Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழக மாணவர்களுக்கு கனடிய தமிழ் இளையோர் அமைப்பு நன்றி [வியாழக்கிழமை, 16 ஒக்ரோபர் 2008, 10:00 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] ஈழத் தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் நேற்று புதன்கிழமை வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்திய அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்துக்கு கனடா தமிழ் இளையோர் அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கனடா தமிழ் இளையோர் அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈழத் தமிழர்களுக்காக கிளர்ந்தெழுந்துள்ள தமிழ்நாட்டு மாணவர் சமுதாயத்திற்கு தமிழ் இளையோர் அமைப்பு கனடா தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது. சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழினம் ஒன்றுபடும் இந்த வேளையில் அக்கொடுங்கோல் அரசிற்கு வழங்கும் உதவிகளை நிறுத்…

    • 0 replies
    • 675 views
  2. ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிய முடியாது – ஜனாதிபதி: தமிழகத்தின் கோரிக்கை ஏற்க முடியாதது – அரசாங்கம்: ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் சகல நிபந்தனைகளுக்கும் கட்டுப்படத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜீ.எஸ்.பி. சலுகைத் திட்டத்தை வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைகளுக்கும் அனுமதியளிக்க வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸீற்கு உத்தரவ…

  3. தமிழக கட்சிகளின் நடவடிக்கை எமக்கு மகிழ்வைத் தருகின்றது: டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் [வியாழக்கிழமை, 16 ஒக்ரோபர் 2008, 09:31 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] தமிழ்நாட்டில் உள்ள எமது தொப்புள்கொடி உறவுகளும் அனைத்துக்கட்சி தலைவர்களும் நிதான சிந்தனையுடன் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது ஈழத்தமிழர்களாகிய எங்களை இந்த வேதனையான சூழலிலும் மிகவும் மகிழ்ச்சியடைய வைக்கின்றது என்று டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கைத்தீவு முழுவதும் குறிப்பாக ஈழத்தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்கள இராணுவம் மிகவும் கொடூரமான முறையில் அப்பாவி …

    • 0 replies
    • 552 views
  4. தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் கூடி எடுத்திருக்கின்ற தீர்மானங்கள் ஈழத்தமிழர்களின் போரட்டத்தில் முக்கியமானதொரு திருப்புமுனையாகும் என்று த.தே.கூட்டமைப்பின் எம்.பி பாக்கியசெல்வம் அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் நாட்டு அனைத்து அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து எடுத்த தீhமானம் தொடர்பாகவும், அனைத்து இ;ந்திய மாணவர் பெருமன்றத்தினால் ஈழத்தமிழனத்திற்கு ஆதரவாக நடத்தபட்ட பகிஷ்கரிப்பு தொடர்பாகவும் தருத்து தெரிவித்திருக்கும் எம்.பி அரியநேத்திரன் மேலும் தெரிவித்திருப்வை வருமாறு : தமிழ் நாட்டில் வாழும் ஏழு கோடி தமிழர்களின் உணர்வுகளால் பின்னிப் பிணைக்கப்டட அனைத்து அரசில கட்சித் தலவர்களும் தமிழ் நாட்டின் முதலமைச்சர் அவர்களின் தலைமையில் ஒற்றுமையாய் எடுத்திருக்கும் ஆறு தீர்…

  5. உபகண்டத்தையே அதிரவைக்கும் தமிழக தீர்மானம்: அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம் நன்றி [வியாழக்கிழமை, 16 ஒக்ரோபர் 2008, 05:51 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிகள் உபகண்டத்தையே அதிரவைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன என்று அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. அமெரிக்க இலங்கை தமிழ் சங்கத்தின் அறிக்கை: எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழக மக்களே, அரசியற் தலைவர்களே, மாண்பிமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களே! முதற்கண், தமிழீழத் தமிழர்களின் சார்பில், அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கத்தினராகிய நாங்கள், எம் இதயங்களின் ஆழத்திலிருந்து உங்களுக்கு எம் நன்றியையும், மர…

    • 0 replies
    • 591 views
  6. சென்னை: இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி திமுக ராஜ்யசபா எம்பி பதவியை கனிமொழி ராஜினாமா செய்துள்ளார். சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் இது தொடர்பாக நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இரு வார காலத்துக்குள் இலங்கையில் தமிழர்கள் மீதான சி்ங்கள ராணுவத்தி்ன் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவிகளை உடனே நிறுத்த வேண்டும், இதை இரு வாரத்துக்குள் செய்யாவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது ராஜ்யபசா எம்பிக்களுக்கும் பொறுந்தும் முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார். இந் நிலையில் இன்று தனது ராஜ்யசபா எம்பி பத…

    • 18 replies
    • 2.5k views
  7. ரிஎம்விபி ஒட்டுக்கும்பலின் உறுப்பினர்கள் 200 பேருக்குக் கொரியாவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரியாவில் வேலைக்குச் செல்வதற்கு முன்னர், ரிஎம்விபி ஒட்டுக்கும்பலின் 200 பேருக்கும் கொரிய மொழியைப் பயிற்றுவிக்கும் நிலையமொன்றை கிழக்கு மாகாணசபை கடந்த வாரம் மட்டக்களப்பில் ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் 500 பேருக்கு கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவிருப்ப

    • 3 replies
    • 1.3k views
  8. தமது நலன்கள் விடயத்தில் தமிழக கட்சிகள் எடுத்துள்ள முடிவுக்கு இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த முன்னெடுப்புகளை தமது அமைப்பு வரவேற்கிறது என்றும் இது தொடர்பில் இந்திய அரசு செவிமடுக்கும் என தாங்கள் நம்புவதாகவும் அதன் நாடாளுமன்ற உறுப்பின்ர துரை ரட்ணசிங்கம் கருத்து வெளியிட்டுள்ளார். இந்திய அரசு ஒரு முடிவை எடுத்து இலங்கை அரசுக்கு ஒரு அழுத்தம் கொடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, இருதரப்பினரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்து தங்களுக்கு ஒரு நியாயமான தீர்வை தரவேண்டும் என்பதே தமது கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற நம…

  9. ஈழத் தமிழர்களைப் பாதுகாக்காத மத்திய அரசிலிருந்து தி.மு.க. அமைச்சர்கள் உடனே பதவி விலக வேண்டும் என்று தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  10. கடந்த 7 நாட்களில் மட்டும் வன்னியில் 120 பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டு கிளிநோச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இடம்பேயர்ந்திருக்கும் மக்கள் பேரவலங்களை சந்தித்து வரும் இவ்வேளை, பருவப் பேயர்ச்சி காரணமாக கனமழை பெய்து வருவதால், பாம்புப் புத்துகளில் நீர்புகுவதால் வன்னி பெருநிலபரப்பில் பல இடங்களில் பாம்பு உலாவுவதாக அதிர்வு.காம் இற்கு எமது வன்னி நிருபர் தெரிவித்தார். அத்துடன் கிளிநோச்சி வைத்திய சாலையில் இடப்பற்றாக்குறை காரணமாக, பல நோயாளிகள் படுக்கை வசதிகள் கூட இல்லாமல் அல்லாடுவதாகவும் அவர் மேலும் தெருவித்தார். வன்னியில் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு மலேரியா உள்ளிட்ட நுளம்பினால் பரவும் நோய்களும், தண்ணீரினால் ஏற்படும் ந…

  11. விடுதலைப் போரும் வன்னி மக்களும் - தாயகத்திலிருந்து சிவபரமன் - ஒவ்வொரு விடுதலைப் போராட்டமும் அந்த போராட்டம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் ஆதரவிலும் பங்குபற்றலிலுமே தங்கியிருக்கும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் படிமுறை சார்ந்த வளர்ச்சிப் போக்கின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழீழ மக்களின் ஆதரவும் பங்களிப்பும் இருந்தன. மக்களின் பங்களிப்பு இல்லாவிட்டால் நமது போராட்டம் இவ்வாறானதொரு வளர்ச்சியை அடைந்திருக்க முடியாது. ஏடறிந்த வரலாற்றின் விடுதலைப் போர்கள் எவையும் மக்களின் பங்களிப்பு இல்லாமல் வெற்றி பெற்றதும் இல்லை. இந்த வரலாறு விடுதலைப் போராட்டங்களுக்கு வேராக இருக்க, ஆதிக்க சக்திகளுக்கோ அச்சமூட்டும் ஒன்றாகவே இருந்து வருகிறது. இதன் கார…

  12. சிறிலங்கா படையினர் வலிந்த தாக்குதல்களால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களில் ஒரு வார காலத்தில் 120 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 நாளேயான பச்சிளம் குழந்தை பலியான சோகமும் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 613 views
  13. தமிழகத்தில், தமிழீழ மக்களை சிங்கள இனவெறி அரசு படுகொலை செய்து தமிழினத்தை வேரறுக்க போர்தொடுப்பதை கண்டித்து பொங்கி எழுந்த மாணவர்கள்..... மாணவர் போராட்டபடங்கள் இணைப்பு ! http://img340.imageshack.us/my.php?image=s...81016012rr8.jpg http://img381.imageshack.us/my.php?image=s...81016011lr7.jpg http://img371.imageshack.us/my.php?image=s...81016010sq8.jpg http://img98.imageshack.us/my.php?image=st...81016001ln5.jpg http://img133.imageshack.us/my.php?image=s...81016002og8.jpg http://img373.imageshack.us /my.php?image=s...81016003uz7.jpg://http://img373.imageshack.us /my.php...81016003uz7.jpg://http://img373.imageshack.us /my.php...810…

  14. சிறீலங்காவுடனான இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி வலியுறுத்த வேண்டுமென, உநிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியும், இலங்கை தமிழர் பிரச்சினையும் என்ற தலைப்பில் சென்னை தியாகராய நகரில் பொதுக் கூட்டம் நடைபெற்றபோது இதில் பேசிய இராமதாஸ் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க ராஜீவ் காந்தி முயற்சித்த போதிலும், அவருக்கு சரியான ஆலோசனை கூறப்படவில்லை என்வும் அவர் தனதுரையில் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் ஏனைய மாநிலத்தினர் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் வெகுண்டுழுந்து விடுவார்கள் எனவும், ஆனால் ஒரு இனமே இலங்கையில் பாதிக்…

  15. பா.ம.க நேற்று சென்னையில் நடாத்திய ஈழத்தமிழர் பிரச்சனை குறித்த விளக்கப் பொதுக் கூட்டத்தில், அதன் தலைவர் மருத்துவர் ராமதாஸ் ஆற்றிய விளக்கவுரையின் ஒரு பகுதி.. http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267

    • 0 replies
    • 1.1k views
  16. தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் பெரும் பான்மையான மக்கள் தீவிரமாக ஆதரிக்கிறார்கள் என்ற உண்மையை - ´இந்தியன் எக்ஸ்பிரஸ்´ நாளேடு தமிழகம் முழுதும் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கும், ஈழத் தமிழர் போராட்டத்துக்கும் தமிழ்நாட்டில் ஆதரவு இல்லை என்று பார்ப்பன ஊடகங்கள் செய்து வரும் பிரச்சாரம் பொய் என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. ´இந்தியன் எக்ஸ்பிரஸ்´ நாளேடு விடுதலைப் புலிகளையோ, ஈழத் தமிழர் போராட்டத்தையோ ஆதரிக்கும் ஏடு அல்ல. ஆனாலும், அந்த ஏடே நடத்திய கருத்துக் கணிப்பு, இந்த உண்மைகளை தெளிவுபடுத்தியுள்ளது. ´தி இந்தியன் எக்ஸ்பிரஸ்´ நாளேடு - ´சிஃபோர்´ எனும் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்ப…

  17. சேலம்: ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து சேலம் மத்திய சிறையில் 812 கைதிகள் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். சிறைக்கு வெளியே நக்ஸலைட் அமைப்பினர் விடுத்த கோரிக்கையின்படி இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. தர்மபுரியைச் சேர்ந்த நக்ஸல் அமைப்பினர் சேலத்தில் நேற்று முன் தினம் போஸ்டர் ஒட்டியிருந்தனர். அதில் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. போஸ்டரை அச்சடித்த அச்சகத்தின் பெயர் அதில் குறிப்பிடப்படவில்லை. போஸ்டரில் மக்கள் ஜனநாயக இளைஞர் அணி, மக்கள் ஜனநாயக மாணவர் சங்கம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், ஈழத் தமிழர்கள் மீதான இனவெறி தாக்குதலை தடுத்த நிறுத்த வேண்டும், இந்திய அரசு அளித்து வரும் ராணுவ பயிற்சி, ரேடார் ப…

  18. புலிகளின் மாயவலைக்குள் எமது இந்தியர்கள் விழுந்துவிடக்கூடாது - இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் தமிழீழ விடுதலைப்புலிகளும், அவர்களுக்கு ஆதரவான சில சக்திகளும், இந்தியாவை மையப்படுத்தி தற்போது நடத்திவருகின்ற பொய்ப்பிரச்சாரங்களில் எமது இந்திய நண்பர்கள் தவறாக வழிநடத்தப்படத் தொடங்கியுள்ளார்கள். இது ஆரோக்கியமான விடயம் அல்ல. விடுதலைப்புலிகளின் மாயவலைக்குள் எமது நண்பர்களான இந்தியா விழுந்துவிடக்கூடாது என இந்தியாவுக்கான சிறி லங்காவின் தூதுவர் சி.ஆர். ஜெயசிங்க தெரிவித்துள்ளார். சிறி லங்கா பிரச்சினை பற்றி பேசுவதற்காக இந்தியா, சிறி லங்கா வெளிவிவகார அமைச்சரை உடனடியாக வருமாறு அழைத்தது என்ற செய்தியில் எந்தவிதமான உண்மைகளும் இல்லை எனவும், அந்த அளவுக்கு தற்போது எந்தவித தேவைகளும் இந்த…

  19. தமிழக அனைத்து கட்சிக்கூட்டத் தீர்மானம் பற்றி இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கருத்து [புதன்கிழமை, 15 ஒக்ரோபர் 2008, 07:00 பி.ப ஈழம்] [க.நித்தியா] இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவங்கள் வேதனையளிக்கக்கூடியதாக இருக்கின்றது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். தமிழக அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து புதுடில்லியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் மன்மோகன்சிங்கிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மன்மோகன்சிங் அளித்துள்ள பதில்: இலங்கை சம்பவங்கள் வேதனையளிக்கிறது. டில்லியில் உள்ள சிறிலங்கா தூதர அதிகாரியை அழைத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் நிலவரங்களைக் கேட்டறிந்தார். இலங்கைத் த…

  20. ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்காவின் கொடூரத் தாக்குதல்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் இன்று புதன்கிழமை போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

  21. இன்று காலை கும்பகோணம் அரசு கல்லூரி முன்பாக அகில இந்திய மாணவர் பெருமன்றம்(AISF) சார்பாக அதன் தமிழக தலைவர் தோழர் மு.அ.பாரதி தலைமையில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஒன்று திரண்டு சிங்கள அரசைக்கண்டித்து முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் பொழுது சிங்கள பயங்கரவாதி இராசபக்சேயின் கொடும்பாவியினை மாணவர்கள் எரித்தார்கள். கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர். http://www.tamilseythi.com/tamilnaadu/kump...2008-10-15.html -அசுரன்

  22. இரு வார கெடுவுக்குள் நடவடிக்கை- இல்லையேல் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர்: இந்திய அரசுக்கு தமிழக அனைத்து கட்சிக்கூட்டம் எச்சரிக்கை [செவ்வாய்க்கிழமை, 14 ஒக்ரோபர் 2008, 07:48 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க இரு வார காலத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்றத்தின் 40 உறுப்பினர்களும் பதவி விலகுவர் என்று தமிழ்நாடு அரசாங்கம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பாடு செய்திருந்த தமிழக அனைத்து கட்சிக்கூட்டம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தீர்மானங்கள் விவரம்: தீர்மானம்: 1 இலங்கையில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிற இனப் படுகொலைக் கொடுமைக்கு உள்ளாகி ஆயிரக்…

  23. விடுதலைப் புலிகளுடனான நேற்றைய மோதல்களில் தமது தரப்பில் படையினர் 7 பேர் கொல்லப்பட்டு, மேலும் 27 படையினர் காயமடைந்திருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. நேற்றைய மோதல் மற்றும் படையினருக்கு இழப்பு விபரங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து இன்று மாலைவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. http://www.tamilskynews.com/

  24. மாணவர்கள் போராட்டம்-ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு புதன்கிழமை, அக்டோபர் 15, 2008 RSS இலவச நியூஸ் லெட்டர் பெற thatsTamil Bookmarks சென்னை: ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்த நிறுத்தக் கோரியும், அந்நாட்டு ராணுவத்துக்கு வழங்கப்படும் உதவிகளை நிறுத்த வலியுறுத்தியும் சென்னையில் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியையும் எரித்தனர். இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தப் போவதாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் போலீஸ் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர…

  25. மஹசீன் சிறைச்சாலையில் இன்று இலங்கை நேரம் 12 அணியளவில் உட்புகுந்த 20 இராணுவத்தினர் தமிழ்க் கைதிகளை இம்சைப்படுத்தியதாக குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு உள்ளகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனிடம் தமிழ்ச் செய்திகள் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் இடம்பெற்றதனை உறுதிப்படுத்தினார். இன்று நன்பகல் அங்கு சென்ற இராணுவத்தினர் தமிழ்க் கைதிகள் 60 பேரின் சிறைக் கூடங்கள் மற்றும் அவர்களின் உடமைகளைச் சோதனையிட்டுள்ளனர். வழமைக்கு மாறான இந்த நடவடிக்கை குறித்து தமிழ்க் கைதிகள் எதிர்ப்பு வெளியிட்ட போது அவர்கள் தாக்கப்பட்டதுடன் அவர்களின் பொருட்களும் தூக்கி வீசப்பட்டு பல்வேறு அசௌகரியங்களைப் படையினர் ஏற்படுத்தியதாக தனக்கு முறையிட்டுள்ளதா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.