ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
http://www.yarl.com/files/101019_admk_member.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 744 views
-
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் மறைந்து 10 வருடங்கள் நிறைவு சிரேஷ்ட ஊடகவியலாளரான மயில்வாகனம் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆந் திகதி ஆயுதம் தாங்கிய குழுவினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, மயில்வாகனம் நிமலராஜன் அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரும் தாக்குதலுக்கு இலக்காகினர். நிமலராஜன் பிபிசி தமிழ், சிங்கள சேவை மற்றும் வீரகேசரி, ராவய ஆகிய பத்திரிகைகளின் நிருபராகக் கடமையாற்றினார். இவரது படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் முன் வர வேண்டும் என எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வலியுறுத்திக் கூறியிருந்தது. 2002 ஆம் ஆண்டு எல்லைகளற்ற ஊடகவியலாளர்…
-
- 6 replies
- 872 views
-
-
பொன்சேகாவின் மனித உரிமை - 151 நாடுகள் ஸ்ரீலங்காவை கண்டிக்கும் அக் 19, 2010 சரத் பொன்சேகாவின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக சர்வதேச நாடாளுமன்றம் தீர்மானிக்கும் பட்சத்தில், உலகின் 151 நாடுகள் ஸ்ரீலங்காவை கண்டிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்தன இதனை தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி, ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஜெயலத் ஜெயவர்தன சர்வதேச நாடாளுமன்றத்தில் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இந்த கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், 151 நாடுகள் ஸ்ரீலங்காவை நிராகரிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். sangathie
-
- 0 replies
- 491 views
-
-
2009 களமொன்றில் காயமடைந்தான் இவன். வயிற்றை அறுத்துக் கொண்டு போனது எறிகணை. சாகும் தறுவாயில் குருதி வெள்ளத்தில் கிடந்தவனை இவனது காதல் மனைவி காப்பாற்றத் துடித்த துடிப்பினைச் சொல்லும் தருணங்களில் அவள் அழுதேவிடுகிறாள். கைக்குழந்தையையும் அவனையும் கடலால் கொண்டு சென்று காப்பாற்றிவிட வேண்டுமென்ற முடிவோடு இயன்றவரையும் அவனது குருதிப்போக்கினை கட்டுப்படுத்த இயன்ற யாவையும் செய்தாள். அவளது முயற்சி அவனை உயிரோடு கொண்டுபோய் மருத்துவத்துக்காய் சேர்க்கப்பட்டான். தற்போது இவனுக்கு ஒரு சிறு நீரகம் மட்டுமே இயங்குகிறது. இடுப்பின் கீழ் இப்போது இவனுக்கு உணர்வுகள் இல்லாது வாழ்கிறான். வயிற்றுக்காயத்தின் தாக்கம் எஞ்சிய சிறுநீரகமும் தாக்கமடைந்திருப்பதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கிறது. சத்த…
-
- 3 replies
- 1.2k views
-
-
'Crook' என்ற கிந்தித் திரைப்படம் அண்மையில் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது. இப்படம் பஞ்சாப் மானிலத்தில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவின் மற்றைய மாநிலங்களிலும், வெளினாடுகளிலும் இப்படத்தின் வசூல் நன்றாக இருக்கவில்லை( தோல்வி). அவுஸ்திரெலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவதை வைத்து இப்படம் எடுத்திருக்கிறார்கள். அதுவும் அவுஸ்திரெலியா மண்ணில் மெல்பேர்ணில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இப்படம் அவுஸ்திரெலியாத் திரையரங்கில் தற்பொழுது ஓடிக்கொண்டிருக்கிறது. அவுஸ்திரெலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவதாக இந்தியா ஊடகங்களில் வரும் செய்திகளில் பல பொய்யானவை. இந்தியர்கள் பலர் காப்புறுதிப் பணத்திற்காக நடாத்திய மோசடிகள் என பல நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் சில சம்பவங்கள்…
-
- 2 replies
- 800 views
-
-
நவீன துட்டகைமுனுவென அழைக்கப்படும் மகிந்த ராஜபக்ச அவர்களே, நீங்கள் உண்மையிலேயே அந்த பெருமையை உங்கள் வசம் அணிந்துகொள்ளவேண்டுமெனில், வாழ்வில் சகலதையும் இழந்து அல்லல்படும் தமிழ்மக்களுக்கு வாழ வழி அமைத்துக்கொடுங்கள். இனியொரு இன்னல் இல்லாத தேசமாக இலங்கையை மாற்றிக்கொள்ளுங்கள். இவ்வாறு கிளிண்டன் மற்றும் ஒபாமா அரசுகளுக்கு தெற்காசிய விவகாரங்கள் மற்றும் குடிவரவு விடயங்களில் ஆலோசனை வழங்குபவரும் ஆசிய - அமெரிக்க நீதி அமைப்புக்களின் தலைவரும் சட்டத்தரணியுமான ஜோர்ஜ் வில்லி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் அமெரிக்கா சென்ற மகிந்த ராஜபக்ச கலந்துகொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜோர்ஜ் வில்லி சிறிலங்கா ஜனாதிபதியிடம் தனது உரையில் நேரடியாக இந்த கோரிக்கையை…
-
- 3 replies
- 1.1k views
-
-
செய்தி சேகரிக்கச் சென்ற தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இலங்கையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த வாரம் உயர்கல்வி அமைச்சகத்துக்கு முன், பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாக்கியர்களை கண்டிக்கிறோம் என்று எழுதப்பட்டிருந்த பதாகைகளை வைத்திருந்தனர். மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். http:…
-
- 0 replies
- 411 views
-
-
செவ்வாய்க்கிழமை, 19, அக்டோபர் 2010 (7:49 IST) இலங்கையில் சீரழியும்-செத்து மடியும் எங்கள் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக:கலைஞர் இலங்கைத் தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்தர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ’’சென்னை விமான நிலையத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து அவரிடம் கடிதம் ஒன்றை அளித்தேன். அதில், இலங்கையில் இன்னமும் முகாம்களில் இருந்து வரும் 30 ஆயிரம் தமிழர்களையும் உடனடியாக அவரவர் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், போரினால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழர்களுக்கும் விரைவில் மறு…
-
- 4 replies
- 764 views
-
-
உலகத் தமிழர் பேரவையால் வெளியிடப்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை காண்பிப்பதாகக் கூறப்படும் புகைப்படங்களை இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் நிராகரித்துள்ளார். இலங்கை போரின் போது இலங்கை இராணுவத்தினரால் இந்த தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறி அந்தப் புகைப்படங்களை உலகத் தமிழர் பேரவை வெளியிட்டிருந்தது. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பலர் கொல்லப்பட்டிருப்பதை அந்தப் படங்கள் காண்பித்தன. கொலை செய்யப்பட்ட பெண்களின் அரை நிர்வாணப்படங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. அதிகார பூர்வ விஜயம் ஒன்றை முன்னிட்டு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் லண்டன் வந்திருந்த தருணத்தில் இந்தப் படங்கள் வெளியாகியிருந்தன. விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆதரவாளர்கள் சிலரையும் …
-
- 0 replies
- 881 views
-
-
இலங்கை போர்க் குற்றம் - சர்வதேச விசாரணையை வற்புறுத்த வேண்டும்: அம்னெஸ்டி இலங்கையில் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட இனப் படுகொலை போர் குறித்து சர்வதேச விசாரணைக்கு ஒப்புக் கொள்ளுமாறு சிறிலங்க அமைச்சர் பெய்ரீஸ் இடம் வற்புறுத்துமாறு இங்கிலாந்து அயலுறவுச் செயலர் வில்லியம் ஹாக்-கை சர்வதேச பொது மன்னிப்புக் கழகம் (அம்னஸ்டி இண்டர்நேஷனல்) கேட்டுக்கொண்டுள்ளது. சிறிலங்க அயலுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பெய்ரீஸ் இன்று இங்கிலாந்து வருகிறார். அவரை சந்திக்கும் இங்கிலாந்து அமைச்சர் வில்லியன், இலங்கைப் போரில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், அம்னஸ்டி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. “போரில் நடந்த கொடூரங்கள் குறித்து சுதந்த…
-
- 0 replies
- 645 views
-
-
பால்மா விலை மீண்டும் அதிகரிக்கும் பால்மாவின் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவித்தல் இவ்வார இறுதிக்குள் சிறிலங்காவில் வெளியிடப்படும் எனத்தெரிவிக்கப்படுகின்றது. பால்மா உற்பத்தி மற்றும் இறக்குமதி நிறுவனங்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை அடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த ஜூன் மாதம் பால்மா பக்கட் ஒன்றின் விலை 48 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. புதிதாக விலை அதிகரிப்பு எவ்வகையில் அமையும் என்பது இதுவரையில் அரசினால் வெளியிடப்படவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைக்குறைப்பு மிகைப்படுத்தப்பட்ட விளப்பரங்களுடன் நடைபெறும் வேளையில் விலை அதிகரிப்பு மிகவும் அமைதியாக நள்ளிரவு வேளைகளில் நடைபெறுகின்றது. http://meenakam.com/?p=11262
-
- 2 replies
- 624 views
-
-
விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பு குறித்த நீதிமன்ற விசாரணையில் பங்கேற்க அனுமதிக்கும் படி கேட்டு, தமிழக மக்கள் உரிமை கழகம் சார்பில் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தமிழக மக்கள் உரிமை கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கைத் தலைமை நீதிபதி எம்.வை.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய குழு விசாரித்தது. அதன்போது, மத்திய அரசு வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, "தடை நீடிப்பு குறித்து விசாரித்து வரும் நீதிமன்றில் தங்களது தரப்பு கருத்தை மனுவாகத் தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எனினும், தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சார்பாகவோ, அதன் நிர்வாகியோ அல்லது உறுப்பினரோ தவிர வேறு …
-
- 0 replies
- 728 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வைத் தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான உறுதுணைக்குழு-பிரான்சு பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசின் யாப்பு குறித்தான விளக்கம் - உரைகள் - விபரணங்கள் மற்றும் கலை நிகழ்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் ஒக்ரோபர் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 மணிக்கு ஏற்பாடாகியுள்ள இப்பொதுக்கூட்டம் salle des fetes , 9 av gabriel peri, 93270 sevran எனும் இடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பிரான்சு வாழ் தமிழ் உறவுகள் அனைவரையும் இதில் கலந்து கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு பலம் சேர்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான உறுதுணைக்குழு பிரான்சு அழைப்பு விடுத்துள்ளது.
-
- 0 replies
- 723 views
-
-
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19, 2010 மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிக்குக் கிடைத்த சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாட்டினைத் தொடர்ந்து, முருங்கன் பகுதியில் அமைந்துள்ள என் இரட்சகர் சிறுவர் இல்லத்தை உடனடியாக மூடுமாறு மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் நேற்று உத்தரவிட்டார். நீதிமன்றத்திற்குக் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் நேற்று மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவையடுத்து, சிறுவர் இல்லம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக தெரிய வருவதாவது : மன்னார் முருங்கன் பகுதியில் அமைந்துள்ள என் இரட்சகர் சி…
-
- 2 replies
- 1.1k views
-
-
உலகத் தமிழ் உறவுகளுக்கு தாய்லாந்திலிருந்து தமிழீழ ஏதிலிகளின் வேண்டுகோள் தாய்லாந்தில் அகதியாக வாழும் உதயனாகிய நான் மீனகம் இணையம் ஏற்படுத்தித் தந்ததன் பேரில் கனேடியத்தமிழ் வானொலியுடன் தொடர்பு கொண்டு தாய்லாந்தில் இலங்கைத் தமிழ் அகதிகளின் தற்போதைய நிலைமை பற்றிய செய்திகளை நேர்காணலிற் கூறியபோது நான் பகிர்ந்து கொண்ட விடயங்களையும் அதற்குக் கனேடியத்தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த டேவிட் பூபாலபிள்ளை முன் வைத்த ஆலோசனைகளையும், இது தொடர்பான தமது செயற்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டவற்றைச் செய்தியாகத் தொகுத்துள்ளேன். மேலும் இச்செவ்வியானது கனேடிய நேரப்படி பிற்பகல் ஒரு மணிக்கு வழங்கப்பட்டது. கேள்வி- தற்பொழுது தாய்லாந்தில் அகதிகளின் நிலை பற்றி? பதில்- இங்குள்ள நிலைமை தொடர்ந்து …
-
- 0 replies
- 724 views
-
-
மண்முனை – கொக்கடிச்சோலை வாவியூடாக பாலம் அமைக்க கோரிக்கை 100 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் மண்முனை- கொக்கடிச்சோலை வாவியுடான படகுப் பாதைக்குப் பதிலாக குறித்த நீர்வழியூடாக பாலம் அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 1 கிலோ மீற்றர் நீளமுள்ள இவ் நீர் வழிப்பாதையூடாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் அரச ஊழியர்களும் படகுப்பாதையுடாகவே பலவேறு சிரமங்களுக்கு மத்தியில் பயணம் செய்து வருகின்றனர். இவ்வழியுடாக பாலம் அமைப்பதற்கு பல அரசியல் வாதிகள் பலமுறை அடிக்கல்நாட்டியுள்ளனர் ஆனால் கடந்த பல தசாப்தங்களாக பாலம் அமைக்கப்படவேயில்லை. கிழக்கு உதயத்தின் கீழாவது படகுப் பாதைக்குப்பதிலாக பாலம் அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …
-
- 0 replies
- 402 views
-
-
சிங்கள மக்களை குடியமர்தத்தும் நாடகம் – தடுக்க கோருகின்றார் எம்.பி குடாநாட்டில் மீளக்குடியமர சென்றுள்ளதாக கூறப்படும் குடும்பங்கள் தாங்கள் முன்பிருந்த காணிகளை கோராமல் அரச காணிகளில் தங்களை குடியமர்த்துமாறு கோரிக்கை விடுப்பது யாழ். குடநாநாட்டில் சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்த நடாத்தப்படும் நாடகமாகும். எனவே அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அரசிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவான் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் மக்களுக்கு விரோதமாக முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கைகள் நாட்டின் சகல தேசிய இனங்களும் ஐக்கியப்பட்டு தேசத்தின் அபிவிருத்திக்கு பங்களிக்கும் நிலைமையை சீர்குலைத்து இனங்களிடையே கசப்புணர்வையும் மோதலினையும் ஏற்படுத்தவே வழிவகுக்கும் என்றும் அவ…
-
- 0 replies
- 647 views
-
-
2006ம் ஆண்டு காயமுற்று இடுப்பின் கீழ் உணர்வுகள் அற்றுப் போனது. 15வருட களவாழ்வுக்கு ஒய்வு கொடுத்தாற்போல அவன் ஒரு சுழல்கதிரைக்குள் அடங்கிப்போனான். மனதளவில் தனது ஊனம் பற்றிய வருத்தம் இருந்த போதிலும் அவனை புதுப்பித்து வாழ்வின் மீது அவனுக்கு நம்பிக்கையை எற்படுத்திய அவனது துணைவியே அவனுக்கு எல்லாமுமாகியிருந்தாள். இயலாத போதும் அவ்வப்போது கொடுக்கப்படும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். மாதக்கொடுப்பனவாகக் கிடைத்த 6ஆயிரம் ரூபாவோடு போனது காலங்கள். கடைசியுத்தம் இவர்களையும் முள்ளிவாய்க்கால் வரை துரத்தியது. எறிகணையும் மரண ஒலிகளும் பிணங்களும் நிறைந் த நாட்களில் சிறுகுழந்தைகளையும் அவனையும் அவனது துணைவியே காவித்திரிந்தாள். போரின் உக்கிரம் ஒரு பொழுது அவனது கையைச் சிதைத்தது எற…
-
- 10 replies
- 1.2k views
-
-
திங்கட்கிழமை, அக்டோபர் 18, 2010 எங்களை நம்புங்கள் நாங்கள் உங்களுடன் சேர்ந்து வேலை செய்வோம் ( Trust us. We will work with you. ) என கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன் மஹிந்தவிடம் கூறியதாக இலங்கை வெளி நாட்டமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார். இந்து பத்திரிகைக்கு அளித்துள்ள பிரத்தியேக செவ்வியிலேயே பீரிஸ் கூறியுள்ளார். பீரிஸ் தொடர்ந்து கூறுகையில் கூட்டமைப்பு சம்பந்தனை மஹிந்த இராஜபக்ஷ இரு தடவை சந்தித்துள்ளார். இப்போ சம்பந்தன் தமிழ் நாட்டில் நீண்டகாலம் தங்கி இருந்துவிட்டு மீண்டும் கொழும்பு வந்துள்ளார் அவரை மஹிந்த விரைவில் சந்திப்பார். கூட்டமைப்பிற்கும் அரச அதிபருக்கும் நல்ல உறவு உள்ளது. வெளி நாட்டில் உள்ள தமிழர்கள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் மிகவும் …
-
- 5 replies
- 1k views
-
-
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19, 2010 வவுனியா நகர மில் வீதியில் தனியார் சொகுசு ஜீப் வாகனம் ஒன்றின் மீது திங்கட்கிழமை இரவு 7.45 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் இருவர் காயமடைந்தனர் என்றும் தனியார் சொகுசு ஜீப் வாகனமும், அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வாகனத்தின் பொனட் பகுதிக்குள்ளேயே குண்டு வெடித்ததாகவும் இதனால் அந்த வாகனம் படுமோசமாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிசாரும், இராணுவத்தினரும் மில் வீதியைச் சுற்றி வளைத்து தேடுதல், விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அண்மைய நாட்களாக வவுனியா நகர வர்த்தகர்கள் மத்…
-
- 0 replies
- 495 views
-
-
Oct 18, 2010 / பகுதி: செய்தி / மன்னாரில் சட்ட விரோத மணல் அகழ்வை நிறுத்தக் கோரிக்கை மன்னார் ஓலைத்தொடுவாய் கிராமத்தில் தென்பகுதியில் இருந்து வருகைதந்துள்ள சிங்களவர்களினால் சட்ட விரோதமான முறையில் மணல் மண் அகல்வு இடம் பெற்று வருவதாகவும் உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என் அக்கிராம மக்கள விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த கிராமத்தில் உள்ள குடும்பம் ஒன்று தங்கலுடைய காணியை சிங்களவருக்கு விற்றுள்ளனர். காணியை இரகசியமாக வாங்கி குறித்த காணியில் சட்ட விறோதமான முறையில் மணல் மண்னை சேமீத்து தென் பகுதிக்கு கொண்டு செல்வதற்காண நடவடடிக்கைகள் இடம் பெற்று வந்த நிலையில் தெரியவந்தள்ளது. இந்த நிலையில் கிராம மக்கள் குறித்த கா…
-
- 0 replies
- 350 views
-
-
Oct 18, 2010 / பகுதி: செய்தி / சொல்ஹெய்ம் மீண்டும் சிறீலங்கை வருகிறார் நோர்வேயின் சுற்றாடல் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் அடுத்த வருட முற்பகுதியில் சிறீங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அங்கத்தவர்களை சொல்ஹெய்ம் சந்திப்பார் என ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தனது முந்தைய சிறீலங்கை விஜயங்களின்போது தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்துவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு முதல் தடவையாக விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறீலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சம…
-
- 0 replies
- 567 views
-
-
செங்கலடி தமிழ் மக்கள் இராணுவத்தினரின் அடக்கு முறைகளுக்கு முகங்கொடுக்கின்றனர் அக் 18, 2010 மட்டக்களப்பு செங்கலடியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் இராணுவத்தினரின் அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மீளமைப்புக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியம் வழங்கிய வந்தாறுமுல்லை கிராம அபிவிருத்தி சமூகத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், மீள்குடியேற்றம் என்ற பெயரில் பொது மக்கள் கைவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1999ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதியில், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் வாழ…
-
- 0 replies
- 390 views
-
-
தமிழர் தாயகத்தை எதிரியிடம் இருந்து காத்து அங்கு தனியாட்சி நடத்தி வந்த விடுதலை புலிகளின் கட்டமைப்பு தமது மண் மீட்பு மண் காக்கும் போரில் தம் உயிர்களை நீர்த்த போராளிகளை மாவீரர் நாளில் நினைவு கூறுவது வழமை. அவ்வாறாக வரும் கார்த்திகை மாதம் இருபத்தி ஏழாம் திகதி ஐரோப்பாவில் வருகை தந்து தமிழ் மக்கள் மத்தியில் பேச இருந்த சீமானை சிறையில் அடைத்தது தமிழக அரசு. அவரது பேச்சின் வாயிலாக தமிழ் மக்கள் மீண்டும் புலிகள் பக்கம் அவர்களின் உரிமை போர் பக்கம் தூண்டபட்டு அந்த போராட்டம் துளிர்க்கும் என நம்புகிறது அந்நிய பேரினவாத படைகள் அரசுகள். தமிழ் ஈழ விடுதலை போரில் பங்கெடுத்து சிறை கூடத்தில் இருக்கும் முக்கிய போராளி தலைவர்களை புலம் பெயர் நாடுகளிட்க்கு அனுப்பி அங்கு தமிழ் மக்கள் மத்தியில…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஜி.எல்.பீரிஸ் பிரித்தானியா வருகை – எதிர்ப்புத் தெரிவிக்குமாறு தமிழர் பேரவை அழைப்பு http://meenakam.com/?p=10920 சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பிரித்தானியாவிற்குப் பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், அவரது பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் எனவும், தமது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு தமிழ் மக்களின் நிலை பற்றி விளக்கம் அளித்து, அவர்களையும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்க வேண்டும் எனவும், பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுள்ளது. எதிர்வரும் 19ஆம் நாள் செவ்வாய்க்கிழமை International Institute for Strategic Studies (IISS) என்ற அமைப்பு லண்டனில் நடத்தவுள்ள மாநாட்டில் சிறப்புரை ஆற்றுவதற்கா…
-
- 1 reply
- 621 views
-