ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143555 topics in this forum
-
கிழக்கு மாகாண ஆளுநர் கவனத்திற்கு... பொலிஸாரின் அனுமதியை பெறாது சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் திலீபனின் நினைவேந்தல் ஊர்வலத்தை நடத்தியது முற்றிலும் தவறு என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளமை எமது கவனத்தை ஈர்த்திருக்கிறது. சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் இவ்வாறு நினைவேந்தல் ஊர்வலத்தை முன்னெடுத்து தேவையில்லாத இனக்கலவரத்தை தூண்டுவதற்கு முயற்சிப்பதாகவும் ஆளுநர் குற்றஞ்சுமத்தியுள்ளார். ''இதுபோன்ற ஊர்வலங்கள் சிங்கள மக்கள் வாழும் ஊர்களில் தவிர்க்கப்பட வேண்டும். ஏனைய இனத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் பொறுப்புடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண…
-
- 1 reply
- 379 views
-
-
24 SEP, 2023 | 03:02 PM இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (24) வருகை தந்துள்ள நிலையில், அவரை ஈழத்தின் புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். யாழ். கோண்டாவில் உப்புடம் விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வை தொடர்ந்து, மங்கள வாத்தியத்துடன் கோண்டாவிலில் அமைந்துள்ள சந்தோஷ் நாராயணன் மனைவியின் பூர்வீக இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சந்தோஷ் நாராயணன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் 'யாழ் கானம்' பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளமை குறிப்பிடத…
-
- 3 replies
- 540 views
- 1 follower
-
-
கிழக்கின் அவமானம் பிள்ளையான் - திரிபோலி பிளட்டூன் (கூலிக்கு கொலை செய்யும் படைப்பிரிவு) Vhg செப்டம்பர் 23, 2023 கடந்த இரு நாட்களாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவும், அது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட சமூகம் சார்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தது. நேற்றைய தினம் 22.09.2023 சாணக்கியனின் உரையானது. கிழக்கின் அவமானம் பிள்ளையான் என்னும் சந்திரகாந்தன் பல கொலைகளுக்கு காரணமான ஒருவர் இவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் அத்துடன் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பிலும் பல கொலைகள் தொடர்பிலும் அசாத் மெளலானாவினால் குற்றம் சாட்டப்பட்ட பெய…
-
- 0 replies
- 400 views
-
-
Published By: DIGITAL DESK 3 24 SEP, 2023 | 09:53 AM ஆர்.ராம் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் சம்பந்தமாக உண்மைகளைக் கண்டறியப்பட வேண்டுமாயின் ஐக்கிய நாடுகளின் பிரசன்னத்துடனான சர்வதேச விசாரணையொன்றே அவசியம் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். உள்நாட்டு போர் நடைபெற்ற காலத்திலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிலும் கொல்லப்பட்டவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை அரசாங்கம் புறந்தள்ளிவிட்டு தொடர்ந்தும் பொறுப்பின்றிச் செயற்பட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடரி…
-
- 1 reply
- 270 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 23 SEP, 2023 | 07:45 PM ஆர்.ராம் உள்நாட்டில் தொடரும் ஊழல், நீதிபதிகளை அச்சுறுத்தி நீதித்துறை மீதான அடைக்குமுறை, அரசியலமைப்பில் உள்ளவற்றையே நடைமுறைப்படுத்தாது நீடிக்கும் அதிகாரப்பகிர்வு இழுத்தடிப்பு சம்பந்தமாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிடத்தில் எடுத்துரைத்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். அமெரிக்காவுக்கான விஜயத்தினை நிறைவு செய்து நாடுதிரும்பியவுடன் இலங்கைகக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கின் அழைப்பின் பேரில் சந்திப்பொன்றை சுமந்திரன் எம்.பி நடத்தியிருந்தார். குறித்த சந…
-
- 0 replies
- 374 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 23 SEP, 2023 | 07:48 PM ஆர்.ராம் இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாகவும், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினையும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நோக்கி நகர்த்துவதற்குரிய அடுத்தகட்டச் சாத்தியப்பாடுகள் தொடர்பில் அமெரிக்கா தீவிரமான கரிசனையுடன் ஆராய்ந்து வருகிறது. குறிப்பாக, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் தெற்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான பிரிவினர், ஆசிய விவகாரங்களுக்கான பாதுகாப்பு பிரிவினர், செனட் குழுவின் வெளிவிவகார பிரிவினர் ஆகியோர் இந்த விடயம் சம்பந்தமாக கரிசனைகள் கொள்…
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் MRI இயந்திரத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கையளித்துள்ளது என தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜப்பான் கடந்த ஒக்டோபரில் CT ஸ்கேனர் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களை தேசிய வைத்தியசாலைக்கு வழங்கியதாக தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கண்டறியும் இமேஜிங் திறன்களை மேம்படுத்துவதில் இந்த உபகரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த அதிநவீன சேர்த்தல்களுடன்,கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மருத்துவ மதிப்பீடுகளில் அதிக துல்லியம் மற்றும் நேரத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என தூதரகம் தெரிவித்துள்ளது. புதிய நன்கொடையைக் கொண்டாடும் வகையில், ஜப்பான் வழங்கிய உபகரணங்களை வைத்திருக்கும் வசதிக்கு “ஜப்பான்-இலங்கை நட்பு நோயறிதல் இம…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
ரஷ்யாவுக்கு இலங்கை நட்பு நாடாகவே உள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனித்த லியனகே தெரிவித்துள்ளார். இக்கட்டான காலங்களில் ரஷ்யா இலங்கைக்கு எவ்வாறு உதவியது என்பது நன்றாக ஞாபகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் மொஸ்கோவில் இடம்பெற்ற ரஷ்ய – இலங்கை வர்த்தக தரப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பில் வைத்து இலங்கை தூதுவர் இதனைக் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிரான பேச்சுக்களையும் பொருளாதார தடைகளையும் இலங்கை ஆதரிக்காது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவிற்கு எதிரான பேச்சுக்களையும் பொருளாதார தடைகளையும் இலங்கை ஆதரிக்காது!” https://thina…
-
- 2 replies
- 227 views
- 1 follower
-
-
2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அடுத்த வருடத்திற்கான பாடப்புத்தகங்களை பாடசாலை மாணவர்களிடையே விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஹோமாகம, பிடிபனவில் அமைந்துள்ள கல்வி வெளியீடுகள் திணைக்களத்தின் பிரதான களஞ்சியசாலையில் இருந்து நாடளாவிய ரீதியில் உள்ள பிராந்திய மத்திய நிலையங்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படும் இடத்தை பார்வையிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டுமே பாடசாலை சீருடைப் பொருட்கள் வழங்கப்படும் என பல்வேறு ஆர்வமுள்ள தரப்பினர் பரப்பும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் அமைச்சர் நிராகரித்துள்ளார். சீருடை துணிகள் மற்றும் மதிய உணவு ஆகிய இரண்டும…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
கட்டுவன் ஆலயத்திற்கு செல்ல அனுமதி! adminSeptember 23, 2023 யாழ்ப்பாணம் கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் தேவஸ் தானம் கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் 33 வருடங்களுக்கு பின்னர் ஆலயத்தை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும் ராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர் கட்டுவன் காசியம்மாள் அம்மன் ஆலய தேவஸ்தானத்தினரால், கல்வி இராஜாங்க முன்னாள் அமைச்சர் விஐயகலா மகேஸ்வரனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, குறித்த ஆலயத்தினை சென்று பார்வையிடுவதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்த நிலையில், ராணுவத்தினரின் அனுமதியுடன்உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள குறித்த ஆலயத்தினை சென்று பார்வையிட்டதோடு ஆலயத்தில் பூஜை வழிபாடுகளும் குருமார்களினால் முன்னெடுக்கப்பட்…
-
- 4 replies
- 775 views
- 1 follower
-
-
“பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!” ஆவணக் காட்சியகம் திறப்பு! September 23, 2023 தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் “பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!” எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தி ஆரம்பமாகியதுடன் பின் வரலாற்று ஆவணக் காட்சியகத்தை மூன்று பிள்ளைகளின் மாவீரர்களின் தாய் சுடரேற்றி ஆரம்பித்து வைத…
-
- 1 reply
- 416 views
-
-
23 SEP, 2023 | 11:30 AM நாடு பெற்ற கடனை மக்கள் செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒவ்வொரு பிரஜையும் கடனாளியாகியுள்ளதாகவும் எவ்வளவு ரூபாவுக்கு கடனாளிகளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆய்வை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர கற்கைப் பிரிவின் பேராசிரியர்களான வசந்த அத்துக்கோரள மற்றும் தயாரத்ன பண்டா ஆகியோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வின்படி, கடந்த ஏப்ரல் வரையான காலப்பகுதி வரை நாடு பெற்ற கடனில் தனி நபர் ஒருவர் 11 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாவை செலுத்தவேண்டிய கடனாளியாக மாறியுள்ளார். இதேவேளை, நான்கு பேர் கொண்ட குடும்பமொன…
-
- 0 replies
- 515 views
- 1 follower
-
-
22 SEP, 2023 | 06:39 PM வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வீட்டுத்திட்டம் தொடர்பில் இன்றையதினம் (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் குறைந்த வருமானம் கொண்ட நிரந்தர வீடற்ற குடும்பங்களை இனங்கண்டு வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத…
-
- 3 replies
- 412 views
- 1 follower
-
-
க. அகரன் வவுனியா நகர பிரபல பாடசாலை ஒன்றில் மாணவன் மீது ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவன் நேற்று (21.09) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகர பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 9ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கு, அப் பாடசாலையின் பகுதித் தலைவராகிய ஆசிரியர் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கும் மேலாக தும்புத்தடி மற்றும் சப்பாத்து கால்களால் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார். ஆனாலும், குறித்த மாணவன் மீண்டும் மீண்டும் குறித்த ஆசிரியரிடம் ஏன் என்னை அடிக்கிறீர்கள் என்று கேட்டத்தற்கு பதில் கூறாது அதற்கும் தன்னை தாக்கியதாகவும் மாண…
-
- 10 replies
- 796 views
- 1 follower
-
-
குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைத்து தருமாறு கோரிக்கை Published By: VISHNU 22 SEP, 2023 | 05:02 PM யாழ்ப்பாணத்தில் இருந்து தீவகத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதில் சிரமங்களை எதிர்கொள்வதனால் மிக விரைவில் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பு செய்து தருமாறு தீவக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கான இறங்குதுறையாக குறிகாட்டுவான் இறங்கு துறையே உள்ளது. தற்போது குறிகாட்டுவான் இறங்கு துறை சேதமடைந்துள்ளமையால், கனரக வாகனங்கள் இறங்குதுறைக்கு அண்மித்த பகுதிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனா…
-
- 0 replies
- 264 views
-
-
யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளில் உள்ள பனைமரம் உற்பட பயன் தரும் மரங்கள் தொடர்ச்சியாக எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டு வரும் நிலையில் பொறப்பு வாய்ந்த அதிகாரிகள் அசண்டயீனமாக செயல்படுவதாக தீவக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். யாழ்ப்பாணம் தீவகப் பகுதியான வேலணைப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மண்கும்பான் அல்லப்பிட்டி போன்ற பகுதிகளிலே இவ்வாறு பயன் தரும் மரங்கள் எரியூட்டப்பட்டு அழிக்கப்படுகின்றன. குறித்த பகுதிகளில் காணப்படும் பிரதான பளமான பனை வளம் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருவதோடு வீதிகளில் நாட்டப்பட்ட நிழல் தரும் மரங்களும் இவ்வாறு அளிக்கப்படுகிறது. அது மட்டும் அல்லாது வயல் நிலங்களில் காணப்படும் பற்கள் இரவு நேரங்களில் விசாமிகளால் தீயிடப்படுவதால் குறித்…
-
- 0 replies
- 362 views
-
-
இலங்கை புகையிரத சேவையின் மாஹோ முதல் அநுராதபுரம் வரையிலான (66 கி.மீ.) ரயில் பாதையின் சமிக்கை தொகுதியினை வடிவமைத்தல், பொருத்துதல், பரிசோதித்தல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் ஒன்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைசர் பந்துல குணவர்த்தன மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் முன்னிலையில் இலங்கை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் IRCON நிறுவனம் ஆகியவற்றுக்கிடையில் நேற்று (21) கைச்சாத்திடப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீபால கம்லத், இலங்கை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, இலங்கை புகையிரத சேவைகள் திணைக்களம், IRCON நிறுவனம் ஆகியவற்றின் சிரேஸ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வ…
-
- 0 replies
- 324 views
-
-
22 SEP, 2023 | 12:03 PM கேரளாவில் பரவிவரும் நிபா வைரஸ் குறித்து இலங்கை எச்சரிக்கைநிலையில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இலங்கைக்கு இந்த வைரசினால் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நிபா வைரஸ் புதியதல்ல 1998 இல் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டது என தலைமை தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அந்த வைரஸ் பெருமளவில் பரவவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் மலேசியாவில் பரவத்தொடங்கிய பின்னர் 2001 முதல் 2013 முதல் பிலிப்பைன்ஸ் பங்களாதேஸ் இந்தியா போன்ற நாடுகளில் இந்த வைரஸ் பரவியது எனவும் தெரிவித்துள்ளார். எனினும் தற்போ…
-
- 0 replies
- 416 views
- 1 follower
-
-
யாழில் ஜூஸ் பக்கெற்றுகளுக்குத் தடை! யாழ் முழுவதும் ஒருவருட கால முடிவுத் திகதியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ள ஜூஸ் பக்கெட்களை அழிக்குமாறு, மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெல்லிப்பழை பிரதேசத்திலுள்ள ஜூஸ் உற்பத்தி நிலையம் ஒன்றில் குழந்தைகள் பருகும் ஒரு சில வாரங்களே காலவதித் திகதி இடக்கூடிய ஜூஸ் பக்கெற்றுகள், ஒரு வருட காலப்பகுதி குறிப்பிட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளமை அண்மையில் தெரியவந்துள்ளது. இதன்போது அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஒரு தொகை ஜூஸ் பக்கெற்றுகளும் பொதுசுகாதார பரிசோதகரினால் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (21) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.…
-
- 0 replies
- 421 views
-
-
ஈஸ்டர் தாக்குதல்; நாடாளுமன்றத்தில் சஜித் தெரிவித்த கருத்தால் பரபரப்பு! தாஜ் ஹொட்லில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து அவர் தெரிவித்ததாவது” ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சனல் 4 கருத்து வெளியிடும்முன்னரே நாம், தான் பின்னணியில் உள்ளவர்கள் யார், மூலக்காரணம் என்ன என்பது தொடர்பாக பல தகவல்களை வெளியிட்டிருந்தோம். மலல்கொட அறிக்கையை அரசாங்கம் ஒழித்துக் கொண்டிருந்தது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தான் இது வெளியே வந்தது.தெரிவுக்குழுவின் அறிக்கையில் பகுதி ஒன்றை மட்டும்தான் எமக்கு பார்க்க முடியும். இரண்டாம் பாகத்தைப் பார்க…
-
- 11 replies
- 1.1k views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 22 SEP, 2023 | 11:36 AM சர்வதேச மனித உரிமை உரிமை சட்டங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமைக்கு இலங்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பொறுப்பபுக்கூறச் செய்யவேண்டும் என வலியுறுத்தும் கடிதமொன்றை அமெரிக்க காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனிற்கு அனுப்பிவைத்துள்ளனர். அமெரிக்க காங்கிரஸில் அங்கம் வகிக்கும் இரு கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளனர். இலங்கையில் சித்திரவதை உட்பட சர்வதேச குற்றங்கள் என கருதப்படக்கூடிய குற்றங்கள் உட்பட சர்வதேச சட்டம சர்வதேச மனித உரிமை சட்டம் ஆகியவை மீறப்பட்டமை தொடர்பில் இலங்கையில் போதிய நீதிய…
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
Published By: VISHNU 22 SEP, 2023 | 10:21 AM வடக்கு கிழக்கில் இலங்கையின் போர் குற்றங்களை சர்வதேச விசாரணை செய்ய வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியாவில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச நீதியைக் கோரிய ஜனநாயகப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வியாழக்கிழமை (21) தாண்டிக்குளம் முனியப்பர் கோவில் முன்பாக இடம்பெற்றிருந்தது. இதன்போது "போர் குற்றங்கள் செய்தவர்களை நீதிக்கு முன் நிறுத்து, பாலியல் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும், 74 வருட இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வேண்டும்…
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
தேர்தலின் போது ஏற்படும் செலவுகளைக் குறைப்பதற்கு இணையவழி வாக்காளர் பதிவு தகவல் முறைமை அறிமுகம் சிறந்த வழி என்பதை நிரூபிக்கும் நடைமுறைப் பரீட்சை அண்மையில் மாத்தறை ராகுல கல்லூரியில் வெளியிடப்பட்டது. நேற்று நடைபெற்ற மாணவர் நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த முறையின் கீழ் கிட்டத்தட்ட 3,000 மாணவர்கள் வாக்களித்தனர். பெறுபேறுகளை அறிவிப்பதற்கு மூன்றரை மணித்தியாலங்களே தேவைப்பட்டன. அதிபர் சமித்த குருகுலசூரிய, கல்லூரியின் இணையக்குழுவின் பொறுப்பதிகாரிகளான லலனிகா ரங்கொடகே, நுவான் ரத்நாயக்க மற்றும் சஜித் சதுரங்க ஆகியோரின் ஆலோசனையின் பேரில் சிரேஷ்ட அரச அதிபர் நதீஜா கல்ஹார லியனாராச்சி இந்த அமைப்பை வடிவமைத்தார். “இந்த அமைப்பு நான்கு மணி நேரத்திற்குள் உருவா…
-
- 0 replies
- 305 views
- 1 follower
-
-
இலங்கைக்கு 10 ரயில் என்ஜின்களை வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க இந்த ரயில் என்ஜின்கள் கடன் உதவியாக இலங்கைக்கு பெறப்படும் என குறிப்பிட்டுள்ளார். இந்த என்ஜின்களை கொண்டு வருவதற்கு முன், ரயில்வே துறை அதிகாரிகள் குழு இந்தியா சென்று தர சோதனை செய்ய உள்ளது. என்ஜின்கள் இல்லாததால் அடிக்கடி ரயில் இயக்கம் தடைபடுவதாக வும் பழைய என்ஜின்கள் பழுது நீக்கப்பட்டு இயக்கப்பட்டாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இயந்திரக் கோளாறு காரணமாக பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/274081
-
- 3 replies
- 408 views
- 1 follower
-
-
அம்பாறை திருக்கோவில்-4, மண்டானை கிராமத்தில் காணி மற்றும் வீடற்று வாழ்ந்து வந்த ஐந்து குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. அம்பாரை மாவட்ட சீடர்ஸ் அமைப்பின் மாவட்ட ஒழுங்கமைப்பாளர் எஸ்.நந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கனடா குமரன் விளையாட்டு கழகத்தின் நிதி பங்களிப்புடன் ஒரு வீடு 10 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. பயனாளிகளுக்கான காணி, பிரதேச செயலக காணிப்பிரிவு ஊடாக வழங்கப்பட்டது. வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் கலந்து கொண்டு, அடிக்கல்லினை நாட்டினார். உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன், கிராம சேவகர் எஸ்.ச…
-
- 0 replies
- 502 views
- 1 follower
-