ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் வெள்ளிக்கிழமை (04) காலை ஆரம்பமாகி சிறப்புற இடம்பெற்று வருகின்றது. இதன்போது பாரம்பரிய முறைப்படி கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு உற்சவம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பிரதம குருவாக திருஞானசம்பந்த குருக்கள், ஆலயபூசகர் சிவபாதன் கணேசபுவன் ஆகியோர்களால் காலை 8 மணியளவில் விஷேட அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து 11.30 மணியளவில் விநாயக பெருமானுக்கும் பரிவார மூர்திகளுக்கும் விஷேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து விபூதி பிரசாதம் வழங்குதலும், களாஞ்சி பிரசாதம் வழங்குதலும் இடம்பெற்று அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. …
-
- 1 reply
- 255 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 03 AUG, 2023 | 05:15 PM திருமணத்திற்கு பெண் பார்க்கச் சென்ற இளைஞனை நூதன முறையில் ஏமாற்றி 18 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கிளிநொச்சி பளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு பெண் பார்க்க சென்றுள்ளார். இளைஞன் பெண் பார்த்து சென்ற சில நாட்களில், இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய நபர் ஒருவர், தான் அவுஸ்ரேலியாவில் இருந்து கதைப்பதாகவும், தன்னை இப்பெண்ணின் சகோதரர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, தனது தங்கை வெளி…
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் சனிக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரை வழமையான நேர அட்டவணைக்கமைய ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையான ரயில் பாதை புனரமைப்பு பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது. இந்திய கடனுதவியின் கீழ் 62 கிலோமீட்டர் நீளமான இந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 33 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்டுள்ள இந்தப் பாதையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில் பயணிக்க முடியுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் கொழும்புக்கு இடையில…
-
- 39 replies
- 2.6k views
- 1 follower
-
-
Published By: VISHNU 30 JUL, 2023 | 06:54 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் ஐந்து வருடங்கள் சென்றால் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூறும் நிலை மாறிவிடும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியரும் வேந்தருமான பத்மநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் விருந்தினர் விடுதியில் சனிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை தவிர ஏனைய பீடங்கள் பெரும்பான்மையானவர்களு டையதாக மாறியது போல் வ…
-
- 45 replies
- 2.4k views
- 1 follower
-
-
கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக அரச வைத்தியசாலைகளில் கதிரியக்க மற்றும் CT ஸ்கேன் பரிசோதனை நடவடிக்கைகள் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது 400 கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தற்போது செயலிழந்துள்ள CT, PET, MR ஸ்கேன் இயந்திரங்களை திருத்தும் பணிகளுக்கு ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். “கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களை சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பான யோசனை அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் , அதற்கான அனுமதி கிடைத்தவுடன் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களை உடன…
-
- 0 replies
- 239 views
- 1 follower
-
-
எரிவாயுவின் விலை அடுத்து வரும் சில தினங்களில் மேலும் குறையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/251604
-
- 13 replies
- 867 views
- 1 follower
-
-
Published By: VISHNU 02 AUG, 2023 | 04:12 PM யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், செவ்வாய்க்கிழமை (01) போயா தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் கட்டி, புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. பௌத்த கொடிகள் பல்கலையினுள் கட்டிக்கொண்டிருந்தபோது அதனை தடுப்பதற்கு கலைப்பீட 3ஆம் ஆண்டு தமிழ் மாணவர்கள் அங்கு சென்றவேளை, அங்கு வந்த ஒழுக்காற்று விசாரணை அதிகாரி மாணவர்களை அங்கு செல்ல வேண்டாம் என தடுத்துள்ளார். அதனையும் மீறிச் சென்ற மாணவர்கள் கொடிகள் கட்டுவதை தடுத்தனர். அதனைத் தொடர்ந்து விஞ்ஞான பீடத்தின் பின்புறத்தினூடாக புத்தர் சிலை எடுத்து வரப்பட்டது. இதன்போது ஒரு கறுப்பு நிற மர்ம வாகனமும் பல்கலையினுள் நுழைந்தது. …
-
- 17 replies
- 1.3k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 04 AUG, 2023 | 11:28 AM அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணமனத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. குருணாகல் பகுதியைச் சேர்ந்த லாபீர் றைசூஸ் சமன் என்ற 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மின்சார உபகரண விற்பனைக்காக குறித்த இளைஞன் குருணாகலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில், கல்வியங்காட்டில் அவர் நேற்றையதினம் உபகரணங்களை விற்பனை செய்துகொண்டிருந்தவேளை மயங்கி விழுந்துள்ளார். இதன்போது, அவருடன் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுப்பட்ட இளைஞன் அவரை விடுதிக்கு அழைத்துச் சென்றார். பின்ன…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் தீ விபத்து : தென்னந்தோப்பு எரிந்து நாசமாகியது! கிளிநொச்சி, கண்டாவளை பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட தீயினால் தென்னந்தோப்பு எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீயினால் 50க்கும் மேற்பட்ட பயன் தரக்கூடிய நிலையில் இருந்த தென்னை மரங்கள் எரிந்துள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் இல்லாத நிலையில் தும்பு தொழிற்சாலை தொழில் நடவடிக்கை இடம்பெறாத நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீயினை,கட்டுப்படுத்த அப்பகுதி மக்கள், இடர் முகாமைத்துவக் குழுவினர், கிளிநொச்சி தீயணைப்பு பிரிவினரின் உதவி…
-
- 0 replies
- 524 views
-
-
03 AUG, 2023 | 04:43 PM கிளிநொச்சி - பூநகரி பொன்னாவெளியில் அமைக்கப்படவுள்ள சீமெந்து தொழிற்சாலைக்கு எதிராக பொது மக்கள் இன்று (03) ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். வலைப்பாடு, கிராஞ்சி, வேரவில் ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்களும் மக்கள் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பொன்னாவெளி எனும் பழமை வாய்ந்த கிராமத்தில் சீமெந்து தொழிற்சாலைக்காக பல ஏக்கர் காணியை சுவீகரித்து, பல மீற்றர்கள் ஆழத்தில் தொழிற்சாலைக்கான கல் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான முதற்கட்ட தயார்ப்படுத்தல்கள் இடம்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். 'விவசாய நிலங்களை அழிக்காதே', 'ஏழை மக்களின் வ…
-
- 1 reply
- 293 views
- 1 follower
-
-
பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் சிறார்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் அமைச்சில் நடைபெற்றது. பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சிறார்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பது தொடர்பான வேலைத்திட்டத்தை, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனம் ஊடாக முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக 270 பாடசாலைகளுக்கு இலவச மதிய சத்துணவு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்துடன், பெருந்தோட்ட அபிவிருத்தி நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சிறுவர் அபிவிருத்த…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
யாழ் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவ பாலசுந்தரன் தெரிவித்துள்ளார், யாழ் மாவட்டத்தில் வாடகைக்கு செலுத்தும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீற்றர் பொருத்தாமையினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன இதன் காரணமாகவும் முச்சக்கரவாடகை வண்டி செலுத்துவோர் தொடர்பில் கிடைத்த பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பிலும் தீர்மானம் எடுப்பதற்காக நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் முச்சக்கர வாடகை வண்டி சங்கத்தினர் மோட்டார் போக்குவரத்து திணைக்…
-
- 7 replies
- 846 views
- 1 follower
-
-
இந்தியாவின் ஒரு பகுதியாக வடக்கு கிழக்கை இணைக்க கோரவேண்டி ஏற்படும் – செல்வம் எம்.பி.எச்சரிக்கை தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால் வடக்கு கிழக்கினை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும் என கோர வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அதன் மூலமே தமிழர்களின் இறையான்மையினை பாதுகாக்காமுடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். சிங்ளவர்கள் தமிழர்களின் இரத்தத்தினை குடிக்கும் நோக்குடன் மட்டுமே செயற்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். நாட்டை வலுப்பெறச்செய்ய வேண்டும் என்பதை சிந்திக்காது, தமிழர்களை எவ்வாறு முடக்குவது என்றுதான் அரச தலைவர்க…
-
- 45 replies
- 2.9k views
- 2 followers
-
-
மின் கட்டண நிலுவையால் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு : இருளில் மூழ்கியது மிஹிந்தலை மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் 41 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் இன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மாவட்ட பிரதேச மின் பொறியியலாளர் சமுத்திரநாத ஜயவர்தன இனை உறுதிப்படுத்தினார். மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் தூபி நிர்மாணம் போன்ற பல அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த வேளையிலேயே இந்த மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மிஹிந்தலை ரஜமஹா விகாரை பீடாதிபதி பூஜ்ய வளவ ஹங்குனவே தம்மரதன தேரர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1343140
-
- 1 reply
- 340 views
-
-
Published By: DIGITAL DESK 3 03 AUG, 2023 | 04:45 PM யாழ்ப்பாணம் - கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவி யாழ்ப்பாணம் - கலட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றின் அறையில் வாடகைக்குக் குடியிருந்துள்ளார். இந்நிலையில், மாணவி இன்று வியாழக்கிழமை (03) காலை விரிவுரைகளுக்குச் செல்லாமல் தனித்திருந்ததாகவும், சக மாணவிகள் நண்பகல் அளவில் அறைக்குத் திரும்பி வந்த வேளையில்…
-
- 1 reply
- 278 views
- 1 follower
-
-
(இராஜதுரை ஹஷான்) தேசிய கீதத்தை திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய தவறாகும். தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதும் தவறு. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது அரசியலமைப்பு தேவையற்றதாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் அதிகாரம் தனக்கு இல்லை பாராளுமன்றமே அதை தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வக்கட்சி மாநாட்டில் தெளிவாக குறிப்பிட்டார். நாட்டில் தமிழர…
-
- 5 replies
- 612 views
-
-
Published By: DIGITAL DESK 3 03 AUG, 2023 | 10:29 AM பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமைறைவாகியுள்ளார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி உடற்கல்வி ஆசிரியரால் விளையாட்டு அறையில் வைத்து பாலியல் ரீதியாக மாணவன் துஷ்பிரியோக முயற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிபரிடம் முறையிடப்பட்டிருந்தது. சம்பவம் இடம்பெற்று மறுநாள் பாதிக்கப்பட்ட குறித்த மாணவன் அதிபரிடம் முறையிட்டுள்ளதுடன், இதுவரை இரு வாரங்கள் கழிந்தும் எந்தவிதமான நடவடிக்…
-
- 1 reply
- 377 views
- 1 follower
-
-
(நமது நிருபர்) உள்நாட்டு கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுக்காக இலங்கையில் சட்டபூர்வமான நாணயமாக இலங்கை ரூபா தொடர்ந்து அமுலில் இருக்கும். இந்திய ரூபா குறித்து வெளியாகும் பொய்யான கருத்துக்கள் குறித்து மக்கள் அவதானம் செலுத்த கூடாது என இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது. இந்திய ரூபா தொடர்பில் மக்கள் மத்தியில் பரப்பப்படும் தவறான கருத்துக்களை தெளிவுப்படுத்தும் வகையில் மத்திய வங்கி விசேட அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பன்னாட்டு வர்த்தகம் மற்றும் எல்லை கடந்த வங்கித்தொழில் கொடுக்கல் வாங்கல்கள் ஆகியவற்றை வசதிப்படுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கி காலத்துக்கு காலம் பெயர் குறிப்பிடப்பட்ட வெளிநாட்டு நாணயங்களாக தெரிவு செய்ய…
-
- 1 reply
- 236 views
-
-
Published By: DIGITAL DESK 3 02 AUG, 2023 | 04:56 PM யாழ்ப்பாணத்தில் தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் ஒரு இந்திய பெண் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மூவர் என நான்கு பெண்கள் யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. அதன் போது பெண்ணொருவரின் தாலி கொடி ஒன்று அறுக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து ஆலயத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நான்கு பெண்களை ஆலய இளைஞர்கள் மடக்கி பிடித்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸ் விசாரணையில் ஒருவர் இந்திய பிரஜை எனவும் மற்றைய மூவர் சிலாபம், மாத்தளை …
-
- 0 replies
- 301 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 02 AUG, 2023 | 04:00 PM (எம்.வை.எம்.சியாம்) சுதந்திரத்துக்கு பின்னர் ஆட்சியிலிருந்த அனைத்து தரப்பினருமே இந்த நிலைக்கு நாட்டை கொண்டு வந்துள்ளனர். இன்று தலைதூக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு யார் பொறுப்பு கூறுவது? ஆட்சியாளர்களை நாம் நிராகரிக்கின்றோம். தேர்தல் ஒன்றை நடத்தி திறமையானவர்களை கொண்டு வந்து வயோதிபர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமான தரப்பினரிடம் பொறுப்புகளை வழங்க வேண்டுமென மிஹிந்தலை மகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அநுராதப…
-
- 1 reply
- 227 views
- 1 follower
-
-
விஞ்ஞான பாடம் மாத்திரமன்றி அனைத்து பாடங்களையும் கற்ற மாணவர்களுக்கும் தாதியர் பணியில் நுழைவதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன் நியாயமான மற்றும் திறந்த சந்தைக்கு இடமளிக்கும் வகையில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டம் நீக்கப்படும் எனவும் இலங்கை மருத்துவ சபை சட்டமும் முற்றாக இல்லாதொழிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, போதைப்பொருள் பரிசோதனைக்கான அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தை அமைப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவையும் வழிகாட்டலையும் எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/26…
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
Published By: VISHNU 02 AUG, 2023 | 02:34 PM யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் 2 ஆம் திகதி புதன்கிழடை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். செப்டம்பர் 02 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக தென்னை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோணத்தை ஆரம்பிக்க இருப்…
-
- 0 replies
- 224 views
- 1 follower
-
-
Published By: VISHNU 02 AUG, 2023 | 03:59 PM தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் அவர்களது அரசியல் அபிலாசைகளையும் உண்மைகளையும் வெளியுலகிற்குக் கொண்டு சென்றதன் காரணமாகவே தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகளுக்கு அரசு முழுப்பொறுப்புடையது. அதனால் எந்தப் படுகொலைகளுக்கும் நீதி வழங்கப்படவில்லை என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்ததார். சாளரம் பத்திரிகையின் ஆசிரியரும் முன்னாள் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவருமான சகாதேவன் நிலக்சனின் 16 ஆவது நினைவேந்தல் யாழ்ப்பாண ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (01) சிரேஷ்ட ஊடகவியலாளர் இ.தயாபரன் தலைமையில் இடம்பெற்றது. …
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
02 AUG, 2023 | 01:09 PM போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளம் தம்பதியினர் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், சங்கானைப் பிரதேசத்தில் வசிக்கும் இளம் தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இவர்களின் பயணப்பொதிகளை சோதனையிட்டபோது, பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்ட இரண்டு கடவுச்சீட்டுகளும் போலி வீசாவும் இந்த இளைஞனிடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த யுவதியை சோதனைக்கு உட்படுத்தியபோது அவரது உள்ளாடைக்குள் மறை…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
29 JUL, 2023 | 06:13 PM (நா.தனுஜா) இலங்கையிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் இடையில் எதிர்வரும் ஓகஸ்ட் முதல் வாரத்தில் விசேட சந்திப்பொன்று நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தும் அதேவேளை, குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதன் மூலம் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2000 நாட்களுக்கும் மேலாகத் தொடர் கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் அரசாங்கத்தினால் நி…
-
- 4 replies
- 384 views
- 1 follower
-