Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதன்கிழமை, 19, ஜனவரி 2011 (12:21 IST) ராஜபக்சே காலண்டர் எரிப்பு போராட்டம்-200 பேர் கைது உடுமலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே உருவம் பொறித்த காலண்டர்களை எரித்து போராட்டம் நடைபெற்றது. உடுமலை ராணுவப்பள்ளி வெளியிட்ட காலண்டரில் ராஜபக்சே உருவப்படம் இருந்தது. இது தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. இந்த காலண்டர்களை திரும்ப பெற வலியுறுத்தி காலண்டர் எரிப்பு போராட்டத்தை பெரியார் திராவிட கழகத்தினர் நடத்தினர். இந்த காலண்டர் எரிப்பு போராட்டத்தில் அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளும் பங்கேற்றன. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை…

  2. பாகிஸ்தானின் இராணுவ முக்கியஸ்தர் தளபதி அஸ்ரப் பெர்வஸ் கயானி சற்றுமுன் இலங்கை வந்தடைந்தாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார். பாகிஸ்தானுக்கு சொந்தமான விமானத்தில் வந்திறங்கிய இராணுவ முக்கியஸ்தர் அஸ்ரப் பெர்வஸ் கயானியை இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இவர் ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=29668

  3. சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, கொலை செய்யப்பட்ட கடந்த 8 ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்ததுடன், சிரச ஊடக வலையமைப்பின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கடந்த 8ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ளது.அத்துடன் ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட காணாமல் போய் எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகிறது. ஊடக அடக்குமுறையின் முக்கியமான மாதமான ஜனவரி மாதம் நடைபெற்ற பாரிய சம்பவங்கள் தொடர்பிலும் ஏனைய சம்பவங்கள் குறித்தும் நடத்தப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகளை வெளியிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்துடன், எவ்வித சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என தென்னிலங்கை ஊடக அமைப்புகளின் ஒன்றியம்…

  4. 2012 ஆம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழகங்களில் முதன்மை மொழியாக ஆங்கிலம்! புதன், 19 ஜனவரி 2011 11:08 பல்கலைக்கழகங்களில் 2012ஆம் ஆண்டிலிருந்து ஆங்கில மொழிப் பிரிவில் இயக்குவதற்கான சுற்றறிக்கையை அரசாங்கம் அமுல்படுத்த தீர்மானித்துள்ளது. அதேவேளை அரசாங்கத்தின் முக்கிய இலக்கானது அறிவுத் திறன்மிக்க மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இராண்டாம் மொழியில் உயர்மட்டத்தை அடைவதாகும் என உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆசியாவிலேயே அறிவின் மையமாக இலங்கையை அபிவிருத்தி செய்யும் முகமாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் வலியுறுத்தலின் பேரில் சர்வதேச பாடசாலைகளை இலங்கையில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகி…

  5. கடந்த சில நாட்களாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான சேகரிக்கப் பட்ட உலர் உணவுப் பொருட்கள் பல்கலைக்கழக மாணவர்களால் கிழக்கு மாகாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் நேரடியாக மக்களுக்கு விநியோகிக்கப் பட்டன. பல்கலைக்கழகத்தில் இருந்து சுழியோடி thx http://www.newjaffna.com/

  6. ஈழத்தமிழர் சிறந்த வெளிநாட்டவராக நோர்வேயில் தெரிவு. நோர்வேயின் பத்து முதன்மை (TOP10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான மூத்த பொறியியலாளர் ஸ்ரீவன் புஸ்பராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். நோர்வே சமூகத்தின் சமூகக் கலாச்சார மற்றும் தொழில்சார் விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய 10 முதன்மையான வெளிநாட்டவர்களை வருடந்தோறும் சுயாதீனமாக ஓர் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. 16 வயதிற்கு மேல் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்து, மற்றைய வெளிநாட்டவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட வெளிநாட்டவர்களையே இவ் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. இவ்வமைப்பு முதன்மையான வெளிநாட்டவர்களில் ஐந்து ப…

    • 13 replies
    • 1.5k views
  7. எமது மாணவர்கள் சமூகப்பணிகளில் தொடர்ந்தும் பங்களிப்பார்கள் - யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அரிஹரன் - GTNற்கு வழங்கிய நேர்காணல்:- அண்மையில் கிழக்கில் பெருமழையும் கொடுவெள்ளமும் ஏற்பட்டது. கிழக்கு வாவிகளை மூடிய வெள்ளம் நாளடைவில் தெருக்களை கிராமங்களை வீடுகளை நகரங்களை என்று முழுமையாக மூழ்கடித்தது. லட்சக்கணக்கான மக்கள் மழைவெள்ள அகதிகளாக இடம்பெயர்ந்து இடை முகாங்களில் தஞ்சமடைந்தார்கள். பலர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். வாரக்கணக்கில் நீடித்த மழைவெள்ளத்தினால் பெரும் சொத்தழிவுகள் ஏற்பட்டன. கடந்த சில வருடங்களின் முன்னர் யுத்தம் அழித்த கிழக்கு பகுதியை எதிர்பார்க்காத வகையில் மழைவெள்ளம் அழித்திருக்கிறது. கிழக்கு மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக…

    • 1 reply
    • 437 views
  8. யாழில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2011-01-18 18:21:24 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கேற்புடன் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இந்த மாதம் 21, 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் யாழ். பிரதான வீதி சுப்பிரமணியம் பூங்காவுக்கு முன்பாக நடைபெறவுள்ளது. வியாபாரத்துக்கான உங்கள் திறவுகோல்” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த வர்த்தகக் கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களுடன், இந்தோனேசிய, நேபாளிய நிறுவனங்கள் மற்றும் கொழும்பு நிறுவனங்களும் பங்கேற்கவிருப்பதாக, இன்று செவ்வாய்க்கிழமை (18.1.2011) மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது அறிவிக்கப்பட்டது. யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் மன்றம், வரையறுக…

  9. சிங்களத்தின் அரசியல் சாணக்கியம் புலிகளைக் கூட தம்பக்கம் அரவனைப்பது - தமிழ் அரசியலின் சாணக்கியம் அனைவருக்கும் துரோகிப்பட்டம் சூட்டுவது – சிந்திப்பீர்களா? நாகேஸ் நடராஜா:- இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினதும் அவரது அரசாங்கத்தினதும் பல்வேறு தில்லுமுல்லுகளின் பின் கலைக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. யுத்த வெறியின் மூலம் ஒரு இனத்தின் வாழ் உரிமைகளை, அபிலாசைகளை துவம்சம் செய்து அந்த மக்களை தோற்கடித்துப் பெற்றுக் கொண்ட யுத்த வெற்றியின் ஊடாக வரவழைத்துக் கொண்ட தொடர் தேர்தல் வெற்றிகளின் பின் இரண்டாவது முறையாகவும் ஆட்சிப்பீடமேறினார் மகிந்த ராஜபக்ஸ. ஆயினும் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள உட்பூசல்கள் கட்சிக்குள் வெடித்த…

    • 1 reply
    • 916 views
  10. கண்ணிவெடிகள் அகற்றியமைக்கான சான்றிதழ் கிடைத்தும் மீள்குடியமர்வுக்கு அனுமதி இல்லை பாதுகாப்பு அமைச்சு பின்னடிப்பு யாழ்ப்பாணம், ஜன.19 வயாவிளான் கிழக்குப்பகுதிகளில் கண்ணிவெடி அகற்றப்பட்டமைக்கான சான்றிதழ் கிடைக்கப்பெற்றபோதும் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து அந்தப்பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.வலி.வடக்கு பிரதேசங்க ளில் மக்களை மீளக்குடிய மர்த்துவதற்கான நடவடிக்கைகள் கடந்த வருடம் நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக வித்தகபுரம், இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு ஆகிய கிராமங்களில்மக்கள் மீளக்குடிய மர்த்தப்பட்டனர்.இதன் அடுத்தகட்டமாக வயாவிளான் கிழக்குப்பகுதி மக்கள் தம்மை மீளக்குடியமர்த்து மாறு கோரி…

  11. மன்னாரில் மூன்று கிணறுகளில் எண்ணெய் அகழ்வு நடவடிக்கைகளை ஆரம்பம்! .மன்னார் கடற்பரப்பில் கனிய எண்ணெய் அகழ்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள கனிய எண்ணெய் அகழ்வு நடவடிக்கையானது மூன்று எண்ணெய் கிணறுகளில் இருந்து அகழப்படவுள்ளதாகவும் 200 தொடக்கம் 1800 மீற்றர் ஆழத்தில் இந்த அகழ்வு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கனிய எண்ணெய்வள அமைச்சு தெரிவிக்கின்றது. இந்த அகழ்வு நடவடிக்கையானது கடற்பரப்பிலிருந்து சுமார் 3400 மீற்றர் தொலைவிலேயே மேற்கொள்ளப்படவுள்ளது. கனிய எண்ணெய் அகழ்வுக்கான இடங்கள் தற்போது தெரிவுசெய்யப்பட்டு வருகின்ற நிலையில் 1450 சதுர கிலோமீற்றர் வரையிலான எல்லையில் எண்ணெய் அகழ்வு மே…

  12. செவ்வாய்க்கிழமை, 18, ஜனவரி 2011 (22:6 IST) ராஜபக்சே இனப்படுகொலைக் குற்றவாளியாக விரைவில் அறிவிக்கப்படவுள்ளார் :நாடு கடந்த தமிழ் ஈழ அரசு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை தெற்கு சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. கொண்டாட்டங்களில் பங்குகொள்ளவும், பொருத்தமான துறைகளில் தெற்கு சூடானின் மேம்பாட்டுக்குத் தமிழர் தரப்பு வல்லுநர்களின் உதவி வழங்கல் பற்றி ஆராய்வதற்காகவும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரதிநிதிகள் குழு ஒன்றை அனுப்புகிறது. சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் விருந்தினர்களாக வருகைதரும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுப் பிரதிநிதிகள…

  13. An open letter to the World Leaders and Non- Governmental Organizations! The world has an obligation to help Eelam Tamils World War I and World War II began betweentwo countries and spread to otherparts of the world in due course.It quickly developed into a multi-frontal war fought across continents before itended. The war against the Tamils,like any other war, initially commenced between the Tamil Nation and the Sinhala Nation, but it ended with manymilitarily powerful countries aligning themselves with the Sinhala Nation. In his interview to the press, after the war, President Mahinda Rajapakse thanked twenty countries for helping SriLanka to win the war.…

  14. யாழ். பெண்ணுக்கு முத்தம் கொடுத்த இந்திய இராணுவச் சிப்பாய்! செவ்வாய், 18 ஜனவரி 2011 17:56 .இலங்கைகு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி கொழும்பிலுள்ள இந்திய இராணுவ வீரர்களின் நினைவுத் தூபிக்கு மரியாதை செலுத்தியுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவராலயத்தில் கடமை புரியும் இந்திய இராணுவ வீரர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழப் பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்துள்ளாரென தகவல்கள் கசிந்துள்ளன. குறித்த வீரர் தூதுவராலயத்தின் அருகிலுள்ள கடையொன்றுக்குச் சென்றபோது அங்கு வந்திருந்த இளம் பெண்ணொருவருக்கே இவ்வாறு கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார். ஆயினும், குறித்த பெண்ணும் பொது மக்களும் இது தொடர்பில் வீரரை எச்சரித்ததுடன் பொலிஸில் முறைப்…

  15. சூரியப் பொங்கல் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து உங்கள் அனைவரையும் சந்திப்பதிலும் குறிப்பாக இங்கு அதிகளவான மாணவர்கள் வருகை தந்திருப்பதானது மகிழ்ச்சியளிக்கின்றது. நமது நாட்டின் மீது நாம் அன்பு செலுத்தும் அதேவேளை எமக்கே உரித்த thx http://www.newjaffna.com/

  16. அச்சுவேலியில் புதிய கலாச்சாரம் - பொங்கல் தாத்தாக்கள் உலாவினார்கள் 2011-01-18 03:47:19 தைப் பொங்களுக்கு முதல்நாள் வெள்ளிக்கிழமை அச்சுவேலிப் பகுதியில் பொங்கல் தாத்தாக்கள் என பலர் உலாவியதாக தெரியவருகின்றது. சில இளைஞர்கள் ''பொங்கள் தாத்தா'' என்ற வேடங்களில் அச்சுவேலிப் பகுதியில் ஆடிப் பாடி வீதி வழியே வந்துள்ளார்கள். இவர்களைக் கண்டு ஏராளமானோர் திரண்டு வேடிக்கை பார்த்துள்ளார்கள். சிலர் இவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கியதாகவும் தெரியவருகின்றது. வேறு சிலர் இவர்களின் நடத்தையை கண்டிக்க முயன்றுள்ளார்கள். பாரம்பரிய கலாச்சார நிகழ்வை இவ்வாறு ஏளனம் செய்கின்றது போல் நடக்கின்றார்கள் என சிலர் இவ் இளைஞர்களைப் பற்றி விமர்சனம் தெரிவித்துள்ளார்கள. newjaffna.com/

  17. சர்வதேச பயங்கரவாதப் பட்டியலில் புலிகளை நீடிக்கச் செய்யும் சுவிஸ் கொள்ளை! சுவிஸ் 'எம்புரோட்டிய' திருடர்களின் 'குட்டு' உடைபட்டதன் பின் மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பதில் திருப்தியடைகிறேன். இது பற்றி எதிர்வு கூறியதற்காக இன்றுவரை நான் பெற்றுக்கொண்ட துரோகிப்பட்ட மின்னஞ்சல்கள் ஏராளம். இருந்தாலும் உண்மையாகவே தேசியத்தை நேசிப்பவன் செய்யவேண்டிய கடமையில் ஒன்றான இந்த குட்டை வெளிப்படுத்தியதில் மாவீரர் மரணத்தின்பால் ஒரு மன நிறைவு உண்டு. இதற்கும் மேலாக இந்தத் திருடர்களின் மர்மங்களை வெளிக்கொண்டு வருவதற்காக நான் துணிந்து எழுதி பல ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தும் ஒரு சில ஊடகங்களே அதை தைரியத்துடன் வெளியிட்டன. குறிப்பாக மீனகம், தரவு, தணல், எம்தமிழ் போன்ற ஊடகங்கள் எனது கட்டுரையை துணிந…

    • 1 reply
    • 1.5k views
  18. மடிந்த எம் மக்களின் பேரால் கேட்கின்றோம்: இனத்தைக் காப்பாற்ற இனியாவது ஒன்றுபடுங்கள்.............! தமிழர்கள் தலை நிமிர்வதற்கு, மடிந்த எம் மக்களின் பேரால் கேட்கின்றோம்.... [அவசரமானது- முக்கிமானது] தமிழரின் விடிவுக்காக அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதே ஒரே வழியாகியுள்ள நிலையில்- ஒரே இலட்சியத்துக்காக அரசியல் நடத்தவும் போராடவும் கிளம்பிய தமிழர் தரப்புகள் அனைத்தும் இப்போது ஒன்றிணைய வேண்டியது அவசியம். இதற்குக் குறுக்கே யாராவது வந்தால் அவர்களை முட்டி மோதுவதை விட்டு அவர்களையும் அரவணைத்துப் போகும் மனப்பாங்கை வளர்க்க வேண்டும். எரியும் நெருப்பில் எண்ணெயை வார்க்கும் காரியத்தில் இறங்காமல்- பற்றிய தீழுயைப் பரவ விடாமல்- தடுப்பதற்கான வழிகளைத் தேட வேண்டும். இ…

  19. வெள்ள அனர்த்தங்களை மதிப்பீடு செய்ய ஐ.நா. வின் உயரதினாரி இலங்கை விஜயம் வீரகேசரி இணையம் 1/18/2011 5:10:18 PM இலங்கையில் அண்மைக்காலமாக நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களை மதிப்பீடு செய்வதற்காக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. வின் உதவிச் செயலாளர் நாயகமும் அவசர நிவாரண பிரதி ஒருங்கிணைப்பாளருமான கதரீன் நாளை இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரும் கதரீன் வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட பகுதிகளை நேரடியாக பார்வையிட உள்ளதுடன் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களையும் பார்வையிட உள்ளார். தங்கியிருக்கும் மூன்று நாட்களில் கதரீன் அரசாங்கத்தினதும் உதவி வழங்குவோரினதும் உதவி முகவரமைப…

  20. 90 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயற்சித்த சீனப் பிரஜைகள் இருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். இச்சந்தேக நபர்கள் இருவரை ஹொங்கொங் செல்லும் விமானத்தின் மூலம் சீனாவுக்குச் செல்லவிருந்ததாக சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார். பயணப் பொதிகளுக்குள் அமெரிக்க டொலர், சீன யுவான், மற்றும் ஏனைய நாடுகளின் நாணயங்கள் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தாகவும் அவற்றின் பெறுமதி 9 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பண்டாரநாயக்க விமான நிலையத்திலுள்ள சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/15116-2011-01…

    • 0 replies
    • 1.1k views
  21. இலங்கையின் பாதுகாப்பு நிலைமையை இந்தியா அவதானித்து வருகிறது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பிரதீப் வசந்த் நாயக் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கையின் பாதுகாப்பு தவிர்க்க முடியாததாகும் என அவர் கூறியுள்ளார். இரு நாடுகளும் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்துவது அவசியமானதாகும் எனவும் இந்திய விமானப்படைத் தளபதி கூறியுள்ளார். http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/15132-2011-01-18-10-56-33.html The Commander of the Indian Air Force, Air Chief Marshal Pradeep Vasant Naik today paid a courtesy call on Sri Lanka President Mahinda Rajapaksa at the Temple Trees. India's High Commissioner in …

    • 0 replies
    • 917 views
  22. இலங்கையில் உடனடியாக அவசரமாக கால் பதிக்கும் இந்தியாவா? தமிழ் நாட்டு அரசியல் மாற்றத்தினால் அதிர்ந்துபோன மத்திய அரசா? இன்று ENDLF னால் ஆரம்பிக்க பட்ட சென்னைமுதல் டெல்கி வரையிலான நடைபயணமானது மிகவும் பிரசித்தி பெற்ற கோரிக்கையுன் திட்டமிட்டு ஆரம்பிக்க பட்டுள்ளது.இதில் இரண்டு கோரிக்கை அதில் ஒன்று இலங்கை இந்திய ஒப்பந்தம் அப்படியே நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்பதுதான்.இவ் ஒப்பந்தம் இலங்கையில் காலாவதியாக்கப்பட்டாலும் இரு நாடுகளுக்கிடையில் செய்து கொள்ளபட்டதானபடியால் சர்வதேச நீதிமன்றில் வாதிட்டால் இலங்கை அரசு இதை அமுல்படுத்தியாக வேண்டும்.அல்லது உலக நாடுகளின் பல்வேறு நிந்தனைகளை சந்திக்க வேண்டி வரும்.இம்முறை இந்தியாவின் காய் நகர்த்தலானது மிகவும் திட்டமிடப்பட்டு…

    • 4 replies
    • 1.7k views
  23. யாழ். காங்கேசன்துறை கடலில் புலிகளின் Sea Scooter இல் உல்லாச உலா வந்த மஹிந்த ராஜபக்ஸ! செவ்வாய், 18 ஜனவரி 2011 17:30 சங்குப்பிட்டி பாலத்தைத் திறந்து வைத்த பின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அன்றைய இரவை வட பகுதியில் கழிக்கத் தீர்மானித்தார். அடுத்த நாள் காலை வழமைபோல் அதிகாலையிலேயே விழித்துக் கொண்ட ஜனாதிபதி காங்கேசன்துறை கடற்கரையில் தனது வழமையான உடற் பயிற்சிகளை மேற்கொண்டார். பின் யுத்தத்தின் போது கடற்படையினரால் கைப்பற்ற்பட்ட புலிகளின் sea scooter இல் கடலிலும் ஒரு வலம் வந்தார். கடும் கொந்தளிப்பு மிக்க கடல் அலைகளின் மத்தியில் ஜனாதிபதி கடலில் sea scooter மூலம் வலம் வருவதைப் படத்தில் காணலாம். tamilcnn.com

    • 2 replies
    • 1.8k views
  24. விடுதலைப் புலிகளால் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் 16.01.2001 அன்று வடபோர்முனையில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய படை நடவடிக்கைக்கு எதிரான தற்காப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல்கள் மதி(சுஜித்திரா) மற்றும் காவியா(ஜெசிமா) உட்பட்ட மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட அமைதி நடவடிக்கைகளிற்காக நல்லெண்ண நடவடிக்கையாக ஒரு தலைப்பட்சமாக விடுதலைப் புலிகளால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் விடுதலைப் புலிகளின் நல்லெண்ண நடவடிக்கையை புறம் தள்ளி 16.01.2001 அன்று சிறிலங்கா படையினரால் வட போர்முனையில் கிளாலி - எழுதுமட்டுவாள் ஊடாக பாரிய படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. …

  25. திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட வெருகல், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமங்கள் எதிர் கொள்ளப்படுவதாக முறையிடப்படுகிறது. தரை வழிப்போக்குவரத்து முடக்கப்பட்டதனால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. திருகோணமலையிலிருந்து கடல்மார்க்கமாக மாத்திரமே உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டு வரவதாக இவ்விடயம் பற்றி கேட்டபோது திருகோணமலை மேலதிக அரச அதிபர் ஏ.நடராசா தெரிவித்தார் தற்சமயம் வெள்ளம் நிலைமை குறைவடைந்த நிலையில் மக்கள் படிப்படியாக வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர் . இவர்களுக்கு உடைகள்இ பால்மா, பாத்திரங்கள் என பல்வகை தேவைகள் உள்ளன எனவும் மேலதிக அரச அதிபர் குறிப்பிட்டார் . இதேவேளை அல்லை-கந்தளாய் வீதி வழியாக நான்கு ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.