ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்த்துப் போரிட்டு எதிரிக்கு இழப்புகளைக் கொடுத்துவரும் விழுப்புண்ணடைந்த போராளிகளுக்காக உலருணவு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. கண்டாவளைக் கோட்ட ஆசிரியர் சமூகம், தருமபுரம் வர்த்தகர் சங்கம் கோட்ட போரெழுச்சிக்குழு கண்டாவளை புளியம்பொக்கணை கிராமங்களின் மக்கள் கூட்டுறவுப் பகுதியினர் ஆகியோர் இணைந்து இவ் உலருணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர். இவர்கள் வன்னிமேற்கு, வடபோர்முனை ஆகியவற்றில் களப்பணிலீடுபடும் மக்களுக்குமான உலருணவுப்பொருட்களை வழங்கினர் இந்நிகழ்வுகள் நேற்றுப் பிற்பகல் கண்டாவளைக் கோட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் சி.சீராளனின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 0 replies
- 1.5k views
-
-
-
நத்தார் பண்டிகை மற்றம் புத்தாண்டு காலத்தில் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என அங்கலிக்கன் மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இவ்வாறு போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டால் அதன் மூலம் சர்வதேச ரீதியில் இலங்கையின் நன்மதிப்பு அதிகரிக்கும் என ஆயாகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்த இது தக்க தருணம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். போர் நிறுத்தம் மிகவும் அவதானமாகவும் திட்டமிட்ட வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அங்கலிக்கன் திருச்சபையின் ஆயர் துலிப் சிக்கேரா தெரிவித்துள்ளார். தற்காலிக போர் நிறுத்தத்தின் மூலம் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் பெரும் நன்மைகளை …
-
- 2 replies
- 888 views
-
-
யாழ் குடாநாட்டில் தினமும் மூன்று தடவைகள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. இரவுவேளையில் இரண்டு தடவைகளும், பகலில் ஒரு தடவையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் ஏற்பட்ட நிஷா சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்குக் காரணமாக சுன்னாகத்திலிருந்த இலங்கை மின்சாரசபைக்குக் சொந்தமான இரண்டு மின்பிறப்பாக்கிகளும், அக்ரிகோ தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு மின்பிறப்பாக்கிகளும் பழுதடைந்திருப்பதாக பெயர் குறிப்பிடவிரும்பாத மின்சாரசபை அதிகாரி ஒருவர் கூறினார். இதனால், மின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்பட்டு, குடாநாட்டில் நாளாந்தம் மூன்று தடவைகள் மின்விநியோகத்தைத் தடைசெய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார். யாழ் குடாநாட்டில் …
-
- 0 replies
- 762 views
-
-
கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி, கட்சன் வீதிப் பகுதியில் சிறிலங்கா விமானப்படையின் வைற்றர் ஜெற் விமானங்கள் தாக்குதல் நடாத்தியதில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று கிளிநொச்சியிலும், கிளாலி களமுனைகளிலும் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களை ஈடுசெய்ய முடியாமல் அப்பாவி பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து குண்டுகளை வீசுகின்றனர் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அத்துடன் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் செறிவாக வாழ்கின்ற வட்டக்கச்சி, ஒட்டுசுட்டான், முள்ளியவளை பகுதிகளை இலக்குவைத்து சிறிலங்கா இராணுவத்தினர் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலை…
-
- 8 replies
- 4.8k views
-
-
இலங்கை இராணுவம் சுமார் 170,000 படைவீரர்களுடன் மிகவும் வலுவான நிலையில் இருப்பதாக இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தாம் இராணுவத் தளபதியாக பதவியேற்ற போது 116000 படைவீரர்களே இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த எண்ணிக்கையை 170,000 மாக உயர்த்தி புதிதாக 50 படையணிகளை உருவாக்கி இராணுவத்தை பலம் மிக்க ஓர் படையாக மாற்றியமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னமும் 2500 தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளே எஞ்சியிருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளினால் பொருத்தப்பட்ட கண்ணி வெடிகளில் சிக்கி 500க்கும் மேற்பட்ட படைவீரர்கள் பாதங்களை இழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் என திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. நன்றி தமிழ்வின் இணையம்
-
- 8 replies
- 2.2k views
-
-
சித்தார்த்தன் தலைமையிலான புளொட், வீ ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஈழம் புரட்சிகர விடுதலை முன்னணியின் பத்மநாபா அணி ஆகியமூன்று தமிழ்கட்சிகள் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை அமைத்துள்ளன. இக்கட்சி தேர்தல்கள் செயலகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் செயலாளராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி கடமையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஹரித கட்சி என்ற பெயரிலும் புதிய கட்சியொன்று தேர்தல் செயலகத்தினால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. இதன் படி இதுவரை தேர்தல்கள் செயலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அரசியற் கட்சிகளின் எண்ணிக்கை 62 ஆகும். இவற்றில் 20 கட்சிகள் வரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக தேர்…
-
- 16 replies
- 3k views
- 1 follower
-
-
சிறிலங்காவின் தலைமை நீதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா அமைச்சரவை ஆலோசனை நடத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 560 views
-
-
சீசெல்ஸ் நாட்டின் அரச தலைவர் அடுத்த ஆண்டு சிறிலங்காவுக்கு வருகை தர உள்ளதாக அந்நாட்டுக்கான சிறிலங்கா தூதுவர் அனுர இராஜகருண கூறியுளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 441 views
-
-
கொழும்பு, கொள்ளுப்பிட்டி லக்கி பிளாஸா கட்டடத் தொகுதியில் இன்று (18) பகல் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாகப் பல கடைகள் முற்றாக எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்புப் படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாகப் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகள் விரைவில்.... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையிலும் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 419 views
-
-
நத்தார் நாள் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இலங்கை ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 325 views
-
-
சிறிலங்கா படையினரின் போர் நடவடிக்கை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்ந்து வெள்ள இடரை எதிர்கொள்கின்ற போதும் உதவி ஏதும் கிடைக்கப்பெறாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 419 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் கடந்த மூன்று நாட்களாக அடை மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 576 views
-
-
வீரகேசரி இணையம் - யாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை ஏற்படுத்திய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சீனா 10 ஆயிரம் டெலர்களை வழங்கியுள்ளது. இந்த நிதித்தொகையினை இலங்கைக்கான சீனத் தூதுவர் ஈ தாபோ, சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்துள்ளார். சீன அரசு வழங்கியுள்ள இந்த நிதித் தொகை யாழ். குடாநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செலவிடப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அடேயப்பா ..... எவ்வளவு பெரிய நாடு சீனா , எவ்வளவு பெரிய தொகையை கொடுத்துள்ளது .
-
- 1 reply
- 947 views
-
-
-
- 2 replies
- 2.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட சிறிலங்கா படையினரின் உடலங்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 492 views
-
-
அமெரிக்காவில் காலமான விடுதலைப் படைப்பாளி மாம்பழத்தின் இறுதி வணக்க நிகழ்வுகள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 456 views
-
-
குருநகர், பாசையூர், நாவாந்துறை மீனவர்களின் பாஸ்கள் படையினரால் பறிப்பு திகதி: 18.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] குருநகர், பாசையூர், நாவாந்துறை பகுதிகளைச் சேர்ந்த 869 பேரின் கடல் பாஸ் அனுமதி அட்டைகள் இன்று காலை குருநகரிலுள்ள படையினராலும் நாவாந்துறைப் பகுதியிலுள்ள படையினராலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த 869 பேரும் தமது கட்டுப்பாடுகளை மதித்து நடக்கவில்லை எனவும் இவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் படையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். சங்கதி
-
- 0 replies
- 567 views
-
-
கறுப்பு செவ்வாய்" கிரேக்க போர் தெய்வத்தின் நாளில் 650 படையினருக்கு சேதம் [ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2008, 02:49.54 AM GMT +05:30 ] இலங்கைப் படையினர் வடக்கில் கடந்த செவ்வாய்கிழமை 16 ஆம் திகதியன்று ஒரேநாளில் பாரிய இழப்புகளை சந்தித்துள்ளமையை கொண்டு அன்றைய தினத்தை கறுப்பு செவ்வாய்க்கிழமையாக கொள்ளமுடியும் என "ட்ரான்ஸ்கரண்ட்" இணையத்தளம் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை மாத்திரம் வடக்கின் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் படையினர் பாரிய சேதங்களை எதிர்நோக்கினர். அன்றைய தினம் படைத்தரப்பின் சேதம் 650 என தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை என்பது, "கிரேக்கத்தின் போர் கடவுளுக்குரிய தினமாகும்" இந்த தினத்தில் படைத்தரப்பில் 170 பேர் வரை கொல்லப்பட்டதுடன் 480 பேர் வரை…
-
- 0 replies
- 1.5k views
-
-
படையினர் காவலரண் கடலில் மூழ்கியது திகதி: 18.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] வடமராட்சி கொட்டோடை அம்மன் கடற்கரைப் பகுதியில் படையினரால் அமைக்கப்பட்டிருந்த படைப் காவலரண்கள் பல கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பெய்த கடும் மழையை அடுத்தே இக்காவலரண்கள் கடலில் மூழ்கியுள்ளன. இப்பகுதியில் கடலும் தொடுவாயும் ஒன்றாகத் தொடுத்துள்ளதை அடுத்து கரையோரப் பகுதிகளில் காவலரண்களை அமைப்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சங்கதி
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ், யுவதி கொழும்பில் கடத்தல் வியாழன், 18 டிசம்பர் 2008, 08:13 மணி தமிழீழம் [செய்தியாளர் செந்தமிழ்] யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்ற யுவதி இனம் தெரியாத ஆயுதாரிகளினால் கடத்தப்பட்டுள்ளார். நேற்று முந்தினம் காலையில் கொழும்பிலிருந்து கண்டிக்கு சென்ற வேளையி்ல் காணாமல் வில்லை என யாழ் மனித உரிமை ஆணைக்குவில் அவரின் தந்தை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் வெளிநாடு செல்வதற்காக யாழ் நாயன்மார்கட்டையிலிருந்து கொழும்பு வந்த 29 அகவையுடைய பேரின்பம் இன்பராணி. pathivu
-
- 0 replies
- 856 views
-
-
சிறிலங்கா படையினரால் யாழ், இளைஞர்கள் புகைப்படப் பதிவு. வியாழன், 18 டிசம்பர் 2008, 08:22 மணி தமிழீழம் [செய்தியாளர் செந்தமிழ்] யாழ், வலிகாமம் நீர்வேலி, கோப்பாய்ப் பகுதிகளை சுற்றிவளைத்து இளைஞர்களை புகைப்படம் எடுப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை 6.00 மணியிலிருந்து இரவு 10.00 மணிவரை சிறிலங்காப் படையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்னர். இதன்போது சிலரின் புகைப்படங்களைக் காட்டி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சில இளைஞர்களைப் புகைப்படப் பதிவிற்கும் உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அப்பகுதி இளைஞர்கள் பெரும் அச்சமடைந்துள்ளதாகவும் இதனால் எதிர்காலத்தில் கடத்தப்படலாம் எனவும் தெரிவிக்கின்றனர். pathivu
-
- 0 replies
- 604 views
-
-
சிறிலங்காவின் புதிய சட்டமா அதிபராக மொகான் பீரிசை அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 498 views
-
-
தூக்கி நிறுத்தவே முடியாமல் சரிந்து செல்லும் பொருளாதாரம் [18 டிசம்பர் 2008, வியாழக்கிழமை 9:15 மு.ப இலங்கை] பொருளாதார விடயங்கள் குறித்து அதிகம் அலசும், கொழும்பு வாரமத்தி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் நேற்றைய பதிப்பில் முன் பக்கத்தில் வந்த சில செய்திகள் இலங்கையின் இன்றைய நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுவனவாக இருந்தன. * நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் அண்மைக்காலத்தில் மிகக் குறைந்த அளவுக்கு - 6.3 வீதத்திற்கு - இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் வீழ்ச்சியடைந்திருப்பதை உறுதிப்படுத்தும் அதிகாரிகள், நாடு தனது பொருளாதார இலக்கு நோக்கிய நகர்வு வேகத்தைக் கோட்டைவிட்டு மந்த கதிக்குச் சென்றுகொண்டிருக்கின்றது என்பதையும் ஒப்புக் கொள்கின்றார்கள். பணவீக்கம், விலைவாசி…
-
- 0 replies
- 941 views
-