ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142943 topics in this forum
-
கிழக்கு மாகாணத்தில் 13 இஸ்லாமிய தீவிரவாத ஆயுதக்குழுக்கள் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்திருக்கும் காவல்துறையினர், இக்குழுக்களிடம் சக்திவாய்ந்த ஆயுதங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இக்குழுக்களில் சம்பந்தப்பட்டவர்கள் எதிர்வரும் 2 ஆம் நாளுக்கு முன்னர் தமது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கும் காவல்துறையினர், அதன்பின்னர் தேடுதல் நடவடிக்கை ஒன்றுக்கு படையினர் தயாராகி வருவதாகவும் அறிவித்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள் பல மிகவும் இரகசியமாகச் செயற்பட்டுவருவது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதையடுத்து சிறிலங்காவின் புலனாய்வுத்துறை அவற்றின் நடவடிக்கைகள், தொடர்புகளை அவதானித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்த…
-
- 0 replies
- 436 views
-
-
சிறிலங்கா படையினருக்கான வீடுகளை அமைப்பதற்கு நிதி திரட்டும் நோக்கில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளார். கலிபோர்னியா உள்ளிட்ட சில இடங்களில் இவர் படையினருக்கான நிதியை திரட்டும் நடவடிக்கையை இன்று சனிக்கிழமை தொடங்கி வைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு சேகரிக்கப்படும் நிதியைப் பயன்படுத்தி படையினருக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க கோத்தபாய ராஜபக்ச தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. படையினருக்கான வீடுகளை அமைக்கும் நோக்கில் இடம்பெறவுள்ள இந்த நிதி சேகரிப்பு நடவடிக்கைக்கு 'நமக்காக நாம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. வன்னியில் தமிழ்மக்கள் மீது ஈவு இரக்கமற்ற தாக்குதலை நடத்தி அவர்களை படுகொலை செ…
-
- 3 replies
- 606 views
-
-
இலங்கையின் அடுத்த இராணுவத் தளபதியாக யாரை நியமிக்கப் போகிறார் மகிந்த ராஜபக்ஸ? இப்போது எதற்கு இந்தக் கேள்வி? ஜெனரல் சரத் பொன்சேகா தான் பதவியில் இருக்கிறாரே. அதற்குள் அடுத்த இராணுவத் தளபதி என்ற கேள்வி ஏன் வந்தது என்று பலரும் குழப்பமடையலாம்.ஆனால், இந்தக் கேள்வியை எழுப்புகின்ற தருணம் வந்து விட்டது. புலிகளுடனான போரில் வெற்றிபெற்ற பின்னர்- இலங்கை அரசு தனது பாதுகாப்புக் கட்டமைப்புக்களை மாற்றியமைக்கின்ற முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தக் கட்டமைப்பு மாற்றத்தின் ஒரு அங்கமாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா- மேலதிக அதிகாரங்களுடன் 'பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி' (ஊhநைக ழக னுநகநnஉந ளுவயகக) என்ற உயர் பதவியில் அமர்த்தப்படவுள்ளார். தற்போதைய படைக் கட்டமைப்பிலும் பாத…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் அரச தலைவரின் செயலாளர் ஆகியோர் இந்தியாவுக்கு அண்மையில் மேற்கொண்ட பயணம் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்திருக்கின்றார். அநுராதபுரத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இந்தச் சந்தேகத்தை அவர் கிளப்பினார். "விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். எமது தாயகத்தை அபிவிருத்தி செய்வதற்கான பாதை இதுதான்" என்ற பொருளில் இந்தப் பொதுக் கூட்டத்தில் சோமவன்ச அமரசிங்க உரையாற்றினார். "பசில் ராஜபக்சவும், கோத்தபாய ராஜபக்சவும் இப்போது இந்தியாவில் நிற்கின்றார்கள். இவர…
-
- 1 reply
- 455 views
-
-
விடுதலைப் புலிகளின் முப்பத்து மூன்று வருடகால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாக கடந்த மே 18-ம் தேதி இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு முன்பே அதே மே மாதம் 2-ம் தேதி இலங்கையில் போர் உச்சகட்ட நிலையில் இருந்த-போது, இலங்கைக்கு உதவுவதற்காக 92 வாகனங்களில் ராணுவத் தளவாடங்களையும், பீரங்கி டாங்கி-களை-யும் இந்திய அரசு கொச்சின் வழியாக இலங்கைக்கு அனுப்புவதாகத் தகவல் பரவ, கோவையில் பெரியார் தி.க.வினரும், ம.தி.மு.க.-வினரும் அந்த வாகனங்-களை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற ஈழ ஆதரவாளர்கள், அந்த வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்தினர். இந்தச் சம்பவத்திற்காக பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ…
-
- 2 replies
- 1.2k views
-
-
நிதி உதவிகள் வழங்குவதில் அனைத்துலக நாணய நிதியம் அரசியலை புகுத்தியுள்ளது. அதனால் தான் சிறிலங்காவுக்கான 1.9 பில்லியன் டொலர் நிதி உதவி தாமதமடைந்து வருகின்றது என சிறிலங்காவின் அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: நிதி உதவிகள் வழங்குவதில் அனைத்துலக நாணய நிதியம் அரசியலை புகுத்தியுள்ளது. அதனால் தான் சிறிலங்காவுக்கான 1.9 பில்லியன் டொலர் நிதி உதவி தாமதமடைந்து வருகின்றது. முன்னர் எப்போதும் அனைத்துலக நாணய நிதியம் நிதி உதவிகள் வழங்குவதற்கு அரசியல் காரணிகளை கருத்தில் கொண்டதில்லை. ஆனால் தற்போது அது முதல் தடவையாக அதனை மேற்கொண்டுள்ளது. நாம் அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கடனைப் பெறுவதற்கான உடன்பாடுகளை கடந்த …
-
- 1 reply
- 432 views
-
-
மனித நேய நிவாரண அமைப்புக்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களை எதுவித தடையும் இன்றி சந்திப்பதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படும் என தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்க அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா தொடர்பான வெளிவிவகாரக்குழு முன்னிலையில் விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். சிறிலங்கா தொடர்பாக அவர் தனது விளக்கமளிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையிலான போர் முடிவடைந்த பின்னர் நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்த மக்களுடனான தொடர்பு முறைகளில் முன்னேற்றம் காணப்படுள்ளது. போர்…
-
- 1 reply
- 493 views
-
-
தமிழ் மக்கள் மீது இன அழிப்புத் தாக்குதலை மேற்கொண்ட சிறிலங்கா படை உயரதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் தூதுவர் பதவிகளை வழங்கும் நடவடிக்கையை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் துரிதப்படுத்தியிருக்கிறது. இதன் முதற்கட்டமாக 57 ஆவது படையணியின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஜேர்மனிக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பிரதித் தூதுவர் பதவியை பொறுப்பேற்பதற்காக 57 ஆவது படையணியின் தளபதி பதவியில் இருந்து அவர் விலகியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் கொழும்பில் இருந்து ஜேர்மனிக்கு சென்றிருப்பதாக அரசாங்க தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் 57 ஆவது படையணியின் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டிருந்ததுடன் இராணுவத்…
-
- 1 reply
- 593 views
-
-
தாலுவ அரசியல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த, தாம் பிறந்த சொந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இலங்கை அரசால் கைது செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகால ஒழுங்குமுறைகள் மற்றும் சட்ட முறைகளின் கீழ் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார். இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் வெளி நாடு ஒன்றில் இருந்தால் அவரை வேற்றரசிடம் ஒப்படைக்கும் சட்டத்தின்கீழ் கைது செய்யலாம் என்றும் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த விதமான மிரட்டல் விடுவதைப் போன்ற பேச்சைப் பார்க்கும்போது, தற்போது வெளிநாடுகளில் உள்ள எமது தமிழ் மக்கள் பிரகடனப்படுத்தியுள்ள நாட…
-
- 1 reply
- 1.1k views
-
-
அனைத்துலக சமூகங்களினதும் நிறுவனங்களினதும் சாட்சியங்களும் நிவாரணங்களும் மக்களைச் சென்றடையாது தடுப்பதை சர்வதேச சமூகம் அனுமதிப்பதற்கு, நிகழ்காலத்தில் சிறீலங்கா ஒரு சிறந்த உதாரணமாகும் என்று கூறும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனிதாபிமானச் செயற்பாடுகளின் துணைச் செயலாளராகவும் அவசரகால நிவாரண நிதிகளின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த ஜன் எகலாண்ட் (Jan Egeland), உலக அரசுகள் 2005இல் பிரமாணம் எடுத்துக்கொண்ட "பாதுகாப்பதற்கான கடமை" (R2P)யை நிறைவேற்றத் தவறியுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த முகாம்களுக்குள் பெண்கள் பெரும் கொடூரங்களை எதிர்நோக்குகின்றார்கள் எனக்கூறியுள்ள அவர், தனக்குப் பின் பொறுப்பேற்ற ஜோன் கோல்ம்ஸ் வவுனியா தடுப்பு முகாம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்…
-
- 0 replies
- 797 views
-
-
சிறிலங்கா அரசின் சதித் திட்டத்துக்கு இந்திய வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் துணை போகின்றார் என்று தமிழீழ ஆதரவாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக 'விகடன்' குழுமத்தின் 'ஜூனியர் விகடன்' வாரம் இருமுறை இதழுக்கு அவர் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது: ''ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது!'' மகிந்த ராஜபக்சவிடம், ஜூன் 9 ஆம் நாளன்று 'இந்திய வேளாண் விஞ்ஞானி' எம்.எஸ்.சுவாமிநாதனால் உதிர்க்கப் பட்ட வார்த்தைகளாம் இவை. பசுமைப்புரட்சி என்ற பெயரில் இந்திய வேளாண் விளைநிலங்களை எதற்கும் உதவாத தரிசு நிலங்களாக மாற்றி, உலகுக்கு உணவளித்த இந்திய விவசாயிகளை லட்சக்கணக்கில் தற்கொலைக்குத் தள்ளியவர் என்ற விமர்சனங்களுக்கு …
-
- 0 replies
- 552 views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'உதயன்' நாளேட்டுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கைகளுடன் கூடிய துண்டுப்பிரசுரங்கள் குடாநாட்டில் இன்று விநியோகிக்கப்பட்டுள்ளது. 'உதயன்' நாளேட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் இம்மாத இறுதியுடன் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும் எனவும் இந்தத்துண்டுப் பிரசுரத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 639 views
-
-
தமிழ் மற்றும் சிங்கள மக்கன் இன மோதல்களுக்கான அடிப்படை காரணிகளை நீக்குவதற்கு அனைத்துலகத்தின் ஆதரவுகளைக் கொண்ட செயற்பாடுகளை கனடா தலைமை தாங்கி மேற்கொள்ள வேண்டும் என கனடா நாட்டு அங்கிலிக்கன் தேவாலய பேராயர் பிராட் கில்ட்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கனடா நாட்டு அங்கிலிக்கன் தேவாலய பேராயர் பிராட் கில்ட்ஸ் கனேடிய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட படை நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்துலகத்தின் உதவிகளை கனடா முன்னெடுக்க வேண்டும். வன்னி மக்கள் அடிப்படை வசதிகள் இன்றியும், பாதுகாப்பு இன்றியும் வாழ்கின்றனர். அண்மையில் அவர்கள் மோதல்களில் அகப்பட்டு மிக…
-
- 0 replies
- 429 views
-
-
தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற தமிழர்களின் அரசியல் வேட்கைகளுக்காக எமது இயக்கம் ஒரு புதிய பாதையில் இனிப் போராடும். அரசியல் வழியில் போராட்டத்தைத் தொடரும் வகையில் எமது அமைப்பில் நாம் மாற்றங்கள் செய்து வருகின்றோம். அதனடிப்படையில் - புலம்பெயர் தமிழர்களினதும் தமிழ் நாட்டு மக்களதும் ஆதரவுடன் நாம் அனைத்துலக மட்டத்தில் எமது போராட்டத்தை முன்னெடுப்போம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 508 views
-
-
முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் சிறிலங்கா கூட்டுப்படைத் தலைமையகங்களை அமைக்கும் நடவடிக்கையை சிறிலங்காவின் படைத் தளபதி சரத் பொன்சேகா தீவிரப்படுத்தியிருக்கிறார். சிறிலங்கா படைத்தளபதி சரத் பொன்சேகா நேற்று வெள்ளிக்கிழமை வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்கு பயணம் செய்து இது குறித்து ஆராய்ந்ததுடன் வன்னியின் பாதுகாப்பு நிலைமைகளையும் ஆராய்ந்திருக்கின்றார். வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்கு சென்ற சரத் பொன்சேகாவை வன்னி படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, அங்குள்ள கேட்போர் கூடத்தில் பாதுகாப்பு நிலைமைகளை ஆராயும் சிறப்பு கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் வன்னியில் படை நடவடிக்கைகளை மேற்கொண்ட படைத் தளபதிகள் மற்றும் படை உயரதிகாரிக…
-
- 0 replies
- 416 views
-
-
இன அழிப்பு உச்சத்தை எட்டிய 19/5 க்குப் பிறகு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களைப் பற்றியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும் உலகத்தமிழர்கள் மத்தியில் பல்வேறு விதமான குழப்பங்களும் சந்தேகங்களும் உலா வருகின்றன. பல்லாயிரக்கணக்கில் நடந்த படுகொலைகளை மறந்து விட்டு, தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் ஆழ்ந்து போக வேண்டும் என்று சிங்கள அரசு விரும்பியவாறே தற்பொதைய நிலவரங்கள் உள்ளன. மேலும், இயக்கத்தில் உள்ளதாக சொல்லப்படும் சில தலைவர்களின் அறிக்கைகள், “போராளிகள்” என அடையாளப்படுத்தப்படும் சிலரது கட்டுரைகள் சிங்கள அரசின் உளவுத்துறைக்கு நேரடியாகவே துணைபோவதாக நாம் கணிக்கிறோம். ஏற்கெனவே இது, இந்திய “றோ” உளவுத்துறையின் சதியா…
-
- 12 replies
- 1.9k views
-
-
கடல் கடந்த தமிழீழ அரசு அமைக்கப்படுவதனை வரவேற்றுள்ள சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த இனவெறிக்கு எதிரான அமைப்பு இந்த நன்முயற்சிக்கு அனைத்துலக பொது சமூகம் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 461 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பில்லி சூனியம் வைத்து தாமே கொலை செய்ததாகவும் மகிந்த ராஜபக்சவின் அரசு விரைவில் கவிழும் எனவும் சிறிலங்கா அரசின் தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் கூறிய பிரபல சோதிடர் ஒருவர் தற்போது நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 396 views
-
-
தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும். அவர்களின் கலை, கலாச்சாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களில் தமது உழைப்பில் வாழும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 368 views
-
-
“சர்வதேச சமுதாயத்தின் சாட்சிகளையும், மனிதாபிமான உதவிகளையும் மற்றும் மக்களின் பாதுகாப்பையும் மறுக்கும் அரசொன்றை கண்டுகொள்ளாமல் இருக்கும் உலகச் சமுதாயத்தின் அண்மைய உதாரணங்களில் ஒன்று சிறிலங்கா” என, ஐ.நா.வினது மனிதாபிமான விவகாரங்களின் முந்நாள் துணைச் செயலாளர் நாயகமும் மற்றும் அவசர நிவாரண ஒருங்கிணைப்பாளருமான, ஜான் ஈக்லான்ட், செவ்வாய்க்கிழமையன்று, ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார். “தமிழ்ப் பெண்களுக்கு பல பயங்கரங்கள் நடந்திருந்தமையையும், மற்றும் 2005 ஆம் ஆண்டில் “பாதுகாப்புக்கான பொறுப்பு” என்று சத்தியம் எடுத்தமையையும் உலக அரசுகள் மறந்து அதில் தோல்வியடைந்துள்ளது என்றும், ஈக்லான்ட், தனது கூற்றில் தெரிவித்துள்ளார். இவரின் இக்கூற்றானது, இவருக்குப் பின் இவர் இடத்தில் …
-
- 0 replies
- 884 views
-
-
ஈழம் அவசியம்... அவசரம் கடல் அலை சொல்லும் கதை, நெஞ்சைக் கரிக்கிறது. அமைதியும் அல்லாத, போரும் இல்லாத சூனியத்தில் ஈழத்து மக்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது காலம். '30 ஆண்டுகாலப் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டோம்' என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது கொழும்பு. 'சர்வதேசியத் தமிழீழ அரசாங்கம்' என்ற கற்பனைக் கோட்டையில் மிதக்கிறார்கள் புலிகள் ஆதரவாளர்கள். 'ஐந்தாம் யுத்தம்' கர்ஜனைகளைப் போட்டு உண்மையை உணரவிடாமல் ஆகாயக் கோட்டைக்கு அழைத்துப் போகிறார்கள். இன்று 'தமிழீழத்தில்' தவிக்கும் அப்பாவி அபலைத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் இது எதுவும் இல்லை. அவசரமாக, அவசியமாகச் செய்ய வேண்டிய விஷயங்கள் என்று அவர்கள் உலகிடம் எதிர்பார்ப்பது இவைதான்...…
-
- 4 replies
- 1.7k views
-
-
புலிகள் அழித்தொழிக்கப்பட்டாலும் அதன் ஆவிகள் ஆடுகின்றன - சபையில் விமல் வீரவன்ச எம்.பி. வீரகேசரி இணையம் 6/25/2009 7:25:08 PM - புலிகள் அழித்தொழிக்கப்பட்டாலும், அதன் ஆவிகள் இன்னும் ஆடுகின்றன என்பதனால் வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை நிர்மாணிக்க வேண்டாம் என்று கோருவதற்கு தமிழ்த் தேசியக் கட்டமைப்பிற்கு எவ்விதமான அருகதையும் இல்லை என்று தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டுப்படைகளின் தளபதி சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது: மீண்டும் பயங்கரவாதம் தோன்றிவிடாமல் இருப்பதற்கு …
-
- 1 reply
- 1.2k views
-
-
கச்சதீவில் இராணுவ முகாம் அமைக்கும்நோக்கம் இல்லை - அரசாங்கம் தெரிவிப்பு வீரகேசரி இணையம் 6/21/2009 6:52:01 PM - கச்சதீவு பிரசேதத்தில் இராணுவ முகாம் அமைக்கும் நோக்கம் எதுவுமில்லை என முற்றுமுழுதாக இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவின் எல்லைப்புறமாக பாக்கு நீரினைக்கு அருகில் குடிமக்கள் எவருமற்ற 275 ஏக்கர் நிலப்பரப்பில் கச்சதீவு அமைந்துள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சர் கருத்து வெளியிடுகையில், இலங்கை புதுடில்லியுடன் நல்லதொரு உறவை பேணிவருகிறது. இந்த வகையான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் மூலம் இருதரப்பு உறவை பாதிக்கவைக்க சில சக்திகள் முயற்சிக்கின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார். 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை…
-
- 5 replies
- 751 views
-
-
வியாழக்கிழமை, 25, ஜூன் 2009 (13:12 IST) இலங்கை தமிழர்களை காப்பாற்ற--- முதல்வர் பேச்சு இலங்கைக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச் செல்லும் வணங்காமண் கப்பல் அனுமதிக்கப்படாமல் நிறுத்தப்பட்டது பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டசபையில் இன்று கொண்டு வரப்பட்டது. இதற்கு பதிலளித்து முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார். அப்போது, ‘'இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்கவில்லை. இதுபற்றி கடந்த ஒரு வாரமாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு மத்திய வெளியுறவு துறை மந்திரியுடன் தொடர்பு கொண்டு கப்பலை அனுப்ப எடுத்த நடவடிக்கை எல்லாம் உறுப்பினர்கள் தெரிந்ததுதான். ஆனால் அ.தி.மு.க. உறுப்பினர் சேகர்பாபு எ…
-
- 5 replies
- 1.1k views
-
-
உதயன் தினக்குரல் பத்திரிகைகள் ஒட்டுக்குழுக்களால் எரிப்பு யாழ் நகரில் வியாழன் காலை விநியோகிப்பதற்காக வைத்திருந்த உதயன் தினக்குரல் பத்திரிகைகள் ஆனைப்பந்தி என்ற இடத்தில் வைத்து வியாழன் அதிகாலை 5 மணியளவில் அரசோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களால் எரியூட்டப்பட்டதாக பிந்திக்கிடைத்த தகவல் நன்றி C M R கனடா
-
- 7 replies
- 2.1k views
-