ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143183 topics in this forum
-
75 தமிழர்களை பிடித்து வைத்துள்ள மலேசிய அரசுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம் Urge Malaysian Prime Minister Directly by E-Feedback Application Hi Everyone For a direct response to the Malaysian Prime Minister, including comments, greetings, suggestions and questions, you are encouraged to use the E-Feedback application. First Register you Name before go to Feedback Form New User Registration http://www3.pmo.gov.my/emaklum/PMFeedback.nsf/registerv3?openform'>http://www3.pmo.gov.my/emaklum/PMFeedback.nsf/registerv3?openform Please log in to to access the E-Feedback application http://www3.pmo.gov.my/emaklum/PMFeedback.nsf ==========…
-
- 0 replies
- 3.8k views
-
-
மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் நினைவுத் தூபிகளும் இடித்து அகற்றப்படும் -கோட்டபாய வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் நினைவுத் தூபிகளும் இடித்து அகற்றப்படும் என்று பாதூப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதேவேளை வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளின் போது உயிரிழந்த படையினருக்கான நினைவு தூபிகள் அனைத்து பகுதிகளிலும் நிர்மாணிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட படையினரின் நினைவு தூபியை திரை நீக்கம் செய்து வைத்து உரையாற்றும் போhதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்களை அழிப்பதற்கும் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்த…
-
- 7 replies
- 732 views
-
-
ஸ்ரீலஙகா அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இந்தியாவும் அதி கவலை புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் ஸ்ரீலங் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இந்தியாவும் அதி கவலை அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. முனைப்பு பெற்று வரும் புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்களை வளரவிடாமல் தடுப்பதற்கும் தமிழ் மக்களின் மன உறுதியினை தகர்ப்பதற்கும் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் இந்திய அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து வருபவருமாதன வரதராஜப் பெருமாள் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் போராட்டங்கள் குறித்து அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டியதில்லை என்று கருத்து வெளியிட்ட…
-
- 0 replies
- 608 views
-
-
பிரித்தானியத் தேர்தல் - தமிழர்களுக்கு ஆதரவான வேட்பாளர்களின் முடிவுகள் பிரித்தானியத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், தமிழ் மக்களிற்கும், அவர்களின் விடுதலைக்கும் ஆதரவானவர்களின் முடிவுகள் தொடர்பாக பிரித்தானியத் தமிழ் மக்கள் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். சிபோன் மக்டொனா - மிச்சம் மற்றும் மோர்டன் பகுதியில் போட்டியிட்ட தொழிற்கட்சியின் சிபோன் மக்டொனா வெற்றி பெற்றுள்ளார். ஜோன் றயன் - என்பீல்ட் வடக்குப் பகுதியில் போட்டியிட்ட தொழிற்கட்சியின் ஜோன் றயன் 1,692 வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். இவர் தமிழ் மக்களிற்காக ஆணித்தரமாகக் குரல்கொடுத்து வந்தவர். இத்தொகுதியை கொன்டவேடிவ் கைப்பற்றியுள்ளது. றேச்சல் ஜோய்ஸ் - ஹறோ மேற்குப் பகுதியில் போட்டி…
-
- 1 reply
- 784 views
-
-
வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாம்களில் என்ன நடைபெறுகின்றது? – இன்னசிற்றி பிரஸ் மே 7, 2010 மணி தமிழீழம் வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாம்களுக்கு செஞ்சிலுவைச்சங்க பிரதிநிதிகளை அனுமதிக்க சிறீலங்கா அரசு மறுத்து வருவம் நிலையில் அங்கு ஒன்பது மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்கள் குழந்தைகளை பிரசவித்து வருவதாக ஐ.நாவின் ஊடக அமைப்பான இன்னசிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. அது மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கப்போவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்து இரு மாதங்கள் கடந்துள்ளன. ஆனால் அதற்கான சாத்தியங்கள் குறைவடைந்து செல…
-
- 1 reply
- 909 views
-
-
இலங்கை பாராளுமன்றை அதிர வைத்த கன்னி உரை இலங்கை நாடாளுமன்றத்தில் 2010 தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பாக வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்களின் கன்னிப் பேச்சு இன்று பாராளுமன்றத்தை அதிரவைத்தது.
-
- 14 replies
- 2.2k views
-
-
இலங்கையில் இன்னும் அவசரகால சட்டம்; போர் ஓயவில்லை; ஆஸ்திரேலியா அகதிகளை ஏற்க வேண்டும்; மாபெரும் மனித சங்கிலி நாளை இடம்: ஆஸ்திரேலியா பொண்டி கடற்கரை காலம்: நாளை காலை 11 மணி முதல் 1 மணி வரை ஒழுங்குகள்: Amnesty International மேலதிக விபரங்கள்: Giant human ring tomorrow urging Aussie govt to protect refugees
-
- 0 replies
- 478 views
-
-
இலங்கையில் இன்று நள்ளிரவுக்கு பின் ஷெல சமையல் எரிவாயுவின் விலை 1769 ரூபா லாவ் எரிவாயுவின் விலை 1744‐ 06 May 10 01:06 pm (BST) 12.5 கிலோகிராம் எடையுடைய எரிவாயுவின் விலைகளிலேயே மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் எடையுடைய ஷெல் கேஸ் 219 ருபாவினாலும் லாவ் கேஸ் 323 ருபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக நுகர்வோர் அமைச்சர் ஜொனஸ்டன் பெர்ணான்டோ குறிப்பிட்டார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இந்த விலையதிகரிப்பு தொடர்பில் விளக்கமளித்தார். இதனடிப்படையில் 1550 ரூபாவாக விற்பனைச் செய்யப்பட்டு வந்த 12.5 நிறையுடைய ஷெல் கேஸ் 1769 ரூபாவாகவும், 1421 ரூபாவாக விற்பனைச் செய்யப்பட்டு வந்த 12.5 நிறையுடைய லாவ் கேஸ் 1744 ரூபாவாகவ…
-
- 6 replies
- 613 views
-
-
தமிழ் இளைஞர்களுக்கு அநீதி இளைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டுமாம் - பொன்சேகா கொழும்பு நிருபர் வெள்ளிக்கிழமை, மே 7, 2010 யுத்தக் காலப்பகுதியில் இராணுவத்தினர் நாட்டுக்கும், மக்களுக்கும் எதிராக குற்றம் செய்திருந்தால், அவை வெளிக்கொணரப்படும். தமிழ் இளைஞர்களுக்கு அநீதி இழைத்தவர்கள் எவராயினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனநாயக தேசிய கூட்டணியின் விசேட செய்தியாளர் மாநாடு இன்று நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்றது. இதன்போது போர்குற்றங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதில் அளிக்கும் போதே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்திருந்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பொன்சேகா, "முன்…
-
- 1 reply
- 499 views
-
-
அமிதாப் பச்சன் வருவதனை யாராலும் தடுக்க முடியாதாம் - அரசாங்கம் கொழும்பு நிருபர் வெள்ளிக்கிழமை, மே 7, 2010 இலங்கையில் நடைபெறவுள்ள திரைப்பட விருது வழங்கும் விழாவிற்கு அமிதாப்பச்சன் குழுவினர் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். சர்வதேச இந்திய திரைப்பட அகடமியின் விருது வழங்கும் வைபவம் குறித்த ஊடகவியலாளர்கள் மாநாடொன்று நேற்றைய தினம் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. ஹிந்தி திரையுலகத்தினர் இந்நிகழ்வில் கலந்து கொள்வது குறித்து தமிழக திரையுலகத்தினரால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருவதை சுட்ட…
-
- 0 replies
- 574 views
-
-
தென் தமிழீழம், மெதிரிய பகுதியில் ஊர்காவல்படையினர் வீடுகளுக்கு தீவைப்பு வவுனியா நிருபர் வெள்ளிக்கிழமை, மே 7, 2010 தென் தமிழீழம் மெதிரிய பகுதியில் கடமையாற்றும் ஊர்காவல் படையினரின் வீடுகளுக்கு இனம் தெரியாதோரால் தீ மூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் இந்த தீவைப்பு பொலிஸ் தரப்பினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் வதந்திகள் பரவியுள்ளன. மெதிரிகிரிய எட்டம்பஓய பொலிஸ் காவலரணில் அண்மையில் ஊர்காவல்படையினரால் துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அதில் ஒரு பொலிசாரும் உயிரிழந்துளார். பொலிஸ் காவலரணை தாக்கிய ஊர்காவல் படையினரின் வீடுகளுக்கே இவ்வாறு இனந்தெரியாதோர் தீ வைத்ததாகூறப்படுகின்றது. http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0…
-
- 0 replies
- 645 views
-
-
வன்னியில் மீழ் குடியேறும் மக்களுக்கு உதவிகள் கிடைக்காமையினால் அவலம் - ஐ. நா வவுனியா நிருபர் வெள்ளிக்கிழமை, மே 7, 2010 வன்னியில் குடியேற்றப்படும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் இல்லாமையால் அவர்கள் பெரிதும் அல்லல்படுவதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. இதனை ஈழ நாதம் செய்தியாளர்கள் ஏற்கனவே பல தடவை சுட்டிக்காட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.மீழ் குடியேற்றம் தொடர்பாக கிராமம் கிராமமாக திரட்டப்பட்ட விபரங்கள் நாளை மறு தினம் ஈழ நாதத்தில் பிரசுரிக்கப்படும். மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் வாழ்வாதாரத்துக்கான எதுவித வாய்ப்பும் அற்ற நிலையிலேயே வன்னியிலுள்ள தமது பகுதிகளில் இலங்கை அரசினால் மீளக் குடியேற்றப்படுகின்றனர் எனவும் கூறியுள்ளது ஐ. நா கொழும்பு அலுவலகம். கொழும…
-
- 0 replies
- 335 views
-
-
சிகிரியா குகை ஓவியங்கள் வண்டுகளினால் பாதிப்பு ஒரு வகை வண்டுகளினால் உலகப் புகழ் பெற்ற சிறிலங்காவின் சிகிரியா குகை ஓவியங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிகிரியா குகை ஓவியங்களை வண்டுகள் நெருங்க முடியாதபடி அவை வலைகளினால் தடுக்கப்பட்டு்ள்ளன. இந்த வண்டுகள் ஓவியங்கள் வரையப்பட்டுள்ள சுவர்களில் மண்ணை குடைந்து வருவதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவிக்கி்ன்றது. இந்த குகை ஓவியங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சுவர் ஓவியங்கள் அமைந்துள்ள 5 இடங்களில் இந்த வண்டுகளினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. http://meenakam.com/?p=15603
-
- 1 reply
- 2k views
-
-
கொழும்பில் விசா இன்றி தங்கியிருந்த பலர் கைது சிறிலங்காவில் விசா அனுமதி இன்றி தங்கியிருந்த 28 பேரை சிறிலங்கா காவல்துறை கைது செய்துள்ளது. கொழு்ம்பு டாம் வீதி மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளிலுள்ள விடுதிகளிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் விசா அனுமதியின்றி இங்கு நீண்டகாலமாக தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் இந்தியர்களும் நேபாள நாட்டை சோ்ந்தவர்களும் அதிகம் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் காவல்துறை விசாரணைகளை நடாத்தி வருகின்றது. http://meenakam.com/?p=15599 [ மீனகம் நேரலை: மே 8 savetamils - இயக்குநர்கள் மணிவண்ணன், ராம், வெற்றிமாறன், கௌதமன், கவிஞர் தாமரை, தோழர் தியாகு, பேராசிரி…
-
- 0 replies
- 544 views
-
-
டெங்கு நோயாளர்களை பாதுகாக்க அவசர சிகிச்சைப்பிரிவு டெங்கு காய்ச்சலினானால் ஏற்படும் உயிரிழப்பினை கட்டுப்படுத்துவதற்காக வைத்தியசாலைகளில் அவசர சிகிச்கைப் பிரிவுகளை அமைப்பதற்கு 500 மில்லியன் ரூபாவினை வழங்குவதற்கு நிதி அமைச்சு இணங்கியுள்ளது. இந்த நிதி மூலமாக சிறிலங்காவில் டெங்கு காய்ச்சலி்ன தாக்கம் அதிகமாக காணப்படும் பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அவசர சிகிச்சைப் பிரிவுகளை அமைப்பதற்கும் அவை எந்தப் பிரேதசங்களில்ன் அமைக்கப்படவேண்டும் என்பது சம்பந்தமான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்ப…
-
- 0 replies
- 259 views
-
-
அத்தியாவசிய மருந்துகளை உடன் இறக்குமதி செய்ய சிறிலங்கா சுகாதார அமைச்சு தீர்மானம் சிறிலங்காவில் அத்தியாவசியமான 44 மருந்து வகைகளை எதிர்வரும் வாரத்தில் நாட்டிற்குள் கொண்டுவர சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலைகளில் மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறை சம்பந்தமாக கண்டறியும் குழுவிற்கும் சிறிலங்கா சுகாதார அமைச்சுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலினை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி எதிர்வரும் இரு வாரகாலத்தினுள் 97 வகையான மருந்து வகைகளை சிறிலங்காவிற்குள் கொண்டு வரவும், நாட்டிற்கு தேவையான அனைத்து மருந்து வகைகளையும் ஒரு மாதகாலத்தினுள் இறக்கும…
-
- 0 replies
- 305 views
-
-
சிறிலங்காவின் கல்விச்சேவையில் தகுதியானவர்கள் இருக்க பதில் அதிகாரிகள் நியமனம் கல்வி நிர்வாக சேவையில் முதலாம் தரத்திற்கு தகுதி பெற்ற 196 பேருக்கு இதுவரையில் நியமனங்கள் வழங்கப்படவில்லையென இலங்கை ஆசிரியர் சங்கம் அரசை குற்றம் சாட்டியுள்ளது. கல்வி நிர்வாக சேவையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு பதில் அதிகாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக கல்வி நிர்வாக சேவையில் பல அதிருப்திகள் நிலவுவதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே கல்வி நிர்வாக சேவையில் தகுதி பெற்றவர்களுக்கு நியமனங்கள் வழங்குவதன் மூலம் கல்வி கட்டமைப்பை சரி செய்யுமாறு அந்தச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. http://meenakam.com/?…
-
- 0 replies
- 346 views
-
-
எமது இனத்தின் மீதான ஒரு அழித்தொழிப்பு யுத்தம் நடைபெற்றிருக்கின்றது. எமது இனத்தின் மீதான ஒரு அப்பட்டமான இன அழிப்பு நடைபெற்றிருக்கின்றது. எமது இனத்தை கருவறுத்தவர்களை பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் எமக்கு ஏற்படவில்லை என்றால் ஒரு இனம் என்று கூறிக்கொள்ளும் தகுதியை நாம் நிச்சயம் இழந்தவர்களாகிவிடுவோம். இப்பொழுது உங்களிடம் ஒரு கேள்வி எழலாம். எங்களால் என்ன செய்ய முடியும்? எங்களின் பலம்தான் அழிக்கப்பட்டுவிட்டதே? இனி எங்களால் எதைத்தான் செய்யமுடியும்? – இவ்வாறு நீங்கள் கேள்வி எழுப்பலாம். எங்களிடம் இல்லாத பலத்தைப் பற்றிக் கவலைப்படாமல்;. எங்களிடம் இருக்கின்ற பலத்தை வைத்துக்கொண்டு அந்த யுத்தக் குற்றவாளிகளை எப்படி பழிவாங்கலாம் என்று யோசிப்பதுதான் சாலச்சிறந்தது. அப்படி என்ன…
-
- 7 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் புதிய ஊடக அமைச்சர் இன்று பொறுப்பேற்பு சிறிலங்காவின் புதிய ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள கெகலிய ரம்புக்வெல இன்று தனது பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாக ஏற்கவுள்ளார். கொழும்பு நாரகன்பிட்டியவிலுள்ள ஊடகத்துறை அமைச்சில் இன்று காலை நடைபெறவுள்ள வைபவம் ஒன்றில் அவர் தனது பொறுப்புக்களை ஏற்கவுள்ளார். இந்த ஊடகத்துறை அமைச்சு அதிபர் மகிந்த ராசபக்சவிடம் இருந்த நிலையில் நேற்று முன்னதினம் கெகலிய ரம்புக்வெலவுக்கு தகவல் ஊடகத்துறை அமைச்சு வழங்கப்பட்டது. இதேவேளையில் பிரதி ஊடகத்துறை அமைச்சராக இருந்து மோ்வின் சில்வா தமது பதவியினை நேற்று முன்தினம் இராஜினாமா செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. பிரதி ஊடகத்துறை அமைச்சராக மோ்வின் சில்வா பதவி ஏற்றதனை அடுத்து பல விமர்ச…
-
- 1 reply
- 357 views
-
-
அமெரிக்காவில் 6 ஈழத்தமிழர்களுக்கு ஏதிலி உரிமை அமொக்காவில் 6 ஈழத்தமிழர்களுக்கு ஏதிலி உரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த 6 ஏதிலிகளும் வேஜீனியா சிறைச்சாலை ஒன்றில் கடந்த 2008ம் ஆண்டு மாசி மாதம் 18ம் திகதி முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இந்த நிலையில் அவர்களை குறித்த திகதியிலிருந்து வெளியேறுவதற்கு ஏதுவான ஆவணங்களை தயார் செய்யும் வரையில் வசதியான இடம் ஒன்றில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னர் அவர்கள் ஏதாவது குறித்த பகுதியில் தங்குவதற்கு அனுமதிக்ப்படுவார்கள் என வேஜீனியா அதிகாரிகள் தெரிவிக்கி்ன்றார்கள். http://meenakam.com/?p=15558
-
- 0 replies
- 448 views
-
-
போர்க்குற்றம் இல்லை, யாரையும் சுடவும் இல்லை – சரத் பொன்சேகா திகதி: 06.05.2010 // தமிழீழம் வன்னியில் தாம் முன்னெடுத்த ஆக்கிரமிப்புப் போரின்போது தமது படைகள் எந்தவித போர்க் குற்றத்திலும் ஈடுபடவில்லை என, சிறீலங்காவின் முன்னாள் படைத்தளபதி ஜெனரல் சரத் பொன்செகா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளைச் சுட்டுக்கொல்லுமாறு சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கொட்டாபய ராஜபக்ச தனக்கு உத்தரவிடவில்லை எனவும், தமது படைகள் அவ்வாறு யாரையும் சுட்டுக்கொல்லவில்லை எனவும் அவர் மேலும் கூறியிருக்கின்றார். இது பற்றி ஊடகங்கள் தவறான தவலை வெளியிடுவதாகத் தெரிவித்த அவர், கடந்த வாரவிடுறைப் பத்திரிகை ஒன்றிலும், தனக்கு உத்தரவு வழங்கப்பட்…
-
- 5 replies
- 740 views
-
-
[ வியாழக்கிழமை, 06 மே 2010, 12:56 GMT ] [ புதினப் பணிமனை ] வவுனியாவின் ஏழு முன்னணிப் பாடசாலைகள் 'வன்னியின் ஊத்தைகளே வெளியேறுங்கள்' எனக் கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிகழ்வினை விபரிக்கிறார் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கென வவுனியாவின் காமினி மகாவித்தியலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இணைந்த பாடசாலையின் அதிபர் திரு. ரங்கநாதன். புலம்பெயர்ந்து வாழும் சமூக ஆர்வலர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட 'நேசக்கரங்கள்' உதவி நிறுவனத்தின் செயற்பாட்டளர்கள் நடாத்திய உரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்திருக்கிறார் அதிபர் ரங்கநாதன். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, சமாதான காலத்தில் செழிப்புற்றிருந்த வன்னி மாணவர்களின் கல்வி 2006ம் ஆண்டில் போர் மீண்டும் மூணடபோது சீர்குலையத் தொடங்கி…
-
- 17 replies
- 2k views
-
-
வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எமது வாழ்த்துக்கள் TRANSNATIONAL GOVERMENT OF TAMIL EELAM Canadian Election Results Candidates: District No 1. (Toronto GTA and Vicinities) * Joe ANTONY - ELECTED ( 3,388 ) * Pon BALARAJAN - ELECTED (3,777) * M.K. EALAVENTHAN - ELECTED (4,161) * Tharani PRAPAHARAN - ELECTED (4,967) * Thiru S. THIRUCHELVAM - ELECTED (4,936) District No 2. (Eastern Ontario) * Esan KULASEKARAM - ELECTED (7,810) * Vanitha RAJENDRAM - ELECTED (8,451) * Suresh RATNABALAN - ELECTED (6,109) * Waran VAITHILINGAM - ELECTED (6,523) * Mariampillai Anjalo YOGENDRAN - ELECTED (6,378) District No 3. (Western Ontario) …
-
- 35 replies
- 4k views
-
-
முத்துக்குமாருக்கு ஜாமீன் - சீமான் மாலை அணிவித்து வரவேற்பு திகதி: 07.05.2010 // தமிழீழம் நாம் தமிழர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், முன்பு தமிழர் மீட்சி படையில் இருந்தவர். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்தார் என்றும் அவர்களுக்கு ஆயுதம் கடத்தினார் என்றும், தமிழர்களுக்கு எதிராக நடந்த போரின் போது தமிழர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வந்தார் என்றும் முத்துக்குமார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் 10ம் தேதி தஞ்சாவூரில் நடந்த நாம் தமிழர் இயக்கத்தின் கொடி அறிமுக கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பிய அவரை, இரவு 11 மணிக்கு கந்தக்கோட்டை அருகே பின் தொடர்ந்து வந்த சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் முத்துக்குமா…
-
- 0 replies
- 676 views
-
-
சிறீலங்கா இவ்வளவு காலமும் யுத்த களத்தில் எதிர்கொண்ட அச்சுறுத்தலை (அதுதாங்க தமிழீழம் அமைவது) இப்போ வெளிநாட்டில் இருந்து இராஜதந்திர வடிவில் எதிர்கொள்கிறதாம்.விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சக்திகள் வெளிநாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவி புலிகளின் தமிழீழக் கனவை நனவாக்க முயற்சிக்கின்றனராம். அதைத் தடுக்க நாட்டுக்கு (சிறீலங்காவிற்கு) அவசரகாலச் சட்டம் மிக முக்கியமாம். ------------- அட சிங்கள ஆபீசர்களா உங்கட நாட்டுப்பற்றை கண்டு கண்கலங்குதடா. எஸ்கேப் என்று விவேக் கணக்கா சொல்லலாம் போல. ------------- “Threat to country shifted from battle field to diplomacy” - SL Foreign Minister [TamilNet, Thursday, 06 May 2010, 16:16 GMT] “The country has been f…
-
- 5 replies
- 961 views
-