ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142965 topics in this forum
-
நேற்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பினரை அழைத்த எதிரணி கூட்டணியின் உறுப்பினர்கள் தமது ஐக்கிய தேசிய முன்னணியில் இணையுமாறு அழைப்பு விடுத்ததுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினையும் வழங்கியுள்ளனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தோர் அதனை நிராகரித்து விட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய முற்போக்கு முன்னணி சார்பாக திரு மனோ கணேசனும், திரு ரவூப் ஹக்கீம் அவர்களும் இந்த முன்மொழிவினை கொண்டு வந்து தம்முடன் பேசியதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.- ஈழநாதம்
-
- 0 replies
- 574 views
-
-
அவுஸ்ரேலிய கடற்பகுதியில் கொகொஸ் தீவுக்கு அருகே மூழ்கிய தமிழ் அகதிகளின் படகு விடயமாக அவுஸ்ரேலிய அரசாங்கம் விசாரணையினை ஆரம்பித்துள்ளது. இந்த படகில் சென்றவர்கள் 27 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். மூன்று இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஏனைய 09 பேர் காணாமல் போயுள்ளனர்,இந்த ஒன்பது பேரில் 13, 14 வயதுடைய சிறார்கள் என்றும் கூறப்படுகின்றது. இதே நேரம் 72 மணித்தியாலமாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட அவுஸ்ரேலிய கடலோர பாதுகாப்பு வான்படையினர் தமது தேடுதல் பணியினை முடித்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த படகு அவுஸ்ரேலியாவை நோக்கியே பயணித்து கொண்டிருந்ததாகவும் ஆனால் இந்த படகு வழமைபோன்று இந்தோனேசியா, மலேசியா கடற்பகுதியில் இருந்து புறப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது சிலவேளை இந்தியா அ…
-
- 0 replies
- 535 views
-
-
கடந்த மே மாதம் புது மாத்தளன் பகுதியினை இராணுவத்தினர் ஆக்கிரமித்த போது பதுங்கு குழியில் பாதுகாப்பிற்காக இருந்த காயமடைந்த தனது மனைவி இராணுவத்தினரால் சிகிச்சைக்காக அநுராதபுரத்திற்குக் கொண்டு சென்ற பின்பு அவர் இருக்குமிடம் தெரியாது உள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.அவரைக் கண்டு பிடிப்பதற்கு அவரது கணவன் சுந்தரலிங்கம் தயாபரன் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் உதவியை நாடியுள்ளார். இது தொடர்பாக சுந்தரலிங்கம் தயாபரன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். தற்போது அவர் வவுனியா நெளுக்குளம் பிரதேசத்தில், அம்மன்கோவில் வீதி, சாம்பல் தோட்டத்தி்ல் இருக்கின்றார். அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "கிளிநொச்சி டி…
-
- 0 replies
- 943 views
-
-
http://clerk.house.gov/evs/2009/roll854.xml
-
- 0 replies
- 1k views
-
-
மஹிந்த இராஜபக்ஷ அவர்கள் திடீரென் இன்று வன்னிக்கு சென்றுள்ளார். அங்கு முல்லைதீவு கிளினொச்சி இராணுவ அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய பின்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் முன்பு இருந்த சில முக்கியமான இடங்களையும் பார்வையிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று சரத் பொன்சேகாவுக்கு விசாரணை நடைபெறுவதால் தான் தான் முப்படைகளின் தளபதி என காட்டுவதற்கு அங்கு சென்றிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. அத்துடன் சரத் மீதான விசாரணைகள் படையினரை உளவியல் ரீதியாக பாதிப்படையாமல் பார்த்து கொள்வதும் இந்த வன்னி விஜயத்தின் நோக்காக இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.http://www.eelanatham.net/news/important
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் வா(டு)ழும் ஈழத் தமிழர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பை மறவன்புலவு க. சச்சிதானந்தன் தொகுத்துக் கூறியுள்ளார். 1. கள நிலை! 1.1 அகதிகளாக வாழும் காலப் பகுதி 26 ஆண்டுகள் (1983-2009) 1.2 முகாம்களின் எண்ணிக்கை: 26 மாவட்டங்களில் 115. 1.3 முகாம்களுள் வாழ்வோர் தொகை: 19,340 குடும்பங்களைச் சேர்ந்த 73,241 பேர். (2.11.2009) 1.4 முகாம்களுக்கு வெளியே 11,288 குடும்பங்களைச் சேர்ந்த 31,802 பேர். (2.11.2009). 1.5 காவல்துறையில் பதிவுபெற்ற ஏறத்தாழ 1,00,000 பேர் வாடகைக் குடியிருப்புகளில் தமிழகமெங்கும். 1.6 யாவரும் ஈழத் தமிழர். 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் சிங்கள இன வெறித் தாக்குதல்களால் உயிரச்சம் மேவத…
-
- 0 replies
- 721 views
-
-
இலங்கைப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தகால நிகழ்வுகள் பற்றி தற்போது வாஷிங்ரனில் தங்கியுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய முப்படைகளின் தலைமை அதிகாரியு மான ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் இன்று அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கான உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இந்த விசாரணை உள் நாட்டு பாதுகாப்பு திணைக்களம் DHS மற்றும் உள் நாட்டு குடிவரவு, சுங்க கட்டுப்பாட்டு திணைக்களம், உள்ளிட்ட சட்ட அதிகாரிகளால் நடத்தப்படுமென் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் முறியடிப்பு முயற்சி இந்த விசாரணைகளை நிறுத்துவதற்கு அல்லது அதனை முறியடிப்பதற்கு இலங்கை அரசு இராஜதந்திர ரீதியில் பகீரதப் பி…
-
- 4 replies
- 1k views
-
-
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) செயலாளர் நாயகமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TNA) பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இணையமொன்றிற்கு வழங்கிய நீண்ட நேர்காணலின் ஒரு பகுதி இங்கு தரப்படுகிறது. வன்னிப் யுத்தம் நடைபெறற நாட்களில் புலிகள் மக்களை வெளியேறவிடாமல் தடுத்துவைத்திருந்தனர் என்றும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. புலிகள் இவ்வாறு நடந்துகொண்டது குறித்து உங்கள் கருத்து என்ன? இது அவர்களின் பலவீனம். பாரிய இராணுவ பலத்தை வைத்திருந்த போதும் கூட, அந்த இராணுவ பலத்தை மக்கள் சார்ந்த அரசியல் பலமாக மாற்றாமல், வெறுமனே ஒரு இராணுவ வெற்றியில் நம்பிக்கை கொண்டிருந்ததனுடைய விளைவே அவர்களை அந்த சூழ்நிலைக்குக் கொண்டுசென்றது எனலாம். இராணு…
-
- 105 replies
- 7.5k views
-
-
பிரித்தானியாவிற்கு வருகை தந்திருக்கும் ஐக்கியதேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் DR.ஜெயலத் ஜெயவர்த்தன அவர்களை சந்தித்து இன்றைய அரசியல் நிலை பற்றியும், இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் அவரின் நிலைப்பாடு பற்றியும் சிறு நேர்காணல் ஒன்றினை வருடல் இணையம் சார்பாக மேற்கொண்டிருந்தோம். 01-11-2009 அன்று வடமேற்கு லண்டன் பகுதியில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று மேற்கொண்ட இந்த நேர்காணலில் அவர் பலதரப்பட்ட தனது தரப்பு மற்றும் ஐக்கியதேசியக் கட்சியின் சார்பில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். பலதரப்பட்ட எமது கேழ்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காது தனது தரப்பு தகவல்களையும் நியாயங்களையும் வெளிப்படுத்தும் முகமாக பதிலளித்ததையே காணக்கூடியதாக இருந்தது. இராஜதந்திர ரீதியில் நகர்ந்து …
-
- 2 replies
- 791 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் அணி ஒன்று அரசாங்கம் தமிழ் மக்களுக்கு செய்யும் நிவாரண, புனர்வாழ்வு , மீழ் குடியமர்வு நடவடிக்கைகளில் தாம் திருப்தியடைவதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக இலங்கை அரச தொலைகாட்சியில் அவர்களது அரசாங்கத்தை பாராட்டி நன்றி தெரிவிக்கும் காட்சியும் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பாக மேலதிக தகவல் வருமாறு, அண்மையில் வெளி நாடுகளில் இருந்து அழைக்கப்பட்ட புலம்பெயர் தமிழர்கள் சிலர் வவுனியா முகாம் ஒன்றிற்கு கூட்டி செல்லப்பட்டனர். இவர்கள் டென்மார்க், ஜேர்மனி, இலண்டன், அமெரிக்கா ஆகிய இடங்களில் இருந்து வந்தவர்களாம். இவர்களை வடக்கின் வசந்தம் திட்ட இணைப்பாளர் சந்திரா பெனாண்டோ அவர்கள் அழைத்து சென்று ஒரு சில இடங்களை காட்டினார். இதன்பின்னர் வெளினாடுகளில் இருந்து வந்த தமிழர்க…
-
- 2 replies
- 661 views
-
-
வலுக்கிறது வெ(ற்)றிக்கூட்டணி மோதல் – விகடன் சிறீலங்காவில் தற்பொழுது நடைபெற்றுவரும் கூட்டணி மோதல்களைப்பற்றி தமிழ்நாட்டு சஞ்சிகை விகடனில் வந்த கட்டுரை. ”எதிரி ஆகிறார் தளபதி’ என்ற தலைப்பில், மகிந்தா ராஜபக்ஷேவுக்கும் சரத் ஃபொன்சேகாவுக்கும் இலங்கைக் களத்தில் அரங்கேறி வரும் உள்குத்து பகை பற்றி 28.10.2008 தேதியிட்ட ஜூ.வி-யில் விரிவான கவர் ஸ்டோரி வெளியாகியிருந்தது. அதில் நாம் குறிப்பிட்டிருந்தபடியே அடுத்தடுத்து ஃபொன்சேகா சில மூவ்களை நகர்த்த… சூடாகிக் கிடக்கிறது ராஜபக்ஷே தரப்பு! விடுதலைப் புலிகளுடனான போரில் சகல போர் மரபுகளையும் மீறி லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றழித்த இவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் நடத்தி வரும் முயற்சியும் இதன் ம…
-
- 2 replies
- 1.3k views
-
-
நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது அதற்கு நன்றி. அதே நேரம் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவும் வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் மூவின மக்களும் சந்தோசமாக வாழவேண்டிய நிலை வரவேண்டும் அதற்காக நாம் உறுதி பூணுவோம் இவ்வாறு கூறினார் மனோ கணேசன். நேற்று எதிரணிகளின் கூட்டமைப்பு அங்குராற்பண வைபவத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். ஒன்று பட்ட இலங்கைக்குள் அனைவரும் ஒற்றுமையாக வாழ புதிய அதிரணி பாடுபடும் எனவும் அதற்காக வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் ஒற்றுமையினை தான் பெற்று தருவேன் எனவும் உறுதி கூறினார் திரு மனோ கணேசன். ஐக்கிய இலங்கைக்குள் மூவின மக்களும் ஒன்றுபட்டு எப்படி வாழ்வார்கள் என்ன தீர்வு என்பதனை மனோ அவர்கள் குறிப்பிடவில்லை. http://www.eelanatham.net/news
-
- 3 replies
- 669 views
-
-
சரத் பொன்சேகாவுக்கு இன்று இடம்பெறுவதாக இருந்த விசாரணை அமெரிக்காவில் இடம்பெறவில்லை எனவும் அவர் திட்டமிட்டபடி நாளை அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வருவதாகவும் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி இன்று ஜே.வி.பி இனர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா நாளை வருவதாக எற்கனவே நிகழ்ச்சி நிரலில் உள்ளதாகவும் அதன்படி அவர் வருவார் எனவும் பாது காப்பு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.http://www.eelanatham.net/news/important
-
- 1 reply
- 892 views
-
-
இலங்கைப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தகால நிகழ்வுகள் பற்றி தற்போது வாஷிங்ரனில் தங்கியுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய முப்படைகளின் தலைமை அதிகாரியு மான ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் இன்று அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கான உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இந்த விசாரணை உள் நாட்டு பாதுகாப்பு திணைக்களம் DHS மற்றும் உள் நாட்டு குடிவரவு, சுங்க கட்டுப்பாட்டு திணைக்களம், உள்ளிட்ட சட்ட அதிகாரிகளால் நடத்தப்படுமென் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் முறியடிப்பு முயற்சி இந்த விசாரணைகளை நிறுத்துவதற்கு அல்லது அதனை முறியடிப்பதற்கு இலங்கை அரசு இராஜதந்திர ரீதியில் பகீரதப் பிரயத்தனங்…
-
- 1 reply
- 602 views
-
-
இலங்கைத் தமிழர்கள் பெருமளவில் ஆஸ்திரேலியாவை நோக்கி வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில், ஆஸ்திரேலியாவிலிருந்து சிறப்புத் தூதர் ஒருவர் கொழும்பு விரைகிறார். முன்னாள் துணைத் தூதர் ஜான் மெக்கார்த்தி தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் கூறுகையில், ஓரிரு நாட்களில் மெக்கார்த்தியை சந்தித்துப் பேசி இந்தப் பயணம் குறித்து விவாதிப்பேன். உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னர் இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்களில் படகுகளில் பெருமளவிலானோர் அகதிகளாக வெளியேறுவதும் ஒன்று என்பதை இலங்கை தரப்புக்குத் தெரிய வைப்போம். இதை சமாளிக்க தேவையான உதவிகளையும் இலங்கைக்கு செய்வோம். இதை மெக்கார்த்தி தனது பயணத்தின்போது வலியுறுத்துவார். இலங்கையிலிருந…
-
- 0 replies
- 704 views
-
-
புதிய ஜனநாயகம்: கல்வியறிவு பெற்றவர்கள் எனக் கருதப்படும் யாழ்ப்பாணத் தமிழர்கள், விடுதலைப் புலிகளின் சர்வாதிகாரப் போக்கை எந்த அடிப்படையில் சகித்துக் கொண்டார்கள்? சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை என்ற அபாயம் காரணமாகவா? இல்லை, தமிழ் சமூகமே ஜனநாயக மறுப்புத் தன்மையுடையதாய் இருந்து வருகிறதா? சிவசேகரம்: எந்த ஒரு சமூகத்தை எடுத்துக் கொண்டாலும் கல்வியறிவு என்பது உயர் நடுத்தர வர்க்க, நடுத்தர வர்க்கங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கின்றது. யாழ்ப்பாண சமூகத்திலும் அப்படித் தான். யாழ்ப்பாணத்துப் பொருளாதாரமே முதலாளித்துவப் பொருளாதாரம் அல்ல. சிங்கள முதலாளிகளோடு ஒப்பிடும் போது மஹாராஜா போன்ற ஓரிருவரைத் தான் யாழ்ப்பாணத்து முதலாளிகளாகச் சொல்ல முடியும். உற்பத்தியிலோ வணிகத்திலோ யாழ்ப்பாண சமூகம…
-
- 0 replies
- 969 views
-
-
தமிழக முகாம்களுக்கு…. தமிழக முகாம்களில் சிறந்த பாதுகாப்புடன் நலிந்து வாழும் ஈழத்தமிழருக்கு என்னென்ன செய்யவேண்டும் என்ற மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களின் ஆய்வறிக்கை. 1.0 கள நிலை 1.1 அகதிகளாக வாழும் காலப் பகுதி 26 ஆண்டுகள் (1983-2009) 1.2 முகாம்களின் எண்ணிக்கை: 26 மாவட்டங்களில் 115. 1.3 முகாம்களுள் வாழ்வோர் தொகை: 19,340 குடும்பங்களைச் சேர்ந்த 73,241 பேர். (2.11.2009) 1.4 முகாம்களுக்கு வெளியே 11,288 குடும்பங்களைச் சேர்ந்த 31,802 பேர். (2.11.2009). 1.5 காவல்துறையில் பதிவுபெற்ற ஏறத்தாழ 100,000 பேர் வாடகைக் குடியிருப்புகளில் தமிழகமெங்கும். 1.4 யாவரும் ஈழத் தமிழர். 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் சிங்கள இன வெறித் தாக்குதல்களால் உயிரச்சம் மேவத் தப்பி வந…
-
- 0 replies
- 510 views
-
-
நிறைவேற்று அதிகாரம் துரத்தியடிக்கப்படுவதுடன் மக்கள் அதிகாரம் கொண்ட அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதே இன்று உதயமாகியிருக்கும் முன்னணியின் குறிக்கோளாகும் அத்தோடு குடும்ப அதிகாரத்திற்கு முடிவுகட்டப்படும் என்று தெரிவித்தார். என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணி அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. இதற்குத் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெர்pவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும். அதில் சகலரும் சகல உ,மைகளையும் பெற்றவர்களாய் வாழ வேண்டும் என்ற கோ…
-
- 1 reply
- 476 views
-
-
மரம் ஓய்வை நாடினாலும் காற்று விடுவதில்லை என்றார் மாவோ. தமிழர்கள் எத்தனை அமைதியாக இருந்தாலும் தன் வால் வேலையை கருணாநிதி விடமாட்டார் என்பது மீண்டும் ஊர்ஜிதமாகியிருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழ அகதிகளின் துயரத்தைப்பற்றி எதுவுமே தெரியாமல் இருந்துவிட்டார் போலிருக்கிறது கருணாநிதி. அவர் கண்ணை திறப்பதற்காக ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது ஒரு ஆங்கில வார ஏட்டின் தமிழ் பதிப்பு. வாழ்த்துக்கூட்டமோ பிரிவ்யூ காட்சியோ இல்லாத ஒரு நல்ல நாளில் அவசரக்கூட்டமொன்றை நடத்தியிருக்கிறார் கலைஞர். கருணாநிதிக்கான வாழ்த்துப்பா ஒன்றுடன் இணைக்கப்பட்ட அறிக்கை ஒன்று சாத்தூர் ராமச்சந்திரனால் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் தமிழக அரசால் பனிரெண்டு கோடி பணம் அகதிகள் நலனுக்காக ஒதுக்கப்பட்டிருப்…
-
- 0 replies
- 691 views
-
-
இந்திய மேற்குலக உடன்பாடு முதலாளித்துவத்தின் வளர்ச்சியடந்த நிலையில் ஏகாதிபத்தியங்கள் உலகைப் பிராந்திய ரீதியில் தமக்குள் பங்கிட்டுக் கொள்ளும் என்பது கம்யூனிசியவாதிகளின் கருத்து. இந்த ரீதியில் இலங்கை இந்தியாவின் வல்லாதிக்கத்துள் வரவேண்டும் என்பது மறைந்த இந்தியப் பிரதமர் இந்திராகந்தியின் விருப்பம். இதற்கு சில மேற்குலக நாடுகள் உடன்பட்டிருந்தன. இந்த அடிப்படையில்தான் வன்னியில் இவ்வாண்டின மேமாதமளவில் நடந்த மனிதப் பேரழிவைத் தவிர்க்க சில மேற்குலக நாடுகள் மேற்கொண்ட முயற்ச்சிகளை இந்தியாவால் தடுக்க முடிந்தது. இந்த அநியாயமான் அக்கிரமத்தை இந்தியா தன்னை விட்டால் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ யாருமில்லை என்று இப்போது தமிழர்களுக்கு தெரிவிக்க முயல்கிறது. ஆனால் மேற்குலக நாடுகள் இலங்கை விவகாரத…
-
- 0 replies
- 852 views
-
-
ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைகல நாதன், சிவாஜி லிங்கம் ஆகியோர் மீது இன்று மதியமள்வில் கட்டு நாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கை வந்த இவர்களை வானூர்தி நிலையத்தில் வைத்து இலங்கை குற்ற புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 804 views
-
-
This post comes from the Commonwealth Conversation website, which is the largest public consultation ever undertaken about the future of the Commonwealth. http://peoplesforum.britishcouncil.org/2009/08/19/should-sri-lanka-be-suspended-from-the-commonwealth/ VOTE YES
-
- 2 replies
- 852 views
-
-
நேற்று பாராளுமன்றத்தில் எதிரணிகளின் கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணி அங்குராற்பண வைபவம் இடம்பெற்றது. இதில் 12 கட்சிகள் பங்கெடுத்து கொண்டுள்ளன. இந்த எதிரணி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரச கட்சிக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அணி திரண்டுள்ள எதிர்க்கட்சிகள் அடங்கிய ஐக்கிய தேசிய முன்னணி என்பது குறிப்பிடதக்கது. இந்த கூட்டு முன்னணியின் நோக்கம் பலம் இழந்து போயுள்ள ஐக்கிய தேசிய கட்சியும் மகிந்த எதிர்ப்பாளர்களும் கூட்டிய கூட்டமைப்பு. ஆனால் இதில் சிறுபான்மை இனங்கள் பற்றிய சிந்தனை எதுவுமே இல்லை. இந்த கூட்டு முன்னணியில் பேசிய மனோ கணேசன் ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் சமத்துவமாக வாழ கூட்டு முன்னணி உழைக்கும் என குறிப்பிட்டார். இந்…
-
- 0 replies
- 527 views
-
-
இலங்கை அரசு தமிழ் மக்களிற்கு எதிரான போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா தனது அறிக்கையில் சுட்டி காட்டி இருந்தது அதனை இலங்கை அரசு வாசிக்காமலே உடன் மறுத்திருந்தது. பின்னர் அந்த அறிக்கைகளை கவனமாக வாசித்த பின்னர்தான் அவர்கள் பீதியடைந்தனர். அதன் பின்னர் தாமே அந்த உரிமை மீறல்கள் பற்றி உள் நாட்டில் விசாரிக்க போவதாக மகிந்த அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும் அதனை சர்வதேச மனித உரிமை ஸ்தாபனங்களான அனைத்துலக அபைய ஸ்தாபனம், மனித உரிமை கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியன மகிந்த அவர்களின் உள் நாட்டு விசாரணையினை ஏற்று கொள்ள முடியாது எனவும் காசா பாணியிலான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகுழுவினை அமைத்து அவர்கள் தான் விசாரிக்கவேண்டும் எனவும் வாதிட்டு வருகின்றனர். இந்…
-
- 5 replies
- 979 views
-
-
ஈழப் போரின்போது நடைபெற்ற போர்க் குற்றம் தொடர்பாக, கோத்தபயா ராஜபக்சேவுக்கு எதிரான ஆதாரங்களை வழங்குமாறு அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பொன்சேகாவுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதுதொடர்பாக வருகிற 4ம் தேதி விசாரணைக்கு வருமாறும் அழைத்துள்ளனர். இதனால் இலங்கையில் பலத்த பீதி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ராஜபக்சே சகோதரர்கள் பெரும் டென்ஷனில் உள்ளனர். தங்களுக்கு எதிராக பொன்சேகா போட்டுக் கொடுத்து விடுவாரோ என்ற அச்சம் அவர்களிடம் எழுந்துள்ளது. ஆனால் தான் யாரையும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார் பொன்சேகா. இதன் மூலம், ராஜபக்சே சகோதரர்களுடன் சமரசமாகப் போக அவர் முடிவெடுத்திருப்பதாக உணரப்படுகிறது. அமெரிக்காவில் தங்கியுள்ள பொன்சேகாவை, அமெரிக்காவிலுள்ள …
-
- 2 replies
- 1.2k views
-