ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143241 topics in this forum
-
போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நீதி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாகவும் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாக ஐ.நா.வுக்கான அந்நாட்டுத் தூதுவர் சூசன்ரைஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக நியூயோர்க்கில் ஐ.நா. வைத் தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் தெரிவித்திருப்பதாவது; சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது இனப்படுகொலைக்காக சூடானின் ஓமர் அல் பாசிரை உத்தியோகபூர்வமாகக் குற்றஞ்சாட்டிய சில நாட்களின் பின்னர் பாசிர் மீதான குற்றச சாட்டானது தனது பணியை கடினமானதாக மாற்றியுள்ளதாக சூடானுக்கான ஐ.நா. தூதுவர் ஸ்கொட் கிரேசியன் கூறியுள்ளார். மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுப்போருக்கு இந்த…
-
- 2 replies
- 1k views
-
-
சரியான நியாயம் கிடைக்காவிட்டால் நியாயம் கிடைக்கும் வரை போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் உந்துல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார். ருஹ_னு பல்கலைக்கழக மாணவர் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தரை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்த நேரிடலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாணவர் ஒருவரை படுகொலை செய்தது மட்டுமன்றி மற்றுமொரு மாணவரின் மீது கொலைப் பழியை சுமத்துவதற்கு காவல்துறையினர் முயற்சிப்பதானது காவற்துறையின் அநாகரீகத்தை காட்டுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 1 reply
- 636 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பின் பேரிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி இலங்கை வருகின்றார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளால் அல்ல என இலங்கை அரசு நேற்று அறிவித்தது. பாதுகாப்பு விவகாரத்த கொழும்பு, ஜூலை 28 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பின் பேரிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி இலங்கை வருகின்றார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளால் அல்ல என இலங்கை அரசு நேற்று அறிவித்தது. பாதுகாப்பு விவகாரத்துக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இத்தகவலைத் தெரிவித்தார். அவர் தொ…
-
- 4 replies
- 949 views
-
-
கிளிநொச்சி நகரிலிருந்து 02 மைல் தொலைவிலுள்ள பாரதிபுரம் கிராமத்தில் கடந்த வியாழன்று ஆண்டு- 05 ல் கல்வி கற்கும் பாடசாலை சிறுமியொருவர் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கபடுதலிற்கான முயற்சியொன்று பொதுமகனொருவரின் விழிப்புணர்வால் தடுக்கபட்டு சிறுமி காப்பாற்றபட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க பட்டார். சம்பவம் பற்றி தெரியவருவது யாதெனில் பாடசாலை விட்டு வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்த மாணவியை வழிமறித்த இளைஞயொருவர் தனது துவிச்சக்கர வண்டியில் வீட்டிற்க்கு கூட்டி சென்று விடுவதாக கூறிய போது அவ் இளைஞருடன் சிறுமி சென்றுள்ளார். ஆள்கள் அதிகம் இல்லாத ஒழுங்கையொன்றில் இடிந்த கட்டிடம் ஒன்றிற்க்குள் கூட்டி செல்லபட்ட சிறுமியை வன்புணர்வுக்கு முயற்சித்த சமயம் சிறுமி அவலக்குரல் எழுப்பியுள்ளது. கட்டிடத…
-
- 0 replies
- 1k views
-
-
தொடர்ந்த வழக்கு நாளை காலை 10 மணிக்கு முடிவுக்கு வருகின்றது. சென்ற ஆண்டு பரமேஸ்வரன் உடனடி போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்தார். அதே வருடம் சுமார் 6 மதாங்கள் கடந்த நிலையில் டெய்லி மெயில் என்னும் பிரித்தானியாவின் முன்னனி பத்திரிக்கைகளில் ஒன்றான டெய்லி மெயில் எனும் பத்திரிக்கை பரமேஸ்வரன் உணவருந்தியவாரே உண்ணாவிரதம் இருந்ததாக குற்றம் சுமத்தியது. அதனை தொடர்ந்து பிரித்தானியாவின் பல பத்திரிக்கை உட்பட உலகின் முன்னனி பத்திரிக்கைகள் அனைத்தும் அந்த செய்திக்கு முக்கியத்துவம் அளித்து முதன்மை செய்தியாக வெளியிட்டது. ஆனால் அனைத்து பத்திரிக்கைகளும் டெய்லி மெயிலை மேற்கோள் காட்டி வெளியிட்டபோதும் சண் பத்திரிக்கையும் டெய்லி மெயிலின் தலையங்கத்தை முளுவதுமாக மாற்றி அதே செய்த…
-
- 4 replies
- 1.1k views
-
-
கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே கேட்டுக்கொண்டதால் தான் இந்தியப் பிரதிநிதி இலங்கைக்கு வர உள்ளார் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ராம்புகவெல கூறியுள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதால் அவரை பிரதமர் இலங்கைக்கு அனுப்பவில்லை என்றார். இலங்கையில் தமிழர் பகுதிகளைப் பார்வையிட இந்தியப் பிரதிநிதி அனுப்பப்பட உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங்இ முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில்இ வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அங்கு அனுப்பப்படுவார். அவர் அங்குள்ள இந்திய தூதரக மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். மேலும்இ இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியப் பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து வர…
-
- 1 reply
- 549 views
-
-
தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களிடமிருந்து 17 கையடக்கத் தொலைபேசிகளை மன்னார் மருதமடு புனர்வாழ்வு மையத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது; மீட்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உதய மெதவல தெரிவித்துள்ளார். மிகவும் தந்திரமாக சந்தேக நபர்கள் கையடக்கத் தொலைபேசிகளையும், ஏனைய உபகரணங்களையும் மறைத்து வைத்திருந்ததாகத் அவர் தெரிவித்தார் தேவையான நேரத்தில் அழைப்புக்களை ஏற்படுத்தி பின்னர், கையடக்கத் தொலைபேசிகளை புலி சந்தேக நபர்கள் புதைத்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களுக்கும், புலிகளின் சர்வதேச வலையமைப்பிற்கும் தொடர்பு பேணப்பட்டுள்ளதா என்பது பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக …
-
- 0 replies
- 788 views
-
-
இலங்கைத் தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி அமையும் என்று தவத்திரு யோகர்சுவாமிகளிடம் சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு யோகர் சுவாமிகள் எந்தவித பதிலையும் தரவில்லை. மாறாக, குலுங்கிக் குலுங்கி அழுதாராம். அவரின் அழுகைக்கான காரணம் என்ன என்பதை இப்போது தமிழ் மக்கள் உணர்ந்துள்ளனர். எத்தனை துன்ப துயரங்கள். இதற்கு மேலாக எல்லாவற்றையும் இழந்து போன பரிதாபங்கள். இது தமிழரின் நிலையாக இருக்கும்போது தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் எங்கள் எதிர்காலமும் ஆரோக்கியமானதாக அமையா தென்பதை உறுதிப்படுத்துவதாகவுள்ளது.தமிழர்களுக்காக பாடுபட்டவர்களை துரோகி களாகக் காட்டி அவர்களை வெளியேற்றி விட்டு அந்த இடத்தை தாங்கள் கைப்பற்றி தமிழ் இனத்தை படுபாதாளத்தில் வீழ்த்துவதற்கு கெடு கூட்டமொன்று புறப்பட்டு…
-
- 0 replies
- 861 views
-
-
விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் 737 பேர் கடுமையான தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டு இவர்கள் ஏனையவர்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக பாரிய குற்றங்களை இழைத்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு ஆணையாளர் சுதந்த ரணசிங்கவை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட இந்தச் செய்தியில் மொத்தம் 7948 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 15,000 வரையிலான தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெ…
-
- 0 replies
- 641 views
-
-
கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் ஐலன்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் முதலாவது பகுதி இது – புவுN செய்தியை உறுதிப்படுத்துகிறார் கேபீ‐தமிழில் புவுN ‐ 29 துரடல 10 01:49 யஅ (டீளுவு) மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் புலம்பெயர் சமூகம் இணைந்து செயற்படும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சமூகங்களுக்கிடையேயான வேறுபாட்டை இல்லாதொழிப்பதில் மிக நேர்மையாகச் செயற்படுகிறார். அத்தோடு போரால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை மீளக் கட்டியெழுப்புவதிலும் ஈடுபடுகிறார். போர் முடிவடைந்து ஒரு வருடத்திற்குள்ளாகவே பெரும்பான்மையான இடம்பெயர்ந்த மக்கள் அவர்களுடைய கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அத்தோடு முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத் தமிழர்களால் தமிழ்நாட்டு மண்ணில் தயாரிக்கப்பட்ட விடியல் மற்றும் கனேடிய மண்ணில் தயாரிக்கப்பட்ட நிலா ஆகிய திரைப்படங்கள் டிசெம்பர் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் திரையிடப்படவிருகின்றன. அனைத்து கனேடியத் தமிழ் மக்களும் இந்த திரைப்படங்களை பார்த்து ஈழக் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டு மென கனேடியத் தமிழ் திரைப்படக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. விடியல் திரைப்படம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மண்ணில் கனேடிய ஈழத்துக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தில் மனோ, சுதா, கவிதா மற் றும் இயக்குநர் தரன் மற்றும் தமிழ்நாட்டுக் கலைஞர்களும் நடித்துள்ளனர். திரைப்படத்தின் பாடல்களை தமிழ்நாட்டு பாடலாசிரியர் காதல்மதி, இயக்குநர் தரன் ஆகியோர் எழுதியுள்ளனர். நிலா திரைப்படம் …
-
- 3 replies
- 1.4k views
-
-
Jul 28, 2010 / பகுதி: செய்தி / யாதவன் தர்ஷிகாவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது யாழ்ப்பாணம், வேலணை குடும்பநல உத்தியோகத்தர் தர்ஷிகாவின் சடலம் இன்று முற்பகல் கைதடியில் உள்ள மயானத்தில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது மகள் தர்ஷிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து தாயார் நீதிமன்றில் சமர்ப்பித்த மனுவின் அடிப்படையிலேயே சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலம், கொழும்பு சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தர்ஷிகா, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என அவரது தாயார் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்த மனுவ…
-
- 1 reply
- 527 views
-
-
கருணாஸ் பலிக்கடாவா.. பகடைக்காயா..? - நடிகர் சங்கத்தில் நடந்தது என்ன..? தமிழில் பாப்பிசைப்பாடகராகவும் இசைக்குழு இயக்குனராகவும் இருந்த கருணாஸ், ' நந்தா 'திரைப்படத்தின் மூலம் இயக்குனர் பாலாவினால் ஒரு நகைச்சுவை நடிகனாக தமிழ்சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர். அறிமுகமான காலந் தொட்டே மிக நிதானமான நடிப்புடனும், நேர்மையான நடவடிக்கைகளுடனும் காணப்பட்ட இவர், காமெடியன் என்ற நிலையில் இருந்து கதாநாயகனாகவும் திரைஉலகில் உயர்வு பெற்றார். இந்த வாரத்தில், தமிழக முதல்வர் கருணாநிதி, முன்னாள் விடுதலைப்புலிகள் தளபதியும், இன்னாள் அமைச்சருமான கருணா, ஆகியோரது பெயர்கள் போன்று, திரைஉலக கருணாஸின் பெயரும் அரசியற் தளத்தில் அடிபடும் பெயராக மாறியுள்ளது. அமைதியான இந்தக் காமெடியன் அரசியல் கதாந…
-
- 2 replies
- 8k views
-
-
மன்னிப்பு கேட்க என்ன தவறு செய்தேன்? தடை விதித்தால் விதிக்கட்டும்-ஆசின் ஆளாளுக்கு பத்திரிகை வாயிலாக ஒரு கருத்தை சொல்கிறார்கள். தமிழ் படத்தில் நடிக்க கூடாது என்று நடிகர் [^] சங்கம் தடை விதித்தால், தமிழ் படத்தில் நடிக்க மாட்டேன். நடிகர் சங்கத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக கடிதம் வரும்போது நேரில் வந்து விளக்கம் அளிப்பேன் என்று படு தில்லாக பேசியுள்ளார் நடிகை ஆசின். இலங்கைக்கு படப்பிடிப்புக்காக சென்ற ஆசின் தற்போது அதுதொடர்பான சர்ச்சையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக நடிகர் சங்கத்துத் தரப்பிலிருந்து சிலர் கருத்து தெரிவித்தபோது இலங்கை [^]யில் இருநதபடி பதிலடியாக பேசி வந்தார் ஆசின். தமிழர்கள் மீது தனக்குள்ள அக்கறை கூட தமிழ் சினிமாக்காரர்களுக்கு இல்லையே என்பதை மற…
-
- 9 replies
- 1.1k views
-
-
யுத்தம் நடைபெற்ற போது, பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டு, பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் நடவடிக்கைகள் கடந்த மூன்று மாதங்களாக தவிர்க்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது. இந்த சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர், தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டது. எனினும் இவர்கள் இதுவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவின் பெண் தலைவரான தமிழினி என்ற சுப்ரமணியம் சிவதாய் ஒரு முறை மாத்திரமே நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். தமிழினியுடன் அவரது தாய் மற்றும் சகோதரி ஒருவரும் இருந்தத…
-
- 0 replies
- 883 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீரவை படுகொலை செய்ய முயற்சித்த இரண்டு பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மங்கள சமரவீரவை படுகொலை செய்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தகவல்களை வழங்கிய இரண்டு பேருக்கு 11 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டில் கொழும்பு அல்லது மாத்தறை ஆகிய இடங்களில் மங்கள சமரவீரவை படுகொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீ.ஜீ.ரணவீர எனப்படும் மல்லி மற்றும் சம்பத் துசாரா ஆகியோருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. படுகொலைச் சம்பவம் குறித்த தகவல் தெரிந்திருந்தும் குறித்த நபர்கள் காவல்துறையினருக்கு இந்தத் தகவல்களை வெளியிடவில்லை என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.…
-
- 0 replies
- 602 views
-
-
இலங்கை முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஸ்வீடனுக்கு பயணம் இலங்கையைச் சேர்ந்த மூன்று முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகள் ஸ்வீடனுக்கு சென்றுள்ளார்கள். ஸ்வீடன் வெளிவிவகார அமைச்சர் கால் பேல்ட் மற்றும் நோர்வே சுற்றாடல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருடன் ஓய்வு பெற்ற இராணுவ உயரதிகாரிகள் சந்திப்புக்களை நடத்த உள்ளனர். ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுத் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட உள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன புhன் கீ மூனுPனு; ஆலோசனைக் குழுவின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆதரவு திரட்டும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://meenakam.com/?p=3571
-
- 2 replies
- 632 views
-
-
Jul 28, 2010 / பகுதி: செய்தி / யாதவன் போர்க்குற்றவாளி ஜெனரல் பிரசன்னாவை பிரித்தானியாவின் சிறிலங்கா தூதரகத்துக்கு அனுப்பும் அரசு இராணுவத்தின் முல்லைத்தீவு பிராந்தியத்திற்கான கட்டளை தளபதியாக பணியாற்றிவரும் மேஜர் ஜெனரல் பிரசன்னா டி சில்வாவை பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய அலுவலத்தின் பதவியொன்றில் அமர்த்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தீர்மானித்துள்ளதாக பாதுகாப்புச் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலம்பெயர் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களுக்கான அதிகாரிகளாக மூத்த இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து தகவல்களை வழங்குவதற்காகவே இந்த இராணுவ …
-
- 1 reply
- 483 views
-
-
புலிகள் தமிழ்மக்களுக்காக தான் போராடினார்கள் எனவே நான் இப்போதும் அவர்களை நேசிக்கிறேன். விடுதலைபுலிகளினால் வலுக்கட்டாயமாக இணைக்கபட்ட மாவீர்களான நான்கு பேருடைய சகோதரியின் செவ்வி. முழுமையான விவரணம் http://current.com/shows/vanguard/91379275_sri-lanka-notes-from-a-war-on-terror.htm
-
- 5 replies
- 1.7k views
-
-
சிறீலங்கா அரசிற்கும் த.தே.கூட்டமைப்பிற்கும் இடையில் அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் மாதிரி அரசியல் அமைப்பு தொடர்பில் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்களுக்கும் உரிமைகளை உறுதி செய்யக் கூடிய வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வருவது குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் விரிவான பேச்சுவார்த்கைதள் நடத்தப்பட உள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. தோடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் மூலம், முரண்பாடுகளை களைய முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அரசாங்கமும் தெரிவித்துள்ளது அரசியல் அமைப்பு திருத்தங்கள் தொடர்ப…
-
- 1 reply
- 818 views
-
-
http://www.yarl.com/articles/files/100727_ratha_ravi.mp3 நன்றி: ATBC
-
- 4 replies
- 1.8k views
-
-
http://www.yarl.com/articles/files/100727_rathan_vavuniya_v_chairman.mp3 நன்றி: ATBC
-
- 1 reply
- 602 views
-
-
தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்கிறது ஜே.வி.பி. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜே.பி.வி வேண்டுகோள்விடுத்துள்ளது விடுத்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகளுடன் வடக்கு மக்கள் தொடர்புகளை பேணுவதனை தடுப்பதற்கு இராணுவத்தை அரசு பயன்படுத்துகிறது என ஜே.வி.பி. ஊடக அறிக்கையூடாக குற்றம் சுமத்தியுள்ளது. ஜே.வி.பி உறுப்பினர்கள் அண்மையில் கிளிநொச்சிக்கு சென்ற போது, ஜே.வி.பி. யுடன் தொடர்புகளைப் பேணிய மக்களிடம் இராணுவத்தினர் அழைத்து விசாரனை நடத்தியுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையிலான குழுவினர் வடக்கிற்கு பயணம் செய்திருந்த போது, மக்களை சந்திக்க விடாது தடைகள் ஏற்படு…
-
- 1 reply
- 431 views
-
-
யோகி, பாலகுமாரன் எங்கே?.... நீடிக்கிறது மர்மம்! புதன், 28 ஜூலை 2010 10:54 . . அரச படையினரிடம் கடந்த வருடம் மே மாதம் சரண் அடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களான யோகரட்ணம் யோகி, கே.வி. பாலகுமாரன் ஆகியோர் எங்கே? என்கிற மர்மம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே செல்கின்றது. சரண் அடைந்தவர்களுக்கான புனர்வாழ்வு முகாமில் இந்த இருவரும் இல்லை என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்திருக்கின்றார். அவர் இப்படி தெரிவித்திருக்கும் செய்தியை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.defence.lk பிரசுரித்துள்ளது. பாலகுமாரன், யோகி ஆகியோர் கடந்த வருடம் மே மாதம் அரச படையி…
-
- 1 reply
- 2.4k views
-
-
யுத்தத்தில் பிள்ளைகளை இழந்த சோகம் ‐ மன உளைச்சல் ‐ இளம் தம்பதியர் தற்கொலை முயற்சி ‐ கணவன் உயிழப்பு மனைவி தீவிர சிகிச்சைப்பிரிவில் 28 July 10 01:04 pm (BST) கிளிநொச்சியில் அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட இளம் தம்பதி கடந்த ஞாயிற்றுக் கிழமை தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி யாழ்ப்பணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த இளம் தம்பதியரின் 4 பிள்ளைகள் புதுமத்தாளன் பகுதியில் இராணுவத்தினரின் எறிகணை தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் தமது 4 பிள்ளைகளை இழந்துள்ள…
-
- 0 replies
- 1.2k views
-