Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்மோகனும் - மகிந்தவும் எகிப்தில் சந்திக்கவுள்ளனர் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பினைக் கோரியுள்ளார். எகிப்தில் அடுத்த வாரம் நடைபெறவள்ள அணிசேரா நாடுகளின் மாநாட்டில் இந்த இரண்டு தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்போது மன்மோகன் சிங்கை சந்திக்க வாய்ப்பு வழங்குமாறு, சிறீலங்கா அதிபர் செயலகம் இந்தியாவிடம் அனுமதி கோரியுள்ளது. பதிவு

    • 2 replies
    • 685 views
  2. தனியார் மயம் என்ற வசனமே எமது அரசாங்கத்திடம் இல்லை - காப்புறுதி நிர்வாகத்திடம் ஜனாதிபதி வீரகேசரி நாளேடு 7/3/2009 11:47:49 PM - இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் தொடர்பில் மக்கள் மத்தியில் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகமே விசுவாசத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதுடன் தனியார் மயம் என்ற வசனமே அரசாங்கத்திடம் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டதன் பின்னரே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த விஜயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மக்கள் மத்தியில் இல்லாதொழிக்கப்பட்ட இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் தொடர்பான விசுவாசத்தை கட்டியெழு…

    • 1 reply
    • 544 views
  3. வீரகேசரி இணையம் - ஆயுதக்குழுக்களில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் நலனையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு ஐ.நா செயலாளர் பான் கீ மூன் இலங்கை அரசாங்கத்தினை கோரியுள்ளார். முக்கியமாக ஆயுதக்குழுக்களில் இருந்து வெளியேறிய சிறுவர்களை அடையாளப்படுத்தல்,விடுதலை,புன ர்வாழ்வு என்பனவற்றை உறுதிப்படுத்தி, சர்வதேச தரத்திற்கு அமைவாக அவர்கள் சமூகத்தில் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆயுதக் குழுக்களின் பிடியிலிருந்த சகல சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதனை உறுதிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானதென அவர் தெரிவித்துள்ளார். சிறுவர் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைந்து வாழக் கூடிய பின்னணி உ…

  4. என் இனிய தமிழீழ மக்களே... நமக்கு இது போராத காலம் இல்லை. இது நமக்கு புலிகள் கொடுத்துள்ள வைப்பக கருதுங்கள். கிட்டத்தட்ட முப்பது ஆண்டு காலம் புலிகள் நம்மை ஆயுதப் போராட்டம் மூலம் நம் தமிழீழ தாயகம் கனவை நிறைவேற்ற போராடினார்கள்... தொடர்ச்சியான போராட்டங்களால் சிங்களவனை செயலிழக்க செய்து வந்தது. காலத்தின் ஓட்டத்தில் அந்தப் போராட்டத்திற்கும் ஒரு ஒய்வு தேவைப்பட்டது. அதலால் புலிகள் போராட்டத்தை நமது கைக்கு கைமாற்றி சென்று உள்ளது.. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்... இது நமக்கான போராட்டம் , இது புலிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் , இதை நாம் தொடராவிட்டால் வேறு யார் நமக்காக செய்ய முடியும். நாம் இனி குறை சொல்லவோ , இறந்து போன நம் உறவுகளுக்காக கவலைப் படவோ நேரமில்லை. இ…

    • 2 replies
    • 1.9k views
  5. காரணம் எதுவும் கூறாமல் காலம் சில களங்களை தன் போக்கில் உருவாக்கிவிட்டுப் போகிறது. இரு கட்டுரைகளோடு நிறைவுற்றிருக்க வேண்டிய இத்தொடர் முப்பது இதழ்கள் கடந்தும் வளர்கிறது. உள்ளபடியே, உண்மையான உணர்வாளர்களின் திருப்பள்ளியாகவும், பொய்மைகளை எதிர்கொள்ளும் போர்க்களமாகவும் தன்னையே தருவித்து நக்கீரன், தகர்ந்துபோன தமிழர் நம்பிக்கைகள் முற்றிலுமாய் பட்டுப் போகாமல் உயிர்நீர் ஊற்றி வருகிறதென்பதே உண்மை. முல்லைத்தீவு வெற்றிக்குப்பின் தறிகெட்டு ஆடிய சிங்களப் பேரினவாதத்தின் இரைச்சல் எதிர்பார்த்ததை விட வேகமாகவே சுரத்து குறைந்துவிட்டதாக கொழும் பிலிருந்து வரும் நம்பகமான செய்திகள் கூறுகின்றன. விடுதலைப்புலிகள் வெற்றிகளின் உச்சத்தில் நின்ற நாட்களில் கூட இல்லாத "தமிழ் இனப் பேரெழுச்சி' …

  6. வணங்காமண் கப்பல் சென்னையில் பொருட்களை இறக்க அனுமதி MV Captain Ali docks at Chennai Port

    • 4 replies
    • 958 views
  7. வவுனியா முகாம்களில் இருந்து சுமார் 5000 பேர் இடம்மாற்றம்? Friday, 03 July 2009 10:09 வவுனியா நிவாரணக்கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மக்கள் மதவாச்சி - மன்னார் வீதியில் அனுராதபுரம் எல்லையில் உள்ள மாங்குளம், தருமபுரம் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்தோர் முகாம்களில் நிலவும் நெருக்கடி காரணமாக இவ்வாறு எல்லைக்கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள் நிலையத்தில் இவர்கள் தற்காலிகமாக தங்க வைக்கபப்ட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் சுமார் 5000 பேர் இவ்வாறு இடம்மாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் இடம்பெயர்ந்த மக்களை வட மாகாணத்திற்கும், வட மத்திய மாகாணத்திற்கும் இடையில் உள்ள எல்லைக்கிராமங்களில் குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட…

  8. தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் பேச்சுக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசும் கண்டனம் வெளியிட்டுள்ளார். சிங்களர்களின் கோபத்தை அதிகப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி பேசியிருப்பது, அதிர்ச்சி அளிக்கிறது என்று பா.ம.க நிறுவனர் இராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறீலங்கா அதிபர் ராஜபக்ச நடத்திய இனப்படுகொலை குறித்து, பா.ம.க கட்சியின் தலைவர் ஜி.கே.மணி சட்டப்பேரவையில் விரிவாக எடுத்துக் கூறிய பின்னர், கருணாநிதி இந்தக் கருத்தைத் தெரிவித்திருப்பதாகக் கூறினார். இதேவேளை, தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி ஈழத்தமிழ் மக்கள் பிரச்சினையில் குத்துக் கரணம் அடித்…

  9. குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின அலுவலகம் ஒன்று திருகோணமலையில் திறக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் தென்னக்கோன் தொரிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வலுவலகம் திறக்கப்படவுள்ளது. திருகோணமலைத் துறைமுகத்தின் குடிவரவு குடியகல்வு பணிகளை இதுவரை பொலிஸ் தினைக்களமே மேற்கொண்டு வந்தது. எனினும் அப்பணிகளை தமது திணைக்களம் விரைவில் பொறுப்பேற்கவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் மேலும் தொரிவித்துள்ளார் வீரகேசரி

    • 0 replies
    • 867 views
  10. மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்கள் ஆயுதம் தாங்கியவர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக் கிழமை, இரவு முச்சக்கர வண்டியில் சென்றுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை, ஜீப் வண்டியில் சென்ற ஆயுததாரிகள் கடத்திச் சென்றுள்ளனர். அன்றைய தினமே கோப்பாவெளியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த இராணுவ சீருடையணித்த ஆயுததாரிகள் மற்றுமொரு இளைஞரை கடத்திச் சென்றுள்ளனர். மட்டக்களப்பு செங்கலடி வீதியை சேர்ந்த 18வயதான ரவிந்திரன் சதீஷ் மற்றும் மட்டக்களப்பு கோப்பாவெளியை சேர்ந்த 19வயதான சுப்ரமணியம் சதீவன் ஆகிய இளைஞர்களே கடத்தப்பட்டுள்ளனர். இது குறித்து இளைஞர்களின் உறவினர் செங்கலடி பிரதேச சபையின் தலைவர் எஸ்.ஜீவரங்கனிடம் முறையிட்டுள்ளனர். அத்துடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், …

    • 0 replies
    • 524 views
  11. இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான இந்து பத்திரிகையின் ஆசிரியர் என் ராம் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளார். நேற்று முன்தினம் அங்கு சென்ற அவர், முகாம்களை பார்வையிட்டுள்ளார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள ராம், சர்வதேச ஊடகங்கள் முகாம்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுள்ள என்பதை இதன் போது தன்னால் அறிந்து கொள்ள முடிந்துள்ளதாக கூறியுள்ளார். சர்வதேச ஊடகங்கள் முகாம்களுக்கு சென்று உண்மை நிலைமையை அறிக்கையிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தமிழ் சிறுவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக முகாம்களில் இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த மக்களின் எதிர்க…

    • 0 replies
    • 703 views
  12. இலங்கை அரசால் ஐநா பணியாளர்கள் கடத்தப்பட்;டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட ஒரு வாரகாலத்திற்கு மேலான மௌனத்திற்குப் பிறகு, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு ஐ.நா. பணியாளர்கள் சார்பாக வழக்கறிஞர் ஒருவர் அமர்த்தப்பட்டிருப்பதாகவும் இப்போதும் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களை வழக்கறிஞர் சென்று பார்வையிட்டதாகவும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் மிசேல் மொன்டாஸ் கூறியுள்ளார். இலங்கையிலுள்ள ஐ.நா. அகதிகள் முகவரமைப்பின் தலைவர் அமின் அவிட் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். பணியாளர்களைத் தடுத்து வைத்திருப்பதற்கான சுதந்திரம் அரசாங்கத்துக்கு உள்ளது என்றும் நடைமுறைகள் பின்பற்றப்படும் வரை தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கான உரிமை அரசுக்கு உண்டு என்றும் அவர் குறிப்…

    • 0 replies
    • 645 views
  13. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் அகதி முகாம்களில் இருந்தே அடுத்த பிரபாகரன் உருவாகக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக சிறிலங்கா அரசுக்கு அந்நாட்டின் கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு இன்று ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காத அரசு, பேச்சுவார்த்தைகளிலேயே காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கின்றது எனவும் ஜே.வி.பி. குற்றம் சாட்டியிருக்கின்றது. இதனால் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு கிடைத்துள்ள மிகவும் சிறந்த சந்தர்ப்பம் இழக்கப்பட்டு மீண்டும் பிரிவினையை நே…

  14. சிறிலங்காவின் அனுராதபுரம், பொலநறுவை ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் 12 மலையக தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 317 views
  15. இலங்கையின் வடபகுதியில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து வாழும் அப்பாவி தமிழர்கள் நிரந்தரமாக முகாம்களிலேயே தங்கியிருக்க நேரிடலாம் என தொண்டு நிறுவன பணியாளர் ஒருவரை மேற்கோள் காட்டி டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மெனிக் பாம் முகாமில் நிரந்தர கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக தொண்டு நிறுவன பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மெனிக் பாமில் அமைக்கப்பட்டுள்ள ஆறு முகாம்களில் நான்கில் தொண்டுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட போதிலும், இரண்டு முகாம்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பூச்சிய வலயங்களகாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக …

    • 0 replies
    • 571 views
  16. புலிகளின்குரல் கரும்புலிகள் நாள் ஆடி 5 முதல் மீண்டும் ....... ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 27 replies
    • 5.6k views
  17. புதிய பரிணாமத்துடன் பயணிக்கின்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பங்காளியாகி இருக்கின்ற ஒவ்வொரு தமிழனும் இன்று ஆழமாக புரிந்துகொள்ள வேண்டிய கட்டாய பாடமாகவும் தேவையாகவும் ஈழத் தமிழருக்கும் இந்தியாவுக்குமான உறவு என்ற கரு வியாபித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 737 views
  18. சீனாவே சிறிலங்காவின் வாழ்நாள் நண்பன். எனவேதான் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் நான் இங்கு வந்துள்ளேன் என சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். ஐந்து நாள் பயணமாக சீனா சென்றுள்ள அவர், சீனா ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: நாம் நெருக்கடிகளைச் சந்தித்தபோது சீனா எமக்கு உதவியாக இருந்தது. அது எமது வாழ்நாள் நண்பன். சீனாவே உலகின் மிகவும் முக்கிய பாத்திரத்தை தற்போது வகிக்கின்றது. அது தனது பிராந்தியத்திலும் ஆளுமையை கொண்டுள்ளது. சீனா எப்போதும் எமக்கு உதவியாக இருந்துள்ளது. இரு நாடுகளினதும் உறவுகளை பலப்படுத்தும் நோக்கத்துடனே நான் ஐந்து நாள் பயணமாக சீனாவுக்கு வந்துள்ளேன் என்றார் அவர்.…

  19. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இனவாதிகளை விரட்டுமாறு இந்தியா உத்தரவு விக்ரமபாகு : அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இனவாதிகளை அதில் இருந்து விரட்டிவிடுமாறு இந்தியா தெரிவித்துள்ளதாக கலாநிதி. விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார். யுத்த வெற்றியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தேசியக் கொடியை அரசாங்கத்தின் கொடியாக மாற்றிக் கொண்டு, மன்னருக்கு (ஜனாதிபதிக்கு) தங்கம், வெள்ளி என அணிவித்து, பெரும் ஆட்டத்தை ஆடி வருகின்றனர். எனினும் கூரை தம் தலையில் இடிந்து விழப் போகிறது என்பதை இவர்கள் அறியவில்லை எனவும் விக்ரமபாகு சுட்டிக்காட்டியுள்ளார். உலகமே பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ள வேளையில், இலங்கை போன்ற நாடு ஆட்டம் போட முடியாது. மேலும் ஒரு லட்சம் பேர் இராணுவத்தில்…

    • 6 replies
    • 1.2k views
  20. இலங்கையில் முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' ஏடு குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 352 views
  21. "சிறுபான்மை சமூகத்தினர் எப்பகுதியில் என்றாலும் அடக்குமுறைக்குள்ளாகும் போது, நாம் அவர்களுக்காக உரத்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஆதாரபூர்வமான தகவல்களின் பிரகாரம் சிறிலங்கா அரசினால் தமிழர்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்படுகின்றனர். இந்த அநீதி நிறுத்தப்பட வேண்டும். தமிழ் மக்கள் அவர்கள் தாயக மண்ணில் அமைதியுடன் வாழ்ந்து ஓங்க அனுமதிக்கப்பட வேண்டும்." தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 461 views
  22. சிறிலங்காவின் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்கோ யாழ்ப்பாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்துள்ளார். நேற்று வியாழக்கிழமையே அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண குடாநாட்டின் சிறிலங்கா படைகளின் தலைமையகத் தளபதி மென்டக சமரசிங்க பலாலி வானூர்தி நிலையத்தில் அவரை வரவேற்று அழைத்துச் சென்றார். இராணுவத் தளபதியின் இந்தப் பயணத்தை முன்னிட்டு சிறப்பு இராணுவ அணிவகுப்பும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பலாலி இராணுவத் தலைமையகத்தில் இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய தரத்தில் உள்ளவர்கள் மத்தியில் தனித்தனியாக அவர் உரை நிகழ்த்தினார். குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக அதிகாரிகள் இராணுவத் தள…

    • 0 replies
    • 473 views
  23. வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்கள் அங்குள்ள சுகாதாரச் சீர்கேடு மற்றும் காரணங்களினால் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்ற போதிலும் மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களையும் தடைகளையும் எதிர்கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 370 views
  24. அரசின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு த.தே.கூ. ஆதரவளிக்கும்: மகிந்த கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில் அறிவிப்பு [வியாழக்கிழமை, 02 யூலை 2009, 07:49 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] வடபகுதியில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்காக அரசு மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என கொழும்பில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் இன்று கூட்டப்பட்ட அபிவிருத்திக்கும் நல்லிணக்கத்துக்குமான அனைத்து கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளுமா என்பது இன்று வியாழக்கிழமை காலை வரையில் கேள்விக்குறியாக இருந்த நிலையில் கூட்டமைப்பின் …

  25. தமிழர்-சிங்களர் சேர்ந்து 'தமிழர் அரசு': கருணாநிதி புதன்கிழமை, ஜூலை 1, 2009, 14:23 [iST] சென்னை: ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? அல்லது தமிழர்களை காப்பாற்றி அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பது முக்கியமா? என்பதை யோசி்த்து தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நம்முடைய கருத்துக்களை நீக்குபோக்குவுடன் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். மேலும் எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்களர்களுடன் சேர்ந்து ஒரு தமிழர் அரசை அமைக்கும் நிலை உருவாகலாம் என்றும் அவர் கூறினார். இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அங்கு தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தரவும், மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட அடிப்படை வசதிகளை வழங்குவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.