ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
-
- 45 replies
- 6.6k views
-
-
மிகப்பெரிய பட்டாளத்துடன் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கலந்துகொள்வார் என்று முன்னர் வெளியான செய்திகளுக்கு மாறாக இப்போது அவர் அக்கூட்டத் தொடரில் கலந்துகொள்ளப் போவதில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. மகிந்தவுக்குப் பதிலாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சிறிய குழுவினருடன் ஐ.நா. கூட்டத்தொடரில் கலந்துகொள்ள உள்ளார் எனக் கூறப்படுகின்றது. தேசிய விடுதலை முன்னணி கட்சித் தலைவர் விமல் வீரவன்ச, துணைப் படைக் குழுத் தலைவரும் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றிய படை அதிகாரிகள் உள்ளிட்ட 80 பேர் கொண்ட குழு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் நியூயோர்க் செல்ல உள்ளதாக ஆங்கில செய்தித…
-
- 0 replies
- 312 views
-
-
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் 12 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் திருத்தப்பட உள்ளன என சிறிலங்கா பரீட்சைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்குகின்றன. செப்ரெம்பர் மாதம் 10 ஆம் நாள் வரையில் இரு கட்டங்களாக அது தொடரும். இந்தப் பணிக்கு என நாடு முழுவதும் 12 ஆயிரம் மதிப்பீட்டாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 200 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார். மதிப்பீட்டுப் பணிகளின் தொடக்க கட்டத்தில் கலை மற்றும் வர்த்தக பாடங்களுக்கான விடைத்தாள்களே யாழ்ப்பாணத்தில் மதிப்பீடு செய்யப்பட உள்ளன. திருத்தவேண்டிய விடைத்தாள்கள் எல்லாம் நே…
-
- 0 replies
- 413 views
-
-
சிங்களப் படையினரால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும் காணொலி ஆபிரிக்க நாடு ஒன்றிலோ அல்லது லத்தீன் அமெரிக்க நாடு ஒன்றிலோ எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில வார ஏடு திரிபுபடுத்தி கட்டுரை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 322 views
-
-
-
- 14 replies
- 3.1k views
-
-
நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சர் எரிச் சொல்ஹெய்ம் விடுத்துள்ள கருத்துக்களுக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. செனல்‐4 வில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட வீடியோக் காட்சிகள் தொடர்பில் எரிச் சொல்ஹெய்ம் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பெரும் ஏமாற்றமளிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நோர்வே அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்களில் ஒருவரான எரிச் சொல்ஹெய்ம் போன்றவர்கள் வெளியிடும் கருத்துக்களை கவனத்திற் கொள்ளாதிருக்க முடியாதென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார். நோர்வே அமைச்சரினால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் விரைவில் விளக்கம் அளிக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக ரீதியில் தெரிவ…
-
- 1 reply
- 698 views
-
-
கொழும்பு: இந்திய கடலோரக் காவல் படையினர் இதுவரை பயன்படுத்தி வந்த விக்ரஹா என்ற கடலோர ரோந்துக் கப்பல், இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைப் போருக்குப் பின்னர் இந்தியா வழங்கியுள்ள முதல் பகிரங்க உதவி இது என்பது குறிப்பிடத்தக்கது. திரிகோணமலையில் நடந்த நிகழ்ச்சியில் இந்தக் கப்பலை கோத்தபயா ராஜபக்சே தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், எஸ்.எல்.என்.எஸ். சயுரலா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கப்பலை வழங்கியதற்காக இந்தியாவுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையால், இரு நாடுகளின் உறவுகளும் மேம்படும் என்றார். இந்திய கடலோரக் காவல் படை இந்தக் கப்பலை விக்ரஹா என்ற பெயரில் கடந்த 1990ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வந்தது. மும்பையில் இந்தக் கப்பல்…
-
- 2 replies
- 908 views
-
-
26/08/2009, 14:58 மூன்று சாரணர்களால் தெவேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை முனைக்கு வரைக்குமான சமாதான பாத யாத்திரை தெவேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை முனைக்கு வரை சமாதான பாத யாத்திரையை ஒன்றை மூன்று சாரணர்கள் மேற்கொண்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை மாத்தறையில் ஆரம்பமான சமாதான யாத்திரையில் பி.எல். ஹசன் சணங்க, காந்த குணவர்த்தனா, பிரசாத் மஞ்சுல ஆகிய மூன்று சிங்கள சாரணர்களே இந்தப் பாத யாத்திரையை முன்னெடுக்கின்றனர். மாத்தறைக்கும் பருத்தித்துறைக்கும் இடையிலான தூரம் 480 கிலோ மீற்றர். எனினும் இவர்கள் 600 கிலோ மீற்றர் தூரத்தை 22 நாட்களில் நடந்து பருத்தித்துறை முனையை அடைவர். இவர்கள் நடை யாத்திரையில் ஆலயங்கள் மற்றும் காவல்நிலையம், இராணுவ முகாங்களில் தங்கியிருந…
-
- 3 replies
- 702 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம மக்கள் காணிகளை வேறு பிரதேசங்களிலிருந்து வரும் சிங்களவர்களினால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. பரம்பரை பரம்பரையாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்துவரும் காணிகளே இவ்வாறு அபகரிக்கப்படுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இவ்வாறு காணிகளை அபகரிப்பவர்களில் ஊர்காவற்படை மற்றும் காவல்துறை ஊழியர்களும் உள்ளனர். அத்துடன், இதுவரை சுமார் 400 ஏக்கர் காணி நிலப்பரப்பு இவ்வாறு பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பலவந்தாக காணிகள் அபகரிக்கப்படுகின்றமை தொடர்பாக பிரதேச செயலர் மற்றும் அம்பாறை காவல்துறையினருக்கு காணி உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ள போதிலும் இதுகுறித…
-
- 1 reply
- 554 views
-
-
http://www.youtube.com/watch?v=Jb5o_MHqxIg...player_embedded இந்த வீடியோ கிளிப் உண்மையா பொய்யா என்பதை விட இதன் பின்னணியில் பல உண்மைச்சம்பவங்கள் உள்ளன. போர் நடந்து கொண்டிருந்த போது அப்பகுதிகளுக்கு சுதந்திரமான ஊடகவியலாளர்களோ கண்காணிப்பாளர்களோ எவரும் செல்ல முடியாததாக தடுக்கப்பட்டிருந்தார்கள். அப்பிரதேசத்திலிருந்து இப்போது இவ்வாறான ஒரு வீடியோ கிளிப் வந்திருக்கிறது. இரண்டாவது இது ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு. இதனை வெறுமனே நிராகரிப்பதை விட்டு விட்டு இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு இது போலியானதா இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டும். இது போலியானது என்று சொல்லி விடுவது மட்டும் போதுமான பதிலாக இருக்காது. வன்னியில் கடந்த நவம்பரில் இறுதியில் இறுதிப் போர் ஆரம்பமாகியதில் இரு…
-
- 1 reply
- 755 views
-
-
வணங்கா மண் நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் தந்த தகவலின் அடிப்படையில் அவை அடுத்த வாரம் வன்னி மக்களுக்கு விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கை அரசின் வரி மற்றும் கட்டணங்கள் என பெருந்தொகையான பணம் செலுத்தப்பட்ட பின்னரே அவை விடுவிக்கப்பட்டதாகவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் தெரிவித்தனர். எப்படியாயினும் இப்பொருட்கள் மிகவிரைவில் வன்னி சென்று சேரும் என தற்போது நம்பிக்கை வந்துள்ளது. http://appaa.com/index.php?option=com_cont...4&Itemid=61
-
- 1 reply
- 656 views
-
-
நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட உறவுகள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு இன்றோடு மூன்று மாதங்களுக்கு மேலாகின்றது.இப்போதும் அவர்களின் வாழ்க்கை கிழிந்த கந்தல் துணியாக முட்கம்பி வேலிகளில் தொங்கிக்கொண்டிருக்கிறது. அவர்களின் கண்ணீர், மழை வெள்ளமாக மாறி அவர்களையே மீண்டும் அதில் மூழ்கவைத்தகொடுமை சில வாரங்களுக்கு முன் நடந்தேறியது.இனியும் தொடரும்.இதைக்காண்பாரும் இல்லை.கேட்பாரும் இல்லை.குரல் கொடுப்பாரும் இல்லை.இதுதான் மானதோடும் வீரத்தோடும் வாழ்ந்த ஈழத்தமிழனின் இன்றைய நிலை. இது இப்படியிருக்க,சிறிலங்கா பாசிச ராணுவ அரசின் திரைமறைவு படுகொலை அவலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. உலகெங்கிலும் இதுவரை நிகழ்ந்திராத கேவலமான போர்க்குற்றங்களை புரிந்த "சிற…
-
- 1 reply
- 1.3k views
-
-
Channel 4 News shows footage claimed to show Sri Lankan forces executing Tamils earlier this year. Jonathan Miller reports. Screenshot from footage Just three months after the Sri Lankan government declared the country liberated from the Tamil Tigers, video footage has emerged apparently showing government troops summarily executing Tamils. Journalists for Democracy in Sri Lanka, which obtained the material, said it was filmed in January - when the international media were prevented by the Sri Lankan government from covering the conflict zone. Tonight, the Sri Lankan High Commission denied the government had carried out atrocities against the Tamil commun…
-
- 46 replies
- 5.1k views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கான போராட்டங்களில் பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் தனித்தனியாகவும் கூட்டாகவும் ஈடுபட்டுவந்தன. இந்நிலையில் அந்தப் போராட்டத்தில் ஒரு தேக்கநிலை. அந்த நேரத்தில்தான் எம்.எஸ்.சுவாமிநாதன் ‘வடக்கில் வசந்தம்’ என்ற திட்டத்தின் பொறுப்பை ஏற்கக் கூடாது என்று போராட்ட ஆயுதத்தைக் கையில் எடுத்தது சீமானின் ‘நாம் தமிழர்’ இயக்கம். அடுத்த போராட்டத்திற்குத் தயாராக இருந்த அவரை வளசரவாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். “எம்.எஸ்.சுவாமிநாதனை இலங்கை ‘வடக்கில் வசந்தம்’ என்ற திட்டத்தில் பங்கேற்காமல் தடுத்தது நாம் தமிழர் இயக்கம். நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும், அவரது உதவியாளர்கள் எங்களைச் சந்தித்து எம்.எஸ்.சுவாமிநாதன் நிலையைத் தெரிவித்தனர். நம் சொந்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐக்கிய நாடுகள் சபை பொதுக் கூட்டத்துக்காக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் அமெரிக்காவுக்கு மேற்கொள்ள உள்ள பயணத்திற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மகிந்தவின் குழுவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட படையினரும் உள்ளடக்கப்பட்டிருப்பதால் இந்த நடவடிக்கை அவசியம் என அது தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலறி கிளின்ரன், சட்ட மா அதிபர் எரிக் கோல்டர், சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டெனன்ட் ஆகியோருக்கு மனுக்களையும் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு அனுப்பி வைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தின்போது சிறிலங்காப் படையினரையும் அழைத்துவந்து அவர்களி…
-
- 0 replies
- 295 views
-
-
ஊடகவியலாளர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் உலகிலேயே மெக்சிக்கோவுக்கு அடுத்தபடியாக இலங்கையிலேயே நடைபெறுகின்றது என 26 ஆவது அனைத்துலக காணாமல் போனோர் நாளான இன்று சனிக்கிழமை எல்லைகளற்ற ஊடவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. காணாமல் போன ஊடகவியலாளர்களைத் தேடும் பணிகள் அதிகமாக மேற்கொள்ளப்படுவதில்லை என்று அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை முக்கிய பணியாகக் கொண்டு காணாமல்போன ஊடகவியலாளர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அது கோரியுள்ளது. ஊடகவியலாளர்கள் அரச முகவர்களாலோ உள்ளூர் குற்றவாளிகளாலோ கடத்தப்பட்டாலும் அவர்கள் அனைவரும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் என்பதையே அச்செயல்கள் காட்டுகின்றன. ஊடகவியலாளர்களைக் கடத்துவதற்கு அவர்கள் கொடூரமான …
-
- 0 replies
- 327 views
-
-
அமெரிக்காவில் மிகப் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான CNN இல் இலங்கை இராணுவம் தமிழ் இளைஞர்களைச் சுட்டுக்கொல்லும் கோரக் காட்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன. அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்லவை தொடர்புகொண்டு CNN கேட்ட கேள்விகளால், இலங்கை அரசின் நம்பகத்தன்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனித உரிமை ஆர்வலர், இலங்கை அரசாங்கம் பொய்கூறிவருவதாக நேரடியாகவே தாக்கியுள்ளார். அதன் காணொளி இணைக்கப்பட்டுள்ளது. http://appaa.com/index.php?option=com_cont...4&Itemid=61
-
- 2 replies
- 1k views
-
-
மஹிந்த ராஜபக்~வின் விம்பத்தை பெரிதாக சித்தரிக்கும் வகையில் திரைப்படமொன்றைத் தயாரிக்க அரசாங்க தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆரியரத்ன ஆதுகல தயாராகிவருவதாக அறியப்படுகிறது. இரண்டாம் ராஜசிங்க மன்னனின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி, அதனுடன் மஹிந்த ராஜபக்ஸவை சித்தரித்து தயாரிக்கப்படவுள்ள இத்திரைப்படத்திற்காக 9 கோடி ரூபா செலவிட திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் புந்தி கிர்திசேன திரைப்படத்தின் தயாரிப்பாளராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். கூட்டுத்தாபனத்தில் நிதி நெருக்கடியுள்ள நிலையில், இவ்வாறு பாரிய செலவில் திரைப்படமொன்றைத் தயாரிக்க கூட்டுத்தாபனம் முயற்சி மேற்கொள்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. http://appaa.com/index.php?option=com…
-
- 0 replies
- 683 views
-
-
இந்திய அரசு இலங்கைக்கு வழங்கிய ஆயுதங்கள் தமிழர்கள் மீதே பாய்ந்துள்ளன. களத்தில் இராணுவம் தற்காத்துக் கொள்ள ஒன்று, எதிகளைத் தாக்க ஒன்று என இரு ரக ஆயுதங்களை வைத்திருப்பதில்லை என தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் இல. கணேசன் தெவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: நமது இராணுவத்திற்கு சக்திவாய்ந்த பீஷ்மா டாங்கிகளை தயாத்தளித்து நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறது சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலை. இது பாராட்டுக்குரிய செயல். "பீஷ்மா' டாங்கிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு இலங்கைக்கு இந்திய அரசு ஆயுதங்களை வழங்கியது உண்மை. ஆனால் அவை இலங்கையின் தற்காப்புக்க…
-
- 0 replies
- 655 views
-
-
ஈழத்தில் சிறீலங்காவின் திட்டமிட்ட இனப்படுகொலை. ஈராக்கில் அமெரிக்காவின் நாசகார நோக்கிலான மனித இன அழிப்பு. 1. சிறீலங்கா: படுகொலைகள், ஆட்கடத்தல்கள், இன அழிப்பு, ஜனநாயக மறுப்பு போன்ற அரச பயங்கரவாதச் செயல்களை திட்டமிட்ட வகையில் செய்தல். இராணுவ பிரசன்னத்தோடு தேர்தல்களை நடத்தி ஜனநாயகம் என்று காட்டுதல். 2. அமெரிக்கா: படுகொலைகள், இன அழிப்புக்கு ஆயுதங்களை வழங்கல், போரில் மனித உரிமைகள் மீறப்படுதலைப் பரப்புதல். இராணுவ பொறிகளை பொதுமக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதைப் பரப்புதல். ஜனநாயகம் என்ற போர்வையில் இராணுவப் பிரசன்னத்தோடு தேர்தல்களைத் திணித்தல். அரச பயங்கரவாத நாடுகளுக்கு நிதி மற்றும் இராணுவ உதவி வழங்கி ஊக்குவித்தல். வீட்டோ அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தல். …
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையின் வடபகுதியில் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ள பிரதேசங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றும் எந்தவிதமான திட்டங்களும் அரசாங்கத்திடம் இல்லையென ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அரசாங்கம் வன்னிப் பகுதியில் சிங்களவர்களை குடியேற்றுகிறது எனும் மங்கள சமரவீரவின் கூற்று பொறாமையின் காரணமாகக் கூறப்பட்டது. முன்பு வடபகுதியில் வசித்த மக்களே அங்கு மீள் குடியேற்றப்படுவார்கள். இந்த மக்கள் சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றப்படவுள்ளனர். எனவே மங்கள சமரவீரவின் கருத்துக்களை அரசாங்கம் நிராகரிக்கிறதென அவர் தெரிவித்துள்ளார். வன்னிப் பகுதியிலுள்ள நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பு உறதிப்படுத்தப்பட்டுள்ள பின்னர் மக்கள் குடியேற்றப்புடுவார்கள். இதனைத்…
-
- 0 replies
- 359 views
-
-
பிரித்தானியாவில் ஒளிபரப்பாகும் 'சனல் - 4' தொலைக்காட்சி ஒளிபரப்பிய தமிழர் படுகொலை காணொலி குறித்து நோர்வேயின் சுற்றுச்சூழல் மற்றும் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்த கருத்துக்கள் அவர் இலங்கை பிரச்சினையில் பக்கச் சார்பான அனுசரணையாளராகவே செயற்பட்டிருக்கிறார் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது என சிறிலங்கா வெளிவிவகாரத் துறை அமைச்சு இன்று சனிக்கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 421 views
-
-
உலகத்தில் மிக மோசமான செய்தி இரட்டடிப்பு இலங்கையில் கடந்த பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றது. பத்திரிகையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடுகளின் இலங்கை முன்னணி வகிக்கின்றது. இலங்கை அரசிற்கு எதிராக செய்தி வெளியிடும் செய்தி நிறுவனங்கள் இலங்கையிற் செயற்பட முடியாமற் பண்ணப் படும் என்று இலங்கை பகிரங்கமாகவே அறிவித்தது. ராயட்டர் செய்தி நிறுவனம் இலங்கை அரசு கொடுக்கும் செய்திகளை மட்டுமே தெரிவிக்கின்றது. வன்னி வதை முகாம்களில் நடக்கும் வன்முறைகளை பாலியல் வல்லுறவுக்களை வெளியிட்டதற்காக சனல்-4 இன் செய்தியாளர் கைது செய்யப் பட்டு வெளியேற்றப் பட்டார். அத்துடன் சனல்-4 தன் இலங்கைச் செயற்பாட்டை முடிக்கவில்லை. எங்கு செய்து இரட்டடிப்பு செய்யப் படுகிறதோ அங்கிருந்து செய்திகளைக் கொண்டுவருவது…
-
- 0 replies
- 954 views
-
-
முறையான அனுமதி பெறாமல் கிழக்கில் யாராவது மீளக்குடியமர்ந்தால் அவர்கள் காவல்துறையினரின் உதவியுடன் வெளியேற்றப்படுவார்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 349 views
-
-
பிரித்தானிய 'சனல் - 4' தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறிலங்காப் படையினரால் கைதிகள் சுட்டுக்கொல்லப்படுவதை வெளிப்படுத்தும் காணாலிக் காட்சியின் நம்பகத் தன்மையைக் கண்டறிவதற்காக சுயாதீனமான விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவர் சிறிலங்கா அரசை வலியுறுத்தி கேட்டிருக்கின்றார். 'சனல் 4' ஒளிபரப்புச் செய்த காணாலி காட்சிகள் போலியானவை என சிறிலங்கா அரசு மறுத்திருந்தாலும், அது தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என சட்டத்துக்குப் புறம்பான மற்றும் எழுந்தமானமான கொலைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரன் வலியுறுத்தியிருக்கின்றார். "இவ்வாறான விசாரணை ஒன்றின் மூலமாக அரசின் நிலைப்பாடு சரியானது என்பது உறுதிப்படுத்…
-
- 0 replies
- 452 views
-