Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரபாகரன் பற்றி கருத்து தெரிவித்த மைத்திரி தமிழீழ விடுதலை புலிகளின் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பாக பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது தமக்கு எதுவும் அறிக்கையிடப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென தெரிவித்துள்ளார். அத்துடன் பிரபாகரனின் மரபணுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாகவும் தாம் அறிந்திருக்கவில்லை என யாழ்ப்பாணத்தில் நேற்று (2) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணுப் பரிசோதனைக்காக இராணுவத்தால் மாதிரி எடுக்கப்பட்டு, இறுதி யுத்தத்தில் மீட்கப்பட்ட உடல் அவருடையதே என உறுதி செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா இராணுவம் கூறியிருந்தது.…

  2. யாழ் – இரத்மலான விமானசேவை ஆரம்பம்! இரத்மலானையிலிருந்து – யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகியுள்ளதாக இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து ஒரு மணி நேரம் பத்து நிமிடத்தில் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் எனவும் இந்த விமான சேவை வாரத்தில் சனி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நான்கு நாட்களுக்கு காலை வேளைகளில் விமானங்கள் இயக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு வழிக்கட்டணமாக 22 ஆயிரம் ரூபாவும் இருவழிக்கட்டணமாக 41500 அறவிடப்படும் என்றும் இதில் பயணிக்கும் பயணி ஒருவர் 7 கிலோகிராம் பொதியை கொண்டு செல்ல முடியும் எனவும் அருண ராஜபக்ஷ தெரிவித்த…

  3. ஜனாதிபதி தேர்தலில் பசில் போட்டி! Digital News Team ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை முன்னிறுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் தலைவரிடம் கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எவ்வாறாயினும், அந்தத் தேர்தலில் பசில் ரபக்ஷ போட்டியிட்டால், அவர் தனது அமெரிக்கக் குடியுரிமையை விலக்கிக்கொள்ள வேண்டும் என்பதுடன், பசில் ராஜபக்ஷவும் அந்த விடயத்தை தற்போது பரிசீலித்து வருவதாகவும் அறியமுடிகிறது.இதன்படி, பசில் ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை துறந்து தேசியப்பட்டியல் எம்பியாக பாராளுமன்றத்திற்கு வந்து அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்ப…

    • 5 replies
    • 419 views
  4. இலங்கையிலும் வாக்னர் குழு? Published By: VISHNU 02 JUL, 2023 | 06:02 PM (ஹரிகரன்) கடந்த வாரத்தில், வாக்னர் குழு தலைவரான ஜெவ்ஜெனி பிரிகோசின் தான் உலக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தார். உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில், தீர்க்கமான பங்கை வகித்து வந்தது, வாக்னர் குழு. இது ஒரு தனியார் இராணுவ அமைப்பு. உலகின் பல நாடுகளில் கூலிப்படைகளாகச் செயற்படும் ஒரு இராணுவம். உக்ரேன் இராணுவத்துக்கு எதிராக போரிட்டு வந்த வாக்னர் குழு, திடீரென கடந்த வாரம் ரஷ்ய எல்லைக்குள் திரும்பி, நகரம் ஒன்றையும், ரஷ்யாவின் தென்பகுதி பாதுகாப்பு தலைமையகத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ரஷ்ய பாதுகாப்…

    • 17 replies
    • 1.5k views
  5. பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக எதுவும் தெரியாது – மைத்திரி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரபாகரனின் மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது. நான் இறுதி யுத்த காலத்தில் இரண்டு வாரங்களுக்கு பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன். எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது. எனக்கு அதை பற்றி யாரும் எதுவும் சொல்லவில…

  6. தமிழர்களின் பூர்வீகக் கிராமத்தில் முளைத்த புதிய விகாரை இன்று திறந்துவைப்பு ! வவுனியா வடக்கில் தமிழர்களின் பூர்வீகக் கிராமமான கச்சல் சமளங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய விகாரை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் பகுதி என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இந்த விகாரையின் நிர்மாணப்பணிகள் இடம்பெற்றது. 1980 ஆம் ஆண்டுவரை வாழ்ந்து போரின் காரணமாக தமிழர்கள் இடம்பெயர்ந்த நிலையில் இக் கிராமத்தில் தொல்லியல் அடையாளம் எனக் கூறப்பட்டு தமிழர்கள் தடுக்கப்பட்டு வந்தனர். அவ்வாறான பகுதியிலேயே இந்த விகாரை அமைக்கப்பட்டு நிறைவுபெற்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.c…

    • 4 replies
    • 608 views
  7. 02 JUL, 2023 | 12:21 PM சுங்கத்தினரால் கைப்பற்றப்படும் மற்றும் சட்ட விரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட (அசெம்பிள்) வாகனங்களை சுங்கத்தினரிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக, அவற்றை பறிமுதல் செய்து பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவுச் சேவைக்கு வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு ஏற்ற வகையில் பொலிஸ் சட்ட திணைக்களம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்ட பின்னர், அவை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டு, அது சட்ட விரோத வாகனம் என்று நிரூபிக்கப்பட்டால் சுங்கத்தின் பொறு…

  8. கூட்டமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் அம்பு – சரத் வீரசேகர தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கேற்பவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மீண்டும் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் முன்னிலையிலேயே பதவிப்பிரமாணம் செய்தனர் என்பதனால் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அவர்கள் கூறும் விடயங்களை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு தேசத்துரோக அமைப்பு என்றும் அது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல…

    • 2 replies
    • 470 views
  9. உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானம் : 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானம் 60 மேலதிக வாக்குகளால் நாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி சற்றுமுன்னர் இடம்பெற்ற குறித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைத்திருந்தன. நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன், வடிவேல் சுரேஷ், அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர். இதேநேரம் ஏ.எல்.எம். அதாவுல்லா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கு.திலீபன், எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர். https://athavannews.com/2023/1337155

  10. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் : சாணக்கியன் சீற்றம் பிரான்ஸில் இனப்படுகொலை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து புலம்பெயர் தமிழர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் அவரை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என இரா. சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், பொறுப்புக்கூறல் குறித்த கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்க்கும் வகையில் ஜனாதிபதி இவ்வாறு செயற்பட்ட விதத்தை கண்டிப்பதாகவும் கூறியுள்ளார். இதேநேரம் இந்த மாதம் 30 ஆம் திகதிக்குள் இனப்பிரச்சினைக…

  11. நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்ப தயாராகும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதமொன்றை இவ்வார இறுதிக்குள் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. இக்கடிதத்தினை ஏனைய தரப்புக்களான இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி உள்ளிட்ட தரப்புக்களுடனும் கூட்டிணைந்து அனுப்புவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பௌத்த மதத்தின் பெயராலும் தொல்பொருளின் பெயராலும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் ஏனைய வரலாற்றுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றமையும் …

  12. இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் என தகவல் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. முன்னதாக, புதுச்சேரியின் காரைக்கால் மற்றும் யாழ். காங்கேசன்துறை துறைமுகங்களுக்கு இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் படகு சேவைக்காக தேர்வு செய்யப்பட்ட துறைமுகம் மாற்றப்பட்டதால், இந்த பயணிகள் கப்பல் சேவை தாமதமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணிகள் கப்பல் சேவைக்காக, தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் வசதிகளை அதிகரிக்க இந்தியா மேலும் கால அவகாசத்தை கோ…

  13. 01 JUL, 2023 | 07:00 PM கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் முறையான ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றனவே தவிர, தான்தோன்றித்தனமாக எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுயநல சந்தர்ப்பவாதிகளின் கூக்குரல் தொடர்பில் மக்களும் ஊடகங்களும் விழிப்புணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் சனிக்கிழமை (01.07.2023) நடைபெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், "வடக்கு மாகாணத்திலே எமது மக்களின் வாழ்வாதாரங்கள் கருதி, ஏ…

  14. யாழ்ப்பாணத்தில் பழக்கடை வியாபாரி ஒருவரை கடத்திச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பழக்கடை அமைந்துள்ள பகுதியில் நேற்றைய தினம்(30) ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தி தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பழக்கடை வியாபாரியின் முறைப்பாட்டிற்கு அமைய, யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இந்த நிலையில், நல்லூர் – அரசடி பகுதியை சேர்ந்த 18, 20, 23 மற்றும் 24 வயதான நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் …

  15. 01 JUL, 2023 | 01:23 PM யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சனிக்கிழமை (01) போராட்டமொன்றில் ஈடுபட்டனர் . ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்க வேண்டும் என்று கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது . குறித்த போராட்டம் இன்று (01) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இடம்பெற்றது. குறித்த போராட்டத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களையும் போராட்டகாரர்கள் ஏந்தியிருந்தனர் . போராட்டகாரர்களை கண்காணிப்பதற்காக அப்பகுதியில் இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் ஈடுப்படுத்தப்பட்ட…

  16. “மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்கவேண்டும்” ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்க வேண்டும் என்று காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்தனர். யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்று சனிக்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இடம்பெற்றது. குறித்த போராட்டத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களையும் போராட்டகாரர்கள் ஏந்தியிருந்தனர். போராட்டகாரர்களை கண்காணிப்பதற்காக அப்பகுதியில் இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு…

    • 1 reply
    • 296 views
  17. மாவை சேனாதிராஜாவை சந்தித்தார் மைத்திரி : இன பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடினார். மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவினுடைய இல்லத்தில் குறித்த சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சஜின் டி வாஸ் குணவர்தன உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். குறித்த சந்திப்பின்போது தமிழ் மக்களுடைய இன பிரச்சனைக்கான தீர்வு மற்றும் நாட்டில் நிலவுகின்ற மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்கான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்ப…

    • 21 replies
    • 781 views
  18. டெங்கு தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு டெங்கு தொற்று காரணமாக நாட்டில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பட்டு பிரிவு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு இதுவரையில் 48,963 பேருக்கு டெங்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. இவர்களில் 24,402 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் ஜூன் மாதத்தில் 9,559 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அதிக ஆபத்துள்ள வலயங்களாக 61 பிரதேசங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2023/1337076

  19. இலங்கை விமான சேவையில் 6 ஆயிரம் பேர் தொழிலை இழப்பர் : அமைச்சர் நிமல் 01 JUL, 2023 | 10:12 AM (எம்.மனோசித்ரா) இலங்கை விமான சேவை மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படாவிட்டால் சுமார் 6000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும். இலங்கை விமான சேவைக்கு மாத்திரம் 1.2 பில்லியன் டொலர் கடன் காணப்படுகிறது. இந்த நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமெனில் இலங்கை விமான சேவையின் 49 சதவீத பங்குகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதன…

    • 0 replies
    • 209 views
  20. இலங்கையின் நெருக்கடிகளுக்கு பூச்செண்டுகளாக சர்வதேச உதவிகள் அழித்து விட வேண்டாம் - அனைத்து தரப்பினரிடமும் ஜனாதிபதி வேண்டுகோள் 01 JUL, 2023 | 09:38 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் பொருளாதார நெருக்களை தீர்க்கும் வகையில் சர்வதேச ஒத்துழைப்புகள் பூச்செண்டுகளாக கிடைக்கப்பெறுகின்றன. இவற்றை பயன்படுத்தி நாட்டையும் மக்களையும் முன்னேற்றுவதா அல்லது அழிவுக்கு வழிவிடுவதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசின் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டார். ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவ…

    • 0 replies
    • 184 views
  21. 01 JUL, 2023 | 10:12 AM (எம்.மனோசித்ரா) இலங்கை விமான சேவை மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படாவிட்டால் சுமார் 6000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும். இலங்கை விமான சேவைக்கு மாத்திரம் 1.2 பில்லியன் டொலர் கடன் காணப்படுகிறது. இந்த நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமெனில் இலங்கை விமான சேவையின் 49 சதவீத பங்குகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , இலங்கை விமான சேவை எமிரேட்ஸ் …

  22. Published By: RAJEEBAN 01 JUL, 2023 | 06:28 AM கொழும்பு வடக்கு போதனா வைத்தியாசாலையில் ( ராகம) அன்டிபயோட்டிக் ஊசி மருந்து ஏற்றப்பட்ட 23 வயது யுவதி உயிரிழந்துள்ளார். 27ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு வாய்மூலம் பயன்படுத்துவதற்கான மருந்து வழங்கப்பட்டதாகவும், ஆனால் அது பலளனிக்கவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அதே மருந்தினை ஊசி மூலம் மருத்துவர் செலுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த யுவதி ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஓவ்வாமையினால் பாதிக்கப்பட்ட யுவதியை தீவிரகிசிச்சை பிரிவிற்கு மாற்றியதாக ராகம வைத்தியசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். எட்டு மணித்தியாலங்க…

  23. 30 JUN, 2023 | 07:31 PM ( இராஜதுரை ஹஷான்) இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. வீட்டு மின் பாவனையில் 0 முதல் 30 அலகு வரையிலான மாதாந்த நுகர்வின் 65 சதவீத கட்டணம் ஒரு அலகு 30 ரூபாவாலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்படும். மாதாந்த நிலுவை கட்டணம் 400 ரூபாவிலிருந்து 150 ரூபாவாக குறைக்கப்படும். அத்துடன் 60 அலகுகளுக்குக் குறைவான பிரிவில், ஒரு அலகுக்கான கட்டணம் ரூபா 42 இல் இருந்து 32 ரூபாவாகவும் மாதாந்த நிலுவைக் கட்டணம் ரூபா 650 இல் இருந்து 300 ரூபாவாகவும் குறைக்கப்படும். 91 மற்றும் 120 அலகு பிரிவுகளுக்கு ஒரு அலகு 4…

  24. 30 JUN, 2023 | 04:33 PM முல்லைத்தீவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கட்டாரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவிலிருந்து கட்டாருக்கு வேலைக்காக சென்ற இருஇளைஞர்களே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கட்டாரில் இளைஞர்கள் தங்கியிருந்த பகுதியிலிருந்து அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/158926

  25. ருவென்வெலிசாயவில் இருந்து வவுனியாவுக்கு தேரர்கள் பாதயாத்திரை ருவென்வெலிசாய விகாரையில் இருந்து வவுனியாவில் உள்ள விகாரை நோக்கி பௌத்த தேரர்கள் பாதயாத்திரை ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அனுராதபுரத்தில் உள்ள வராலற்று சிறப்பு மிக்க ருவென்வெலிசாய விகாரையில் கடந்த 28 ஆம் திகதி கல்காமு சாந்தபோதி பௌத்த பிக்கு தலைமையில் ஆரம்பமான குறித்த பாதயாத்திரையானது இன்று (30) காலை வவுனியா கண்டி வீதியில் உள்ள விகாரையை வந்தடைந்தது. அங்கிருந்து வவுனியாவில் தமிழர் பகுதியைக் கையகப்படுத்தி குடியேற்றம் செய்யப்பட்ட காலபோகஸ்வேவ பகுதியில் உள்ள சபுமல்கஸ்கட விகாரையை சென்றடையவுள்ளது. குறித்த பாத யாத்திரையில் 50 இற்கு மேற்பட்ட பௌத்த தேரர்கள், மறைந்த பௌத்த தேரர்களின்…

    • 3 replies
    • 512 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.