Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார்.விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீட்டித்து இருப்பதையும், அதை உறுதிபடுத்தி தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டதை அங்கீகரிப்பது குறித்தும் முடிவு எடுக்க அமைக்கப்பட்டுள்ள டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென்னின் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.இதில், வைகோ நேரில் ஆஜராகி விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்க எதிர்ப்புத் தெரிவித்து வாதிட்டார்.வைகோ தன் தரப்பு வாதங்களை எடுத்துக்கூற மத்திய அரசு வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட அமைப்பின் பிரதிநிதிகள் தான் கருத்துக் கூற முடியும் என்றும், மற்றவர்கள் இதில் பங்கேற்க அனுமதிக்கக்…

  2. காஷ்மீரைப் போல இலங்கைக்கும் உண்மை கண்டறியும் குழுவை அனுப்பும் பாஜக டெல்லி: காஷ்மீருக்கு மத்திய அரசு [^] உண்மை கண்டறியும் அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்பியிருப்பதைப் போல இலங்கைக்கும் ஒரு உண்மை கண்டறியும் குழுவை பாஜக அனுப்பவுள்ளது. இந்தக் குழுவில் பாஜக கூட்டணி [^]க் கட்சிகள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகள் இடம் பெறும் என்று தெரிகிறது. அதிமுகவும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் போர் முடிவடைந்ததாக அந்த நாட்டு அரசு அறிவித்து ஒரு வருடத்தைத் தாண்டி விட்டது. ஆனாலும் இன்னும் போரினால் பாதித்து, இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு எந்தவிதமான விமோச்சனமும் ஏற்படவில்லை. போர் நடந்த தமிழர் பகுதிகளில் இன்னும் யாரும் குடியமர்த்தப்படவில்லை. கண்ணிவெடி…

  3. அமெரிக்காவின் தலைநகர் நியூயோர்க்கில் இன்று ஆரம்பம் ஆகின்ற ஐ.நாவின் 65 ஆவது பொதுக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்கின்றமை மூலம் நாட்டுக்கு 140 மில்லியன் ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.ஜனாதிபதியுடன் 130 பரிவாரங்கள் கூடவே சென்றிருக்கின்றார்கள் என்றும் இவர்களின் தங்குமிடம், போக்குவரத்து, உணவு ஆகியவற்றுக்காகவே இச்செலவு ஏற்பட்டிருக்கின்றது என்றும் ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இக்கூட்டத்துக்கு நால்வர் அல்லது ஐவரை மாத்திரம் கூட அழைத்து வர வேண்டும் என்று ஐ.நா உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியை கோரி இருந்தது என்றும் அத்தநாயக்க சுட்டிக் காட்டி உள்ளார். http://www.tamilcnn.com/index.php?option=com_conten…

  4. கடந்த வருடம் ஏப்ரல், மே மாதங்களில் இறுதி யுத்தம் இடம்பெற்ற ஆயிரக் கணக்கானோரைக் கொன்றொழித்த முள்ளிவாய்க்கால், நந்திக்கடல், வலைஞர் மடம், வட்டுவாகல் பகுதிகளுக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவரும் மற்றும் உறுப்பினர்களும் நேற்று மாலைப்பொழுதில் சென்று பார்வையிட்டுள்ளனர் கோரமான யுத்தம் நடைபெற்ற அந்தப் பகுதிகள் எங்கும் மயான பூமியாகக் காட்சியளித்தது என்றும் போர் எச்சங்களும் பல்வேறு வகையான வாகனங்கள், பொதுமக்களின் உடைமைகள் போன்றவை சேதமடைந்த எரிந்த நிலையில் சிதறிக் காணப்பட்டன என்றும் ஆணைக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக நந்திக்கடல் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு படைத்தரப்பில் எந்தவித விளக்கமோ அல்லது வேறு விதமான தகவல்கள் எதுவுமே தெரிவிக்கப்படவில்லை …

    • 0 replies
    • 726 views
  5. ஊடக – அரசியல்வாதி வித்தியாதரன் சொல்ல மறந்த கதை ஹாய் வித்தி அண்ணா, நீங்கள் சுவிஸ் நாட்டில் ஆற்றிய உரை என ஒரு வசைபாடலை பல ஊடகங்கள் பிரசுரம் செய்திருந்தன. அதில் வேடிக்கை என்னவெனில் புலம்பெயர் தமிழ் சமூகத்தை வசைபாடி நீங்கள் வாய்க்கு வந்தபடி ஆற்றிய உரையை (வாய்க்கு ஏதும் ஆகிவிடாதோ) சில புலம்பெயர் ஊடகங்கள் பிரசுரம் செய்தது தான். இதனை நடிகர் சத்தியராஜ் இன் பாணியில் சொல்வதானால், மல்லாக்க படுத்திருந்து காறித் துப்பியிருக்கின்றன இந்த ஊடகங்கள். எனது ஊடக நண்பர் ஒருவரிடம் கேட்டேன், உங்களை பற்றி வசைபாடிய உரையை ஏன்டா பிரசுரம் செய்திருக்கிறீர்கள் என்று, அப்படியா? என அவன் திருப்பி கேட்டபோது தான் எனக்கு விளங்கியது அந்த செய்தியை வாசிக்காது பதிவேற்றியிருக்கிறார்கள் என்று. எமத…

  6. திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2010 07:51 ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் 07 பேர் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் Villawood தடுப்பு முகாமின் கூரையில் ஏறி நின்று இன்று தற்கொலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களுடன் ஆப்கானியர் ஒருவரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நாடு கடத்தும் தீர்மானத்தை ஆஸி அரசு மாற்றிக் கொள்ளாவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்வார்கள் என்று இவர்கள் மிரட்டுகின்றார்கள். பீஜி நாட்டவர் ஒருவர் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட நிலையில் இக்கூரையில் இருந்து காலையில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2 ஆம் இணைப்பு... ஆஸியின் Villawood தடுப்பு முகாம் கைதிகளான சட்டவிரோத குடியேற்…

  7. தமிழினத்தினை காக்கக்கோரி மதுரையிலிருந்து சென்னை வரை நடைபயணம் தமிழினத்தினை காக்கக்கோரி மதுரையிலிருந்து சென்னை வரை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் செ.சரவணக்குமார் நடைபயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். http://meenakam.com/2010/09/21/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0.html

  8. தியாகதீபம் திலீபன் அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நெல்லை பாளை ஜவஹர் திடலில் மே 17 இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. http://meenakam.com/newsnet/2010/09/21/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF.html

  9. கருத்துச்சுதந்திரத்தை பறிக்காதே; போர்க்குற்றத்தை மறைக்காதே – மக்கள் எழுச்சிப்பொதுக்கூட்டம் வரும் செப்டம்பர் 23 ஆம் திகதியன்று கோவையில் கருத்துரிமைக்களம் ஏற்பாட்டில் “கருத்துச்சுதந்திரத்தை பறிக்காதே; போர்க்குற்றத்தை மறைக்காதே” என்ற மக்கள் எழுச்சிப்பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு நமது மீனகம் தளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

  10. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 21, 2010 மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பஸ் ஒன்று இன்று அதிகாலை 5.00 மணியளவில் ஆனமடுவப் பகுதியில் விபத்துக்குள்ளானது. பஸ் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் இதில் நால்வர் பலியானதாக கூறபடுகின்றது. உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர். காயமடைந்த சாரதி உட்பட 20 பேர் ஆனமடுவ வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்களின் சடலங்கள் ஆனமடுவ வைத்தியாசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. Eelanatham.net

  11. வைத்திய அதிகாரி சத்தியமூர்த்தி ‐ தமிழினி ஆகியோர் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனைப் பெறப்படவுள்ளது 21 September 10 08:43 am (BST) வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது, வெளிநாட்டு ஊடகங்களுக்கு பொய்யான தகவல்களை வழங்கியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட முன்னாள் வைத்திய அதிகாரி சத்தியமூர்த்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனைப் பெறப்படவுள்ளது. விசாரணை நடத்தி வரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இது குறித்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று அறிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் அழுத்தங்கள் காரணமாகவே தாம் ஊடகங்களுக்கு தவாறான தகவல்களை வழங்கியதாக பிணையில் விடுவிக…

  12. கனடா இளையோர்களால் நடாத்தப்படும் நிகழ்வு பிரசல்ஸ் நகரில் இலண்டனில் ஜேர்மனியில் for further information http://www.eelanatham.info/?cat=43

  13. வன்னியில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் சரணடைந்த மற்றும் பிடிபட்ட போராளிகளையும் ஏற்றி 16 பஸ்களில் கொண்டு சென் றார்கள். இன்றுவரை அவர்களின் கதி என்ன வென்று தெரியாது. இவ்வாறு முன்னாள் போராளி ஒருவரின் தாயார் நல்லிணக்க ஆணைக்குழுமுன் நேற்று சாட்சியம் அளிக்கும் போது தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு கண்டாவளை பிரதேச செயலகத்தில் நேற்று நடத்திய அமர்வில் சாட்சியம் அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். போராளிகளை விடுவிக்க பணம் கேட்ட இராணுவம் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து முதலில் சரணடைந்த போராளி ஒருவரே எமது பிள்ளைகளைக் காட்டிக்கொடுத்தார். எமது பிள்ளைகள் வலுக்கட்டாயமாகவே விடுதலைப்புலிகளினால் அழைத்துச்செல்ல…

  14. கருணாநிதியின் தமிழ் ரத்தம் எங்கே? பகீர் கேள்வி கேட்ட பஞ்சாபி "என் இளமை விடியும் முன்னரே முடியும் என்று யாருக்குத் தெரியும்" வலி மிகுந்த இந்தக் கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் பேரறிவாளன்! ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு "பேட்டரி" வாங்கிக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தூக்கு தண்டனைக் கைதி! 19-வது வயதில் "ஐந்து நிமிட விசாரணை" க்காகக் காவல் துறையால் அழைத்துச் செல்லப்பட்டவர். இப்போது 39 வயதில் மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டு இருக்கிறார். அவர் சிறைக்கு சென்று 20 ஆண்டுகள் முடிந்துவிட்டதை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி கடந்த வாரம் சென்னையில் நடந்தது. தியாகு தலைமையில் நடந்த இந்த விழாவில் "மரண தண்டனைக்கு எதிரான சமூக நீதிப் போராளிகள்" அனைவரும் ஆஜர். ஆனாலும்…

  15. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 21, 2010 கடலில் வழியாக தப்பி செல்லும் வேளை கடற்படையினர் எம்மை நோக்கி சுட்டனர் இதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். நானும் எனையோரும் தப்பி விட்டோம். இவ்வாறு சாட்சியம் அளித்துள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த பெண்மணி. கோரமான யுத்தப் பிடிக்குள் சிக்கித் தவித்த மக்கள் தப்பிச்செல்ல முடியாமல் நாளாந்தம் செத்துமடிந்து கொண்டிருந்தனர். நாங்களும் எத்தனையோ தடவை தப்பிச் செல்ல முயன்றும் அது வெற்றியளிக்கவில்லை. இறுதியில் கடல்வழியாகத் தப்பிச்செல்லத் தீர்மானித் தோம். அதன்படி வெள்ளைக் கொடியுடன் ஒரு படகில் 20 பேர் அதிகாலை வேளை புறப்பட்டுச்சென்றோம். பயணம் தொடர்ந்தது. திடீரென எங்கள் படகுமீது கடற் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தில் எம்முடன் பயணித்த…

  16. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 21, 2010 இனப்பிரச்சினைக்கும், அபிவிருத்தி மற்றும் மீள்குடியமர்வு, புனர்வாழ்வுக்கும் அரசாங்கமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தத்தமக்குத் தனித்தனி குழுக்களை நிறுவ உள்ளனவாம். அந்தக் குழுக்கள் இணைந்து குறிப்பிட்ட விடயங் கள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து இணக்கத்துக்கு வரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த வகையில் அரசாங்கம் அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராயும் குழு உறுப்பினர்களையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்தி சம்பந் தமாக ஆராயும் குழுவின் உறுப்பினர்களையும் நியமித்துவிட்டன. எனினும் இரு தரப்புகளின் உறுப்பினர்களின் பெயர் விவரங்களை அவை வெளியிட மறுக்கின்றன. அரசியல் தீர்வை ஒருபுறமாகவும் அபிவிருத்தி மீள்குடியம…

  17. Memo details human smuggling plan: கனடிய அரசு அகதிகளுக்கான சட்டங்களை மேலும் இறுக்கமாக்கவுள்ளது 48 மணி நேரத்தில் தற்பொழுது நீதிபதிக்கு முன் நிறுத்தப்படும் அகதிகள் இனிவரும் காலங்களில் 2 கிழமை காத்திருக்க வேண்டும். By Mike Blanchfield, The Canadian Press OTTAWA - Ottawa plans to create a new class of asylum seeker — the "mass arrival" — with tough new detention rules to deter human smugglers, The Canadian Press has learned. That would mean that migrants who arrive in Canada in large numbers — such as the 492 Tamils who landed on the British Columbia coast aboard the MV Sun Sea last month — would have to wait two weeks instead of the cur…

  18. சிங்களர்கள் மனதில் ராஜபக்ஷே விதைத்த சிந்தனைகள் - யோகேஸ்வரன் எம்.பி. சிறப்புப் பேட்டி - த.கதிரவன் எந்த மருந்திட்டும் ஆறாத ரணமாக வலியெடுத்துக் கிடக்கிறது ஈழத்துப் பெருஞ்சோகம்...! செய்த குற்றத்துக்குப் பரிகாரமாக, போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுகளின் மறு குடியமர்வுகளுக்கென்று இந்தியாவும் தொடர்ந்து நிவாரணப் பொருட்களையும் நிதியுதவிகளையும் வழங்கிவருகிறது. இதற்கிடையில், 'நிவாரணப் பணிகளில் இலங்கை அரசு மெத்தனம் காட்டி வருகிறது. எனவே இந்தியா சிறப்புத் தூதுவரை அனுப்பி உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும்' என்ற தமிழக முதல்வரின் 'ஆவேசக் கடிதத்துக்கு இணங்க' சிறப்புத் தூதராக இலங்கை சென்று வந்திருக்கிறார் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவ்! இந்நிலையில், கொழும்புவ…

  19. திங்கட்கிழமை, செப்டம்பர் 20, 2010 மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலைய வெடிப்புச் சம்பவத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்தி கசிந்துள்ள நிலையில் இந்தத் தகவலை உறுதிப்படுத்த பொலிஸ் தரப்பு மறுத்துவிட்டது. இதுதொடர்பாகத் தனக்கு அறிக்கை எதுவும் கிடைக்கவில்லை எனத்தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜெயக்கொடி, அவ்வாறு நடந்திருப்பதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு என்று கூறியுள்ளார். முன் நாள் போராளிகள் நூற்றுக்கணக்கானோர் அரசாங்க ஒப்பந்த காரர்களால் குறைந்த கூலியில் வேலைக்கு அமர்த்தப்பட்டு வருகின்றனர். இதில் சாரதிகளாகவும் பணி புரிகின்றனர் என விடுவிக்கப்பட்ட போராளிகள் கூறியுள்ளனர்.இந்த நிலையில் …

  20. போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் புலிகள் மீது வீசுவதாக நினைத்து, அப்பாவி மக்கள் மீதும் இலங்கை இராணுவத்தினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும், பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசினர். இவ்வாறு மக்கள் அனுபவித்த அவலங்களை பூநகரி வாசியான கமநல உத்தியோகத்தர் ந.சுந்தரமூர்த்தி நல்லிணக்க ஆணைக்குழுவிடம் விவரித்தார். அவர் வழங்கிய சாட்சியம்:போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் புலிகள் மீது வீசுவதாக நினைத்து, அப்பாவி மக்கள் மீதும் இலங்கை இராணுவத்தினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் (கிளஸ்ரர்), பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசினர். அதன் மூலம் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நாளொன்றுக்கு 400 முதல் 600 பேர் வரையில் பலியாகினர், 1,000 பேர் வரையில் காயமடையவும்…

  21. மன்னார் மடு வீதியில் சிங்களவர்களால் அத்துமீறிய குடியேற்றங்கள் இடம்பெற்றுவருகின்றன என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மடு வீதியில் உள்ள இராணுவ முகாம்களுக்கு இடையில் இந்தக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும் இதுவரை 30 இற்கும் மேற்பட்ட குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.மடு வீதியில் சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்குள் குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும் கம்புகளும் தகடுகளும் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்தக் குடிசைகளில் சிங்களவர்கள் பலர் குடும்பங்களுடன் குடியேறியுள்ளதாகவும், இது தவிர மேலும் பல குடிசைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மன்னார் – மதவாச்சி வீதியில் இருந்து மடு ஆலயத்திற்க…

    • 0 replies
    • 694 views
  22. செப் 17, 2010 / பகுதி: செய்தி / இராணுவ உறவைப் பலப்படுத்த சீனா-இலங்கை அரசு தீர்மானம்! இராணுவ உறவுகளைப் பலப்படுத்துவ தற்கு சீனாவும் இலங்கையும் நேற்று இணங்கியுள்ளன. இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்த பாய ராஜபக்­ தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் சீனாவின் மக்கள் விடுதலை இரா ணுவத்தின் (பி.எல்.ஏ) பிரதம பொது அதிகாரி களின் தளபதி சென் பிங்டேவுக்கும் இடையி லான சந்திப்பின்போது இது குறித்து கலந்துரையாடப்பட்டது. சீன-இலங்கை இராணுவ உறவுகள் அண்மைக்கால வருடங்களில் தொடர்ச்சியான ஐக் கியமும் அபிவிருத்தியும் காணப்பட்டதாக சென் பிங்டே கூறினார்.தாய்வான், திபெத் விவகாரங்களில் சீனா வுக்கு இலங்கை ஆதரவு தெரிவிப்பது குறித்து அவர் நன்றி தெரிவித்தார். இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கி டைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.