Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. லங்கா பிரிமியர் லீக் தொடருக்கு முழுமையான ஆதரவு – லைக்கா நிறுவன ஸ்தாபகர் அல்லிராஜா சுபாஸ்கரன் உறுதியளிப்பு லைக்கா நிறுவனத்தின் ஸ்தாபகர் அல்லிராஜா சுபாஸ்கரனை லங்கா பிரிமியர் லீக்கினை ஒழுங்கமைக்கும் IPG குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அனில் மோகன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இந்த ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடருக்கான தனது முழுமையான ஆதரவை அல்லிராஜா சுபாஸ்கரன் உறுதிப்படுத்தியுள்ளார். அல்லிராஜா சுபாஸ்கரன் கிரிக்கெட் மற்றும் லங்கா பிரீமியர் லீக்கிற்கு நிபந்தனையற்ற ஆதரவாளராக இருந்துள்ளார் என்றும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், மகத்தான ஆதரவும் லங்கா பிரீமியர் லீக்கின் வளர்ச்சி…

    • 14 replies
    • 781 views
  2. தேசிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்றம் தடை உத்தரவு! தேசிய மக்கள் சக்தியால் இன்று (வியாழக்கிழமை) நடத்த திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெலிக்கடை பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி இன்று ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்துள்ளதாக முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மேற்படி தடை உத்தரவைப் பிறப…

  3. மிக மோசமான வறுமையின் பிடியில் இலங்கை - 6 வீதமான பெற்றோர் அவர்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாத நிலையில் - அதிர்ச்சி தகவல் 08 Jun, 2023 | 10:31 AM இலங்கையில் வறியவர்களின் எண்ணிக்கை நான்கு முதல் ஏழு மில்லியனாக அதிகரித்துள்ளமை கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. 2019 முதல் 2023 ம் ஆண்டிற்குள் நான்கு முதல் ஏழு மில்லியன் மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் இலங்கையில் வறுமையின் பிடியில் சிக்குண்டுள்ள மக்களின் எண்ணிக்கை இந்த காலப்பகுதிக்குள் 31 வீதமாக அதிகரித்துள்ளது என்பதும் இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. லிர்னே ஏசியா என்ற …

  4. கூட்டமைப்பு மீண்டும் ஜனாதிபதியை சந்திக்கிறார்களாம்! written by adminJune 8, 2023 தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று (08.06.23) மீண்டுமொரு சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. இன்று (08.06.23) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த மாதமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையிலேயே இன்று இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. https://globaltamilnews.net/2023/191664/

  5. பொருட்கள் சிலவற்றின் இறக்குமதி தடை, இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக இன்றைய தினம் பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளது. இதற்கமைய 300 பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்களின் எண்ணிக்கை 1216 வரை குறைந்துள்ளது. நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு அரசாங்க முன்னெடுத்த தீர்மானங்களால், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டனர். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் அதேவேளை, அந்நிய செலாவணியை தக்கவைத்துக்கொள்ள புதிய வரி அறிமுகம், வட்டி வீதங்களை உய…

  6. Published By: DIGITAL DESK 3 07 JUN, 2023 | 03:43 PM இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார ரீதியான சவால்களை முறியடிப்பதற்கும், கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குமென அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத் உறுதியளித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 5 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்திருந்த அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத், நேற்று செவ்வாய்க்கிழமை (6) வரை நாட்டில் தங்கியிருந்தார். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி…

  7. Published By: DIGITAL DESK 3 07 JUN, 2023 | 04:13 PM யாழ். சென்னை விமான சேவை 100 நாட்களை நிறைவு செய்யும் நிலையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என யாழ் இந்திய துணை தூதர் ராகேஷ் நடராஜ் ஜெபாஸ்கர் தெரிவித்தார். இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடையும் நிகழ்வை கொண்டாடிய நிலையில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த விமான சேவையானது இரு நாட்டு இணைப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது மட்டுமன்றி சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க…

  8. 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை – இந்திய மின் விநியோக கட்டமைப்பை ஒன்றிணைப்பதற்கு முன்னுரிமையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான தொழில்நுட்ப அறிவு மற்றும் வணிகக் கட்டமைப்பை தயாரிப்பதற்கு உலக வங்கியினால் இலங்கை மின்சார சபைக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பில் உலக வங்கியின் பிராந்திய வலையமைப்புத் திட்டத்தின் பணிப்பாளர் பெசில் ப்ரூமன் மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் சியோ கென்டா ஆகியோர் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று(06) கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். https://thinakkural.lk/article/257209

  9. உலக உணவு பாதுகாப்பு தினம் இன்று(07) அனுஷ்டிக்கப்படுகின்றது. “உணவின் தரம் வாழ்க்கையை பாதுகாக்கும்” என்பது இந்த ஆண்டின் தொனிப்பொருளாகும். உணவினால் ஏற்படும் ஆபத்துகளை தடுத்தல், அடையாளம் காணுதல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் உள்ளிட்ட விடயங்களில் அவதானம் செலுத்துதல் உலக உணவு பாதுகாப்பு தினத்தின் நோக்கமாகும். மக்களுக்கு நஞ்சற்ற உணவை வழங்குவதற்கு உற்பத்தியாளர்கள், பொதி செய்பவர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் கடமைப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இரேஷா மென்டிஸ் தெரிவித்துள்ளார். எனினும், அந்த பொறுப்புகள் உரிய முறையில் நிறைவேற்றப்படாத நிலையில் உணவின் தரம் தொடர்பாக பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளதாக இரேஷா மெண்டிஸ் குறிப்பிட்டுள்ளார்…

  10. Published By: VISHNU 07 JUN, 2023 | 11:35 AM (எம்.மனோசித்ரா) யுத்தத்தின் போது அங்கவீனமுற்று ஓய்வு பெற்ற முப்படையினர் மற்றும் உயிரிழந்தவர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக அங்கவீனமுற்ற தற்போதும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்ற முப்படையினர் மற்றும் யுத்தத்தின் போது உயிர் நீத்த வீரர்களுக்காக வழங்கப்படும் கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கொடுப்பனவு இடை நிறுத்தப்படும் என எவரும் வீண் அச்சமடையத் தேவையில்லை என்று பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. …

  11. இலங்கை கடற்கரையில் ஒதுங்கிய எட்டு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் !! சீனா, பங்களாதேஷ், இந்தியா, துருக்கி, தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் சீஷெல்ஸ் ஆகிய எட்டு வெவ்வேறு நாடுகளில் இருந்து கடலில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கையில் கரை ஒதுங்கியுள்ளது இரு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட பவளப்பாறை சூழலியல் தொடர்பான சீனா – இலங்கை கூட்டுக் கருத்தரங்கில் விஞ்ஞானி ஒருவர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளில் இருந்து கடல் நீரோட்டங்கள் மூலம் கடத்தப்படும் கழிவுகள், இலங்கைக் கரையோரத்தில் இருந்து 32 மில்லியன் கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக ருஹுனு பல்…

  12. Published By: VISHNU 06 JUN, 2023 | 05:11 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்துக்கு சாதகமான போராட்டத்தை ஜனநாயகம் என்றும்,அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை பயங்கரவாதம் என்றும் எவ்வாறு அடையாளப்படுத்துவது. தேசிய மக்கள் சக்தியினரே வியாழக்கிழமை (8) கொழும்பில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். எமது போராட்டத்தை கண்டு அரசாங்கம் அச்சமடைய தேவையில்லை. அரசாங்கமே பயங்கரவாதமாக செயற்படுகிறது என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற துறைமுகங்கள்,கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போத…

  13. யுத்தத்தின் பின்னர் வடக்கிலிருந்து தெற்கிற்கு வந்த ஆயுதங்கள்! நாடாளுமன்றில் அம்பலமான தகவல் நாட்டில் பாதாள உலக குழுக்களினால் பயன்படுத்தப்படும் ஆயுதங்களில் பெரும்பாலானவை யுத்தத்தின் பின்னர் வடக்கிலிருந்து தெற்கிற்கு வந்தவையாகவே உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (06.06.2023) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் பொது அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமானவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், நாட்டில் அதிகமான சட்டவிரோத சம்பவங்களின் போது பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளில் அதிகமானவை 30 வருட யுத்தத்திற்கு பின்னர் வடக்கிலிரு…

  14. தமிழர் பகுதிகளில் புதிய விகாரைகளை அமைப்பதை நிறுத்துவது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை – தொல்லியல் திணைக்களம் Published By: Rajeeban 07 Jun, 2023 | 06:15 AM வடக்குகிழக்கில் நிலங்களை கையகப்படுத்துதல் புதிய பௌத்த ஆலயங்களை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க விடுத்த உத்தரவு குறித்து இன்னமும் இறுதிமுடிவை எடுக்கவில்லை என தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து இன்னமும் இறுதிமுடிவை எடுக்கவில்லை என இலங்கையின் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுரமனதுங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம்…

  15. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது! kugenJune 7, 2023 தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதை தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுதிசெய்துள்ளது தன்மீதான தாக்குதல் தனது உயிருக்கு ஆபத்து தொடரும் ஒடுக்குமுறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணையை சமர்ப்பித்து இன்று உரையாற்றவிருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் http://www.battinews.com/2023/06/blog-post_969.html

  16. Published By: NANTHINI 06 JUN, 2023 | 06:36 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் தொற்றா நோய்களை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தலுக்கான தேசிய கொள்கை மற்றும் மூலோபாயச் சட்டத்தை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையில் தொற்றா நோய்கள் காரணமாக இடம்பெறுகின்ற அதிகளவான மரணங்களுக்கு இதய நோய், மாரடைப்பு, புற்றுநோய், சுவாச நோய்கள் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் முக்கிய காரணங்களாக அமைவதுடன், ஒவ்வோர் ஆண்டும் இந்நோய்களால் 1,20,000 பேர் இறக்கின்றனர். புகையிலை மற்றும் மதுபான பாவனை, அதிகரித்த உடற்பருமன், உயர் குருதியழுத்தம், குருதியில் குளுக்கோஸின் அளவு அதிகரித்தல் மற்றும் குருதியில் கொலஸ்ட்ரோலின் அளவு அத…

  17. Published By: VISHNU 06 JUN, 2023 | 04:53 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஓய்வு பெற்றுச்செல்லும் ஆசிரியர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களில் ஒரு வருடத்துக்கு ஐயாயிரம் அல்லது ஆறாயிரம் ஆகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால் கடந்த வருடம் அது இரண்டு மடங்காகியுள்ளமையே ஆசிரியர்கள் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செல்வாய்க்கிழமை (06) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அந்த…

  18. Published By: DIGITAL DESK 3 06 JUN, 2023 | 05:07 PM மன்னார் மாவட்டத்தில் மாவட்டச் செயலகம் உள்ளடங்களாக அரச திணைக்களங்களில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பாரிய நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து மன்னார் மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (6) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக மன்னார் மாவட்டத்தில் அரச வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி சில நபர்கள் இளைஞர் யுவதிகளிடம் பெரும் த…

  19. Published By: VISHNU 06 JUN, 2023 | 06:52 PM கடந்த 1988 ஆம் ஆண்டு இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 35 ஆவது நினைவேந்தல் மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அடிகளாரின் சமாதியில் செவ்வாய்க்கிழமை (6) உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் பல் சமய ஒன்றியத்தின் அனுசரணையுடன் மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் புளியந்தீவு மரியாள் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அடிகளாரின் சமாதியில் நடைபெற்றது. இதில் அடிகளாரின் குடும்ப உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள் மற்றும் உறவினர்கள் அரு…

  20. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட “மாகாணசபை தேர்தல்கள்(திருத்தம்)” எனும் தனிநபர் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார். பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை (06) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நிலையிலேயே “மாகாணசபை தேர்தல்கள்(திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் சபைக்கு அறிவித்தார். Tamilmirror Online || சுமந்திரனின் சட்டமூலத்துக்கு பச்சைக்கொடி

    • 1 reply
    • 414 views
  21. கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். தனது சேவைக் காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து எண்ணற்ற சேவைகளை மக்களுக்குச் செய்ய வாழ்த்துத் தெரிவிப்பதாக கமல்ஹாசன் மேலும் தெரிவித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கமல்ஹாசனை கிழக்கு மாகாணத்திற்கு வருகை தருமாறு அழைப்பும் விடுத்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து! | Virakesari.lk

    • 8 replies
    • 765 views
  22. (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) இந்தியா, ஒடிசா மாநிலத்தில் புகையிரத விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் தமிழ் மக்கள் சார்பாகவும், நாட்டு மக்கள் சார்பாகவும் உயரிய சபை ஊடாக ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இந்த ஆண்டில் பதிவான மோசமான விபத்தாகவும், மனித குலம் எதிர்கொண்ட பாரிய அழிவாகவும் இந்த புகையிரத விபத்து பதிவாகியுள்ளது. கொத்துக் கொத்தாக உறவுகள் உயிரிழந்தம…

    • 2 replies
    • 575 views
  23. பாண்டிச்சேரியில் இருந்து காங்கேசன்துறைக்கு சரக்கு கப்பல் சேவையை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் தொடங்குவதற்கு ஹேலிஸ் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. அதன்படி அந்த நிறுவனம் சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் மேலும் நான்கு நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காரைக்கால் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து சேவையை கடந்த மே 15 முதல் தொடங்க திட்டமிடப்பட்டது. எனினும், இந்த பயணிகள் கப்பல் சேவை தொடங்குவதற்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதால், அதன் தொடக்கம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சரக்கு போக்குவரத்து எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளத…

  24. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடை விதிக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகும் வரை அவருக்கு இத்தடையை விதிக்குமாறு பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர். இதனை பரிசீலித்த கிளிநொச்சி நீதவான், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடையை விதித்து உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com/2023/1333736

  25. இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்; கனடாவில் குடியேற அரிய வாய்ப்பு! தொழிற்சந்தையை அடிப்படையாகக் கொண்டு கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அரசாங்கம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அந்தவகையில் ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களுக்கு குடியேற்ற விண்ணப்பங்களின் போது அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கனடிய குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதில் சுகாதார துறை,விஞ்ஞான,தொழில்நுட்பம்,பொறியியல் மற்றும் கணிதம் ஆகியதுறைகள் தச்சு வேலை, குழாய் பொருத்துதல் மற்றும் ஒப்பந்த பணிகள்போக்குவரத்து விவசாயம் மற்றும் விவாசய உணவு ஆகிய ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு முன்னு…

    • 9 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.