ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
Published By: DIGITAL DESK 3 05 JUN, 2023 | 09:16 AM உயிர் கொல்லி ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்த குற்றச்சாட்டில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான். யாழ்ப்பாணம் – கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த சிறுவன் ஒருவனே நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த பாடசாலையை விட்டு இடைவிலகிய சிறுவன் ஒருவன், உயிர் கொல்லி ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ளான். இந்தச் சிறுவன் பற்றிய இரகசியத் தகவல்களின் அடிப்படையில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அந்தச் சிறுவன் ஊசி மூலம் உயிர்கொல்லி ஹெரோயின் நுகர்ந்…
-
- 2 replies
- 360 views
- 1 follower
-
-
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் 4 கோடி ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட தானியங்கி தடுப்பூசி இயந்திரம் தற்போது செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சையில் வழங்கப்படும் கதிரியக்க SDG மருந்தை உட்செலுத்துவதற்கு, சிகிச்சை சேவைகளை மேற்கொள்ளும் சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தானியங்கி தடுப்பூசி இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த தானியங்கி தடுப்பூசி இயந்திரத்திற்கு பயன்படுத்தப்படும் வடிகுழாய்கள் தீர்ந்து விட்டதன் காரணமாக அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த வடிகுழாய்களை கொள்வனவு செய்ய போதியளவு பணம் இல்லாதமையே இதற்கு பிரதான காரணமாகும் என அரச கதிரியக்க தொழிநுட்ப வ…
-
- 2 replies
- 177 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ மஹா விகாரையில் நேற்று பொஸன் வழிபாடுகள் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் அமைந்துள்ள தையிட்டி திஸ்ஸ மஹா விகாரையில் நேற்று சனிக்கிழமை பொஸன் வழிபாடுகள் இடம்பெற்றன.இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவு தானம் வழங்கப்பட்டது பொஸன் வழிபாடுகளில் நாடளாவிய ரீதியில் பல இடங்களிலிருந்தும் வந்த ஏராளமான பௌத்த மற்றும் இந்து பக்தர்கள் கலந்துகொண்டனர்.வணக்கத்திற்குரிய கிங்தோட்ட நந்தராமவின் தலைமையில் பொஸன் பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.(15) http://www.samakalam.com/யாழ்ப்பாணம்-தையிட்டி-திஸ/
-
- 6 replies
- 539 views
-
-
04 JUN, 2023 | 04:59 PM முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அரசாங்கம் ஸ்டன்மோர் கிரெசன்டில் உள்ள வீடொன்றை வசிப்பதற்கு வழங்கியுள்ளது மகிந்த ராஜபக்ச முன்னர் வசித்த இல்லத்தையே அரசாங்கம் கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கியுள்ளது. ஸ்டன்மோர் கிரசன்டில் உள்ள வீட்டை கோட்டாபய ராஜபக்சவிற்காக பெற்றுக்கொள்வதற்கு முன்னர் அரசாங்க தலைவர்கள் வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டியிருந்தது- ஏனெ;றால் அந்த பங்களா வெளிவிவகார அமைச்சிற்கு என ஒதுக்கப்பட்டிருந்ததுஎன தகவல் வெளியாகியுள்ளது. கோட்டாபய ராஜபக்ச மலலசேகர மாவத்தையில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையிலேயே தற்போது அவருக்கு அரசாங்கம் ஸ்டன்மோர் கிரசன்ட் வீட்டை வழங…
-
- 2 replies
- 397 views
- 1 follower
-
-
Published By: VISHNU 05 JUN, 2023 | 11:18 AM இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளுக்குள் நுழைந்து அவர்களது பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாகக் கூறப்படும் ஒருவர் கம்பஹா பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டதாக கம்பஹா பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவரிடமிருந்து 7 கைத்தொலைபேசிகள் மற்றும் 73 சிம்கார்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கம்பஹா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவொன்று சந்தேக நபரை கைதுசெய்ததையடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. கம்பஹா, கஸ்பேவ, ராகம, வெயங்கொட, ஹெட்டிபொல, பாணந்துறை தெற்கு களுத்துறை, திஹாகொட கேகாலை, அநுராதபுரம், கிராண்ட்பாஸ், கொடகவெல ஆகிய பொலிஸ் நிலையங்களில் சந்தேக…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்து !! இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான இந்த நீண்ட கால ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சினோபெக் ஃப்யூயல் ஒயில் லங்கா பிரைவேட் லிமிடெட் மற்றும் சீனா, சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் முடி…
-
- 3 replies
- 233 views
-
-
Published By: NANTHINI 04 JUN, 2023 | 10:35 AM (லியோ நிரோஷ தர்ஷன்) 250 மில்லியன் டொலர் முதலீட்டில் இலங்கையில் விவசாயத்துறையை தொழில்நுட்பமயமாக்குதல், சமூக பாதுகாப்பு, நிதி கட்டமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளை உள்ளடக்கிய திட்டத்தை முன்னெடுக்க பில் கேட்ஸ் நற்பணி மன்றம் முன்வந்துள்ளது. இதற்காக விசேட மென்பொருள் ஒன்றை உருவாக்கவும் மைக்ரோசொப்ட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இலங்கையின் விவசாயத்துறையை மேம்படுத்தவும் நவீனமயமாக்கவும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாப தலைவர் பில் கேட்ஸின் நற்பணி மன்றம் முன்வந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பில் கேட்ஸ் நற்பணி மன்ற பிரதிநிதிகள் இலங்கையின் விவசாயத்துறை…
-
- 16 replies
- 1k views
- 1 follower
-
-
பௌத்தமயமாக்கல் தொடர்ந்தால் இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகளின் ஆதரவை கோருவோம் – விக்கி வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் தொடருமானால் இந்தியாவில் உள்ள இந்து மத அமைப்புகளின் ஆதரவை கோருவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவில் உள்ள பல இந்து அமைப்புகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பிரத்தியேகமாக தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இந்திய இந்து அமைப்புகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்தாலும் இறுதித் திட்டம் இன்னும் வகுக்கப்படவில்லை என்றும் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிர…
-
- 16 replies
- 1.1k views
-
-
Published By: NANTHINI 04 JUN, 2023 | 01:24 PM (லியோ நிரோஷ தர்ஷன்) வருட இறுதிக்குள் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பை அடுத்தே இந்த நிதி உதவியை வழங்க தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில், உலக வங்கியின் நிபந்தனைகளை இலகுவாக்கி 450 மில்லியன் டொலர் நிதி உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நீண்ட நாட்களாக நிதி சந்தையின் ஸ்திரத்தன்மையை பாதுகாத்தல் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைகளை சாதகமான முறைமையின் கீழ் கையாளுதல் போன்ற விடயங்கள் குறித்து கலந்து…
-
- 3 replies
- 297 views
- 1 follower
-
-
Published By: VISHNU 04 JUN, 2023 | 07:52 PM (பொன்மலர் சுமன்) வடக்கு கிழக்கிலே வாழ கூடிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களும் கூட்டாட்சி முறையின் தத்துவ சுவையை அறிய வேண்டும். ஆகவே நாங்கள் எல்லோரும் சேர்ந்து சிங்கள மக்களுடன் ஒன்றிணைந்து வாழ விரும்புகின்றோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்ற முத்தமிழறிஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்வின்போது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், கலைஞரிடம் அரசியலில் நான் கண்ட அடையாளம் அவர் ஜனநாயக கூட்டா…
-
- 0 replies
- 299 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 03 JUN, 2023 | 07:33 PM பாராளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50 வீத பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தற்போதும் இந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற "2023/ 2024 தேசிய சட்ட மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 2 replies
- 237 views
- 1 follower
-
-
தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தலுக்கான அழைப்பு தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தலின் போது அரசியல் கட்சிகள் எவ்வித அரசியல் பேதமுமின்றி பங்கேற்க வேண்டுமென நினைவேந்தல் குழு அழைப்பு விடுத்துள்ளது. தியாகி பொன் சிவகுமாரின் 49வது ஆண்டு நினைவேந்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் நினைவேந்தல் குழுவினரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது. நினைவேந்தலில் அரசியல் பேதமின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் பல்கலை மாணவர்களும் நினைவேந்தல் இடத்திற்கு வந்து அஞ்சலியை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்க…
-
- 1 reply
- 420 views
-
-
பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை PNS SHAHJAHAN எனும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கடற்படைக கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. PNS SHAHJAHAN என்பது 134.1 மீட்டர் நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும், இது 169 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுவதோடு இதற்கு கேப்டன் Adnan Laghari TI தலைமை தாங்குகின்றார். இரு கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் வகையில் குறித்த கப்பல் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளது. அத்துடன் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, குறித்த கப்பல் எதிர்வரும் 04 ஆம் திகதி பாகிஸ்…
-
- 2 replies
- 665 views
- 1 follower
-
-
யாழ். பல்கலையில் மோதலில் ஈடுபட்ட 31 மாணவர்களுக்கு தடை ! யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைக்கலப்பு சம்பவத்தை அடுத்து, 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும், மூன்றாம் வருட மாணவர்கள் 15 பேருக்கும் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் விடுதி உட்பட பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதியினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்களின் “மாகோஸ்” வார நிகழ்வுகள் கடந்த 31 ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் – கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்…
-
- 0 replies
- 295 views
-
-
யாழில். சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனி! adminJune 2, 2023 சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனி சங்கானையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை (02.06.23) இடம்பெற்றது. சங்கானை பிரதேச கலாசார மண்டபத்தில் ஆரம்பமான நடைபவனி வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தில் நிறைவுற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் மஞ்சுள செனரத், வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் பிரேமினி, வேர்ள்ட் விசன் தொண்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், கல்வி திணைக்கள அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2023/191454/
-
- 2 replies
- 440 views
- 1 follower
-
-
ஊடகங்களை ஒடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் : மனோ கணேசன்! ஊடகங்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் எடுக்கவுள்ள சில முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “அரசாங்கம் தற்போது ஒலிபரப்புத் தொடர்பான சட்டமூலம் ஒன்றினைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கின்றது. குறித்த அரசாங்கத்தின் முயற்சியில் குறித்த ஆணைக்குழுவினைச் சேர்ந்த உறுப்பினர்கள் எந்த வேளையும் ஒரு ஊடக நிறுவனத்திற்குள் சென்று விசாரணைகளை நடத்தலாம். இந்த விடயம் ஊடக சுதந்திரத்தி…
-
- 6 replies
- 289 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 04 JUN, 2023 | 09:34 AM (நா.தனுஜா) காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் எத்தகைய செயற்பாடுகளை முன்னெடுத்தாலும், தாம் ஒருபோதும் அதில் நம்பிக்கை வைக்கப்போவதில்லை என்றும், சர்வதேச சமூகத்தின் தலையீடின்றி மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைப்பொறிமுறையையும் தாம் ஏற்கப்போவதில்லை என்றும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி தெரிவித்துள்ளார். காணாமல்போனோர் பற்றி அலுவலகத்துக்கு இதுவரையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை அடுத்த வருட இறுதிக்குள் முடிவுறுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ள நிலை…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 02 JUN, 2023 | 02:27 PM (நா.தனுஜா) உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்களை உள்ளடக்கிய கடிதமொன்றை நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, பயங்கரவாதத்தை முறியடிக்கும் நோக்கில் புதிதாகக் கொண்டுவரப்படக்கூடிய எந்தவொரு சட்டமும் சர்வதேச சட்ட நியமங்களுக்கு அமைவாகக் காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் கடும் எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் எழுந்த நி…
-
- 2 replies
- 189 views
- 1 follower
-
-
ஐ.நா பொதுச் சபையின் துணைத் தலைமை பொறுப்பை ஏற்கின்றது இலங்கை ! ஐ.நா பொதுச் சபையின் 78வது கூட்டத் தொடரின் துணைத் தலைவர்களாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி 2023 செப்டெம்பர் முதல் 2024 செப்டெம்பர் வரை ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சார்பாக இலங்கை இந்த முக்கியமான பதவியை ஏற்றுக்கொள்கின்றது. ஆபிரிக்கா சார்பாக காங்கோ, காம்பியா, மொராக்கோ, செனகல், உகாண்டா, சாம்பியாவும் ஆசியா பசிபிக் நாடுகளுக்கு ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உஸ்பெகிஸ்தானும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கிழக்கு ஐரோப்பியாவிற்கு எஸ்டோனியாவும், லத்தீன் அமெரிக்க மற்றும் கரீ…
-
- 4 replies
- 676 views
-
-
பங்களாதேஷிடம் இருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்தும் இலங்கை பங்களாதேஷிடம் இருந்து இலங்கை பெற்ற பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதத்திற்குள் செலுத்துமென என இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை 2021 ஆம் மே மாதத்தில் பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலரை கடனாகப் பெற்றுக்கொண்டது. பெற்ற கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாடு கடனைத் திருப்பிச் செலுத்தத் திட்டமிடப்பட்டது, ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்டிருந்தது. இதேவேளை ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத்தில் குறித்த க…
-
- 5 replies
- 579 views
-
-
பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது : முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன! பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை இங்கு எவருக்கும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை இங்கு எவருக்கும் கிடையாது. மொழிகளும் மதங்களும் வேறுப்பட்டாலும் ஒவ்வொரு மதங்களையும் மதிக்க மனிதர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். இதன் ஊடாக அரசியல் செய்ய பலரும் முயற்சிக்கிறார்கள். கடந்த காலங்களில் எல்லாம் இதுபோன்ற பல வரலாறுகள் காணப்படுகின்றன. என்னைப் பொறுத்த…
-
- 6 replies
- 446 views
-
-
தேர்தல், அரசியல் மீது பொதுமக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர் பாராளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50% பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெக்க சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தற்போதும் இந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலில் நேற்று (02) நடைபெற்ற "2023/ 2024 தேசிய சட்ட மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். சட்டம் மற்றும் ஒழுங்கு, அரசியல் மற்றும் பொரு…
-
- 0 replies
- 142 views
-
-
Published By: DIGITAL DESK 5 02 JUN, 2023 | 04:07 PM பழச்சாறு தர மறுத்தவர்கள் மீதே வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டோம் என வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான நபர்கள் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 25ஆம் திகதி யாழ்.நகர் பகுதியில் பழக்கடை ஒன்றினுள் அத்துமீறி நுழைந்த 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் கடை உரிமையாளர் உள்ளிட்ட இருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொக்குவில் மற்றும் சுதுமலை ப…
-
- 5 replies
- 758 views
- 1 follower
-
-
இலங்கை ரூபாய்க்கு வரவிருக்கும் கடினமான காலங்கள்; ஆய்வாளர்களின் அதிர்ச்சி கணிப்பு இலங்கை ரூபாய்க்கு கடினமான காலங்கள் வருமென ஆய்வாளர்கள் கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துகின்றமை மற்றும் கடனை திருப்பி செலுத்துவது போன்ற காரணங்களாலே இம் மாற்றம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 290 ரூபாயாகக் காணப்படும் அமெரிக்க டொலரின் பெறுமதி டிசெம்பர் மாத இறுதிக்குள் 350 ரூபாயாக உயர்ந்து இலங்கை ரூபாயின் பெறுமதி குறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதாலும், பிணை முறிச் சந்தையின் வரத்து ஆகியவற்றாலும் இலங்கை நாணயத்தின் ஆதாயம் உலகளவில் வருமானத்தைக் கண்டதாகவும் சுட்டிக்காட்டப்…
-
- 4 replies
- 806 views
-
-
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவரின் டெபிட் கார்டை திருடி அந்த அட்டையை பயன்படுத்தி தங்க நகைகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் 24 வயதுடைய பெண் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த சந்தேக நபர், வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்குச் சென்றிருந்த போது குறித்த பெண்ணிடம் இருந்து அட்டையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் இருந்து 2 வளையல்கள், 1 செயின் மற்றும் 2 காதணிகள் உட்பட பல தங்க நகைகள் மற்றும் பல பொருட்களை அடகு வைத்த ரசீது ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். https://thinakkural.lk/article/256756
-
- 0 replies
- 305 views
- 1 follower
-