீன் பிடித்து வயிற்றைக் கழுவக் கடந்த 12-ம் தேதி கடலுக்குச் சென்ற பாண்டியன்... சிங்கள ராணுவத்தின் கோரத் தாண்டவத்தால் பிண​மாய்த்தான் கரை ஒதுங்கினார். பாண்டியனோடு படகில் சென்று நூலிழை​யில் உயிர் தப்பிய பாஸ்கர், மணிவேல், மணிகண்டன் ஆகிய மூவரை…

    • 5 replies
    • 1.5k views
  16. புலிகளுக்கு வானொலி உபகரணங்களை வழங்கியது யார் என்பதில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள்! புதன், 19 ஜனவரி 2011 17:21 2002 பெப்ரவரி 22 இல் ஒஸ்லோவின் ஏற்பாட்டில் செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையின் கீழ் புலிகளின் குரல் வானொலி சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்ற தேவை உண்மையில் யாருக்கு இருந்தது. சிங்கப்பூரிலிருந்து இதற்கென தருவிக்கப்பட்ட உபகரணங்களுக்கான 90, 000 டொலர் கொடுப்பனவைச் செய்தது யார்? இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உட்பட ஏனைய அரச நிறுவனங்களைப் பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்க அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது என இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை அண்மையில் வெளியிட்டிருந்த தகவலை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒஸ்டின் பொர்ணான்டோ மறுத்துள்ளார். கொ…

  17. ஈழ விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல பல்வேறு விடுதலைப் போராட்டங்களினையும் எடுத்துக்கொண்டால் அதிலே இருப்பது தலைமைத்துவத்தின் போட்டிகள். அதிலும் குறிப்பாக எமது விடுதலைப் போராட்டத்தினையும், இந்திய அரசியலையும் எடுத்துக் கொண்டால் இது வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஒன்று. 60 வருடங்களுக்காகப் போராடிய ஓர் இனம் தமது இனத்தின் பல இழப்புக்களையும் தாங்கியவண்ணம் இன்றும் அந்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டும் என்கின்ற ஒரு முனைப்பில் இருந்துவருகின்றது. யதார்த்தத்தில் எமது இனம் விடுதலை பெறுவதற்கு எம்முள் தோற்றுவிக்கப்பட்ட தலமைத்துவப் போட்டியே எமது இனத்தின் அழிவினை இட்டுச் சென்றது என்றால் மிகையாகாது. தென் ஆசிய வல்லரசு எனக் கூறிக்கொண்டிருக்கும் இந்தியாவின் உளவுத்துறையான 'ரோ' என்கின்ற அமைப்பு எமக…

    • 99 replies
    • 11.1k views
  18. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புளொட் இணைந்து போட்டி‏! [ பிரசுரித்த திகதி : 2011-01-19 05:00:40 PM GMT ] உள்ளுராட்சி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இணைந்து போட்டியிடத் தீர்;மானித்துள்ளது. யாழ்ப்பாணம் வவுனியா மாவட்டம் உட்பட கூட்டமைப்பு போட்டியிடும் சகல சபைகளிலும் இணைந்து ஓரணியில் போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா எம்.பிக்களான சுரேஸ் பிறேமச்சந்திரன் எம்.சுமந்திரன் ஆகியோருக்கும் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தனுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுக்களின்போது இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் தொடராக நே…

  19. நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க செல்லும் தமிழ் மக்கள் இராணுவனத்தினரால் அச்சுறுத்தப்படுகின்றனர் Wednesday, January 19, 2011, 18:51 மகிந்த ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கச் செல்லும் வடபகுதி தமிழ் மக்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்படுவதுடன் இராணுவத்தினர் விசாரணை நடத்திய பின்னரே சாட்சியளிக்க அனுமதிக்கப்படுவதாக நாம் இலங்கையர் அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. வடபகுதி தமிழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கச் செல்லும் போது, சாட்சியமளிப்பதற்கு முன்னர் அவர்களை இராணுவத்தினர் பலவந்தமாக புகைப்படம் எடுப்பதும், அவர்களிடம் விசாரணை நடத்துவதும் பாரதூரமான தவறு என நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் …

  20. அரியாலை நாவலடி வீதிப் பகுதியில் தனிமையில் சென்ற குடும்பப்பெண் ஒருவரை சந்தேகத்திற்கிடமான முறையில் இராணுவச்சிப்பாய் ஒருவர் இடைமறித்துள்ளார். இதை எதிர்பாராத குடும்பப்பெண் தன்னைப் பாதுகாக்க அபயக்குரல் எழுப்பி வயலுக்குள் பாய்ந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 5.45 மணிக்கு நாவலடியில் உள்ள கல்லு வீதியில் நடைபெற்றுள்ள இச் சம்பவத்தால் நாவலடி மணியந்தோட்ட மக்கள் மத்தியில் பதற்றமானதொரு நிலை காணப்படுகிறது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது : ஹலோ றஸ்ட் மிதிவெடி அகற்றும் நிறுவனத்தில் கடமையாற்றும் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் நாவலடி வீதியின் ஒரு பகுதி கரடு முரடாகக் காணப்பட்டதனால் தார் வீதிக்குச் செல்லும் வரை தனது மோட்டார் சைக்கிளை உருட்டிச் சென்றுள்ளார். அரியாலை நாவ…

  21. யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்கென பல்வேறு நாடுகளால் வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான பணம் எங்கே சென்றது என தமிழ் நாட்டில் நிகழ்த்திய உரையில் நிமல்கா பெர்ணான்டோ கேள்வியெழுப்பியுள்ளார். . மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சியின் ஊழலை அவர்களே நிராகரிக்கவில்லை. மக்களின் அழிவிலும், அவலத்திலும் பணம் சேர்க்கும் இலங்கை அரச மாபியாக் குழுவின் பலம் பொருந்திய தமிழ் முகமும், இலங்கை அரசிற்கும் அதன் புலம் பெயர் தமிழ் அங்கத்திற்கும் இடையேயான முன்முகமுமான குமரன் பத்மனாதனின் நிறுவனமான NERDO வும் களத்தில் இறங்கி சில நாட்கள் கடந்தோடிவிட்டது. இலங்கை அரச நிகழ்ச்சி நிரல்.. பேரினவாதப் பாசிச இலங்கை அரசு தனது இராணுவ அரசியல் சாம்ராஜ்யத்தை உருவமைப்பதற்கு எதிரான அனைத்துத் தடைகளையும்…

    • 0 replies
    • 1.2k views
  22. யாழில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்; நேற்று மட்டும் 115 பவுண் நகைகள் அபகரிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-19 08:49:07| யாழ்ப்பாணம்] குடாநாட்டில் நேற்று இரு வேறு இடங்களில் வீடு புகுந்து கூரிய ஆயுதம் மற்றும் துப்பாக்கியால் மிரட்டிச் சுமார் 115 பவுண் தங்கநகைகள் அபகரிக்கப்பட்டுள்ளது. இதில் கச்சேரி - நல்லூர் வீதியிலுள்ள வேலுப்பிள்ளை வேதநாயகம் என்பவரின் வீட்டில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் 5 பேர் கொண்ட கும்பல் கூரை பிரித்து வீட்டிற்குள் இறங்கியுள்ளது. வீட்டில் உறக்கத்திலிருந்தவர்களை எழுப்பிக் கூரிய ஆயுதங்களைக் கொண்டு மிரட்டி அணிந்திருந்த நகைகளை அபகரித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொல…

  23. Amnesty International Calls on the United States to Investigate Sri Lankan President Mahinda Rajapksa ----- During his Surprise Visit to the United States Contact: AIUSA media relations office, 202-509-8194 (Washington, D.C.) The United States should investigate Sri Lankan President Mahinda Rajapksa, who arrives on a surprise visit to the United States today, for his alleged role in perpetrating torture and war crimes, Amnesty International said today. Rajapaksa reportedly left Sri Lanka early Wednesday morning with a delegation of 20 bound for the United States. "The United States has an obligation under internation…

  24. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார். ஜனாதிபதி தனிபட்ட விடயத்திற்காகவே அமெரிக்காவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=29667

  25. இலங்கையில் போர் முடிவடைந்து சுமார் இரண்டு வருடம் ஆகியுள்ள நிலையிலும், இன்னமும் வடக்கிலும் கிழக்கிலும் வசிக்கும் சிறுபான்மையினரான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒருவித அச்ச சூழலிலேயே வாழ்கின்றனர் என்று கூறும் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் சிறுபான்மையினர் உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் கருத்து கூறப்பட்டுள்ளது. வடகிழக்கில் சில மாவட்டங்களில் நான்கு பொதுமக்களுக்கு ஒரு இராணுவத்தினர் என்கிற எண்ணிக்கை நிலவுகிறது என்றும் அப்பகுதிகள் இராணுவமயமாக்கப்பட்டு வருவதாகவும் அந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது. இலங்கை அரசு பொதுவாக ஒரு பெருந்தேசிய இனவாத கொள்கையை நோக்கி போய் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது எனவும் அரசிலி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.