Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 3 21 JUN, 2023 | 10:55 AM யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றினை அமைக்க நேற்று செவ்வாய்க்கிழமை (20) அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன. அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், அப்பகுதியில் இடம்பெற்ற வேலைகளை உடனடியாக நிறுத்தி, அப்பகுதிக்குள் எவரும் செல்லாதவாறு தடை ஏற்படுத்தினர். அது தொடர்பில் இன்று புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில், அப்பகுதியில் தொடர்ந்து அகழ்வு…

  2. நீதிமன்றில் ஆஜரானார் விமல் வீரவங்ச! நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். விமல் வீரவங்சவிற்கு பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) ஆஜராகியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்திற்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுத்தமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1335754

    • 3 replies
    • 360 views
  3. Published By: RAJEEBAN 20 JUN, 2023 | 04:33 PM தமிழ் மக்களிற்கு சுயநிர்ணய உரிமைக்குள்ள உள்ள உரிமை பாதுகாப்பு மற்றும் சமாதானத்திற்கு கிறீன்ஸ் கட்சி ஆதரவளிக்கின்றது என கட்சியின் செனெட்டர் டேவிட் சூபிரிட்ஜ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் அவர் தெரிவித்துள்ளார். இன்று நான் தமிழ் மக்களிற்கு ஆதரவை தெரிவிக்க விரும்புகின்றேன். தமிழ் அகதிகள் பேரவையின் அலுவலகத்தை திறந்துவைக்கும் நிகழ்விற்கு என்னை அவர்கள் அழைத்தது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அகதிகள் பேரவை தமிழ் அகதிகளிற்கு தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்குதல், கல்வி தொடர்பான உதவிகளை வழங்குதல், அகதிகள் தொடர்பா…

  4. பிரான்ஸ் கடற்படை கப்பலான Dupuy de Lôme உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர். Dupuy de Lôme என்பது 102.40மீ நீளமுள்ள மின்காந்த ஆராய்ச்சிக் கப்பலாகும், இதில் 107 பேர் கொண்ட குழுவினர் உள்ளனர். இந்த கப்பல் தளபதி அகஸ்டின் பிளான்செட் என்பவரால் வழிநடத்தப்படுகிறது. கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் போது, Dupuy de Lôme இன் குழுவினர் நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள். கப்பல் எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்பட உள்ளது. https://thinakkural.lk/article/259343

  5. Published By: DIGITAL DESK 3 21 JUN, 2023 | 04:58 PM வடக்கிலே ஏறக்குறைய 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டிருக்கின்றன என வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார். வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் இன்று புதன்கிழமை (21) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், நான் வடமாகாணத்தின் ஆளுனராக இருந்தாலும் வவுனியா மாவட்டத்திற்கும் எனக்கும் மிக நெருங்கிய தொடர்பு ஒன்று இருக்கின்றது. காரணம் நான் வதியும் இடம், பல இடங்களிலே பதவி வகித்திருக்கின்றேன், இறுதியிலே மாவட்ட அரசாங்க அதிபராக கடமை ஆற்றியிருக்கி…

  6. வடக்கிற்கான புகையிரத சேவை தொடர்பான விசேட அறிவிப்பு! வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, கொழும்பு மற்றும் காங்கேசன்துறை இடையில் ரயில் கடவைகளில் உள்ள சமிக்ஞை அமைப்பை நவீனமயமாக்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. வடக்கு மார்க்கத்தில் ரயில் சேவைகள் தற்போது அனுராதபுரம் ரயில் நிலையத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பாதையை நவீனப்படுத்துவதற்கு வசதியாக…

  7. இலங்கையில் முதன்முறையாக திருநங்கைகளுக்கு எச்.ஐ.வி இலங்கையில் முதன்முறையாக எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 9 திருநங்கைகள் இனம்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய்/எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் HIV தொற்றுக்குள்ளான 9 திருநங்கைகள் இனம் காணப்பட்டுள்ளனர் எனவும், இவ்வாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மொத்தமாக 165 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான அதிகபட்சமான தொற்றாளர்களின் எண்ணிக்கை இது எனவும், அதிகமான வழக்குகள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்…

  8. மகிந்தாவுக்கு ஆதரவாக வந்து சாத்து வாங்கியவர் மோசடி வழக்கில் உள்ளே. மகிந்தா ராஜபக்சேவின் இறுதி நம்பிக்கையினை சிதறடித்த இந்த படம், மகிந்தா காகண்டகம என்னும் கொழும்பு மாநகரசபையில் முன்னாள் கவுன்சிலர், அவரது தீவிர ஆதரவாளர், இப்படி சாத்து வாங்கி, கோவணத்துடன் வீதியில் விழுந்து கிடந்த படம் வெளியாகி உலகம் எங்கும் பரவியது. கொம்பனி தெருவில் கட்டப்படும், நகர அபிவிருத்தி சபை அமைக்கும் (கோத்தாவின் திட்டம்) ஆடம்பர வீடுகளில், ஒரு வீட்டினை தருவதாக வாக்கு கொடுத்து இந்த பெரும்தொகைப் பணத்தினை ( 7 கோடி ) கண்டியில் வாழும் ஒருவரிடம் இருந்து பெற்று இருந்தார். சொன்னபடி தராமல் ஏமாத்தியதால், அவர் போலீசில் முறைப்பாடு செய்ய,கைதாகி உள்ளார்., ஜூன் 24 வரை விளக்கமறியலில் கம்பி எண்ணிக்கொண்டிருக்…

  9. 21 JUN, 2023 | 10:34 AM வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று புதன்கிழமை (21) அதிகாலை தீப்பற்றி எரிந்த வீட்டினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வீடு தீப்பற்றி எரிவதை கண்ட அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து, வீட்டிற்குள் சென்ற போது குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், தடவியல் பொலிஸாரின் உதவிய…

  10. Published By: VISHNU 18 JUN, 2023 | 07:13 PM (எம்.மனோசித்ரா) இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான 'வாகீர்' திங்கட்கிழமை (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி வரை வாகீர் நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும். சர்வதேச யோகா தினத்தின் 9ஆவது பதிப்பை நினைவு கூரும் வகையில் , 'உலகலாவிய பெருங்கடல் வலயம்' என்ற தொனிப்பொருளின் கீழ் இக்கப்பல் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளது. கப்பலின் கட்டளை அதிகாரி, கமாண்டர் திவாகர். எஸ் இலங்கையின் மேற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்திக்கவுள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு இக்கப்பலை பார்வையி…

  11. Published By: VISHNU 20 JUN, 2023 | 04:58 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) தேசிய கடன் மறுசீரமைப்பால் பெருந்தோட்ட தொழிலாளர்கள், ஆடைத்தொழிலாளர்கள் உட்பட உழைக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே நடுத்தர மக்களை பாதுகாப்பதற்காக கடன் மறுசீரமைப்புக்கு முன்னர் பிரதான நிலை வர்த்தகர்கள், செல்வந்தர்கள் அரச வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ள 1300 பில்லியன் ரூபா கடன்களை மீள பெற்றுக்கொள்ள நிதி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட …

  12. IMF இன் உறுதி மொழிகளில் மூன்றை நிறைவேற்றத் தவறியுள்ளது சர்வதேச நாணய நிதிய (IMF) திட்டத்தின் கீழ் கண்காணிக்கக்கூடிய 100 உறுதிமொழிகளில் 29ஐ இலங்கை பூர்த்தி செய்துள்ளதுடன், 2023 மே மாத இறுதிக்குள் அவற்றின் மூன்று உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும் வெரிடே ரிசர்ச்சின் 'IMF கணிப்பான்’ எனும் கருவி தெரிவித்துள்ளது. நிறைவேற்ற தவறியுள்ள இரண்டு உறுதிமொழிகள் வருமானம் தொடர்பானவை. முதலாவதாக, வரி வருவாயை 2023 மார்ச் மாதத்திற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.1% அல்லது 650 பில்லியன் ரூப…

    • 3 replies
    • 358 views
  13. Published By: VISHNU 19 JUN, 2023 | 06:30 PM (இராஜதுரை ஹஷான்) ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பழியை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.ஆகவே குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி உண்மையை பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். எஹலியகொட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ராஜபக்ஷர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அரசியல் இலாபம் அடைவதை ஒர…

  14. Published By: VISHNU 19 JUN, 2023 | 01:22 PM (எம்.மனோசித்ரா) பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான 'பி.என்.எஸ். திப்பு சுல்தான்' கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள 'பி.என்.எஸ். திப்பு சுல்தான் கப்பல் 134.1 மீற்றர் நீளமுடையதாகும். கப்டன் ஜவாட் ஹூஸைன் டீஐ இக்கப்பலின் கட்டளை அதிகாரியாகவுள்ளார். இக்கப்பல் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த காலத்தில் , இலங்கை கடற்படையினரால் இரு நாட்டு கடற்படைக்குமிடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்தது. அத்தோடு நாட்டின் பல முக்கிய இடங்களை பார்வையிடுவ…

  15. இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்; கனடாவில் குடியேற அரிய வாய்ப்பு! தொழிற்சந்தையை அடிப்படையாகக் கொண்டு கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அரசாங்கம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அந்தவகையில் ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களுக்கு குடியேற்ற விண்ணப்பங்களின் போது அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கனடிய குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதில் சுகாதார துறை,விஞ்ஞான,தொழில்நுட்பம்,பொறியியல் மற்றும் கணிதம் ஆகியதுறைகள் தச்சு வேலை, குழாய் பொருத்துதல் மற்றும் ஒப்பந்த பணிகள்போக்குவரத்து விவசாயம் மற்றும் விவாசய உணவு ஆகிய ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு முன்னு…

    • 9 replies
    • 1.3k views
  16. இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஆகவே வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான நிலவரப்படி, மொத்தமாக 8,202 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக விபத்துக்களில் 667 பேர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்தனர் அத்தோடு 2,160 பாரிய விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 3,201 சிறு விபத்துகள் இடம்பெற்றுள்ளதோடு விபத்துகளில் உயிரிழந்த 709 பேரில் 220 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என்பதுடன், 102 பேர் மோட…

  17. 19 JUN, 2023 | 05:17 PM இதய நோயாளிகளின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயநோய் தொடர்பான நிபுணர் டாக்டர் அனிது பத்திரன தெரிவித்துள்ளார். இலங்கையில் அதிகரித்துவரும் காற்று மாசுபாடு இதய நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இந்நிலைமை தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும். வெளியில் செல்லும்போது கூடுமான வரை முகக்கவசம் அணிந்துகொள்வது சிறந்தது. காற்று மாசுபாடு இதய நோயை மட்டுமல்ல, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரோல், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் நீண்டகால நுரையீரல் நோய்கள் போன்ற தொற்றாத நோய்களையும் ஏற்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். …

  18. Published By: RAJEEBAN 19 JUN, 2023 | 04:58 PM பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை 10 ரூபாவால் குறைப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும், கோதுமை மாவின் விலை நிலைமை தொடர்பில் அவர் கூறுகையில், கோதுமை மாவின் விலை 430 ரூபாவாக காணப்பட்டது. தற்போது சந்தையில் 170, 160 ரூபாவாக காணப்படுகின்றது. தட்டுப்பாடுகள், விலை அதிகரிப்பை தவிர்ப்பதற்காகவே கோதுமை மாவை அத்தியாவசிய பொருளாக அறிவித்துள்ளோம். எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலை ஒருபோதும் அதிகரிக்கப்படாது என்ற உத்தரவின் காரணமாகவே பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்கலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார…

  19. Published By: NANTHINI 18 JUN, 2023 | 07:49 PM (நா.தனுஜா) இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் மைக் லெவின், மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் தொடரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரயோகம் மற்றும் அதன் கீழான மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்ச்சியாக கரிசனைகள் வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையிலேயே அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் மேற்குறி…

  20. வலி வடக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீ்டுப் பணிகள் ஆரம்பம்! written by adminJune 19, 2023 யாழ்ப்பாணம் வலி வடக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீ்டுப் பணிகள், மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. அதன் போது, கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பிற்பட்ட காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அழிவு யுத்தம் காரணமாக இராணுவத் தேவைகளுக்காக அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவித்து காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2013 ஆண்டு காலப் பகுதியில் இராணுவத்தி…

  21. 19 JUN, 2023 | 09:19 AM யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி, ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் (வயது -77) காலமானார். இதனை அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சாந்தா அபிமானசிங்கம் இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி என்பதுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வட மாகாணத்திற்கான தலைவராகவும் இவர் செயற்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் நீண்டகால தலைவியாக இருந்த அவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீதிமன்றங்களின் மேம்படுத்தல்களிலும் சட்டத்தரணிகளின் நலன்களிலும் அக்கறையுடன் செயற்பட்டார். அன்னாரது இறுதிக்கிரியைகள் மற்றும் இறுதி அஞ்சலி நிகழ்வு திங்கட்கிழமை (19) முற்பகல் 11…

  22. Published By: VISHNU 15 JUN, 2023 | 03:45 PM (இராஜதுரை ஹஷான்) தொல்லியல் என குறிப்பிட்டுக் கொண்டு பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்த கூடாது. குருந்தூர் விகாரைக்கு சொந்தமான காணிகளை அடையாளப்படுத்தி விட்டு சாதாரண மக்களுக்கு சொந்தமான காணிகளை உரியவர்களுக்கு வழங்கலாம் ஆகவே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் அளவீடு செய்யப்பட்டுள்ள நடுகை தூண்களை அகற்றுமாறு ஜனாதிபதி குறிப்பிட்ட கருத்துக்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி தொல்பொருள் மரபுரிமைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். குருந்தூர் விகாரை விவகாரத்தை மகாநாயகரிடம் க…

  23. தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி தவறான கருத்துத் தெரிவித்திருக்கிறார் - மெடகொட அபயதிஸ்ஸ தேரை அதி வணக்கத்திற்குரிய பேராசிரியர் மெடகொட அபயதிஸ்ஸ தேரை, நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைக் கடுமையாகச் சாடிக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அண்மையில் தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, தமிழர் தாயகத்தில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பை விகாரை கட்டுமாணங்களுக்காக ஒதுக்கவேண்டும் என்று தொல்பொருள் திணைக்களத்தின் தலைவர் கூறியபோது, ரணில் அவரைக் கடுமையாகச் சாடியதுடன், சரித்திரம் பற்றி எனக்குப் பாடம் எடுக்க வேண்டாம், தேவையென்றால் நான் உங்களுக்குப் பாடம் எடுக்கிறேன் என்று கூறியிருந்தார். பெள…

    • 18 replies
    • 899 views
  24. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றம். Madawala News 8 hrs ago கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றம் ********************** தாடி வைத்திருப்பதனால் பரீட்சை எழுத விடாமல் கிழக்குப் பல்கலைக் கழக நிருவாகத்தினால் முஹம்மட் நுஸைப் என்ற மாணவர் பரீட்சை அறையில் இருந்து விரட்டப்பட்டுள்ளார். கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் ( Faculty of Health care Science) இறுதியாண்டு படிக்கும் மாணவன் முஹம்மட் நுசைப் தனது மார்க்க நம்பிக்கையை, அடையாளத்தை ச…

    • 33 replies
    • 2.2k views
  25. Published By: NANTHINI 18 JUN, 2023 | 02:03 PM முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், கிழவன்குளத்தில் கடந்த புதன்கிழமை (14) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட்ட நவரத்தினம் நவரூபன் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று (17) மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி காண்டீபன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவரது குடும்பத்தினரை சந்தித்துப் பேசியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிழவன்குளத்தில் வசிக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.