ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143264 topics in this forum
-
அறிவுரை தீர்ப்பாயத்திற்கு முன் சீமான் தமிழின எழுச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடியும் வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மீது கருணாநிதியின் தலைமையிலான அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவிக் கைது செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சீமான் தன்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அந்த வழக்கு தற்பொழுது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தன்னை தேசியப்பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தது தவறு என்றும் தனது தரப்பு முறையீட்டினைத் தெரிவிக்க இன்று ஒரு மணியளவில் காவல் துறையினர் செந்தமிழன் சீமான் அவர்களை சென்னையில் சிங்காரவேலர் மாளிகையில் (மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) உள…
-
- 0 replies
- 408 views
-
-
கிளிநொச்சியில் மக்களின் அவல வாழ்க்கை அனைவரும் மௌனமென மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர் கிளிநொச்சியில் தற்போது பெய்து வரும் கடும் மழையினால் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்படாது பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டிருக்கும் சாந்தபுரம் கிராம மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த சாந்தபுரத்தைச் சேர்ந்த 281 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டன. இரண்டு மாதங்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தங்கவைக் கப் பட்டிருந்த இந்த மக்கள் சொந்தக் கிராமத்தில் மீள் குடியமர்த்தப்படுவதாகக் கூறப்பட்டு சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத் துக்கு அழைத்துவர…
-
- 1 reply
- 420 views
-
-
வன்னியில் போரின் போது சிங்களப்படையினரால் நொருக்கப்பட்ட பாடசாலைகள் இன்னமும் கட்டிக்கொடுக்கப்படவில்லை. என்றாலும் வன்னியில் உள்ள மக்கள் மரங்களின் கீழ் தம் பிள்ளைகளிற்கான கற்பித்தலை நடாத்திக்கொண்டிருக்கின்றன. இதனால்மக்களிடம் இருந்தும் வெளி நாட்டு அமைப்புக்களிடம் இருந்தும்; அரசாங்கம் பாடசாலைகளை கூட இன்னமும் திருத்திக்கொடுக்கவில்லை என குறை கூறி வருவது அனைவரும் அறிந்ததே. இதனால் அரசாங்கத்திற்கு ஏற்படும் அபகீர்த்தியினை தணிக்க முற்பட்ட மாதனமுத்தாவான வடபகுதி ஆழுநர் பாடசாலைகளையே நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளார். அதாவது பாடசாலைகளை அரசாங்கம் கட்டிக்கொடுக்கும்வரை கற்பித்தல்களை நிறுத்துமாறு மாதனமுத்தா பாணியில் கூறியுள்ளார் கேணல் சந்திரசிறி (வடபகுதி ஆழுனர்). http://www.eelanatha…
-
- 5 replies
- 952 views
-
-
அண்மையில் சவூதியில் இருந்து இலங்கை திரும்பிய ஓர் பணிப்பெண்ணின் உடலினுள் இருபத்து ஆணிகளை வைத்தியர்கள் கண்டுள்ளார்கள். காலத்திற்கு காலம் சவூதியில் உள்ள வேலை வழங்குனரின் சித்திரவதைகளுக்குள்ளாகிய குறிப்பிட்ட பெண்ணிற்கு தண்டனையாக அவரது உடலில் இருபத்து நான்கு ஆணிகள் செலுத்தப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளாகிய பெண் தற்போது இலங்கையில் உள்ளூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கீழுள்ள படத்தில் கையினுள் ஆணிகள் ஏற்றப்பட்டிருப்பதை காணலாம். The detail of an X-ray film held up by a doctor shows nails driven into the hand of a Sri Lankan housemaid தகவல் மூலம்: ஏ.எவ்.பி
-
- 3 replies
- 1k views
-
-
ஆக 25, 2010 / பகுதி: செய்தி / சிறீலங்கா வான்படைக்கு காண்காணிப்பு சாதனங்களை அமெரிக்கா வழங்கியது சிறீலங்கா வான்படையின் கண்காணிப்பு விமானங்களுக்கு தேவையான தொழில்நுட்ப சாதனங்களை அமெரிக்க அரசு வழங்கியுள்ளது. இரத்மலானை விமானப்படைத்தளத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சிறீலங்காவுக்கான அமெரிக்க பிரதி தூதுவர் வலாரே பௌலர் இந்த சாதனங்களை வழங்கியிருந்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சிறீலங்கா படைகளின் பிரதம தளபதி ஏயர் சீஃப் மார்ஷல் றொசான் குணதிலகா பேசும் போது தெரிவித்துள்ளதாவது: அமெரிக்காவின் உதவியுடன் சிறீலங்கா வான்படை தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆழ்கடல் நடவடிக்கைகளில் இது அனுகூலமானது. சிறீலங்கா வான்படை வசம் பீச் கிராஃப்…
-
- 1 reply
- 518 views
-
-
விடுதலைப் புலிகளை எதிர்க்க அரசுடன் இணைந்திருந்த ஆயுதக் குழுக்களுக்கு சிறீலங்கா இராணுவம் கடுமையான எச்சரிக்கை பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என சிறீலங்கா இராணுவத்தினர் ரீ.எம்.வீ.பி., டெலோ, புளொட் மற்றும் ஈ.பி.டி.பி ஆகிய தமிழ்த்தேச விரோத ஆயுதக் குழுக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ள முன்னாள் ஆயுதக் குழுக்களுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் ஆயுதம் பறிக்கப்பட்டுள்ள சம்பவத்தினை அடுத்து பிரதேச அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் விச…
-
- 2 replies
- 1.5k views
-
-
Re.: -What a good Coincidence! The panel is waiting and the witnesses are entering the box. npillay <npillay@ohchr.org>; sg@un.org Cc: amnestyis@amnesty.org; press@amnesty.org; pm@pm.gc.ca; robert blake <BlakeR2@state.gov>; number10@petitions.pm.gov.uk; privateoffice@no10.x.gsi.gov.uk; milibandd@parliament.uk; philip.alston@nyu.edu; neistaa@hrw.org; holmes@un.org; adamsb@hrw.org; alerts@takeaction.amnestyusa.org; aiusama@aiusa.org; info@ihjr.org; info@ictj.org; mlee@innercitypress.com; carterweb@emvery.edu; info@tutu.org.za; Connect@theelders.org; catherine.ashton@ec.europa.eu; erik.solheim@mfa.no; matthew.lee <Matthew.Lee@innercitypress.com> …
-
- 2 replies
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகளை மட்டும் குறை கூற முடியாது - ஜயந்த தனபால புதன்கிழமை, ஆகஸ்ட் 25, 2010 இலங்கையின் அழிவிற்கு விடுதலைப்புலிகளின் தலவரையும் விடுதலைப் புலிகளையும் மட்டும் காரணம் என கூற முடியாது. அவர்களை மட்டும் குறைகூறுவதில் நியாயம் இல்லை. மாறி மாறி வந்த அரசாங்கங்களே முக்கிய பங்கினை ஏற்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார் முன் நாள் சமாதான செயலாளர்ர் ஜயந்த தனபால அவர்கள். மஹிந்தவின் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் அளித்த ஜயந்த தனபால அவர்கள் மேலும் தெரிவிக்கையில்; இலங்கையில் அரசியல் தலைவர்கள் தம் இருப்பிற்காக அசெளகரியமான சம்பவங்களை தூண்டினர். வெளி நாடுகளிலும் தவறாக பிரச்சாரம் செய்தனர். உண்மையில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கை மட்டும் இலங்கையினை அழிக்கவில்லை என்றும் கூறினார். …
-
- 1 reply
- 1.2k views
-
-
வடமாகாண ஆளுநர் கேணல் சந்திரசிறி அவர்களின் மோசமான செயற்பாடுகளால் நேர்மையான தமிழ் அதிகாரிகள் கட்டாய ஓய்வில் செல்லும் நிலை தோன்றியுள்ளது. அண்மையில் குறித்த ஓர் பதவிக்காக ஆட்களை நியமனம் செய்யும் வேலைத்திட்டத்தில் கேணல் சந்திரசிறி அவர்கள் மதவாச்சியில் உள்ள சிங்களவர்களை வன்னியில் உள்ள பிரதேசங்களில் பதிவு செய்துவிட்டு அந்த சிங்களவர்களுக்கு வடமாகாண வெற்றிடங்களிற்குள் நியமிக்க முயற்சி செய்துள்ளார். பின்னர் அவர்களை மறுபடியும் இடமாற்றம் செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதற்கு கையொப்பம் இட குறித்த திணைக்கள தலைவர் (தமிழர்) மறுத்துள்ளார். இதனால் அந்த குறித்த அதிகாரியை உதாசீனம் செய்த சந்திரசிறி அவரை மிரட்டி கையொப்பம் இடுமாறு வலியுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற குறித்த தலைவர்…
-
- 1 reply
- 729 views
-
-
வன்னி போரில் சரணடைந்தோர்களை சுட்டுக்கொன்ற இராணுவ தளபதி ஐக்கிய நாடுகளின் தூதுவராக செல்கின்றார். போரின் இறுதிப்பகுதியில் வெள்ளைக்கொடியுடன் சரணடந்த போராளிகளான நடேசன் மற்றும் புலிதேவன் ஆகியோரை சுட்டுக்கொன்ற 58 வது டிவிசன் கட்டளை அதிகாரி மேஜர் கெனெரல் சவேந்திர சில்வாவே இவ்வாறு ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர துணைத்தூதராக நியமிக்கப்படவுள்ளார். ஐக்கிய நாடுகளின் தற்போதைய இலங்கைக்கான பிரதி தூதுவரை மீழ அழைக்கும் இலங்கை அரசு சவேந்திர சில்வாவை அனுப்புகின்றது. ஐக்கிய நாடுகளின் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களை முறியடிக்க இவரே சரியான ஆழ் என இலங்கை படைத்துறை விளக்கம் வேறு அளித்துள்ளது. தமிழர்கள் என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திக்க வேண்டும். இது மட்டுமல்ல கடற்படைத்த…
-
- 5 replies
- 958 views
-
-
ஆக 24, 2010 / பகுதி: செய்தி / நிருபர் கயல்விழி சிறிலங்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒப்பந்தம். சுமார் 7.41 பில்லியன் ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளது தாயகப் பிரதேசங்களான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த சூழ்நிலையில் பாதிப்படைந்த மருத்துவமனைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் சீனாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், சுமார் 7.41 பில்லியன் ரூபாய் நிதி ஸ்ரீலங்காவுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்தர ரூபரு மற்றும் சீன நிறுவன தலைவர் யங் லைஜிங் ஆகியோருக்கு இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக, அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு ம…
-
- 2 replies
- 398 views
-
-
பிரிட்டிஷ் கவுன்சில் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் கிளையொன்றை அமைக்கவுள்ளதாக சிறிலங்காவுக்கான பணிப்பாளர் கில் வெஸ்வே தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் கிளையொன்றை அமைப்பது தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கவுன்சிலின் கியை ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு விருப்பம் உள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தினோம். அதில் 83 வீதமான மக்கள் யாழ்ப்பாணத்தில் கிளை ஒன்று அமைவதை எதிர்பார்க்கின்றனர் என்பது தெரியவந்தது. கடந்த 30 ஆண்டுகளாக நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு தனித்த நிலையில் யாழ்ப்பாணம் இருந்துள்ளது. அது…
-
- 3 replies
- 738 views
-
-
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவிற்கு அருகில் நிந்தவூர் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்து கோவில் ஒன்று கடந்த 21ம் திகதி இரவு அடிப்படைவாதக் குழுவொன்றினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டிலும் இதேபோன்று இந்த கோவில் சேதப்படுத்தப்பட்ட நிலையில் அது மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருந்தது. தற்போது உடைக்கப்பட்டுள்ள கோவிலுக்கு அருகில் அறிவித்தல் ஒன்றை ஒட்டியுள்ள இந்த அடிப்படைவாதக் குழு, இந்தப் பிரதேசத்தில் முஸ்லிம், தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காகவே இந்த கோவில் உடைக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர் இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லையெனத் தெரியவருகிறது. இந்தச் சம்பவத்தை சிறி…
-
- 2 replies
- 596 views
-
-
ஆக 25, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / தாயகன் சவேந்திர சில்வா ஐ.நா துணைத் தூதுவராக நியமனம் - புலம்பெயர்ந்த மக்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறீலங்காவின் நிரந்தர துணைத் தூதுவராக, போர்க்குற்றம் புரிந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சு நேற்று மாலை அறிவித்துள்ளது. யாழ் மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதியும், தற்போதைய வட மாகாண ஆளுநருமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை, இந்தப் பதவிக்கு கொட்டாபய ராஜபக்ச பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்த போதிலும், சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன், மற்றும் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் போன்றவர்களை சவேந்திர …
-
- 1 reply
- 541 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்களே ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இழக்க காரணம் – சிறீலங்கா அரசாங்கம் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களே இலங்கைக்கான ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகை இல்லாமல் போனதற்கு காணைம்மென அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் கரு ஜெயசூரிய அண்மையில் குற்றம் சுமத்தியமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் தமது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர்ந்த தமிழர்களின் கருத்துக்களையே ஐக்கிய தேசியக்கட்சியும் கொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். http://meenakam.com/?p=5890
-
- 2 replies
- 782 views
-
-
பாக். வெள்ள பாதிப்பு : மருத்துவப் பணியில் இலங்கை வைத்திய குழு (பட இணைப்பு) 8/25/2010 3:27:20 PM வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கவென பாகிஸ்தான் சென்ற 16 பேர் அடங்கிய இலங்கை மருத்துவ குழு தனது பணிகளை ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சார்சட்டா மாவட்ட வைத்தியசாலையில் வைத்துப் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. சார்சட்டா மாநிலத்திலுள்ள 1.4 மில்லியன் மக்களில் 900,000 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மேற்படி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். சார்சட்டா மாவட்டத்தில் பெண்கள், சிறுவர்கள் அடங்கலாக 65 ஆயிரம் பேர் வெள்ளம் காரணமாக பலவித தொற்று நோய்களால் …
-
- 0 replies
- 808 views
-
-
நவீன தொழில் நுடப்பத்தில் இலங்கையின் காடுகள் தொடர்பான வரைபடம் 3 மாதத்தில் 50 ஆண்டுகளின் பின்னர் இலங்கையின் காடுகள் தொடர்பான மதிப்பீடு ஒன்று நடத்தப்பட உள்ளதாகத் சுற்றாடல் அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள காடுகளை பட்டியல் இட்டு அவை தொடர்பான வரைபடங்கள் கீறப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் காடுகளின் எல்லைப் பகுதிகள் காடுகளின் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் நவீன தொழில் நுட்பத்தில் மதிப்பீடு வகைப்படுத்தப்பட உள்ளதாக அவர்மேலும் தெரிவித்தார் இந்த வேலைத்திட்டத்திற்கான கால அளவு மூன்று மாதங்களுக்குள் அமையும்மெனவும் காடுகளை பலவந்தமான முறையில் கைப்பற்றியுள்ளவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவ…
-
- 2 replies
- 752 views
-
-
மகிந்தவின் கோரிக்கையால் அதிர்ச்சியடைந்த ரணில் சிறீலங்கா ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சி தலைவர் ரணி;ல் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடந்த திங்கட்கிழமையன்று மூன்றாவது முறையாகவும் சந்திப்பு இடம்பெற்றது. ஏற்கனவே நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டிருந்தது. எனினும் இதற்கு ஜனாதிபதி இதற்கு இணங்கவில்லையெனவும் திங்கட் கிழமை சந்திப்பின்போது ஏற்கனவே ஏற்றுக் கொண்டதை இப்போது மாற்றியுள்ளதாகவும் தாம் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக வருவதற்கு உதவவேண்டும் என ஜனாதிபதி ரணிலிடம் கோரியதாகவும் அப்போது ரணில் விக்கிரமசிங்க அதிர்ச்சிக்குள்ளானதாகவும் அவர் எ…
-
- 1 reply
- 1k views
-
-
வாக்குகளுக்காக நாட்டின் பொது நன்மைக்கு நான் தீங்கிழைக்க மாட்டேன் – சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து நடவடிக்கை மேற்கொள்வதில்லை எனவும் குரோத அரசியலிலிருந்து மீண்டும் மனிதாபிமானமாக செயற்படும் எவரையும் மக்கள் ஏற்றுக்கொள்வர் என சிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வந்த குரோத அரசியலுக்கு தாம் முற்றுப் புள்ளி வைத்துள்ளதாக குறிப்பிட்பிட்ட அவர் குரோத அரசியலில் ஈடுபடுவோருக்கு தாம் இடமளிக்கப் போவதில்லை என கண்டி மாநகரசபையின் உறுப்பினர்களை சந்தித்து உரையாடிய போது உறுப்பினர்களுக்கு சிறீலங்கா ஜனாதிபதி உறுதியளித்தார். வாக்குகளுக்காக தாம் ஒருபோதும் நாட்டுக்கு தீங்கிழைக்கத் தயாரில்லையெனவும் தலதா மாளிகைக்கு அருகில் இருக்கும் வீதியைத் த…
-
- 0 replies
- 394 views
-
-
2009 ம்ஆண்டு மட்டும் மதுபான விற்பனையின் மூலம் அரசாங்கத்திற்கு 2851 கோடி ரூபா வருமானம் 2009 ம் ஆண்டு 14 கோடி லீற்றர் மதுபானத்தை இலங்கை மக்கள் பயன்படுத்தியுள்ளதாக கலால்வரித் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டில் இலங்கையில் பதினான்கு கோடியே பத்தொன்பது லட்சத்து முப்பத்து ஆறாயிரத்து எண்ணூற்றி நாற்பத்தி இரண்டு லீற்றர் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதுபான விற்பனையின் மூலம் அரசாங்கத்திற்கு 2851 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009 ம் ஆண்டில் மொத்தமாக 970 புதிய மதுபான சாலைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே அதிகளவு மதுபானம் அருந்தியுள்ளதாகவும், இதில் அதிகமானோர் சாராயம்…
-
- 0 replies
- 397 views
-
-
இலங்கையில் பொதுமக்களும் ஜீ.பி.எஸ் கருவிகளை பயன்படுத்த முடியும் சாதாரண பொதுமக்களும் ஜீ.பி.எஸ் கருவிகளை பயன்படுத்த முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஒருவர் இருக்கும் இடத்தை அறிந்து கொள்வதற்காக ஜீ.பி.எஸ் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. நவீன ஜீ.எஸ்.பி கருவிகளை பொதுமக்கள் பயன்படுத்த சிறீலங்கா அரசாங்கம் முன்னர் தடை விதித்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த காலத்தில் முக்கிய நிலைகளை அறிந்து கொள்வதற்காக புலிகள்; ஜீ.எஸ்.பி கருவியைப் பயன்படுத்தி வந்ததாக சிறீலங்கா இராணுவ தொழில்நுட்ப பிரிவு தெரிவித்து வந்து. காவல் நிலையங்கள் மற்றும் வீதி அமைப்புக்கள் ஆகியவற்றை ஜீ.எஸ்.பி கருவியைப் பயன்படுத்தி அறிந்து கொள்ள முடியும் எனவும், சிறீலங்கா இராணுவ முகாம்களின் நிலை…
-
- 0 replies
- 560 views
-
-
ஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள். ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். ஓகஸ்ட் 25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது. முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன…
-
- 0 replies
- 466 views
-
-
போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தால் எங்களைப்போல மகிழ்ச்சி அடைபவர்கள் வேறுயாரும் இருக்க முடியாது: வைகோ கேபி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தால் எங்களைப்போல மகிழ்ச்சி அடைபவர்கள் வேறுயாரும் இருக்க முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். “இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறாததற்கு வைகோவும், நெடுமாறனும்தான் காரணம்” என்று விடுதலைப் புலிகளின் சர்வதேச செய்தித் தொடர்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் கூறியதாக இலங்கை பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருந்தது. இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: விடுதலைப் புலிகளுக்கு நான…
-
- 0 replies
- 353 views
-
-
கம்பீரமிக்க நாடுகடந்த தமிழீழ அரசை களங்கப்படுத்துபவர்க்கள் யார்? – கலாநிதி ராம் சிவலிங்கம் உலக அரங்கிலே மாண்புமிகு தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக மற்றய அரசுகளுடன் சரிசமமாக நின்று எமது உரிமைகளை வென்றெடுக்கவேண்டிய வேளை எம் மக்களின் தேவைகளை கவனிக்கவேண்டிய நேரம் நம்மில் சிலரின் அறியாமையாலும் சந்தற்பவதிகளின் சதிகாரகத்தாலும் தனித்துவமான ஓர் அரசியல் சக்தியான நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் தாமத்மாவது கண்டு வேதனையடைகிறேன் வெட்கப்படுகிறேன் வருந்துகிறேன். நாம் எடுக்கவேண்டிய பணிகளைத் தாமதிக்க வைக்க எம்மிடையே குழப்பத்தை ஏற்படுத்த கே.பீ இதைச் சொன்னார் என்று ஒருவர் கூற அதற்கு இன்னொருவர் விளக்கம் கூற அதைக்கண்டு சந்தற்பவாதிகளும் சதிகாரக்கும்பல்களும் வியாக்கியாணம் சொல்ல இதனால…
-
- 0 replies
- 344 views
-
-
கே.பின் அறிவிப்பொன்றின் மூலமே பிரபாகரன் மறைந்திருந்த இடத்தை கண்டுபிடிக்க முடிந்தாக இராணுவத்தின் உயர் மட்டத்தை மேற்கோள் காட்டுகிறது சிங்கள இணையம்? 24 August 10 11:23 am (BST) விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்திற்கு தனது எதிரணியினரான கஸ்ரோ குழுவினரே காரணம் என கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கூறிய போதிலும் கே.பின் அறிவிப்பொன்றின் மூலமே பிரபாகரன் மறைந்திருந்த இடத்தை கண்டுபிடிக்க முடிந்தாக இராணுவத்தின் உயர் மட்டத்தரப்பு தகவல்களை மேற்கோள் காட்டி சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரபாகரன் உயிரிழந்து விட்டதாகவும் இதனால் யுத்தம் முடிவடைந்து விட்டது என 2009 ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி இராணுவத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு அறி…
-
- 2 replies
- 1.3k views
-