Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப்புலிகளின் விமானங்களுக்கு பொறுப்பாக பணியாற்றிய அச்சுதனைக் கைதுசெய்ய சர்வதேச காவற்துறையினர் பிடியாணை – திவயின 27 October 10 01:44 am (BST) விடுதலைப்புலிகளின் விமானங்களுக்கு பொறுப்பாக பணியாற்றி வந்த அச்சுதன் என்ற பிருந்தவன் சிவராசாவை கைதுசெய்வதற்காக சர்வதேச காவற்துறையினர் பிடியாணை பிறப்பித்துள்ளனர் என திவயின தெரிவித்துள்ளது. பிரான்ஸ் கடவூச்சீட்டை கொண்டுள்ள அச்சுதன் பிரான்சில் விமானப் பயிற்சிகளை பெற்றுள்ளதாக சர்வதேச காவற்துறையினர் கண்டறிந்துள்ளனர். 58வது படைப்பிரிவினர் விஸ்வமடு பிரதேசத்தில் கைப்பற்றிய ஆவணங்களில் மூலம் அச்சுதன் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கான விமானங்கள் பங்களாதேஷ் நிறுவனம் ஒன்றின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்டு, அ…

  2. கொழும்பு நகர சபை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட எதிரிக்கு 290 வருட கடூழிய சிறை! புதன், 27 அக்டோபர் 2010 14:05 கொழும்பு நகரசபை மண்டப வளவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை வழங்கினார் என்கிற வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் சத்தியவேல் இலங்கேஸ்வரன் (வயது 30) என்கிற இளைஞனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 290 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தது. …

  3. விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் - விரைந்து செயற்படுங்கள்: நாம் தமிழர் அக் 27, 2010 விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரி நாம் தமிழர் இயக்கம் உலகெங்கும் உள்ள மக்களிடம் இருந்து இணையத்தள முறைப்பாட்டை பெற்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி வருகின்றது. கீழ் காணும் இணையத்தள முகவரியை அழுத்துவதன் மூலம் நீங்கள் மேலதிக தகவல்களை பெறுவதுடன், இந்த முறைப்பாட்டிலும் ஒப்பமிடலாம். http://www.petitiononline.com/LiftBAN/petition.html காலத்தின் தேவை கருதி இதனை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். sangathie

  4. Oct 27, 2010 / பகுதி: செய்தி / விடுவிக்கப்பட்ட ஐந்தாயிரம் போராளிகளும் எங்கே? போரின் பின்னர் சரணடைந்த போராளிகளில் அரசு கூறுவதைப் போல் விடுவிக்கப்பட்ட ஐந்தாயிரம் போராளிகளும் எங்கே என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐந்தாயிரம் போராளிகள் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் எஞ்சியுள்ள சுமார் ஐந்தாயிரம் முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவர் என்று சிறிலங்காவின் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அரசு கூறுவதைப் போல் விடுவிக்கப்பட்ட ஐந்தாயிரம் போராளிகளும் எங்கே என்ற கேள்வி தமிழர்கள் மத்தியில் எழுப்பப்பட்டுள்ளது. pathivu

  5. 20வயதில் போராளியாகி 20 வயதிலே களமொன்றில் காயமடைந்து இடுப்பின் கீழ் உணர்வுகள் இழந்த போதும் , தான் நேசித்த மண்ணுக்காகத் தனது ஆற்றல் முழுவதையும் அர்ப்பணித்து 2009 மே17, வரையும் களத்தில் கடைசி மூச்சையும் அர்ப்பணிக்கும் முடிவோடு காத்திருந்தவன். நிலமைகள் நினைத்தவற்றுக்கு மாறாக தலைகீழாகி இவனதும் இவன் போன்ற ஆயிரமாயிரம் பேரினதும் கனவுகளில் துரோகங்கள் வென்றுவிட தோற்றுப்போனது தமிழினம். கண்ணீரோடு கடைசியாக முள்ளிவாய்க்காலிலிருந்து இவனை இவனது தங்கைகள் காத்துக் கொண்டு போனார்கள். இவனை தடுப்பில் அடைத்தார்கள். மே16 காயமுற்ற தனது தாயார் உயிருடன் இருப்பாள் என நம்பிய இவனதும் இவனது தங்கைகளினதும் நம்பிக்கை இன்னும் தொடர்கிறது. காயமடைந்து ஏற்றப்பட்ட தாய் உயிருடன் இருப்பதற்கான எதுவித …

  6. Oct 26, 2010 / பகுதி: செய்தி / விடுதலைப்புலிகளின் தடையை நீக்க பலர் சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனார் - பி.பி.சி இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் நோக்கில் அரசியல் தலைவர்கள் பலர் சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பி.பி.சி தெரிவித்துள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதன் அடிப்படையில் இந்தியாவின் நீதிபதி விக்ரமஜித் தலைமையிலான மக்கள் நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்த விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் மீது கடந்த 1991ம் ஆண்டு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அந்த தடையை நீக்குவதற்க…

  7. புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்து இந்தியாவின் ‘ஒப்பரேசன் பூமாலை 2′ கடந்த வருடம் மே 18 முதல் எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையில் சிக்கலில் இருந்து இந்தியா தன்னைத்தானே விடுவித்துக்கொள்ளும் முடிவு ஒன்றை எடுத்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அந்த இயக்கத்தின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகிய இருவரது பெயர்களையும் நீக்குவதாக தடா நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி அறிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார் என்ற அறிவிப்புடன் சிங்கள தேசம் வெளியிட்ட காட்சிப் பதிவுகளின் உண்மைத் தன்மை குறித்து உலகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது. உலகின் பல…

    • 0 replies
    • 1.2k views
  8. சிறீலங்காவின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் - முறைப்பாட்டில் கையெழுத்திடக் கோரிக்கை அக் 27, 2010 சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் நீதிக்குப்புறம்பான படுகொலைகள் தொடர்பில் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்டுவரும் இணையத்தள முறைப்பாட்டில் கையெழுத்திடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவில் நீதிக்குப்புறம்பான படுகொலைகள் தொடர்கின்றது. சிறீலங்கா காவல்துறையினரின் தடுப்புக்காவலில் உள்ளவர்களின் மரணமும் தினமும் தொடர்கின்றன. இந்த மரணங்கள் தொடர்பில் சிறீலங்கா காவல்துறையினர் நீதிபதிகளிடம் தெரிவிக்கும் காரணங்கள் ஒரே மாதிரியானவை. அதாவது, குற்றவாளி சிறையில் இருந்து தப்பிக்க முற்பட்டார், ஆயுதங்களை பறிக்க முற்பட்டா…

  9. புதன்கிழமை, 27, அக்டோபர் 2010 (10:54 IST) சென்னை ஏர்போர்ட்டில் இலங்கை நபர் கைது ஆயிரம் நவரத்தினக் கற்களை வயிற்றுக்குள் விழுங்கி கடத்தி வந்த இலங்கை நபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் வந்த பயணிகளிடம், விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது முகமது சபீக் என்பவர் மீது விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரை சோதனை மேற்கொண்டனர். மேலும் சந்தேகம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் வயிற்றில் நவரத்தின கற்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் உரிய முறையில் மருத்துவ சிகிச்சை அளித்து அவ…

  10. ருவாண்டாவை விட இலங்கையில் ஊழல்கள் மோசம்! புதன், 27 அக்டோபர் 2010 10:41 இலஞ்ச ஊழல் மோசடிகளில் ருவாண்டாவை விட மிக மோசமான நிலையில் இலங்கை உள்ளது என்று ஊழலுக்கு எதிராக போராடும் சர்வதேச சிவில் அமைப்பான TRANSPARENCY INTERNATIONAL இன்று வெளியிட்ட 2010 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரம் மூலம் தெரிய வந்துள்ளது. இந்நிறுவனம் இலஞ்ச ஊழல் மோசடிகள் நாடுகள் தோறும் எப்படி இருக்கின்றன? என்று ஆராய்ந்து வருடா வருடம் புள்ளிவிபரங்களை வெளியிடுவது வழக்கம். இவ்வாண்டுக்கான புள்ளிவிபரத்தை நேற்று வெளியிட்டுள்ளது. இப்புள்ளிவிபரத்தில் 178 நாடுகளில் நிலவும் இலஞ்ச ஊழல் மோசடி நிலைமைகள் தரப்பட்டுள்ளன. இலஞ்ச ஊழல்கள் குறைவாக இருக்கின்ற ஒழுங்கில் நாடுகள் பட்டியல் இடப்பட்டுள்ளன. இலங்கை 91 ஆம…

  11. கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தில் சிறுவனின் உடலம் மீட்பு அக் 26, 2010 நடுவண் தமிழீழம் கிளிநொச்சி கனகாம்பிகைகுளத்தில் இருந்து நேற்று சிறுவன் ஒருவரின் உடலம் மீ;ட்கப்பபட்டுள்ளது. விஸ்வமடு கிழக்கு வரணிபுரத்தை சேர்ந்த அகவை 09 ஐ உடைய அமிர்தலிங்கம் சங்கீதன் என்ற சிறுவனின் உடலமே மீட்கப்பட்டுள்ளதாக பிரதேசத் தகவல்கள் கூறுகின்றன. கனகாம்பிகை தமிழ் வித்தியாலயத்தில் 4 ஆண்டில் கல்வி கற்கும் இந்த மாணவனை நேற்று முன்தினம் பகல் முதல் காணவில்லை என்று ஸ்ரீலங்கா காவற்துறையினரிடம் முறையிடப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே குறித்த சிறுவனின் உடலம் கனகாம்பிகைகுளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. sangathie

  12. புலம்பெயர் மக்களின் பணத்தினால் சிறீலங்காவின் வருமானம் 3.8 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு அக் 27, 2010 வெளிநாடுகளில் இருந்து சிறீலங்கா மக்கள் அனுப்பும் பணத்தினால் சிறீலங்கா அரசின் பொருளாதாரம் மிகப்பெரும் வளர்ச்சி கண்டு வருவதாகவும், இந்த வருடம் அதன் வருமானம் 3.8 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கலாம் எனவும் தினமின என்ற சிங்கள நாளேடு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் பணியாற்றும் சிறீலங்கா பணியாளர்கள், புலம்பெயர் மக்கள் ஆகியோர் சிறீலங்கா வங்கி ஊடாக அனுப்பும் பணத்தினால் சிறீலங்கா அரசுக்கு பெருமளவான வருமானம் கிடைத்து வருகின்றது. இதன் மூலம் கடந்த வருடம் 3.3 பில்லியன் டொலர்களை சிறீலங்கா அரசு சம்பாதித்திருந்தது. சிறீலங்கா அரசு ஒரு வருடத்தில் சம்பாதித்த நிதியில் இது பெரும் …

  13. டாஸ்மாக் இல்லாத ஊர்! ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது பழமொழி. இந்த ஊரில் கோயில் இல்லை. இருப்பினும் சுமார் 800 பேர் குடியிருக்கிறார்கள். “கோயில் மட்டுமில்லை. சாராயக் கடையும் இங்கே இல்லை. அதனாலேதான் நாங்க நிம்மதியா வாழமுடியுது” என்கிறார் கிராமவாசி ஒருவர். நிஜமாகவே ஆச்சரியம்தான்! இங்கே ‘டாஸ்மாக்’ மதுக்கடை இல்லவேயில்லை. இங்கே மட்டுமல்ல. இந்த ஊர் அமைந்திருக்கும் கோட்டைப்பூண்டி ஊராட்சி மன்றத்தில் எங்குமே இல்லை. யாருக்காவது குடிப்பழக்கம் இருந்தால்தானே ‘டாஸ்மாக்’ கல்லா கட்டும்? அட. இதென்ன கலாட்டா? ‘டாஸ்மாக்’ இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு ஊரா? உங்களுக்குத் தோன்றும் அதே ஆச்சரியம்தான் நமக்கும். சமத்துவபுரம் என்பது பெரியாரின் கனவு. ஒரு ஊரில் வாழ…

  14. தன்வினை தன்னைச் சுடும் கட்டம் இது இலங்கையில் நடைபெற்ற போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டன என்ற குற்றச்சாட்டு இப்போது அனைத்துலக ரீதியாக முக்கிய பேசுபொருளாக மாறி யுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வட்டாரங்களில் முதலில் முகிழ்த்த இந்த விவகாரம் ஐரோப்பிய நாடுகள் பலவற் றுக்கும் பரவியது. அதன் முதலாவது விளைவு, போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததாகும். ஆனால் இலங்கை அரசு ஏதோ வகையில் பல தரப்புகளின் உதவியைப் பெற்று அந்த விடயம் விவாதத்துக்கு வராது தடுத்துவிட்டது. அதன் பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கு அத்துறையில் அந்தப் பணியில் கைதேர்ந்த நிபுண…

    • 3 replies
    • 1.7k views
  15. வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக முதல் தடவையாக இந்தியா அறிவித்துள்ளது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக முதல் தடவையாக இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபர் பட்டியலிலிருந்து பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இந்திய புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கைகளுக்கு அமைய தடா நீதிமன்றம் பிரபாகரனுக்கு எதிரான சகல குற்றச்சாட்டுக்களையும் நீக்கிக் கொண்டுள்ளது. ராஜீவ் படுகொலை வழக்குடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களான பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்க…

    • 9 replies
    • 1.7k views
  16. வவுனியாவுக்குப் போயிருந்தேன் – ஈரோடு கதிரின் ஈழத்துப்பயண பதிவு வெயில் விழுதுகளாய் விழுந்து கொண்டிருக்கும் நடு மதிய நேரத்தில், கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து வவுனியா செல்லும் 87ம் எண் பேருந்து புறப்பட்டு கொழும்பு வீதிகளைக் கடந்தது. எப்படியும் ஏழு மணி நேரப் பயணத்தை, நெரிசலோடு அனுபவிக்க வேண்டும் என மனதை பதப்படுத்திக்கொண்டேன். கொழும்பு வீதிகளில் மிக முக்கியமாக அவதானிக்க வேண்டிய விடயம், எல்லாப் பலகைகளில் தமிழ் எழுத்துகள் அழகாய் இருந்து கொண்டிருக்கின்றன. நிமிடங்கள் கரையக்கரைய பேருந்தில் மனிதர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது, சிலாபம், புத்தளம் என நேரமும், பேருந்தின் வேகமும் சாலைகளைத் தின்று, ஊர்களை குடித்துக்கடந்து கொண்டிருந்தது. புத்தளத்தில் பேருந்து கொள்…

    • 2 replies
    • 990 views
  17. புலனாய்வு இல்லை, நிபுணர் குழு இலங்கை வராது! ஐ.நா திட்டவட்டம் செவ்வாய், 26 அக்டோபர் 2010 13:45 . . இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் சர்வதேச நிபுணர்கள் ஆலோசனை குழு புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ள மாட்டாது என்றும் இலங்கைக்கு வர மாட்டாது என்றும் ஐ.நாவில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயினும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான எழுத்துமூல சாட்சியங்களை எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐ.நா கேட்டுக் கொள்கின்றது என்றும் அச்செய்திகள் கூறுகின்றன. நிபுணர்கள் ஆலோசனைக் குழு அதன் அதிகார வரம்புகளுக்கு உட்பட்டே செயற்பட முடியும் என்பது இக்குழுவின் உறுப்பினர்க…

  18. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு தமிழர்களையே தூதர்களாக நியமிக்க வேண்டும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், தனி அமைச்சகம் ஒன்றை மாநில அரசு உருவாக்க வேண்டும் என்று திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய வீரமணி, ஊடகவியலாளர்களிடம் கூறுகையில், "திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில், உலக நாத்திகர்கள் மாநாடு திருச்சியில் 2011 ஜனவரி 7ஆம் திகதி ஆரம்பமாகி, மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. உலகின் பல நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். பகுத்தறிவு, அறிவியல் கண்காட்சி, கருத்தரங்குகள், மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி…

  19. நமால்- சிறீரங்காவின் காடைத்தனமே – அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தை அதிர்ச்சியடைய வைத்தது செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கவிருந்த இரு சக்கர உழவு இயந்திரங்களில் ஒரு பகுதியை அரசாங்க தரப்பினர் சிங்கள மக்களுக்கு வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கு உழவு இயந்திரங்களை வழங்கும் இந்த வைபவத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக், ஸ்ரீரங்கா, மனு நாணயக்கார, சரா நாத பஸ்நாயக்க ஆகியோர் செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளின் எதிர்ப்பிற்கு மத்தியில் தமது அரசியல் ஆதரவாளர்களுக்கு உழவு இயந்திரங்களைப் பலவந்தமாகப் பெற்றுக்கொடுத்துள்ளனர். வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 470 ப…

  20. கடந்த ஒக்தோபர் 13 இல் நாம் (TCWA - தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) விடுத்த ஊடக அறிக்கை வாயிலாக -- ரொறன்ரோ மாநகர அவைக்கு வட்டாரம் 42 இல் போட்டியிடும் நீதன் சண் அவர்களுக்கும்; -- ரொறன்ரோ மாவட்ட கல்வி அறங்காவல் வாரியத்துக்கு வட்டாரம் 22 இல் போட்டியிடும் அஷ்வின் பாலமோகன் அவர்களுக்கும்; வாக்களித்து அவர்களை வெற்றிபெற வைக்குமாறு கேட்டிருந்தோம். இப்போது மார்க்கம் நகரஅவைக்கும் ரொறன்ரோ மாவட்ட கல்வி அறங்காவல் வாரியத்துக்கும் போட்டியிடும் கீழ்க்கண்ட வேட்பாளர்களுக்கும் உங்கள் வாக்குகளை அளித்த அவர்களை வெற்றிவாகை சூட வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தீபன் விக்னேஸ்வரன் - ரொறன்ரோ மாவட்ட கல்வி அறங்காவல் வாரியம் (வட்டாரம் 21) பார்த்தி கந்தவேள…

    • 17 replies
    • 1.6k views
  21. Started by உமை,

    Australians for Tamil Rights, a newly formed coalition intends to protest the Sri Lankan cricket team’s visit to Melbourne. “Why has the Sri Lankan cricket team included a player who is an artillery gunner in the Sri Lankan Army? The Sri Lankan army is being investigated for war crimes by the United Nations” said Sue Bolton, spokesperson for Australians for Tamil Rights. “Australia has been at the forefront in defending human rights around the world. Australians for Tamil Rights feels that it is time that Australia shows its concern for the hundreds of thousands of Eelam Tamils who have been subjected to inhuman treatment by the Sri Lankan government.” …

  22. தமிழ்நாட்டில் பூந்தமல்லியில் இருக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் அகதி ரமணன் 24 தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக, அவரது வழக்கறிஞர் ராஜீவ் காந்தி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். ரமணன் தற்போது பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் கூறினார். தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கை அகதிகளில், போராளி இயக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் வழக்குகளை சந்தித்து வருபவர்கள் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு, சென்னையை ஒட்டிய பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாதுகாப்புடன் கூடிய முகாம்களில் அடைக்…

  23. இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குரிய நிவாரண உதவிகளை வழங்கிவருகின்ற உலக உணவுத் திட்டத்திற்கு கொடையாளர்களிடமிருந்து கிடைக்கின்ற நிதியுதவியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக நிவாரண உணவு விநியோக நடவடிக்கைகள் இறுக்கமடைந்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியிருக்கின்றது. இந்த நிதிச் சோர்வினால், இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்படுகின்ற கோதுமை மா மற்றும் சீனி ஆகிய உணவுப் பொருட்களில் 50 வீதத்தைக் குறைக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் உலக உணவுத் திட்டம் கூறியிருக்கின்றது. இதனால் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. உலக உணவுத்திட்டத்திற்கான நிதியுதவியில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், வரும் ஜனவரி …

  24. சீனருக்கும் இந்தியருக்கும் இங்கு தொழில் வாய்ப்பு ஆனால் எம்மவர்கள் துன்பத்தில் உழல்கின்றனர் ஐ.தே. கட்சி குற்றச்சாட்டு இந்நாட்டு மக்கள் விலை வாசி உயர்வால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சீன மற்றும் இந்திய நாட்டவர்களுக்கு இலங்கை தொழில்வாய்ப்புகளை வழங்கி வருகின்றது. இப்படி ஐ.தே.கட்சி எம்.பியும் அக்கட்சி யின் ஊடகப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க நேற்று குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்றுஇடம் பெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதுதொடர் பாக மேலும் கூறியவை வருமாறு: பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி, பணவீக்க இறக்கம் ஆகியவை பற்றி அரசு பேசுகின்றது. இவை எதையும் மக்களால் உணரமுடியாது. மக்களால் விலைவாசி மற்றும் பட்…

  25. 26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நாதன் - கப்டன் கஜன் ஆகியோரின் 14ம் ஆண்டு நினைவு நாளும், 23.09.2001 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் நடைபெற்ற மோதலின்போது விழுப்புண்ணடைந்து 26.10.2001 அன்று வீரச்சாவினை அணைத்துக் கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபியின் 9ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.