ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143690 topics in this forum
-
தமிழர்களின் இறைமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கு அனைத்துலகம் அங்கீகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெரும் திரளாக ஒன்றுகூடி தமிழீழ தேசியக் கொடிகளை தாங்கியவாறு ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை நோக்கி பேரணியாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 787 views
-
-
இலங்கையின் மனித உரிமைகள்துறை அமைச்சின் செயலாளரும் அரசாங்க சமாதான செயலக பணிப்பாளருமான ரஜீவ விஜேசிங்க இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் துறை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்துள்ளார் வன்னியில் படையினரால் 2800 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 7000 பேர் காயமடைந்துள்ளதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாக நவநீதம்பிள்ளை கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐக்கிய நாடுகள் சபையின் செய்தியாளர் மாநாட்டின்போது குற்றம் சுமத்தியிருந்தார் இந்த குற்றச்சாட்டை அடுத்து நேற்று மனித உரிமைகள்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, மறுப்பை வெளியிட்டிருந்தார் இந்த மறுப்பை நேரடியாக வெளியிடும் வகையிலேயே அமைச்சின் செயலாளர் இன்று நவநீதம்பிள்ளையை ஜெனீவாவில் வைத்து சந்தித்தார் http://www.tamil…
-
- 0 replies
- 846 views
-
-
தமிழ் இனத்தை காப்பாற்ற வல்வெட்டித்துறையில் ஒரு விடிவெள்ளி தோன்றியது. 30 வருடங்களாக கொள்கையை விடாமல் உடும்புப்பிடி பிடித்திருக்கும் இரும்பை ஒத்த மனம், எதற்கும் அடிபணியாத குணம் கொண்ட தேசியத் தலைவர் ஒருவரால் தான் அடிமைச் சங்கிலியை உடைத்து விடுதலையை பெற்றுத் தர முடியும் என்று தமிழகத்திலிருந்து ஒரு குரல் ஓங்கி ஒலித்திருக்கின்றது. எல்லா விதமான போராட்டங்களையும் நடத்தியாகி விட்டது. இன்னமும் உலகின் கண்கள் திறக்கப்படவில்லை. இந்தியா உதவி செய்யும். கருணாநிதி உதவி செய்வார். பிரணாப் உதவி செய்வார் என்று நம்பினோம். தமிழக அரசியல்வாதிகளை நம்பினோம். அவர்கள் காலையில் ஒன்று பேசுகிறார்கள். மாலைக்குள் மாறி விடுகிறார்கள். ஐ.நா. சபை தலையிட்டு காப்பாற்றும் என்று நினைத்தோம். ஐரோப்பிய நாடு…
-
- 0 replies
- 1.8k views
-
-
TamilNet Sunday published news and photographs on the plight of pregnant mothers, newborn babies and babies in the wombs affected by the inhuman shelling and bombing by the Colombo government on the safe zone declared for civilians. This information on hard truth has stirred Colombo's disinformation agencies to discredit TamilNet by bringing in trivial matters such as the camera time-settings of the photographs taken in the makeshift-hospital. In addition to what our correspondents personally observe and document, they also collect documentary material from sources such as hospital staff and the families of victims themselves in support of the verified news they fil…
-
- 0 replies
- 1.3k views
-
-
இறுக்கமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிகளும் களமுனை மாற்றங்களும் இலங்கையின் பொருளாதாரம் பாரியதொரு நெருக்கடியான நிலையை சந்தித்துள்ளது. அதன் பொருளாதார கட்டமைப்பை காப்பாற்ற சர்வதேச நாணய நிதியத்திடம் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கோரப்பட்டுள்ளது. எனினும் இது ஒரு தற்காலிக நிலையே தவிர முற்றான மீட்சி அல்ல என்பது பொருளியல் நிபுணர்களின் கருத்து. ஏனெனில் இலங்கை அரசின் தற்போதைய நிதி நெருக்கடிகளை தணிப்பதற்கு 25 பில்லியன் டொலர்கள் தேவை. உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிகள் இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கப்போவதில்லை என இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் கூறியிருந்தது. தனது பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் தொடர்பான புள்ளிவிபரங்களையும் அது சமர்ப்பித்திருந்தது…
-
- 2 replies
- 1.8k views
-
-
மார்ச் 16 சொல்லப்போகும் செய்தி என்ன? தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! 1-எங்களையே நம்பி போராடிவரும் எங்கள் தேசிய இயக்கத்திற்கு நாம் செய்துவரும் நன்றிக்கடன் இதுதானா? http://www.yarl.com/forum3/index.php?showtopic=50550&hl= 2-இறுதியான தீர்வு தமிழீழம் தான். http://www.yarl.com/forum3/index.php?showtopic=52972&hl= போன்ற இரு தலைப்பில் சில நடைமுறைச்சாத்தியமான விடையங்களை வலியுறுத்தியிருந்ததை மீண்டும் உங்கள் நினைவில் நிலைநிறுத்தி, எனது இன்றைய விடயத்தை தொடர விரும்புகின்றேன். மார்ச்16 என்ற தலைப்பு புலம்பெயர்ந்த நாடுகளில் மிகவும் பரபரப்பாகவும், தாயக மக்களினால் பெரிய அங்கலாய்ப்புடனும் எதிர்பார்க்கின்ற ஒரு தினம் அல்லது விடயமாக கருதப்படு…
-
- 7 replies
- 1.9k views
-
-
இன்று சற்று நேரத்துக்கு முன் SBS தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிய இலங்கை சம்பந்தப்பட்ட விவரண தொகுப்பு இக்காணொளியில் இடம்பெயர்ந்த மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் இலங்கை இராணுவ அதிகாரிகளின் கெடுபிடிகள் பத்திரிகையாளர்கள் மீதான கெடுபிடிகள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை காட்டியுள்ளார்கள்
-
- 6 replies
- 1.7k views
-
-
யாழ் காட்டில் நுழைந்த படையினரை குளவிகள் விரட்டி விரட்டி கொட்டியது . மேலும் விவரங்களுக்கு http://www.tamilwin.com/view.php?2aa8E9ZX2...G71dd0eeFh2gg0e நன்றி தமிழ்வின்
-
- 3 replies
- 2.4k views
-
-
இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்தும், போர் நிறுத்தம் உடனடியாய் நிறுத்தப்பட வேண்டுமென்றும் கடந்த 09.03.2009 அன்று ஒரு நாள் தமிழகம் முழுக்க அ.இ.அ.தி.மு.க.வின் தொண்டர்கள் உண்ணாநிலை மேற்கொண்டனர். அக்கட்சியின் தலைவர் ஜெயலலிதா, சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாநிலையை மேற்கொண்டார். உண்ணாநிலைப் பொராட்டப் பந்தலில், உண்டியல் வைத்து பொதுமக்களிடம் ஈழத்தமிழருக்கு உதவும் பொருட்டு நிதி சேமிக்கப்பட்டது. இன்று காலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அவருடைய இல்லமான வேதா நிலையத்தில் வைத்து புதுடெலிலியில இருந்து சிறப்பாக இந்நிதியை பெற்றுக்கொள்வதற்காக சென்னை வந்த சர்வதேச செஞ்சிலுவைச் ;சங்கத்தின் மண்டல குழுத் தலைவர் திரு. ஃப்ரான்சுவா ஸ்டாம் அவர்களிடம் 2 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 3…
-
- 0 replies
- 1k views
-
-
எஸ்.பி.எஸ் தொலைக்காட்சியில் முன்னர் வெளிவந்திருந்த தமிழர் கடத்தல்களின் தொகுப்பு http://www.sbs.com.au/dateline/story/watch...amil-Abductions
-
- 1 reply
- 969 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி ஆகிய இடங்களில் இன்று நடைபெற்ற சோதனை நடவடிக்கையில் 4 பெண்கள் உட்பட 20 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 455 views
-
-
போரிட எவரும் இல்லாத நிலையில் போர் நிறுத்தம் ஒன்று ஏற்படும் தானே, அதனைத் தவிர போர் நிறுத்தம் என்ற எதுவும் இல்லை. விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் எப்படியும் போர் நிறுத்தம் ஏற்படும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலகில் உள்ள பலமான நாடுகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பு போன்ற அமைப்புகளும் போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என அரசு மற்றும் விடுதலைப்புலிகளிடம் கோரிக்கை விடுத்து வரும் வேளையில் பசில் ராஜபக்ஷ இந்த கோரிக்கைகளுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். கொழும்பிலும் வெளிநாடுகளிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்கள் நினைக்குமளவு வேறுபாடுகள் இருக்கின்றன என்பது தான் நன்கு உணர்ந்த விடயம் எனவும் மோதலில் சிக்கிய…
-
- 14 replies
- 2.8k views
-
-
அமெரிக்காவை நோக்கி திசைதிரும்பும் தமிழ்மக்களின் கோரிக்கைகள்: ஆய்வு [ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2009, 08:43.20 AM GMT +05:30 ] உலகத் தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு சர்வதேசத்தினை நோக்கி போராட்டங்களை முன்னெடுத்துவரும் இந்நிலையில், அவர்களுடைய பார்வை தற்பொழுது அமெரிக்காவை நோக்கித் திரும்புவதை உணரமுடிகிறது. இதுவரை காலமும், இந்தியாவை பிரதானமாக வைத்து எழுப்பப்பட்ட குரல்களும் ஐரோப்பிய நாடுகளை நோக்கியதான கோரிக்கைகளும் இன்றைவரைக்கும் எதுவித பலனையும் தராத நிலையில்,உலகின் நீதிபதி என தன்னை காட்டிக்கொள்ளும் அமெரிக்காவை நோக்கி தமது நீதிக்கான கோரிக்கைகளை உலகத்தமிழ்மக்கள் முன்வைக்க முனைந்துள்ளனர். இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் முக்கிய பங்கு வகிக்கவேண்டி…
-
- 2 replies
- 1.1k views
-
-
போர்க் குற்றங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை தெரிவித்த கருத்துக்கள் சரியானது என ஐ.நா.வின் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம் தெரிவித்துள்ளது. நவநீதம்பிள்ளையின் கருத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபை அதற்கு பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தின் பேச்சாளர் றூபெட் கொல்விலி தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ள போதும் இலங்கையின் வடபகுதியில் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பாக நாம் வெளியிட்ட அறிக்கை சரியானதே. சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட கொல…
-
- 1 reply
- 1.1k views
-
-
கலாநிதி நவநீதம்பிள்ளை மீது சுட்டுவிரல் நீட்டுவதால் பயனில்லை – பா.உ ஜயலத் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரை குறை கூறுவதைத் தவிர்த்து வவுனாய முகாம்களுக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வெண்டும் என நாட்டின் எதிரணியான ஐ.தே.கயின் பா.உ மருத்துவர் ஜயல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை தொடர்பில் நேற்று முந்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் மகிந்த சமரசிங்க மற்றும் வெளிவிவகார செயலாளர் ஆகியோர் அவரின் அறிக்கைக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்ததுடன் அறிக்கையில்…
-
- 0 replies
- 884 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரா அவர்கள் சர்வதேச ஊடகத்துக்கு வழங்கிய பேட்டி(காணொளி)
-
- 0 replies
- 651 views
-
-
""நடக்கப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாரதீய ஜனதாகட்சி ஆட்சிக்கு வந்தால், இலங்கை போர் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு நிச்சயம் துணை போகாததுடன், ஈழத் தமிழினம் சுயகௌரவத்துடன் வாழும் சூழலும் விரைவாக உருவாக்கப்படும். அதேநேரம், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது பற்றிய நிலைப்பாடு வருவதற்கும் சாதகமான வாப்புகள் பிரகாசமாகவே இருக்கின்றன என்பதை பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவரும், பிரதம வேட்பாளருமான எல்.கே.அத்வானியுடன் டில்லியில் நான் நடத்திய பேச்சுவார்த்தையில் காணக்கூடியதாக இருந்தது' என்று இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.சிவாஜிலிங்கம் "தினக்குரலு'க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் நம்பிக்கை வெளியிட்டார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஆதரவி…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கை அரசு புரிந்துவரும் யுத்தக்குற்றங்களை விசாரிக்குமாறு விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் ப.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தம்மிடம் போதுமான ஆவனங்களும் ஆதாரங்களும் இருப்பதாக கூறியுள்ளார். சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை, செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கை மற்றும் மனித உரிமை கழகத்தின் அறிக்கை என்பன தம்மிடம் உள்ளதாகவும், ஆவனப்படுத்தப்பட்டுள்ள இவ்வறிக்கையில் இலங்கை அரசானது போர்குற்றத்தில் ஈடுபட்டுள்ளது என்பதை நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர், சர்வதேச செஞ்சிலுவைச்சங்க அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதும், மற்றுமொருவர் காயமடைந்ததும் ,இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சி…
-
- 5 replies
- 885 views
-
-
திருகோணமலையில் ஆறு வயது சிறுமியை கடத்தி கப்பம் கோரி கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைதாகியிருந்த சந்தேக நபர் ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்ட போது சிறிலங்கா காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். திருகோணமலை பாலையூற்று பகுதியைச் சேர்ந்த வர்சா ஜூட் றெஜி எனும் ஆறு வயது சிறுமி கடந்த புதன்கிழமை (11.03.09) கடத்திச் செல்லப்பட்டிருந்தார். பாடசாலை சென்றிருந்த வேளை கடத்தப்பட்ட இச்சிறுமி பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை (13.03.09) திருகோணமலை மூர் வீதியின் குறுக்கு ஒழுங்கை ஒன்றில் கிடந்த உரப்பை ஒன்றுக்குள் இருந்து உடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நேற்று முன்நாள் திருகோணமலை காவல்துறையினரால் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் பிரதான சந்தேக நபர் …
-
- 0 replies
- 600 views
-
-
தமிழ்நாடு, கடலூர் முதுநகர் அருகே உள்ள அன்னவல்லி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரான நாகலிங்கம். ஆனந்த்(வயது 23) என்ற வாலிபர் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக உயிரை தியாகம் செய்கிறேன் என தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரான இவர் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இன்று காலையில் ஆனந்த் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். பின்னர் மாலையில் வீட்டில் இருந்த அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாலிபர் ஆனந்திடம் "எப்படி தீக்காயம் ஏற்பட்டது?" …
-
- 3 replies
- 1.1k views
-
-
மக்களே அவதானமாக இருங்கள் சிலர் வெற்று பத்திரங்களில் கையெழுத்து சேகரிக்கின்றனர் இது பற்றி நான் சம்பந்தப்பட்ட ....சிலரிடம் பேசியதில் இதில் தங்களுக்கு தொடர்பு இல்லையென்றும் கவனமாக இருக்கும்படியும் பதில் வந்தது எனவே தங்களுக்கும் தெரிந்தால் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு தெரியப்படுத்த மறக்கவேண்டாம் இல்லாது போனால் நாம் செய்யும் காரியங்களெல்லாம் விழலுக்கு இறைத்ததாய் விடும்
-
- 0 replies
- 1k views
-
-
கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட யூட் ரெஜி வர்சாவின் இறுதி சடங்குகள் இன்று இடம்பெற்றுள்ளன் கொலையுடன் TMVP உறுப்பினர்களுக்கு தொடர்பு: திருக்கோணமலையில் கடந்த புதன்கிழமை கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட யூட் ரெஜி வர்சாவின் இறுதி சடங்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கொலைச் சம்பவத்தில் காவற்துறையினரால் கைது செய்ப்பட்ட சந்தேக நபரான மேர்வின் டியூரின் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோனைக்காக திருக்கோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் கடற்கரை காவல் சோதனைச்சாவடிக்கு முன்னால் காவற்துறையினரின் கழுத்தை நெரிக்க முற்பட்ட போது அருகில் இருந்த காவற்து…
-
- 0 replies
- 842 views
-
-
Subject: ஐநாவின் மனித உரிமைகள் கூட்டதொடர் நடைபெறுகின்றது; ஈழ தமிழரின் அவசர வேண்டுகோள் Date: Sun, 15 Mar 2009 16:52:45 +0000 ஐநாவின் மனித உரிமைகள் கூட்டதொடர் நடைபெறுகின்றது; ஈழ தமிழரின் அவசர வேண்டுகோள் Sunday, March 15, 2009 0 To: UN High Commissioner for Human Rights Subject: Appeal to the UN Commissioner for Human Rights Office of the United Nations High Commissioner for Human Rights (OHCHR) Palais Wilson 52 rue des Pâquis CH-1201 Geneva, Switzerland. APPEAL TO THE UNITED NATIONS HIGH COMMISSIONER FOR HUMAN RIGHTS We are Tamil Diaspora who share a deep concern about the escalating civilian crisis in Sri Lanka. We appeal to you to…
-
- 0 replies
- 732 views
-
-
இலங்கைப் பிரச்சினையில் அதிக அக்கறை காட்டாது புலிகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிவந்த ஜெயலலிதா திடீரென இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்ததால் தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய மத்திய அரசையும், தமிழக அரசையும் மிகக் கடுமையாகத் தாக்கிவரும் வைகோவும், தா. பாண்டியனும், ஜெயலலிதாவுடன் கைகோர்த்துக் கொண்டு புதிய கூட்டணியை அமைத்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கத்தையும், தமிழக அரசாங்கத்தையும் எதிர்ப்பதில் ஜெயலலிதாவும், வைகோவும், தா. பாண்டியனும் ஒருமித்த குரல் கொடுத்து வந்தாலும், இலங்கைப் பிரச்சினையில் வைகோவும், தா.பாண்டியனும் ஒரேகருத்துடன் செயற்படுகிறார்கள். இவர்களின் கருத்துடன் இதுவரை ஒத்துப்போகாத ஜெயலலிதா இலங்கைத் தமிழ…
-
- 2 replies
- 1.6k views
-
-
மலையாளிகள் தமிழரை வெறுப்பதன் பிண்ணனியும் சிவ சங்கர் மேனனுன். நெடுநாளாகவே மலையாளிகளான சிவ சங்கர் மேனன், நாராயணனன், அன்ரனி, சோ, ஜெயா.....போன்றவர்கள் எதற்காக தமிழரை எதிர்த்து வருகின்றனர் என்ற கேள்வி எனக்குள் இருந்து வந்தது. இன்று எனது நண்பர் ஒருவர் இந்தச் செய்தியுடன் சேர்த்து ஒரு கொசுறுத் தகவலும் அனுப்பியிருக்கிறார். அதனை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே சிறந்தது தமிழர்களுக்கு அதிகாரம் தர வேண்டும்: இந்தியா திட்டவட்ட அறிவிப்பு [வியாழக்கிழமை, 12 மார்ச் 2009, 08:14 பி.ப ஈழம்] [கி.தவசீலன்] இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதன் மூலமாக மட்டுமே இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று இந்திய வெளி…
-
- 9 replies
- 3.4k views
-