ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142840 topics in this forum
-
எதிர்வரும் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில், தரம் ஒன்பதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு, வெள்ளிக்கிழமை பாடசாலை நிறைவடைந்த பின்னரும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும், தனியார் வகுப்புக்களை நடத்துவதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரனின் தலைமையில் இன்று(9) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலில், சுகாதாரம் மற்றும் கல்வித்துறைசார் அதிகாரிகள், மதத் தலைவர்கள், காவல்துறையினர், தனியார் கல்வி நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக, வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் …
-
- 3 replies
- 473 views
- 1 follower
-
-
மல்லாவி பாலிநகர் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி! மல்லாவி காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பாலிநகர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் காவற்துறைப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களை கைது செய்ய காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://globaltamilnews.net/2023/192847/
-
- 0 replies
- 233 views
-
-
வி.நிதர்ஷன் “வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனித் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கும், அதற்குரிய பாரிய கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அண்மையில் அவசரம் அவசரமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்தோடு, தொழிற்சாலையின் அமைவிடத்துக்கெனவும் கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கெனவும் முதற்கட்டமாக 74,100 ஏக்கர்கள் அளவு காணியை விடுவிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. “இத்திட்டத்தை முன்னெடுத்துள்ள தரப்பு, இது போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கென வாராதுவந்த வரப்பிரசாதம் என்று இனிப்பாய்ச் சிலாகித்து வருகிறது. “ஆனால், இதன் உண்மைகள் மிகவும் கசப்பானவை. வடக்கில் சீனித் தொழிற்சாலை இனிப்புத் தடவிய விஷம்” என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்…
-
- 3 replies
- 383 views
- 1 follower
-
-
ஜனாதிபதி ரணிலுடன் எதிர்கால அரசியல் பயணத்தை தொடர விரும்பும் பொதுஜன பெரமுனவின் இளம் எம்.பி.க்கள் Published By: Nanthini 09 Jul, 2023 | 03:46 PM (எம்.மனோசித்ரா) அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க மற்றும் பிரமித பண்டார தென்னகோன் உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் இளம் உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து தமது எதிர்கால அரசியல் பயணத்தை தொடர தீர்மானித்துள்ளனர். கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு நாட்டின் ஸ்திரத்தன்மை முற்று முழுதாக பாதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை பொறுப்…
-
- 1 reply
- 363 views
-
-
அசுர வேகத்தில் பயணித்த யாழ்தேவி அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று காலை பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் மணிக்கு 100kmph வேகத்தில் பயணித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹவ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் வவுனியா – .அனுராதபுரம் வரையில் 48 கிலோமீற்றர் புகையிரத பாதையும், வவுனியா ஓமந்தை வரையான 13 கிலோமீற்றர் புகையிரத பாதையும் புனரமைக்கப்பட்டன. இந்த அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு 91.27 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டிருந்தது .இந்த அபிவிருத்தி செயற்திட்டம் நிறைவுப…
-
- 3 replies
- 838 views
-
-
பிரபாகரன் பற்றி கருத்து தெரிவித்த மைத்திரி தமிழீழ விடுதலை புலிகளின் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பாக பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது தமக்கு எதுவும் அறிக்கையிடப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென தெரிவித்துள்ளார். அத்துடன் பிரபாகரனின் மரபணுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாகவும் தாம் அறிந்திருக்கவில்லை என யாழ்ப்பாணத்தில் நேற்று (2) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணுப் பரிசோதனைக்காக இராணுவத்தால் மாதிரி எடுக்கப்பட்டு, இறுதி யுத்தத்தில் மீட்கப்பட்ட உடல் அவருடையதே என உறுதி செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா இராணுவம் கூறியிருந்தது.…
-
- 3 replies
- 675 views
-
-
ஜனாதிபதி ரணில் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் சந்திப்பொன்று எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பு புது டெல்லியில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு பயணிக்கவுள்ளார். இதன்போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாது…
-
- 0 replies
- 208 views
-
-
கஞ்சா வளர்ப்பு செயற்றிட்டம் ஆரம்பம்! கஞ்சா பயிர்ச்செய்கைத்திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த திட்டத்திற்கு 11 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ள நிலையில் கட்டுநாயக்கவிலுள்ள முதலீட்டுச் சபை வலயத்துள் மேற்படி கஞ்சா வளர்ப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த திட்டத்தால் இரண்டு மூன்று வருடங்களில் 4 முதல் 5 பில்லியன் ரூபா வருமானம் ஈட்ட முடியும்.எனவும் அவர் தெரிவித்துள்ளார்.. மேலும் கடந்த கால முயற்சியை தோற்கடித்தது போன்று இந்த…
-
- 0 replies
- 241 views
-
-
29 JUN, 2023 | 08:09 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள கூட்டுகின்ற அதிகாரமானது, மக்களின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களை மீள கூட்டும் அதிகாரத்தை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கும் சட்டமூலம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரமே அதிகாரம் வழங்கப்படுவதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டி…
-
- 1 reply
- 143 views
- 1 follower
-
-
இந்தியா எங்களை காப்பாற்றியது ; இரத்தக்களறியை தடுத்தது - சபாநாயகர் Published By: RAJEEBAN 09 JUL, 2023 | 09:53 AM இந்தியா எங்களை காப்பாற்றியது இரத்தக்களறியை தடுத்தது என இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டவேளை இலங்கையை காப்பாற்றியமைக்காகவும் இரத்தக்களறியை தவிர்த்தமைக்காகவும் இலங்கையின் நம்பகதன்மை மிக்க நண்பனான இந்தியாவிற்கு தனது நன்றியை தெரிவித்துள்ள இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன 1948 இல் சுதந்திரம் கிடைத்த பின்னர் இலங்கை எதிர்கொண்ட பேரழிவு மிக்க நிதி நெருக்கடியின் போது இந்தியாவை போல வே…
-
- 1 reply
- 280 views
- 1 follower
-
-
மண்டைதீவு கிணற்றில் 60 இற்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்கள் : சிறிதரன் குற்றச்சாட்டு! மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றில் 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்; தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்டபாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் கொக்குதொடுவாயில் பல பெண் போராளிகளின் உடல்கள் எனக் கூறப்படும் பல மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. எமது நாட்டில் எங்கு தோண்டினாலும் எலும்புக் கூடுகளே இன்று மீட்கப்படுகின்றன. இந்த நாட்டில்…
-
- 1 reply
- 193 views
-
-
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் வீழ்ச்சி கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துவருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னாமுனை தொடக்கம் செங்கலடி வரையான பகுதியில் வசித்து வரும் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் நேற்றைய தினம் மைலம்பாவெளி ஸ்ரீமுருகன் ஆலய வீதியில் குடிநீர் திட்டத்தின் ஆரம்ப விழா நடைபெற்றது. அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் குறித்த குடிநீர் திட்டத்திற்கு 100மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேசிய நீர்வழங்கல் வட…
-
- 0 replies
- 193 views
-
-
கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு - மக்கள் குமுறல் எழுச்சியாக மாறியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் மாபெரும் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்தது கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை ஜனாதிபதி ஒருவரை லட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தின் ஊடாக விரட்டியடித்த சம்பவம் நடந்தேறி இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி …
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
மன்னார் நடுக்குடா கடற்கரையில் கரை தட்டிய இந்திய கப்பல் July 8, 2023 இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும் கப்பல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (7) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை கடற்படையினர் மீட்டு நடுக்குடா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். அந்தக் கப்பலில், 11 பணியாளர்கள் உள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து, கடற்படை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், குறித்த கப்பல் கடற்படையால் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கப்பலை பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர். https://www.ilakku…
-
- 3 replies
- 348 views
- 1 follower
-
-
ஐனாதிபதி ரணிலை சந்தித்தார் கருணா அம்மான்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் ( கருணா அம்மான்) இடையிலான விசேடசந்திப்பு நேற்று காலை ஜனாதிபதியில்லத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பிலும் , எமது புலம்பெயர்ந்த உறவுகள் எமது மண்ணில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், முதலீடுகளுக்கும் இடையூறாக இருக்கும் விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆரயப்பட்டதாகவும் , அதேவேளை இவ்விடையம் தொடர்பில் முனைப்புடன் செயற்படுமாறும் தேவை ஏற்படும் போது நேரடியாக தன்னை அணுகுமாறும் கருணா அம்மானிடம் ஜனாதிபதி தெரிவித்ததாகவும் க…
-
- 4 replies
- 515 views
-
-
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மேலும் பல வரிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செல்வ வரி, காணி வரி மற்றும் தோட்டவரி ஆகியவை முதலில் அறிமுகப்படுத்தப்படும் உத்தேச வரிகள் என்று கூறப்படுகிறன. இதேவேளை, இதுவரை VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு VAT விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. செலவினங்களைக் குறைப்பதற்கும், வருவாய் அதிகரிப்பை உருவாக்குவதற்கும் சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு வழங்கிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இந்த வரிகள் விதிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே பல வரிகள் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல வரிகள் நடைமுறைக்கு வரவுள…
-
- 0 replies
- 270 views
-
-
ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மில்லியன் ரூபா மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 12ஆம் திகதி ஏல விற்பனை ஊடாக வழங்கப்பட உள்ளதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனை ஊடாக வழங்கப்பட உள்ளதென மத்திய வங்கி அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/262075
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,MOD SRI LANKA கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 22 ஜூன் 2023, 14:27 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பிரபாகரனின் மரண பரிசோதனை அறிக்கையை வழங்குமாறு கோரி, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன தாக்கல் செய்த கோரிக்கைக்கு பதிலளித்தபோதே பாதுகாப்பு அமைச்சு இதைக் குறிப்பிட்டுள்ளது. பிரபாகரனின் மரண பரிசோதனை அறிக்கையை வ…
-
- 14 replies
- 1.4k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ARUL JESU படக்குறிப்பு, மனைவியுடன் அருள் ஜேசு 7 ஜூலை 2023 இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிர நிலையை அடைந்து, ஓர் ஆண்டு கடந்துள்ள நிலையில், அதன் தாக்கம் இன்றும் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட பலர் இன்றும் முன்னேற முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து, ஆட்சி மாற்றம் வரை நீடித்திருந்தது. எரிபொருளுக்கான தட்டுப்பாடு, எரிவாயுக்கான தட்டுப்பாடு, மருந்துக்கான தட்டுப்பாட்டு, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு எனப் பெரும்பாலான பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
நெதர்லாந்தில் உள்ள கண்டி இராச்சிய கலைப்பொருட்கள் மீண்டும் இலங்கைக்கு! on Saturday, July 08, 2023 நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகங்களில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக வைக்கப்பட்டிருந்த கண்டி இராச்சியத்தை சேர்ந்த ஆறு கலைப்பொருட்கள் இலங்கைக்கு மீள ஒப்படைக்கப்படவுள்ளன. கலைப்பொருட்களை இலங்கையிடம் ஒப்படைக்கும் தீர்மானத்தை நெதர்லாந்து அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. கண்டி பீரங்கி என அழைக்கப்படும் அலங்கரிக்கப்பட்ட துப்பாக்கி, தங்கம் மற்றும் வெள்ளியிலான வாள்கள், கத்தி மற்றும் இரண்டு துப்பாக்கிகள் என்பன அந்த கலைப்பொருட்களில் அடங்கும். இது தொடர்பான வர்த்தமானியை நெதர்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக தேசிய அருங்காட்சியகங்க…
-
- 0 replies
- 216 views
-
-
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக அருளானந்தம் உமாமகேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய அருளானந்தம் உமாமகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய க.விமலநாதன் ஓய்வு பெற்றார். அந்த இடத்திற்கு நிலவிய வெற்றிடத்திற்காக உமாமகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான அ. உமாமகேஸ்வரன் திருகோணமலை, கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றியவர். திருகோணமலை மாவட்டத்தின் வெருகல், குச்சவெளி ஆகிய பிரதேசங்களின் பிரதேச செயலாளராகவும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் வடக்கு மாகாண பிரதி…
-
- 0 replies
- 171 views
-
-
மனித புதைகுழி விவகாரம் : கருணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – கஜேந்திரகுமார் மனிதப் புதைகுழிகள் தோண்டப்படும் போது வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயிலிருந்து பல மனித எச்சங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில் அதில் தமது உறவுகளும் இருக்கலாமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச விதிமுறைகளை கடைபிடித்து வெளிநாட்டு நிபுணர்கள், தடயவியலாளர்கள் ஆகியோரின…
-
- 0 replies
- 259 views
-
-
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சர் அழுத்தம் கொடுக்க வேண்டும் - பிரான்சிஸ் ரட்ணகுமார் Published By: Digital Desk 3 08 Jul, 2023 | 09:39 AM இந்தியாவிற்கு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்களை வழங்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார் கோரிக்கை முன்வைத்தார். யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்…
-
- 0 replies
- 167 views
-
-
வவுனியா - பெரிய விளாத்திக்குளம் வீதியை பார்வையிட்ட நீதிபதி : வீதியை அமைக்க உடனடி நடவடிக்கை Published By: Nanthini 08 Jul, 2023 | 10:49 AM வவுனியா - பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதியை தமது பாவனைக்கு வழங்க வேண்டும் என கிராம மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், அவ்வீதியை வவுனியா நீதிவான் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (07) பார்வையிட்டார். அதனையடுத்து, அவ்வீதியை மக்களின் பாவனைக்கு உகந்ததாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வவுனியா - பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதி ஓமந்தை புகையிரத நிலையம் அமைப்பதற்காக 2012ஆம் ஆண்டளவில் நிரந்தரமாக மூடப்பட்…
-
- 0 replies
- 336 views
-
-
கிளிநொச்சியில் காணாமல் போனவர்களின் அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு 08 Jul, 2023 | 11:29 AM கிளிநொச்சியில் காணாமல் போனவர்களது விபரங்களை பதிவு செய்யும் அலுவலகமான ஓ.எம்.பி. அலுவலகத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய பதிவுகளை மேற்கொள்ளும் செயற்பாடுகள் இன்று சனிக்கிழமை (08) காலை ஆரம்பமானபோது, அலுவலக செயற்பாடுகளுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன், அவர்கள் குறித்த அலுவலகத்தினால் பதிவுகளுக்காக வழங்கப்பட்டிருந்த அழைப்புக் கடிதங்களையும் அலுவலகத்தின் முன்னால் வைத்து தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் பெ…
-
- 0 replies
- 317 views
-