Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராணுவத்துடன் அல்லது புலானாய்வுத்துறையினரின் அனுசரணையுடனே வாகரை, கண்டலடியில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது : சாணக்கியன் ! விஷமிகளால் உடைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் அஞ்சலி செலுத்துவதை தடைசெய்ய முடியாது அரச இராணுவத்துடன் அல்லது புலானாய்வுத்துறையினரின் அனுசரணையுடனே மட்டகளப்பு வாகரை கண்டலடியில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். குறித்த இடத்திற்கு நேற்று (26.11.2023) விஜயம் மேற்கொண்ட போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “2023 கார்த்திகை மாதத்திலே இந்த வாரம் தமிழர்களு…

  2. ஐங்கரநேசனுக்கு சவால் விடுக்கும் சிவாஜிலிங்கம்! காலையில் உண்ணாவிரதத்தில் இருந்து மதியம் மீன் சந்தையில் நின்ற தலைவர் யார் என ஐங்கரநேசன் பகிரங்கமாக சொல்ல வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார். நேற்றைய தினம் (25) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ” தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினுடைய தலைவர் ஐங்கரன்நேசன் தமிழ் கட்சிகளின் ஒழுங்கு செய்யப்பட்ட மனித சங்கிலியைப் பற்றி அவர் நார் நாராக கிழித்து போட்டு இருக்கிறார். இவர் இவ்வாறு கூறுகின்ற விடயம் எல்லாம் தொடர்…

  3. கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி! adminNovember 27, 2023 யாழ்ப்பாணம் – கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். மாவீரர் நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை மாவீரர்கள் நினைவாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோப்பாய் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்தது அழிக்கப்பட்டு , தற்போது இராணுவத்தினரின் 51ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2023/197858/

  4. 27 NOV, 2023 | 11:19 AM 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காத்தான்குடியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார். காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் வவுனியாவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து புதிய காத்தான்குடி கர்பலா பகுதிகளில் வைத்தே ஐஸ்போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன…

  5. Published By: RAJEEBAN 27 NOV, 2023 | 11:11 AM மாவீரர் நாள் மரணமான உறவினர்களைத் தமிழர்கள் நினைவுகூரும் நாள் மட்டுமன்றி தமது எதிர்காலத்தைத் தாமே தீர்மானித்து அரசின் அடக்குமுறை இன்றி வாழும் அரசியல் சட்டகத்தைப் புரிந்து தமிழ்த் தேசத்தைப் பலப்படுத்துவதற்கான நாளாகவும் அமைகிறது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பான பேர்ள் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இன்று மாவீரர் நாளில், இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும், புலம்பெயர்ந்தும் வாழும் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் ஒன்றுசேர்ந்து, சிங்கள பௌத்த தேசியவாத அரச அடக்குமுறையில் இருந்து தமிழர்களை விடுவிக்கப் போராடியவர்களை நினைவுகூ…

  6. 27 NOV, 2023 | 10:54 AM யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் பிரதான மின் வடத்தில் (வயர்) தீ பற்றியமையால் சில மணி நேரம் அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. கோப்பாய் , இராச வீதி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதான மின் வடத்தில் தீ பற்றியதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் உடனடியாக மின்சார சபையினருக்கு அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த மின்சார சபை ஊழியர்கள் , மின்சாரத்தை துண்டித்து , மின் வடத்தில் பற்றிய தீயை அணைந்தனர். பின்னர் மீள அவற்றை சீர் செய்து அப்பகுதிக்கான மின்சாரத்தை வழங்கினர். குறித்த சம்பவத்தால் , அப்பகுதியில் சில மணிநேரம் மின் தடை ஏற்பட்டது. …

  7. மேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்கள், ஜனாதிபதி ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிஸ குடியரசு கொழும்பு. மேதகு ஜனாதிபதி அவர்களே! கிழக்கு ஆளுனர் நியமனம். கிழக்கு மாகாணம் சிக்கலான இனத்துவ கட்டமைப்பைக் கொண்ட மாகாணம் என்பதை தாங்கள் முழுமையாக அறிவீர்கள்.கிழக்கு மாகாணத்தில் நியமிக்கப்படவிருக்கும் ஆளுனர் தமிழராக இருந்தால் முஸ்லிம்கள் எதிர்ப்பதும்,முஸ்லிமாக இருந்தால் தமிழர்கள் எதிர்ப்பதும் ,சிங்களவராக இருந்தால் தமிழ்,முஸ்லிம் மக்கள் இணைந்து எதிர்ப்பதும் கிழக்கின் நிர்வாகத்தை சிறப்பாக கொண்டு நடாத்துவதில் பாரிய பின்னடைவுகளை இதுவரையிலும் ஏற்படுத்தியுள்ளது இதுவரையிலும் கிழக்கில் நியமிக்கப்பட்ட ஆளுனர்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த அதிகா…

  8. சில வர்த்தகர்கள் வெள்ளைச் சீனியுடன் சாயத்தை கலந்து சிவப்புச் சீனியாக மாற்றி அதிக விலையில் விற்பனை செய்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. சமகாலத்தில் சந்தையில் நிலவும் சீனித் தட்டுப்பாட்டை பயன்படுத்தி இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார். 217 ரூபாவிற்கு கொண்டு வரப்படும் வெள்ளை சீனிக்கு சாயம் பூசி 350 முதல் 370 ரூபாய் வரையான விலை விற்பனை செய்யப்படுகிறது. சீனியின் விலை இதன்மூலம் இந்த வியாபாரிகள் ஒரு கிலோ சீனிக்கு சுமார் 150 ரூபா இலாபம் ஈட்டுவதாக அவர் கூறியுள்ளார். வெளிச்சந்தையில் 260 ரூபாயில் இருந்த வெள்ளை சீனியின் விலை 310 ரூபாயாகவும், பொதி செய்யப்பட…

  9. 26 NOV, 2023 | 05:35 PM போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நிலத்தை தோண்டும் நடவடிக்கை கடந்த 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று (25) மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை பணிகள் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் இன்றைய தினம் (26) நான்காவது நாளாக அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன. இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் விசேட புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த விடயம் கடந்த 19ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு, குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்…

  10. 26 NOV, 2023 | 04:10 PM யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) நோயாளர் காவு வண்டியுடன், மேலும் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளாயின. நோயாளர் காவு வண்டிக்குப் பின்னால் வந்த முச்சக்கரவண்டி, நோயாளர் காவு வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி, நோயாளர் காவு வண்டிக்கும் எதிரே வந்த வாகனத்துக்கும் இடையில் சிக்கி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/170297

  11. Published By: VISHNU 26 NOV, 2023 | 12:40 PM யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பருத்தித்துறை, கந்தவுடையார் வீதியை சேர்ந்த ஜெயசந்திரன் டிலக்சன் (வயது 23) என்பவரே காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் வீதியில் சென்றுகொண்டிருந்த வேளை அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இருவர், இளைஞரை வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/17…

  12. ஐக்கிய நாடுகளின் காலநிலை தொடர்பான மாநாட்டுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரசாங்கத்தின் 80 உயர் அதிகாரிகள் அடுத்த வாரம் டுபாய் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவான் விஜேவர்தன உள்ளிட்ட 80 பிரதிநிதிகள் இந்த பயணத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் காலநிலை தொடர்பான மாநாடு அடுத்த வாரம் டுபாயில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/282432

  13. எதிர்வரும் 2024 செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கு இடைப்பட்ட ஒரு நாளில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க .தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான சரியான திகதி ஜூலையில் முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசியலமைப்பு மற்றும் சட்ட கட்டமைப்பிற்கு இணங்குவதை வலியுறுத்திய ரத்நாயக்க, தேர்தல் திகதியைத் தேர்ந்தெடுப்பதில் அரசியலமைப்பு மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டம் ஆகிய இரண்டிலும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றப்படும் என்று குறிப்பிட்டார். மேலும் விளக்கமளித்த தேர்தல் ஆணையத்தின் தலைவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக…

  14. பிச்சைக்கார‌ நாட்டின் காவ‌ல்துறை மாவீர‌ செல்வ‌ங்க‌ளை நினைவு கூற‌ கூட‌ விடுகின‌ம் இல்லை.............த‌ன‌து க‌ண‌வ‌ர் மாவீர‌ர்..........உங்க‌ளை மாதிரி எங்க‌ட‌ மாவீர‌ர்க‌ள் காசுக்காக‌ போராட‌ வில்லை எங்க‌ட‌ நாட்டுக்காக‌ தான் போராடின‌வை என்று ம‌ன‌ வேத‌னையுட‌ன் துணிவோடு சொல்லுகிறா............ அஞ்சுவ‌தும் அடி ப‌ணிவ‌தும் என் த‌மிழ் இனத்துக்கே கிடையாது என்று சொன்ன‌ த‌லைவ‌ரின் இந்த‌ சிந்த‌னைய‌ தமிழ‌ர்க‌ள் எப்ப‌வும் நினைவில் வைத்து இருக்க‌னும்.............

    • 14 replies
    • 1.4k views
  15. 2024 ஆம் ஆண்டில் பில்லியன்கணக்கான பணத்தை நாட்டு மக்கள் வரியாக செலுத்த வேண்டும் என துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2023ஆம் ஆண்டை விட 88100 கோடி ரூபாய் (881 பில்லியன்) மறைமுக வரியாகவும், 34,200 கோடி ரூபாய் (342 பில்லியன்) நேரடி வரியாகவும் செலுத்த வேண்டும் என தெரியவந்துள்ளது. வடமேற்கு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் அமிந்த மெட்சிலா பெரேரா இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். அரச வருமானம் “2024 வரவு செலவுத் திட்டத்தின்படி அரசாங்கம் 122,400 கோடி ரூபா (1224 பில்லியன்) கூடுதல் வருவாயை எதிர்பார்க்கிறது. அதில் 72 சதவீதம் மறைமுக வரிகளாகவும் 28 சதவீதம் நேரடி வரிகளாகவும் இருக்கும். 2023ஆம் ஆண்டு அரசாங்கம் …

  16. Published By: DIGITAL DESK 3 24 NOV, 2023 | 09:57 AM சந்தேக நபரை துரத்திச் சென்ற போது காணமல்போன பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை (23) குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மேலும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் ஜா-எல பகுதியில் நீரோடை மூலம் தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை துரத்திச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்த திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி தற்போது ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்தவர் ஆவார். https://www.virakesari.lk/article/170107 பணியின் போது உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு சந்தேக நபரை கைது செய்யும் மு…

  17. 25 NOV, 2023 | 03:11 PM யாழ்ப்பாண பல்கலைக்கழக தாவரவியல் துறைத் தலைவர் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். விஞ்ஞான பீடத்தின் தாவரவியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஈ.சி. ஜெயசீலன், கணிதவியலும் புள்ளிவிபரவியலும் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.கண்ணன், கலைப்பீடத்தின் கல்வியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி (திருமதி) ஜே.இராசநாயகம் ஆகியோரை பேராசிரியர்களாக பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை இன்றைய சனிக்கிழமை (25) ஒப்புதல் வழங்கியது. பல்கலைக்கழக பேரவையின் மாதாந்த கூட்டம் இன்று காலை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற…

  18. 25 NOV, 2023 | 12:18 PM வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளை ஞாயிற்றுக்கிழமை (26) முதல் எதிர்வரும் 03ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மிகவும் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாளை ஞாயிற்றுக்கிழமை வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. அது எதிர்வரும் 29ஆம் திகதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. தற்போதைய மாதிரிகளின் கணிப்பின் படி இந்த ஆழ்ந்த காற்றழுத்த…

  19. உடன் அமுலுக்கு வரும் வகையில் ’ DOOR TO DOOR ’ நிறுத்தப்படுகின்றது வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் DOOR TO DOOR முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிநாட்டினர் இம்முறையின் மூலம் இலங்கைக்கு பல்வேறு பொருட்களை அனுப்புவதுடன், குறித்த பொருட்கள் தனியார் போக்குவரத்து முகவர் நிலையங்கள் மூலம் நேரடியாக குறித்த நபர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. எவ்வாறாயினும், பொதுமக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகள் மற்றும் அதன் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு, இந்த விநியோக முறையை தற்காலிகமாக இடைநிறுத…

  20. மருத்துவப் பிரிவு கட்டிடம் திறக்கப்படவுள்ளது adminNovember 24, 2023 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவ பிரிவு கட்டிடம் உத்தியோகபூர்வமாக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. புதிய கட்டடத்திற்கான “சாந்தி பூஜை” நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றதுடன் இன்று வெள்ளிக்கிழமை சமய சம்பிரதாயபூர்வமாக கட்டிடத்தில் பால் காய்ச்சப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா, பல்கலைக்கழக பீடாதிபதிகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், மருத்துவ பீடத்தின் கல்விப் பணியாளர்கள், ஆலோசகர்கள் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர். …

  21. சேமிப்பு கூடம் அமைப்பு adminNovember 24, 2023 , மாவீரர் தினத்தில் தமிழ் மக்களின் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும் வகையில் நினைவேந்தலுக்கு தேவையான பொருட்களை சேகரிப்பதற்கான கூடம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. நினைவேந்தலுக்கு தேவையான கற்பூரம், எண்ணெய், சுட்டி, திரி என்பவற்றை நவம்பர் 27 ஆம் திகதி வரை தினமும் திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சேகரிப்பு கூடத்தில் வழங்க முடியும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. https://globaltamilnews.net/2023/197757/

    • 1 reply
    • 606 views
  22. அதிக மழைவீழ்ச்சி மற்றும் அதிகரித்த நீர்மின் உற்பத்தி காரணமாக மின் கட்டணத்தில் திருத்தங்கள் ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களின் பிரதேசங்களில் மிக அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, 96% நீர்த்தேக்கங்கள் கொள்ளளவிற்கு நிரம்பியுள்ளன என்றார். அதன்படி, சுமார் 1,200 ஜிகாவொட் மணித்தியாலம் நீர் மின்சாரம் மூலம் சேமிக்கப்பட்டுள்ளது. தற்போது 65% நீர்மின்சாரம் மூலமும் 17% அனல் மின்சாரம் மூலமும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், புதுப்பிக்கத்தக்க சக்தி 75% ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் மின்சார விநியோகத்தில்…

  23. 24 NOV, 2023 | 04:38 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டம், யாழ். பூநகரி மின்னுற்பத்தி திட்டம், சம்பூர் அனல் மின்நிலையத் திட்டம், மட்டக்களப்பு ஓட்டமாவடி திட்டம் உள்ளிட்ட மின்னுற்பத்தியுடன் தொடர்புடைய 06 திட்டங்கள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும். ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதிகளில் மாத்திரம் மின்சார சபை 12 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது. இலாபமடைந்தால் அதன் பயனை மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மின…

  24. ஒட்டு மொத்த இலங்கையர்களும் நாட்டிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், கல்வி கூடியவர்கள் மற்றும் இளைஞர்கள் நாட்டிலிருந்து வெளியேற விரும்புகிறார்கள். நாட்டிலிருந்து வெளியேற விரும்புபவர்கள் கூடுதலாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கை எடுத்தவர்கள் என்று பார்த்தால் அது மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள் என ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது. இவ்வளவு நாட்…

    • 2 replies
    • 681 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.