Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா அமைச்சரவையில் மேலும் 4 புதியவர்கள் சிறிலங்காவில் மேலும் நான்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள நான்கு அமைச்சர்கள் இன்று அதிபர் மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவி ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி கண்டி மாவட்டத்திலிருந்து சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஹெகலிய ரம்புக்ஹெல, எஸ்.பி.திசநாயக்கா, காலநிதி சரத் அமுனுகம மற்றும் நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர் இன்று அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். இதனடிப்படையில் வெகுஜன மற்றும் ஊடக தகவல் அமைச்சராக ஹெகலிய ரம்புக்ஹெலவும், உயர்கல்வி அமைச்சராக எஸ்.பி.திசநாயக்காவும், விஞ்ஞான தொழில்நுட்பவியல் அமைச்சரா…

  2. திறைச்சேரியில் பணம் இல்லை : திண்டாடுகிறது அரசு வீரகேசரி இணையம் திறைச்சேரியில் பணம் இல்லாமல் அரசாங்கம் திண்டாடுவதாக ஜனநாயக தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதற்கு போதியளவு பணம் இல்லை என்பதை பலரும் தமக்குச் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்த அவர், இந்த விடயம் தொடர்பில் இதுவரை எந்தத் தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தினார். வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்கு நாம் அழுத்தம் கொடுக்க, இதுவே காரணம். இந்த விடயங்களை ஊடகங்கள் வெளிக்கொண்டு வரவேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார். __

    • 6 replies
    • 788 views
  3. . பாணின் விலை ஒரு ரூபாவால் அதிகரிப்பு. பாணின் விலையை நாளை முதல் ஒரு ரூபாவால் அதிகரிக்க உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை மாவின் விலை மூன்று ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் பாணின் விலையை ஒரு ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. - வீரகேசரி - .

    • 22 replies
    • 2k views
  4. அவசரகால சட்டத்தின் சில பிரிவுகள் நீக்கம் - வடக்கில் மாகாணசபை தேர்தல் கொழும்பு நிருபர் செவ்வாய்க்கிழமை, மே 4, 2010 அவசர கால சட்டத்தின் சில பிரிவுகளை நீக்கவும் வடக்கில் மாகாண சபை தேர்தலினை நடத்தவும் மஹிந்த முடிவெடுத்துள்ளதாக வெளி நாட்டமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கான மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும். தேர்தல் நடத்தப்படும் திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். அவசரகால சட்டத்தின் பெருமளவு விதிகளை அகற்ற அரசாங்கம் முன்வந்துள்ளது. இது தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஜனாதிபதி மஹி…

  5. இலங்கை வீரர்கள் தலாய்லாமாவை சந்திக்கத்தடை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்காராவும், மஹேல ஜயவர்த்தனவும் திபெத்திய மதத்தலைவரான தலாய் லாமாவை சந்திப்பதை இலங்கை தடுத்துள்ளது. இந்திய பிரிமியர் லீக் குழுவினர் மரியாதையின் நிமித்தம் ஆன்மீகத்தலைவர் தலாய் லாமாவை சந்திக்கவிருந்த போது அவர்களுடன் இந்த இலங்கை ஆட்டக்காரர்கள் இருவரும் அதில் கலந்துகொள்ளவிருந்தனர். ஆனால், அவர்கள் தலாய் லாமாவை சந்திப்பதை இலங்கை விளையாட்டு அமைச்சின் ஊடாக அவர்களுக்கு வழங்கப்பட்ட இலங்கை வெளிநாட்டு அமைச்சின் உத்தரவு ஒன்று தடுத்திருந்ததாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளரான நிசாந்த ரணதுங்க கூறியுள்ளார். உலகத் தலைவர்கள் தலாய் லாமாவை சந்திப்பதை சீனா தொடர்ந்து கண்…

    • 2 replies
    • 583 views
  6. சாவகச்சேரி மாணவன் படுகொலை வழக்கு; ஈ.பி.டி.பி. பொறுப்பாளருக்கு விளக்கமறியல் யாழ்ப்பாணம், மே 4 சவகச்சேரியில் மாணவன் கபிலநாத் கொலைசெயப்பட்டசம்பவம் தொடர் பில் சந்தேகத்தில் சனியன்று கைதுசெயப் பட்ட ஈ.பி. டி.பி. அமைப்பின் தென்மராட்சிப் பொறுப் பாளரான சாள்ஸ் என அழைக்கப்படும் சூசைமுத்து அலெக்ஸாண்டரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறிய லில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மாணவன் படுகொலைசந்தேக நபர்களான ஈ.பி.டி.பியின் சார்ள்ஸ், சாந்தீபன், திருச்செல்வம்,தயாராஜ், குமாரசிங்கம் திருப்பதியம்மா, குமாரசிங்கம் குகன்யா ஆகியோரை அடுத்த இருவாரங்களுக்கு விளக் கமறியலில் வைக்கவேண்டுமென சாவ கச்சேரி நீதி வான் ரி.ஜே.பிரபாகரன் உத் தரவு பிறப்பித்தார். இப்படுகொ…

    • 4 replies
    • 573 views
  7. http://www.yarl.com/articles/files/100504_colombo_reporter.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா

  8. http://www.yarl.com/articles/files/100504_hassan_ali.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா

  9. தமிழின அழிப்பின் ஓராண்டுக் கொண்டாட்டங்களில் யாழ் வவுனியாவில் தமிழக சின்னத்திரையினர் கடந்த ஆண்டு வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய இன அழிப்பு நடவடிக்கை நடைபெற்று ஆண்டு ஒன்று நிறைவடைந்து வருகின்ற இந்த மாதத்தில் தமிழகத்தின் சின்னத்திரை நட்சத்திரங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்காக யாழ்ப்பாணம், வவுனியா வருகின்றனர் என்ற செய்தி தாயக மக்களை மிகக் கவலைக்குள் தள்ளியுள்ளது. வன்னி அழிப்பின் ஓராண்டினை பாரிய விழாக்களாக ஏற்பாடு செய்து சிங்கள அரசு முன்னெடுத்துவருகின்ற நிலையில் அதன் ஒழுங்குபடுத்தலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்படாடு செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இந்திய திரைப்படங்களை உலக கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கோடு நடாத்தப்படும் சர்வதேச இந்திய திரைப்பட வி…

    • 2 replies
    • 859 views
  10. தமிழர்களே, மலேசியாவில் தவிக்கும் 75 ஈழத்தமிழர்கள்: படங்கள் http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=31539 75 தமிழர்களை பிடித்து வைத்துள்ள மலேசிய அரசுக்கு அம்மக்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பவேண்டாம் எனவும், அவர்கள் விரும்பும் நாட்டிற்கே அவர்களை அனுப்ப அந்நாட்டு பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும் கோரிக்கை வைப்போம் மின்னஞ்சல் அனுப்புவோம். Dato Sri Mohd Najib Tun Abdul Razak Prime Minister of Malaysia http://www.pmo.gov.my/?page=1638&menu=feedback Ministers http://www.pmo.gov.my/?menu=cabinet&page=1797 75 Sri Lankans end 2-day boat standoff in Malaysia http://sg.news.yahoo.com/ap/20100426/tap-as-malaysia-boat-st…

    • 2 replies
    • 312 views
  11. இலங்கையிலிருந்து அகதிகளாய் வெளியேறிய வேளையில் மலேசியக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ் 75 ஈழத் தமிழர்களும் கொடிய குற்றங்களைச் செய்த கைதிகளைப் போல விலங்கிடப்பட்டு கொடும் சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 6 பெண்களும் 8 குழந்தைகளும் உள்ளடங்கிய இந்த 75 பேரும் முதலில் அந்தக் கப்பலில் இருந்து இறங்க தயக்கம் காட்டிய போதிலும் பினாங்கு துணை முதல்வர் ராமசாமி அகதிகள் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட மாட்டார்கள் என வழங்கிய உறுதி மொழியைத் தொடர்ந்தே கப்பலிலிருந்து இறங்கியமை குறிப்பிடத்தக்கது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு கைகளில் விலங்கிடப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் இவர்கள் குறித்து குரல் எழுப்புவதற்…

    • 0 replies
    • 590 views
  12. ஊடகவியலாளர் மீது இலக்கு பத்திரிகை சுதந்திர தினத்தைக் குறிக்கும் முகமாக எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற ஊடக சுதந்திர அமைப்பு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊடக சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் என்று தாங்கள் கருதும் தனிநபர்கள் மற்றும் குழுக்களின் பெயர்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். உலகின் அனைத்து பாகங்கள் பற்றியும் இந்தப் பட்டியலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தங்களுடைய மதிப்பீட்டில் யார் யார் ஊடக சுதந்திரத்துக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் எப்படியான சேதத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று இந்த அமைப்பு அதில் விபரித்துள்ளது. எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின் தொனி சாடும் விதமாகவும் கேலி செய்யும் விதமாகவும் இருகிறது. …

    • 0 replies
    • 371 views
  13. தமிழினத்திற்கு அதிகமான தலைவர்கள் தேவையில்லை சிறந்த தலைமைத்துவமே வேண்டும் – பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி மலேசியத் தலைநகர் அம்பாங்கில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டின் எழுச்சி முகாம் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி தமிழினத்திற்கு அதிகமான தலைவர்கள் தேவையில்லை சிறந்த தலைமைத்துவமே வேண்டும் என்றார். உலகத் தமிழினத்திற்கு முற்போக்குச் சிந்தனை மிகவும் அவசியமாகும். அதேவேளை சிந்தனைப் பரிமாற்றங்களை உலகளாவிய நிலையில் உள்ள தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும் தமிழினத்திற்கு அதிகமான தலைவர்கள் தேவையில்லை.சிறந்த தலைமைத்துவமே வேண்டும் என்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசா…

  14. ஐ.எம்.எவ். குழு சிறிலங்கா வருகை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று சிறிலங்கா வரவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவின் விஜயத்தின்போது 2010ம் ஆண்டின் வரவு செலவுத்திட்டம் தொடர்பில் சிறிலங்காவின் அதிபர் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்களிடம் பேச்சு நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்காவின் வரவு செலவுத்திட்டம் வரும் வரையில் தாங்கள் காத்திருப்பதாகவும் இதன் பின்னரே சிறிலங்கா கோரியுள்ள மூன்றாம் கட்ட உதவியினை வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்தக்குழுவின் விஜயம் அடுத்த வாரமளவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. http://meenakam.com/?p=15398

  15. கடந்த ஆண்டு வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய இன அழிப்பு நடவடிக்கை நடைபெற்று ஆண்டு ஒன்று நிறைவடைந்து வருகின்ற இந்த மாதத்தில் தமிழகத்தின் சினத்திரை நட்சத்திரங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்காக யாழ்ப்பாணம், வவுனியா வருகின்றனர் என்ற செய்தி தாயக மக்களை மிகக் கவலைக்குள் தள்ளியுள்ளது. வன்னி அழிப்பின் ஓராண்டினை பாரிய விழாக்களாக ஏற்பாடு செய்து சிங்கள அரசு முன்னெடுத்துவருகின்ற நிலையில் அதன் ஒழுங்குபடுத்தலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்படாடு செய்யப்பட்டுள்ளன. <P>இதன் அடிப்படையில் இந்திய திரைப்படங்களை உலக கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கோடு நடாத்தப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் (International Indian Film Academy – IIFA Awards) விழாவினையும் இலங்…

  16. வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இன்று இரவு அழிப்பு – GTN செய்தியாளருக்கு சிவாஜிலிங்கம் அறிவிப்பு‐ 03 May 10 07:14 pm (BST) வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இன்று இரவு படையினரால் இடித்தளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனரக வாகணங்களின் உதவியுடன் இந்த அழிப்பு இடம்பெற்றதாக அயலவர்கள் தனக்கு அறிவித்துள்ளனர் என முன்னாள் நாடாளுமண்;ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 1980களின் பிற்பகுதியில் புலிகளால் உருவாக்கப்பட்ட இந்த மாவீரர் துயிலும் இல்லம் 1996ஆம் ஆண்டு படையினரால் முற்றாக இடித்தழிக்கப்பட்டது. 2002 ஆம் அண்டில் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையுடன் மக்களின் பங்களிப்புடன் முன்பிருந்தவாறே மீண்டும் உருவாக்கப்பட்டது. எனினும் 2…

    • 2 replies
    • 994 views
  17. 14வது ஜீ-15 மாநாட்டின் தலைமைப்பதவி சிறிலங்காவின் அதிபருக்கு ஈரானில் நடைபெறவுள்ள 14வது ஜீ-15 மாநாட்டின் தலைமைப்பதவியை சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜீ-15 நாடுகளின் உச்சிமாநாடு எதிர்வரும் 17ம் திகதி ஈரானில் ஆரம்பமாகவுள்ளது. இவ்வாறு ஆரம்பமாகவுள்ள 14வது ஜீ-15 உச்சி மாநாட்டின் போது சிறிலங்காவின் அதிபருக்கும் ஈரான் ஜனாதிபதிக்குமிடையே முக்கிய சந்திப்பும் இடம்பெறவுள்ளது. ஜீ-15 உச்சிமாநாட்டில் இலங்கை கென்யா, சிம்பாவே, ஈரான், அல்ஜீரியா ஆஜென்ரீனா, பிறேசில், சிலி, எகிப்து இந்தியா, இந்தோனேசியா ஜமெய்க்கா, நைஜீரியா, மலேசியா, மெற்சிக்கோ, பெரு, செனகல் மற்றும் வேனிசுவேலா ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.13வது ஜீ-15 உச்சிமாநாட்டின…

    • 4 replies
    • 435 views
  18. இலங்கை மீனவர்களின் படகுகளில் அல்-கைடா இந்தியாவுக்குள் ஊடுருவலாம் மலேசிய நிருபர் செவ்வாய்க்கிழமை, மே 4, 2010 இலங்கை மீனவர்களின் படகுகளில் அசாம் பகுதியூடாக அல்கைடா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஊடுருவி இருக்கலாம் என இந்திய பொலிஸ் தெரிவித்துள்ளாதாக த எகொனொமிக் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த செய்தி ஆதாரமற்றது என இந்திய புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன. 167 பேர் கொண்ட அல்-கைடா அணியினர் இவ்வாறு ஊடுருவியுள்ளதாக இந்திய பொலிஸ் தெரிவித்துள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%A…

    • 6 replies
    • 696 views
  19. இந்தியத்தூதருடனான இன்றைய சந்திப்பு சிநேகப்பூர்வமானதே – சுரேஸ் பிரேமச்சந்திரன் இலங்கைக்கான இந்திய தூதருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இன்று மதியம் 12.30 மணியளவில் இந்திய தூதரின் உத்தியோகபூர்வ வாசல்தலத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில் இந்த சந்திப்பு உத்தியோகப்பற்ற சந்திப்பு ஒன்று என்பதுமட்டுமேயன்றி சிநேகபூர்வ சந்திப்பாகவும் அமைந்ததாகவும் தெரிவித்ததுடன் அத்துடன் இந்த சந்திப்பில் எந்தவொரு விடயம் சம்பந்தமாகவும் கலந்தாரயப்படவில்லை என்பதோடு, எந்தவிதமான கோரிக்கைகளையும் தாம் முன்வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். அத்தோடு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்…

    • 7 replies
    • 710 views
  20. லண்டனில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் முடிவுகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டுவருகின்றன. வடமேற்கு லண்டன் விபரம்: 1) சேனாதிராஜா ஜேயானந்தமூர்த்தி 2) டிலக்ஷன் மொரிஸ் 3) பாலாம்பிகை முருகதாஸ் 4) லலிதசொரூபினி பிரித்திராஜ் 5) ஜெயவாணி அச்சுதன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஜெயானந்தமூர்த்தி அவர்கள் பெருவாரியான வாக்குகளைப் பெற்றுள்ளார். வடகிழக்கு லண்டன் வேட்பாளர்களில் வெற்றிபெற்றவர்கள்: 1) ஆர்த்தி ஆறுமுகம் 2) சசிதர் மகேஸ்வரன் 3) கவிராஜ் ஷண்முகநாதன் 4) செல்வராஜா செல்லத்துரை 5) கரன் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். தென்மேற் லண்டன் முடிவுகள் வர உள்ளது. அத்துடன் வெளிமாவட்ட தேர்தலை தேர்தல் அணையகம் ர…

    • 10 replies
    • 1.2k views
  21. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் பிரான்ஸ் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கு பிரான்ஸிலிருந்து 10 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக கடந்த 02.05.2010 அன்று நடந்த தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரங்கள். தேர்தல் தொகுதி பாரிஸ் 75 திரு. சிவசுப்பிரமணியம் மகிந்தன் 547 வாக்குகள் திரு. சிவகுரு பாலச்சந்திரன் 165 வாக்குகள் திரு. கிரகரி கிறிஸ்ரியன் 109 வாக்குகள் திருமதி. இராசமலர் குணசேகரலிங்கம் 67 வாக்குகள் செல்லுபடியற்றவை 13 வாக்குகள் மொத்த வாக்குகள் 901 தேர்தல் தொகுதி சென் ஏ மார்ன் 77 எஸ்ஸன் 91 திருமதி.குருபரநாதன் சுபா~pனி 1448 வாக்குகள் செல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.