ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
கடன் அழுத்தத்தில் உள்ள நாடுகளுக்கு அர்த்தமுள்ள கடன் நிவாரணப் பொதியை ஒப்புக் கொள்ளுமாறு நாடுகளுக்கும் கடன் வழங்குபவர்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அழைப்பு விடுத்துள்ளார். தென் கொரியாவின் இன்சியான் நகரில் ஆசிய வளர்ச்சி வங்கியின் 56 ஆவது ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் , தங்கள் கடன் கடமைகளை நிறைவேற்றுவதில் தொடர்ந்து போராடும் நாடுகளுக்கான கடன் நிவாரண திட்டத்தில் அனைத்து பிரிவுகளும் ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும் என்றார். இதேவேளை, நாட்டின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் செயற்பாடுகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கும் தனது பாராட்டுக்களை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/252238
-
- 1 reply
- 632 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 04 MAY, 2023 | 01:44 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் புதன்கிழமை (3) பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட இராணுவ அதிகாரி ஒட்டுசுட்டான் நகர மையப்பகுதியில் நீர்ப்பாசன திணைக்களத்தின் 25 ஏக்கர் காணி, இரண்டு தனிநபர் காணிகள் மற்றும் இந்து மயானம் ஆகியவற்றை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள 64ஆவது படைப்பிரிவு முகாமுக்கான காணி ஆவணங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு பதிலளித்த பிரதேச செயலாளர், மக்களின் காணிகள், இந்து மயானம் என்பன விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்னு…
-
- 1 reply
- 547 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 04 MAY, 2023 | 01:42 PM முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி தொடர்ந்த வழக்கானது கடந்த 2019 ம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் நிலையில் இன்றையதினம் (04) முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றது. இதன் போது வழக்கு தொடுனரான கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 2023-09-21 க்கு தவணையிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்…
-
- 1 reply
- 659 views
- 1 follower
-
-
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் பிரிவில் கடமையாற்றும் இரண்டு சுகாதார உதவியாளர்கள் பாதுகாப்பற்ற பணிச்சூழல் காரணமாக மெலியோடோசிஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்களின் அறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார் . அவர்கள் இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்ர். அவர் தனது கடமைகளின் போது மெலியோடோசிஸ் என்ற பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடமை நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பு என கருதுவதற்கு பல காரணிகள் இருப்பதால், இந்த விவகாரத்தில் முறையான விசாரணைக்காக சுகாதார வல்லுநர்கள் சங்கம் இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ரவி குமுதேஷ் மேலு…
-
- 0 replies
- 374 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் பயிரிடப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது சேதன புளி வாழைப்பழங்கள் இம்மாதம் 28 ஆம் திகதி டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 350 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 25,000 கிலோ சேதன புளி வாழைப்பழங்கள் முதல் ஏற்றுமதி தொகுதியாக இடம்பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் 600 விவசாயிகள் புளி வாழை செய்கையில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் 650 ஹெக்டேயருக்கு பயிர்ச்செய்கையை விரிவுபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் ராஜாங்கனையில் பயிரிடப்பட்ட புளி வாழைப்பழங்கள் 18 தடவைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விவசாய அமைச்சின் கீழ் உள்ள விவசாயத்…
-
- 7 replies
- 985 views
- 1 follower
-
-
சுவிஸ் தூதரக ஊழியர் மீதான குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அனுமதி 2019ஆம் ஆண்டு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் கார்னியா பன்னிஸ்டர் பிரான்சிஸுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை திருத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) காலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்யுய வேண்டும் என்ற சட்டமா அதிபரின் கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டு அனுமதியை வழங்கியுள்ளார். 2019 டிசம்பர் 16 அன்று, குற்றப் புலனாய்…
-
- 0 replies
- 468 views
-
-
நாம் அன்றாடம் வீசி எறியும் தேங்காய் தண்ணீர் மற்றும் இளநீருக்கு வெளிநாட்டு சந்தையில் மிக அதிக தேவை உருவாகி வருவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போதும், இந்த நாட்டில் இளநீரை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை வெற்றிகரமாக நடந்து வருகிறது, ஆனால் தேங்காய் தண்ணீரை பொதி செய்து விற்பதில் கவனம் செலுத்துவதில்லை. நாட்டின் மொத்த தேங்காய் உற்பத்தியில், உள்நாட்டு நுகர்வு தவிர, பெரும்பாலான தேங்காய்கள் கொப்பரை உற்பத்தித் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதிக அளவு தேங்காய் தண்ணீர் வீணாகிறது என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது. வெளிநாட்டு சந்தையில், தேங்காய் நீர் ஒரு ஆற்றல் பானமாக விற்கப்படுகிறது, மேலும் ஒரு லிற்ற ர் தேங்காய் தண்ணீர் கொண்ட ஒரு பொதி வெ…
-
- 22 replies
- 807 views
- 1 follower
-
-
தனுஷ்க குணதிலக மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து தாமதமாகி வருவதால், நியூ சவுத் வேல்ஸ் சட்ட அதிகாரிகள் நீதிமன்ற கட்டணத்தை செலுத்த வேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர். சிட்னி நீதிமன்றில் இன்று(4) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிரதிவாதியான தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணிகள் இந்த வாதத்தை முன்வைத்துள்ளனர். வெளிநாட்டுப் பிரஜையான தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவில் வழக்கு விசாணையில்; ஈடுபட்டு சுமார் 6 மாதங்கள் கடந்த விட்டதாகவும் இந்த தாமதங்களினால் பெரும் தொகையை செலவிட நேரிட்டு வருவதாகவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன்படி, அடுத்த நீத…
-
- 0 replies
- 539 views
-
-
பொதுமக்களிடம் இருந்து சுமார் 30 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முதலீடுகள் மூலம் இலாபம் பெற முடியும் என கூறி நிதி மோசடி செய்ததாக கேகாலை பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (மே 02) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தனியார் நிறுவனமொன்றை பதிவு செய்துள்ளதாகவும், நிதி முதலீடுகளுக்காக பெரும் இலாபம் ஈட்டுவதாகவும் உறுதியளித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் கேகாலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட 09 முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர…
-
- 1 reply
- 639 views
- 1 follower
-
-
சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களை வழங்குவதை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தர்ஷன் அபேரத்ன தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு வருடாந்தம் இரண்டு கோடியே முப்பது இலட்சம் ரூபா மேலதிக செலவீனத்தை சேமிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். ஓட்டுநர் உரிமம் வழங்கும்போது தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்பட்ட உடல் மற்றும் மன தகுதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். எவ்வாறாயினும், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தர்ஷன் அபேரத்ன , நிறுவனத்தின் 26 அலுவலகங்களையும் ஒருங்கிணைக்கும் புதிய டிஜிட்டல் முறையை உருவாக்கி, அந்த அமைப்பி…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
Published By: VISHNU 27 APR, 2023 | 09:12 PM (எம்.மனோசித்ரா) விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுதர்ஷன பத்திரணவின் அழைப்பிற்கமைய இந்திய விமானப்படைத் தளபதி எயா சீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி உள்ளிட்ட நால்வரடங்கிய தூதுக்குழு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் மே முதலாம் திகதி நாட்டுக்கு வருகை தரவுள்ளனர். 1982இல் போர் விமானத்தின் விமானியாக இந்திய விமானப்படையில் இணைந்த தற்போதைய விமானப்படை தளபதி அந்நாட்டின் பல்வேறு போர் விமானங்களில் விமானியாக செயற்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த அவர் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி இந்திய விமானப்படையின் 30ஆவது தளபதியாகப் பதவியேற்றார்.…
-
- 6 replies
- 767 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 03 MAY, 2023 | 02:41 PM சர்வதேச ஊடக தினமான மே 3 ஆம் திகதி ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ். ஊடக அமையத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். ஊடக அமையத்தின் முன்றலில் இன்று பகல் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஊடகவியலாளர்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டன. https://…
-
- 2 replies
- 501 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 03 MAY, 2023 | 02:52 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான சலுகைகள் வழங்கப்படாமை , சட்ட சிக்கல்கள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை என்பன இதில் நேரடி தாக்கம் செலுத்துகின்றன. எனவே விரைவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான விசேட சலுகைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (03) இடம்பெற்ற போது , கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் தாமதப்படுத்தப்படுகின்றமை தொ…
-
- 1 reply
- 316 views
- 1 follower
-
-
க.பொ.த சா/த பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து நடைமுறைப்படுத்தியது. வலய கல்வி அலுவலகம் இந்தத் திட்டத்திற்கான புள்ளிகளை வழங்கும்போது திறன், அழகியல், விளையாட்டு மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகள் மற்றும் மாணவரின் குடும்பத்தின் பொருளாதார மற்றும் சமூக நிலை ஆகியவற்றைக் கருத்திற்க் கொள்கிறது. முதல் கட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 3,000 மாணவர்கள் தகுதி பெற்றனர், மேலும் 11 கல்வி வலயங்களில் அதிக தகுதிகளைக் கொண்ட 110 புலமைப்பரிசில் பெற்றவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா உதவித்தொகை ஜனாதிபதி செயலகத்தில் இரண்டு வருடங்களுக்கு வழங்கப…
-
- 0 replies
- 373 views
- 1 follower
-
-
கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலனறுவை மாவட்டத்திலும் இன்று மாலை 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (03) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்தில் 74.8 மில்லிமீற்றர் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. https://thinakkural.lk/article/252005
-
- 1 reply
- 674 views
- 1 follower
-
-
ரணில் வீடு எரிப்பு: ரங்கா சந்தேகநபர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சொந்த வீட்டை எரித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்காவை குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகநபராக பெயர் குறிப்பிட்டுள்ளனர். இதற்கமைய, ஜெ. ஸ்ரீரங்காவை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, கடந்த 2011 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/ரணில்-வ…
-
- 7 replies
- 969 views
-
-
தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் பின்னடிப்பு – ஜனாதிபதி தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் பின்னடிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டின் நீண்டகாலமாக இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இது மிகவும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள…
-
- 8 replies
- 902 views
-
-
மின்னேரிய விமான நிலையம் என அழைக்கப்படும் ஹிங்குராக்கொட விமான நிலையத்தை சர்வதேச சிவில் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த யோசனைகளை வெளியிட்டதுடன் விமான நிலையத்தின் நிர்வாகமும் செயற்பாடுகளும் தற்போது இலங்கை விமானப்படையின் கீழ் உள்ளதாக தெரிவித்தார். ஹிங்குராகொடவை சர்வதேச சிவில் விமான நிலையமாக மாற்றுவதன் மூலம் பொலன்னறுவை, அநுராதபுரம், சீகிரியா மற்றும் தம்புள்ளை ஆகிய இடங்களுக்கான விஜயங்களை இலகுவாக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த வரலாற்று, இயற்கை மற்றும் கலாசா…
-
- 1 reply
- 278 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 03 MAY, 2023 | 09:04 AM (இராஜதுரை ஹஷான்) எரிபொருள், நிலக்கரி ஆகியவற்றின் விலை குறைப்புக்கு அமைய மின்கட்டணத்தை 25 சதவீதத்தால் குறைக்க முடியும். மின்கட்டண அதிகரிப்பால் மாத்திரம் இலாபமடைய முடியாது. மின்சார சபை நிதி முகாமைத்துவத்தில் முதலில் ஒழுக்கத்தையும்,வெளிப்படைத் தன்மையையும் பேண வேண்டும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மின்சார சப…
-
- 1 reply
- 191 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 03 MAY, 2023 | 02:37 PM முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் மே 18ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் குறித் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பேரினவாத மேலாதிக்கத்தின் தமிழினவழிப்புச் சிந்தனையின் கொடிய கோரப்பற்கள் முள்ளிவாய்க்கால் மண்ணின் பிடியில் அடைக்கலம் அடைந்த ஈழத்த்தமிழினத்தின் இதயத்தில் ஆழப்பதிந்த நாட்கள் கடந்துபோய் 14 ஆண்டுகள் நிறைவடையும் நாள் மே 18. மனிதாபி…
-
- 0 replies
- 433 views
- 1 follower
-
-
“காவி உடையில் அரசியல் செய்யும் பிக்குமாரை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், இல்லையேல் பதற்ற நிலைமை உருவாகும்” இனப்பிரச்சினை தொடர்பாக தொடர்ந்தும் பேசுவதை விடுத்து, செயலில் காட்டுங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிம்ம நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மேதின உரை தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளார். இனப் பிரச்சனை தொடர்பில் காத்திரமான முயற்சிகளை எடுத்த ஒருவராக ஜனாதிபதி திகழ்ந்தாலும் பதவியேற்ற பின்னர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். இனப்பிரச்சினை தீர்வுபற்றி, தமிழ் கட்சிகளை அழைத்துப் பேச முன்னதாக சிங்கள கட்சிகளை…
-
- 0 replies
- 470 views
-
-
யாழில்.ஒருவருக்கு மலேரியா யாழ்ப்பாணத்தில் ஒருவர் மலேரியா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் மலேரியா நோயின் உள்ளூர் தொற்று இறுதியாக 2012 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்டது. அதன்பின்னர் இதுவரை உள்ளுர் பரம்பல் காரணமாக எந்தவொரு நோயாளியும் இனங்காணப்படவில்லை. ஆனாலும் மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்கு சென்று இலங்கைக்கு திரும்பி வந்தவர்களில் பலருக்கு மலேரியா நோய் இனங்காணப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் இ…
-
- 0 replies
- 369 views
-
-
பிரித்தானியாவிற்கு செல்கிறார் ஜனாதிபதி! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(புதன்கிழமை) பிரித்தானியாவிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்கு செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சுமார் 70 ஆண்டுக்காலம் ஐக்கிய இராச்சியத்தின் அரியணையில் இருந்த 2ஆம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு செப்டெம்பர் 8ஆம் திகதி காலமானார். அவரது மறைவின் பின்னர் இளவரசர் 3ஆவது சார்ள்ஸ் முடிக்குரிய மன்னராக அறிவிக்கப்பட்டார். இதன் பிரகாரம், 3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவ…
-
- 0 replies
- 484 views
-
-
மக நெகும மற்றும் அதனுடன் இணைந்த நான்கு நிறுவனங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று காலை அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நிறுவனங்களை பராமரிப்பதற்கு நிதி பற்றாக்குறை நிலவுதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ‘மக நெகும’ வீதி கட்டுமான உபகரண நிறுவனம், 2004 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது முன்னர் இருந்த வீதி கட்டுமான மேம்பாட்டு நிறுவனத்தின் (RCDC) மறு உருவாக்கமாக இருந்தது. எவ்வாறாயினும், இந்த அரச நிறுவனமும் அதனுடன் இணைந்த நிறுவனங்களும் அவற்றைப் பராமரிப்பதற்கான நிதிப் பற்றாக்குறையால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. அரச நிறுவன சீர்திருத்தங்…
-
- 0 replies
- 387 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 29 APR, 2023 | 12:31 PM இலங்கையில் பல குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்படும் குடுஅஞ்சு என்பவரை பிரான்ஸ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குடும்ப வன்முறை குற்றச்சாட்டின் பின்னரே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரான்ஸில் வசித்துவந்த அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸ் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவரை பிரான்சிலிருந்து இலங்கைக்கு அழைத்துவருவது குறித்து இலங்கை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். குடு அஞ்சு கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையான தெகிவளை மவுண்டலவேனியா மாநகரசபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வா படுகொலை உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டுவருகின்றார். …
-
- 3 replies
- 725 views
- 1 follower
-