ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
தமிழக மக்கள் தாமாக விரும்பி தமது ஆதரவுகளை தாயக போராட்டத்துக்கு கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். தாயகத்தில போராளிகள் உயிர்களைத் தியாகம் செய்து போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால்... புலம்பெயர் விசுக்கோத்துக்கள் என்ன செய்துகொண்டு இருக்கின்றார்கள்? மோட்டுத்தனமான முறையில் - எழுந்தமான முறையில் அறிக்கைகளை தயாரித்து புலம்பெயர் மக்களிடம் விநியோகம் செய்து வருகின்றார்கள். அண்மையில் சுவிஸில் மோட்டுத்தனமான முறையில் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம் (மேலே படம்) சிறீ லங்கா அரசுக்கு பிரச்சாரத்துக்கு பயன்பட்டது. இதுபோல... பலப்பல செயல்களை உணர்ச்சிவசப்பட்டு.. திட்டமிட்டு ஆராயாமல் திடீர் திடீர் என்று செய்து வருகின்றார்கள்... இதற்கு ஒரு உதாரணமாக... அஜித் பட புறக்கணிப்பை சொல…
-
- 61 replies
- 7.6k views
-
-
கிளிநொச்சியைக் கைப்பற்றும் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிறீலங்காப் படையினர் இப்போது இரவு பகலாக அச்சத்துடன் காணப்படுகின்றமையினை அவதானிக்க முடிகிறது. எப்போதும் விடுதலைப் புலிகள் ஒரு வலிந்த தாக்குதலை தங்கள் மீது மேற்கொள்ளலாம் கரும்புலிகள் திடீரென பாயலாம் என்கிற அச்சமும் எதிர்பார்ப்பும் தற்போது படையினர் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகிறது என விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இ.இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார். நேற்று முன்தினம் விசுவமடுவில் நடைபெற்ற அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் அதியுயர் பாதுகாப்பு வியூகத்தினுள் புகுந்து எல்லாளன் படை நடவடிக்கையினை வெற்றிகரமாக மேற்கொண்டு தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த 21 சிறப்புக் கரும்புலிகளின் ஓராண்டு நினைவு நிகழ்வில…
-
- 1 reply
- 1.7k views
-
-
குரல்வழிச்செய்தி இணைப்பு - தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான சீமான் சற்றுமுன்னர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று தமிழகம் முழுவதும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய சமயத்திலேயே, வீட்டில் வைத்து இக்கைது நடைபெற்றிருப்பதாக அறியமுடிகிறது. சீமான், மற்றும் அமீர் ஆகியோரின் கைதை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் உள்ள அணைத்து திரையரங்குகளும் மூடப்படவுள்ளதாகவும், திரைப்படக்காட்சிகள் அணைத்தும் ரத்தாகும் எனவும் அறியமுடிகிறது! நாளை காலை 9 மணியளவில், avm studio விற்கு முன்னால் திரையுலகக்கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தப்போவதாகவும் தெரிவிக்கப்ப்டுகிறது…
-
- 0 replies
- 2.2k views
-
-
சிங்கள வெறியன் இராசபட்சேவுடன் கூட்டுச் சேர்ந்து தமிழினத்தைக்கொன்று குவிக்கும் அமெரிக்கக் கைக்கூலி மன்மோகன்சிங்கைக் கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் திருப்பூர் வெள்ளியங்காடு நான்கு சாலை சந்திப்பில் 24-10-2008 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் தோழர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெரியார்திராவிடர் கழகம் சார்பில் அங்ககுமார்,தென்மொழி துரையரசனார்,விடுதலைச்சிறுத்
-
- 0 replies
- 875 views
-
-
இன்று காலை பொன்னேரியில் 11 மணியளவில் சிங்கள அரசுக்கு உதவிபுரியும் மன்மோகன் சிங்கை கண்டித்தும் இந்திய அரசைக்கண்டித்தும் புரட்சிகர இளைஞர் முன்னணி , புரட்சிகர தொழிலாளர் முன்னணி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி தோழர்கள் 300 க்கு மேற்பட்டோர் பெருந்திரளாக திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். - அசுரன் http://www.tamilseythi.com/tamilnaadu/ponn...2008-10-24.html
-
- 0 replies
- 778 views
-
-
இன்று முதல் அஜித் மற்றும் அர்ஜூன் திரைப்படங்களை நாம் புரக்கணிப்போம் என ஜெனீவா வாழ் தமிழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களினால் விடப்பட்ட முழுமையான வேண்டுகோள்.... அன்பான தமிழ் மக்களே... இன்று முதல் அஜித்,அர்ஜூன் திரைப்படங்களை நாம் புரக்கணிப்போம். எமது மக்கள் படும் இன்னல்களையும் துன்பங்களையும் அவர்கள் அலட்சிய படுத்தி உண்ணா நிலை போராட்டமெல்லாம் எதற்காக என்று கூறியுள்ளார்கள். இப்படி பட்டவர்களுக்கு நாம் இனியும் ஆதரவு வளங்க கூடாது. அன்பார்ந்த ரசிகர்களே,இனியாவது நீங்கள் கொஞ்சம் சிந்தித்து செயல் படுங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழீழம். இப்படிக்கு ஜெனீவா வாழ் தமிழ் மக்கள் http://www.tamilseythi.com/tamilar/ajith-a...2008-10-24.html
-
- 26 replies
- 8.1k views
-
-
மனித சங்கிலியில் ஒலித்த குரல்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி : ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்காக மாணவர்கள் கொட்டும் மழையிலும் அணிதிரண்டு நிற்கிறார்கள். ஆதற்கு பலன் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம். முதல்வரின் அழைப்பை எற்று தமிழகமே ஒன்று திரண்டு நிற்கிறது. எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் : தமிழத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இலங்கை தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக, சிங்கள அரசினுடைய கொடுமையை தடுப்பதற்காக இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக மனித சங்கிலி என்கிற அறப்போர் கொட்டும் மழையில் நடைபெற்றுள்ளது. புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி : இலங்கையில் லட்சக்கணக்கான மக்கள் அன்றாடம் சிங்கள ராணுவத்தின் வெறிதாக்குதலுக்கு ஆளாகி …
-
- 1 reply
- 1.4k views
-
-
நாச்சிக்குடா- புத்துவெட்டுவான் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 47 படையினர் பலி- 87 பேர் காயம் [வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2008, 08:13 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] நாச்சிக்குடா தொடக்கம் புத்துவெட்டுவான் வரையிலான களமுனைகளில் சிறிலங்கா படையினர் பாரியளவில் மேற்கொண்ட நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 47 படையினர் கொல்லப்பட்டனர். 87 பேர் காயமடைந்துள்ளனர். சிறிலங்கா படையினர் செறிவான ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதல்களையும் கனரக சுடுகலன் தாக்குதல்களையும் நடத்தியவாறு நாச்சிக்குடா, வன்னேரி, அக்கராயன், புத்துவெட்டுவான் பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இவற்றினை விடுதலைப் புலிகள் முறியடித்தனர். இவற்றில் படைத்தரப்புக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
தற்போது வந்த செய்தி:தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான சீமான் எந்நேரமும் கைது செய்யப்படலாம். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டின் முகன்னால் செய்தி அறிந்த திரைப்பட இயக்குனர்கள், துறைசார்கலைஞர்கள், ஆதரவாளர்கள் பெருமளவில் குழுமியுள்ளதாக, அங்கிருந்து எமது செய்தியாளர் அறியத்தருகின்றார். ஊடகவியலாளர்கள் , காவற்துறைசார்ந்தோரும் குழுமியுள்ளதாகவும், தற்போது சீமான் வீட்டில் இல்லை. வெளியே சென்றுள்ள அவர் வீடு திரும்பும் சமயத்தில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், . இயககுனர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, இராம.நாராயணன் ஆகியோரும், ஏராளமான சினிமாத்துறைசார்ந்தோரும் குழுமியுள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவிக்கின்றார்.ராமேஸ்வரம் கூட்டத்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் நாங்கள் எக்காரணம் கொண்டும் பின் வாங்க போவதில்லை. ஈழத் தமிழர்களுக்காக என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் கூறியுள்ளார். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக மதிமுக அவைத் தலைவரும் எம்எல்ஏவுமான கண்ணப்பன் பொள்ளாச்சி அருகே உள்ள ஆலாம்பாளையத்தில் கைது செய்யப்பட்டார். அப்போது கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கையில் நடக்கும் தமிழின படுகொலையை பற்றி விளக்குவதற்காக மதிமுக சார்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கில் வைகோவும் நானும் பேசினோம். அதற்காக எங்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். விடுதலை புலிகளுக்கு தார்மிக ஆதரவு தருவது தவறில்லை. ஆயுதம் தந்தாலு…
-
- 0 replies
- 673 views
-
-
வீரகேசரி இணையம் 10/24/2008 12:51:45 PM - தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் நபர்களைக் கைது செய்யாமல், வேண்டுமென்றே வைகோவையும் கண்ணப்பனையும் கைது செய்துள்ள முதல்வர் கருணாநிதியைக் கைது செய்யுங்கள், என மத்திய அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற திரைப்படத் துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இந்திய இறையாண்மைக்கு விரோதமான கருத்துக்களைத் தெரிவித்த இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், அமீர், ராம.நாராயணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளத…
-
- 0 replies
- 752 views
-
-
ஈழத் தமிழர் விவகாரம் : கேடு கெட்ட அரசியலுக்கு நிகழ்காலமொரு சாட்சி Posted by நந்தாOctober 24, 2008 உச்சகட்ட வெறுப்பாய் இருக்கின்றது. கண்முன்னே பரந்து கிடக்கும் கையாலாகாத்தனம் வாழ்வின் இருப்பை கேலி செய்துக் கொண்டிருக்கிறது. எவரைத்தான் நம்புவது எனும் கேள்வி ஒன்று மனதினுள் தொடர்ந்து ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாய் எல்லா பிரச்சினைகளுக்கும் பதிலாய் ஒரே ஒரு பதிவு போடுவதோடு நின்று போய்விடுகிறோமே(னே) என்ற எண்ணம் என்னை ஓர் குற்றவாளியாய் நிறுத்தி வைத்திருக்கின்றது. அரசியல் சதுரங்கக் காய் நகர்த்தல்கள், ராஜதந்திரம், சாணக்கியத்தனம் இன்னும் எத்தனை எத்தனையோ அரிதாரங்கள் பூசிய வார்த்தைகளின் பின்னே கலைஞரின் செயல்கள் மீண்டும் ஒரு முறை விவாதிக்கப் பட்…
-
- 1 reply
- 1k views
-
-
சற்று நேரத்திற்கு முன்பாக தமிழகத்தில் இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கிடைக்கின்றன. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
-
- 40 replies
- 5.2k views
-
-
image: dailymirror.lk இலங்கையில் இருந்து தமிழினத்தை அழிக்க வேண்டும் அல்லது அதனை அடக்கி ஆள வேண்டும் என்பதுடன், இலங்கையை பெளத்த சிங்கள சிறீலங்காவாக கட்டி எழுப்ப வேண்டும் என்பதில்.. எல்லா சிங்கள பெளத்த பேரினவாதக் கட்சிகளும் கொள்கை வேறுபாடுகள் கடந்து ஒன்றித்துப் பயணிப்பதை.. இப்படம் தத்துரூபமாக இனங்காட்டி நிற்கிறது. ஆனால் சிங்களவனால் அழிக்கப்படும் தமிழனோ.. பிச்சைக் காசுக்கும்.. பதவிக்கும் அடிபணிந்து.. தமது மக்களின் குருதியால்.. உயிரால் கட்டி வளர்க்கப்பட்ட உரிமைப் போராட்டத்தையே காட்டிக் கொடுத்துப் பிழைக்கும் துரோகத்தை எவ்வித தயக்கமும் இன்றிச் செய்ய மட்டும் துணிகின்றானே.. எப்படி தமிழனுக்குள் மட்டும் இப்படி ஓர் இழிசிந்தனை...??! சுதந்திரக் கட்சியும்.. ஐக்கிய தேசியக்…
-
- 4 replies
- 2.3k views
-
-
இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாம் திகதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளளது. இதில் நடிகர் நடிகைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு ரஜினி, கமல் உட்பட அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் சங்கம் கடிதங்கள் அனுப்பி வருகிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள். உண்ணாவிரதத…
-
- 39 replies
- 6.7k views
- 1 follower
-
-
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் இன்று மாணவர்கள் வகுப்புகளை ப்புறக்கணித்து விட்டு இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசைக்கண்டித்தும் ,அதற்கு ஆயுத உதவி செய்யும் இந்தியாவை கண்டித்தும், அல்லல் படும் ஈழத்தமிழ் மக்களுக்கு உண்வு, மருந்து ஆகியன தொண்டு நிறுவனக்கள் மூலமாக நேரடியாக வழங்கவும் ஐ. நா அலுவலகங்களை ஈழத்தில் திறக்கவும் வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
-
- 0 replies
- 808 views
-
-
இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதிகள் திரளாக தமிழகத்தில் சரணடைந்து வருவதாகவும் இந்த நிலைமையை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ குறிப்பிட்டுள்ளார். அரச படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக சிக்கியுள்ள அகதிகளின் இன்றியமையாத தேவைகளை பூர்த்தி செய்ய இலங்கை அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், அதிக எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் சரணடைவதாகவும், இந்த நிலைமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ராஜ்யசபாவில் நடைபெற்ற விவாதமொன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிராந்தியத்தில் உள்ள அயல் நாடுகளின் …
-
- 0 replies
- 909 views
-
-
புதுடெல்லி தமிழக முதல்வர் கருணாநிதியை கைது செய்ய வலியுறுத்தி மாநிலங்களவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் இன்று வெளிநடப்பு செய்தனர். இன்று காலை வழக்கம்போல் மாநிலங்களவை கூடியதும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக முதல்வர் கருணாநிதி செயல்பட்டது குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் கோரினர். ஆனால், அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி இதற்கு அனுமதி அளிக்க மறுத்தார்.தற்போது கேள்வி நேரம் நடைபெறவுள்ளதால், உறுப்பினர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக, அவர் சொன்னார். அப்போது 'தமிழக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் கருணாநிதியை கைது செய்ய வேண்டும்' என்று அதிமுக உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.இதற்கு பதிலடியாக திமுக உறுப்பினர்களும் கோஷம் போட்டனர்…
-
- 0 replies
- 905 views
-
-
சென்னை: பலத்த மழையையும் பொருட்படுத்தாமல், இலங்கை இனப் படுகொலையைக் கண்டித்து சென்னையில் இன்று மாலை பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டம் தொடங்கியது. முதல்வர் கருணாநிதி மனித சங்கிலிப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பதைக் கண்டித்து இன்று மாலை 3 மணியளவில் சென்னையில் பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை நகரில் திமுகவினரும், பல்வேறு கூட்டணிக் கட்சிகள், தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குவிந்தனர். மனித சங்கிலிப் போராட்டம் தொடங்கவிருந்த நிலையில், வானம் இருண்டு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இருப்பினும் கன மழையைப் பொருட்படு…
-
- 25 replies
- 5.8k views
-
-
தமிழின எதிரி சுப்பிரமணியசாமி வீடு சூறை மதுரையில் இன்று மதியம் 2 மணியளவில் தமிழின எதிரி பார்ப்பான் சுப்பிரமணியசாமி யின் வீட்டின் மீது தமிழ்நாடு மாணவர்கழக சட்டக்கல்லூரி மாணவர்களும் தமிழின உணர்வாளர்களும் தாக்குதல். மாணவர்களும் தமிழின உணர்வாளும் கைது. Posted by பெரியார் பாசறை at 3:38 AM நன்றி http://periyaarpaasarai.blogspot.com/2008/...og-post_24.html
-
- 19 replies
- 2.5k views
-
-
-
- 1 reply
- 1.7k views
-
-
முகவரியில்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் இக்குறும்படம் பிறந்த மண்ணில் முகவரி துறந்து அகதிகளாய் துன்பக்காற்றையே சுவாசித்துக் கொண்டு பாதுகாப்பான இடம் தேடி அலையும் ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை எடுத்துக் கூறுகிறது. வண்டிகளில் அள்ளிப் போடப்படும் பிணங்கள், குண்டு வெடித்த புகையினூடே கேட்கும் அலறல்கள், அகப்பட்டதை வாரிக்கொண்டு இடம் பெயரும் குடும்பங்கள், படுகாயமுற்று சிகிச்சை வசதிகளற்று படுத்திருக்கும் பச்சிளம் குழந்தைகள், தமிழ்நாட்டிடம் உதவிகேட்கும் மக்கள்...... இந்தப்படம் தொலைக்காட்சியிலும், சினிமாவிலும் நேரத்தைக் கொடுத்திருக்கும் தமிழ் மனங்களின் மனசாட்சியை தொட்டு எழுப்ப முயல்கிறது. எங்களுக்கு உங்களை விட்டால் உதவுதற்கு வேறு யார் இருக்கிறார்கள் என்று கேட்கிறது. ஆனால…
-
- 0 replies
- 1.3k views
-
-
இனத்துரோகிகளின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்காதீர்கள்: விடுதலைப் புலிகள் வேண்டுகோள் [வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2008, 02:06 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மகிந்தவின் பேரினவாத அரசு போடும் நாடகங்களை எமது மக்களை வைத்து அரங்கேற்றி உலகிற்கு தமிழரின் உரிமைப் போராட்டத்தை அர்த்தமற்றதாக்கும் வகையில் இனத்துரோகிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறை இன்று வெள்ளிக்கிழமை "மட்டக்களப்பு வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!" எனும் தலைப்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் மக்களின் தலைவிதியை நிர்…
-
- 0 replies
- 930 views
-
-
முன்னர் பிரபாகரனுடன் மட்டும் போராட வேண்டியிருந்தது, தற்போது கருணாநிதியுடனும் போராட வேண்டி இருப்பதாக, 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார் தற்போது கருணாநிதியுடனும் போராட வேண்டி ஏற்பட்டிருக்கும் சூழ்நிலைக்கு மத்தியிலேயே, ஆசிரியர் சேவை சம்பள முரண்பாடுகளை தீர்க்க இவ்வாறான பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும் கூறினார். 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 300 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இதுவரை 65 சதவீதமான பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டதுடன் அவற்றை பாடசாலைகளுக்கும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கும் விநியோகிக்கும் பணிகளும் ந…
-
- 0 replies
- 1.5k views
-
-
வை.கோ. திருமாவளவன், சீமான், அமீர், கண்ணப்பன் உள்பட பிரிவினையை தூண்டிவிடும் நோக்கத்தோடு தமிழக மக்களிடம் பிரச்சாரம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் 150 - சட்டக் கல்லூரி மாணவர்கள் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டுள்ளனர். மதியம் 2 - மணியளவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பிய போது தூதரக அலுவலக அதிகாரி ஒருவர் மாணவர்களை நோக்கி இழிவாக பேசியதால் தூதரக இரும்பு வாயிலை உடைத்து மாணவர்கள் உட்புகுந்து கற்களால் தாக்கியதால் அலுவலகத்திற்கு பெரும்சேதம் ஏற்பட்டது. அப்பொழுது வந்த காவல்துறையினர் மாணவர்களை நோக்கி துவக்கினால் சுடுவதற்கு தயாரானார்கள், வானத்தை நோக்கி இருமுறை துவக்கினால் சுட்டார்கள். மாணவர்கள் மதில் சுவரை தாண்டி ஏறி…
-
- 1 reply
- 1.4k views
-