Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அண்மைக்காலங்களாக சிறிலங்கா விமானப்படையானது தமிழப்பகுதிகள் மீதான விமானத் தாக்குதல்களுக்கு, அண்மையில் உக்ரேன் நாட்டிலிருந்து கொள்வனவு செய்த நவீன குண்டுவீச்சு விமானக்களை பயன்படுத்தி வருகிறது. இத்தாக்குதல்களில் தினந்தோறும் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டு வருவதும், அவர்களின் வாழ்வாதராங்கள் அனைத்துமே இல்லாதொழிக்கப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா விமானப்படையினரின் குண்டு வீச்சு விமானங்களை இந்திய விமானப்படையினரின் விமானிகளே ஓட்டி வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரேன் நாட்டிலிருந்து சிறிலங்காவானது அண்மையில் கொள்வனவு செய்த ‘MIG27, MIG29′ போன்ற நவீன தொழில்நுட்ப குண்டுவீச்சு விமானங்களை செலுத்தக்கூடிய விமானிகள் சிறிலங்காவிடம் இல்லை என்பதும், குறுகிய காலத்தில் அவற்றை…

  2. இலங்கை உட்பட 28 நாடுகள் மோசமான நிதி நெருக்கடியில்! உலக வங்கி எச்சரிக்கை [11 ஒக்டோபர் 2008, சனிக்கிழமை 11:35 பி.ப இலங்கை] இலங்கை உட்பட 28 உலக நாடுகள் மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர் கொண்டுள்ளன என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் கூட்டத்தொடருக்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் அறிக்கையில் இலங்கை நேபாளம் ,பிறி நவாண்டா, இந்தியா, எதியோப்பியா, லெபனான், ஜோர்தான், கம்போடியா உட்பட 28 நாடுகளின் நிதி நிலைமை பலவீனமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உணவுப் பொருட்களில் விலை அதிகரிப்பும் எரிபொருள் விலை அதிகரிப்புமே இந்த நாடுகளின் நிதிநிலமை பலவீனமா…

  3. கிழக்கு மாகாண முதலமைச்சர் மீது அரசாங்கம் அதிக அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. திட்டமிட்ட வகையில் பிள்ளையானுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அரசாங்க ஊடகங்களில் பிள்ளையானுக்கு எதிரான செய்திகள் வெளியிடுவதாகவும், வழங்கப்பட்டிருந்த சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக பிள்ளையானின் செயலாளர் கலாநிதி விக்னேஸ்வரனின் சம்பளக் கொடுப்பனவுகளை ரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நேரடித் தொடர்பு இ…

  4. ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17.10.08) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கடையடைப்பு நடத்தப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  5. வீரகேசரி இணையம் - இலங்கை இராணுவத்தினருக்கு இந்திய அரசு வழங்கி வரும் இராணுவ உதவிகளை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி ம.தி.மு.க சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் அக்கட்சியின் பொது செயலாளர் திரு. வை. கோ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் தமிழர்கள் மீது இராணுவ தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இப்பிரச்சினையில் இந்திய அரசு, அந்நாட்டு அரசிற்கு உதவி வருவதை கண்டித்தும் ம. தி. மு. க சார்பில் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியில் சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் மறியலுக்கு முன் சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி அருகேயிருந்து ஊர…

  6. 2002ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையால் பாதுகாப்புப் படையினர் பல்வேறு தடைகளை எதிர்நோக்கியிருந்ததாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இராணுவத்தினர் 59வது ஆண்டுவிழாவிலேயே அவர் இவ்வாறு கூறினார். மாவிலாறு அணைக்கட்டை இராணுவத்தினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து பல்வேறு இராணுவ வெற்றிகளை பாதுகாப்புத் தரப்பினர் அடைந்திருப்பதாகவும், அவற்றில் கிழக்கை மீட்டமை, மன்னாரை மீட்டமை, முல்லைத்தீவில் 14வது முகாமை மீட்டமை, கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பகுதியை மீட்டமை முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியவை எனக் கூறினார் இராணுவத் தளபதி. “இராணுவத்தினர் பொதுமக்களிடமிருந்து மதிப்பையும், மரியாதையையும் பெற்றுள்ள…

  7. நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொன்றவருக்கு பதவியா?: பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் கேள்வி [சனிக்கிழமை, 11 ஒக்ரோபர் 2008, 10:14 மு.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] நாடாளுமன்ற உறுப்பினர்களை கொன்றவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியா? எனக் கேள்வி எழுப்பியுள்ள பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம், இதுதான் அந்நாட்டு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினது ஜனநாயகமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பில் பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையப் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் இன்று சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'பார்லீமென்ட்' என்று ஆங்கிலத்தில் கூறப்படும் சொற்பதத்தை தமிழில் 'பாரளுமன்றம்' என்று கூறுவார்கள். இந்த பார்லீமென்ட் என்ற ஆங்கிலச் சொல் பிர…

    • 0 replies
    • 924 views
  8. வன்னியில் உருவாகியுள்ள மனிதப் பேரவலத்தை யேர்மனிய மக்களினதும் அனைத்துலகத்தினதும் கவனத்துக்கு கொண்டுவருவதனை நோக்கமாகக்கொண்டு மாபெரும் கவயீர்ப்புப் பேரணி நேற்று வெள்ளிக்கிழமை (10.10.08) யேர்மனி வாழ் தமிழ் மக்களால் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 592 views
  9. கிழக்கில் படையினரின் கொடூர பிடியில் சிக்கியுள்ள ஒரு இளைஞன்: மட்டக்களப்பு பாலமுனை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்களின் சடலங்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்கள் அணிந்திருந்த உடைகள் உட்பட்ட சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு உறவினர்கள் வைத்தியசாலைப் பிரேத அறையில் வைத்து அடையாளம் காட்டியுள்ளனர். மண்டபத்தடி மற்றும் மயிலம்பாவெளிப் பிரசேங்களைச் சேர்ந்த க. குகராஜ் மற்றும் அ. குணசீலன் ஆகிய இந்த இரு இளைஞர்களும் மட்டக்களப்பு காந்தி சிலைக்கு அருகாமையில் உள்ள வலம்புரி ரேடேர்ஸ் என்ற வியாபார நிறுவனத்தில் தொழில் புரிந்து வந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பில் அண்மையில் இடம்பெற்ற சுற்றிவளைப்பொன்றில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட இந்த இரு இ…

  10. பயங்கரவாதிகளை ஒழிப்பதில் எமது நாடே முதன்மை வகிக்கிறது: ரோகித போகல்லாகம [வெள்ளிக்கிழமை, 10 ஒக்ரோபர் 2008, 10:25 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] பயங்கரவாதிகளை ஒழிப்பதில் உலகிலேயே மிகவும் திறமையாக செயற்பட்டு வரும் நாடுகளில் தமது நாடு முதன்மை வகிப்பதாக சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம பெருமை பாராட்டினார். பயங்கரவாதிகளை அழிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகக்கு பலஸ்தீனம் உட்பட அனைத்துலக நாடுகள் ஆதரவு வழங்கி வருவதாகவும் அவர் கூறினார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு நேற்று வியாழக்கிழமை வருகை தந்த பலஸ்தீன வெளியுறவு அமைச்சார் றியாட் மால்கியை இன்று சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் ரோகித போகல்லாகம இவ்வாறு …

  11. அரசாங்கம் மேலும் 3 ஆயிரத்து 200 கோடி ரூபா வெளிநாட்டுக் கடனைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்தக் கடனை இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கும் முகாமைத்துவ பணிகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி, சில வர்த்தக வங்கிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க டொலர் அல்லது வேறு நாணயத்தில் இந்தக் கடனைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த கடனில் 70 வீதம், இலங்கை ஏற்கனவே பெற்றுக்கொண்ட கடன்களுக்கான வட்டியை செலுத்தப்பயன்படுத்தப்படவுள

  12. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பலொன்று காம்பூச்சியாவிலிருந்து புறப்பட்டுள்ளதாக இராணுவ புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி பிரபல சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மினி மல்டிபெரல்கள் மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் இந்தக் கப்பலில் கொண்டு வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிதித் தட்டுப்பாடு காரணமாக தவணைக் கட்டண முறையில் இந்த ஆயுத கொடுக்கல் வாங்கல் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த கொடுக்கல் வாங்கல்களிற்காக ஐரோப்பாவைச் சேர்ந்த புலிகளின் நிதிப் பொறுப்பாளர் ஒருவர் சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார். கம்போடியாவிலிருந்து புறப்பட்ட குறித்த ஆயுதக் கப்பல் இடை நடுவில் வேறும் ஓர் கப்பலுக்கு மாற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறத…

    • 3 replies
    • 3.5k views
  13. சிறிலங்காவின் மூத்த அமைச்சர்கள் மற்றும் அச்சுறுத்தல் உள்ள அமைச்சர்கள் ஆகியோரின் பாதுகாப்பினை அதிகரிக்குமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச படை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  14. அண்மைக்காலங்களாக சிறிலங்கா விமானப்படையானது தமிழப்பகுதிகள் மீதான விமானத் தாக்குதல்களுக்கு, அண்மையில் உக்ரேன் நாட்டிலிருந்து கொள்வனவு செய்த நவீன குண்டுவீச்சு விமானக்களை பயன்படுத்தி வருகிறது. இத்தாக்குதல்களில் தினந்தோறும் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டு வருவதும், அவர்களின் வாழ்வாதராங்கள் அனைத்துமே இல்லாதொழிக்கப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா விமானப்படையினரின் குண்டு வீச்சு விமானங்களை இந்திய விமானப்படையினரின் விமானிகளே ஓட்டி வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரேன் நாட்டிலிருந்து சிறிலங்காவானது அண்மையில் கொள்வனவு செய்த ‘MIG27, MIG29′ போன்ற நவீன தொழில்நுட்ப குண்டுவீச்சு விமானங்களை செலுத்தக்கூடிய விமானிகள் சிறிலங்காவிடம் இல்லை என்பதும், குறுகிய காலத்தில் அவற்…

    • 0 replies
    • 2.3k views
  15. ஆயுதங்களைக் களைந்து சரணடைந்தாலும் விடுதலைப் புலிகளுக்கு எவ்வித சலுகைகளும் இல்லை – மகிந்த: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகன் மீது தனிப்பட்ட ரீதியில் கோபம் எதுவுமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆயுதங்களைக் களைந்து சரணடைந்தாலும் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்பட மாட்டாதென பிரபல சர்வதேச தெலைக்காட்சி சேவைக்கு அளித்த செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும் எண்ணிக்கையிலான விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆயுதங்களை களைவதற்கு விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னரே அரசியல் ரீதியான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பு…

    • 7 replies
    • 2.4k views
  16. என்னடாப்பா தமிழகத்தில நல்ல மாற்றங்கள் எல்லாம் நடக்குது. கேள்விப் பட்டனியோ என்றார் அவர். ம் என்றேன் நான். மன்மோகன் சிங் இலங்கைத் தூதரை அழைத்து யுத்தத்தை உடனடியா நிறுத்தச் சொல்லியிருக்கிறாராம். உண்மையோ என அவர் கேட்டார். அப்பிடியொண்டுமில்லை என நான் மறுதலித்தேன். ச்சே அங்கை கருணாநிதியோடு கதைச்சிருக்கிறாராம். உடனை தூதரை அழைத்து எல்லாத்தையும் நிறுத்தச் சொல்லி சொன்னதா மன்மோகன்சிங் சொன்னாராமே - அவருக்கு தன் புளுகம் முறிந்திடக் கூடாதென்ற தவிப்பு. யுத்தத்தை நிறுத்தச் சொல்லியெல்லாம் சொல்லவில்லை. தூதரை சந்தித்து வழமையாக கதைக்கிறமாதிரி பார்த்து அவதானமா நடந்து கொள்ளுங்கோ என சொல்லியிருக்கிறார்கள். சண்டை செய்யும் போது சனம் சாகாமல் பார்த்துக் கொள்ளுங்கோ என்று கேட்டி…

    • 0 replies
    • 1.6k views
  17. வெள்ளை வானில் சென்ற ஆயுததாரிகளினால், இராணுவ கப்டன் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இராணுவத்தில் சேவையாற்றும் இந்த அதிகாரி, விடுமுறையில் வீட்டுக்கு சென்றிருந்தார். குறித்த இராணுவ அதிகாரி கம்பஹா பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது வெள்ளை வானில் சென்ற ஆயுதாரிகள் துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி கடத்திச் சென்றுள்ளதாக காவற்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். கடத்தல் சம்பவம் பற்றி முச்சக்கர வண்டியின் சாரதி கம்பஹா காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை நீர்கொழும்பு கடற்கரை வீதியைச் சேர்ந்த தமிழ் வர்த்தகர் ஒருவர் நேற்றிரவு கடத்தப்பட்டதாக நீர்கொழும்பு காவற்துறையிடம்; முறையிடப்பட்டுள்ளது. …

  18. இலங்கையில் விரைவில் சமாதானம் மலரும் என பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத அப்பாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். பலஸ்தீன ஜனாதிபதியை விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றார். பலஸ்தீன ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் பூரண அரச மரியாதையுடன் செங்கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பலஸ்தீன் ஜனாதிபதி சநதித்து பேச்சுவாக்த்தை நடத்தினார். அதனைத்தொடர்ந்த அங்கு உரை நிகழ்த்துகையிலேயே பலஸ்தீன ஜனாதிபதி இவ்வாறு கூறினார். பலஸ்தீனர்களின் நியாயமான போராட்டங்களு…

  19. வட மாகாணத்துக்கான புதிய ஆளுனராக டிக்சன் டெலா பண்டார இன்று இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் முன்னாள் சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுனராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டார். http://www.tamilseythi.com/srilanka/lanka-...2008-10-10.html

  20. கிழக்கில் சட்டம் ஒழுங்கு பாரியளவில் சீர்குலைந்துள்ளதாகவும், இது குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாரிய பின்விளைவுகளை அரசாங்கம் எதிர்நோக்க நேரிடும் எனவும் உயர் பாதுகாப்பு அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி கொழும்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் பல்வேறு குழப்ப நிலைகள் தோன்றியுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கின்றது கிழக்கு மாகாண முதலமைச்சரின் வலது கை எனக் கருதப்படும் சீலன் என்ற நபர் திடீரென இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளதாக கிழக்கு மாகாணசபை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீலன் என்பவரே கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் பிள்ளையானுக்காக கப்பம் திரட்டி வந்தத…

    • 6 replies
    • 2.4k views
  21. சிறிலங்கா படையினரின் உக்கிரமான தாக்குதல்கள் நடைபெற்று வரும் பகுதியிலிருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இரணைமடுச் சந்தியில் 2 ஆம் லெப். மாலதியின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 968 views
  22. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பொறலஸ்கமுவவில் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையில் மலையக தமிழ் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 507 views
  23. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பகுதியில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் தாயும் மகளும் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 562 views
  24. திருச்சி (ஏஜென்சி), இலங்கையில் தமிழர் பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து திருச்சி மத்திய சிறையில் கைதிகள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். திருச்சி மத்திய சிறையில் இன்று காலை வழக்கம்போல் கைதிகளுக்கு உணவு பறிமாறப்பட்டது. அப்போது கைதிகளின் ஒரு பிரிவினர் உணவை வாங்க மறுத்து விட்டனர். பொன்பரப்பி ராஜேந்திரன் என்பவர் தலைமையில் சுமார் ஆயிரம் கைதிகள், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பதாக அப்போது தெரிவித்தனர். அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து, ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை தாங்கள் மேற்கொண்டிருப்பதாக சிறைக் கைதிகள் தெரிவித்தனர். தமிழர் ப…

  25. இலங்கையில் உண்மை நிலையை அறிய அனைத்து கட்சியை சேர்ந்த 10 பேர் எம்.பி.க்கள் குழுவை அனுப்புங்கள் என்று முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து, பா.ம.க. சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி எம்.பி., பொன்னுச்சாமி எம்.பி., பாடலாசிரியர் அறிவுமதி, இயக்குனர் சீமான், ஓவியர் வீரசந்தானம் உள்பட பா.ம.க. எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:- …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.