ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143264 topics in this forum
-
இளம்யுவதிகள் 18 பேரை காதலித்து ஏமாற்றியமை மட்டுமன்றி அந்த இளம்யுவதிகளின் தங்க நகைகளையும் கொள்ளையடித்த 35 வயது ரோமியோவை மாத்தளை மாவட்டத்தின் இரத்தோட்டை பொலிஸ் நிலைய பொலிஸார் கைது செய்துள்ளார்கள். இவரால் பாதிக்கப்பட்ட இளம்யுவதிகளில் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்தே இக்கைது இடம்பெற்றுள்ளது. 18 இளம்யுவதிகளின் காதலனாக இருந்து வந்த இந்நபர் அந்த இளம்யுவதிகளில் நால்வரை திருமணம் செய்து கொண்டார் என்றும் மிகுதியான 14 பேரில் நால்வருடன் ஒன்றாக வாழ்ந்திருக்கின்றார் என்றும் பொலிஸாரின் புலனாய்வு விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இக்கைது நடவடிக்கையை தொடர்ந்து பல இளம்யுவதிகளின் முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன என்று இரத்தோட்டை பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவிக்கின…
-
- 1 reply
- 1.1k views
-
-
நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்று முடிந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க புறக்கணிக்கப்பட்டிருக்கின்றார். இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார். இவ்விழாவை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள், இந்நாள் தலைவர்களின் படத்தைத் தாங்கிய பிரமாண்டமான கட் அவுட் ஒன்று அலரி மாளிகை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க, முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் படத்தை மாத்திரமே காண முடிந்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் படத்தைக் காணவே இல்லை. இ…
-
- 0 replies
- 429 views
-
-
இன்று பல தமிழ் ஊடகங்கள், குறிப்பாக இணையத்தள ஊடகங்கள், ஊடக அறம் பிறழ்ந்த வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது தமிழர் சமூகத்துக்கு தீங்கு விளைவிப்பதாகவும் தமிழர் சமூகத்தின் அறிவாற்றலை கேலி செய்வதாகவும் அமைந்து வருகிறது. இதனால் ஊடக அறம் பிறளும் ஊடகங்களைக் கண்காணித்து, அவர்களை மக்கள் மன்றில் நிறுத்துவதுதான் இந்த தளம் ஆரம்பிக்கப்படுவதன் நோக்கமாகும். இம் முயற்சி ஒரு ஆரோக்கியமான ஊடகப்பண்பாட்டை உருவாக்க சிறிதளவாவது உதவும் என்பது எமது நம்பிக்கை. இத் தளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவுகள் மேற்கொள்ளப்படும். ஊடகங்கள் தொடர்பான விவாதங்களுக்கும் இத் தளம் இடமளிக்கும். சமூகத்தின் காவல்நாயான ஊடகங்களை காவல் காக்கும் நிலை ஏற்பட்டமை நமது சமூகத்தின் அவலமான ஆனால் ஆபத்தா…
-
- 3 replies
- 805 views
-
-
கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகளை வெளிமாவட்டத்தில் உள்ளோருக்கு வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எ.சி.கிருஸ்ணானந்தராஜா தெரிவித்துள்ளார். வந்தாறுமூலை மகா விஷ்ணு வித்தியாலயத்தில் நடைபெற்ற பட்டதாரிகள் முன்பள்ளி வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அங்கு உரையாற்றிய அவர், தற்போது கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் காணிகள் வெளிமாவட்டத்தாருக்கு குத்தகை அடிப்படையிலும் வேறு பல முறைகளிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதாவது 30வருட காலமாக யுத்தத்தில் சிக்கிக் கிடந்த கிழக்கு மாகாணம் தற்போது யுத்த நிலை நீங்கி அபிவிருத்தி க…
-
- 0 replies
- 528 views
-
-
கைதியொருவர் ஒருவர் நீதிமன்ற நிர்வாகக் கட்டமைப்பின் குறைபாடுகளினால் ஐந்து ஆண்டு சிறைதண்டனை அனுபவித்துள்ளார் நீதிமன்ற நிர்வாகக் கட்டமைப்பின் குறைபாடுகளினால் ஒருவர் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பது தொடர்பில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென உயர் நீதிமன்றம் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.நீதிமன்றத்தின் பிணை தொடர்பான நிபந்தனையை புர்த்தி செய்ய முடியாத காரணத்தினால் குறித்த நபர் 5 ஆண்டுக் காலம் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார். நிர்வாகத்தின் கவனயீனத்தினால் மேலும் இவ்வாறான கைதிகள் தண்டனை அனுபவித்து வரலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. http://meenakam.com/?p=6682
-
- 0 replies
- 404 views
-
-
மகிந்த அரசு நாடாளுமன்ற மரபுகளை மீறிச் செயற்படுகிறது – ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய சாதாரண அணுகுமுறைகளை அரசாங்கம் பின்பற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். 17 ஆவது திருத்தச் சட்டத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தங்கள் முன்வைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பதனை தடுப்பதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க திட்டமொன்றை சமர்ப்பித்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாளில் அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பான விவாதங்கள் நடத்தப்படுவதன் காரணமாக நாடாளுமன்ற அமர்வுக…
-
- 0 replies
- 391 views
-
-
ரணில் விக்கிரமசிங்க வர்ணிப்பதைப் போன்று அரசியல் அமைப்பு திருத்தங்கள் ஆபத்தானதல்ல – ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க விபரிப்பதனைப் போன்று அசரியல் அமைப்பு திருத்தங்கள் ஆபத்தானதல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியின் தவணைக் காலத்தை நீடிப்பதற்காக அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் மேலும் தொரிவித்தார். ஜனாதிபதியை மீளவும் நியமிக்கும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்கும் வழங்கும் வகையிலேயே அரசியலமைப்புத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். 17 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அரசியலமைப்புச் சபை நாடாளுமன்றிற்கு வெளியே காணப்பட்டதாகவும் புதிய அரசியலமைப்புத…
-
- 0 replies
- 445 views
-
-
முள்ளிக்குளம் பிரதேசத்தில் நிலையான கடற்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டதாகத் கோதபாய தெரிவித்துள்ளார். தேசியப் பாதுகாப்பை கருத்திற் கொண்டு நாட்டின் முக்கிய இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் என மன்னாரில் கடற்படை முகாம் அங்குரார்ப்பண விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் பயங்கரவாதத்தை இல்லதொழித்ததன் மூலம் நாடு அடைந்துள்ள சமதானத்தை நிலைநாட்டவும், தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்திற் கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் ஓர் கட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கடத்துவதற்காக பயன்படுத்திய முள்ளிக்குளம் பிரதேசத்தில் நிலையான கடற்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டதாகத் தெரிவித…
-
- 0 replies
- 494 views
-
-
அடுத்த வரவு செலவுத் திட்டத்தின் போது அபிவிருத்தித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் – சிறீலங்கா அரசாங்கம் 2011ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போது நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சரவைக்கான நிதி ஒதுக்கீடுகளின் போது திறைசேரியுடன் கலந்தாலோசித்து தீர்மானங்களை எடுக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் குறித்த உத்தேச வரைவுத் திட்டம் செப்டம்பர் மாத இறுதியில் முன்வைக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது…
-
- 0 replies
- 368 views
-
-
அமெ. இந்து ஆலயத்தில் பொன்சேகாவின் புதல்விகள் தேங்காய் அடித்து வழிபாடு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் புதல்விகள் உட்பட சிங்கள மக்கள் பலர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்ச ல்ஸ்லில் உள்ள இந்து ஆலயத்தில் வழிபாடு நடத்தினர். இவர்கள் சரத் பொன்சேகாவின் விடுதலை வேண்டியும் இலங்கையில் ஜனநாயகத்தை நிலைபெற வேண்டியும் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்ச ல்ஸ்லில் உள்ள இந்து ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர். இதில் கலிபோர்னியாவில் உள்ள சிங்களவர்களும் கலந்துக்கொண்டனர். http://meenakam.com/?p=6664
-
- 0 replies
- 484 views
-
-
எதிர்கட்சி தலைவர் இந்தியா பயணம் இந்தியாவிற்கான இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. நேற்று வியாழக்கிழமை மாலை சென்னை சென்றடைந்த அவர், தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்களையும் சந்தித்ததாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. எதிர்கட்சி தலைவர் இந்திய விஜயத்தினை மேற்கொண்ட ஒருமணிநேர இடைவெளியில், இலங்கை வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார செயலர் நிருபமா ராவ் தனது உத்தியோகபூர்வ பயணத்தினை முடித்துக்கொண்டு நாடு திரும்பியமையும் குறிப்பிடத்தக்கது. http://meenakam.com/?p=6660
-
- 0 replies
- 365 views
-
-
http://www.yarl.com/files/100831_Parameswaran.mp3 நன்றி: ATBC
-
- 19 replies
- 2k views
-
-
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெரியார் திராவிடக்கழக கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பல்லடத்தைச்சேர்ந்த சுப்பிரமணி என்பவர் புத்தகங்களையும், படங்களையும் விற்றார். அதில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படமும் இருந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் சட்டவிரோத தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஜாமீனில் வெளியே வந்த அவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், ‘’நான் பிரபாகரனின் படத்தை விற்றதால் தீவிரவாதி அல்ல. எந்த குற்ற எண்ணத்துடனும் நான் செயல்படவில்லை. என் மீது வழக்கு போடப்பட்டது தவறு. அதை ரத்து செய்ய வேண்டும்’’என்று கேட்டுக்கொண்டார். இந்த மனு நீதிபதி வி.தனபாலன் முன் விசாரணைக்கு வந்தத…
-
- 1 reply
- 778 views
-
-
சோதனைகளையும், வேதனைகளையும் சாதனைகளாக்கி கடந்த வருடம் இடம்பெற்று முடிந்த தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறப்பாக சித்தி அடைந்து இருப்பவர் அனுசீலன் குணாலிசா. கடந்த வருடம் அரசு- புலிகளுக்கு இடையில் இடம்பெற்ற யுத்தம் கிளிநொச்சி மாவட்டத்தின் புதுமுறிப்புக் கிராமத்தைச் சேர்ந்த குணாலிசாவின் குடும்பத்தையும் ஒட்டாண்டிகளாக இடம்பெயர வைத்தது. அப்பா அனுசீலன், அம்மா சுமித்ரா, அம்மம்மா சிவப்பிரகாசம் யோகலட்சுமி ஆகியோருடன் குணாலிசாவும் புகலிடம் தேடி ஓடினார்கள். எறிகணைத் தாக்குதலில் அப்பா அனுசீலன் இறந்து விட்டார்.அப்பம்மாவின் ஒரு கை போய் விட்டது. காலிலும் காயம். துன்பங்களை மாத்திரம் சுமந்து கொண்டு வவுனியா நலன்புரி முகாமைச் சென்று அடைந்தார்கள். அன்றாட, அடிப்படைத் தேவைகள…
-
- 1 reply
- 699 views
-
-
வியாழக்கிழமை, 2, செப்டம்பர் 2010 (22:52 IST) போர்க்குற்றத்தை மறைக்க முயற்சி: கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்த ராஜபக்சே திட்டம் இலங்கை இனவெறி அரசு புரிந்த போர்க்குற்றம் உலக நாடுகளுக்கு தெரிந்த பிறகு பல்வேறு நெருக்கடிகள் ராஜபக்சே அரசுக்கு வந்த வண்ணம் உள்ளன. ஐரோப்பிய நாடுகள் பல்வேறு சலுகைகளை ரத்து செய்துவிட்டன. ஐநா மன்றம் விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளது. கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கை அரசு இந்தியா,சீனா போன்ற நாடுகள் உதவியுடன் போர்க்குற்றத்தை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. முதல் முயற்சியாக இலங்கையில் இந்திய திரைப்பட விழாவை நடத்தியது ராஜபக்சே அரசு. இதை முக்கியமானவர்கள் புறக்கணித்ததால் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதைத்தொட…
-
- 3 replies
- 695 views
-
-
டுபாயில் இருந்து சில நாட்களுக்கு முன் நாடு திரும்பி இருந்த பெண்ணொருவரிடம் இன்டர்போல் அதிகாரிகளாக நடித்து தங்க நகைகள், பெருந்தொகைப் பணம் ஆகியவற்றை அபகரித்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட படைவிட்டோடிகள் ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பொரளை, கடுவல, தெமட்டகொட, கொச்சிகடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். கொஸ்வத்த பொலிஸ் பிரிவில் அப்பெண்ணின் வீடு உள்ளது. அவ்வீட்டுக்கு வெள்ளை நிற டிபெண்டர் ரக வாகனமொன்றில் வந்தே இவ்வாறு நடித்தனர்.வீட்டை சோதனையிட வேண்டும் என்றனர். டுபாயில் களவாடப்பட்ட நகையொன்று அப்பெண்ணிடம் இருக்கின்றது என அவர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதென கூறி இருக்கின்றனர். அதன்பின் அவ்வீட்டிலிருந்து 1,020,000 ரூபா பெறுமதியான நகை…
-
- 2 replies
- 635 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு நிருபமா ராவின் ‘எதிர்கால’ அறிவுரை! “இனிவரும் சந்ததியினரின் நலத்தை கருத்தில் கொண்டு எதிர்காலத்தைப் பாருங்கள்” என்று ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவின் அயலுறவுச் செயலர் நிருபமா (மேனன்) ராவ் ‘அறிவுரை’ கூறியுள்ளார். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்கும் பிறகு யாழ்ப்பாணத்திற்கும் சென்றுள்ள இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பிற்குப் பின் அங்கு கூடியிருந்த ‘மக்கள் பிரதிநிதி’களிடம் உரையாற்றிய போது இவ்வாறு கூறியுள்ளார் என்று கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது. எதிர்காலத்தைப் …
-
- 6 replies
- 1.5k views
-
-
சீனாவில் இருந்து உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை இலங்கைக்கு மேற்கொண்டிருக்கும் உயர்மட்டக் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அலரி மாளிகையில் இன்று சந்தித்து உரையாடினர். இவர்கள் Yunnan மாகாணத்தில் இருந்து வருகை தந்துள்ளார்கள். இவ்வுயர் மட்டக் குழுவுக்கு Yunnan மாகாண ஆளுநர் Qin Guangong தலைமை தாங்குகின்றார். இவர்களுடன் சீனத் தூதுவரும் ஜனாதிபதியை வந்து சந்தித்தார். இலங்கைத் தரப்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9560:2010-09-02-10-58-20&catid=126:2010-05-07-12-27-22&Itemid=676
-
- 2 replies
- 637 views
-
-
மட்டக்களப்பு வெலிக்கந்தை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் ஒவ்வொருவரிடமும் தலா 200 ரூபா தருமாறு இலங்கை இராணுவம் வசூலித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அத்தோடு தடுத்து வைக்கப்பட்டுள்ள தடை முகாமில் உள்ள போராளிகள் பல்வேறு கெடுபிடிகளுக்கும், அழுத்தங்களுக்கும் உள்ளாவதாக அவர்களது உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது இவ்வாறிருக்க கடந்த திங்கட்கிழமை படையினர் போராளிகளிடம் இருந்து ரூபா 200 ஐ வசூலித்துள்ளனர். உறவினர்கள் வந்து முன் நாள் போராளிகளைப் பார்வையிடும்போது கொடுத்துச் சென்ற பணத்தைப் பிடுங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர், பணம் தர மறுத்தவர்களையும் அச்சுறுத்தியுள்ளனர். பணம் கொடுத்த போராளிகளையே தாம் முதலில் விடுவிக்க இருப்பதாகவும், …
-
- 1 reply
- 702 views
-
-
யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் குறைந்தது 93 பெண்கள் ஏமாற்றப்பட்டு திருமணத்துக்கு முன்னர் கர்ப்பம் தரித்திருக்கின்றார்கள் என்று யாழ்.போதனா வைத்தியசாலையில் இயங்கி வரும் பால் நிலை வன்முறைகளுக்கு எதிரான நிலையம் அறிவித்துள்ளது. வீட்டு வன்முறைகள் காரணமாக 218 பெண்களும், உள, சமூக, பொருளாதார பாதிப்புக்கள் காரணமாக 58 பெண்களும், திருமண பந்தம் அடிப்படையிலான தொடர்பால் ஏற்பட்ட பாதிப்பால் 10 பெண்களும், பாலியல் துஸ்பிரயோகத்தால் 05 பெண்களும் ,சட்ட விரோத கருக்கலைப்பால் 04 பெண்களும், பாலியல் வல்லுறவால் 09 பெண்களும் கடந்த வருடம் குறைந்தது பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று இந்நிலையம் புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது. நல்லூர் 58 பெண்களும், யாழ்பாணத்தில் 57 பெண்களும், கோப்பாயில் 51 பெண்…
-
- 0 replies
- 794 views
-
-
வவுனியா - யாப்பாணம் ஏ9 வீதியில் யுத்தத் தளபாடங்கள் போன்றவை படையினரால் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அடுத்த படியாக இப்பொருட்களுக்கு இவ்வீதியில் மவுசு கூடி உள்ளது. தென்னிலங்கைப் பயணிகள் பேரார்வத்துடன் இவற்றைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். கிளிநொச்சியில் தகர்க்கப்பட்ட தண்ணீர்த்தாங்கி, ஆனையிறவு யுத்த டாங்கி, மற்றும் இராணுவ நினைவுத் தூபி போன்றவை இவற்றுள் சிலவாகும். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9546:9-&catid=125:2010-05-07-12-27-03&Itemid=675
-
- 1 reply
- 1.5k views
-
-
கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு 10,000 வீடுகளை அமைத்துக் கொடுக்க இந்தியா முன்வர வேண்டும் என்று கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று இந்திய வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவை சந்தித்த போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். திருகோணமலையில் உள்ள முதல்வரின் பணியகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, மீளக்குடியமர்த்தப்பட்ட வடபகுதி மக்களுக்கு இந்தியா சுமார் 50,000 வீடுகளை அமைத்துக் கொடுப்பது போல கிழக்கிலும் 10000 வீடுகளை அமைத்துத் தர முன்வர வேண்டும் என்று முதல்வர் சந்திரகாந்தன், இந்திய வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவிடம் கேட்டுக் கொண்டார். இதற்குப் பதிலளித்த நிருபமா ராவ், இந்தியா இதற்கு சாதகமான ப…
-
- 1 reply
- 442 views
-
-
கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகளை வெளிமாவட்டத்தில் உள்ளோருக்கு வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எ.சி.கிருஸ்ணானந்தராஜா தெரிவித்துள்ளார். வந்தாறுமூலை மகா விஸ்ணு வித்தியாலயத்தில் நடைபெற்ற வந்தாறுமூலை பட்டதாரிகள் முன்பள்ளி வருடாந்த பரிசளிப்ப விழா வில் பிரதம அதிதியாக கலந்த கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அங்கு உரையாற்றிய அவர், தற்போது கிழக்க மாகாணத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் மாகாணத்தின் காணிகள் கிழக்கு மாகாணம் அல்லாத வெளிமாவட்டத்தாருக்கு குத்தகை அடிப்படையிலும் வேறு பல முறைகளிலும் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது அதாவது 30வருட காலமாக யுத்தத்தில் சிக்கி கிடந்த கிழக்கு மாகாணம் தற்போது ய…
-
- 0 replies
- 586 views
-
-
இன்றைய யுத்தம் அற்ற சூழலில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் மற்றும் நாகதீப விகாரை ஆகிய வணக்க தலங்களைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில் இவ்வணக்கத் தலங்களை நோக்கிய கடற்பயணம் பேராபத்தானதாக மாறி இருக்கின்றது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் உயிரைப் பணயம் வைத்துத்தான் இத்தலங்களுக்கு சென்று வருகின்றார்கள். விடுமுறை காலமாகையால் இங்கு செல்ல வந்திருக்கும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது. நீண்ட கியூவில் காத்து நின்றுதான் படகுகளில் இடம் பிடிக்க வேண்டி உள்ளது. இப்பயணத்தை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அரசுத் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். http://www.tamilcnn.com/index.php?option=c…
-
- 1 reply
- 1.3k views
-
-
பொத்துவில் பிரதேச ஊறணிப் பகுதியிலிருந்து கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெயர்த மக்கள், மீண்டும் அப்பகுதியில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர் .பொத்துவில் பிரதேசத்திலுள்ள ஊறணி பகுதியில் கடந்த 25 வருடங்களுக்கு முன்னர், சிறிலங்கா இராணுவம் முகாம் அமைத்திருந்தனர்.இதையடுத்து அப்பகுதியில் குடியிருந்த குடும்பங்கள் வேறுபகுதிக்கு இடம்பெயர்ந்தனர் கடந்த 25 வருடங்களாக இக்குடும்பங்கள் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எ.ஸ் சந்திரகாந்தன் பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்தார்.இதையடுத்து அப் பகுதியிலிருந்து வெளியேறிய குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்படுகின்றனர். மீள்குட…
-
- 1 reply
- 1.2k views
-