Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னியிலிருந்து வெளியேறும் மக்கள் வடிகட்டும் புலனாய்வுத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை: வன்னிப் பகுதியில் தொடரும் மோதல்கள் காரணமாக அங்கிருந்து வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் பிரவேசிக்கும் பெருமளவிலானோரை வடிகட்டும் நடவடிக்கைகளை இலங்கைப் புலனாய்வுத் துறை முடக்கி விட்டிருப்பதாக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாப்பிரதேசங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக யாழ்க் குடாநாட்டில் கடமையாற்றிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் குழுவொன்று தென்மராட்சிப் பகுதிக்கும் வவுனியாவிற்கும் நகர்த்தப்பட்டிருப்பதாக புலனாய்வு மட்டங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் இடர்களுக்கு மத்தியில் கட்டுப்பாட்டுப் …

    • 0 replies
    • 932 views
  2. தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் கனடாத் தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோக் கிளையினரால் முன்னெடுத்து நடாத்தப் பட்டுக்கொண்டிருக்கும் பரந்த அளவிலான, தொடர்ந்து நடாத்தப்படும் நாளாந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் மார்ச் மாதம் 4ந்தேதி Morningside & Sheppard சந்திப்பில் மாலை 4 .30 மணியிலிருந்து 7 மணிவரை அச்சந்திப்பின் அண்மையில் வாழும் மக்களால் நடாத்தப்பட்டது. தொடர்ந்து நடாத்தப்பட்டுவரும் இக்கவனயீர்ப்புகள் நாளுக்கு நாள் மக்கள் பங்களிப்பு அதிகரித்…

  3. கனடாவில் உள்ள இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி நடவடிக்கைகள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டுமென அந்நாட்டு பாராளுமன்ற குடிவரவுக் குழு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் நிலவரம் மிகவும் மோசமாகக் காணப்படுவதகாவும், இதனால் இலங்கைப் பிரஜைகளை நாட்டுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாறாக, கனடாவில் உள்ள இலங்கைப் பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடும்ப அனுசரணை நடைமுறைகள் துரிதப்படுத்த வேண்டுமென லிபர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கரிஜயனிஸ் தெரிவித்துள்ளார். http://www.tamilskynews.com/ http://www.tamils…

  4. வன்னியில் நேற்று புதன்கிழமை மாலை 5.00 மணியளவில் சிறிலங்கா படையினர் மாத்தளன் பகுதியை இலக்கு வைத்து மேற்கொண்ட ஆட்லறி தாக்குதலில் சர்வதேச செஞ்சிலுவை சங்க பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த பணியாளர் நேற்று படுகாயமடைந்த நோயாளிகளை மாத்தளன் மருத்துவமனையிலிருந்து ஐ.சி.ஆர்.சி. கப்பலுக்கு ஏற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோத

  5. ஆகாயமார்க்கமாக அனுராதபுரத்தில் இருந்து வவுனியாவுக்கு விசேடமாக அழைத்துச் செல்லப்பட்ட ரஷ்சிய, பிரான்ஸ் மற்றும் இந்தோனிசிய, ஜப்பானிய, கொரிய,மாலைதீவு தூதர்கள் வவுனியாவில் வன்னி மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட்டு விட்டு அங்கு மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகளைக் கண்டு பிரமித்துப் போனதுடன் அதற்காக சிங்களப் பேரினவாத அரசுக்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்திருக்கின்றனர். அதுமட்டுமன்றி.. ரஷ்சியா இன்னொரு படி மேலே போய் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றி பெற சிறீலங்காவுக்கு தொடர்ந்து உதவும் அதேவேளை போர் முடிந்த பின் சிறீலங்காவின் அபிவிருத்தியில் குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட இடங்களில் தனது முதலீடுகளை ஊக்குவிக்கும் என்றும் கூறியுள்ளார். பிரான்ஸ் த…

  6. எந்த சக்திகள் அழுத்தங்களைக் கொடுத்தாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் யுத்த நிறுத்தம் சாத்தியமற்றது - ரட்ணசிறி பகலில் விழுந்த குழியில், இரவிலும் விழுவதற்கு அரசாங்கம் தயாரில்லை அதனால் எந்த சக்திகள் அழுத்தங்களைக் கொடுத்தாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் யுத்த நிறுத்தம் சாத்தியமற்றது என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார் நேற்று புதன்கிழமை பாராளுமன்ற சபையில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையைச் சமர்ப்பித்துப் பேசுகையில் பயங்கரவாதத்தை ஒழித்து மக்களுக்கும் நாட்டுக்கும் ஜனநாயகத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இதற்காக நாட்டின் ஒட்டு மொத்த மக்களும் அரசாங்கத்தை பலப்படுத்தி அதன் செயற்பாடுகளுக்கு ஆதரவு…

    • 1 reply
    • 832 views
  7. அன்மைக்காலமாக தமிழகத்தில் எழுச்சி கண்டிருக்கும் ஈழத்தமிழர் போராட்டத்துக்கான ஆதரவு எழுச்சி நிலை, தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தியத் தேர்தல் களத்தில் என்னாகும் என்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்..? http://www.4tamilmedia.com/index.php?optio...-03-05-10-19-42

    • 0 replies
    • 1.1k views
  8. புரூஸ் பின் அமெரிக்க குற்றவியல் நீதிமன்றத்தில் செய்த வழக்கு பதிவுக்கு ஆதரவு - ப.உ வால்டர். பி. ஜோன்ஸ் புரூஸ் பின் கோத்தபாய மற்றும் சரத்பொன்சேகாவுக்கு எதிராக அமெரிக்க குற்றவியல் நீதிமன்றத்தில் செய்த வழக்கு பதிவுக்கு அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த ப.உ வால்டர். பி. ஜோன்ஸ் ஆரதவு தெரிவித்துள்ளார். இன அழிப்பு தொடர்பாக 1000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை கோத்தபாய மற்றும் சரத்பொன்சேகாவுக்கு எதிராக அமெரிக்காவின் முன்நாள் பிரதி சட்டமா அதிபர் புரூஸ் பின் தாக்கல் செய்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் வழக்கு பதிவை ஆதரித்தும், வழக்கு சரியான முறையில் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்து தற்போதைய சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றையும…

    • 0 replies
    • 836 views
  9. இந்தியா புல்மோட்டையில் வைத்தியசாலை கட்டப்போகிறதாம் Indian forces will set up hospital in Lanka India is likely to soon establish a field hospital at Pulmodi in northeastern Sri Lanka to provide medical treatment for civilians injured in the bloody conflict raging in that country. The hospital will be established at Pulmodi which is on the northeastern coast and the security will be provided by the Sri Lankan Navy. The field hospital will be staffed by 52 Indian armed forces personnel comprising doctors and nurses. There will also be five specialists as part of the Indian medical contingent. India is likely to provide medicines worth about Rs 3 crores for the h…

    • 4 replies
    • 1.2k views
  10. சிறிலங்கா அரசுக்கு இந்தியா வழங்கி வரும் ஆயுத மற்றும் மனித வள உதவிகளை கண்டித்து பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக நாளை தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 356 views
  11. உயர்நீதி மன்றத்தில் புகுந்து வழக்குரைஞர்கள் மீதும் நீதிபதிகள் மீதும் ஒரு கொலைவெறித் தாக்குதலை நடத்திய சென்னை போலீசு, அடுத்ததாக மாணவர்கள் மேல் பாய்ந்திருக்கிறது. 3.3.09 அன்று காலை 9.30 மணி அளவில் சென்னை மாநிலக்கல்லூரியில் புகுந்து தடியடி நடத்தி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த 5மாணவர்களை கல்லூரி வாசலிலேயே கைது செய்து, அவர்களைக் கொடூரமாகத் தாக்கி, பல குற்றப்பிரிவுகளில் பொய் வழக்கும் போட்டு, சிறையில் தள்ளியிருக்கிறது. கடந்த செவ்வாயன்று காலை 8.45 மணி அளவில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாணவர்கள் ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசு நடத்திய கொலைவெறியாட்டத்துக்கு எதிராகவும் சென்னை மாநிலக்கல்லூரியின் வாயில…

    • 2 replies
    • 1.2k views
  12. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்களில் பலர் இரகசிய முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 381 views
  13. இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்துச் சென்னையில் நேற்று தீக்குளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி சிறீதரன் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 421 views
  14. அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருக்கும் போதுதான் வடக்கு - கிழக்கில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. தங்கேஸ்வரி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 443 views
  15. ஈழத் தமிழர் பிரச்சினைக்காக மேலும் ஒருவர் தீக்குளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வட்ட நிர்வாகி தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 658 views
  16. இலங்கைப் போரும் இந்தியாவின் நிலைப்பாடும் வ.திருநாவுக்கரசு இலங்கைத் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இந்திய அரசு பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் எனும் போக்கினையே கடைப்பிடித்து வருகின்றதென்பதைக் கண்டுகொள்வதற்கு றொக்கற் விஞ்ஞானம் வேண்டியதில்லை. அன்று ஆரம்பகாலகட்டத்தில்"அன்னை' இந்திராகாந்தி மீது இலங்கை தமிழ்த் தலைமைகள் அதீத நம்பிக்கை வைத்துச் செயற்பட்டு வந்தன. அன்று இந்திராகாந்தி அரசாங்கம். இலங்கையில் ஜெயவர்த்தன அரசாங்கத்தோடு கொண்டிருந்த பகைமை காரணமாக குறிப்பாக தமிழ் இளைஞர் குழுக்களை உள்வாங்கி ஆயுதப் பயிற்சி அடங்கலாக பல்வேறு உதவிகளை வழங்கி வந்தது. அதாவது ஜெயவர்த்தன அரசாங்கத்தை மட்டந்தட்டி வைத்திருப்பதற்கு இந்திராகாந்தி கையாண்ட யுக்தியாகவே அத…

  17. புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி திரைப்பட இயக்குநர் சீமான் அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்ப்பதற்காகச் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் 2.3.2009 திங்கள்கிழமை புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச் சாலைக்கு வந்தார். காலை 11 மணி முதல் இயக்குநர் சீமானைப் பார்க்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். ஆனால் அந்த மனுவை பெற்றுக் கொண்ட சிறைத்துறையினர் எந்தவித பதிலையும் கூறவில்லை. இதனால் சுமார் ஒரு மணிநேரம் பொறுத்துப் பார்த்த தங்கர்பச்சான், புதுச்சேரி மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பாளர் சு.பாவாணன், துணைப் பொதுச் செயலர் சோழ நம்பியார், ம.தி.மு.க. கபிரியேல், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.ஐயப்பன், மக்கள் உரிமைக் கூட்ட…

  18. கடந்த 10.02.2009 அன்று கிளிநொச்சியில் இலங்கை இராணுவத்தினால் கைது செய்து காணாமல் போன லூர்த்து மேரி சுரேஸ்குமார் அவர்கள் (பிறந்த தேதி 12.03.1984) பாலியல் வல்லுறவுக்குட்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 19.02.2009 அன்று வவுனியா வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வவுனியா வைத்தியசாலை டாக்டர்களிடம் கேட்டபோது இதுபோல் இலங்கை இராணுவத்தின் அட்டகாசம் நடக்கின்றது இதை தட்டிக்கேட்பதற்கு யாருமில்லை. இதில் மனவேதனை என்னவென்றால் இதற்கு உதவியாக ஒருசில டாக்டர்கள் உள்ளனர். தட்டிக்கேட்டால் நாங்களும் நாளை கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடக்க நேரிடும் என அச்சப்படுகிறார்கள். நன்றி - தமிழ்வின்

  19. பிரித்தானியா, தென்மேற்கு லண்டனில் உள்ள டூட்டிங் பகுதியில் ஞாயிறு (01.03.09) அன்று பிரித்தானியா வாழ் இளையோர்களால் இலங்கையின் பொருளாதாரத்தினை வீழ்த்துவதற்கான முயற்சியாக இலங்கை உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் தமிழ் வர்த்தக நிலையங்களின் முன் தீக்கிரையாக்கப்பட்டன. இதில் உணர்வு மிக்க பல மாணவர்கள் பங்கேற்றனர். ஆரம்பத்தில் மாணவர்கள் மட்டுமே பங்கு கொண்ட இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில், பல பொது மக்களும் இடையில் இணைந்து நின்று தமது வெறுப்பினை காட்டி உள்ளனர். இதில் மாணவர்கள் "இலங்கை பொருட்களை நிராகரிப்போம்" என்ற பதாகைகளை தாங்கியவாறும் "தமிழ் மக்கள் தான் விடுதலைப்புலிகள்" என்றும் நாம் வேறு விடுதலைப்புலிகள் வேறு இல்லை என்ற உரத்த குரலை எழுப்பியுள்ளனர். இதனை அடுத்து தகவல…

  20. இங்கே சொடுகுக http://www.isaiminnel.com/video/index.php?...1&Itemid=43

  21. வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின் விபரங்கள் [ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2009, 04:55.49 PM GMT +05:30 ] கடந்த சில நாட்களில் மோதல்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் பெயர் விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை வருமாறு 22.01.2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். லெப்.இன்பரன் (சிவபாதம் பிரதீபன், வன்னிய சிங்கம் வீதி, ஆனந்தபுரம், கிளிநொச்சி. த.மு.4ஆம் முகாம் ஷஆ|பகுதி தேவிபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.)என்ற போராளியே வீரச்சாவடைந்த வராவார். 25.01.2009 அன்று நான்கு போராளி கள் வீரச்சாவடைந்துள்ளனர். லெப்.அருள்க்கீரன் (யோகநாதன் றொபேட் ரொசான்,இல.325, கரியாலை நாகபடுவான், முழங்காவில், கிளிநொச்சி. த.மு.சுதந் திரபுரம், உடையார்கட்டு, மு…

  22. பாகிஸ்தானும், சீனாவும் சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்கின்றது - இந்தியா இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த ஆயுத உதவிகளின் அளவு குறைக்கப்பட்டமையினால் பாகிஸ்தானும், சீனாவும் தான் பெருமளவு ஆயுதங்களை சிறிலங்காவுக்கு வழங்கிவருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கப் படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் யுத்த முன்நகர்வுகளுக்கு பாகிஸ்தானும்இ சீனாவும் பெருமளவு இராணுவத் தளபாடங்களை வழங்கிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானியில் நிலவரம் கவலைக்கிடமாக மாறிவரும் நிலையில் உலக நாடுகளின் கிரீகெட் அணியினர் அங்கு செல்வதை மறுத்துவந்தனர் இந்நிலையில் பாகிஸ்தானில் நிலைமை மாறியுள்ளது என்பதைக் காட்டுவதற்கும், ஆயுத விநியோகத்திற்கு நன்…

  23. புலிகளுக்கும் கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை! - உதய நாணயக்கரா கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தீவிரவாதத் தாக்குதலுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தொடர்பில்லை என இலங்கை இலங்கை ராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். பொதுவாகவே இலங்கை அரசப் பிரதிநிதிகளும், ராணுவத்தினரும் பொய்ப் பிரச்சாரங்களில் முனைவர் பட்டமே பெறும் அளவுக்கு முன்னேறிப் போய்விட்டவர்கள். அதுவும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பொய்க் குற்றச்சாட்டுகளை அடுக்குவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. வேற்று கிரகத்தில் எங்காவது குண்டு வெடித்தால் கூட, அதில் புலிகளின் கை இருக்கிறது, என யோசிக்காமலேயே கூறும் அளவுக்கு புலிப் பயம் அவர்களை ஆட்டிப் படைத்து வருக…

    • 6 replies
    • 2.2k views
  24. வன்னி மக்களை வெளியேற்றி இலங்கை அரசிடம் ஒப்படைக்கக் கூடாது : அமெரிக்காவின் 'பேர்ள்' அமைப்பு வேண்டுகோள் [ புதன்கிழமை, 04 மார்ச் 2009, 12:33.17 PM GMT +05:30 ] அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடம் வன்னியில் வாழும் 200,000 மக்களை அங்கிருந்து வெளியேற்றி இலங்கை அரசிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளது. இது இலங்கை அரசின் இன அழிப்புக்குத் துணை போவதாகும் என பேர்ள் (PEARL) எனப்படும் வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான அரச சார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது. 'பேர்ள்' அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடம் வன்னியில் வாழும் 200,000 மக்களை அங்கிருந்து வெளியேற்றத் திட்டமிட்டுள்ளது. இந்த மக்களை…

    • 0 replies
    • 552 views
  25. ராஜீவ் கொலையில் நடந்த சதி பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் கமிஷன் சந்திராசாமி - சுப்ர மணியசாமி இருவர் மீதும் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.ராஜீவ் கொலையில் - தமிழகத் தலைவர்களைத் தொடர்புபடுத்தி மிரட்டி வந்தவர் சுப்ரமணியசாமி. இந்த பார்ப்பனரே - ராஜீவ் கொலையில் சந்தேகத்துக்கு உரியவர். ஜெயின் கமிஷன் - சுப்ரமணியசாமி மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. ஜெயின் கமிஷன் அறிக்கையில் சுப்ரமணியசாமி பற்றி கூறப்பட்டிருப்பது என்ன? இதோ சில பகுதிகள்: 1995 ஜூன், ஜூலையில் சந்திராசாமி யும், சுப்ரணியசாமியும் லண்டனுக்குப் போயிருக்கிறார்கள். இவர்களில் லண்டன் பயணத்தின் நோக்கம் குழப் பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்து கிறது. காலி°தான் விடுதலைப் படையைச் சார்ந்…

    • 0 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.