Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நேரலை அறிவிப்பு: வைகோ, நெடுமாறன், நல்லக்கண்ணு [நேரலை அறிவிப்பு] தாயக நேரப்படி இன்று ( 05.05.2010) மாலை 6 மணியளவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்தியப்பொதுவுடைமைக்கட்சி நல்லக்கண்ணு மற்றும் பழ.நெடுமாறன் பங்கேற்கும் நிகழ்வினை உங்களின் மீனகம் இணையதளத்தில் நேரலையாக காணலாம்…. http://meenakam.com/?page_id=517

  2. இலங்கை தூதரகங்களின் வாருங்கள் பழகலாம் ஐரோப்பிய துணை ஆசிரியர் புதன்கிழமை, மே 5, 2010 ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிசலுகையினைப் பெறுதல், அனைத்து நாடுகளில் இருந்து வரும் உல்லாசபயணிகளின் வரவினை கூட்டுதல், வெளி நாட்டு முதலீடுகளை அதிகரித்தல் என்பனவே அண்மையில் புதிய வெளி நாட்டு அமைச்சருக்கு கொடுக்கப்பட்ட இலக்கு. இதற்கேற்ப காய்களை நகர்த்துமாறு அனைத்து நாட்டு தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தூதரக அதிகாரிகள் ஒவ்வொரு நாடுகளிலும் ஆட்பிடிப்பு நடவைக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.இந்த ஆட்பிடிப்பு உத்தியோக பூர்வமாகவும் மறைமுகமாகவும் நடக்கின்றன. நேற்று முந்தினம் புலம்பெயர் தமிழர்களிற்குள் ஆள ஊடுருவி நல்ல பிள்ளைகள் போல வேலைகளை செய்யும் சிலரை அணுகிய இலண்டனில் உள்ள இ…

    • 2 replies
    • 777 views
  3. நீதிமன்றம் அழைப்பாணை, பொன்சேகா உண்ணாவிரதம் கொழும்பு நிருபர் புதன்கிழமை, மே 5, 2010 தன்னை நாடாளுமன்ற அமர்வில் தான் கலந்துகொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து சரத் பொன்சேகா, உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்துள்ளார். இராணுவ பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரான ஜெனரல் சரத் பொன்சேகா, இன்று காலை தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படைத் தலைமையகத்திலேயே இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். இதே வேளை பொன்சேகாவிற்கு நீதிமன்றம்மும் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8…

    • 0 replies
    • 447 views
  4. அவசரகால சட்டத்தில்; ஊரடங்கு உத்தரவுகள் நீக்கம், உயர்பாதுகாப்பு வலையங்கள் இருக்கும் வவுனியா நிருபர் புதன்கிழமை, மே 5, 2010 வெளி நாட்டு உதவிகளை கவரக்கூடிய வகையிலேயே அவசரகால சட்டத்தின் சில சரத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால் முக்கியமாக மக்களின் வாழ்வாதாரத்தை ஆக்கிரமித்துள்ள பாதுகாப்பு வலையங்கள் நீக்கப்படவில்லை. அவசரகாலச் சட்டத்தின்கீழ் இதுவரை நடைமுறையிலிருந்த பொலிஸ் பதிவுமுறை, கூட்டங்களை நடத்துவதற்கான தடை, ஒன்றுகூடுவதற்கான தடை, ஊரடங்குச் சட்டம் என்பன உட்பட சில ஷரத்துக்களுடன் அமுலுக்குவரும் வகையில் நீக்கப்படுகின்றன என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால…

  5. தமிழக சின்னத்திரை கலைஞர்கள் வன்னி அழிப்பின் ஓராண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பதை ரத்து செய்ததற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். திரைப்பட இயக்குனர் சீமானின் நாம் தமிழர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னி அழிப்பின் ஓராண்டினை மிகப்பெரும் விழாக்களாக ஏற்பாடு செய்து சிங்கள அரசு முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதன் ஒழுங்குபடுத்தலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மே 18 அன்று நாடெங்கும் வெற்றிக்கொண்டாட்டங்கள் நடைபெற வேண்டும் என்று கோத்தபய ராஜபக்‌ஷே உத்தரவிட்டுள்ளார்.அதன் விளைவாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய இன அழிப்பு நடவடிக்கை நடைபெற்று ஆண்டு ஒன்று நிறைவடைந்து வருகின்ற…

  6. புனர்வாழ்வுக்கழகம் இன்னமும் இயங்குவதனால் அவசரகால சட்டத்தினை நீக்க முடியாதாம் - பீரிஸ் வவுனியா நிருபர் புதன்கிழமை, மே 5, 2010 தமிழர் புனர்வாழ்வு கழகம் போன்ற பல புலி ஆதரவு அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. எனவே அவசரகால சட்டங்களில் சிலவற்றை தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டிய தேவை உள்ளது. முழுமையாக நீக்க முடியாது என பீரிஸ் கூறியுள்ளார். அவர் கூறியமை வருமாறு அவசரகால சட்டத்தை முழுயைமாக நீக்க முடியாது. அது நடைமுறை சாத்தியமற்றது. தேசிய பாதுகாப்புக்கு அது அவசியமானதாகும். படையினருக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. விசாரணைகளையும் உளவு நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்பதாயின் இச்சரத்தினையும் நீக்க முடியாது. புலி அமைப்புக்கள் இன்னமும் வெளி நாடுகளில் இயங்குவது பா…

    • 0 replies
    • 442 views
  7. சிங்கள அரச படைகளால் தாய் மண்ணில் இருந்து அடித்து விரட்டப்பட்டு உலகெங்கும் வாழும் ஈழத்தமிழ் மக்கள் தமது தாயக விடுதலைக்கான ஒரு நகர்வாக நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளை ஜனநாயக வழியில் தேர்வு செய்வதற்கான தேர்தலில் உலக நாடுகள் பலவற்றில் நேற்றைய தினம் வாக்களித்திருந்தனர். கனடாவில் குறிப்பாக ரொரண்டோவில் பெருமளவு மக்கள் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்ய வாக்களித்துள்ளனர். இந்த நிலையில் கனடாவுக்கான சிறீலங்காவின் சிங்களத் தூதுவன் இந்தத் தேர்தல் சட்டவிரோதம் என்று கூறி இருக்கிறார். எந்த நாட்டுச் சட்டத்தின் கீழ் அது சட்டவிரோதம் என்று சொல்கிறார் என்று புரியவில்லை. சிங்கள தேசத்தின் அராஜசட்டங்கள் கனடாவிலும் அமுல்படுத்தப்படுகிறது என்ற நினைப்பில் அல்லத…

    • 34 replies
    • 2.8k views
  8. நாடு கடந்த தமிழீழ அரசு நாடு கடந்த தமிழீழ அரசின் 115 உறுப்பினர்கள் அதரிவு செய்யப்பட்டுவிடுவார்கள். நியமிக்கப்படும் 20 உறுப்பினர்கள் தேர்தல் நடத்த முடியாத இடங்களில் நியமிக்கப்படுவார்கள். இவர்களில் 5 பேர் இந்தியாவில் நியமிக்கப்படுவார்கள் அது யாராகவிருக்கும். நான் அறிந்தவரை அறிவுமதி , தாமரை, ...............

    • 6 replies
    • 1.8k views
  9. யாழில். இந்தியா வீசா விண்ணப்ப நிலையம் இன்று திறப்பு இந்தியா செல்வதற்கான வீசா விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளும நியையமொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய உயர்த்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த நிலையம் இன்று திறந்துவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடபகுதி மக்கள் இந்தியா செல்வதற்கான வீசா விண்ணப்பங்களை சேகரித்து அனுப்பும் நடவடிக்கையினையே இந்த நிலையம் மேற்கொள்ளவுள்ளது. அதுபோல் கொழும்பில் வழங்கப்படும் வீசாக்களை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும் வீசா விண்ணப்ப நிலையத்திலும் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. http://meenakam.com/?p=15435

  10. தமிழக சின்னத்திரை கலைஞர்கள் வன்னி அழிப்பின் ஓராண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பது ரத்து – தமிழர்களின் வேண்டுகோள் ஏற்பு தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக சின்னத்திரை கலைஞர்கள் வன்னி அழிப்பின் ஓராண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பதை ரத்து செய்துள்ளதாக நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமானிடம் இன்று தெரிவித்துள்ளனர். வன்னி அழிப்பின் ஓராண்டினை மிகப்பெரும் விழாக்களாக ஏற்பாடு செய்து சிங்கள அரசு முன்னெடுத்துவருகின்ற நிலையில் அதன் ஒழுங்குபடுத்தலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மே 18 அன்று நாடெங்கும் வெற்றிக்கொண்டாட்டங்கள் நடைபெற வேண்டும் என்று கோத்தபய ராஜபக்‌ஷே உத்தரவிட்டுள்ளார்.அதன் விளைவாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. க…

  11. வுவனியா வளாக மாணவர்களின் கோரிக்கை ஏற்பு யாழ்.பல்கலைக்கழகத்தின் வுவனியா வளாக மாணவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்துள்ளது. பல்கலைக்கழக முதல்வருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையினை அடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்துள்ளது. குடிநீர் வசதிகள் உணவகம் மற்றும் கணனி வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு கோரி நேற்று 172 மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களினால் முன்வைக்கப்பட்ட முக்கியமானதும், அடிப்படையானதுமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வவுனியா வளாக முதல்வர் பேராசிரியர் நந்தகுமார் உறுதியளித்தனை அடுத்து விரிவுரைகளுக்கு செல்லுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டதனையடுத்து அடுத்தவாரம்…

  12. சிறிலங்கா அமைச்சரவையில் மேலும் 4 புதியவர்கள் சிறிலங்காவில் மேலும் நான்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள நான்கு அமைச்சர்கள் இன்று அதிபர் மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவி ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி கண்டி மாவட்டத்திலிருந்து சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஹெகலிய ரம்புக்ஹெல, எஸ்.பி.திசநாயக்கா, காலநிதி சரத் அமுனுகம மற்றும் நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர் இன்று அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். இதனடிப்படையில் வெகுஜன மற்றும் ஊடக தகவல் அமைச்சராக ஹெகலிய ரம்புக்ஹெலவும், உயர்கல்வி அமைச்சராக எஸ்.பி.திசநாயக்காவும், விஞ்ஞான தொழில்நுட்பவியல் அமைச்சரா…

  13. திறைச்சேரியில் பணம் இல்லை : திண்டாடுகிறது அரசு வீரகேசரி இணையம் திறைச்சேரியில் பணம் இல்லாமல் அரசாங்கம் திண்டாடுவதாக ஜனநாயக தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதற்கு போதியளவு பணம் இல்லை என்பதை பலரும் தமக்குச் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்த அவர், இந்த விடயம் தொடர்பில் இதுவரை எந்தத் தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தினார். வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்கு நாம் அழுத்தம் கொடுக்க, இதுவே காரணம். இந்த விடயங்களை ஊடகங்கள் வெளிக்கொண்டு வரவேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார். __

    • 6 replies
    • 787 views
  14. . பாணின் விலை ஒரு ரூபாவால் அதிகரிப்பு. பாணின் விலையை நாளை முதல் ஒரு ரூபாவால் அதிகரிக்க உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை மாவின் விலை மூன்று ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் பாணின் விலையை ஒரு ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. - வீரகேசரி - .

    • 22 replies
    • 2k views
  15. அவசரகால சட்டத்தின் சில பிரிவுகள் நீக்கம் - வடக்கில் மாகாணசபை தேர்தல் கொழும்பு நிருபர் செவ்வாய்க்கிழமை, மே 4, 2010 அவசர கால சட்டத்தின் சில பிரிவுகளை நீக்கவும் வடக்கில் மாகாண சபை தேர்தலினை நடத்தவும் மஹிந்த முடிவெடுத்துள்ளதாக வெளி நாட்டமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கான மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும். தேர்தல் நடத்தப்படும் திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். அவசரகால சட்டத்தின் பெருமளவு விதிகளை அகற்ற அரசாங்கம் முன்வந்துள்ளது. இது தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஜனாதிபதி மஹி…

  16. இலங்கை வீரர்கள் தலாய்லாமாவை சந்திக்கத்தடை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்காராவும், மஹேல ஜயவர்த்தனவும் திபெத்திய மதத்தலைவரான தலாய் லாமாவை சந்திப்பதை இலங்கை தடுத்துள்ளது. இந்திய பிரிமியர் லீக் குழுவினர் மரியாதையின் நிமித்தம் ஆன்மீகத்தலைவர் தலாய் லாமாவை சந்திக்கவிருந்த போது அவர்களுடன் இந்த இலங்கை ஆட்டக்காரர்கள் இருவரும் அதில் கலந்துகொள்ளவிருந்தனர். ஆனால், அவர்கள் தலாய் லாமாவை சந்திப்பதை இலங்கை விளையாட்டு அமைச்சின் ஊடாக அவர்களுக்கு வழங்கப்பட்ட இலங்கை வெளிநாட்டு அமைச்சின் உத்தரவு ஒன்று தடுத்திருந்ததாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளரான நிசாந்த ரணதுங்க கூறியுள்ளார். உலகத் தலைவர்கள் தலாய் லாமாவை சந்திப்பதை சீனா தொடர்ந்து கண்…

    • 2 replies
    • 582 views
  17. சாவகச்சேரி மாணவன் படுகொலை வழக்கு; ஈ.பி.டி.பி. பொறுப்பாளருக்கு விளக்கமறியல் யாழ்ப்பாணம், மே 4 சவகச்சேரியில் மாணவன் கபிலநாத் கொலைசெயப்பட்டசம்பவம் தொடர் பில் சந்தேகத்தில் சனியன்று கைதுசெயப் பட்ட ஈ.பி. டி.பி. அமைப்பின் தென்மராட்சிப் பொறுப் பாளரான சாள்ஸ் என அழைக்கப்படும் சூசைமுத்து அலெக்ஸாண்டரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறிய லில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மாணவன் படுகொலைசந்தேக நபர்களான ஈ.பி.டி.பியின் சார்ள்ஸ், சாந்தீபன், திருச்செல்வம்,தயாராஜ், குமாரசிங்கம் திருப்பதியம்மா, குமாரசிங்கம் குகன்யா ஆகியோரை அடுத்த இருவாரங்களுக்கு விளக் கமறியலில் வைக்கவேண்டுமென சாவ கச்சேரி நீதி வான் ரி.ஜே.பிரபாகரன் உத் தரவு பிறப்பித்தார். இப்படுகொ…

    • 4 replies
    • 572 views
  18. http://www.yarl.com/articles/files/100504_colombo_reporter.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா

  19. http://www.yarl.com/articles/files/100504_hassan_ali.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா

  20. தமிழின அழிப்பின் ஓராண்டுக் கொண்டாட்டங்களில் யாழ் வவுனியாவில் தமிழக சின்னத்திரையினர் கடந்த ஆண்டு வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய இன அழிப்பு நடவடிக்கை நடைபெற்று ஆண்டு ஒன்று நிறைவடைந்து வருகின்ற இந்த மாதத்தில் தமிழகத்தின் சின்னத்திரை நட்சத்திரங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்காக யாழ்ப்பாணம், வவுனியா வருகின்றனர் என்ற செய்தி தாயக மக்களை மிகக் கவலைக்குள் தள்ளியுள்ளது. வன்னி அழிப்பின் ஓராண்டினை பாரிய விழாக்களாக ஏற்பாடு செய்து சிங்கள அரசு முன்னெடுத்துவருகின்ற நிலையில் அதன் ஒழுங்குபடுத்தலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்படாடு செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இந்திய திரைப்படங்களை உலக கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கோடு நடாத்தப்படும் சர்வதேச இந்திய திரைப்பட வி…

    • 2 replies
    • 858 views
  21. தமிழர்களே, மலேசியாவில் தவிக்கும் 75 ஈழத்தமிழர்கள்: படங்கள் http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=31539 75 தமிழர்களை பிடித்து வைத்துள்ள மலேசிய அரசுக்கு அம்மக்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பவேண்டாம் எனவும், அவர்கள் விரும்பும் நாட்டிற்கே அவர்களை அனுப்ப அந்நாட்டு பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும் கோரிக்கை வைப்போம் மின்னஞ்சல் அனுப்புவோம். Dato Sri Mohd Najib Tun Abdul Razak Prime Minister of Malaysia http://www.pmo.gov.my/?page=1638&menu=feedback Ministers http://www.pmo.gov.my/?menu=cabinet&page=1797 75 Sri Lankans end 2-day boat standoff in Malaysia http://sg.news.yahoo.com/ap/20100426/tap-as-malaysia-boat-st…

    • 2 replies
    • 311 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.