ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
3ம் இணைப்பு - படங்கள் இணைக்கப்பட்டுள்ளன - சுவிஸ் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்றலில் கவன ஈர்ப்பு ஒன்று கூடல் சற்று முன்னர் ஆரம்பமாகி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது 3 மணியிலிருந்து ஆரம்பமாகியதாகவும் சுமார் 2000 மக்கள் ஒன்றுகூடியுள்ளனர் எனவும் அங்கிருந்த எமது செய்தியாளர் தெரிவித்தார். நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன் நேற்று தீக்குளிப்பு நடைபெற்ற இடத்தில் மக்கள் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் இன்றைய நிகழ்வுக்கு பொலிஸாரால் எந்தவித தடைகளும் அறிவிக்கப்படாத போதும் வழமைக்கு மாறாக அதிகமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே 4 மணி அளவில் முக்கிய விடயங்களுக்கு தங்களின் நிலைப்பாடு பற்றி அறிவிப்பதாக ஐ.நா அதிகாரிகள் சொல்லி இருந்த போதும் இதுவரை அவர்களிடமிருந்து எந்த விதமான…
-
- 0 replies
- 838 views
-
-
அன்பான கள உறவுகளே, எமது மக்களின் நிலை தொடர்பாக செய்தி வெளியிடும் சர்வதேச ஊடகங்களுக்கு ஆதரவு, பின்னூட்டல்,செய்ய வேண்டிய கடமை எமக்குண்டு. செய்தி போட்டாலும் குற்றம் போடாவிட்டலும் குற்றம். ஆனால் எதிரியாகிய சிங்களவனும்,எ.........., அவ்வூடகங்களை தமது பரப்புரைக்கு நன்றாகவே பயன்படுதுகிறான். ஆனால் வந்த வாய்ப்பை நழுவ விடுகின்றோம். இன்றே போய் எழுதுங்கள் link http://www.timesonline.co.uk/tol/news/worl...icle5721635.ece
-
- 0 replies
- 846 views
-
-
டெல்லியில் வைகோ உண்ணாவிரதம்-அத்வானி சந்திப்பு இலங்கையில் போர் நிறுத்தம் கோரியும், இலங்கை ராணுவத்துக்கு இந்தியா செய்து வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வைகோ தலைமையில் அக் கட்சியினர் இன்று டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தனர். டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் நாடாளுமன்றம் அருகே இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். அத்வானி வாழ்த்திப் பேச்சு: உண்ணாவிரத மேடைக்கு வந்த பாஜக தலைவர் அத்வானி பேசுகையில், இலங்கை தமிழர்களின் நலம் காக்கப்பட வேண்டும். அங்கு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக இங்கு உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டில் இ…
-
- 0 replies
- 889 views
-
-
அக்டோபர் முதல் வாரத்தில் அதாவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன் முயற்சியால் அக்.2 ஆம் தேதி அனைத்துக் கட்சியினர் நடத்திய உண்ணாவிரதத்துக்குப் பிறகு மயிலை மாங்கொல்லையில் முதல்வர் கலைஞர் கருணாநிதி தி.மு.க. கூட்டத்தைக் கூட்டி, மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். என்ன கூறினார்? ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இரண்டு வார கெடுவுக்குள் போர் நிறுத்தம் வரா விட்டால், நாடாளுமன்ற உறுப் பினர்கள் பதவி விலகுவார்கள் என்றார். தொடர்ந்து, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், தங்கள் பதவி விலகல் கடிதத்தை முன் கூட்டியே கலைஞரிடம் தரத் தொடங்கினர். மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தி, இதே கோரிக்கை வலியுறுத்தப் பட்டது. அதற்கும் மத்திய அரசு…
-
- 0 replies
- 1.2k views
-
-
நாளை லன்டனில்........... நடக்கவிருக்கும் போருக்கு ஆதரவான லன்டன்வாழ் சிங்கள மக்களின் கூட்டத்திற்க்கு எதிரில் போரினால் பாதிக்கபட்ட லன்டன்வாழ் தமிழ் மக்களினது கூட்டத்தை நடத்த மெட்ரொபொலிடன் போலீஸ் அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகிறது... அவசரமாக விபரங்கள் தேவை......................................
-
- 28 replies
- 3.2k views
-
-
சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்து மரணமடைந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலின் முன்பாக திடீரென நேற்று வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இளைஞர் தீக்குளித்துள்ளார்.சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டார் .லண்டனில் இருந்து வந்த இந்த இளைஞரின் பெயர் முருகதாஸ் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இவர், 7 பக்கங்களுக்கு தாயக பிரச்சினை தொடர்பாக ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்துள்ளார். உலகத்தமிழினமே உங்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். நீங்கள் அனைவரும் ஒன…
-
- 31 replies
- 3.8k views
-
-
டெல்லியில் வைகோ உண்ணாவிரதம்-அத்வானி சந்திப்பு டெல்லி: இலங்கையில் போர் நிறுத்தம் கோரியும், இலங்கை ராணுவத்துக்கு இந்தியா செய்து வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வைகோ தலைமையில் அக் கட்சியினர் இன்று டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தனர். டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் நாடாளுமன்றம் அருகே இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். அத்வானி வாழ்த்திப் பேச்சு: உண்ணாவிரத மேடைக்கு வந்த பாஜக தலைவர் அத்வானி பேசுகையில், இலங்கை தமிழர்களின் நலம் காக்கப்பட வேண்டும். அங்கு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக இங்கு உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
வன்னியில் சிறீலங்கா இராணுவம் தன்னிச்சைக்கு அறிவித்த பாதுகாப்பு வலயத்தை.. தானே தாக்கி கைப்பற்றி விட்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அந்த வலயம்.. மீண்டும் வன்னியின் கிழக்கு கடற்கரை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது என்று அறிவித்திருக்கிறது. பாதுகாப்பு வலயம் என்பதன் உள்நோக்கம். 1. மக்களை அவ்வலயங்களுக்குள் இழுத்து எறிகணைகளை, கொத்தணிக் குண்டுகளை செறிவாக வீசிக் கொள்வது. 2. மக்களை மனிதக் கேடயங்களாக பாவித்துக் கொண்டு சவால் மிக்க களங்களை, பாதுகாப்பு வலயம் என்ற பெயரின் கீழ் விடுதலைப்புலிகளை அங்கிருந்து சர்வதேச அழுத்தங்கள் மூலம் வெளியேறக் கேட்டு அவற்றைக் கைப்பற்றுவது. இவ்வாறான கோழைத்தனமான இராணுவத்தின் பாதுகாப்பு வலயம்.. இப்போ அதன் நடவடிக்கைகளுக்கு வசதியாக கடற்கரைக்…
-
- 3 replies
- 1.4k views
-
-
வன்னியில் இருந்து காயமடைந்த மக்களை சிறீலங்காவின் வைத்தியசாலைகளுக்கு வைத்திய வசதிகளுக்காக அழைத்துச் செல்லும் ஐ சி ஆர் சி அவர்களை.. சிங்கள இனவெறி இராணுவம் மற்றும் கடற்படையிடம் கையளிப்பது சரியான நடைமுறையா..??! இந்த மக்கள் அந்த வேதனையுடனும்.. இராணுவத்தால் விசாரிக்கப்படுவதும்.. கைதாவதும்.. பதியப்படுவதுமே தொடர்கிறது. இத்தாமதங்களால் வீண் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. ஐ சி ஆர் சி ஒரு மனிதாபிமான நடுநிலை அமைப்பு. அந்த வகையில் அது மக்களை சர்வதேச மற்றும் உள்ளூர் மருத்துவ அதிகாரிகளிடம் அல்லது சிவில் அதிகாரிகளிடமே கையளிக்க வேண்டும். ஆனால் ஏன் அவ்வாறான நடைமுறைகளை ஐ சி ஆர் சி வலியுத்துவதில்லை. வன்னிக்களமுனையில்.. ஐ சி ஆர் சியின் செயற்பாடுகளில் விடுதலைப்புலிகள் நேரடித்தலையீ…
-
- 1 reply
- 1.4k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 34 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 423 views
-
-
புதிய "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகள் மீதும் மற்றும் பிற பகுதிகள் மீதும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 27 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 116 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 367 views
-
-
வன்னியில் உள்ள தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் "மக்கள் காப்பு வலய" பகுதிகள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய அகோரமான பீரங்கித் தாக்குதலில் 132 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 358 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 459 views
-
-
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சிக்கலில் மத்திய அரசு அக்கறையின்றி செயற்படுவதாக செயற்படுவதாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 395 views
-
-
ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா கருணாநிதி? -சே.பாக்கியராசன் சமீபத்தில் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தான் இரண்டுமுறை ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்திருக்கிறேன், மூன்றாவது முறையும் இழக்கத் தயார் என்று கூறி உள்ளார். பல முறை தன் ஆட்சி பறிக்கப்பட்டதைப் பற்றி கருணாநிதி புலம்பியதுண்டு, ஆனால் இம்முறை ஈழத்தமிழர்களுகாக ஆட்சியை இழந்தேன் என்று கூறியதால் அதைப் பற்றி அலச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். 1977: முதன்முதலில் ஜனவரி திங்கள் 31 ஆம் தேதி திமுக ஆட்சி, கருணாநிதி இரண்டாம் முறையாக முதல்வராக இருந்தபொழுது நடுவண் அரசான காங்கிரசினால் கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம். 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்…
-
- 0 replies
- 876 views
-
-
-
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்துக்கு கறுப்புச்சட்டை அணிந்து சென்றனர். மேலும், நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 484 views
-
-
இலங்கைத் தமிழர்களின் அவல நிலை பற்றிய விடயங்களைக் கையாள என பிரித்தானியா அரசாங்கம் நியமித்த சிறப்புத் தூதுவரை, அது தமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் செயல் எனக் கூறி சிறிலங்கா அரசு நிராகரித்து விட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 897 views
-
-
வன்னியில் உள்ள தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் "மக்கள் காப்பு வலய" பகுதிகள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய அகோரமான பீரங்கித் தாக்குதலில் 132 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 358 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 391 views
-
-
யாழ். மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலியில் நேற்று சிறிலங்கா படையினரால் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 386 views
-
-
அன்பார்ந்த தமிழ் உறவுகளே, வன்னிப் பிரதேசத்தில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை உடனடியாக வெளியேறுமாறு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது . சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வன்னியை விட்டு வெளியேறினால் வன்னிப் பிரதேசம் ஒரு மாபெரும் சவக்குழியாக மாறிவிடும் . ஆகவே தமிழ் மக்களே இதை உடனடியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் அவர்கள் வன்னியை விட்டு வெளியேறாமல் அங்கே தங்கள் பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும். தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் மக்களைக் காக்க வேண்டுமாய் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அளுத்தம் கொடுக்கும் பொருட்டு தொலைபேசி, பேக்ஸ் ,இ மெயில் ஆகியவற்றின் ஊடாக ஒவ்வொரு தமிழ் உறவுகளும் அவசர வேண்டுகோள் விடுக்க வேண்டுமாய் கேட்…
-
- 6 replies
- 1k views
-
-
சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி மரணமடைந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாயகத்தில் இருந்து தாயகத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள் வழியாகவும் வானொலிகள் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தவர் சத்தியமூர்த்தி ஆவார். வன்னியில் உள்ள ஊடக இல்லத்தில் இருந்து ஊடகப் பணியை இவர் ஆற்றி வந்த இவர், யாழ். மண்டைதீவை தாய் மண்ணாகக் கொ…
-
- 37 replies
- 2.8k views
-
-
புலம்பெயர் மக்களால் நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி மரணம் [வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2009, 06:50 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி மரணமடைந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாயகத்தில் இருந்து தாயகத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள் வழியாகவும் வானொலிகள் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் இணைய ஊடகங்கள் வழியாக…
-
- 1 reply
- 871 views
-
-
வவுனியாவில் எறியூட்டப்பட்ட தமிழ் இளையோர் இருவரின் சடலங்கள் 26 வயதுடைய சரவணமுத்து சத்தியநாதன், 31 வயதுடைய செல்வரத்தினம் சத்தியானந்தன் ஆகியோரின் சடலங்கள் என்று உறவினர்கள் தெரிவித்தார்கள். இவர்களை அண்மையில் ஆயூதக்குழு ஒன்று கடத்தியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்திருந்தார்கள். Burnt bodies of 2 Tamil youths recovered in Vavuniyaa Bodies of two Tamil youths burnt beyond recognition were recovered from Chamayaapuram in Kaneasapuram area in Vavuniyaa district Wednesday morning by the Vavuniyaa police. Both had been abducted by unidentified armed persons few days ago from their residences, according to the relatives in statements to Vavuniyaa police. The bodies …
-
- 0 replies
- 538 views
-
-
களத்துக்கு வெளியே காத்திருக்கும் பணி - நி. பாலதரணி - 'ஹமாஸ் ஒரு சமூக அரசியல் இயக்கம், அவர்கள் காசா மக்களிடையே ஆழ வேருன்றிப் போயுள்ளார்கள். அத்தகைய தன்மை வாய்ந்த ஒரு அமைப்பின் இராணுவப் பிரிவையோ அல்லது அரசியல் பிரிவையோ முற்று முழுதாக அழிப்பதென்பது சாத்தியமான ஒரு விடயம் அல்ல அத்துடன் அது ஒரு தவறான கணிப்பீடும் ஆகும்" எனக் கூறியிருக்கிறார் நியூயோர்க்கை தளமாகக் கொண்ட வெளிநாட்டு உறவுகளுக்கான சபையைச் சார்ந்த கலாநிதி றிச்சாட் ஹாஸ் அவர்கள். யார் கூறியிருக்கிறர் என்பதை விட என்ன விடயம் கூறப்பட்டுள்ளது என்பதுவே இங்கு மிக முக்கியமானது. அடுத்து, அவருடைய கருத்தென்பது தனித்து ஹமாஸ் இயக்கத்திற்கு மட்டும் பொருத்தமானதல்ல, இது இன விட…
-
- 6 replies
- 1.6k views
-
-
ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ரொபட் இவன் அவர்களின் கருத்து Action in Sri Lanka Humanitarian aid must be delivered to the Tamil people Sir, I agree that there should be an immediate, unconditional ceasefire by both sides in Sri Lanka (Bronwen Maddox, World Briefing, Feb 12). However, I also believe that the time has come for the UN Secretary- General, Ban Ki Moon, to demand that a United Nations peacekeeping mission be allowed access to the country to avoid a civilian bloodbath. Reports from the country say that the remaining doctors and medical staff in the LTTE (Tamil Tiger)-controlled area in the north of Sri Lanka have been ordered to leave. The Sri Lan…
-
- 0 replies
- 717 views
-