Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உதவி திட்ட முறைக்கேட்டுக்கெதிராக ஒன்றுகூடிய பாரதிபுரம் மக்கள் : சம்பவ இடத்திற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வவுனியா பாரதிபுரம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு தயாரான போது நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் வருகை தந்து அம்மக்களுடன் கலந்துரையாடியிருந்தார். அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் வவுனியா பாரதிபுரத்தில் விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவு…

  2. இலங்கையின் நிலைமை தொடர்பில் ஜனாதிபதி சர்வதேசத்திடம் பொய்யுரைத்துள்ளார் என தமிழ் தலைவர்கள் குற்றச்சாட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவில் தெரிவித்தமை போன்று இலங்கையில் நிலைமை இல்லை எனவும், அவர் சர்வதேச சமூகத்திற்கு பொய் சொல்கிறார் என்றும் வடக்கு கிழக்கு தமிழ்த் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதேநேரம் அரசியல் கைதிகள் விடயத்தில் மாத்திரம் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டாலும் காணி விவகாரத்தில் தொல்பொருள் திணைக்களம் ஊடாகப் புதிதாக பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். முன்னைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில், தற்போதைய ஜன…

  3. மிகவும் பாரதூரமான சுகாதாரப் பேரிடரை நோக்கிச் செல்லும் இலங்கை – சஜித் இலங்கை மிகவும் பாரதூரமான சுகாதாரப் பேரிடரை நோக்கிச் செல்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்துப் பற்றாக்குறை, மருந்துப் பொருட்களின் விலை உயர்வு, மருந்துகளின் ஊடாக மோசடி, ஊழல் என ஒட்டுமொத்த அரசாங்கமும் இந்நாட்டு நோயுற்ற மக்களின் வாழ்வோடு விளையாடி வருவதாக எதிர்க்கட…

  4. Published By: DIGITAL DESK 3 24 JUN, 2023 | 04:44 PM இனப்படுகொலையின் விளைவாக பெண் தலைமைத்துவ வாழ்வுக்கு உள்ளாக்கப்பட 90 ஆயிரம் ஈழத்தமிழ் பெண்களும் அவர்களது குடும்பங்களை சேர்ந்த 2இலட்சத்து 50 ஆயிரம் சிறுவர்களும் கடந்த 14 ஆண்டுகளில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஈழத்தமிழர் பேரவை, இப்பெண் தலைமைத்துவ குடும்பங்களின் தேவைகளை பூர்த்திசெய்ய உலகத்தமிழர்களாகிய அனைவரும் ஒரு பொது வெளியில் கூட்டிணைந்து செயற்திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். உலகளாவிய ரீதியில் வறுமை, பாலியல் வன்கொடுமை, சுகாதாரப்பிரச்சினை, அரச இராணுவ அடக்குமுறைகள் போன்றவற்றால் சுமார் 258 மில்லியன் வி…

  5. ஓட்டமாவடியில் தியாகிகள் நினைவுத் தூபி திறப்பு 24 JUN, 2023 | 01:01 PM கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகாமையில் தியாகிகள் நினைவுத் தூபியினை திறந்துவைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்றது. கல்குடா தியாகிகள் நினைவுத்தூபி குழுவினர் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அல் கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.ஹாரூன் ஸஹ்வி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தின்போது தாய்மண்ணையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக கல்குடா முஸ்லிம் பகுதியில் உயிர்நீத்த வீரர்கள், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர்கள், கடத்தப்பட…

    • 11 replies
    • 742 views
  6. அனலைதீவு வைத்தியசாலைக்குள் பொலிஸாருடன் அத்துமீறி நுழைத்த புலம்பெயர் நாட்டவர் கைது! Posted on June 22, 2023 by தென்னவள் 4 0 யாழ்ப்பாணம் அனலைதீவு பிரதேச வைத்தியசாலைக்குள் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தருடன் புலம்பெயர் நாட்டவர் ஒருவர் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த வைத்தியர் மற்றும் பெண் ஊழியர்களுடன் முரண்பட்டு, வைத்தியசாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை அவருடன் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவருக்கும் எதிராக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. வெளிநாடொன்றில் இருந்து அனலைதீவு பகுதியில் வந்து தங்கி நின்ற நபர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர…

  7. மது விற்பனை குறைவு.. வருமானத்தை எட்டமுடியாத நிலையில் கலால் திணைக்களம் விலை அதிகரிப்பு காரணமாக மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை குறைவடைந்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகவே இவ்வருடம் வரி வருமான இலக்குகளை தம்மால் அடைய முடியவில்லை என்றும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம தலைமையில் தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இங்கு, கலால் திணைக்களத்தினால் இவ்வருடம் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 217 பில்லியன் ரூபாய் எனவும், ஜூன் மாதம் வரை 72.985 பில்லியன் ரூபாய் மாத்திரமே வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் சுட்…

    • 2 replies
    • 273 views
  8. பட மூலாதாரம்,HANDOUT ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புத்தளம் - வென்னப்புவ பகுதியில் வாழும் 25 வயதான இளைஞரே சுபுன். ருமேனியாவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நிறுவனம் ஒன்றின் ஊடாக அவர் விண்ணப்பித்துள்ளார். ''இங்கிருந்து பயனில்லை. வெளிநாடு சென்று எவ்வளவானாலும் உழைக்க வேண்டும். இல்லையென்றால் முன்னேற முடியாது," என சுபுன் தெரிவிக்கின்றார். இத்தாலி செல்லும் நோக்கத்திற்காகவே, அவர் ருமேனியா செல்லும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். நீர்கொழும்பு முதல் சிலாபம் வரையான கரையோர பிரதேசம் மற்றும் அதை அண்மித்த பகுதிகளில் வாழ்வோரில் அதிகளவானோர் இத்தாலியில…

  9. தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாஸன் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை! இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும் நீண்டகாலமாக புதிய மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் அரசியல் கைதியுமான 66 வயதுடைய கனகசபை தேவதாசன் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். புறக்கோட்டை ரயில் நிலையத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலின் போது, விடுதலை புலிகள் உறுப்பினருக்கு ஆதரவு வழங்கியதாக கூறப்படும் கனகசபை தேவதாஸனுக்கு 2017 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பியசேன ரனசிங்க 20 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்திருந்தார். இதனைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கனகசப…

  10. இலங்கை, ஈரானுடன் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எண்ணெய்க்காக தேயிலையை வழங்கும் பண்டமாற்றுச் சேவையை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளது. ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை இதனைத் தெரிவித்துள்ளது. 2012இல் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்க்காக 2021இல் இந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. எனினும், கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட டொலர் தட்டுப்பாடு, பொருளாதாரத்தை மூழ்கடித்தமை காரணமாக இதன் நடைமுறை தாமதமானது. இந்தநிலையில், தற்போது ஈரான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் டொலர்களை நம்பாமல் வர்த்தகம் செய்யலாம் என்று இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார். இதன்படி, ஒவ்வொரு மாதமும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான தேய…

  11. 24 JUN, 2023 | 10:21 AM காணாமல்போனவர்களின் உறவினர்களை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளது. பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து இலங்கையின் மனித புதைகுழிகள் தொடர்பான புதிய அறிக்கையின் பிரதிகளை பெற்றுக்கொண்டனர் என தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/158460

  12. லைக்கா குழுமத்தின் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பில் அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து வலியுத்தல்! adminJune 21, 2023 லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரித்தானியாவில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார். யுத்தத்தினால் நலிவடைந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்தி, ஆதரவற்றோரின் வாழ்வை வளப்படுத்தல், அரசியல் தீர்வு என்பன சமாந்தரமாக நகர்த்தப்படல் வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ள லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அது குறித்த தனது நிலைப்பாட்டை ஜனாதிபதியுடனான உரையாடலில் வலியுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் ஆளும் அரசாங்கமும், ஜனாதிபதியும் தமது நல்…

  13. வடக்கு மற்றும் கிழக்கு பௌத்த மேலாதிக்கம் தீவிரம்-வினோ எம்.பி June 23, 2023 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் பௌத்த மேலாதிக்கம் தீவிரமடைந்துள்ளது. தென்னிலங்கையில் ஆதிக்கம் கொள்வதற்காக ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இனவாதத்தை பேசி திரிகிறார்கள். இவர்களை அடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரத்தில் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ள நிலையில் அதற்கு அப்பாற்பட்ட வகையில் பௌத்த மேலாதிக்கம் செயற்படுவதால் நீதி கட்டமைப்பின் மீது சந்தேகம் எழுந்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோரதராதலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஜனாதிப…

    • 2 replies
    • 347 views
  14. இரு வைத்தியர்களுக்கிடையே மோதல்: ஒருவர் படுகாயம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அதே வைத்தியசாலையில் சிகிக்சை பெற்றுவருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடமையின் போது குறித்த இரு வைத்தியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கமே இம்மோதல் உருவாவதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது. https://athavannews.com/2023/1335670

  15. உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் : நாடாளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல்! நாட்டில் தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் அதிகளவில் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இப்பிரச்சினை தொடர்பாக கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையலேயே கல்வி அமைச்சரிடம் இதனை வலியுறுத்தினார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தொரிவிக்கையில், “நிறைவடைந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்கள். ஆகவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண கல்வி …

  16. மனித புதைகுழிகள் குறித்த விசாரணைகள்: கோட்டாபய காவல்துறை ஆவணங்களை அழிக்க உத்தரவிட்டார் -புதிய அறிக்கையில் குற்றச்சாட்டு June 23, 2023 ஜே.வி.பி கிளர்ச்சி காலத்தின் பாரிய மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை குழப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொலிஸ் ஆவணங்களை மாற்றினார் என்ற குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. கொழும்பில் நேற்று வெளியான ITJP யின் அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது ஜே.வி.பி. காலத்தில் தான் பணியாற்றிய பகுதிகளில் பலர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை குழப்புவதற்காக கோட்டாபய ராஜபக்ச காவல்துறை ஆவணங்களில் மாற்றங்களை செய்து உண்மையை மறைக்க முயன்றார் என வெளியாகியுள்ள புதிய அறிக…

  17. கடன் நெருக்கடியைத் தீர்க்க விரிவான மூலோபாய திட்டம்! செய்திகள் Share This : இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தின் ஒத்துழைப்புடன், நாடு தற்போது எதிர்கொள்ளும் கடன் சுமையைத் தீர்ப்பதற்கான விரிவான மூலோபாயத் திட்டத்தை வகுப்பதாகவும் கடன் மறுசீரமைப்பு ஒரு பிரதான முன்னுரிமையாக இருந்தாலும், முக்கியமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை நிறைவு செய்வதிலேயே முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். …

  18. யாழில் உள்ள பெண்கள் பாடசாலை அதிபருக்கு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பணிப்புரை 23 Jun, 2023 | 10:28 AM யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாடசாலைகளில் வகுப்பு ரீதியாக வட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு மாணவிகளின் பெற்றோரின் கைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்டு, வகுப்பு ஆசிரியைகளால் கையாளப்பட வேண்டும் என்றும், மாணவிகள் தொடர்பான அவதானிப்புக்கள் அதில் பதிவிடப்பட வேண்டும் என்றும் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தினால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயதினர் தொடர்பான குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மாணவிகள் பாடசாலை…

  19. Published By: VISHNU 21 JUN, 2023 | 10:21 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) பொறுப்புக் கூறல் விவகாரத்தில் இலங்கை மந்தகரமாகவே செயற்படுகிறது. சுதந்திரமான விசாரணை முன்னெடுக்கப்படுவது சந்தேகத்துக்குரியது என்பதை உலக நாடுகள் இன்று ஏற்றுக்கொண்டுள்ளன. உள்ளக விசாரணையில் ஒருபோதும் நீதி கிடைக்காது என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் …

  20. Published By: VISHNU 22 JUN, 2023 | 04:00 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை மின்சார சபை இன்றளவில் அரச வங்கிகளுக்கு 516 பில்லியன் ரூபா கடனாளியாக உள்ளது. ஆகவே மின்சார சபையை மறுசீரமைப்பதை தவிர மாற்று வழியேதும் கிடையாது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அவுஸ்ரேலிய நிறுவனத்தக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் குறிப்பிடும் விடயம் அடிப்படையற்றது. நீர் மின் உற்பத்தி நிலையங்களை ஒரு நிறுவன கட்டமைப்பின் கீழ் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற அமர்வில் வா…

  21. Published By: RAJEEBAN 22 JUN, 2023 | 10:36 AM இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மைக்ரோன் சந்திக்கும்போது 2006 ம் ஆண்டு இலங்கையின் அக்ஷன் பார்ம் அரசசார்பற்ற அமைப்பின் பணியாளர்கள் கொல்லப்பட்டமைக்கு பொறுப்புக்கூறப்படவேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள் விடுக்கவேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். 2006ம் ஆண்டு பிரான்சை சேர்ந்த அக்ஷன்பார்ம் அரசசார்பற்ற அமைப்பின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் இந்தவே…

  22. இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வரவேற்ற ஐ.நா! நாட்டின் அரசமைப்புக்கு இணங்க, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை ஐ.நா. அமர்வில் சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், நேற்று மூன்றாம் நாள் அமர்வில் ஐ.நா. மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தனது வாய்மொழிமூல அறிக்கையை வாசித்தார். அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வத…

    • 1 reply
    • 266 views
  23. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளால் நோயாளிகள் உயிரிழப்பு - மருந்துகளின் தரம் குறித்து ஆராய்கின்றது சுகாதார அமைச்சு Published By: Rajeeban 19 Jun, 2023 | 11:49 AM இலங்கையில் சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட இரு மருந்துகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்திய பலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ள நிலையிலேயே அந்த மருந்துகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது என அமைச்சின் செயலாளர் ஜனக சிறீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார். …

    • 13 replies
    • 768 views
  24. புளொட் அமைப்பின் உறுப்பினருக்கு மரணதண்டனை : நீதிபதி இளஞ்செழியன் அதிரடித்தீர்ப்பு! வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட எதிரிக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில் சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. …

  25. இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தக் கூடாது : விமல் வீரவன்ச! நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைக்கு காரணமான தரப்பினரால், அதனை மீட்டெடுக்க ஒருபோதும் முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கடந்த நல்லாட்சி காலத்தில்தான் மத்திய வங்கி பிணை முறி மோசடி மேற்கொள்ளப்பட்டது. இவர்தான் நாட்டின் பிரச்சினையை ஏற்படுத்திய பிரதான நபர். நாட்டில் இவரால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரப் பிரச்சினையானது, கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில் தீவிரமடைந்தது. இதனை நாம் சுட்டிக்காட்டியபோதுதான…

    • 8 replies
    • 720 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.