Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளை மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாகவும் கண்மூத்தனமாகவும் எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 474 views
  2. பூநகரிக்கு முன்னதாகவே கிளிநொச்சியைக் கைப்பற்றுதல் என்ற திட்டம் படைத்தரப்பிற்கு இருந்த நிலையில் கிளிநொச்சி சாத்தியமற்றுப் போகவே, பூநகரி நோக்கிய நகர்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னரும் கிளிநொச்சி நெருக்கடி மிக்கதானதொன்றாக இருக்கையில், முல்லைத்தீவு நோக்கியதான நகர்வு தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் முல்லைத்தீவு பூநகரி அல்ல என ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியர் திரு. ஜெயராஜ் நேற்று வெளிவந்துள்ள வெள்ளிநாதம் இதழில் எழுதியுள்ள பத்தியில் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவிற்காக கிளிநொச்சியோ கிளிநொச்சிக்காக முல்லைத்தீவோ கைவிடப்படக் கூடியவையல்ல. ஆகையினால் சிறிலங்கா இராணுவம் அதிகவிலை கொடுக்கக்கூடியதான இரு களமுனைகளைத் திறந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜ…

  3. வன்னிப்பெரு நிலப்பரப்பினை சுற்றி சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் விளக்கமளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 24 replies
    • 3.4k views
  4. யாழ்ப்பாணத்தின் முதன்மை ஆங்கில ஊடகவியலாளரான ஜோ.அரியரட்ணம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இன்று காலமானார். தொடர்ந்து வாசிக்க

  5. இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதாகவும், அதனை நிறுத்தி சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும் என, APP எனப்படும் பாகிஸ்தானின் அசோசியேட் பிறஸ் ஒஃப் பாகிஸ்தான் (Associated Press Of Pakistan) என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாகச் சித்தரிக்கும் இந்த ஊடகம், இவ்வாறான அமைப்புகளிற்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவிலும், ஏனைய இடங்களிலும் பயங்கரவாத அமைப்புகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதற்கு இந்தியா அயல் நாடுகளான சிறீலங்கா, மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அசோசியேட் பிறஸ் ஒஃப் பாகிஸ்தான் (Associated Press Of Pakistan) …

  6. நாடு பிரிவினைக்கு உள்ளாக வேண்டுமென்று வாதிடுமுன்னர் சிங்களத் தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பளித்து அவர்களின் உண்மைச் சொரூபத்தை வெளிக்கொண்டுவருவது சிறந்தது' [06 - December - 2008] [Font Size - A - A - A] கலாநிதி ஆ.க.மனோகரன் * எழுதிய "இலங்கை தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும்; ஒருவரலாற்றுப் பார்வை 1948 2007' நூல் வெளியீட்டு வைபவம் கடந்த ஞாயிறு மாலை கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்றபோது முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய வெளியீட்டுரை 1926 ஆம் ஆண்டில் "ஒக்ஸ்ஃபொட்" சர்வகலாசாலையில் பயின்று வெளிவந்த எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா அவர்கள் இலங்கைக்கு சமஷ்டி முறையே சிறந்தது என்று கூறிய போது அவ்வாறு அவர் கூ…

    • 2 replies
    • 1.3k views
  7. வணக்கம், தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலான இந்திய பிரதமருடனான சந்திப்பும், ஈழத்தில் போர் நிறுத்தம் தொடர்பான செய்திகளும் நம்பிக்கை ஊட்டுகின்றது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் என்றென்றும் உங்களுக்கு நன்றி உடையவர்களாக இருப்பார்கள். அரசியல் தாமதங்கள் சிங்களத்துக்கு அணுகுண்டின் உடன் பிறவா உறவான "கிளச்ச்டார்" குண்டை புயலாலும், பெரும்வெள்ளத்தாலும் அவதிப்படும் தமிழர்களின் அகதி முகாம் மீது பதினாறு தரம் பரிசீலிக்க அவகாசம் தந்துள்ளது. உலகமே இந்த உயிர் கொல்லி ஆயுதத்தை பிரயோகிக்க மறுக்கும் ஒப்பந்தத்தில் ஒப்பமிடும் இந்நாளில், சிங்களம் கைச்சாத்திடா சீனத்துடன் கை கோர்த்துள்ளது. இதுவே, ஈழத்தில் தமிழருக்கெதிரான இன ஒழிப்பை சிங்களம் எந்த அழுத்தத்தாலும் கைவிடாது என்பதற்கு சான்று. …

    • 0 replies
    • 994 views
  8. http://www.tamilskynews.com/

    • 4 replies
    • 1.7k views
  9. ஈழத்தில் நடைபெற்று வரும் போர், இப்பொழுது பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது. பெரிய வல்லரசு நாடுகளுடன் மோதியும், பல சதிச் செயல்களிலும் இருந்து வெற்றி பெற்று வரும் இந்த வேளையில், புலத்தில் வாழும் மக்கள் கதைப்பது என்ன? சிறீலங்கா இராணுவத்தினர், தமிழ் மக்களின் பல இடங்களைக் கைப்பற்றி விட்டார்கள், கிளிநொச்சியினையும் இன்னும் சில நாட்களில் கைப்பற்றி விடுவோம் என்று பல மாதங்களும் கடந்து பிடிக்கவில்லை. இப்படி இலங்கை இராணுவத்தினர் தெரிவித்து வருகின்றனர். இராணுவத்தினர், தாங்கள் வெற்றி பெறுவதாக பெரிதாக சந்தோசம் அடைந்து வருகின்றனர். சிறீலங்கா இராணுவத்தினர் வெற்றி பெற வேண்டும் என பல வல்லரசு நாடுகள், இராணுவ உதவிகள், போர் தந்திரங்கள் போன்றவற்றை வழங்கி வருகின்றது. இப்படி பல…

    • 1 reply
    • 1.4k views
  10. TMVPயின் தலமைப் பொறுப்பு தொடர்பில் முரண்பாடு வலுக்கிறது – தற்கொலையாளிகள் தன்னிடம் இல்லை கருணா: http://www.globaltamilnews.net/tamil_news....=3023&cat=1 தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது தொடர்பில் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் நந்தகோபன் அண்மையில் அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ரி.எம்.வி.பி கட்சியின் தலைவராக பதிவுசெய்வதில் கருணாவும் பிள்ளையானும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறில்லாது போனால், தமக்கு நெருங்கிய ஒருவரை தலைவர் ப…

    • 0 replies
    • 1.2k views
  11. தேசியப் பிரச்சினைக்கு பெடரல் முறையில் தீர்வு காண முடியும் - கே.என்.சொக்ஸி: http://www.globaltamilnews.net/tamil_news....=3010&cat=1 மாநிலங்களின் சம்மேளனமாக இலங்கை உருவாகுவதை தான் நியாயப்படுத்துவதாக தெரிவித்திருக்கும் ஐ.தே.க எம்.பியும் முன்னாள் அமைச்சருமான கே.எம்.சொக்ஸி சம்மேளனம் என்பது ஈழம் அல்ல என்றும் அது பிரிவினைக்கு இட்டுச் செல்லாது என்றும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் அவசரகால நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சொக்ஸி, சர்வதேச பிரதிநிதிகள் குழுவானது தனது கூட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்க வேண்டுமெனவும் மாநிலங்களின் சம்மேளனத்தை அடிப்படையாகக் கொண்ட விதத்தில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து இ…

  12. சிங்கப்பூரில் இலக்கியத்திற்கான தேசிய விருது பெற்ற கனகலதாவுடன் ஒரு நேர்காணல்: http://www.globaltamilnews.net/tamil_news....2991&cat=13 இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் பெண் ஒருவர் சிங்கப்பூரில் இலக்கியத்திற்கான தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். கனகலதா கிருஸ்ணசாமி ஐயர் என்ற இலங்கைத் தமிழ் பெண்ணுக்கே 2008ம் ஆண்டுக்கான தேசிய இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது. 'நான் கொலை செய்யும் பெண்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக கனகலதாவிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.கனகலதா, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மற்றும் நீர்கொழும்பு விஜயரட்னம் மஹா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் தேசிய தமிழ்ப் பத்திரிகையான தமிழ் …

  13. [url="http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1389:2008-12-06-10-33-58&catid=36:2008-09-21-04-33-30&Itemid=103"]தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் கிளிநொச்சியில் உள்ள தமிழர்களை சென்றடைந்துள்ளது.வெள்ளிக்கி

  14. அம்பாறையில் கணவனும் மனைவியும் சுட்டுக்கொலை சனி, 06 டிசம்பர் 2008, 14:57 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] அம்பாறை மாவட்டத்தில் கணவனும் மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர

  15. கொழும்பு துறைமுகத்தைத் தாக்குவதற்கு விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருப்பதாக கொழும்பு லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. துறைமுகத்தைத் தாக்கும் திட்டத்துடன் சுமார் 10 வரையிலான விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொழும்பு நகருக்கள் நுழைந்திருப்பதாக லங்காதீப பத்திரிகை தனது இன்றைய தலைப்புச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  16. மாகாண சபை தேர்தலின் பின்னர் கிழக்கில் அமைதி திரும்புமென மக்கள் எதிர்பார்த்த போதும் அது பகற்கனவாகிவிட்டது. இரண்டு வருட கால யுத்தத்தின் பின்னர் ஆயுதக்குழு ஒன்றிடம் கிழக்கு மாகாணம் ஒப்படைக்கப்பட்டது. மக்களும் அதிகாரம் மக்களுடைய கைகளில் கிடைத்துள்ளதென்பதால் எந்தவிதமான அச்சம் இல்லாமல் வாழமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், தற்போது அது ஒரு பகற்கனவாக முடிந்துள்ளது. கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் போன்றன நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், பீதி நிறைந்த வாழ்க்கையுடனேயே சாதாரண மக்கள் காலம் கழித்து வருகின்றனர். கிழக்கில் அதிகரித்து வரும் படுகொலைகள் அங்கு ஜனநாயக செயற்பாடுகளுக்கு பெரும் தடையினை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதக் கரங்கள் தங்களை அடக்கி ஒடுக்கவும், தங்களது இயல…

  17. வன்னி, யாழ் களமுனைகளில் கொல்லப்படும் பல நூற்றுக்கணக்கான படையினர் காணாமல் போனோர் பட்டியலில் இடப்படுவதாக, சிறீலங்காவின் எதிர்க்கட்சிகள் தகவல் வெளியிட்டுள்ளன. பல நூற்றுக்கணக்கான படையினர் நாளாந்தம் கொல்லப்படுகின்ற போதிலும், அது பற்றிய தகவல்களை மறைக்கும் சிறீலங்கா அரசு, அவர்களது உடலங்களை குறிப்பிட்ட இடங்களில் புதைத்து வருகின்றது. இதற்கென தனியான படையணி ஒன்று உருவாகப்பட்டு இயங்கி வருவதாக, கடந்த பல மாதங்களின் முன்னர் மன்னாரில் படையினர் வல்வளைப்பு முயற்சியை ஆரம்பித்தபோது தகவல் கசிந்தமை இங்கு நினைவூட்டத்தக்கது. களமுனையின் பின்புறத்தில் பணியாற்றும் இந்த அணியினர், கொல்லப்படும் படையினரது உடலத்தை ஏனைய படையினருக்கு தெரியாது புதைத்தும், எரியூட்டியும் வருகி்றனர். …

  18. சிங்களப் பேரினவாதத்திற்கும் அதற்கு எதிர்வினையாக எழுந்த தமிழ்த் தேசிய வாத்திற்க்கும் இடையேயான அரசியல் முரண்பாடு ஆயுதப்போராக நீட்சி அடைந்த வரலாற்றில் இருந்து பிறந்ததே விடுதலைப்புலிகள் இயக்கம்.விடுதலைப் புலிகள் பிறப்பதற்குக் காரணமான முரண்பாடு தீர்க்கப்படாமால் புலிகள் அழியப் போவதில்லை.வரலாறு எவ்வாறு முரண்பாடுகளில் இருந்து பிறக்கிறது என்பதை கடந்த கால மனித வரலாற்றை , வரலாற்று இயங்கியலின் அடிப்படையில் அணுகுவதன் மூலம் புரிந்து கொள்ளலாம். இனக் குழுக்களுக்கு இடையேயான வளப்பங்கீடு பற்றிய முரண்பாடே தேசிய இனப் போராட்டங்களாக பரிணமிக்கின்றன.இலங்கைத் தீவின் வரலாற்றை நுணுகி ஆராய்ந்தால் சிங்கள இனமும் தமிழ் இனமும் இலங்கைத் தீவின் வளங்களைப் பங்கிடுவதற்காக மற்றைய சிறு குழுக்களில் இருந்து …

  19. ஊர் கூடி தேர் இழுத்தால்... [06 - December - 2008] இன்பராஜ் "இலக்கு' என்ற சொல்லைப் பற்றி யாருக்கும் தெரியாமல் இல்லை. மனித வாழ்க்கையில் இலக்கு இல்லையேல் எதிலும் நம்மால் வெற்றி பெற முடியாது என்பது மட்டும் உண்மை. இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்கள ராணுவத்தினரின் இலக்கு, விடுதலைப்புலிகளை அடியோடு அழிப்பதில் மட்டுமல்லாமல் தமிழர்களையும், அவர்களது வம்சத்தையும் முற்றிலுமாக அழிப்பதும்தான். ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு போர் உக்கிரத்தை எட்டியுள்ள நிலையில், நமது தொப்புள்க்கொடி உறவுகள் காக்கப்பட வேண்டும் என தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களின் இலக்குதான் என்ன? "இலங்கையில் தேவை உடனடிப் போர் நிறுத்தம்' 30 ஆண்டுகளுக்கு…

  20. புலம்பிக் கிடப்பது புயல்களுக்கு அழகல்ல! திகதி: 05.12.2008 // தமிழீழம் // [] - எழுதியவர் சு.ஞாலவன் யூதர்களுக்கு எதிரான வாதத்தைக் குறிக்கும் 19ம் நூற்றாண்டில் உருவாகிய அன்ரி - செமெற்றிசம் (Anti-Semitism) என்ற சொல் ஹிட்லரின் யூத இன அழிப்புடனே பிரபல்ய மடைந்ததெனினும், பலஸ்தீனத்திற்கு வெளியே யூதர்கள் வாழத் தொடங்கியதிலிருந்தே அதுவும் வேர்விடத்தொடங்கிவிட்டது. அக்காலத்திலேயே யூதர்கள் கொல்லப்பட்டும் விரட்டப்பட்டும் வந்த காரணத்தினாலேயே அவ்வினம் உலகெங்கும் சிதறி வாழவேண்டிய நிர்ப்பந்தமான சூழல் ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக கி.பி. 70 காலப்பகுதியில் ரோம ஆட்சி நிலவிய பலஸ்தீனத்தில் யூத கலாச்சார, பண்பாட்டு, மத விழுமியங்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டிருந்தன. இதேபோல கி.பி. 637 …

  21. தமிழக முதல்வரின் தலைமையிலான குழு புதுடில்லி சென்றனர்! பார்த்தனர்! வந்தனர்!: சென்னை செய்தியாளர் வட்டாரம் [ சனிக்கிழமை, 06 டிசெம்பர் 2008, 12:45.11 PM GMT +05:30 ] தமிழக முதல்வர் கருணாநிதியின் தலைமையில் புதுடில்லிக்கு சென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த குழுவினர் தமது நோக்கத்தை நிறைவேற்ற தவறிவிட்டதாக சென்னையில் உள்ள செய்தியாளர் தரப்புகள் தெரிவித்துள்ளன. இந்தக் குழுவினால் இலங்கை தொடர்பான இந்திய நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை என இந்த தரப்புகள் குறிப்பிட்டுள்ளன. மன்மோகன்சிங், கருணாநிதியின் தலைமையிலான குழுவினருக்கு எவ்வித உறுதிப்பாடான உறுதிமொழியையும் வழங்கவில்லை என்றும் சென்னையின் செய்தியாளர் தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. …

  22. வீரகேசரி நாளேடு 12/5/2008 8:35:21 PM - பயங்கரவாதத்தை அழிப்பதற்காக அரசாங்கம் பாரிய நடவடிக்கையை நிதானமான முறையில் முன்னெடுக்கின்றது. அரசாங்கம் நினைத்தால் பொருளாதார தடையை ஏற்படுத்தலாம். ஆனால், மனிதாபிமானத்தை மதிக்கின்றது என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். ஐ.தே.க. கூறுவது போல எம்மிடம் தற்கொலை போராளிகள் இல்லையென்பதை தெரிவித்து கொள்கின்றேன். ஏனென்றால் நாங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டுள்ளோம் என்றார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான குழு நிலைவிவாதம் மற்றும் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவ…

    • 8 replies
    • 2.5k views
  23. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், கஜேந்திரன், ஆகியோர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும் சிறீலங்காக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தேசிய புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சிறீலங்கா உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகத் தெரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்றால் சட்ட மா அதிபரின் அனுமதியைப் பெற்றே தாக்கல் செய்ய முடியும் எனத் தெரிவித்து நிராகரித்துள்ளது. http://www.pathivu.com/ _______…

    • 0 replies
    • 715 views
  24. இலங்கை இனப்படுகொலைக்கு எதிராய் ஒப்பாரி இயக்கம் தொடர்ந்து வன்கொடுமைகளுக்கு இலக்காகிவரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இன அநீதிகளைக் கண்டித்து , தமிழ்க் கவிஞர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் கண்டனக் கவிதைப் போராட்டம். இடம் :சென்னை மெரீனா கடற்கரையில், காந்தி சிலையருகே நாள் : டிசம்பர் - 7, 2008ம்,ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் ஒன்றுகூடி, இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளை எதிர்த்து தங்கள் கவிதைகளைப் பதிவு செய்யவிருக்கின்றனர். அனைவரும் கலந்துகொண்டு உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வாருங்கள். சேர்ந்து குரல் கொடுப்போம்.இன அழிவுப்படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோருவோம் …

    • 10 replies
    • 1.9k views
  25. வன்னியில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் வெள்ளிக்கிழமை கனகராயன் குளத்தை கைப்பற்றியுள்ளது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஏ9 வீதியில் தமது முன்னரங்குகளை விஸ்தரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் புளியங்குளத்திலிருந்து கிழக்காக 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இப்பகுதியை கைப்பற்றியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை இதன் மூலம் ஓமந்தையிலிருந்து 2 கிலோ மீற்றர் பகுதியை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கனகராயன்குளம் கைப்பற்றப்பட்ட வேளை அப்பகுதியிலிருந்த ஆறு பேர் இராணுவத்திடம் சரணடைந்தனர் எனவும் படைத்தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. http://www.uthayan.com/p…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.