Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராணுவத்திலிருந்த தப்பியோடுவோரின் எணணிக்கை அதிகரித்து வருவதால் இலங்கை இராணுவம் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது என் ஐ.எஸ்.எம். செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் பின்வருமாறு : 'களமுனை அதிhந்தது, எல்லாப்புறமும் குண்டுச்சிதறல்கள், சடலங்கள் எங்கும் பரவிக்கிடக்கின்றன. அது ஒரு பயங்கரமான நிகழ்வு' என்று ஐந்து மாதங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளுடன் வன்னிப் பகுதியில் நிகழந்த மொதல்கள் குறித்து தனது நினைவை எம்முடன் பகிர்ந்து கொண்டார் இலங்கை இராணுவத்தின் 12 வது கஜபா றெஜிமென்ட் படையணியைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர். அவரின் தலையின் பின்புறம் தாக்கிய ஒரு துப்பாக்கிச் சன்னம் மேல் தோளில் தங்கிவிட்டது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நில…

  2. இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து திரையுலகினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இயக்குனர்கள் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கடந்த 19-ந்தேதி ராமேஸ்வரத்தில் பேரணி பொதுக்கூட்டம் நடத்தி எதிர்ப்பை வெளியிட்டனர். அதில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டதையடுத்து நடிகர் சங்கத்தில் நாளை மறுநாள் (1-ந்தேதி) நடத்த உள்ள உண்ணாவிரதம் பரபரப்படைந்துள்ளது. ராமேஸ்வரத்துக்கு நடிகர் - நடிகைகள் செல்லசிரமங்கள் இருப்பதாக ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது. அனைவரும் பங்கேற்கும் வகையில் சென்னையில் போராட்டம் நடத்தலாம் என்று நடிகர் சங்கம் வலியுறுத்தியது. ஆனால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அதை ஏற்காமல் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்தி காட்டி உள்ளனர். …

  3. ஆனையிறவைக் கைப்பற்றிய பின்தான் ஏ-9 வீதி திறக்கப்படும் - சிறீலங்கா திகதி: 30.10.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] ஆனையிறவைப் படையினர் கைப்பற்றிய பிறகு தான் ஏ9 நெடுஞ்சாலை திறக்கப்படும் என சிறீலங்காவின் யாழ்நகரத் தளபதி பிரிகேடியர் மார்க் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள வர்த்தகர்களை நேற்று மாலை தமது படைமுகாமிற்கு அழைத்து அறிவுறுத்தல்களை வழங்கிய போதே இவர் இக்கருத்தை வெளியிட்டார். ஆனையிறவை மீட்கும்வரை புலிகளுடன் அரசு பேச்சில் ஈடுபடாது. புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு விரைவில் சரணடைந்து விடுவார்கள். அதன் பின்னர் உங்களது வர்த்தக நடவடிக்கையில் நாங்கள் தலையிடமாட்டோம். பாதுகாப்புக் காரணங்களுக்காகவே நாங்கள் உங்களை அழைத்து சந்திப்புக்களை நடத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. எமது நட…

    • 6 replies
    • 2.5k views
  4. சர்வதேச நாணயங்களுக்கு எதிராக ரூபாவை மிதக்க விடுவதற்கு தீர்மானம் - இலங்கை மந்திய வங்கி அறிவிப்பு வீரகேசரி நாளேடு 10/30/2008 10:38:39 PM - இலங்கை மத்திய வங்கி ரூபாயின் நாணயப் பெறுமதியினை சர்வதேச நாணயங்களுக்கு எதிராக மிதக்க விடப்பபோவதாக இன்று அறிவித்துள்ளது. அண்மைக் காலமாக இலங்கையின் நாணயமான ரூபாவின் பெறுமதி சர்வதேச நாணய மாற்று வீதங்களுக்கு எதிராக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து வந்த இலங்கை மத்திய வங்கி தற்போது ரூபாவின் நாணயமாற்றுப் பெறுமதியை சர்வதேச நாணயங்களுக்கு எதிராக மிதக்க விடப் போவதாக இன்று அறிவித்துள்ளது. இந்த கொள்கை மாற்றமானது அண்மையில் உலக சந்தையில் ஏற்பட்ட நிதி நெருக்கடியில் இருந்து இலங்கையின் ஏற்றுமதியாளர்களை பாதுகாக்கும் நோக்குடனேயே மேற்…

    • 1 reply
    • 1.6k views
  5. களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களால் 275 மெஹாவட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக இலங்கை மின்சாரசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சேதங்களால் மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்படும் மாலை 6 மணிமுதல் 9 மணிவரையான நேரப்பகுதியில் மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாமெனவும், விடுதலைப் புலிகளின் தாக்குதலால் நாளாந்தம் 24 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் மின்சாரசபை வட்டாரங்களை மேற்கோள்காட்டி இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 100 மெஹாவாட்ஸ் மின்சாரத்தை வழங்கும் பெற்றோலிய வாயு மற்றும் நீராவி இயந்திரங்களுள்ள பகுதியை மீளமைப்பதற்குக் குறைந்தது மூன்று மாதங்களாவது தேவைப்படும் என…

    • 6 replies
    • 1.7k views
  6. ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க இராணுவம் நடத்திவரும் படுகொலையை தடுத்து நிறுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், மக்களும் ஒன்றிணைந்து மேற்கொண்ட முயற்சிகளை மிக அழகாக தட்டிக் கழித்துத் தனது அரசைக் காப்பாற்றிக்கொண்டு, அல்லலுறும் ஈழத் தமிழர்களை தத்தளிக்க விட்டுவிட்டது மன்மோகன் அரசு. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றுதான் தனது கட்சியின் உயர்மட்டக்குழு தீர்மானம் நிறைவேற்றி, அதனை பிரதமருக்கு அனுப்பியதாக இம்மாதம் 6ஆம் தேதி மயிலை மாங்கொல்லையில் நடந்த கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி கூறினார். அதன்பிறகு, இம்மாதம் 14ஆம் தேதி தமிழக அரசின் தலைமை செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், “…

    • 1 reply
    • 1.3k views
  7. தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீது புலிகளின் வானூர்தி குண்டுத்தாக்குதல் [செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 11:29 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி ஒன்று குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீது இன்று செவ்வாய்க்கிழமை இரவு 10:50 நிமிடத்துக்கு விடுதலைப் புலிகளின் வானூர்தி ஒன்று இக்குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் இதில் தமக்கு பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று படைத்தரப்பு மேலும் தெரிவித்திருக்கின்றது. நன்றி: புதினம்....

    • 76 replies
    • 16.3k views
  8. சிறீலங்கா கடற்படையினருக்கு என ஒரு தனியான வான் பிரிவு அவசியம் - முன்னாள் கடற்படைத் தளபதி வியாழன், 30 அக்டோபர் 2008, 15:46 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்] சிறீலங்கா கடற்படையினருக்கு என ஒரு தனியான வான்படையிரை உருவாக்க வேண்டும் என முன்னாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிசில் திசேர தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல் தொடர்பில் கொழும்பிலிருந்து வெளியாகும் ஊடகம் ஒன்று கருத்துக் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் அனைத்து வழிகளுக்குமான முழுமையான பாதுகாப்பு கொண்டுவரப்படுவது அவசியம். சிறீலங்கா கடற்படையினர் வான்படையினரிடம் தங்கியிருக்கக் கூடாது. கடற்படையினருக்கு என ஒரு தனியான வான் பிரிவு அமைக்கப்பட வேண்டும். அதற்காக நான்…

  9. கொழும்பு : இலங்கையில் கொழும்பு மற்றும் மன்னார் பகுதிகளில் அந்நாட்டு ராணுவ முகாம் மற்றும் மின் நிலையத்தின் மீது விடுதலைப்புலிகள் நேற்று இரவு நடத்திய விமானப்படை தாக்குதலால் அந்நாட்டு அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. மன்னாரில் தள்ளாடி ராணுவ முகாம் மீது நேற்றிரவு 11 மணியளவில் புலிகளின் விமானங்கள் சக்திவாய்ந்த குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தின. பின்னர், கொழும்பு நகரில் கடற்படைத் தளத்திற்கு அருகிலுள்ள மின் நிலையத்தின் மீது புலிகளின் விமானங்கள் சரமாரியாகக் குண்டுகளை வீசின. இதனையடுத்து, அந்த மின் நிலையம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் கொழும்பு நகரம் முழுவதும் நேற்றிரவு இருளில் மூழ்கியது. இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளத…

  10. வன்னிவிளாங்குளத்தில் சிறிலங்கா படையினரின் இருமுனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 5 படையினர் பலி [வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2008, 11:15 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிவிளாங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட இருமுனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் ஐந்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர். வன்னிவிளாங்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 9:30 நிமிடத்துக்கு எறிகணை மற்றும் கனரக போர்க்கலங்களின் சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் இருமுனைகளில் விடுதலைப் புலிகளின் முன்னரண்களை கைப்பற்றும் முயற்சியினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுகளை முறியடிக்கும் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் இன்று முற்பகல் 11:00 மணிவரை நடத்தி படைய…

    • 0 replies
    • 893 views
  11. வீரகேசரி நாளேடு - இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை மறுதினம் சென்னையில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க ரஜனியும் கமலும் ஒரு நிபந்தனையுடன் சம்மதம் தெரிவித்துள்ளனர். உண்ணாவிரதத்தில் மைக் வைத்து பேசக்கூடாது என்பதே அந்த நிபந்தனை. கிட்டத்தட்ட இதே நிபந்தனையை தமிழக அரசும் விதித்துள்ளது. பெரிய நடிகர்கள் என்ன பேசினாலும் அது அரசியலாக்கப்படுவதல், இந்த முறை இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை மறுதினம் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மைக் வைத்துப் பேசுவதையே அடியோடு தவிர்த்து விட்டால் என்ன? என நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கு யோசனை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன் ரஜினிக்கும் இந்த யோசனை சரியாகப்படவே, பேசச் சொல்லி வற்புறுத்தாதீர்கள் என்ற நிபந்தனையோடு உண்ணாவிர…

  12. புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: மாணவன் படுகொலை முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வள்ளிபுனத்தில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் மாணவன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். புதுக்குடியிருப்பு பகுதி வான்பரப்புக்குள் இன்று வியாழக்கிழமை காலை 9:30 நிமிடத்துக்கு நுழைந்த சிறிலங்கா வான்படையின் இரண்டு மிக்-27 ரக வானூர்திகள் வள்ளிபுனம் மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. இதில் மாணவன் ஒருவர் உடல் சிதறிய நிலையில் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் வள்ளிபுனம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வராசா சதீஸ்கரன் (வயது 15) என அடையாளம் காணப்பட்டுள்ளார். …

  13. பொதுமக்கள் இலக்குகள் மீது சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக நடத்திவரும் கொலை வெறித் தாக்குதல்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சு வானூர்திகள் திடீரென வள்ளிபுனம் வான்பரப்புக்குள் இன்று வியாழக்கிழமை காலை 9:30 நிமிடமளவில் பிரவேசித்து கரித்தாஸ்-கியூடெக் நிறுவனங்களினால் நிர்மாணிக்கப்பட்ட மக்கள் குடியிருப்புக்கள் மீது கண்மூடித்தனமான அகோரக் குண்டுவீச்சுக்களை நடத்தின. இதன்போது ஒரு மாணவன் கொல்லப்பட்டும் எட்டுப் பேர் காயமடைந்தும் உள்ளனர். இக்குண்டுவீச்சின் போது அப்பிரதேசத்தில் அமைந…

  14. சொந்த நாட்டிலேயே அகதிகளாகியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மருத்துவ உதவி வழங்கிடத்தயார். தமிழக மருத்துவக்குழு போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குச் செல்ல தமிழக முதல்வர் அனுமதி பெற்றுத்தரவேண்டும்.மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உதவிட வேண்டும். இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்.நி.ஸி.ரவீந்திரநாத் விடுத்துள்ள இதழ்ச் செய்தி. இலங்கைத் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதல்கள் கடந்த சில மாதங்களாக மிகவும் அதிகரித்துள்ளது.குறிப்பாக வான்வழித் தாக்குதல்களும் அதிகரித்துள்ளது.இதனால் அப்பாவி தமிழர்கள் ஏராளமாகக் கொல்லப்ப டுகின் றனர். கிளிநொச்சி மருத்துவமனையும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மருத்துவ மனைகளில் …

  15. இலங்கை தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், அவர்களை காக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் சேலம் மத்திய மாவட்ட பசுமை தாயகம் சார்பில் ஐ.நா. தலைமைக்கும், பிரதமருக்கும் இரத்த கையெழுத்து வாங்கி அனுப்பி வைக்கும் போராட்டம் சேலத்தில் இன்று(வியாழன்) காலை நடந்தது. சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை அமைப்பாளர் மா.குமரன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் ஆனந்தராஜன் வரவேற்றார். இரத்த கையெழுத்து நிகழ்ச்சியை முன்னாள் எம்எல்ஏ மு.கார்த்தி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் இரத்த கையெழுத்து போட்டார். அதன் பிறகு நிர்வாகிகள் அனைவரும் கைகளில் இருந்து இரத்தம் எடுத்து க…

  16. சென்னை: இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதி குவிந்து கொண்டிருக்கிறது. இன்று பிற்பகல் வரை இந்த நிதிக்கு ரூ. 88.86 லட்சம் நிதி சேர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண உதவியாக நிதியுதவியை அளிக்குமாறு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார். தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ. 10 லட்சம் வழங்கி நேற்று இதை அவர் தொடங்கி வைத்தார். இதையடுத்து மாநில அமைச்சர்கள், திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் நிதியுதவி அளித்தனர். நேற்று ஒரே நாளில் ரூ. 26 லட்சம் அளவுக்கு நிதி சேர்ந்தது. இன்றும் காலை முதல் நிதி குவிந்து கொண்டிருக்கிறது. தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி ரூ. 10 லட்சம் நிதியுதவி …

    • 9 replies
    • 2.5k views
  17. கொழும்பு : இலங்கை பிரச்னையை முடிவிற்குக் கொண்டுவர சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த தயாராய இருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். கொழும்புவில் நேற்று பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இலங்கை தமிழர் பிரச்னைக்கு ராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண முடியாது என்பதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்றுவரும் சண்டை விடுதலைப்புலிகளுக்கு மட்டுமே எதிரானது என்றும், இலங்கை தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்றும் ராஜபக்ஷே கூறினார். ஆயுதங்களைக் களைவதற்கு புலிகள் சம்மதம் தெரிவித்தால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்களை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் த…

  18. இலங்கை: தமிழகத்தில் நாளை கடை அடைப்பு. சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர மத்திய அரசு தலையிடக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை கடைகள், வர்த்தக நிலையங்கள் மூடப்படுகின்றன. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நிருபர்களிடம் பேசுகையில், இலங்கை தமிழர்கள் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை தடுத்து நிறுத்த கோரி நாளை (31ம் தேதி) தமிழ் நாடு முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் சுமார் 25 லட்சம் வணிகர்கள் பங்கேற்கிறார்கள். மளிகை வியாபாரிகள், மருந்து வியாபாரிகள், காய்-கனி, வியாபாரிகள், டீக்கடை, தையல் கலைஞர்கள் உள்பட பலதரப்பட்ட வியாபாரிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு க…

  19. வியாழக்கிழமை, அக்டோபர் 30, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற சென்னை: முதல்வர் பதவியை கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுகவினர் ஆயிரக்கணக்கில் அவருக்கு தந்திகளை அனுப்பிக் கொண்டிருக்கும் நிலையில், அதிமுக எம்.எல்.ஏ எஸ்.வி. சேகர், தமிழக அரசு திரட்டி வரும் இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக முதல்வரை நேரில் சந்தித்து தனது ஒரு மாத சம்பளத்தை அளித்துள்ளார். ஜெயலலிதாவுக்கும், எஸ்.வி.சேகருக்கும் டெர்ம்ஸ் சரியில்லை என்பது அதிமுக வட்டாரத்தில் மட்டுமல்லாமல், அரசியல் வட்டாரத்திலும் நன்கு தெரிந்த ஒன்று. சமீபத்தில் நடந்த பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களுக்கு சேகர் அழைக்கப்படவில்லை. அவர் கட்சியை விட்டு நீக்கப்படுவார் எனவும் செய்திகள் கிளம்பின. அவரே …

    • 1 reply
    • 2.1k views
  20. கையடக்கத் தொலைபேசியூடாக குறுஞ்செய்தியொன்றை அனுப்பியமை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு தெகிவளையை வசிப்பிடமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். டயலொக் நிறுவனத்தில் கடந்த இருமாதங்களாகப் பணிபுரியும் கணேசமூர்த்தி பிரதீப் என்ற தமிழ் இளைஞனே வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபட்டுள்ளதாக அவரது உறுவினர்கள் முறையிட்டுள்ளதாக கொழும்பு மாநகரைசபை உறுப்பினரும் மக்கள் கண்காண்ப்புக் குழு செயற்பாட்டாளர்களில் ஒருவருமான கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார். அர்ஜுன், அஜித் ஆகிய தமிழக நடிகர்களின் திரைப்படங்களை பாhப்பதை தவிர்க்குமாறு கோரி குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பொலிஸாரினால்…

  21. கருணாநிதியை இலங்கைக்கு வருவதற்கான அழைப்பை புதுடெல்லி ஊடாக விடுக்கவுள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் ''ஹிந்து'' என்ற ஆங்கில நாளேட்டுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசின் சிறப்புப் பிரதிநிதியாக பசில் ராஜபக்ச புதுடெல்லி சென்று நடத்திய பேச்சுக்கள் தமக்கு சாதகமாக அமைந்ததுக்கு மகிந்த ராஜபக்ச மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளது. இந்தியா 800 தொண் உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதற்கு இந்தியா இணக்கியுள்ளமையை மகிந்த ராஜபக்ச பாராட்டியுள்ளார். கருணாநிதி இந்தியாவின் முதுபெரும் அரசியல்வாதி. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை முன்வைக்கும் யோசைனை வரவேற்கப்படவேண்டியது. கருணாநிதியை இலங்கைக்கு வருவதற்கு இந்தியா ஊடாக அழைப்பு…

    • 6 replies
    • 1.9k views
  22. இங்கையின் வான் பாதுகாப்பு மற்றும் விமானத் தளங்களின் பாதுகாப்புக் குறித்து சந்தேகம் தோன்றியிருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. சிறிய ரக விமானமொன்றை வைத்துக்கொண்டு இதுவரை 7 தடவைகள் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறினார். ஆனால், அரசாங்கத்திடம் கிபீர், மிக் உள்ளிட்ட நவீனரக விமானங்கள் இருக்கின்போதும் விடுதலைப் புலிகளின் இலகுரக விமானங்களை அழிக்கமுடியாதிருப்பதாகவும், ஒவ்வொரு முறை விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தும்போதும் அவற்றை அழித்துவிட்டதாக பாதுகாப்புத் தரப்பில் கூறப்படுவதில் உண்மை இல்…

    • 6 replies
    • 2.3k views
  23. இலங்கையின் வடக்கே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு செல்வதற்கு தேவையான ஒழுங்குகளை செய்து தருமாறு சென்னை சமூக சமத்துவத்திற்கான வைத்தியர்கள் சங்கம் தமிழக முதல்வர் மு.கருணாநிதியிடமும் சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர் http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=7873

  24. இலங்கை அரசின் வாய்மூல வாக்குறுதிகளை நம்பி இந்திய அரசும், தமிழ்நாடு முதல்வரும் நம்பிக்கை கொண்டிருப்பது புரியாத புதிராகவே உள்ளது" - இவ்வாறு தமிழகத்திலிருந்து வெளிவரும் தினமணி நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் குறிப்பிட்டுள்ளது. ‘ஏமாற்றாதே ஏமாறாதே’ என தலைப்பிட்டு வெளிவந்துள்ள இந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு :- இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்திலிருந்து கூறப்பட்டுவரும் விடயங்கள்தான் - மாகாணங்களுக்குக் கூடுதல் அதிகாரம் தருவோம், அப்பாவிப் பொதுமக்களை எக்காரணம் கொண்டும் தாக்க மாட்டோம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கு தடையின்றி நிவாரண உதவிகள் வழங்கப்படும், இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்பனவாகு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.