ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143199 topics in this forum
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமது இருப்பினை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது பிரிவினைவாதத்தை முன்வைக்கக் கூடாது என ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹெல உறுமய கட்சி இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின்போது கலந்து கொண்டிருந்த அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர் இதனைத் தெரிவித்தார். அங்கு தேரர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப் புலிகளின் கொள்கைகளை முன்வைத்து அவர்களின் நிழலாக செயற்பட எண்ணக் கூடாது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொடுத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்தை விடுத்து, பேச்சுவார்த்தைக்குத் தயாராக வேண்டும். அதனைத்…
-
- 4 replies
- 699 views
-
-
சென்னையில் சிகிச்சைக்குஅனுமதி கிடைக்காமல், இலங்கைக்குத் திரும்பிச் சென்ற பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள்... தற்போது வல்வெட்டித் துறை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 'அவர் இப்போது எப்படி இருக்கிறார்?' என்பதை அறிய, வல்வெட்டித்துறையில் உள்ள நண்பர்களுடன் பேசினோம். 'தமிழ்நாட்டில் படித்த ஒரு மருத்துவர்தான் அவருக்கு சிகிச்சை அளிக்கிறார்' என அவர்கள் சொல்ல... வேகமாக மேலே விசாரித்தோம். பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் பிறந்து வளர்ந்தவர் டாக்டர் மயிலேறும் பெருமாள். 1965-ம் ஆண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்தவர், 1972-ம் ஆண்டு வரை பயிற்சி மருத்துவராகத் தமிழகத்தில் பணியாற்றி, சொந்த நாட்டுக்குத் திரும்பியவர். தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட பல போராளி…
-
- 1 reply
- 2.2k views
-
-
சிறிலங்கா அரசினால் நடத்தப்பட்ட இராணுவ நடவடிகையில் 30,000 தமிழர்கள் கொல்லப்பட்டது உண்மை; ஆகவே சர்வதேச விசாரணையொன்று அவசியம் என ஐக்கிய நாடுகளின் நீதிக்கு புறம்பான குற்றங்களிற்கான சிறப்பு பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை சபையின் கோரிக்கையினை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையின் பொது சபை நிராகரித்திருந்தது. ஆனால் போர்குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவை உண்மை என பலரால் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆகையால் சர்வதேச விசாரணையொன்றிற்கு அனைத்து உறுப்புரிமை நாடுகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். என கூறியுள்ளார் பிலிப் அல்ஸ்டன். ஈழநாதம்
-
- 7 replies
- 864 views
-
-
லங்கைத் தமிழர்களின் அரசியல் போராட்டம் தமிழக முதல்வர் கருணாநிதியை நம்பி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இது எங்களுடைய போராட்டம். இந்தப் போராட்டத்தை நாங்களே நாடி, நாங்களே வெல்ல வேண்டும் என யாழ். பல்கலைக்கழக பேராசிரியரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கக் குழுவுக்குத் தலைமை வகிப்பவருமான கா.சிவத்தம்பி தெரிவித்தார். கலைஞர் கருணாநிதி ஈழப்பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதற்காக அங்கு போகக் கூடாது எனச் சொல்வது தவறு. இன்னொருவர் எமக்கு உதவி செய்யவில்லை என்பது இங்கு பிரச்சினையல்ல. இதனை நான் தமிழகத்திலும் சொல்வேன் என அவர் மேலும் கூறினார். பேராசிரியர் அவர்களே * வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றும் போது அதற்கு ஆதரவாக பேசியவர்கள் என்ன கூறி தனிநாட்டிற்கு ஆதரவு…
-
- 7 replies
- 1.5k views
-
-
தமிழர்கள் மறுவாழ்வுக்காக இந்திய - இலங்கை கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் சென்னை, ஜூன் 2: இலங்கையில் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளை செயல்படுத்த இந்திய - இலங்கை கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று "நாம்' அமைப்பு வலியுறுத்தியுள்ளது. சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற அந்த அமைப்பின் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்து "நாம்' அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பார் பேசியதாவது: இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளுக்கு தனித் தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும். எனினும் அதற்கு முன்பாக, போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கான பணிகள் நடைபெற வேண்டியது மிக அவசியமாகும். இதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு அமைப்பு உடனடியாகத் தேவைப்படுகிறது. எ…
-
- 6 replies
- 898 views
-
-
20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை நாள். திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பிற்கான கொடுமையை சிங்களம் அரங்கேற்றிய நாள் இன்று. (மே31 - யூன் 2.1981) நாம் மறந்துகொண்டிருக்கும் பல விடயங்களில் இதுவும் ஒன்றாகி விடுமோ என்ற ஐயம் தோன்றிவருகிறது. உலகில் குறிப்பிட்டுச் சொல்லுமளவிலான நூறாயிரம்(100000) நூல்களை எரித்தழித்த நாள். சிங்களத்தால் எரியூட்டப்பட்டஅறிவுச்சுரங்கமான யாழ் நூலகம்
-
- 16 replies
- 1.8k views
-
-
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் எதிர்வரும் ஏழாம் திகதி திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அரசாங்க வட்டாரங்களிலிருந்து நம்பகமாகத் தெரியவருகிறது. பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு இன்று வெள்ளிக்கிழமை கூட்டமைப்புக்கு அனுப்பப்படும் சாத்தியம் உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டார். இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருதாகவும் அவர் தெரிவித்தார். அரசாங்க தரப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் முக்கிய அமைச்சர்கள் சிலரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார்கள் என்றும் சிரேஷ்ட அமைச்சர் கூறினார். மேலும் தமிழ்த் தேசிய கூட்டமை…
-
- 1 reply
- 744 views
-
-
வன்னி அகதி முகாம்களில் மக்களை திண்டாடவிட்டு தலைநகரில் இந்திய நட்சத்திரங்களுடன் இலங்கை அரசாங்கத் தரப்பினர் கூத்தாடுகின்றனர். பொது மக்களை ஏமாற்றும் அரசாங்கத்தின் நடிப்பிற்கு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பிரச்சினைகளுக்கோ நாட்டின் தேசிய பிரச்சினைக்கோ தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு போதும் தீர்வை வழங்க முடியாது. எரிபொருள்களின் மீதான வரியை குறைக்காது இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரியைக் குறைப்பதால் சாதாரண பொது மக்களுக்கு என்ன பயன்? எனவும் அக்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் ““ஐஃபா'' நிகழ்வுகள் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை தெளிவுபடுத்துகையி…
-
- 2 replies
- 875 views
-
-
MIA தொடர்பான அபதூரு கட்டுரை ஒன்று The New York Times பத்திரிக்கையில் வெளியானது. http://www.nytimes.com/2010/05/30/magazine/30mia-t.html?pagewanted=all MIAயின் போராட்டத்துக்கு பிறகு The New York Times தனது பிழைய்யை ஒப்புக்கொண்டது http://www.spinnermusic.co.uk/2010/06/03/new-york-times-correction-m-i-a-article/
-
- 1 reply
- 1.5k views
-
-
நானும் நானும் என்றது போலவே தமிழினத்தின் சாபக்கேடமுள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின் கடந்த ஒரு வருடமாய் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது. தமிழீழ தேசம் என்ற நிழல் அரசு இழக்கப்பட்டதை பற்றிய கவலையை விட தமிழர்களின் அடுத்த தலைமை பற்றி கேள்விகளும், தலைமை ஏற்புக்களும் கடந்த மே மாதம் தொடக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது . ஒரு புறம் வட்டுக்கோட்டை தேர்தலும், மறுபுறம் சிறிலங்கா அரச தேர்தலும் பின் நாடுகடந்த அரசின் தேர்தலும், பின் பாராளுமன்ற தேர்தலும், அதன் பின் தமிழீழ தேசிய அவைக்கான தேர்தல், இன்னும் தமிழ் டையஸ்பராவின் தேர்தல் என்று புலத்திலும் நிலத்திலும் தமிழர்களின் காதுகளில் கேட்பது என்னவோ தேர்த்தல் பாட்டுத்தான். தமக்குள் ஒற்றுமையை வளர்க்க முடியாத இந்த தலைமைகளை நம்பி தம…
-
- 0 replies
- 802 views
-
-
நிகழ்வுகளின் தொகுப்பாகும் உலக இயங்கியலில் முரண்பாடுகள் எழுவதும், அவற்றைக் களைய நிகழும் போராட்டங்களுமே வரலாறாகிறது, எண்ண அலைகள் தடைகளற்று உற்பத்தியாவதும், அவற்றை நெறிமுறைப்படுத்தும் சமூகக் கட்டமைப்புகளும் மனித உளவியளாகி உலக நாகரீகத்தை அடுத்தடுத்த படிநிலைகளுக்கு நகர்த்திக் கொண்டே இருக்கிறது, பொருள், மனித சமூகத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தும் காரணியாக சிலரால் அறியப்படுகிறது, பொருளைத் தாண்டி அதனை நோக்கி மனிதனை உந்தும் இயல்புணர்ச்சிகள் இந்த மனித சமூகத்தை ஆளுமை செய்கிறது என்று சொல்பவர்களும் அதற்கான தங்கள் அழுத்தமான காரணங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள், மனித இயல்புணர்வுகளும், பொருளும் இன்பங்களையும், துன்பங்களையும் வழங்கும் இன்றியமையாத காரணிகள் என்பதை இருசாரரும் ஒப்புக் கொள்கிறா…
-
- 1 reply
- 776 views
-
-
கருத்து கணிப்பு The Big Question Is IIFA brand ambassador Amitabh Bachchan right in skipping the awards over Tamil protests? Vote - Yes http://headlinestoday.intoday.in/site/headlines_today/home (Pool is at the left side of the page)
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கை தொடர்பாக இந்தியாவின் கொள்கை என்ன? கடந்த இரு தசாப்த காலங்களாக சமஷ்டி முறைமையை உள்வாங்குமாறும் அதிகாரத்தை பரவலாக்குமாறும் இலங்கைக்கு நம்பிக்கையூட்டுவதற்கான முயற்சிகளை புதுடில்லி மேற்கொண்டு வந்தது. இப்போது புதுடில்லியின் நிகழ்ச்சிநிரல் என்ன?இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார் இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர் குல்திப் நய்யார். இந்தியாவின் த ரிபியூன் பத்திரிகையில் இலங்கை தொடர்பான தனது கொள்கை நிலைப்பாட்டை இந்தியா வெளிப்படுத்த வேண்டுமென்ற தலையங்கத்தில் குல்திப் நய்யார் எழுதிய கட்டுரையொன்று நேற்று புதன்கிழமை த ரிபியூனியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; இலங்கை தொடர்பாக இந்தியாவின் கொள்கை என்ன? என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். பெரும்…
-
- 2 replies
- 897 views
-
-
தஞ்சாவூர்: சிங்களர்களை பழிக்குப் பழி வாங்கி அந்த வெற்றித் தூணை தஞ்சையில் நிறுவும் காலம் வரும். ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய உதவிய இந்திய அரசுக்கு மன்னிப்பு கிடையாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் ஈகத் தூண்கள் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி தஞ்சையில் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் மக்களுக்கான நினைவுத் தூணுக்கு, உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலையில் வைகோ அடிக்கல் நாட்டினார். ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்த தியாகிகளுக்கான நினைவுத் தூணுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய க்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் நெடுமாறன் பேசுகையில், இது போன்ற நினைவுத் தூண்கள் அனைத்து மாவட்டங்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சனல் - 4 செய்தி சேவைக்கு சர்வதேச மன்னிப்புச்சபையின் விருது. சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான செய்திகளை வெளியிட்ட சனல் - 4 செய்திச்சேவைக்கு சர்வதேச மன்னிச்சபையின் சிறந்த தொலைக்காட்சி செய்திக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்வு நேற்று லண்டனில் நடைபெற்றது. சிறிலங்காவின் மனித உரிமை நிலைவரம் தொடர்பாக விரிவான - சிறந்த - செய்தியை தொகுத்தளித்த சனல் - 4 செய்திச்சேவைக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. சிறந்த செய்தி தொகுப்புக்கான விருதுக்கு மேலும் பல போட்டிகள் நிலவியது. தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தித்தொகுப்புக்களில் ஸ்கை செய்திச்சேவையின் ஒரு செய்தியும் சனல் - 4 செய்திச்சேவை தொகுத்தளித்த இன்னொர…
-
- 2 replies
- 943 views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பை அதன் தலைமைத்துவத்தோடு அழித்து, போரில் அந்த அமைப்பை தோற்டித்த போதிலும் வேறு விதமான முறையில் அந்த அமைப்புக்கு மீண்டும் உயிரூட்டும் இரகசியமானதும் தந்திரோபாயமானதுமான முயற்சியொன்றை ஆசியாவின் பலமிக்க நாடொன்றின் புலனாய்வு பிரிவின் உதவியோடு மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை அரச புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியல் ரீதியாக இந்தியாவுடன் முரண்பாடுகளை கொண்டுள்ள குறித்த நாட்டின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிலர் இரகசியமான முறையில் இலங்கை வந்து, விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய சிலரை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இலங்கையில் இருந்த விடுதலைப்புலிகளின் முன்னணி தலைவர்கள் அழிக்கப்பட்டாலும் சர்வதேச ரீதியாக செயற்பட்டு…
-
- 1 reply
- 2.3k views
-
-
தேசியத் தலைவர் அவர்களது ஆன்மா மீது நடாத்தப்படும் விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும்! Posted by: on ஜூன் 2, 2010 ஈழத் தமிழர்களுக்கான பலம் பொருந்திய சக்தியாக, ஈழத் தமிழர்களுக்கான பேரம் பேசும் வலுவாக இருந்த விடுதலைப் புலிகளைப் பிளவு படுத்துவதன் மூலம், அந்த மாபெரும் சக்தியை முள்ளிவாங்க்காலில் முடங்கச் செய்தது சிங்கள அரசு. இது, கொடூரங்கள், மனிதாபிமானமற்ற போர்க் குற்றங்கள் நிறைந்த செயற்பாடாக இருப்பினும், சிங்கள தேசத்தால் விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் கருணாவை உருவாக்கவும், பிளவுகள் மூலம் பலமிழக்கச் செய்யவும் முடிந்திருக்கிறது எனும்போது நாங்கள் சிங்கள தேசத்திடமிருந்து கற்றுக் கொள்வதற்கும், எம்மை மீளமைத்துக் கொள்வதற்கும் ஏராளமான விடயங்கள் உள்ளன என்பதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்…
-
- 13 replies
- 2.5k views
-
-
படங்குக் கூடாரங்களில் கிளிநொச்சி மக்கள் – மக்களை விட அதிக அளவில் சிங்களப் படையினர் நடமாட்டம்!!! By: அதியமான் கிளிநொச்சி நகரில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானோர் படங்குகளால் அமைக்கப்பட்ட கூடாரங்களிலும், தகரங்களால் நிறுவப்பட்ட கொட்டில்களிலும் தங்கியிருக்கும் அவலம் நிலவுகின்றது. வன்னிப் போரின் பொழுது கிளிநொச்சி நகரை ஆக்கிரமித்த சிங்களப் படையினர், மக்களின் வீடுகளை உடைத்து, வீட்டு நிலைகள், கதவுகள், சாளரங்கள், சுவர் கற்கள் போன்றவற்றைப் பயன்படுத்தித் தமது காவலரண்களையும், தடையரண்களையும் அமைத்திருப்பதோடு, பொதுக் கட்டிடங்களை தமது முகாம்களாக மாற்றியமைத்துள்ளனர். கிளிநொச்சி நகரில் பொதுமக்களை விட அதிக அளவில் சிங்களப் படையினர் நடமாடுவதோடு, கிளிநொச்சியி…
-
- 0 replies
- 797 views
-
-
யூன் 01, 2010 அன்புள்ளம் கொண்ட பத்திரிகையாளர்களே! உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள் கனடாவில் கடந்த சில நாட்களாக ரி.வி.ஐ – சி.எம்.ஆர் – சி.ரி.ஆர் நிர்வாகங்களுக்கு இடையே நடைபெற்ற பிணக்குகள் தான் அதன் பணியாளர்களான நாங்கள் சிலர் எழுதும் இந்தக் கடிதத்திற்கான காரணம். இந்த மூன்று நிறுவனங்களும் தாயக விடுதலைக்காக எமது உழைப்பில் உருவாக்கப்பட்டவை. இவை தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் ஊதியம் இல்லாமல் பல மாதங்கள் நாங்கள் வேலை செய்தே இந்த நிறுவனத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்தோம். இன்றும் கூட நாங்கள் ;செலவு செய்யும் நேரத்திற்கும் எமக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும் சம்பந்தமேயில்லாத அளவிற்கு நாங்கள் பல மணித்துளிகளை இலவசமாகவே வழங்கிக் கொண்டிருக்கி…
-
- 10 replies
- 1.3k views
-
-
http://www.ndtv.com/news/videos/video_player.php?id=143808
-
- 3 replies
- 1.5k views
-
-
இன்றைய சிறிலங்கா மோதல்கள் இடம்பெற்ற, வன்முறை நிரம்பிய தனது கடந்தகாலத்தினை மறப்பதற்கான ஆவலுடன்தான் உள்ளது. ஆனால் காணாமற்போன பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களது விதிதான் என்னவென இதுவரை தெரியவில்லை. அதேநேரம், பல்லாயிரக்கணக்கானவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தினது தடுப்பு முகாம்களில் தொடர்ந்தும் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு lakbimanews ஊடகத்தின் பத்தி எழுத்தாளர் Ranga Jayasuriya எழுதியுள்ளார். 'புதினப்பலகை'க்காக தமிழாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. Ranga Jayasuriya தொடர்ந்து எழுதியுள்ளதாவது: போர் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துவிட்டது. இந்த நிலையில் தங்களது அன்புக்குரியவர்கள் என்றோ ஒருநாள் இலங்கைத்தீவினது ஏதாவதொரு பகுதியிலுள்ள தடுப்பு முகாமில…
-
- 0 replies
- 874 views
-
-
please circulate this message
-
- 0 replies
- 643 views
-
-
இசையால் நோயினைக் குணப்படுத்தலாம்: ஈழத்தமிழ் ஆய்வாளர் [ புதன்கிழமை, 02 யூன் 2010, 07:05 GMT ] [புதினப்பலகைக்காக தமிழில் தி.வண்ணமதி ] உளவளம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உளம்சார் நோய்களுக்கு உட்பட்டவர்களைக் குணமாக்கும் அல்லது இந்த நோய் வராமல் தடுக்கும் ஒரு கருவியாக இசையினைப் பயன்படுத்தமுடியும் என யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆய்வாளர் கூறியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் செய்தியாளர் விபுல் சிவகுமாரன் எழுதியுள்ள செய்திக் கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. "உளவளம் பாதிக்கப்பட்டவர்களைக் குணமாக்குவதற்கு அல்லது இந்த நோய் வராமல் தடுப்பதற்கு இசை உதவும் என்பதற்கான அறிவியல்' ரீதியான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன" என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்…
-
- 0 replies
- 898 views
-
-
சிங்கப்பூரின் தந்தையான லீ குவான் யூ தனது உரையாடல் எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார், இலங்கை இனப்பிரச்சனைக்கு தனி நாடுதான் தீர்வு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் தமிழர்கள் அடங்கி ஓடமாட்டார்கள் என்றும் சிங்களவர்க்களுக்கு பயப்படமாட்டார்கள் என்றும் தன்னால் ராஜபக்ஸவை திருத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
-
- 12 replies
- 3k views
-
-
மண்ணையும் மனங்களையும் மறந்த மக்களின் ஊடகம் Tuesday, 01 June 2010 23:53 சர்வதேசத்தில் ஒலிக்கும் புலம் பெயர் தமிழரின் உரிமைக் குரலை முழுமையாக நசுக்குவதற்கு சிறிலங்கா அரசு எத்தனித்து வரும் ஒரு கால கட்டத்தில் தமிழ் ஊடகங்கள் தமது வீச்சான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டிய ஒரு தருணத்தில் கடந்த சில தினங்களாக கனடாவின் தமிழ் தேசிய ஊடகங்கள் தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கின்ற செய்திகள் தமிழ் ஆர்வலர்களை விசனமடைய வைத்துள்ளதுடன் சினங் கொள்ளவும் செய்துள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் (31-05-2010) CTR வானொலியில் அடிக்கடி மீள் ஒளிபரப்புச் செய்யப்பட்ட ஒரு அறிக்கை பலவித சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தமிழ் மக்களின் ஒரேயொரு தேசியத் தொலைக்காட்சியான TVI நிறுவனத்தை அது தற்போது இயங்கும…
-
- 2 replies
- 1.2k views
-