Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராக சக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்குரல் எழுப்ப வேண்டும் adminJuly 10, 2023 இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக வடக்கு கிழக்கின் சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக தலைவர்களுக்கும் – தமிழக மக்களுக்கும் தெளிவுபடுத்த முன்வர வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அமைச்சின் ஊடக பிரிவு அனுப்பியுள்ள செய்தி குறிப்பிலையே ஒரு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை கடல் பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே அன்றி, இலங்கை கடற்படையினர் அல்ல ,நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி எல்லை தாண்டி சட்ட விரோத தொழில் முறையான இழுவைமட…

  2. நவாலி படுகொலை நினைவேந்தல் யாழ்ப்பாணம், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமானத் தாக்குதலின் 28 ஆம் ஆண்டு நினைவு தினமானது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூரப்பட்டது. இதன் போது அங்கு பங்குத்தந்தையின் தலைமையில் விசேட வழிபாடுகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு அவர்களது உறவினர்களும் பொதுமக்களும் மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது, விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசின. …

  3. Published By: DIGITAL DESK 3 10 JUL, 2023 | 04:49 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் வடக்கு பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினரால் வெடிபொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை (10) காலை விசேட அதிரடிப் படையினரால் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் பெரிய பரா-13, சின்ன பரா - 01, 82MM மோட்டார் - 49, 60MM மோட்டார் - 01, ஆர் பி ஜி - 6, கைகுண்டு- 56, தோட்டாக்கள் ஒரு தொகை என பல வகை வெடிபொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/159688

  4. தமிழகத்தின் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி நேரடி விமான சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் தினத்தந்தி நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது. இந்தியாவின் அலையன்ஸ் எயார் (Alliance Air) நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பித்திருந்தது. எனினும், கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் விமான சேவைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கமைய, 2022 டிசம்பர் 12 ஆம் திகதி முதல் சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவைகளை இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனம் மீள ஆரம்பித்தது. திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய ந…

  5. தமிழர்களுக்கான வரைபில் மூவினத்தவரும் உள்ளடக்கப்பட வேண்டும் : பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்! ஈழத் தமிழர்களுக்கு தீர்வாக வரையும் வரைபில் முஸ்லீம், சிங்கள, மலையக மக்களுக்கும் உள்ளடக்கப்பட வேண்டும் என பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் குறிப்பிட்டுள்ளார். மக்கள் சிந்தனை மையம் தமிழ் மக்களின் தீர்வாக அமைக்கப்படும் வரைபு தொடர்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள சிவில் அமைப்புக்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கில் ஈழத் தமிழர்களுக்கு சார்ந்து எவ்வளவு முதன்மை படுத்தப்படுகின்றதே அதேயளவு முஸ்லீம், சிங்க…

  6. அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தேர்தல் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். “இந்த ஆண்டு தேர்தல்கள் இல்லை. 2024 ஆம் ஆண்டுதான் தேர்தல் . 2024 ஆம் ஆண்டு முதல் தேர்தல் ஜனாதிபதித் தேர்தலாக இருக்கும். அதற்காகத்தான் நாங்கள் தயாராகி வருகிறோம். ரணில் விக்கிரமசிங்கவை தேர்தல் நடத்த வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். பொதுவாக உலகில் ஒரு நாடு வீழ்ந்தால் எதிர்கட்சி தலைவர் பதவி ஏற்பார் ஆனால் இலங்கையில் …

  7. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 7 பேரில் இலங்கையைச் சேர்ந்த சாந்தன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழக ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. சாந்தன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். எனினும் அவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் சாந்தன், சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த கடிதத்தில், இலங்கை குடிமகனான தாம், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி…

  8. இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடல்ல ; சரத் வீரசேகர தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் - மஹிந்தானந்த அளுத்கமகே 10 Jul, 2023 | 10:47 AM (எம்.மனோசித்ரா) இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் உரிய நாடல்ல. இது அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் சொந்தமானது. எனவே, பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதோடு, அனைத்து இன மக்களுடனும் ஒற்றுமையாக வாழப் பழக வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வலியுறுத்தினார். இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை மறந்துவிட வேண்டாம் என்று கடந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போ…

  9. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இந்தியா கட்டாயம் பங்களிக்க வேண்டும் ; மலையக மக்களின் பிரச்சினை குறித்து மோடிக்கு நாம் கடிதம் அனுப்புவோம் - மனோ கணேசன் 10 Jul, 2023 | 11:30 AM (எம்.மனோசித்ரா) இலங்கையிலுள்ள தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு இந்தியா தனது பங்களிப்பை வழங்க வேண்டியது கட்டாயமாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் டில்லி விஜயத்தின்போது, வெறுமனே விருந்தோம்பலை மாத்திரம் வழங்காமல், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு மலையக மக்களின் ப…

  10. தமிழருக்கு தீர்வென்றால் இந்திய நலனுக்கு ஆதரவு: வலியுறுத்தும் கஜேந்திரன் எம்.பி சுயநிர்ணய அடிப்படையில் இந்தியா, தமிழ் மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுத் தர ஆதரவளித்தால், இந்திய நலனுக்காக நாம் பாடுபடுவோம் என பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பப்படவுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், 13 ஆவது திருத்தச்சட்டம் தமிழருக்குத் தீர்வல்ல எனவும், ஒற்றையாட்சியை தாண்டி தமிழ் தேசம், இறமை, சுயநிர்ணய அடிப்படையில் இந்தியா தமிழ் மக்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுத் தர வேணடும் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நேற…

  11. எதிர்வரும் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில், தரம் ஒன்பதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு, வெள்ளிக்கிழமை பாடசாலை நிறைவடைந்த பின்னரும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும், தனியார் வகுப்புக்களை நடத்துவதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரனின் தலைமையில் இன்று(9) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலில், சுகாதாரம் மற்றும் கல்வித்துறைசார் அதிகாரிகள், மதத் தலைவர்கள், காவல்துறையினர், தனியார் கல்வி நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக, வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் …

  12. மல்லாவி பாலிநகர் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி! மல்லாவி காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பாலிநகர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் காவற்துறைப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களை கைது செய்ய காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://globaltamilnews.net/2023/192847/

  13. வி.நிதர்ஷன் “வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனித் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கும், அதற்குரிய பாரிய கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அண்மையில் அவசரம் அவசரமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்தோடு, தொழிற்சாலையின் அமைவிடத்துக்கெனவும் கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கெனவும் முதற்கட்டமாக 74,100 ஏக்கர்கள் அளவு காணியை விடுவிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. “இத்திட்டத்தை முன்னெடுத்துள்ள தரப்பு, இது போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கென வாராதுவந்த வரப்பிரசாதம் என்று இனிப்பாய்ச் சிலாகித்து வருகிறது. “ஆனால், இதன் உண்மைகள் மிகவும் கசப்பானவை. வடக்கில் சீனித் தொழிற்சாலை இனிப்புத் தடவிய விஷம்” என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்…

  14. ஜனாதிபதி ரணிலுடன் எதிர்கால அரசியல் பயணத்தை தொடர விரும்பும் பொதுஜன பெரமுனவின் இளம் எம்.பி.க்கள் Published By: Nanthini 09 Jul, 2023 | 03:46 PM (எம்.மனோசித்ரா) அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க மற்றும் பிரமித பண்டார தென்னகோன் உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் இளம் உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து தமது எதிர்கால அரசியல் பயணத்தை தொடர தீர்மானித்துள்ளனர். கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு நாட்டின் ஸ்திரத்தன்மை முற்று முழுதாக பாதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை பொறுப்…

    • 1 reply
    • 366 views
  15. அசுர வேகத்தில் பயணித்த யாழ்தேவி அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று காலை பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் மணிக்கு 100kmph வேகத்தில் பயணித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹவ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் வவுனியா – .அனுராதபுரம் வரையில் 48 கிலோமீற்றர் புகையிரத பாதையும், வவுனியா ஓமந்தை வரையான 13 கிலோமீற்றர் புகையிரத பாதையும் புனரமைக்கப்பட்டன. இந்த அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு 91.27 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டிருந்தது .இந்த அபிவிருத்தி செயற்திட்டம் நிறைவுப…

    • 3 replies
    • 856 views
  16. பிரபாகரன் பற்றி கருத்து தெரிவித்த மைத்திரி தமிழீழ விடுதலை புலிகளின் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பாக பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது தமக்கு எதுவும் அறிக்கையிடப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென தெரிவித்துள்ளார். அத்துடன் பிரபாகரனின் மரபணுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாகவும் தாம் அறிந்திருக்கவில்லை என யாழ்ப்பாணத்தில் நேற்று (2) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணுப் பரிசோதனைக்காக இராணுவத்தால் மாதிரி எடுக்கப்பட்டு, இறுதி யுத்தத்தில் மீட்கப்பட்ட உடல் அவருடையதே என உறுதி செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா இராணுவம் கூறியிருந்தது.…

  17. ஜனாதிபதி ரணில் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் சந்திப்பொன்று எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பு புது டெல்லியில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு பயணிக்கவுள்ளார். இதன்போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாது…

  18. கஞ்சா வளர்ப்பு செயற்றிட்டம் ஆரம்பம்! கஞ்சா பயிர்ச்செய்கைத்திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த திட்டத்திற்கு 11 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ள நிலையில் கட்டுநாயக்கவிலுள்ள முதலீட்டுச் சபை வலயத்துள் மேற்படி கஞ்சா வளர்ப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த திட்டத்தால் இரண்டு மூன்று வருடங்களில் 4 முதல் 5 பில்லியன் ரூபா வருமானம் ஈட்ட முடியும்.எனவும் அவர் தெரிவித்துள்ளார்.. மேலும் கடந்த கால முயற்சியை தோற்கடித்தது போன்று இந்த…

  19. 29 JUN, 2023 | 08:09 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள கூட்டுகின்ற அதிகாரமானது, மக்களின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களை மீள கூட்டும் அதிகாரத்தை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கும் சட்டமூலம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரமே அதிகாரம் வழங்கப்படுவதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டி…

  20. இந்தியா எங்களை காப்பாற்றியது ; இரத்தக்களறியை தடுத்தது - சபாநாயகர் Published By: RAJEEBAN 09 JUL, 2023 | 09:53 AM இந்தியா எங்களை காப்பாற்றியது இரத்தக்களறியை தடுத்தது என இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டவேளை இலங்கையை காப்பாற்றியமைக்காகவும் இரத்தக்களறியை தவிர்த்தமைக்காகவும் இலங்கையின் நம்பகதன்மை மிக்க நண்பனான இந்தியாவிற்கு தனது நன்றியை தெரிவித்துள்ள இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன 1948 இல் சுதந்திரம் கிடைத்த பின்னர் இலங்கை எதிர்கொண்ட பேரழிவு மிக்க நிதி நெருக்கடியின் போது இந்தியாவை போல வே…

  21. மண்டைதீவு கிணற்றில் 60 இற்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்கள் : சிறிதரன் குற்றச்சாட்டு! மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றில் 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்; தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்டபாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் கொக்குதொடுவாயில் பல பெண் போராளிகளின் உடல்கள் எனக் கூறப்படும் பல மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. எமது நாட்டில் எங்கு தோண்டினாலும் எலும்புக் கூடுகளே இன்று மீட்கப்படுகின்றன. இந்த நாட்டில்…

  22. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் வீழ்ச்சி கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துவருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னாமுனை தொடக்கம் செங்கலடி வரையான பகுதியில் வசித்து வரும் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் நேற்றைய தினம் மைலம்பாவெளி ஸ்ரீமுருகன் ஆலய வீதியில் குடிநீர் திட்டத்தின் ஆரம்ப விழா நடைபெற்றது. அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் குறித்த குடிநீர் திட்டத்திற்கு 100மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேசிய நீர்வழங்கல் வட…

  23. கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு - மக்கள் குமுறல் எழுச்சியாக மாறியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் மாபெரும் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்தது கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை ஜனாதிபதி ஒருவரை லட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தின் ஊடாக விரட்டியடித்த சம்பவம் நடந்தேறி இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி …

  24. மன்னார் நடுக்குடா கடற்கரையில் கரை தட்டிய இந்திய கப்பல் July 8, 2023 இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும் கப்பல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (7) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை கடற்படையினர் மீட்டு நடுக்குடா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். அந்தக் கப்பலில், 11 பணியாளர்கள் உள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து, கடற்படை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், குறித்த கப்பல் கடற்படையால் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கப்பலை பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர். https://www.ilakku…

  25. ஐனாதிபதி ரணிலை சந்தித்தார் கருணா அம்மான்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் ( கருணா அம்மான்) இடையிலான விசேடசந்திப்பு நேற்று காலை ஜனாதிபதியில்லத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பிலும் , எமது புலம்பெயர்ந்த உறவுகள் எமது மண்ணில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், முதலீடுகளுக்கும் இடையூறாக இருக்கும் விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆரயப்பட்டதாகவும் , அதேவேளை இவ்விடையம் தொடர்பில் முனைப்புடன் செயற்படுமாறும் தேவை ஏற்படும் போது நேரடியாக தன்னை அணுகுமாறும் கருணா அம்மானிடம் ஜனாதிபதி தெரிவித்ததாகவும் க…

    • 4 replies
    • 518 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.