Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் மக்கள் குயிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் 12 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். 4 வீடுகள் அழிந்துள்ளன. 11 வீடுகள் சேதமாகியுள்ளன. தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்கள் சிதறி ஓடியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  2. அக்கரையான்குளத்தைப் பிடித்து விட்டோம் - இலங்கை ராணுவம் வியாழக்கிழமை, நவம்பர் 6, 2008 கொழும்பு: கிளிநொச்சியில் உள்ள முக்கிய நகரான அக்கரையான்குளத்தைப் பிடித்து விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. அக்கரையான்குளம் முழுமையும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக ராணுவம் கூறுகிறது. கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம் தீவிரமாக முயன்று வருகிறது. இதில் கிளிநொச்சியைச் சுற்றிலும் உள்ள முக்கிய பகுதிகள் பல, படிப்படியாக தங்கள் வசம் வந்து கொண்டிருப்பதாக ராணுவம் கூறி வருகிது. இந்த நிலையில், மிக மிக முக்கியமான பகுதியாக கருதப்படும் அக்கரையான்குளத்தை முழுமையாக மீட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. 3 நாள் சண்டைக்குப் பின்னர் அக்கரையான்குளம் வீழ்ந்துள்ளதாகவு…

    • 7 replies
    • 2.7k views
  3. யாலவில் புலிகள் - அதிரடிப்படையினர் மோதல்: மூவர் பலி [வியாழக்கிழமை, 06 நவம்பர் 2008, 05:02 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள யால வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர மோதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: யால வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிக்கும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை காலை 8:30 நிமிடமளவில் உக்கிர மோதல் இடம்பெற்றுள்ளது. சுமார் 30 நிமிடம் வரை இடம்பெற்ற இம் மோதலில் சிறி…

  4. சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபட்டு சிலர் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தனித்து என்னால் எதுவும் செய்ய முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் நடைபெறும் தமிழ் இனப் படுகொலைஇ நாற்பது ஆண்டுக் கால வரலாற்றுக்குரிய தொடர் நிகழ்ச்சியாகி விட்டது. அதைத் தடுத்து நிறுத்தித் தமிழர்க்கு உரிமை பெற்றுத் தர போர்க்கோலம் பூண்டவர்கள் பகைவர்கள் மீது பாய்ந்திடாமல்; சகோதர யுத்தம் நடத்துவதிலேயும் அவற்றில் மாண்டு மடியும் தமது பழைய களத் தளபதிகளுக்கு சமாதிகள் அமைத்திடும் பணியிலேயும் காட்டிய விறுவிறுப்பை இன ஒற்றுமையில் காட்டத் தேவையில்லையென்றே …

  5. நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். சென்னையில் நடந்த ஈழப் போர் குறித்த மாநாட்டில், நாட்டின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக வைகோவும், கண்ணப்பனும் கைது செய்யப்பட்டனர். வைகோ சென்னையிலும், கண்ணப்பன் பொள்ளாச்சி அருகேயும் கைதானார்கள். இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் சிறைக் காவல் முடிவடைவதையொட்டி இருவரும் இன்று சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இருவரிடமும் போலீஸ் விசாரணை முடிவடைந்து விட்டதாகவும், சிறைக் காவவலை நீடிக்கத் தேவையில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்…

    • 4 replies
    • 1.2k views
  6. வீரகேசரி இணையம் - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறும் 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாசிப்பினை பகிஷ்கரித்து சபையைவிட்டு வெளிநடப்பு செய்துள்ளனர். ஜனாதிபதி இம்முறை வரவு செலவு திட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல், போர் மற்றும் பாதுகாப்பு செலவினங்களுக்காக அரசாங்கம் பெருந்தொகைப் பணம் ஒதுக்குவதைத் தமது கட்சி எதிர்ப்பதாக தமிழரசு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் வடக்கு கிழக்கு நிலப்பரப்பில், தமிழ் பேசும் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களுக்குள், அரசாங்கம் தொடர்ந்து விமானக் குண்டு வீச்சுக்கள், பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள் மற…

  7. ஓபமாவின் வெற்றி சொல்லும் செய்தி முதலில் ஓபமாவின் வெற்றியின் முன்னால் உள்ள செய்தி அல்லது உண்மை என்னவென்றால் அவர் ஒரு கறுப்பின ஐனாதிபதியல்ல அவர் ஒரு அமெரிக்க ஐனாதிபதிஇதில் எந்த சமரசமும் அவர் செய்யமாட்டார் செய்யவும் முடியாது அடுத்தது உலகவழக்கில் இப்போதெல்லாம் தேர்தல்களில்வாக்களிக்கும்ப

  8. மலேசியாவில் இலங்கை தூதரகம் முன்னால், தமிழர் படுகொலையை கண்டித்து கண்டன மறியல்! சிங்கள பேரினவாதத்தால் இலங்கையில் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்குள்ளாக்கபடுவ

  9. மணலாறு தண்ணிமுறிப்பு பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படையப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 853 views
  10. பராக் ஒபாமா வருகிறார் பராக்! மாற்றம் ஏற்படுத்த வருகிறார் பராக்! [06 நவம்பர் 2008, வியாழக்கிழமை 7:40 மு.ப இலங்கை] கறுப்பு இன வம்சாவளியினரான பராக் ஒபாமாவை தமது நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் புதிய சரித்திரம் ஒன்றைப் படைத்திருக்கின்றார்கள் வெள்ளையர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அமெரிக்க மக்கள். ஜனநாயக அரசியல் சமுதாயத்தில் இது ஒரு புதிய மாற்றம் மட்டும் அல்ல, பராக் ஒபாமா திரும்பத் திரும்பப் பிரகடனப்படுத்திய மாதிரி புதிய உலக மாற்றத்துக்கான அமெரிக்க மக்களின் அறைகூவலாகவும் அங்கீகாரமாகவும் கூட இது அமைகின்றது. 2000 ஆம் ஆண்டில் தெரியாமலும், 2004 ஆம் ஆண்டில் தெரிந்தும் தவறிழைத்த அமெரிக்க மக்கள், அந்தக் குற்றத்துக்குப் பிராயச்சித்தம் செய்வது போல இந்தத் …

  11. புலிகளின் தாக்குதல் விமானமொன்று வவுனியாவில் சஞ்சரிப்பு : தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இலகுரக விமானமொன்று நேற்றைய தினம் வவுனியா வான் பரப்பில் சஞ்சரித்ததாக ராடார் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புப் பிரிவினரின் ராடர் கட்டமைப்பில் குறித்த விமானத்தின் சஞ்சரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 3.30 அளவில் விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து வவுனியா பிரதேசத்திற்கு குறித்த விமானம் வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் விமானம் விண்ணுக்கு ஏவப்பட்டிருப்பதனை ராடார் மூலம் அறிந்து கொண்ட சில நிமிடங்களில் மன்னார், வெலிஓயா மற்றும் அனுராதபுர பகுதிகளில் உள்ள படை முகாம்களுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. எனினும், குறித்த விமானம் சில நிமி…

    • 12 replies
    • 3.1k views
  12. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றமில்லை – ரொபர்ட் பிளேக் : www.globaltamilnews.com அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படாதென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பாக அமெரிக்காவின் கொள்கைகளிலும் மாற்றம் ஏற்படாதென அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் யுத்தத்திற்கு அரசியல் ரீதியாக தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எந்தக் கட்சி ஆட்சிக் வந்த போதிலும் கொள்கைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு எட்டப்பட…

  13. வன்னியில் இடம்பெயர்ந்திருப்போர் பருவப் பெயர்ச்சி மழையால் பெரிதும் பாதிப்பு : www.globaltamilnews.com வன்னியில் இடம்பெயர்ந்திருப்போர் பருவப் பெயர்ச்சி மழையால் பெரிதும் பாதிப்பு : வன்னியில் இடம்பெயர்ந்திருப்பவர்கள் தற்பொழுது அங்கு பெய்துவரும் பருவப்பெயர்ச்சி மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களுக்கு உடனடியாக 20,000 தற்காலிக கூடாரங்கள் தேவைப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 'வன்னியில் பெய்துவரும் பருவமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 20,000 எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இந்த எண்ணிக்கை இதனைவிடக் கூடுதலாக இருக்கலாம். உடனடியாக 20,000 தற்காலிக கூடாரங்கள் தேவைப்படுகின்றன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னமும் பிளாஸ்டிக் கூரை விரிப்பு…

  14. நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவுத் தலைவருமான மங்கள சமரவீரவுக்கு கொலை அச்சுறுத்தல் : நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவுத் தலைவருமான மங்கள சமரவீரவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மங்கள சமரவீரவை இணைப்பாளராகக் கொண்டு உருவாக்கப்பட்ட பாதுகாப்பு நிலவர கண்ணகாணிப்பை உடனடியாகக் கைவிடுமாறும் அதன் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தமாறும் அல்லாவிட்டால் அவர் கொலை செய்யப்படுவார் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் தன்னிடமுள்ளதாகவும் தான் இது குறித்து பொலிஸ் மா அதிபரிடம் முறையிட உள்ளதாகவும் மங்கள் சமரவீர தெரிவித்துள்ளார். பெரும்பாலான இலக்கங்கள் இராணுவ…

  15. இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இம்மாத இறுதியில் புதுடில்லிக்கு பயணம் செய்வார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 653 views
  16. வெளியுலக வன்முறைகளுக்கு எதிராக தாம் போரில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறும் காரணத்தை தெளிவுப்படுத்த வேண்டும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கில் வெளிநாட்டு படையினர் உள்ளனரா? அப்படி இல்லையெனில் அவர்கள் யார்?. இந்தியர்களா அல்லது சீனர்களா என கேள்வி எழுப்பியுள்ள அவர், இலக்கு வைக்கப்பட்டு, தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வேற்றுமைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள தமிழர்களை மாத்திரமே தாம் வடக்கில் காண்பதாகவும் விக்கிரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார். உலக ஒத்துழைப்புக்கான சங்கம் வார இறுதியில் கொழும்பில் நடத்திய யுத்தத்திற்கு எதிரான பேரணியின் இறுதியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்…

  17. கடைசித்தமிழன் உள்ளவரை ஆயுதத்தை கீழே போடும் பேச்சுக்கே இடமில்லை. நிரந்தரத் தீர்வு வரும் வரை போர் ஓயாது என்று த.தே.கூட்டமைப்பு பா.உ. க்கள் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் கூறியுள்ளனர். திண்டுக்கல்லில் மாவாட்ட சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர். சிவாஜிலிங்கம் : தமிழ் நாட்டில் உள்ள இன உணர்வு கண்டு இலங்கை அரசு பயப்பட ஆரம்பித்து விட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது பாகிஸ்தானை பிரித்தது போல் இலங்கையையும் பிரித்து கேட்டிருந்தால் தமிழர்களுக்கு இந் நிலை அங்கு ஏற்பபட்டிருக்காது. இதுவரை இலங்கை அரசு தமிழர்கள் மீது 6,000 தொன் வெடிகுண்டுகளை வீசிய…

  18. அமெரிக்காவில் கறுப்பினத்தவரான பாரக் ஓபாமா, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது போல என்றாவது ஒருநாள் இலங்கையின் ஜனாதிபதியாக தமிழ் அல்லது முஸ்லிம் இனத்தவர் தேர்ந்தெடுக்கப்டும் நிலை ஏற்படும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவா ரொபட் பிளேக் தெரிவித்துள்ளார். கறுப்பினத்தை சேர்ந்தவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்டு அமெரிக்காவை ஒன்றுபடுத்தியதைப் போன்று என்றாவது ஒருநாள் இலங்கையிலும் நிகழக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதியாக பாரக் ஓபாமா தேர்ந்தெடுக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை கற்றுக் கொள்ளக்கூடிய பாடம் எது என வினாவிய போதே அவர் இவ்வாறு கூறினார். பராக் ஓபாமா உலகம் முழுவதிலும் பிரபல்யமிக்கவராக திகழ்கின்றார். அந்த வகையில் உலக சவால்களை எதிர்கொள்வதற்கு இல…

  19. வன்னியில் அரசபடை இரசாயன ஆயுதங்களை பாவிக்க ஆயத்தப்படுத்துகிறார்களா?

  20. ஈழத்தமிழர்களின் உரிமைக்கு ஒபாமா நிச்சயம் குரல்கொடுப்பார் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. வீரகேசரி நாளேடு 11/5/2008 8:56:14 PM - அமெரிக்க ஜனாதிபதியாக சரித்திரத்தில் முதல் தடவையாக சிறுபான்மை கறுப்பு இனத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டிருப்பது இலங்கையில் வாழும் தமிழினத்திற்கு நம்பிக்கையையும், உந்து சக்தியையும் மகிழ்ச்சியையும் தருகின்றது என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பாக்கிய செல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றியீட்டி இருப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் மேலும் தெரிவித்தததாவது, ஒருநாட்டின் சமூக பொருளாதார, அபிலாசைகளை முன்னெ…

  21. நா‌ங்க‌‌ள் பே‌சுவதனை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் ‌நீ‌ங்க‌ள் போரை ‌நிறு‌த்து‌ங்க‌ள் எ‌ன்று ‌‌இயக்குநர் இமயம் பார‌திராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  22. இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தென்னிந்திய திரைப்பட சம்மேளன தொழிலாளர்கள் (பெப்சி) இன்று புதன்கிழமை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

    • 17 replies
    • 3.4k views
  23. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறக்கோட்டை, கோட்டை ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தேடுதலில் எட்டு மலையக இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 554 views
  24. நெடுங்கேணி பகுதியில் அப்பாவி பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் கண்ணிவெடித் தாக்குதல்: பெண் படுகொலை [புதன்கிழமை, 05 நவம்பர் 2008, 08:40 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் அப்பாவி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். நெடுங்கேணி குளவிசுட்டான் பகுதியில் உழுவூர்தி ஒன்றில் பொதுமக்கள் சென்று கொண்டிருந்த போது அதன் மீது வண்ணாங்குளத்தில் சிறிலங்கா படையினரால் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் இன்று புதன்கிழமை காலை 8:30 நிமிடத்துக்கு இடம்பெற்றுள்ளது. இதில் உழவூர்தியில் சென்று கொண்டிருந்த பெரியமடுவைச் சேர்ந்த பூபாலசிங்கம் பாக்…

    • 0 replies
    • 561 views
  25. வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படை கொமாண்டோக்கள் மீது தாக்குதல் நடத்தி- இரண்டு படகுகளை மூழ்கடித்து- 20 படையினரை கொன்று வீரவரலாறான கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு மூங்கிலாறில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 782 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.