Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வீரகேசரி இணையம் - இலங்கைக்கான ஜீ.எஸ்.பியினை மேலும் நீடிக்க வேண்டாமென பல தரப்பட்ட குழுக்களிடமிருந்தும் தனிப்பட்ட நபர்களிடமிருந்தும் அதிகளவில் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசிற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

  2. ஞாயிறு,26 அக்டோபர் 2008 இலங்கையில் நடைபெறும் தமிழினப் படுகொலையைக் கண்டித்து தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் தமிழகத்தில் வரும் 31ஆம் தேதி முழு கடையடைப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் வெள்ளையன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்இ சிறீலங்கா அரசின் ஈவு இரக்கமற்ற இனப் படுகொலையைக் கண்டித்தும்இ தமிழக மீனவர்களைப் பாதுகாக்கக் கோரியும் இந்தக் கடையடைப்பு நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இது தமிழ் மக்களின் உயிரோடும்இ உணர்வோடும் தொடர்புடைய போராட்டம் என்பதால் இந்தக் கடையடைப்பு போராட்டத்தில் எந்த வர்த்தகப் பிரிவுக்கும் விதிவிலக்கு வழங்கப்படாது. மிகச் சிறிய டீக்கடை முதல் மிகப்பெரிய நகைக்கடைகள் வரை தமிழகத்தில் …

  3. இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவும், சிங்களவர்களுக்கு நிரந்தர அடிமைகளாகவும் இருக்க வேண்டுமென்ற ஆதிக்க வெறியும், சிங்கள இன வெறியும் அறவே அகற்றப்படும் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்டாக வேண்டும். என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை மத்திய அரசு ஏற்று நடவடிக்கை எடுக்கும் என தங்களுக்கு இருந்த நம்பிக்கை வீண் போகவில்லை என்றும் தாய்த் தமிழக மக்களின் நீண்ட காலக் கனவு படிப்படியாக நிறைவேறி வருகிறது என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அனைத்துக் கட்சிக் கூட்டம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே மயிலை மாங்கொல்லை…

  4. தமிழ் உணர்வாளர்களான வைகோ, கண்ணப்பன், சீமான், அமீர் ஆகியோர் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 565 views
  5. மனிதப் பேரவலத்துக்கு உள்ளாகியிருக்கும் ஈழத்தமிழர்களின் உயிருக்கான போராட்டத்தை வெளிக்கொணர்வதில் முன்னின்று செயற்படும் இந்திய ஊடகங்களுக்குப் பொதுவாகவும், தமிழக ஊடகங்களுக்குச் சிறப்பாகவும் நன்றிகளைத் தெரிவிப்பதுடன் இந்தப் பணி தொடர்ந்து ஈழ மக்கள் தமது உரிமையுடன் வாழும் விடுதலை வாழ்வு கிடைக்க வழியமைக்க வேண்டுமெனவும் கோருகின்றோம் என்று கனடியத் தமிழ் ஊடகங்களின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 512 views
  6. இலங்கை தமிழர் விவகாரம் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் போதுமான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லை என தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்தினால் நேற்று முன்னெடுக்கப்பட்ட மனித சங்கிலி போராட்டம் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்ளாதது, அவர்கள் இலங்கை தமிழர்கள் மீது கொண்டுள்ள அக்கறையின்மையை எடுத்துக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மத்திய அரசினால் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால் தமிழக அமைச்சர்கள் பதவி விலகுவதாக கூறியிருந்தமை பிழையானது என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி. ஞானசேக…

  7. தேசியத் தலைவரின் நோக்கத்தினை நிறைவேற்றும் மயூரன் சிறப்பு பதுங்கிச் சூட்டணி: தளபதி ஜெரி [ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2008, 03:31 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் நோக்கத்தினை லெப். மயூரன் சிறப்பு பதுங்கிச் சூட்டணி நிறைவேற்றி வருகின்றது என்று வடபோர்முனை தளபதி ஜெரி தெரிவித்துள்ளார். களத்தில் சிறப்பாக செயற்பட்ட லெப். மயூரன் சிறப்பு பதுங்கிச் சூட்டணி போராளிகளை மதிப்பளிக்கும் நிகழ்வில் கருத்துரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: லெப். மயூரன் சிறப்பு பதுங்கிச் சூட்டணியை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் எந்த நோக்கத்துக்காக உருவாக்கினாரோ அந்த நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றது. எதிரிகளை…

    • 0 replies
    • 1.1k views
  8. ஈழத் தமிழர்களின் தேசியமாக தமிழீழம் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்றும் உரிமைக்குரல் எழுப்புங்கள் என்று யேர்மனியில் உள்ள தமிழ் உயர்கல்வி மாணவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 613 views
  9. செய்தி: "இலங்கைத் தமிழர்களுக்காக நாங்கள் ஏன் உண்ணாவிரதம் இருக்கவேண்டும்? அஜித் அர்ஜன் கேள்வி - புலம்பெயர்ந்த தமிழ் இரசிகர்கள் கொதிப்பு" யாழ் கள வாசகர்களே! கள உறவுகளே.. சிந்திச்சு செயற்படுங்கள்... யாழ் இணையத்தில் அண்மையில் மோசமான முறையில் செய்திகள் திருட்டுத்தனமாக ஒட்டப்பட்டு வருகின்றது. பல இணைய ஊடகங்கள் அனுபவமற்ற, ஆங்கில அறிவு அற்ற, சிந்திக்கத்தெரியாத கிறுக்கர்களால் நடாத்தப்படுகின்றன. கருத்து எழுதுபவர்கள் அனைவரும் யாரோ சொன்னதை கேட்டதன் அடிப்படையிலேயே எழுதுகின்றார்கள். ஒன்றையும் ஒருவரும் நேரடியாக பார்ப்பதும் இல்லை. இதனால் ஊடகங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. எதையும் ஆர, அமற யோசிச்சு முடிவு எடுங்கள். எழுந்தமான முறையில, நன்கு திட்டமிட…

    • 21 replies
    • 2.4k views
  10. சற்று நேரத்திற்கு முன்பாக தமிழகத்தில் இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கிடைக்கின்றன. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

  11. விடுதலைப் புலிகளின் தோல்வி தமிழர்களுக்கு விடுதலை தரும்? [25 - October - 2008] [Font Size - A - A - A] விக்டர் ஐவனின் குத்துக்கரணம் அரசாங்கத்தின் தற்போதைய இராணுவ நடவடிக்கைகளினால், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவர், அழிக்கப்படுவர், அதனால் தமிழர்கள் பயனடைவர் என்ற வாதம் தெற்கில் நடைபெறுகிறது. விடுதலைப் புலிகளின் நலன்கள் குன்றுகின்றன என்று கருதப்படுவதால் இச்சிந்தனை பிறந்துள்ளது. தனது பத்திரிகைக் கட்டுரையில் விக்டர் ஐவன் கூறியுள்ள கருத்தின்படி, விடுதலைப் புலிகள் தோல்வியைத் தழுவுவதால் யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இது தமிழர்களுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை என்று கூறுகிறார். விடுதலைப் புலிகளின் தோல்வியினால் ஆரம்பத்தில் தமிழ் மக்கள் சிறிதளவு கஷ்டங்…

    • 6 replies
    • 2.1k views
  12. இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாம் திகதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளளது. இதில் நடிகர் நடிகைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு ரஜினி, கமல் உட்பட அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் சங்கம் கடிதங்கள் அனுப்பி வருகிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள். உண்ணாவிரதத…

  13. ஈழத்தமிழர்களுக்காக நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரதத்தில் நான் வரமாட்டேன் என்று கூறவில்லை என நடிகர் அர்ஜீன் தெரிவித்துள்ளார். தனக்கும் தமிழ் பற்று உள்ளது என்றும், நான் தமிழ் மண்ணில் வாழ்கின்றேன்,எனக்கும் ஈழத் தமிழர்கள் மீது பாசம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நான் கூறியதாக வந்த தகவலை,தான் இணையத்தளங்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். நான் கட்டாயமாக நடைபெற இருக்கும் உண்ணாவிரதத்தில் பங்குபெற்றுவேன் என்றும் கூறினார். http://www.tamilseythi.com/tamilnaadu/arjun-2008-10-25.html -தமிழ் செய்தி நிருபர்

  14. ராமேஸ்வரம்: இலங்கையில் தமிழரக்ளுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்தும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தக் கோரியும், நிரந்தர தீர்வு காணவும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்த் திரையுலகின் படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் பெருமளவு ராமேஸ்வரத்தில் இன்று குவிந்துள்ளனர். சன் லைவ்: பிற்பகல் 2 மணிக்குத் துவங்கும் திரையுலகினரின் இந்த பரபரப்பான பேரணியை, சன் நியூஸ் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது. மாலை நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டமும் நேரடியாக ஒளிபரப்பாகிறது. இந்தப் போராட்டத்துக்காக இயக்குநர் பாரதிராஜா, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் தலைமையில் 2000 இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நேற்று மாலை தனி ரயிலில் ராமேஸ்வரம் புறப்பட்டனர். இன்று காலை ரா…

  15. கே.பாலசுப்பிரமணியம், டிட்டோகுகன் கருணா பாராளுமன்றம் வந்ததன் பின்னரே பாதுகாப்புக்கென பாதைகள் மூடப்படுவதான குற்றச்சாட்டு, இந்திய தலையீடு தொடர்பான அமைச்சர் சந்திரசேகரனின் விளக்கமளிப்பு குறித்த சர்ச்சை, அமைச்சர் டி.எம்.ஜயரட்ணவின் ஆவேசம் என பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை காலை பெரும் சர்ச்சைக் கூடமாக மாறியது. பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகர எழுப்பிய சிறப்புரிமை பிரச்சினையிலிருந்தே சபையில் சர்ச்சை ஆரம்பமாகிவிட்டது. கருணாவுக்காகவே வீதி மூடப்படுகிறது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்த…

  16. சீமான், அமீர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், ஆர்வலர்கள் மறியல் [சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2008, 10:06 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] இயக்குநர்களான சீமான் மற்றும் அமீர் ஆகியோரை கைது செய்வதை எதிர்த்து பாரதிராஜா, பாலுமகேந்திரா தலைமையில் இயக்குநர்களும், உதவி இயக்குநர்களும், பெரும் திரளான இரசிகர்களும் காவல்துறையினரை தடுத்து மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு சீமானும், அமீரும் கைது செய்யப்பட்டனர். இந்தத் தகவல் அறிந்ததும், இயக்குநர்களான பாரதிராஜா, பாலுமகேந்திரா, ஆர்.கே.செல்வமணி, தங்கர்பச்சான், விக்கிரமன், லிங்குச்சாமி, கரு.பழனியப்பன், சேரன், ராம், ஜெகன், பாலாஜி சக்திவேல் மற்றும் ஏராளமான உதவி இயக்குநர்கள் மற்றும் க…

    • 0 replies
    • 806 views
  17. சீமான்- அமீர் கைதினைக் கண்டித்து உதவி இயக்குநர்கள் ஆர்ப்பாட்டம் [சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2008, 09:52 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு கட்டவிழ்த்துள்ள காண்டுமிராண்டித்தனமான போரை நிறுத்தக் கோரியும் தமிழகத்தில் எழுந்துள்ள கொந்த‌ளிப்பை திசை திருப்பும் காங்கிர‌ஸ் க‌ட்சியையும், ஜெய‌ல‌லிதாவையும் க‌ண்டித்தும், இயக்குநர்களான சீமான், அமீர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நூற்றுக‌ண‌க்கான‌ உத‌வி இய‌க்குந‌ர்க‌ள் ஒன்றுதிர‌ண்டு இன்று சனிக்கிழமை சென்னை வ‌ட‌ப‌ழ‌னியில் ஆர்ப்பாடடம் ந‌ட‌த்தின‌ர். - ஆத‌ரிப்போம் ஆத‌ரிப்போம் ஈழ‌ விடுத‌லையை ஆத‌ரிப்போம் - நிறுத்து நிறுத்து ஈழ‌ ம‌க்க‌ள் மீதான‌ கொடூர‌ போரினை நிறுத்து - இந்திய‌ இந்திய‌ அர‌சே ஈழ‌…

    • 0 replies
    • 584 views
  18. தமிழக மக்கள் தாமாக விரும்பி தமது ஆதரவுகளை தாயக போராட்டத்துக்கு கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். தாயகத்தில போராளிகள் உயிர்களைத் தியாகம் செய்து போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால்... புலம்பெயர் விசுக்கோத்துக்கள் என்ன செய்துகொண்டு இருக்கின்றார்கள்? மோட்டுத்தனமான முறையில் - எழுந்தமான முறையில் அறிக்கைகளை தயாரித்து புலம்பெயர் மக்களிடம் விநியோகம் செய்து வருகின்றார்கள். அண்மையில் சுவிஸில் மோட்டுத்தனமான முறையில் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம் (மேலே படம்) சிறீ லங்கா அரசுக்கு பிரச்சாரத்துக்கு பயன்பட்டது. இதுபோல... பலப்பல செயல்களை உணர்ச்சிவசப்பட்டு.. திட்டமிட்டு ஆராயாமல் திடீர் திடீர் என்று செய்து வருகின்றார்கள்... இதற்கு ஒரு உதாரணமாக... அஜித் பட புறக்கணிப்பை சொல…

  19. கிளிநொச்சி பொது மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 776 views
  20. நடிகர் வடிவேலுவின் உருக்கமான உரை இயக்குனர் சீமான் ஆவேச பேச்சு இயக்குனர் சேரன் ஆவேச பேச்சு இயக்குனர் பாரதிராஜாவின் ஈழம் பற்றிய உரை

    • 0 replies
    • 2.8k views
  21. மட்டக்களப்பில் சிறப்பு அதிரடிப்படையினரின் காவலரண் மீது தாக்குதல்: ஒருவர் பலி [சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2008, 06:52 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டம் கோப்பாவெளிப் பகுதியில் உள்ள சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: மட்டக்களப்பில் உள்ள ஏ-5 பிரதான வீதியில் உள்ள கோப்பாவெளி பிரதேசத்தில் அமைந்திருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் காவலரண் மீது நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7:10 நிமிடமளவில் விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில்…

    • 0 replies
    • 477 views
  22. கடந்த 75 நாட்களில் அம்பாறையில் 65 படையினர் பலி- 98 பேர் படுகாயம்: விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறை [சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2008, 01:36 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] கடந்த 75 நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா படையினர் 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 98 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் இன்று சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- விடுதலைப்போருக்கு தோள் கொடுங்கள் உரிமைக்குரல் - 2 24.10.2008 அன்பார்ந்த அம்பாறை மாவட்ட வாழ் முஸ்லிம் - தமிழ் உறவுகளே! …

    • 0 replies
    • 739 views
  23. கிளிநொச்சியைக் கைப்பற்றும் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிறீலங்காப் படையினர் இப்போது இரவு பகலாக அச்சத்துடன் காணப்படுகின்றமையினை அவதானிக்க முடிகிறது. எப்போதும் விடுதலைப் புலிகள் ஒரு வலிந்த தாக்குதலை தங்கள் மீது மேற்கொள்ளலாம் கரும்புலிகள் திடீரென பாயலாம் என்கிற அச்சமும் எதிர்பார்ப்பும் தற்போது படையினர் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகிறது என விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இ.இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார். நேற்று முன்தினம் விசுவமடுவில் நடைபெற்ற அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் அதியுயர் பாதுகாப்பு வியூகத்தினுள் புகுந்து எல்லாளன் படை நடவடிக்கையினை வெற்றிகரமாக மேற்கொண்டு தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த 21 சிறப்புக் கரும்புலிகளின் ஓராண்டு நினைவு நிகழ்வில…

  24. சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் தாக்குதல் நடவடிக்கை முறியடிப்பு: 2 உடலங்கள் மீட்பு [சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2008, 06:32 பி.ப ஈழம்] [வி.நவராஜன்] சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் தாக்குதல் நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளதுடன் அவர்களின் இரு உடலங்களையும் கைப்பற்றியுள்ளனர். வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று வெள்ளிக்கிழமை ஆழ ஊடுருவும் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அதனை விடுதலைப் புலிகள் முறியடித்தனர். இம்முறியடிப்பில் இரு படையினர் கொல்லப்பட்டதுடன் அவர்களின் உடலங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட இரு உடலங்களும் விடுதலைப் புலிகளால் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. புதினம்

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.