ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143549 topics in this forum
-
காணிப்பிரச்சினைகளை ஈரோசால் தீர்க்கமுடியும்
-
- 6 replies
- 372 views
-
-
வந்தேறு குடிகள் சிங்களவர் என்பதை நிரூபிக்க மகாவம்சமே போதும்: சபா குகதாஸ் TamilsNorthern Province of Sri Lanka 8 மணி நேரம் முன் ஈழத் தமிழர்களைப் பார்த்து வந்தேறு குடிகள் என சொல்லும் சிங்கள இனவாதிகளுக்கு பதில் கொடுக்க மகாவம்சமே போதும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (27.08.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஈழத் தமிழர்களைப் பார்த்து வந்தேறு குடிகள் என பித்தலாட்ட பொய்களை முன் வைக்கும் சிங்கள இனவாதிகளே, உங்கள் மகாவம்ச நூலை நன்றாக வாசித்துப் பாருங்கள் அதில் பல உருட்டுகள் இருந்தாலும் ஆறாம் அத்தியாயம் சொல்கிறது விஜயனுடைய …
-
- 0 replies
- 396 views
-
-
யாழில் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்ப்பணம்! யாழ் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்பண நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது. யாழ்ப்பாணம் சிவில் சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது கொழும்பு பௌத்த இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொருளாதார நிவாரண உதவி திட்டத்தினூடாக 250 கர்ப்பிணி பெண்களுக்கு இதன்போது உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில்கூரஹல ரஜமஹாவிகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய வத்துறகும்புற தம்மரத்தன தேரர், பலாங்கொட இம்புல்பே விஜித வன்ச தேரர், மற்றும் யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதி மீஹஜந்துர விமலதர்ம சுவாமி அவர்களும் கலந்து கொண்ட…
-
- 55 replies
- 4k views
-
-
26 AUG, 2023 | 07:37 PM ஆர்.ராம் இலங்கைக்கும், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் எவ்விதமான பதற்றங்களும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வருகை, சீன ஆய்வுக்கப்பலின் வருகை என்பன நிகழ்ச்சி நிரலிடப்பட்டதன் அடிப்படையில் நடைபெறுகின்றமையால் எவ்விதமான குழப்பங்களும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதேநேரம், இலங்கைக்குள் போர் மற்றும் ஆய்வுக் கப்பல்கள் விமானங்களின் வருகைகளின் போது வெளிப்படைத் தன்மையைப் பேணுவதற்காக ‘நிலையான செயற்பாட்டுப் பொறிமுறை’ வரைவொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அது…
-
- 3 replies
- 500 views
- 1 follower
-
-
25 AUG, 2023 | 07:00 PM அம்பாறை, அருகம்பே சுற்றுலா வலயத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய துறைகளை அடையாளம் கண்டு, முறையான திட்டத்தின் ஊடாக அந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, பிரபலமான நீர் சறுக்கு போன்ற விளையாட்டுக்களை அருகம்பே கடற்பிரதேசத்தில், ஊக்குவிப்பதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பு குறித்து சுட்டிக்காட்டினார். அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்க…
-
- 3 replies
- 296 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 26 AUG, 2023 | 01:01 PM மது போதையில் குழப்பம் விளைவித்த 06 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்று பொழுதை கழித்துள்ளனர். அதன் போது , அவர்களில் ஒருவரின் மோதிரத்தை காணவில்லை என , கடற்கரையில் கடமையில் இருந்த உயிர்காப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு, அவர்களுடன் முரண்பட்டுள்ளனர். அது தொடர்பில் பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, கட…
-
- 10 replies
- 1k views
- 1 follower
-
-
மன்னாரில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி மன்னார் – அடம்பன் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மன்னார் – அடம்பன் – முல்லிகந்தல் பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மீது, இனந்தெரியாதவர்களால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொலையாளிகள், இறந்தவர்கள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். http://www.samakalam.com/மன்னாரில்-துப்பாக்கிச்…
-
- 7 replies
- 946 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் நிலைப்பாட்டிலேயே ஈ.பி.டி.பி உள்ளது! தமிழ் மக்களுக்கான தீர்வை நோக்கிச் செல்வதற்கு 13 ஆவது திருத்தச்சட்டம் வழிவகுக்கும் என அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ள கருத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வரவேற்பதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “13 ஆவது திருத்தத்தை தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக கொண்டு, அதிலிருந்து நாம் முன்னேறி மேலும், அதிகாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை எமது கட்சி வலியுறுத்தி வந்திருக்கின்றது. இந்நிலையில், எமது மக்களுக்க…
-
- 2 replies
- 535 views
-
-
இந்தியாவின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்காத வகையில் அரசாங்கம் செய்றபட வேண்டும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்காத விடயங்களை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும், அவ்வாறு எடுக்க தவறும்பட்சத்தில் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழக மக்கள் விடுதலை கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒரு ஆபத்தான நிலையில் இலங்கை போய்க் கொண்டிருக்கின்றது. ஏனென்றால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு அதே போன்று இலங்கை சீனாவுடன் வைத்திருக்கின்ற உறவு நிலைமைகளை…
-
- 1 reply
- 405 views
-
-
தமிழ் அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களை இவ்வாரம் சந்திக்கும் இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகள் - இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராயப்படும் 27 AUG, 2023 | 08:50 PM (நா.தனுஜா) பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இலங்கையின் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் இவ்வாரம் நடைபெறவுள்ள சந்திப்பில் இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராயப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13 ஆம் த…
-
- 0 replies
- 260 views
-
-
வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பான விசாரணைகளில் சுமார் 10 – 12 பேர் உயிருடன் இருப்பதாக கண்டறிவு Posted on August 27, 2023 by தென்னவள் 12 0 வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் சுமார் 10 பேர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்த தகவல்கள் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அறியமுடிகின்றது. வருடாந்தம் ஆகஸ்ட் 30ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் ச…
-
- 0 replies
- 390 views
-
-
மாகாண சபை சட்ட சீர்திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல் 27 AUG, 2023 | 12:04 PM 1987ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க மாகாண சபை சட்டத்தில் சீர்திருத்தத்துக்கான பரிந்துரைகளை மேற்கொள்ளும் வகையில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்ப் பிரதிநிதிகளை மையப்படுத்திய கலந்துரையாடலொன்று வன் டெக்ஸ்ட் இன்னிஷேர்டிவினால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 13ஆவது சீர்திருத்தத்தில் காணப்படுகின்ற யாப்பு ரீதியிலான கட்டமைப்புக்கு அமைவாக உள்வாங்கப்பட்டிருக்கும் செயல்முறைகளை அப்புறப்படுத்தும் வகையில் மாகாண சபைகளின் செயற்பாடுகளுக்கான அதிகாரங்களை பலப்படுத்துதல் மற்றும் மாகாண சபை சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை கண்டறிதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட…
-
- 0 replies
- 553 views
-
-
27 AUG, 2023 | 10:50 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக இராஜதந்திர சேவையில் உள்ள சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார். 2020ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை காலமும் கொழும்பில் உயர்ஸ்தானிகராக இருக்கும் கோபால் பாக்லே அவுஸ்திரேலியாவில் இந்தியாவின் இராஜதந்திர பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளார். 2020ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக நியமனம் பெற்ற சந்தோஷ் ஜா, 2019 முதல் ஜூலை 2020 வரை உஸ்பெகிஸ்தானில் இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார். மேலும், 2017 – 2019 ஆண்டுகளில் வொஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதுவராக கடமையாற்றியுள்ளா…
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
27 AUG, 2023 | 10:02 AM குளவிக் கொட்டுக்கு இலக்காகி இன்று (27) அதிகாலை 1 மணியளவில் முதியவர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருகையில், குறித்த நபர் நேற்றைய தினம் (26) காலை 7.45 மணிக்கு தேவாலயத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது பனை மரத்தில் இருந்து கீழே விழுந்த குளவிக்கூட்டில் இருந்த குளவிகள் அவரை கொட்டியுள்ளது. அதனையடுத்து, அவர் மிருசுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு 11 மணியளவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் அவர் ச…
-
- 0 replies
- 339 views
- 1 follower
-
-
தைரியம் இருந்தால் நாடாளுமன்றுக்கு வெளியே வாருங்கள் – சரத் வீரசேகரவிற்கு சட்டத்தரணிகள் சவால் தைரியம் இருந்தால் நாடாளுமன்றுக்கு வெளியேவந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிற்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது. முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து வவுனியா சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இதன்போது கருத்து தெரிவித்த போதே வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அன்ரன் புனிதநாயகம் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் நீதி துறையில் அரசியல் தலையிடு இல்லாமல் நீதிபதிகளை சுதந்தி…
-
- 1 reply
- 466 views
-
-
21 AUG, 2023 | 10:37 AM (இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும். சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பமாக கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவோம். இந்த போராட்டத்தில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும், இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துகொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அழைப்பு விடுத்தார். குருந்தூர் மலை விவகாரம் குறித்து ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு …
-
- 45 replies
- 2k views
- 1 follower
-
-
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகனை அச்சுறுத்தும் சிறிலங்கா படைகள் பதிவேற்றுனர்: அன்பரசி திகதி: 26 Aug, 2023 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் நலன்களுக்காக செயற்பட்டுவருகின்ற குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன், அண்மைக்காலமாக இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் அழைக்கப்பட்டு விசாரணை என்கின்ற போர்வையில் அச்சுறுத்தப்பட்டு வந்துள்ளார். இறுதியாக, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 அன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு சுமார் ஒன்றரை மணிநேரம் விசாரிக்கப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர், 05/05/2022 ஆம் திகதி யாழிலுள…
-
- 0 replies
- 446 views
-
-
26 AUG, 2023 | 04:10 PM நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்தவர்களை கட்டிவைத்து கொள்ளையடித்துச் செல்ல முயற்சித்த கும்பல் வீட்டார் உரக்க சத்தமிட்டு கத்தியதால் தப்பியோடிய சம்பவம் நேற்று (25) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், திருநெல்வேலி, பாற்பண்ணை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு நேரம் ஓட்டினை பிரித்துக்கொண்டு முகமூடி அணிந்த மூவர் அடங்கிய கொள்ளைக்கும்பல் வீடொன்றினுள் இறங்கியுள்ளது. அந்த மூவரும் வீட்டில் இருந்தவர்களை கட்டி வைத்து, கழுத்தில் கத்தியை வைத்து 'நகைகள் எங்கே?' என மிரட்டி கொள்ளையிட முயற்சித்துள்ளனர…
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
26 AUG, 2023 | 07:25 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் ஆளுகையிலேயே மிக அதிகளவிலான நிலப்பரப்பு காணப்படுவதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்கள் குடியிருக்க காணி இல்லாத நிலையில் வாழ்வதாகவும், 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரை இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் 3389 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு நிலம் இல்லை. தொழில் முயற்சிக்கென 28,626 இளைஞர், யுவதிகள் ஒரு ஏக்கர் வீதம் தமக்குக் காணி தருமாறு மாவட்ட செயலக…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 24 AUG, 2023 | 10:16 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் பயிற்சிப் பெற்ற 25 பேர் நாட்டுக்குள் உள்ளார்கள் என ஜனாதிபதிக்கு நெருக்கமானவரான வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இது சாதாரணமானதொரு கருத்தல்ல, யார் அந்த 25 பேர் என எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சபையில் கேள்வி எழுப்பினார்கள். இவ்விடயம் குறித்து ஆளும் தரப்பின் உறுப்பினர்களில் பொறுப்பான தரப்பினர் எவரும் பதிலளிக்கவில்லை. பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒழுங்குகள் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது. விசேட கேள்வியை முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தி…
-
- 4 replies
- 432 views
- 1 follower
-
-
Published By: VISHNU 25 AUG, 2023 | 05:32 PM (நா.தனுஜா) பிரமிட் திட்டங்களால் அவற்றின் சட்டபூர்வத்தன்மையை நிரூபிக்கும் நோக்கில் வெளியிடப்படும் கூற்றுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், எனவே அவற்றை நம்பி ஏமாறவேண்டாம் என்றும் பொதுமக்களிடம் இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது. இணையவழித்தளங்கள் ஊடாகத் தொழிற்படுகின்ற சில பிரமிட் திட்டங்கள், அவை சட்டபூர்வமான திட்டங்கள் என்பதை நியாயப்படுத்தும் வகையில் சில விடயங்களைக்கூறி, எனவே இத்திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யுமாறு பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதாகத் தமக்குப் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 'இலங்கை மத்திய வங்கியி…
-
- 1 reply
- 253 views
- 1 follower
-
-
நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்து நீதிபதிக்கு அச்சறுத்தல் விடுக்கும் சரத் வீரசேகராவை உடனடியாக கைது செய்த வலியுறுத்தி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா யாழ் நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நீதித்துறையின் சுதந்திரத்திக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சரத்வீரசேகர உள்ளிட்ட எனையவர்களையும் கைது செய், இனக்கலவரத்திற்கு ஏதுவாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் வீட்டை முற்றுகையிட முனையும் அனைரை உடனடியாக கைது செய்து நீதியின் முன் நிறுத்து, உள்ளிட்ட கோஷங்கள் அடங்கிய பதாதைகளை காட்சிபடுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். …
-
- 2 replies
- 226 views
-
-
எம்.றொசாந்த் பழிக்கு பழி வாங்கவே சண்டிலிப்பாயில் வீடொன்றினை உடைத்து வீட்டிற்கு தீ வைத்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக, சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள சந்தேகநபர்கள் பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளனர். சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகுந்த வன்முறை கும்பல் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்ததுடன் வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டு வீட்டின் உடைமைகளை சேதமாக்கி, உடமைகளுக்கும் தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது. அதில் சுமார் 20 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகின. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மானிப்பாய் பகுதியை சேர்ந்த …
-
- 0 replies
- 291 views
-
-
Published By: VISHNU 25 AUG, 2023 | 12:38 PM கிளிநொச்சி முரசுமோட்டையில் சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விசேட விழிப்புணர்வு நடைபவனியொன்று வெள்ளிக்கிழமை (25) நடைபெற்றுள்ளது. சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு பேரணி முரசுமோட்டை யில் அமைந்துள்ள நவஜீவனம் பகல் பராமரிப்பு நிலைய சிறுவர்கள் பெற்றோர்கள் இணைந்த வகையில் குறித்த பேரணியை நவஜீவனம் பங்குத்தந்தை அருட்பணி புன்னியராஜ் ஆரம்பித்து வைத்துள்ளார். குழந்தைகள் பாலியல் பொருட்கள் அல்ல சிறுவர்களை தீய வார்த்தைகளால் பேசுவதை தடுப்போம் சிறுவர்களை மது போதை அடிமையிலிருந…
-
- 0 replies
- 226 views
-
-
lished By: VISHNU 25 AUG, 2023 | 05:29 PM நாட்டில் தற்பொழுது ஏற்ப்பட்டுள்ள போதைப் பொருள் பாவனைக்கு ஏதிராக வேள்விசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம், கண்டாவளை பிரதேச செயலகம், கரைச்சி பிரதேச சபை, ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு பேரணியை முன்னெடுத்தனர். போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி | Virakesari.lk
-
- 0 replies
- 144 views
-