Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! மாவீரர் நாளை முன்னிட்டு கனடாவில் உள்ள டொரொண்டாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு சட்டத்துக்கு புறம்பாக பேசியதாக திரைப்பட இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட சீமானை இந்தியாவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கனடாவில் உள்ள டொரொண்டாவில் மாவீரர் வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சீமான், பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் இருந்தால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான தூய்மையான நீதி, நிர…

  2. க.பொ.த. உயர்தரப் பரீட்சை (A/L 2009) உயிரியில் பிரிவில் தமிழ் மாணவிக்கு அகில இலங்கை ரீதியில் முதலிடம் Posted by Renu on Thursday, November 26, 2009, 15:08 | 25 Views | இன்று வெளியாகியுள்ள 2009 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளில், கொழும்பு சைவ மங்கையர் கழகத்தில் கல்வி பயின்ற மைதிலி சிவபாதசுந்தரம் என்ற மாணவி அகில இலங்கை ரீதியில் உயிரியில் பிரிவில் (A/L 2009) முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்தநிலையில் தம்மைபோன்று திறமைகளை வெளிக்காட்டியுள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள மாணவர்களுக்கும் அவர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தாம் ஆசிரியர்கள் வழங்கும் பாடங்களை அன்றன்று படித்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அத…

  3. விடுதலைப் புலிகளின் தலைமை செயலகத்தால் தமிழீழ புலனாய்வுப் பிரிவின் சார்பில் நெருடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை. தளபதி ராம் மற்றும் நகுலனால் குழம்பிப் போயுள்ள புலம் பெயர் தமிழீழத்தை, தெளிவுபடுத்தும் அறிக்கையாகவே தமிழீழ புலனாய்வுப் பிரிவால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழ்பேசும் மக்களே, எமது இயக்கத்தின் முன்னாள் தளபதிகளாக இருந்த திரு. ராம் மற்றும் திரு. நகுலன் ஆகியோர்கள் பற்றி அண்மைக் காலமாகப் பல்வேறு வகையான கதைகள் உலாவி வருவதானால், காலத்தின் கட்டாயத் தேவையையும், அவசரத்தையும் கருத்தில் கொண்டு உண்மை நிலவரத்தை மக்களுக்கு விளக்க வேண்டியது எமது கடமை என விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையினராகிய நாங்கள் உணர்கின்றோம்.…

    • 4 replies
    • 1.7k views
  4. தமிழகம் முழுவதும் பிரபாரகன் போஸ்டர்கள் ஈழப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக அனுசரிக்கப்படும் மாவீரர் தினத்தையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினமாக விடுதலைப் புலிகளால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுவரை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் இந்த ஆண்டின் மாவீரர் தின நிகழ்ச்சிகள் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், சென்னையில் மாவீரர் தின நிகழ்ச்சி நடத்தப்படுவது தொடர்பாக நகரின் பல இடங்களில் பிரபாகரன் படங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதேபோல பிரபாகரனை வாழ்த்தி தமிழகத்தின் பல பக…

  5. பிரபாகரன் பேனர் கிழிப்பு: தூத்துக்குடியில் பரபரப்பு! தூத்துக்குடியில் விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் வரும் 27ம் தேதி கொண்டாடப்படுவதை ஒட்டி வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டு கிழிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் இயக்கம் சார்பில் சாரத் என்பவர் தூத்துக்குடி நகரில் பல்வேறு இடங்களில் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் கொண்டாட உத்தேசித்துள்ளனர். இதனையொட்டி தூத்துக்குடி நகரில் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பிரபாகரன் உருவம் பதித்த டிஜிட்டல் விளம்பர பேனர்கள் 15க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்தது. பிரதான சாலையில் இருந்த விளம்பர டிஜிட்டல் போர்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபகாரன் படம் கிழிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழின உணர்வாள…

  6. எனக்கு இதுவரை தோல்வியே இல்லை என்று கூறும் பொன்சேகா, கிளிநொச்சிக்குப் போகவே பயந்து கொண்டிருந்தார். அவரை ஜனாதிபதி ராஜபக்சேதான் சமாதானப்படுத்தி, தைரியப்படுத்தினார் என்று இலங்கை பாதுகாப்புத்தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இலங்கைப் பாதுகாப்புத்தரப்பு வட்டாரத் தகவல்கள் கூறுகையில், எனது இராணுவ வாழ்க்கையில் ஒரு தோல்வியையும் சந்தித்தவன் இல்லை என்று பொன்சேகா கூறியுள்ளார். பயம் என்றால் என்ன என்றே தெரியாதவன் என்றும் கூறியுள்ளார். ஆனால் ஈழப் போர் முடிந்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே கிளிநொச்சிக்குப் சென்ற போது உடன் வர அவர் பயப்பட்டார், அஞ்சினார், தைரியம் இல்லாமல் வர மறுத்தார். போர் முடிந்ததும், ராஜபக்சே கிளிநொச்சி போக விரும்பினார். அ…

  7. என்று மின்னஞசலில் கிடைக்கப்பெற்ற இணைப்பு http://www.yarl.com/forum3/uploads/mp3/nagulan.mp3

    • 33 replies
    • 6.7k views
  8. கபொத உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகளின் படி கணித , விஞ்ஞான பாடங்களில் தமிழ் மாணவர்கள் முதலாம் இடத்தினை பெற்றுள்ளனர். விஞ்ஞானபாடத்தில் கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தினை சேர்ந்த மைதிலி சிவபாத சுந்தரம் என்ற மாணவி பெற்றுள்ளார். கணித பாடத்தில் அன்ரன் கிற்ஸ்ரல் ஜோன்ராஜ் என்ற ஹாட்லி கல்லூரி மாணவர் பெற்றுள்ளார். இதே வேளை கலை, வர்த்தக பாடங்களில் சிங்கள மாணவர்கள் பெற்றுள்ளனர்.

  9. சென்னை: வரலாற்றில் மட்டுமே நாம் படித்த மாவீரன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்னவர்இ பிரபாகரன் மட்டுமே என்று கூறியுள்ளார் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர். இன்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடைய 55வது பிறந்த நாளையொட்டி அவர் கூறுகையில்இ ஒவ்வொரு பூவுக்கும் வாசமிருப்பதைப் போல... ஒவ்வொரு நாளுக்கும் ஒரு அர்த்தமிருக்கிறது. இந்த நாள் மாவீரன் பிறந்த நாள். வரலாற்றில் எத்தனையோ மாவீரர்களைப் பற்றிப் படித்திருக்கிறோம். மாவீரன் என்றால் இந்த சமகாலத்தில் நெப்போலியனை மட்டுமே வரலாறு சொல்லுகிறது. அந்த நெப்போலியன் வரலாற்றைப் படித்தபோதே என் நரம்புகள் புடைத்தன. ஆனால் இன்று ஒரு தமிழனாக... மாவீரன் என்ற வார்த்தைக்கே புதிய அர்த்தத்தைப் பார்க்கிறேன்இ பிரபாகரன் ம…

  10. http://vakthaa.tv/play.php?vid=4846

  11. கடந்த சில மாதங்களில் வவுனியா தடுப்பு முகாம்களில் பணியாற்றுகின்ற இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் பல பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தது 14, 15, 16 வயதான மூன்று தமிழ்ச் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக வவுனியா நீதிபதி முன்னால் ஒக்டோபரில் கூறியுள்ளனர். பல பாலியல் வல்லுறவுகள் தடுப்பு முகாம்களின் வலயம் 2 மற்றும் வலயம் 3 ஆகியவற்றில் நடந்தாலும் வவுனியா மருத்துவமனையில் வைத்து 14 வயதான மனநிலை குன்றிய சிறுமி ஒருவரையும் ராணுவம் கற்பழித்துள்ள விடயம் தெரிய வந்துள்ளதாக தமிழ்நெட் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. புலிகள் இயக்கத்தில் இருந்ததாக கூறப்பட்ட 17 வயதான சிறுமி ஒருவரை புலனாய்வு பிரிவினர் கற்பழித்துள்ளதோடு, அச்சிறுமியை புலிகளை அடைத்து…

  12. மாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் , திருமங்கலம் ,மேலூர் ,சமயனலூர் , மதுரை நகருக்குள்ளும் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக சுவர் ஒட்டிகள் பலமாக ஒட்டப்பட்டு இருந்தது. தமிழக காவல் துறை, அச்சகங்களுக்கு சுவர் ஒட்டிகளை அச்சடித்து தரக்கூடாது என மிரட்டல் விட்டு இருந்தது. அதையும் மீறி சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் சுவர் ஒட்டிகளை பரவலாக எங்கும் ஒட்டினர். இதன் காரணமாக அவ்வியக்கத்தின் பெரும்பாலான தோழர்கள் கைது செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  13. இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா: ரனில் விக்கிரமசிங்கே அறிவிப்பு இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு எதிராக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்தப்போவதாக எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கே இன்று அறிவித்துள்ளார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21523

  14. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளை அமெரிக்காவிலுள்ள விளம்பர நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அடிப்படை செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட குழுவினர் இவ்வார இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தேர்தல் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள இந்த அமெரிக்க விளம்பர நிறுவனத்தை இலங்கைக்கு அழைத்துவருவதற்கான இணைப்புப் பணிகளை அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய முன்னெடுத்துள்ளார். அமைச்சர் டளஸ் அழகப்பெருமவினால் ஜனாதிபதித் தேர்தலுக்காக திட்டமிட…

  15. இராணுவக் காவல்துறை அதிகாரிகளும், சிப்பாய்களும் நேற்றிரவு (25) பின்றிரவு 12.30 அளவில் ஜெனரல் சரத் பொன்சேக்கா தங்கியுள்ள புளஸ் வீதியில் அமைந்துள்ள வீட்டிற்கு அருகே சென்று, அவர் தற்போது பயன்படுத்தும் வாகனத்தை பலாத்காரமாக கொண்டுசெல்வதற்கு முயற்சித்துள்ளனர். ஓய்வுபெற்றுள்ள சரத் பொன்சேக்கா பயன்படுத்துவதற்காக இராணுவத்திற்குச் சொந்தமான சில வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. சரத் பொன்சேக்காவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட சில விடயங்கள் அடங்கிய மனுவொன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய செயற்படுமாறும் சரத் பொன்சேக்காவின் பாதுகாப்பு அதிகாரியொருவர், அங்கு வாகனத்தைக் கைப்பற்ற வந்த இராணுவ …

  16. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 55வது பிறந்தநாள். இதை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் பிரபாகரன் பெயரில் 108 முறை சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆ.அண்ணாத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவீரன் பிரபாகரனின் பிறந்த நாளான இன்று காலை 11 மணிக்கு திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிரபாகரன் பெயரில் 108 முறை சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. உலக தமிழர்கள் அனைவரும் அமைதியாக வாழவும், அடக்கு முறையை எதிர்த்து போராடவும், ஈழ மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்றும் தனி தமிழ் ஈழம் மலர செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ஆ.அண்ணாத்துரை தலைமையில் கூட்டு (பிராத்த…

  17. இலங்கையில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் முடிவுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதே வேளை பரீட்சை முடிவுகள் இன்றைய தினம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilstar.org

  18. தேசியத்தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து – உரை கொளத்தூர் மணி காணொளி] 1989 ஆம் ஆண்டு தமிழீழத்தேசியத்தலைவர் இறந்துவிட்டார் என்று ஊடகங்கள் கூறிய பொழுது தமிழீழம் வந்து தலைவருடன் நிழற்படங்கள் எடுத்து தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று உலகத்துக்கு கூறியது போன்ற வாய்ப்பு மறுபடியும் கிடைக்குமா…? என்று பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார். http://www.meenagam.org/?p=17390 http://www.meenagam.org/?p=17390

  19. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 55வது பிறந்தநாள். இதை முன்னிட்டு உலகெங்கும் உள்ள தமிழின உணர்வாளர்கள் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள். இதேபோல் சேலத்தில் பெரியார் திராவிடக் கழகத்தினர், மனித உரிமைகள் அமைப்பினர், தமிழின உணர்வாளர்கள் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைத்து பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடினர். சேலத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை நேற்று இரவு போலீசார் அப்புறப்படுத்தினர். சில இடங்களில் போலீசாருக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போலீசார் பேனர்களை அப்புறப்படுத்தினாலும், கிச்சிப்பாளையம் என்ற கிராமத்தில் சுமார் 20 இளைஞர்கள் மீண்டும் மீண்டும் பிரபாகரனின் பேனர்களை வைத்து அவ்வழியே செல்லும் பொதுமக்களுக்கு இனி…

  20. இலங்கையின் தென்பகுதி மற்றும் மத்திய பிரதேசங்களில் இன்று காலை 7.45 மணியளவில் நில அதிர்வு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அம்பாந்தோட்டை. பதுளை, திஸ்ஸ்மகரகம, லுஙுனுவெவ ஆகிய மாவட்டங்களில் இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளதாக இலங்கை அனர்த்த முகாமை நிலையம் தெரிவித்துள்ளது.http://www.eelanatham.net/news/important

  21. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தளபதிகளான ராம் மற்றும் நகுலன் பற்றி அண்மைக் காலமாக வெளிவரும் கதைகளின் பின்னணியில் - அவர்களது முக்கியத்துவத்திற்கு அப்பால் அந்தக் கதைகளை வைத்து சிறிலங்கா அரசு தமிழினத்தின் மீது நடாத்த முயலும் உளவியல் போரே முக்கியமானதாகும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை விளக்க அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பாக - விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினது வெளியகப் பணிப்பிரிவின் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் இன்று விடுத்துள்ள அந்த அறிக்கை கீழே முழுமையாகத் தரப்படுகின்றது. அரங்கேறும் உளவியல் போரை ஒன்றுபட்டு முறியடிப்போம்! எமது அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ் பேசும் மக்களே, எமது இயக்கத்தின் மு…

    • 8 replies
    • 5.5k views
  22. மதிப்புக்குரிய தமிழீழ மக்களே,தமிழக உறவுகளே, புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களே, உலகவாழ் எம்முறவுகளே தமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் வானொலியின் மாவீரர்வார சிறப்பு ஒலிபரப்புக்களை அனைத்துலகத்திற்கும் ஒலிக்கும் வண்ணம் புலிகளின்குரல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் எமது இணைய தளத்திலும் செய்கோள் ஊடாகவும் 24மணி நேரமும் புலிகளின்குரல் வானொலியினை நீங்கள் கேட்கலாம். மாவீரர் வார சிறப்பு ஒலிபரப்புகளை தாயக நேரம் அதிகாலை 5மணி தொடக்கம் 22மணி வரை ஒலிக்கவுள்ளது இணைய முகவரி: www.pulikalinkural.com செய்கோள் அலைவரிசை விபரம்: Name: NTR- Tamil Satellite: Eurobird 9 Frequency: 11919 Polarization: Vertical Symbol Rate : 27500 Fec : 3/4 …

    • 0 replies
    • 1.7k views
  23. இந்த முறை தமிழகத்திலும் மாவீரர் தின ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. முத்துக்குமார் உட்பட தமிழீழ மாவீரர்களுக்கு தீபம் ஏற்றுவதற்கு தமிழக மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றன. இந்தனை கலைஞர் அரசு மறைமுகமாக தமிழக காவல்துறையினரை வைத்து விரட்டி வருகின்றது இதனை நெடுமாறன் ஐயா கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு. ’’இல‌ங்கை‌யி‌ல் நடைபெ‌ற்ற போ‌ரி‌‌ல் ‌சி‌ங்கள‌ப்படையா‌ல் படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்ட ஒரு இல‌ட்ச‌த்‌தி‌ற்கு மே‌ற்ப‌ட்ட ஈழ‌த்த‌மிழ‌ர்களு‌க்கு‌ம், போரா‌ளிகளு‌க்கு‌ம் ம‌ற்று‌ம் த‌மி‌ழ்நா‌ட்டிலு‌ம், உலக நாடுக‌ளிலு‌ம் ஈழ‌த் த‌‌மிழ‌ர்களு‌க்காக‌த் ‌தீ‌க்கு‌ளி‌த்து உ‌யி‌‌ர்‌த் ‌தியாக‌ம் செ‌ய்த மு‌த்து‌க்குமா‌ர் உ‌ள்‌ளி‌ட்ட 18 த‌மிழ‌ர்களு‌க்கு‌ம் ‌வீரவண‌க்க‌ம் செலு…

  24. விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்' என்பதுதான் புலிகளின் ஸ்டைல். அந்த வகையில் 'இலங்கையில் மீண்டும் போர் மூளும் - அதுவும் இந்தியாவின் துணையோடு' என்ற ஆச்சரியமான ஒரு கணிப்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் புலிகள் தரப்பில். இவ்வாறு தமிழகத்தின் வார சஞ்சிகையான ஜூனியர் விகடன் தெரிவித்துள்ளது. ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்துள்ள கட்டுரையின் முழுவடிவம்:- நவம்பர் 27 மாவீரர் தினம்! வருடம் தவறாமல் விடுதலைப் புலிகள் தமிழீழத்தில் மட்டும் விமரிசையாக கொண்டாடும் இந்த தினத்தை, இம்முறை உலகெங்கும் கொண்டாடத் தயாராகியிருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். வரலாற்றில் புதிய பதிவாக அமையப் போகிற இந்த வருட மாவீரர் தினம் எத்தகைய திட்டங்களை ஈழ விடிவுக்காக விதைக்கப் போகிறது என கடந்த சில வாரங…

    • 10 replies
    • 1.4k views
  25. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிரணியினரின் சார்பாக சரத்பொன்சேகா மங்கள சமரவீரவின் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - மக்கள் பிரிவு எனும் கட்சியின் கீழ் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற மேற்படி கட்சியின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். http://www.eelanatham.net/news/important

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.