ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143546 topics in this forum
-
Published By: DIGITAL DESK 3 18 SEP, 2023 | 05:28 PM (இராஜதுரை ஹஷான்) வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு வெற்றி பெற்றாலும்,தோல்வியடைந்தாலும் இலங்கை நெருக்கடிக்குள்ளாகும். எதிர்வரும் 27ஆம் திகதி தீர்மானமிக்கது. தவறான பொருளாதார கொள்கையினால் தீவிரமடைந்துள்ள மூளைசாலிகள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, …
-
- 0 replies
- 369 views
- 1 follower
-
-
நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை – ஜனாதிபதி முக்கிய நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடலில் தனது செல்வாக்கை நிலைநிறுத்த பெரும் வல்லரசுகள் முயற்சித்து வரும் நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் எந்தவொரு இராணுவ ஒத்திகைக்கும் இலங்கை ஆதரவளிக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நடைபெற்ற இந்திய-பசிபிக் தீவுகள் உரையாடல் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடலில் உள்ள …
-
- 0 replies
- 559 views
-
-
தமிழ் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மீதான நம்பிக்கை குறைந்து வருகின்றது! -செல்வம் அடைக்கல நாதன் ”ஐக்கிய நாடுகள் சபை மீதான நம்பிக்கை தமிழ் மக்களுக்கு குறைந்து வருகின்றது” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” ஐக்கிய நாடுகள் சபை வலுவான அல்லது ஆக்க பூர்வமான தீர்மானங்களை கொண்டு வந்து இலங்கை அரசாங்கத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மனித உரிமை மீறல்களுடன் சம்மந்தப்படவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதும் எமது மக்களின் கோரிக்கைய…
-
- 0 replies
- 413 views
-
-
-
- 0 replies
- 403 views
-
-
Published By: DIGITAL DESK 3 18 SEP, 2023 | 02:49 PM தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் தடை கோரி வவுனியா நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த போதும், நீதிமன்றம் அதனை நிராகரித்து, குழப்பங்கள் ஏற்படாத வகையில் பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறு இன்று திங்கட்கிழமை (18) உத்தரவு பிறத்துள்ளது. தியாக தீபம் திலீபன் அவர்களின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னனியால் ''திலீபன் வழியில் வருகின்றோம்'' என்னும் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியானது பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு, திருகோணமலையில் வலம் வந்த போது சிங்கள இனத்தைச் சேர்ந்த குழு ஒன்றினால் தாக்கப்பட…
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
மூத்த இராஜதந்திரியை கொழும்புக்கு அனுப்பும் டெல்லி 17 SEP, 2023 | 04:21 PM (லியோ நிரோஷ தர்ஷன்) ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்தியத் தூதுவராக இராஜதந்திர சேவையில் உள்ள மூத்த அதிகாரி சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காயாற்றியுள்ள மூத்த இராஜதந்திரி சந்தோஷ் ஜா, இலங்கையில் இறுதிப் போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு இந்திய திட்டங்களுக்கும் தலைமைதாங்கியுள்ளார். இலங்கை - இந்திய புதிய …
-
- 2 replies
- 533 views
-
-
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு 17 SEP, 2023 | 02:01 PM (எம்.வை.எம்.சியாம்) இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தரப்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகளுக்கும் அந்நாட்டு தூதுவர் ஜூலி சங்கிற்குமிடையில் சிநேகபூர்வ சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொள்கைகள், குறிக்கோள்கள், சமூகம் தொடர்பிலான பணிகள், தேசியம் மற்றும் சர்வதேசம் சார்ந்த முன்னெடுப்புக்கள் நல்லுறவுகள் பற்றிய அறிமுகங்கள் இந்த சந்திப்பின்போது அமெரிக்க தூதுவருக…
-
- 0 replies
- 281 views
-
-
Published By: VISHNU 17 SEP, 2023 | 01:19 PM குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி - இக்பால் நகர் தொடக்கம் தென்னமரவடி வரை கடற்கரை ஓரமாக மணல் அகழும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணல் அகழ்வினால் பாதிக்கப்படும் கிராமங்களில் வசிக்கும் மூவின மக்களும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (17) குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ள குறித்த மணல் அகழ்வு அனுமதியை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த மணல் அகழ்வின் மூலம் இயற்கை வளம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல்…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 20 JUN, 2023 | 10:34 AM (எம்.நியூட்டன்) இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நெடுந்தீவு அருகே திங்கட்கிழமை இரவு இந்திய மீனவர்களின் படகு இருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த ஒன்பது மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http…
-
- 11 replies
- 955 views
- 1 follower
-
-
வடக்கு, கிழக்கில் படைக் குறைப்பு இல்லை: சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் திட்டவட்டம் வடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்குமான கட்டளைத் தளபதிகளின் எண்ணிகை இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது என வெளியான தகவல் தொடர்பில் கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்குறைப்பு செய்யப்படவில்லை எனவும், கட்டளைத் தளபதிகளின் எணிக்கை குறைக்கப்படவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு யுத்தம் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடி…
-
- 0 replies
- 344 views
-
-
17 SEP, 2023 | 10:23 AM முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்று (16) மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் நபரொருவர் கடந்த புதன்கிழமை (13)காணாமல் போயிருந்த நிலையில், இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் தென்னம் காணியொன்றில் இருந்து துர்நாற்றம் வீசியமையால் அங்கிருந்த கிராமவாசி ஒருவர் சென்று பார்த்தவேளை அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட குறித்த நபர் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த இராசலிங்கம் சுதர்சன் என …
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
16 SEP, 2023 | 08:51 PM ஆர்.ராம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தலைவர்கள் ஒன்றிணைந்த சந்திப்பொன்றை நேரடியாக மேற்கொள்வது தொடர்பில் இதுவரையில் அத்தலைவர்களுள் இணக்கப்பாடில்லாத நிலைமைகள் தொடர்கின்றன. தமிழர்களின் இனப் பிரச்சினை உட்பட ஏனைய விடயங்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திப்பதற்கு தமிழ்த் தலைவர்கள் ஒருங்கிணைத்து பயணமொன்றை மேற்கொள்வதற்கும் ஒன்றிணைந்து சந்திப்பொன்றை நடத்துவதற்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் எழுத்துமூலமான கடிதத்தினை ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார். குறித்த கடிதத்தின…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
Published By: VISHNU 14 SEP, 2023 | 09:04 PM (இராஜதுரை ஹஷான்) புகையிரத பாதையை புனரமைக்கும் இந்திய நிறுவனத்திடமிருந்து நான் 5 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக புகையிரத சேவை சங்கத்தின் தலைவர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் இந்திக தொடங்கொட என்பவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பொய்களின் திணிப்பு. இவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். குற்றச்சாட்டை நிரூபித்தால் முழு அரசியலிலும் இருந்து விலகுவேன் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பி…
-
- 2 replies
- 469 views
- 1 follower
-
-
16 SEP, 2023 | 08:54 PM ஆர்.ராம் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி போன்று வடக்கு, கிழக்கில் மேலும் பல மனிதப் புதைகுழிகள் காணப்படலாம் என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராஜா அச்சம் வெளியிட்டுள்ளார். அத்துடன், ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச தரப்பினர் தலையீடுகளைச் செய்து, துறை சார்ந்த நிபுணர்களின் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் எனவும், அதன் மூலம் தமிழின அழிப்பு நடைபெற்றது என்பது உறுதியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில், கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 17 எல…
-
- 1 reply
- 242 views
- 1 follower
-
-
மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு இந்தியா வலியுறுத்தல் தமிழர்கள் உட்பட குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை விரைவில் உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது.2009ஆம் ஆண்டு முதல் இலங்கையின் நிவாரணம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புச் செயன்முறைகளுக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது என ஜெனிவாவில் உள்ள ஐ. நா சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே தெரிவித்துள்ளார். அத்துடன், சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் தமிழர்களின் அபிலாஷைகளை ஆதரிக்கும் அடிப்படைக் கொள்கைகளை இந்தியா ஆதரித்து வருவத…
-
- 1 reply
- 471 views
-
-
Published By: DIGITAL DESK 3 15 SEP, 2023 | 05:19 PM (நா.தனுஜா) தமிழ்மக்கள் செறிந்துவாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இடம்பெற்றுவரும் தீவிர பௌத்தமயமாக்கலை ஆவணப்படுத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தவறியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், அரச கட்டமைப்புக்களின் ஆதரவுடன் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் இத்தகைய நடவடிக்கைகள் இனங்களுக்கு இடையிலான வன்முறையாக நிலைமாற்றமடையக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை தொடர்பான தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், பிரித்தானிய தமிழர் பேரவை,…
-
- 4 replies
- 304 views
- 1 follower
-
-
16 SEP, 2023 | 08:42 PM தியாகி திலீபன் சாகவில்லை, அவர் கொலை செய்யப்பட்டார். இந்தியாவின் அகிம்சையும் இலங்கை தேசத்தின் சிங்கள பௌத்தமும் அவரை கொலை செய்துள்ளது. எனவே குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டின் முன் நிறுத்தி தண்டிக்கப்படும் வரையும் இந்த தேச இலச்சிய அரசியல் வெல்லும் வரையும் சாட்சியாக நாங்கள் போராடுவோம். எமது போராட்டம் தொடரும் என மனித உரிமை செயற்பாட்டாளரான வணபிதா மா. சக்திவேல் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தலையிட்டு பொத்துவில் இருந்து யாழ் நோக்கிய தீலிபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தி நேற்று வெள்ளிக்கிழமை (15) மாலை பொத்துவில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது வண…
-
- 2 replies
- 243 views
- 1 follower
-
-
திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியை அக்கரைப்பற்றில் மறித்து எதிர்ப்பு ஆர்பாட்டம்! kugenSeptember 16, 2023 தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஆரம்பிக்கப்பட்ட தீலிபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியை அக்கரைப்பற்றுப் பகுதியில் வைத்து மறித்த சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை (15) மாலை குறித்த வாகன ஊர்தி இடம்பெற்றபோதே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தல் தினத்தையிட்டு 15ம் திகதி தொடக்கம் 27 ம் திகதிவரையில் திலீபன் வாரத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள…
-
- 3 replies
- 552 views
-
-
Published By: VISHNU 15 SEP, 2023 | 04:24 PM வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தமிழ் கிராமமான கருப்பனிச்சாங்குளம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை அருகில் உள்ள கொக்குவெளி பகுதி சிங்கள மக்களுக்கு மயானம் அமைக்க வழங்குவதற்கு, அளவீடு செய்ய வந்த நில அளவைத் திணைக்களத்தினர் மக்களது எதிர்ப்பையடுத்து அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர். வெள்ளிக்கிழமை (15) காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட கருப்பனிச்சான்குளம் கிராமம் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் கிராமம் ஆகும். குறித்த கிராமத்தில் வசித்து வந்த தமிழ் மக்கள் யுத்தம் காரணமாக இடப்பெயர்ந்த…
-
- 5 replies
- 488 views
- 1 follower
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியை பாவிக்க போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தடை விதித்துள்ளார். கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோர் ஸ்மார்ட் தொலைபேசியை பாவிக்க யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தடை விதித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு தவறான முறையில் "கானுலா" பொறுத்தப்பட்டமையால், சிறுமியின் இடது கை மாணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது. அது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தாதியர்கள் கவன குறைவினாலையே சிறுமியின் கை அகற்றப்பட்டது என பல தரப்பினராலும், குற்றம் சா…
-
- 2 replies
- 363 views
- 1 follower
-
-
16 SEP, 2023 | 04:15 PM அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆயிரம் உத்தியோகபூர்வ வாகனங்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களது தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெருமளவில் பணம் வீண் விரயமாகின்றமையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை சிலர் தங்களது தனியார் வாகனங்களை தாம் பணிபுரியும் நிறுவனத்துக்கு வாடகைக்கு வழங்கி அவற்றையும் தங்களது உத்தியோகபூர்வ வாகனங்களாக பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்களை தங்களது மனைவிகள்…
-
- 0 replies
- 439 views
- 1 follower
-
-
16 SEP, 2023 | 01:38 PM நல்லூரில் யாசகம் பெற வந்த பெற்றோர்களுடன் வந்த பெண் குழந்தையை காணவில்லை என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இருந்து, நல்லூர் ஆலய தேர் திருவிழாவிற்கு யாசகத்திற்காக இரண்டு பிள்ளைகளுடன் பெற்றோர் வந்துள்ளனர். அவர்கள் தேர் மற்றும் தீர்த்த திருவிழாவின் போது நல்லூரில் யாசகம் பெற்றுள்ளனர். அதன் போது , அவர்களின் இரண்டரை வயது பெண் பிள்ளை நல்லூர் வளாகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற தீர்த்த திருவிழாவின் போது காணாமல் போயுள்ளது. தமது குழந்தை காணாமல் போனது குறித்து , பெற்றோரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் வெள்ள…
-
- 0 replies
- 311 views
- 1 follower
-
-
16 SEP, 2023 | 04:38 PM போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபடுவதற்கு தாமாக முன்வந்த யாழ். இளைஞர்கள் 10 பேர் மறுவாழ்வுக்காக தேசிய அபாயகர ஔடதங்கள் அதிகார சபையின் நிட்டம்புவ சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (14) இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இந்த விடயம் வெளிப்பட்டது. இதன்போது 21 முதல் 32 வயதுக்குட்பட்ட இளைஞர்களே மறுவாழ்வு சிகிச்சைக்காக தாமாக முன்வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/164720
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
15 SEP, 2023 | 05:23 PM (எம்.வை.எம்.சியாம்) 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறே தமிழ் தலைவர்கள் கோருகிறார்கள். தற்போது 13 ஐ நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி கூறுகிறார். அது மிகப்பெரிய விடயமல்லவா? எனது நிலைப்பாட்டை கடுகளவேனும் மாற்றவில்லை. அவர் மாறியுள்ளார். 13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டிய உண்மையான தேவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது. இது தொடர்பில் சிறந்த புரிந்துணர்வும் அவருக்கு உள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இந்த பிரச்சினை தொடர்பில் நான் பேச வேண்டும். எனது வாழ்வில் இந்த பிரச்சினைக்காக பாரியளவில் அர்பணித்த…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
16 SEP, 2023 | 10:27 AM கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையை ஆரம்பித்து 3 மாத காலப்பகுதிக்குள் காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவில் இருந்து 6000க்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. இது குறித்து துணைத் தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிவிப்பில், கடந்த ஜூன் 16ஆம் திகதி அதன் ஆரம்ப வருகையிலிருந்து 9 தடவையாக மேற்கொள்ளப்பட்ட அடுத்தடுத்த பயணங்களின் போது, சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாண நகரத்தில் ஒரு மறக்க முடியாத விடுமுறை அனுபவத்தைத் தொடங்கினர். அதன் வளமான வரலாற்றுடன், யாழ்ப்பாணம் தென்னிந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளும் கலாசார பிணைப்புகளையும் அனுபவித்தனர். யாழ…
-
- 0 replies
- 264 views
- 1 follower
-