Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பு: தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். கொழும்பில் பல்வேறு தமிழர் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய அவரிடம் வட பகுதியில் சிங்களர்கள் குடியேற்றப்பட்டு வருவது குறித்து முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராஜபக்சே, கொழும்பில் தமிழர்கள் வசிக்கும்போது, வடக்குப் பகுதியில் ஏன் சிங்களர்கள் வசிக்கக் கூடாது?. அப்பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை யாராலும் தடுக்க முடியாது. அங்கு அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாம்களை அகற்ற முடியாது என்றார். அதே போல அரசியல் கைதிகள் மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களையும் விசாரணை முடியாமல் விடுதலை செய்ய முடியாது என்றும் கூறி…

    • 0 replies
    • 519 views
  2. யுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தில் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வந்த தமிழ் மக்கள் முகாம்களில் அமைக்கப்பட்ட வங்கிகளில் வைப்புச் செய்த பணம் மற்றும் நகைகளின் விபரங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடனான சந்திப்பின்போது எடுத்துக்கூறியுள்ளார். இராமநாதன் முகாமில் அமைக்கப்பட்டிருந்த வங்கியில் 400 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் மனிக்பாம் முகாமில் 973 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் கிளிநொச்சியில் 1.43 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் முகாம்களில் அமைக்கப்பட்டிருந்த இலங்கை வங்கியில் 500 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இதேபோல் மாங்குளத்தில் 650 பேரின் கணக்குகளில் 278 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்…

  3. இலங்கை வீட்டில் மூன்று பகைக் கிரகங்கள் பாம்புக்கு எதிரி கீரி.எலிக்கு பகை பூனை. புலியால் சைவம் உண்ண முடியாது. இறைவனின் படைப்பில் புலி மாமிசத்தைத் தவிர வேறு எதனையும் உண்ண முடியாது-உண்ணவும் கூடாது. தவளையாயின் யமன் அதன் வாயிலேயே இருக்கிறான்.இந்த நியதிகள் நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம், மதத்துக்கு மதம், மொழிக்கு மொழி என்றவாறும் இருக்கவே செய்கிறது. வெள்ளையர்களுக்கு கறுப்பர்களைப் பிடிப்பதில்லை.சிலுவைப் போருக்கு முடிபேயில்லை. சிங்களம் தமிழைநேசிப்பதில்லை.இப்படியே காலங்கடக்கிறது.நிலைமை இதுவாக இருக்கையில்,உலக நாடுகள் எல்லாம் பிரச்சினைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தி அதில் வெற்றியும் அடைந்துள்ளன என்றே கூறவேண்டும். இவ்வாறு வெற்றி கிடைப்பதற்குக் காரண…

  4. இலங்கையின் நிலையை 'ஒரு நாடு- இரு தேசங்கள்' என்கிற தலையங்கத்தில் ஆராய்ந்து பத்தி ஒன்றை பிரசுரித்து உள்ளது பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் 'The Economist' சஞ்சிகை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெற்றிக்கு உரிமை கொண்டாடி வந்தாலும் கூட இலங்கை இன்னமும் இரண்டாக பிளவு பட்டுத்தான் உள்ளது என்று இப்பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய நல்லிணக்கம் பேச்சளவில்தான் பெரிதாகக் காணப்படுகின்றது என்றும் இப்பத்தியில் கூறப்பட்டு உள்ளது. ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு , யாழ். நாவற்குழியில் சிங்களவர்கள் குடியேற்றம், தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் செயல்பாடுகள், அதியுயர் பாதுகாப்பு வலய கெடுபிடிகள், அகதி முகாம் வாழ்க்கை ஆகியன உட்பட இலங்கையின் சம கால நடப்புக்கள் பற்றிய வ…

    • 4 replies
    • 1.4k views
  5. இலங்கைக்கு யுத்தத்தில் பாகிஸ்தான் உதவியதற்கு மூன்று காரணங்கள்! வெள்ளி, 26 நவம்பர் 2010 14:10 பாகிஸ்தானிய அரசு மூன்று காரணங்களுக்காகவே இலங்கை அரசுக்கு யுத்தத்தில் உதவி செய்தது என்று பாகிஸ்தானின் இராணுவ புலனாய்வு எழுத்தாளர்களில் பிரபலம் மிகுந்த ஒருவரான சமூக விஞ்ஞானி Dr. Ayesha Siddaqa தெரிவித்து உள்ளார். இவர் பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் உள்ள king's College இல் War Studies சம்பந்தமாக Ph.D செய்தவர். 01.Pakistan's Arms Procurement and Military Build-up, 1979-99 In Search of a Policy 02. Military Inc: Inside Pakistan's Military Economy. ஆகியன இவர் எழுதிய புத்தகங்களில் பிரபலம் ஆனவை. இவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றிலேயே …

    • 3 replies
    • 1.5k views
  6. மாவீரர் நாளென்பது தமிழர்களைப் பொறுத்தவரை ஓர் எழுச்சிகரமான நாள். 1989 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் இந்நாள் ஒரு புனித நாளாகவே அனைவராலும் நினைவுகூரப்பட்டு வருகிறது. தமிழர்களை மட்டுமன்றி உலகத்தையும் இந்நாள் எதிர்பார்ப்போடு காத்திருக்க வைத்தது. தமிழீழத் தேசியத்தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்கள் ஆற்றும் உரையே இதற்குரிய முக்கிய காரணம். ஆண்டுக்கொருமுறை அவர் ஆற்றும் அந்த உரை மாவீரர் நாளின் மகுடமாக விளங்கியது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் தாயகத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தின் பின்னர் நிலைமை மாறிவிட்டது. கடந்த ஆண்டு தேசியத் தலைவரின் உரை வெளிவரவில்லை. இவ்வாண்டும் அவரின் உரை வெளிவரும் வாய்ப்பில்லை என்ற சூழலே நிலவுகிறது. கடந்த ஆண்டு மாவீரர் நாளுக்கான உரையைத் தமிழீழ விடுதலைப் புலி…

    • 2 replies
    • 1.3k views
  7. புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் மாவீரர்நாள் சிறப்பு நிகழ்ச்சிகளை உங்கள் ஊடகங்களில் நேரடியாக ஒலிபரப்புச் செய்யக்கூடிய வசதிகள் இங்கு இணைக்கப்படுகின்றது. http://91.82.85.44:9006/ http://www.votradio.com/live/live.html மேற்படி இணைப்புத் தொழிற்படாவிட்டால், கீழுள்ள இணைப்பிலுள்ள Player ஐ த் தரவிறக்கிப் பயன்படுத்தவும். http://www.votradio.com/live/live.wmx தாயக நேரப்படி மாவீரர்நாள் நிகழ்வுகள் அனைத்தும் ஒழுங்குமுறைப்படி புலிகளின் குரலில் நேரஞ்சல் செய்யப்படும். சிற்றலை, பண்பலை, செய்மதி ஒலிபரப்பு விபரங்கள் அதிகாரபூர் இணையத்தளமான www.pulikalinkural.com ஊடாகவும், ஐரோப்பா, ஆசியா, மத்தியகிழக்கு நாடுகளில் செய்கோள் ஊடாகவும் 24மணி நேர…

  8. கொழும்பு நகரில் 2 ஆயிரத்து 165 ஏக்கர் நிலப்பரப்பில்; 83 ஆயிரத்து 237 சட்டவிரோத குடியிருப்புகள் ‐ விமல் வீரவங்ச‐ கொழும்பு நகரில் 2 ஆயிரத்து 165 ஏக்கர் நிலப்பரப்பில்; 83 ஆயிரத்து 237 சட்டவிரோத குடியிருப்புகள் இருப்பதாக அமைச்சர் விமல் வீரவங்ச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் அந்த குடியிருப்புகளின் பட்டியலை சபையில் வெளியிட்டார். இந்த வீடுகள் குறைந்த வசதிகளை கொண்டது எனவும் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 4 பேர்ச்சஸ் நிலத்தில் அமைக்கப்பட்ட குறைந்த வசதிகளை கொண்ட ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 554 வீடுகள் இருப்பதாகவும் இந்த குறைந்த வசதிகளை கொண்ட வீடுகளில் உள்ளவர்களுக்காகவே, 70 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான யோசனை வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் வீர…

  9. யாழ் அரியாலையில் மின்சாரம் தாக்கி மாணவர் ஒருவர் பலி: [saturday, 2010-11-27 04:43:11] யாழ்ப்பாணம் அரியாலை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது. மின்சார ஒழுக்கு காரணமாகவே இந்த உயிரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 15 வயதுடைய சிவநாதன் தயாநந்தன் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. seithy.com

  10. ஈழமா? படிப்பா? விடுதலைப் புலிகளுக்கு இடமில்லை என்று யாழ் பல்கலைக்கழகத்தில் அச்சுறுத்தும் சுவரொட்டிகளால் பதற்றம் ‐ இராணுவப் புலாய்வினரே ஒட்டியுள்ளனர் இன்று காலை விடிந்த பொழுது ஈழமா? படிப்பா? என்ற கேள்விக்குறிகளுடன் விடுதலைப் புலிகளுக்கு இடமில்லை என்று அச்சுறுத்துகிற சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. இதனால் பல்கலைகழகச் சூழலில் கடும் பதற்றமும் குழப்பமும் நிலவுவதாக குளோபல் தமிழ் செய்திகளின் செய்தியாளர் தெரிவித்தார். பல்கலைக்கழக மாணவ விடுதிகளிலும் இந்த சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. பல்லைக்கழக பாதுகாப்பு விதிமுறைகளை தாண்டி வந்து மிக மர்மமான முறையில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈழத்த…

  11. சுலோஜினியை மீண்டும் உதவி அரச அதிபராக நியமிக்காவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன் என்ற மக்கள் பிரதிநிதி வீட்டுக்காவலில் ‐ சிங்களக் குடியேற்றத்திற்கு ஒத்துழைக்காததே பதவி நீக்கத்திற்கு காரணம் ‐ ஜீரிஎன் விசேட செய்தியாளர் 26 November 10 11:56 am (BST) அரசினால் திட்டமிடப்பட்டு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதிக்கு பணிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றத்திற்கு கரைச்சிப் பிரதேச உதவி அரச அதிபர் திருமதி சுலோஜினி ஒத்துழைக்கவில்லை என்பதாலேயே அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர் மீண்டும் சுலோஜினியை உதவி அரச அதிபராக நியமிக்காவிட்டால் உண்ணா விரதம் இருக்கவும் தயங்க மாட்டேன் என்று அரச அதிபர் ரூபவதியிடம் தெரிவித்த கிராம சங்க உறுப்…

  12. Started by akootha,

    • 0 replies
    • 458 views
  13. வடக்கில் யுத்தத்தினால் பெற்றோரை இழந்த 1746 பிள்ளைகளில் 1551 பேர் மாணவர்களாவர் : அரசாங்கம் வீரகேசரி நாளேடு 11/27/2010 9:35:58 AM யுத்தத்தினால் வடக்கில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் 1746 பேர் உள்ளனர். அவர்களில் 1551 பேர் பாடசாலை மாணவர்கள் என அரசாங்கம் தெரிவித்தது. பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது அனுரகுமார திஸாநாயக்க கேட்டிருந்த கேள்விகளுக்கான பதிலை ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சபைக்கு ஆற்றுப்படுத்திய பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய்மூல கேள்வி நேரத்தில் அனுரகுமார திஸாநாயக்க மீள்குடியேற்ற அமைச்சரிடம் வடக்கு பிரதேசத்திலுள்ள யுத்தத்தினால் பெற்றோர…

  14. குடாநாட்டுக் கோயில்களில் இன்றைய தினம் மணியடிக்கக் கூடாது: இராணுவம் உத்தரவு சனிக்கிழமை, 27 நவம்பர் 2010 05:00 எமது மண்ணுக்காக தமதுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களின் நினைவு நாளான இன்று கோயில்களில் மணியடிக்கக் கூடாது என்று இராணுவத்தினர் கடும் உத்தரவு விடுத்துள்ளனர். வலிகாமம் பகுதியிலுள்ள கோயில் அதிகார சபையினரிடம் யாழ்ப்பாண இராணுவத்தினர் இவ்வுத்தரவை விடுத்துள்ளனர். கோயில்களில் உள்ள மணிகளைக் கழற்றி வைக்கும்படி, அவ்வாறு கழற்ற முடியாத மணிகளைத் துணிகளால் கட்டி வைக்கும்படி இராணுவம் கூறியுள்ளதாம். அதோடு இன்றைய தினம் மக்கள் வெளியில் நடமாடுவதையும் குறைக்கச் சொல்லி உத்தரவு இடப்பட்டுள்ளதோடு, தென்மராட்சி உட்பட குடாநாட்டின் சகல பகுதிகளிலும் ஏராளமான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீதி…

  15. வல்வெட்டித்துறையில் இராணுவம் குவிப்பு வீதிச் சோதனைகளும் அதிகரிப்பு சனிக்கிழமை, 27 நவம்பர் 2010 05:06 தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 56 ஆவது பிறந்த தினமான நேற்று, அவரது சொந்த இடமான வல்வெட்டித்துறையில் ஏராளமான இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். தலைவரின் பிறந்த தினத்தை ஒருவரும் கொண்டாடாமல் தடுக்கும்பொருட்டே இவர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். அதோடு அப்பகுதியில் இராணுவத்தினர் தொடர் ரோந்தில் ஈடுபட்டதோடு, வீதிச் சோதனைகளையும் முடக்கி மக்களை வீட்டுக்குள்ளேயே அடக்கி வைத்திருந்தனர். இதுதவிர வல்வெட்டித்துறையிலுள்ள கோயில்களிலும் கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. அண்மைக்காலங்களில், தலைவரின் புகைப்படங்கள் வைத்திருந்ததற்காக சிங்கள மக்களைக் கூட இராணுவம் கை…

  16. யாழ். தினக்குரல் அலுவலகம் ஆயுததாரிகளால் சுற்றிவளைப்பு! மரண பீதியில் ஊழியர்கள் சனி, 27 நவம்பர் 2010 02:39 E-mail அச்சிடுக PDF யாழ். தினக்குரல் அலுவலகம் ஆயுததாரிகள் கொண்ட குழு ஒன்றால் நள்ளிரவு முதல் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் வான் ஒன்றில் கொண்டு வரப்பட்டு இறக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் கத்திகள், பொல்லுகள் உட்பட ஆயுதங்கள் பலவற்றையும் உடைமையில் வைத்திருக்கின்றனர். அலுவலகம் அமைந்துள்ள வீதியை சுற்றி சூழ்ந்து நிற்கின்றனர். யாழ். தினக்குரல் அலுவலகத்தில் இரவு நேர வேலையில் உள்ள ஊழியர்கள் மரண பீதியில் உள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. tamilcnn

  17. குடாநாட்டின் சில இடங்களில் ஆலயங்களில் இன்று பூஜைகளை நிறுத்துமாறும் பொது மக்களை ஆலயங்களுக்குச் செல்லக்கூடாது என்றும் படையினர் எச்சரித்திருப்பதாகவும் அதனை தாம் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மேற்கண்ட வாறு நேற்றிரவு தெரிவித்தார். படையினரின் இந்தச் செயல் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று தொடர்புகொண்டு தாம் பேசவுள்ளதாகவும் மாவை மேலும் கூறினார். இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருப்பது குறித்து பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவல்களை ஜனாதிபதிக்கு தெரிவிக்க இருக்கின்றேன். படையினரின் இவ்வாறான போக்கு மக்கள் மத்தியில் அச்சநிலையை தோற்றுவிப்பதாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார். நேற்றும் இன்ற…

  18. யாழில் அமைந்திருக்கும் பிரபல பத்திரிகைக் காரியாலயத்தின் முன் நேற்றிரவு இனந்தரியாத மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நின்றதை கண்டுகொண்ட காரியாலய ஊழியர் உடனடியாக உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, உயரதிகாரிகள் யாழ் பொலிஸ் நிலையத்து அறியப்படுத்தியுள்ளனர். யாழ். பொலிஸார் உடனடியாக பத்திரிகைக் காரியாலயத்திற்கு விஜயம் செய்த போது சந்தேக நபர்கள் அங்கிருந்து தலை மறைவாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Eelanatham

  19. பிரிட்டனில் உள்ள ரோகம்டன் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்த ஆய்வரங்கம் நடைபெறவுள்ளதாக நாடு கடந்த தமிழ் ஈழ அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தகவல்துறை அமைச்சர் சாம் சங்கரசிவம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகள் போன்றோருக்கு அவசியமான உதவிகளை செய்வதற்கு தனி நிதியமைப்பு உருவாக்க அமைச்சரவையால் முடிவெடுக்கப்பட்டது. இந்த நிதி பரிமாற்றங்களை மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகள் நலன் பேணல் அமைச்சர் மேற்பார்வை செய்வார். நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் ஆதரவில் பிரிட்டனில் உள்ள ரோகம்டன் பல்கலைக்கழகத்தில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆய்வரங்கம் நிகழ்த்தப்படவுள்ளது.…

    • 0 replies
    • 369 views
  20. அரசாங்கத்தின் குறைகளை மட்டும் விமர்சனம் செய்யும் TNAயின் நிலைப்பாட்டில் மாற்றம் தேவை – ரவூப் ஹக்கீம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாட்டின் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதனைப் போன்றே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதும் முக்கியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். கப்பல்துறை, தகவல் தொழில்நுட்பம், விமானசேவைகள் போன்ற துறைகளில் உலக அளவில் இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அபிவிருத்தியை ஏற்படுத்துவதனைப் போன்றே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளும் முதன…

  21. போராட்ட இலட்சியத்தைக் கைவிட்டு சிங்களத்திடம் நாம் மண்டியிடவில்லை - தமிழீழ விடுதலைப்புலிகள் நவ 26, 2010 மாவீரர்நாள் அறிக்கை 26-11-2010 தமிழீழம் எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, தேச விடுதலை என்ற அதியுயர் இலட்சியக் கனலை நெஞ்சில் சுமந்து, மரணத்தை வெற்றிகொண்டு, எமது இதயங்களில் நித்திய வாழ்வுபுரியும் மாவீரர்களை நினைவேந்தல் செய்யும் தேசிய மாவீரர் வாரம் இது. சத்தியத்தை சாட்சியாக வரித்து சத்தியப் போர்புரிந்த எமது மாவீரர்களை நாமனைவரும் பூசிக்கும் தூயஏழல் இது. விடுதலையின் முதல் வித்தாக விழிமூடிய லெப்.சங்கர் என்ற அக்கினிக்குழந்தையின் வழித்தடம் நடந்து சத்திய வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் வீரப்புதல்வர்களையும், வீரப்புதல்விகளையும் தமி…

    • 5 replies
    • 2k views
  22. பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்த கலாநிதி விக்கிரமபாகுவின் பொதுக் கூட்டத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் பரப்புரை முகவர்களான Bell Potinger நிறுவனத்தின் பிரதிநிதிகள் இருவரும் கலந்து கொண்டுள்ளனர். “விடுதலைப்புலிகளுக்கு எதிராக போரிடுவதாக சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்த போரில் வன்னியில் வாழ்ந்த மக்களில் ஒரு இலட்சம் மக்கள் வரை கொல்லப்பட்டனர், பல ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர், பதினைந்தாயிரம் பேர் அரசியற் கைதிகளாக பல்வேறு முகாம்களிலும், சிறைக்கூடங்களிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இது ஒரு அப்பட்டமான இனப்படுகொலை என்பதனை யாரும் மறுக்கமுடியாது.” இவ்வாறு மேற்கு லண்டனில் உள்ள ஹரோவில நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நவ சமசமாஜக் கட்சியின் தலைவ…

    • 0 replies
    • 503 views
  23. தமிழர்கள் வாழும் நாடெங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈழத்தமிழர்கள் நினைவு கூறும் மாவீரர் வராம் இன்று தொடங்குகின்றது. நவம்பர் 27ம் நாளுடன் முடிவடைகின்றது எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அவர்கள் நெஞ்சமெலாம் மாவீரர்கள் நினைவு நிறைந்திருக்கும் மாவீரர்கள் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடத்தப்படுவது காலந் தவறாத வரலாற்று நிகழ்ச்சி தமிழினம் தன்மானத்தடன் வாழவேண்டும் என்ற புனித இலட்சியத்திற்காக தமது இன்னுயிர் ஈய்ந்த தியாகச் செம்மல்களை மனதார நினைவு கூர்வோமாக. “எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாகஇ தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மானவீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசியநாள்.” 01) பிரான்சில் 27…

  24. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை சற்றுமுன் ஜனாதிபதி இல்லத்துக்கு சென்று சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணாஇ இருதர‌ப்பு உறவை மே‌ம்படு‌த்துவது தொட‌ர்பான அ‌ம்ச‌ங்க‌ள் மற்றும் த‌மிழ‌ர்க‌ள் மறுகுடியம‌‌ர்‌த்துத‌ல் கு‌றி‌த்து ‌விவா‌தி‌‌க்க உ‌ள்ளா‌ர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடு‌த்து இல‌‌‌ங்கை ‌பிரதம‌‌ர் டி.எம்.ஜயர‌ட்னவை ச‌ந்‌தி‌த்து பேசு‌ம்‌ ‌கி‌ரு‌ஷ்ணாஇ ‌பி‌ன்ன‌ர் அ‌ம்பாந்தோட்டை செ‌ன்று இ‌ந்‌திய துணை தூதரக அலுவலக‌த்தை ‌திற‌ந்து வை‌க்க உ‌ள்ளா‌ர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழ நாதம்

  25. பிரித்தானிய தொல்பொருள்காட்சிசாலையில் எனக்கு கிடைத்த அதிர்ச்சி.. நேற்று பிரித்தானிய தொல்பொருள்காட்சிக்கு போயிருந்தேன் சில கனடாவில் இருந்து வந்த உறவினர்களுடன்.. முக்கியமாக அங்கு இருக்கும் இலன்கை பகுதியில் தமிழ் மன்னர்களின் பொருட்கள்/ மிகப்பழமை வாய்ந்த தமிழ்பிரதேசங்களில் கிடைத்த தமிழ்பொருட்கள்.. காட்டுவதற்க்காக.. 6 வருடத்துக்குமுதல் அங்கு போயிருந்தபோது எமது பொருட்கள்.. குறைதது இரண்டு நெடிய அலுமாரிகளில் இருந்தது.. நூற்றுக்கனக்கில் தமிழ் எழுத்துகளுடன் கூடிய தங்க நாணயங்கள், பாத்திரங்கள் / 2000 வருடம் பழமையான புலி சின்னம் பொறித்த வாள் கூட இருந்தது... நேற்று சுத்தமாக தமிழ் பொருட்கள் எதுவுமில்லை.. இடத்தை சிங்களப்பொருட்கள் நிரப்பியிருந்தன.. அதிர்சியுடன் குறிப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.