Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் 3 இடங்களில் முதலீட்டு வலயங்கள் வடக்கு மாகாணத்தில் மூன்று இடங்களில் முதலீட்டு வலயங்கள் அமைப்பதற்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதற்குரிய அமைச்சரவைப் பத்திரங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது இலங்கை முதலீட்டுச் சபையின் பிரதிநிதியால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளோம். அங்கே முதலீட்டு வலயம் அமைக்க உத்தேசித்துள்ளோம். கிளிநொச்சியில் இரசாயன தொழிற்சாலை அமைந்துள்ள இடத்திலும், மாங்குளத்தில் 400 ஏக்…

  2. விரைவில் அதிரடி முடிவு எடுப்போம்! – சம்பந்தன் அறிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசால் ஆரம்பிக்கப்பட்ட சர்வகட்சிப் பேச்சு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளமை தொடர்பிலும், தீர்வு முயற்சிகள் மந்தகதியில் உள்ளமை குறித்தும் இரா. சம்பந்தனிடம் எழுப்பிய கேள்விக்கே மேற்கண்டவாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “தற்போதைய நிலைமையில் அரசின் செயற்பாடுகள் மந்தகதிய…

  3. இலங்கையின் வனவிலங்கு வளங்களை நாட்டுக்கு அந்நிய செலாவணியை கொண்டு வருவதற்கு பயன்படுத்த முடியும் என வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கிரித்தலையில் நேற்று வனவிலங்கு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனங்கள் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தால், நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் வனவிலங்கு வளங்கள் நாட்டுக்கு அந்நிய செலாவணியை கொண்டு வர முடியும். உலகில் மிகச் சிலரே எமது நாட்டைப் பற்றி நன்கு அறிந்திருப்பதாகவும், மிகச் சிலரே எமது நாட்டின் அழகை அறிவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உலகின் பெரும்பாலான நாடுகளிலுள்ள மக்கள் குளிர் காலநிலையால் க…

  4. மத நல்லிணக்கத்தைப் போற்றுபவர்களே பௌத்தத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் – சஜித் மத நல்லிணக்கத்தைப் போற்றுபவர்களே பௌத்தத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கையர்களுக்கும் உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கும் உலக மக்கள் அனைவருக்கும் வெசாக் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் இறப்பு ஆகியவை பௌத்தத்தின் மிகப்பெரிய பண்டிகையாகும். இது உலகின் பௌத்த மக்களால் மிகுந்த நம்பிக்கையுடன் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நிலை…

    • 1 reply
    • 334 views
  5. Published By: DIGITAL DESK 3 05 MAY, 2023 | 02:49 PM வட மாகாணத்தில் சீனாவின் உதவி திட்டத்தில் கடற் தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாண மக்களுக்காக சீன அரசிடம் இருந்து சுமார் 1500 மில்லியன் ரூபாய் கிடைக்கப் பெறவுள்ள நிலையில் குறித்த நிதியுதவியில் அரிசி, கடற்தொழிலாளர்களுக்கு வலை மற்றும் வீடுகள் பெற்றுக…

  6. அனைத்து மாகாணங்களுக்கும் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை ஒன்லைனில் விரைவாக பெற்றுக்கொள்ளும் வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA) மற்றும் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இ-வாகன வருமான உரிமம் (eRL) திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம், புதிய வாகன வருமான உரிமத்தைப் பெறுவதுடன், தற்போதுள்ள வருமான உரிமத்தை (ஈஆர்எல்) புதுப்பிக்கும் வசதியும் கொண்டு உள்ளது. திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மற்றும் ஒன்லைன் முறையின் மூலம் உரிமத்தைப் பெறுவதற்கான நிதிக் கொடுப்பனவுகளை கிரெடி…

  7. முன்னறிவிப்பு இன்றி வெளிநாடு சென்ற 50 வைத்தியர்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார். இதேவேளை பலாங்கொடை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிபுணர்கள் இன்மையால் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டதால் நேற்று பதற்றமான சூழல் காணப்பட்டது. ஆறு வைத்தியர்கள் கடமையாற்றியிருந்த போதிலும் நேற்று இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றியிருந்தமையினால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என மருத்துவமனையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/25…

  8. Published By: T. SARANYA 05 MAY, 2023 | 12:57 PM வவுனியா பூவரசங்குளம் பகுதியில் தன்னால் தந்தை அவமானப்படுவதை தாங்க முடியாமல் மாணவன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டிக்கான இல்ல அலங்கார செயற்பாட்டினை குறித்த மாணவன் சக மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்டதாகவும், அதற்கான ஒவியம் வரைவதற்காக அன்றையதினம் இரவு பாடசாலைக்கு தொலைபேசியினை கொண்டு சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். இவ்வாறு தொலைபேசியினை பாடசாலையினுள் குறித்த மாணவன் பாவிப்பதை கண்ட அதிபர் தொலைபே…

  9. இலங்கையில் குழந்தைகளைக் கைவிடும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம், குழந்தைப் பெட்டிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. புதிதாக பிறந்த குழந்தைகளை வளர்க்க முடியாத அல்லது அந்த குழந்தைகளில் விருப்பமில்லாத பெற்றோர்கள், குழந்தைகளை அரசின் பொறுப்பில் விட்டுச்செல்லும் நோக்கியிலேயே குழந்தை பெட்டிகளை அறிமுகப்படுத்த இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அண்மைய வருடங்களில் 60க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தமது குழந்தைகளை வீதியில் கைவிட்டச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குழந்தை பெட்டிகள் அத்துடன் கடந்த ஆறு வருடங்களில் பல்வேறு காரணங்களால் குறைந்தது 80 சிறுவர்கள் அவநம்பிக்கையான பெற்றோரால் கொல்லப்பட்டுள்ளதாகவும் நன்னடத்தை மற்றும் சிறுவர்…

  10. தமிழர் தாயகத்தை கூறுபோடும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் – ஒரு தேசமாக பொங்கியெழ அழைப்பு ‘திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களுக்கு ஒரு தேசமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வரையில் எங்கள் நிலங்கள் பறிபோய்க்கொண்டே இருக்கும்’ என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அப்பகுதி மக்களின் அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செ. கஜேந்திரன் ஆகியோர் நேற்று(30) நேரில் சென்று பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்தவை வருமாறு,…

    • 7 replies
    • 797 views
  11. பூநகரி கௌதாரிமுனையில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்னுற்பத்திக்கு மாவட்ட அபித்திக் குழு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கான அனுமதிக்காக கோரப்பட்டது. அதன் முழுமையான சாதக பாதக நிலை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் தீர்மானிக்க முடிவு எடுக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் தாம் இதுவரை அறியவில்லை எனவும், இன்றே அறிய முடிந்ததாகவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கயன் இராமநாதன், எஸ்.சிறிதரன், எஸ்.கஜேந்திரன், இது தொடர்பில் ஆராய்ந்தே அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தனர். மன்னார், புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் அதானி குடும்பத்தின் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள்…

    • 1 reply
    • 631 views
  12. Published By: T. SARANYA 03 MAY, 2023 | 09:26 PM (நா.தனுஜா) பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கும், பொருளாதார மீட்சியைத் துரிதப்படுத்துவதை முன்னிறுத்தியும் இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், பல்வேறு துறைகளிலும் இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார். தென்கொரியாவின் இன்ஸியான் நகரில் நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்ஸுகு அஸகவாவுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை (2) நடைப…

  13. கடன் அழுத்தத்தில் உள்ள நாடுகளுக்கு அர்த்தமுள்ள கடன் நிவாரணப் பொதியை ஒப்புக் கொள்ளுமாறு நாடுகளுக்கும் கடன் வழங்குபவர்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அழைப்பு விடுத்துள்ளார். தென் கொரியாவின் இன்சியான் நகரில் ஆசிய வளர்ச்சி வங்கியின் 56 ஆவது ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் , தங்கள் கடன் கடமைகளை நிறைவேற்றுவதில் தொடர்ந்து போராடும் நாடுகளுக்கான கடன் நிவாரண திட்டத்தில் அனைத்து பிரிவுகளும் ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும் என்றார். இதேவேளை, நாட்டின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் செயற்பாடுகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கும் தனது பாராட்டுக்களை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/252238

  14. Published By: NANTHINI 04 MAY, 2023 | 01:44 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் புதன்கிழமை (3) பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட இராணுவ அதிகாரி ஒட்டுசுட்டான் நகர மையப்பகுதியில் நீர்ப்பாசன திணைக்களத்தின் 25 ஏக்கர் காணி, இரண்டு தனிநபர் காணிகள் மற்றும் இந்து மயானம் ஆகியவற்றை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள 64ஆவது படைப்பிரிவு முகாமுக்கான காணி ஆவணங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு பதிலளித்த பிரதேச செயலாளர், மக்களின் காணிகள், இந்து மயானம் என்பன விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்னு…

  15. Published By: DIGITAL DESK 5 04 MAY, 2023 | 01:42 PM முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி தொடர்ந்த வழக்கானது கடந்த 2019 ம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் நிலையில் இன்றையதினம் (04) முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றது. இதன் போது வழக்கு தொடுனரான கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 2023-09-21 க்கு தவணையிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்…

  16. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் பிரிவில் கடமையாற்றும் இரண்டு சுகாதார உதவியாளர்கள் பாதுகாப்பற்ற பணிச்சூழல் காரணமாக மெலியோடோசிஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்களின் அறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார் . அவர்கள் இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்ர். அவர் தனது கடமைகளின் போது மெலியோடோசிஸ் என்ற பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடமை நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பு என கருதுவதற்கு பல காரணிகள் இருப்பதால், இந்த விவகாரத்தில் முறையான விசாரணைக்காக சுகாதார வல்லுநர்கள் சங்கம் இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ரவி குமுதேஷ் மேலு…

  17. யாழ்ப்பாணத்தில் பயிரிடப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது சேதன புளி வாழைப்பழங்கள் இம்மாதம் 28 ஆம் திகதி டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 350 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 25,000 கிலோ சேதன புளி வாழைப்பழங்கள் முதல் ஏற்றுமதி தொகுதியாக இடம்பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் 600 விவசாயிகள் புளி வாழை செய்கையில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் 650 ஹெக்டேயருக்கு பயிர்ச்செய்கையை விரிவுபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் ராஜாங்கனையில் பயிரிடப்பட்ட புளி வாழைப்பழங்கள் 18 தடவைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விவசாய அமைச்சின் கீழ் உள்ள விவசாயத்…

  18. சுவிஸ் தூதரக ஊழியர் மீதான குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அனுமதி 2019ஆம் ஆண்டு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் கார்னியா பன்னிஸ்டர் பிரான்சிஸுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை திருத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) காலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்யுய வேண்டும் என்ற சட்டமா அதிபரின் கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டு அனுமதியை வழங்கியுள்ளார். 2019 டிசம்பர் 16 அன்று, குற்றப் புலனாய்…

  19. நாம் அன்றாடம் வீசி எறியும் தேங்காய் தண்ணீர் மற்றும் இளநீருக்கு வெளிநாட்டு சந்தையில் மிக அதிக தேவை உருவாகி வருவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போதும், இந்த நாட்டில் இளநீரை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை வெற்றிகரமாக நடந்து வருகிறது, ஆனால் தேங்காய் தண்ணீரை பொதி செய்து விற்பதில் கவனம் செலுத்துவதில்லை. நாட்டின் மொத்த தேங்காய் உற்பத்தியில், உள்நாட்டு நுகர்வு தவிர, பெரும்பாலான தேங்காய்கள் கொப்பரை உற்பத்தித் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதிக அளவு தேங்காய் தண்ணீர் வீணாகிறது என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது. வெளிநாட்டு சந்தையில், தேங்காய் நீர் ஒரு ஆற்றல் பானமாக விற்கப்படுகிறது, மேலும் ஒரு லிற்ற ர் தேங்காய் தண்ணீர் கொண்ட ஒரு பொதி வெ…

  20. தனுஷ்க குணதிலக மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து தாமதமாகி வருவதால், நியூ சவுத் வேல்ஸ் சட்ட அதிகாரிகள் நீதிமன்ற கட்டணத்தை செலுத்த வேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர். சிட்னி நீதிமன்றில் இன்று(4) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிரதிவாதியான தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணிகள் இந்த வாதத்தை முன்வைத்துள்ளனர். வெளிநாட்டுப் பிரஜையான தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவில் வழக்கு விசாணையில்; ஈடுபட்டு சுமார் 6 மாதங்கள் கடந்த விட்டதாகவும் இந்த தாமதங்களினால் பெரும் தொகையை செலவிட நேரிட்டு வருவதாகவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன்படி, அடுத்த நீத…

  21. பொதுமக்களிடம் இருந்து சுமார் 30 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முதலீடுகள் மூலம் இலாபம் பெற முடியும் என கூறி நிதி மோசடி செய்ததாக கேகாலை பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (மே 02) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தனியார் நிறுவனமொன்றை பதிவு செய்துள்ளதாகவும், நிதி முதலீடுகளுக்காக பெரும் இலாபம் ஈட்டுவதாகவும் உறுதியளித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் கேகாலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட 09 முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர…

  22. சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களை வழங்குவதை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தர்ஷன் அபேரத்ன தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு வருடாந்தம் இரண்டு கோடியே முப்பது இலட்சம் ரூபா மேலதிக செலவீனத்தை சேமிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். ஓட்டுநர் உரிமம் வழங்கும்போது தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்பட்ட உடல் மற்றும் மன தகுதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். எவ்வாறாயினும், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தர்ஷன் அபேரத்ன , நிறுவனத்தின் 26 அலுவலகங்களையும் ஒருங்கிணைக்கும் புதிய டிஜிட்டல் முறையை உருவாக்கி, அந்த அமைப்பி…

  23. Published By: VISHNU 27 APR, 2023 | 09:12 PM (எம்.மனோசித்ரா) விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுதர்ஷன பத்திரணவின் அழைப்பிற்கமைய இந்திய விமானப்படைத் தளபதி எயா சீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி உள்ளிட்ட நால்வரடங்கிய தூதுக்குழு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் மே முதலாம் திகதி நாட்டுக்கு வருகை தரவுள்ளனர். 1982இல் போர் விமானத்தின் விமானியாக இந்திய விமானப்படையில் இணைந்த தற்போதைய விமானப்படை தளபதி அந்நாட்டின் பல்வேறு போர் விமானங்களில் விமானியாக செயற்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த அவர் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி இந்திய விமானப்படையின் 30ஆவது தளபதியாகப் பதவியேற்றார்.…

  24. Published By: NANTHINI 03 MAY, 2023 | 02:41 PM சர்வதேச ஊடக தினமான மே 3 ஆம் திகதி ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ். ஊடக அமையத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். ஊடக அமையத்தின் முன்றலில் இன்று பகல் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஊடகவியலாளர்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டன. https://…

  25. Published By: DIGITAL DESK 5 03 MAY, 2023 | 02:52 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான சலுகைகள் வழங்கப்படாமை , சட்ட சிக்கல்கள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை என்பன இதில் நேரடி தாக்கம் செலுத்துகின்றன. எனவே விரைவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான விசேட சலுகைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (03) இடம்பெற்ற போது , கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் தாமதப்படுத்தப்படுகின்றமை தொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.