ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143410 topics in this forum
-
http://img264.imageshack.us/my.php?image=vannimakkalpl1.jpg நன்றி : தினக்குரல்
-
- 0 replies
- 770 views
-
-
மஹிந்தவின் விசேட பிரதிநிதியாக இந்தியாவிற்குச் செல்லும் குழுவில் நான் இடம் பெற மாட்டேன். என சங்கரி தெரிவித்துள்ளார். இலங்கை விடயங்கள் குறித்த உண்மைகளைத் தெளிவு படுத்துவதற்காவும், இலங்கை தொடர்பாக இந்தியா வெளியிட்டுள்ள கவலைகளைப் போக்குவதற்காகவும், தமது விசேட பிரதிநிதி ஒருவரை விரைவில் புதுடில்லிக்கு அனுப்பவுள்ளதாக மஹிந்த இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். எனினும் தற்போது ஏழு பேர் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்று இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தற்போதைய நிலவரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழ் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்கிய குழுவொன்றை அடுத்த சில தினங்களில் இந்தியாவிற்கு அனுப்புவதற்காக நடவடிக்கைகளை …
-
- 0 replies
- 909 views
-
-
'த.தே.கூட்டமைப்பு நாhடளுன்று உறுப்பனர்கள் துப்பாக்கிப் பலத்தில் நடாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவில்லை. மக்கள் பலத்தினால் தமிழ் தேசியப்பற்றினால் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டோம்.' என்று மட்டு. மாவட்ட பா.உ பாக்கியசெல்வம் அரியநேத்திரன் குறிப்பிட்டார் ஜாதிக ஹெல உறுமையவின் சம்பிக்க ரணவக்க, த.தே.கூட்டமைப்பு பா.உக்கள் துப்பாக்கி பலத்தின் மூலம் நாடாளுன்று உறுப்பினர்களாக வந்தனர் என்ற கூற்றிற்கு பதிலளிக்கு முகமாகவே அரியநேத்திரன் மேற்கண்டவாறு கூறினார். த.தே.கூட்டமைப்பு பா.உக்களை கைது செய்யப்படுவதை இட்டு கவலை அடையவோ, அச்சம் அடையவோ போவதில்லை. சம்பிகவின் சலசலப்பிற்கு அடங்கி விட நாம் மண் பொம்மைகள் அல்ல. இனப்பற்றுடனும், மொழிப்பற்றுடனும், மண்பற்று…
-
- 0 replies
- 650 views
-
-
தமிழகத்து மக்கள் எல்லோருமே எழுச்சி கொள்ளும் வகையில் நீங்கள் எழுந்து நிற்பதை நன்றியோடு பார்க்கின்றோம் என தமிழக மாணவ உறவுகளுக்கு தாயகத்தில் உள்ள தமிழ் மாணவர் ஒன்றியம் நன்றி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 653 views
-
-
ஆயுததாரி முதலமைச்சர் பிள்ளையானின் காரியாலயம் கருணா குழுவால் சூரையாடல் மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் இயங்கிவந்த கூலிக்குழு முதலமைச்சர் பிள்ளையானின் காரியாலயம் இன்று கருணா குழு கூலிப்படையால் முற்றுகையிடப்பட்டுச் சூரையாடப்பட்டது. இதன்போது அங்கிருந்த பிள்ளையான் ஆயுதக்குழுவின் 13 பேர் கருணா குழுவால் சிறைப்பிடிக்கப்பட்டதோடு அவர்களிடமிருந்த டி - 56 ரக தானியங்கித் துப்பாக்கிகளும் தாக்குதல் நடத்தியவர்களால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. நன்றி தமிழ்நெட். கிழக்கு நல்லாத்தான் வெளிக்குதுபோல !?
-
- 16 replies
- 3.2k views
-
-
பூநகரியில் சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணி கிளைமோர் தாக்குதல்: அப்பாவி பொதுமகன் பலி; இருவர் காயம் [ஞாயிற்றுக்கிழமை, 19 ஒக்ரோபர் 2008, 06:14 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்தில் உள்ள வலைப்பாட்டில் சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர் தாக்குதலில் அப்பாவி பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர். வலைப்பாட்டு பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் உழுவூர்தியில் சென்றுகொண்டிருந்த பொதுமக்களை இலக்கு வைத்து ஆழ ஊடுருவும் அணி இக்கிளைமோர் தாக்குதலை நடத்தியது. இதில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டார். இருவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிறுவனும் பெண்ணும் ஆவர். கிளிநொச்சி நகரில்…
-
- 0 replies
- 555 views
-
-
42 நாடுகளிலே கிளை பரப்பிப் பணி செய்யும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தினர் ஈழத்தமிழரின் விடுதலைக்காக உழைக்கும் வைகோவிற்குத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றார்கள். பேரன்பிற்குரிய மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் உயர்திரு வை. கோபாலசாமி அவர்கள் தமிழ்நாடு இந்தியா. வணக்கம். நலமுடன் வாழ்க பல்லாண்டு. ஈழத்தவரின் நல்வாழ்வே தங்கள் வாழ்வின் இலட்சியம் என வாழும் தங்களுக்கு இன்றைய எமது நிலைபற்றி விபரமாக எழுத வேண்டியதில்லை. தமிழீழம் மலரவுள்ள நேரம். எதிரிகளும் முழுமூச்சாக இயங்குகின்றனர். இந்தியா உட்படப் பல உலக நாடுகள் கபட நாடகம் ஆடுகின்றனர். இரட்டை வேடம் போட்டு நடிக்கின்றனர். இந்திய நடுவண் அரசினருடைய இரட்டை வேடத்தைக் கலைக்கவும் அவர்களை நெறிப்ப…
-
- 0 replies
- 688 views
-
-
ஜேர்மனியப் படைகளுக்கு ரஷ்யாவில் நேர்ந்த நிலை வன்னியில் சிறீலங்காப் படைக்கு நேரலாம் திகதி: 18.10.2008 // தமிழீழம் // [] ஜேர்மனின் சர்வாதிகாரி கிட்லரது படையினரால் 872 நாட்கள் சிறைவைக்கப்பட்டிருந்த ரஷ்ய படைகள் திடீரென தாக்குதல்களை மேற்கொண்டு வெற்றி கண்டதனைப் போன்று, தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறீலங்கா இராணுவத்தின் மீது அதிர்ச்சித் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். கேணல் ஹரிஹரன் இலங்கையில் இந்திய இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த காலத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கிளிநொச்சி நகரிலும் பணியாற்றியிருந்த இவர், கிளிநொச்சியில் விமான மூலம் தாக்குதல் நடத்தி அந்நகரைக் கைப்பற்றுவதென்பது…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரதமர் மன்மோகன் சிங்குடன் சிறீலங்கா அதிபர் தொலைபேசியில் பேச்சு திகதி: 18.10.2008 // தமிழீழம் // [சோழன்] சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று சனிக்கிழமை மாலை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இத்தகவலை இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர மேனன் உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழக கொங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுக்களின் போது தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு மகிந்த ராஜபக்சவிடம், பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்போது இந்தியாவில் குறிப்பாக தமிழர்களிடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்பைக் குறிப்பிட்டு, உடனடியாக இராணுவத் தாக்குதலை நிறுத்தும…
-
- 1 reply
- 969 views
-
-
வீரகேசரி நாளேடு எமது படையினர் கிளிநொச்சியினைக் கைப்பற்றுவதற்கு இன்னமும் 48 மணி நேரமே உள்ளது. இந்த நிலையில் இந்தியா அல்ல எந்தவொரு நாட்டினதும் அழுத்தத்திற்கு அடிபணிந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தினை அரசாங்கம் கைவிடக் கூடாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் நரேந்திர குணதிலக தெரிவித்தார். கருணாநிதி ஜெயலலிதா கூட்டணி தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை. தேர்தலுக்கான நாடகத்தையே அரங்கேற்றுகின்றனர். வைகோ கூட்டணி பிரபாகரனின் தோல்வியைத் தாங்க முடியாது தவிக்கின்றது என்றும் அவர் கூறினார். இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறி வருவது தொடர்பில் கருத்து கேட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து நரேந்திர குணதிலக மேலும் கூறி…
-
- 8 replies
- 1.9k views
-
-
விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அராங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க மத்தியஸ்தம் வகிக்க தாம் தயாராக உள்ளதாக வாழும் கலை நிறுவனத்தின் ஸ்தாபகரும், உலகின் முன்னணி ஆன்மீகத் தலைவர்களில் ஒருவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ ரீதியான முன்நகர்வுகளினால் ஒருபோதும் இலங்கைப் பிரச்சினையை தீர்க்க முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பேச்சுவர்hத்தைகளை மேற்கொள்வது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கடந்த மூன்று வருட காலமாக அழைப்பு விடுப்பதகாவும் அதற்கு உரிய பதில் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு…
-
- 1 reply
- 1.6k views
-
-
'இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றும் விஷயத்தில் மத்திய அரசு கண்டிப்பு காட்டாவிட்டால், தமிழக எம்.பி-க்கள் அனைவரும் ராஜினாமா செய்வது' என்ற முடிவை முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்ததற்கு மூலக் காரணமே மூன்று முக்கியப் புள்ளிகள்தான். மேலும், கூட்டம் முடிந்ததிலிருந்தே இவர்கள் தி.மு.க-வுக்கு எதிரான காய் நகர்த்தல்களையும் அதிவேகப்படுத்தி விட்டார்கள்! இந்தத் தகவல்தான் அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்த இரவிலிருந்தே பத்திரிகையாளர்களிடம் பரபரக்கப்பட்ட விஷயம். யார் அந்த மூவர் என நாம் விசாரித்தபோது, ''வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன்தான் அந்த மும்மூர்த்திகள். இந்த மூவரில் தா.பாண்டியன் மட்டும்தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டவர். கூட்ட அரங்கத்திலிரு…
-
- 5 replies
- 1.4k views
-
-
இன்னொரு நாட்டின் பிரச்சனையில் நாம் தலையிட முடியாது என்றால் வங்காளதேசம் எப்படி உருவானது என முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பினார். சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி கேள்வி: எம்பிக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார்கள். இதை மத்திய அரசு எப்படி எடுத்துக் கொள்ளும் என்று நினைக்கிறீர்கள்? கருணாநிதி: நாங்கள் எதிர்பார்த்ததைத்தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றினோம். அந்தத் தீர்மானத்தைத்தான் நிறைவேற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். கேள்வி: வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன், டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியை அழைத்து தனது கவலையை தெரிவித்திருக்கிறாரே? பிரதமரும் தனது கவலையை சொல்லி இருக்கிறாரே? கருணாநிதி: அது சரியானது…
-
- 0 replies
- 1.5k views
-
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பூரண ஆதரவு – ரஸ்யா பயங்கரவாத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்டும் போராட்டத்திற்கு ரஸ்ய அரசாங்கம் பூரண ஆதரவு வழங்கும் என உறுதியளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அண்மையில் ரஸ்யாவிற்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் அன்டோலி செர்டிக்யொவ் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து கோதபாய ராஜபக்ஷ உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் ரஸ்யாவிற்கு விஜயம் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை படையினருக்கு இராணுவ தொழில்நுட்பம் உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்க ரஸ்ய அரசாங்கம் உற…
-
- 0 replies
- 1.4k views
-
-
தாயக நிகழ்வுகள் தாங்கி வெளிவந்துவிட்டது "களத்தில்..." இறுவட்டு [சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2008, 10:17 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] தாயகத்தில் நிகழ்கின்ற போரியல், அரசியல், மக்களின் வாழ்வியல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தாங்கிய "களத்தில்..." காணொளி இறுவட்டு வெளிவந்துள்ளது. வெளிவந்திருக்கும் முதலாவது இறுவட்டில் இருவார நிகழ்வுகள் அடங்கிய காணொளி காட்சிகளுடன் கடந்த செப்ரெம்பர் மாதம் 9 ஆம் நாள் வவுனியா சிறிலங்கா படைத்தளம் மீது கரும்புலிகள் நடத்திய தாக்குதல் சிறப்பு பார்வையாக இடம்பெற்றுள்ளது. இந்த இறுவட்டு அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப் பிரிவின் வெளியீடாகும். இறுவட்டுக்களைப் பெற விரும்புவோர் அந்த அந்த நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பணிமனைக…
-
- 0 replies
- 1.2k views
-
-
http://vimbamkal.blogspot.com/2008/10/02.html
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் கொடூர தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரி இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில் மாணவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 898 views
-
-
எமக்காக தொடர்ந்து உரத்து குரல் கொடுங்கள்: அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்திடம் நோர்வே தமிழ் கல்விக்கூடங்கள் வேண்டுகோள் [சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2008, 07:15 பி.ப ஈழம்] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்] எமக்காக தொடர்ந்து உரத்து குரல் கொடுங்கள் என்று அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு பிரிவிடம் நோர்வேயில் உள்ள அனைத்து அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட வளாகங்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடர்பில் நோர்வேயில் உள்ள அனைத்து அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட வளாகங்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: திரு.திருமலை தமிழ்நாடு மாநில தலைவர் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் 16.10.2008 அன்புடையீர்! கடந்த புதன்கிழமை தாங்…
-
- 0 replies
- 586 views
-
-
விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் மோதல்களை நிறுத்துமாறு தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் கொடுத்துவரும் அழுத்தம் தொடர்பாக விளிப்புணர்வு ஏற்படுத்தும் பௌத்தர்கள் மாநாடொன்றை நடத்துவதற்குத் தீர்மானித்திருப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. தேசப்பற்றாளர்கள் அனைவரையும் இணைத்து இந்த மாநாட்டை நடத்த அக்கட்சி தீர்மானித்திருப்பதாகத் தெரியவருகிறது. சுதந்திர நாடொன்றின் இறைமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தமிழ் நாடு செயற்படுவது குறித்து கவனம் செலுத்தியிரு;பதாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டங்களுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பது பற்றியும் தமது கட்சி ஆராய்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார். அ…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் போர் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழகத்தில் அது தொடர்பாக பற்பல சரேல் திருப்பங்கள். முதலில் சி.பி.ஐ. கட்சி நடத்திய உண்ணாவிரதம். அதில் அ.தி.மு.க. தவிர்த்து பல முக்கிய கட்சிகள் முகம் காட்டின. அதைத் தொடர்ந்து மயிலை மாங்கொல்லையில் தி.மு.க. சார்பில் ஒரு பிரமாண்ட பொதுக்கூட்டம். அதன்பின் ம.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டம். அதையடுத்து தி.மு.க. அரசு சார்பில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் என ஏகப்பட்ட திடீர்த் திருப்பங்கள். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இருபத்தேழு கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தும், அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. போன்றவை அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ``இலங்கையில் இன…
-
- 0 replies
- 2k views
-
-
களமுனைக்கு வெளியே நகரும் போர்.-லண்டனிலிருந்து வன்னியன் சனி, 18 அக்டோபர் 2008, 05:40 மணி தமிழீழம் [] தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் போராட்டம் ஒரு இராணுவ நெருக்கடி மிகுந்த காலகட்டத்தினுள் பிரவேசிக்கின்ற போதோ அல்லது இனப்படுகொலை மிகத்தீவிரமடைகின்ற போதெல்லாம் ஈழத்தமிழினத்தையும் அவர்களது விடுதலைப் போராட்டத்தினையும் பாதுகாப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் உலகின் கவனத்தை ஈர்ப்பதற்கான வெகுஜனப் போராட்டங்களை நிகழ்த்தி ஒரு தற்காலிக சர்வதேச அழுத்தத்தினை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தி இனப்படுகொலையின் தீரத்தை தணிப்பதும் அது பின்னர் மறக்கப்படுவதும் வழக்கமாகியிருந்தது. ஆனால் கடந்தகாலங்களில் நிகழ்ந்த வெகுஜனப் போராட்டங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்ததைவி…
-
- 0 replies
- 1k views
-
-
என்ன விலை கொடுத்தேனும் ஈழத் தமிழர் படுகொலையை தடுப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 624 views
-
-
தமிழகத்தில் அரசியற் கட்சிகளைத் தொடர்ந்த பல்வேறு மட்டங்களிலும், ஈழத்தமிழரு்களுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் நேற்று 17.10.08 ல் தமிழ்நாடு வக்கீல்கள் , தங்கள் ஆதரவினை ஈழத்தமிழர்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், உயர்நீதிமன்றப்பணிகளைத் தவிர்த்து, நீதிமன்றுக்கு வெளியே நடாத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் அனைத்து தரப்பு வக்கீல்களும் கலந்து கொண்டார்கள். இவரகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் , திரு பழ.நெடுமாறன், தோழர், தியாகு. இயக்குனர் சீமான் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டார்கள். இது குறித்து அங்கிருந்து கிடைக்கப்பெற்ற செய்தியின் ஒலிவடிவம். உண்ணாநிலை போராட்டக் காட்சிகளின் தொகுப்பு http://www.4tamilmedia.com/index.php?optio...&Item…
-
- 0 replies
- 695 views
-
-
கிளிநொச்சிப் படையெடுப்பும் இறுதி யுத்தமும் திகதி: 17.10.2008 // தமிழீழம் // [] எழுதியவர்- ஜெயராஜ் கிளிநொச்சியில் இருந்து மக்கள் வேகமாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தவேளை ஒரு படைப்பிரதேச வாசி கூறினார் "பளையை விட்டு நாழும் இவ்வாறுதான் இடம்பெயர்ந்தோம். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் இராணுவம் பளையை வந்தடையவில்லை" கிளிநொச்சியின் நிலையும் அதேதான்" என்று. கிளிநொச்சி மீது சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா கிளிநொச்சிக்கான யுத்தப்பிரகடனம் செய்து சுமார் இரண்டு வாரகாலமாகின்றது. அதாவது கடந்தவாரம் ஆரம்பிப்பதற்கு முன்பாக கிளிநொச்சி மீது பாரிய தாக்குதலை ஆரம்பிக்கப்போவதாக அவர் கூறினார். ஆனால், கிளிநொச்சி நோக்கியதான நகர்வு அன்றி கிளிநொச்சி செல்வதற்கான மார்…
-
- 0 replies
- 1.2k views
-
-
காற்றில் கரையும் உயிர்கள்! மீண்டும் தமிழீழத் தகிப்பு தமிழகத்திலும் அனலாகப் பிரதிபலிக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் பதுங்கியிருக்கும் காட்டுக்குள் அப்பாவித் தமிழர்கள் தஞ்சம் அடைகிறார்கள். பொதுமக்களின் வாழ்விடங்கள், சிங்கள ராணுவ முகாம்களாக உருமாறுகின்றன. இதற்கிடையில் தமிழக மீனவர்களைத் துளைக்கத் தவறுவதில்லை சிங்கள ராணுவத்தினரின் தோட்டாக்கள். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத மத்திய அரசு, 'இனி, இந்திய மீனவர்கள் சுடப்பட மாட்டார்கள்!' என்று பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் மூலம் தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொள்கிறது. 'பிரபாகரன் இனி பதுங்கு குழிகளில் இருக்க முடியாது!' என்று சிங்கள ராணுவ அதிகாரி கொக்கரிக்கிறார். 'இலங்கை ராணுவம் இனி எங்களிடம் தஞ்சம் கேட்டு வரும்!' என்று ப…
-
- 0 replies
- 1.2k views
-