Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்நாட்டில் அடைக்கலம் தேடியிருந்த 13 ஈழத்தமிழர்கள் கடல்வழியாக தாயகம் திரும்பிய போது மணல்திட்டில் இறக்கி விடப்பட்ட நிலையில் சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 11ம் திகதி இந்திய கடல் எல்லைக்கு அண்மையில் ஏழாவது மணல்திட்டில் இருந்து 13 தமிழர்களையும் சிறிலங்கா கடற்படையினர் மீட்டு தலைமன்னாருக்கு அழைத்து வந்தனர். சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படகு அணியைச் சேர்ந்த படையினரே இவர்களை தமது படகுகளில் ஏற்றி வந்து தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட 13 பேரில் ஏழு ஆண்களும் மூன்று பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்கியிருந்தனர். இந்திய மீன்பிடிப் படகு ஒன்றின் மூலம் தாயகம் திரும்ப முற்பட்ட இவர்கள் ஏழாவது மணல்திட்டில் இறக்கி விடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆர…

  2. வடக்கில் இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள 50,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 10,000 வீடுகளை அமைக்கப்படவுள்ளன. இதற்கான பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான சிறப்புக் கூட்டம் இன்று கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இந்த 10,000 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இந்தப் பணிகள் இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான இன்றைய கூட்டம் வடமாகாண ஆளுனர் தலைமையில் நடைபெறும். இதில் ஐந்து மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். முதற்கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள 10,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தில் கணவனை இழந்த பெண்களுக்கு ம…

    • 2 replies
    • 638 views
  3. செப் 14, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / இரத்தினபுரி தோட்டமொன்றில் பதற்ற நிலை, தமிழ் மக்கள் இடம்பெயர்வு இரத்தினபுரி மாவட்டம் நிவத்திகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேல குக்குலகலை தோட்டத்திலுள்ள தமிழர்களின் குடியிருப்புக்கள் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன என்றும் அச்சம் காரணமாக தமிழ்க் குடும்பங்கள் இடம் பெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தேல குக்குலகலைத் தோட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த காவற்காரர் ஒருவர் கரவிட்ட திமியாவ என்னுமிடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீடுகள் தீக்கிரைக்கப்பட்டதாகவும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன என்றும் தெரியவருகின்றது. குக்…

  4. செய்தியறிக்கை, 13. செற்டெம்பர் 2010 அயர்லாந்திற்கான தேர்தல் நாடுகடந்த தமிழீழ அரசின் அயர்லாந்திற்கான உறுப்பினர் தேர்தல் வேட்புமனுத்தாக்கல் எதிர்வரும் 19 ஆம் திகதி செப்ரம்பர் வரை ஏற்றுக்கொள்ளப்படும். இத்தேர்தலை நடாத்துவதர்கான உதவிகளை பிரித்தானிய தேர்தல் ஆணைக்குழுவும், பிரித்தானிய தேர்தல் குழுவும், அயர்லாந்திலுள்ள தமிழ் அமைப்புக்களும், இணைந்து தேர்தல் வழிமுறைகளை ஒழுங்கு செய்யும். வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: TGTE Ireland Election Office Transnational Government of Tamil Eelam 283 Kings Road, Harrow, HA2 9LQ United Kingdom Tel: +44 7932 005 338 தேர்தல் ஆணையகம் -பிரித்தானியா

  5. ’சண் சீ’ கப்பலில் கனடாவிற்கு வந்த அகதிகளின் விபரங்கள் மாயம் - சிறிலங்காவிலுள்ள உறவுகளுக்கும் ஆபத்து திகதி: 14.09.2010, எம்.வி சண் சீ என்ற கப்பல் மூலம் கனடாவிற்குள் வந்துசேர்ந்த அகதிகள் தொடர்பான விபரங்கள் ரொரன்ரோவிலுள்ள தங்களது பணியகத்திலிருந்து களவாடப்பட்டுவிட்டதாகக் கூறுகிறது கனடாவிலுள்ள முதன்மையான தமிழ் அமைப்பு. இதனால் சிறிலங்காவிலுள்ள இவர்களது உறவுகளது பாதுகாப்புத் தொடர்பாகத் தாங்கள் அதிக கரிசனைகொள்வதாகவும் கனேடியத் தமிழர் பேரவை என்ற இந்த அமைப்பு கூறுகிறது. பெயர் விபரங்கள், பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் மற்றும் எம்.வி சண் சீ என்ற கப்பல் மூலம் கடந்த மாதம் பிரிட்டிஸ் கொலம்பியாவினை வந்தடைந்த 492 தமிழர் அகதிகளின் 'நூற்றுக்கணக்கான' தொலைபேசி இலக்…

  6. மின்னஞ்சல் மூலம் கிடைக்கப்பெற்ற விபரங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum3//uploads/monthly_09_2010/indran_kaditham.pdf http://www.yarl.com/forum3//uploads/monthly_09_2010/manaivi.pdf

  7. செப் 14, 2010 / பகுதி: செய்தி / நெடுஞ்சாலை திறந்து விடப்பட்ட பின்னர் 20 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் யாழ் - கண்டி நெடுஞ்சாலை போக்குவரத்துக்காகத் திறந்து விடப்பட்ட பின்னர் இதுவரை தென்பகுதியிலிருந்து சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகமான உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வடபகுதிக்கு சென்றுள்ளதாக சிறிலங்கா அரசதரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடபகுதியில் வேலை நாட்களில் நாளொன்றுக்கு சுமார் 1000 தொடக்கம் 1500 சுற்றுலாப் பயணிகள் வரை தங்கியிருக்கின்றனர். விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை இருபதாயிரம் வரை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. pathivu

  8. மஹிந்தரை மிரட்டும் நபர்! செவ்வாய், 14 செப்டம்பர் 2010 05:57 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவரை நேரில் வந்து சந்திக்க தவறினால் கீழே குதித்து உயிரை மாய்த்து விடுவார் என்று சபதம் எடுத்துக்கொண்டு கொழும்பு விகாரதேவிப் பூங்காவுக்கு அருகில் உள்ள விளம்பரப் பதாகை ஒன்றின் உச்சியில் ஏறி மிரட்டல் நடவடிக்கையில் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளார் ஒரு நபர். இந்நபர் தலையில் கவசம் அணிந்துள்ளார். ஜனாதிபதிக்கு ஆதரவான பதாதைகளை கைகளில் வைத்திருக்கின்றார். அவரது பிரச்சினைகளை ஜனாதிபதி தீர்த்து வைக்க வேண்டும் என்று கோருகின்றார். இவரது போராட்டம் அப்பகுதியால் வருவோர், போவோரின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. தகவல் அறிந்து பொலிஸாரும், தீயணைப்புப் படையினரும் அந்த இடத்துக்கு விரைந்து வந…

  9. செய்தி அறிக்கை 12 செற்டெம்பர் 2010 தமிழீழத்தின் விடுதலை நோக்கி, தொடரும் நீதிக்கான தார்மீக நடைப் பயணங்கள்...! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.....! இலங்கை அரசினால் கடந்த வருடம் ஈழத்தமிழ் மீது மக்கள் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு போரில், உடல், உள, வாழ்வியல் ரீதியில் இன்று வரை மீளமுடியாது அல்லற்படும் மக்களிற்கு, நீதி வழங்கும் நடவடிக்கைகளில் அசமந்தப் போக்கை கடைப்பிடித்து வரும் சர்வதேச மன்றங்களை தட்டியெழுப்பும் வகையில் நீதி தேடி தொடரும் நீண்ட மனிதப் பயணங்கள்...! தமிழீழ மக்களிற்கு, இலங்கை இனவாத அரசினாலும், அதன் இராணுவ, காவற்றுறை, புலனாய்வுத் துறை படைகளினாலும் ஏற்படுத்தப்பட்டன வழிப்புக்கு எதிரான சட்டங்களுக்கு முறனான குற்றங்களுக்கும் மானிடத்திற்கு எதிர…

  10. 14.09.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் இளம்புலி அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்று!!

  11. கைதடி வடக்கில் கிணற்றிலிருந்து குடும் பஸ்த்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த கந்தையா டபிளேஸ் வரன் (வயது 48) என்ற குடும்பஸ்தரே சடல மாக மீட்கப்பட்டவர் ஆவார். இவரைக் காணாத நிலையில் நேற்று மாலை தேடியபோது வீட்டுக்கு அருகிலிருந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சடலம் நேற்றிரவு யாழ். போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டது.http://www.tharavu.com/2010/09/blog-post_1142.html

    • 0 replies
    • 628 views
  12. சாவகச்சேரி, தச்சன்தோப்புப் பகுதியில் மரம் ஒன்றில் கயிற்றில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் காணப்பட்டது. இவரது சடலத்தை சாவகச்சேரி பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தைப் பொலிஸார் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர். இதே இடத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தனுஷா (வயது 19) என்னும் யுவதியே இறந்தவராவார். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் குறித்து தற்கொலையா அல்லது கொலையா என்பது பற்றி பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர். என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.http://www.tharavu.com/2010/09/blog-post_14.html

    • 0 replies
    • 515 views
  13. பிரணாப்முகர்ஜி விரைவில் சிறிலங்கா பயணம் திகதி:14.09.2010 இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் சிறிலங்காவுக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கிலேயே அவர் சிறிலங்கா செல்லவுள்ளதாக தெரியவருகிறது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் கொழும்பு சென்றிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவும் சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியிருந்தார். இந்தப் பேச்சுக்களில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையில் நிரந்தரமான தீர்வு ஒன்று குறித்து சிறிலங்கா அரசாங்கத…

  14. தனது பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக பான் கீ மூன் இலங்கையின் போர் குற்றங்களை மறைக்கின்றார்: இன்னர் சிட்டி பிரஸ் கண்டனம் இவ் விடயம் 14. 09. 2010, (செவ்வாய்),தமிழீழ நேரம் 20:40க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள்ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் மற்றும் அவரது பேச்சாளர் மார்ட்டின் சினர்கீ ஆகியோர் இலங்கை மற்றும் சூடான் போன்ற நாடுகளின் முக்கிய விடயங்கள் குறித்து நீண்ட மௌனம் சாதிப்பதை இன்னர் சிட்டி பிரஸ் கணடித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது இலங்கைஇ சூடான் மற்றம் கொங்கோ போன்ற நாடுகளின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து எந்த கருத்துக்களும் வெளியிடப்படவில்லை. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையி…

  15. http://www.yarl.com/files/100914_iorenz_visvanath_vavuniya.mp3 நன்றி: ATBC

  16. http://www.yarl.com/files/100914_jaffna_reporter.mp3 நன்றி: ATBC

  17. http://www.yarl.com/files/100914_colombo_reporter.mp3 நன்றி: ATBC

  18. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 14, 2010 கனடா சன்சீ கப்பல் அகதிகளில் முதன்முறையாக தமிழ் தாயார் ஒருவரும் அவரது 3 குழந்தைகளும் கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் வாரியத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட அப் பெண்மணி யார் என்பது குறித்து தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேற்படி கப்பலில் பயணம் செய்தவர்களில் பலர் தங்களை உறுதி செய்யும் வகையில், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு போன்ற ஆதாரங்களைத் தம்முடன் வைத்திருக்கின்றனர். எனினும் அவற்றின் நம்பகத்தன்மையை தம்மால் உறுதி செய்யமுடியவில்லையென கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அதிகாரி ரொன் யமாயுச்சி தெரிவிக்கின்றார். இக்கப்பல் கடந்த மாதம் 12 ஆம் திகதி கனடாவைச் சென்றடைந்தது. இக்கப்பல் பயணமானது விடுதலைபுல…

  19. செப் 14, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / ஐ.நா சபைக்கு வரும் மகிந்த ராஜபக்ச மீது போர்க்குற்ற விசாரணை நடத்து - கனடியத்தமிழர்கள் அறைகூவல் செப்டம்பர் மாதம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபைக் ஆண்டுக் கூட்டத் தொடரில் பங்கு பற்றுவதற்காக சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச அமெரிக்கா வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அவர் வருகை தருவாரானால் இலங்கைத்தீவில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக அவரை விசாரணை செய்ய வேண்டுமென்று கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுத்துள்ளது. “இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மனிதப் பேரவலத்தை சிறிலங்கா அரசு வன்னியில் நடத்தியது. பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் ஈவிரக்கமின்றிக் படுகொலைசெய்யப்பட்டனர். இவற்றை மூடி மறைத்து சுய…

  20. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 14, 2010 முஸ்லிம் பிரஜை ஒருவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் கைது செய்யப்பட்ட இவர் விடுதலைப்புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக பொலிசார் கூறினாலும் . இவர் முஸ்லிம் ஆயுத குழு ஒன்றினை சேர்ந்தவராக இருக்கலாம் என்று நம்பபப்டுகின்றது. இந்த நபர் தொட்டலங்க பகுதியில் வைத்து இந்த நபர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் குறிப்பிட்டனர். சந்தேகநபரை எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈழநாதம்

  21. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 14, 2010 ஈழநாதம் இரு மாவீரர்களின் சகோதரியும் சுனாமியால் தன் பெற்றோர்களை இழந்தவருமான 13 வயது சிறுமி சிகிரியாவில் மீட்கப்பட்டுள்ளார். இவர் கடத்தி சென்ற நிலையில் கைவிடப்பட்டாரா அல்லது யாராலும் விற்கபப்ட்டாரா என தெரியவில்லை. மட்டக்களப்பு கிரான் பகுதியைச் சேர்ந்த 13 வயது நிரம்பிய சுந்தரமூர்த்தி சோனுஜோ என்ற சிறுமியே இன்று காலை சீகிரிய நகர்பகுதியில் அநாதரவாக கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் இன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர். சோனுஜோ தன்னைப்பற்றி தகவல் தருகையில் தனது பெற்றோர்கள் சுனாமியில் உயிரிழந்ததாகவும் தமது சகோதரர்கள் இருவரும் யுத்தம் இடம்பெற்ற போது இயக்கத்திலி…

  22. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 14, 2010 தென்மராட்சிப்பகுதி நாவற்குழி தச்சன் தோப்புப் பகுதியில் மரம் ஒன்றில் கயிற்றில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் காணப்பட்டது. இவரது சடலத்தை சாவகச்சேரி பொலிஸார் மீட்டு சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர். இதே இடத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தனுஷா (வயது 19) என்னும் பெண்ணே இறந்தவராவார். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் நீதி மன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஈழ நாதம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.