Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 10 OCT, 2023 | 10:16 PM ஆர்.ராம் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் 23ஆவது அமைச்சர் மட்ட கூட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இன்று மாலையில் இலங்கையை வந்தடைந்துள்ளார். கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் அவரை உயர்கல்வி அமைச்சர் கலாநிதி.சுரேன் ராகவன் நேரில் சென்று வரவேற்றிருந்ததோடு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் உடன் பங்கேற்றிருந்தார். மேலும் “மீண்டும் கொழும்மை வந்தடைவதை இட்டு மகிழ்ச்சி அடைவதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமைச்சர் ஜெய்சங்கர் நாளையதினம் இந்து சமுத்திர எல…

  2. Published By: DIGITAL DESK 3 16 OCT, 2023 | 10:08 AM யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அண்மையில் ஒன்று கூடி தங்களில் ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அதனை டிக்டொக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர். பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களின் செயற்பாடானது வீதியில் செ…

  3. 15 OCT, 2023 | 02:30 PM பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தெற்கின் சக்திகள் போராடுவதை வரவேற்கின்றோம். அத்தோடு பௌத்த சிங்கள நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தாலே பாலஸ்தீனத்துக்கான போராட்டம் உண்மையானதாக அமையும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவர் இன்று (15) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்துக்கும், இஸ்ரேல் படைகளுக்கும் இடையில் வெடி…

  4. டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்வதே சிறந்தது - இரா.சாணக்கியன்! kugenOctober 13, 2023 (சுமன்) கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினாக இருப்பதே சிறந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்திய இழுவைப் படகு விடயம் குறித்து பிரதமர் மற்றும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் எதிர்மறையான கருத்துகள் தொடர்பில் ஊடக…

    • 7 replies
    • 606 views
  5. 15 OCT, 2023 | 02:03 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, மேற்கொள்ளப்படும் பணிகளில் ஒன்று விவசாயத்துறையில் உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கத்துக்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான மென்பொருளை அறிமுகப்படுத்துவதாகும். விவசாயத் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக ஏழு அமைச்சுக்களிடமிருந்து உரிய தரவுகள் பெறப்பட்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. புதிய மென்பொருள், உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் விளைச்சலை நேரடியாக அளவிடுவதற்கும்…

  6. கட்டடத்தை மீள கோரியமையால் யாழ்.போதனா கிளினிக் இடமாற்றம் adminOctober 15, 2023 கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக வைத்தியசாலைக்கு அருகில் உள்ள தனியார் விடுதி கட்டடத்தில் இயங்கிவந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அனைத்து கிளினிக்குகளும் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் வைத்தியசாலையின் உட்புறம் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் என வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில், மருத்துவக் கிளினிக்கில் சிகிச்சை பெற வருபவர்கள் அனைவரும் விக்ரோரியா வீதியில் புதிதாகத் திறப்பட்டுள்ள நுழைவாயிலூடாக…

  7. யாழ். விமானநிலையம், துறைமுகங்கள் ஊடாக ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்ய கோரிக்கை adminOctober 15, 2023 யாழ்ப்பாணம் விமானநிலையம், துறைமுகங்கள் ஊடாக விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதிக்கு ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழு கூட்டம் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கருத்து தெரிவிக்கையில், கடந்த 2018-19 காலப்பகுதியில் விவசாய அமைச்சராக மகிந்த அமரவீர அவர்களும், விவசாய பிரதி அமைச்சராக நான் கடமையாற்றினேன். அப்போது, எமது யாழ்…

  8. Published By: VISHNU 15 OCT, 2023 | 11:25 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்த நபர் மீது தாக்குதல் முயற்சியை மேற்கொண்ட இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இன்றிலிருந்து கடமை நீக்கம் செய்யப்படுவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நுழைவாயிலில் வைத்து, வைத்தியசாலைக்கு வந்த நபர் ஒருவர் பாதுகாப்பு ஊழியர்களால் தாக்கப்பட்ட சம்பவமானது கண்டிக்கப்பட வேண்டியது. இந்த விடயத்தை நான் மிகவும் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளதோடு குறித்த பாது…

  9. 18 SEP, 2023 | 02:31 PM (நேர்காணல் - நா.தனுஜா) அதி­க­ள­வான காப­னீ­ரொட்சைட் வெளி­யேற்றத்தின் விளை­வாக கடல்நீர் மட்டம் படிப்­ப­டி­யாக உயர்­வ­டைந்­து­வரும் நிலையில், 2050 – 2100ஆம் ஆண்­டுக்குள் யாழ்ப்­பாணம், மன்னார், புத்­தளம், கொழும்பு, காலி உள்­ள­டங்­க­லாக நாட்டின் பல பகு­தி­கள் நீரில் மூழ்­கக்­கூ­டிய அபாயம் காணப்­ப­டு­வ­தாக சூழ­லியல் நீதிக்­கான நிலை­யத்தின் பணிப்­பாளர் ஹேமந்த விதா­னகே எச்­ச­ரித்­துள்ளார். மொரோக்­கோவில் நில­ந­டுக்கம், லிபி­யாவில் வெள்­ளப்­பெ­ருக்கு என நாளுக்கு நாள் உல­க­ளா­விய ரீதியில் இயற்கை அனர்த்த சம்­ப­வங்கள் பதி­வா­கி­வரும் நிலையில், இவற்றின் பின்­ன­ணியில் உள்ள கால­நிலை மாற்றம், சூழ­லியல் பிரச்­சி­னைகள்…

  10. ஹர்த்தாலுக்கு முஸ்லீம் மக்களின் ஆதரவை பெறவும் தீவிர நடவடிக்கை நீதிபதி விவகாரம் - குற்ற புலனாய்வு பிரிவின் அறிக்கையை பொருட்டாகவே எடுக்கவில்லை adminOctober 14, 2023 வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முஸ்லிம் மக்களுடனும் இணைந்து எதிர்வரும் 20ஆம் திகதி ஹர்த்தாலை பெருமெடுப்பில், மேற்கொள்ளவுள்ளதாகவும் , அதற்கு வடக்கு – கிழக்கில் வசிக்கும் தமிழ், முஸ்லீம் மக்களின் ஆதரவை வேண்டி நிற்பதாக, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஹர்த்தால் தொடர்பான முன்னாயர்தக் கலந்துரையாடல் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் யாழ்ப்பாண இல்லத்தில் இடம் ப…

  11. மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயமானது எனவும் பாடசாலை வருகைக்கான புள்ளிகள் பரீட்சை பெறுபேறுகளுடன் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். புதிய கல்வி மாற்றத்தின் கீழ், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு கூட மாணவர்கள் வருகைக்காக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புள்ளிகளைப் பெற வேண்டும். அதன்படி, எதிர்காலத்தில் மாணவர்கள் வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இது அனைத்து தரங்களுக்கும் பொருந்தும் என்றார். 1,500க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஒரு மண்டபத்தில் கூட்டி சொற்பொழிவு செய்வதன் மூலம் கல்வி என்பது அடையக்கூடிய ஒன்று அல்ல என்றும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் உட்பட ஆரம்ப வகுப்புகளில் பயிலும் மாணவர…

  12. 14 OCT, 2023 | 01:22 PM மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் தூர்ந்துபோயுள்ள குளங்களை நீர்ப்பாசனம் செய்யக்கூடிய வகையில் புனரமைப்புச் செய்து, அவற்றை பிரதேச விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்வுகள் கடந்த வியாழக்கிழமை (12) இடம்பெற்றன. 'எங்களது செயற்பாடு எங்களது எதிர்காலம் - பெண்களையும் விவசாயிகளையும் வலுப்படுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்றிட்டத்துக்கு அமைவாக வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திக்கனைக்குளம், மாணிக்கம் குளம், பனிச்சங்கேணிக் குளம் ஆகிய மூன்று குளங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்), கொகாகோலா பவுண்டேஷன், இளைஞர் அபிவி…

  13. Published By: DIGITAL DESK 3 14 OCT, 2023 | 12:21 PM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இணையனுசரணை நாடுகள் உள்ளிட்ட சகல தரப்புக்களுடனும் கலந்துரையாடித் தீர்மானிக்கப்படுமென பிரித்தானியாவின் இந்து - பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யான் தெரிவித்துள்ளார். அதேவேளை, இலங்கை விவகாரத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றும், எனவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். கொழும்பில் கடந்த …

  14. Published By: DIGITAL DESK 3 14 OCT, 2023 | 12:07 PM தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்தார். நாளை 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள தரம் ஐந்திற்கான புலமைப்பரிசில் பரீட்சை ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் வடக்கில் இம்முறை 71 இணைப்பு நிலையங்களும் 209 பரீட்சை மண்டபங்களும் செயல்படவுள்ளது. இவ்வாறு செயல்படும் பரீட்சை மண்டபங்களிலேயே இந்த 18 ஆயிரத்து 759 மாணவர்களும் தோற்றவுள்ளனர். இதேநேரம், வடக்கில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் யாழ்ப்பாணம் ஒன்று வலயத்தில் 12 இணைப்பு நிலையங்களின் கீழ் 41 பரீட்சை…

  15. யாழில். காணிகள் விடுவிக்கப்படும் சாத்தியம் adminOctober 13, 2023 யாழ்ப்பாணத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள விவசாய காணிகளில் பெரும் பகுதி விடுவிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் , உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்த பெருமளவான காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. அவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காணப்பட்ட அரச காணிகளை காணி அற்றவர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளோம். அவற்றில் UNDP யின் நிதி அனுசரணையில் வீடுகளை நிர்மாணித்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்நிலையில் யாழ்ப்பா…

  16. 33 வருடங்களின் பின்னர் சொந்த இடத்தில் இயங்கவுள்ள வலி. வடக்கு பிரதேச சபை உப அலுவலகம் adminOctober 13, 2023 யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் காங்கேசன்துறை உப அலுவலகம் மற்றும் பொது நூலகம் என்பன சுமார் 33 வருடங்களின் பின்னர், எதிர்வரும் புதன்கிழமை முதல் சொந்த கட்டடத்தில் இயங்கவுள்ளதாக பிரதேச சபை அறிவித்துள்ளது. யுத்தம் காரணமாக வலி, வடக்கில் இருந்து 1989 ஆம் ஆண்டு கால பகுதியில் மக்கள் இடம்பெயர்ந்த போது , அலுவலகம் மற்றும் நூலகம் என்பனவும் இடம்பெயர்ந்த்து. இடம்பெயர்ந்த நூலகம் மற்றும் அலுவலகம் என்பன யாழின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த நிலையில் , 2016ஆம் ஆண்டு கால பகுதியில் காங்கேசன்துறை உள்ளிட்ட சில பகுதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் மக்கள் மீள் குடிய…

  17. Published By: RAJEEBAN 13 OCT, 2023 | 03:08 PM காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன என பத்திரிகையாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான மார்க் சோல்டர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு குறித்த என்ற நூலை எழுதிய மார்க்சோல்டர் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன. அக்காலப்பகுதியில் இலங்கையில் பொதுமக்கள் அரசாங்கம் அறிவித்த உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதன் பிரதான வ…

  18. 12 OCT, 2023 | 07:26 PM (எம்.ஆர்.எம்.வசீம்) பொருளாதார யுத்தத்துக்கு முகம்கொடுத்திருக்கும் எமது நாட்டை அதில் இருந்து மீட்கும் பயணத்தில் இஸ்ரேலை முன்மாதிரியாக்கொண்டு இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவரிடமும் அநுரகுமார திஸாநாயக்கவிடமும் இளைஞர் யுவதிகளிடமும் கேட்டுக்கொள்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று வியாழக்கிழமை (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், இஸ்ரேலில் இடம்பெற்று வரும் யுத்தத்தின் மூல…

  19. Published By: VISHNU 13 OCT, 2023 | 11:48 AM வவுனியாவில் யுத்தகாலத்தில் காணாமல்போன தனது மகனைத் தேடிய தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா, மகாறம்பைக்குளம் ஶ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா ஆறுமுகம் (வயது 65) என்ற தந்தையே வியாழக்கிழமை (12) மரணமடைந்துள்ளார். இவரது மகனான ஆறுமுகம் சிவகுமார் கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்தார். அவரைத் தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்துகொண்டு தனது மகனை கண்டுபிடித்து தருமாறு கோரி போராட்டங்களில் கலந்துகொண்டிருந்த நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  20. நீரிழிவு மற்றும் புற்று நோய்களுக்கு வழங்கப்படும் இரண்டு முக்கிய மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நீரிழிவு மற்றும் புற்றுநோயை எதிர்நோக்கியுள்ள நோயாளர்களுக்கான மருந்துகளில் தட்டுப்பாடு நிலவுகிறது. இது எமது நாட்டின் சுகாதார துறையை மேலும் வீழ்ச்சி பாதைக்கு இட்டுச் செல்கிறது. குறித்த இரண்டு அத்தியாவசிய மருந்துகளை தற்போதைய அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க தவறியுள்ளது. இவ்வாறு அத்தியாவசிய மருந்துகளை வழங்க தவறியுள்ள அரசாங்கம், தரம் குறைந்த மருந்துகளை கொள்வனவு செய்து மருந்…

  21. Published By: VISHNU 13 OCT, 2023 | 11:29 AM வவுனியா, புதியகோவில்குளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தங்கம் என சந்தேகிக்கப்படும் பல இடங்களில் வியாழக்கிழமை (12) வவுனியா நீதவான் வசீம் அஹமட் மேற்பார்வையில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தனியார் காணியில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இறுதி யுத்தத்தின் போது குறித்த காணி அமைந்துள்ள இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முகாம் இருந்ததாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தக…

  22. Published By: VISHNU 12 OCT, 2023 | 07:10 PM இலங்கையில் எவ்வாறானதொரு யுத்தம் இடம்பெற்றது என்பதை விளக்குவதற்காக தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என்று தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெறும் ஒவ்வொரு மனித உரிமை மாநாட்டிலும் இலங்கை இராணுவம் போர்க்குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்படுவதனால், அதற்குப் பதில் அளிக்கவும், யுத்தத்தின் உண்மை நிலையை எடுத்துக் காட்டும் நோக்கத்திலுமே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில்…

  23. அரசாங்கத்தினுடைய முகம் மாற்றம் அடைந்துள்ளது! “அரசாங்கத்தினுடைய முகம் தற்போது மாற்றமடைந்துள்ளது” என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவல்யனுக்கும் தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் நேற்று இரவு (12) இடம்பெற்றது.| இச் சந்திப்பில் பிரித்தானிய அமைச்சருடன் அந்த நாட்டு இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அன்ரூ பற்றிக் கலந்து கொண்டிருந்ததுடன் தமிழ் கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இச்சந்திப்பின் …

  24. 11 OCT, 2023 | 05:22 PM உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து பதவியிழந்த முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட்டின் நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு செய்யது அலி ஸாஹிர் மெளலானாவின் பெயர் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அலி ஸாஹிர் மெளலானா : வர்த்தமானி வெளியானது! | Virakesari.lk

    • 4 replies
    • 459 views
  25. அபிவிருத்தி லொத்தர் சபைக்கு குத்தகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொள்ளும் போது 28 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை அரசாங்கத்துக்கு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இருந்து அச் சபையின் முன்னாள் தலைவர் சரண குணவர்தன விடுவிக்கப்பட்டுள்ளார் பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார பலல்லே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சரண குணவர்தன செயற்பட்ட காலப்பகுதியில் வாகனங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் போது, 28 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த வழக்கு தா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.