Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 5 22 APR, 2023 | 10:43 AM கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனையின் நுங்கு பருவகாலம் ஆரம்பமாகிவிட்டது. யாழ். செம்மணியில் வீதி, அரியாலை மற்றும் யாழ். நகர்மத்திய பகுதிகளிலும் நுங்கின் விற்பனை இன்று சூடுபிடித்து காணப்படுகிறது. அதிகரித்து காணப்படும் வெப்பநிலை காரணமாக உடல் சூட்டினை தணிப்பதற்காக இந்த நுங்கினை பல பயணிகள் எடுத்தும், உட்கொண்டும் வருகின்றனர் ஒரு நுங்கானது 100ரூபா முதல் 150ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதனை பலர் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. https://www.virakesari.lk/article/153460

  2. Published By: T. SARANYA 22 APR, 2023 | 10:55 AM (நா.தனுஜா) இலங்கை பொலிஸாரால் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு தீர்ப்பாயத்தின் 17 பேரங்கிய நீதியரசர் குழாம் இலங்கைக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. சுவிஸ்லாந்துக்குத் தப்பிச்செல்வதற்கு முன்னதாக இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரொருவர் சுமார் ஒருமாதகாலமாக கிரிக்கெட் துடுப்புமட்டையால் தாக்கப்பட்டமை, மின்சாரத்தாக்குதல், வன்புணர்வு என்பன உள்ளடங்கலாகப் பொலிஸாரால் மிகுந்த சித்திரவதைகளுக்க…

  3. கடும் வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு சுகாதார நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு சுகாதாரத் துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், அதிக உடற்பயிற்சி செய்பவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். அதிக வெப்பமான காலநிலையின் எதிர்மறையான உடல் விளைவுகளைக் குறைக்க எடுக்கக்கூடிய முக்கிய நடவடிக்கை, அதிக தண்ணீர் குடிப்பதாகும், மேலும் அதிக உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 2 முதல் 4 கிளாஸ் தண்ணீர் குடிப்பது பொருத்தமானது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. முடிந்தவரை வீட்டிற்குள் அல்…

  4. 21 APR, 2023 | 04:50 PM (இராஜதுரை ஹஷான்) பிறப்பு சான்றிதழ் பத்திரம் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதை அண்மித்த இலங்கையர்கள் அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறையான படிமுறை வழிமுறை தொடர்பான சுற்றறிக்கை சகல பிரதேச சபை பிரிவுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேவையை பெற்றுக்கொள்ள தேவையுடைய நபர்கள் கிராம சேவகர் அலுவலரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளுமாறு ஆட்பதிவுத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பிறப்பு சான்றிதழ் பத்திரம் இல்லாத காரணத்தால் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளாத நபர் இந்…

  5. நாட்டில் வைத்தியர்கள் 1,320 பேருக்கு எதிர்வரும் 25 ஆம் திகதியில் இருந்து புதிதாக நியமனம் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கிணங்க இந்த வைத்தியர்கள் அன்றிலிருந்து நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளகளுக்கு இணைத்துக் கொள்ளப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவ்வைத்தியர்கள் பிரதானமாக பின்தங்கிய பிரதேச வைத்தியசாலைகளில் பணிபுரிவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் அனைத்து வைத்தியர்களின் எண்ணிக்கை 19,000 ஆகக் காணப்படுவதுடன், புதிய வைத்தியர்களின் நியமனத்துடன் அவர்கள் 20,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளனர். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண…

  6. பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை எதிர்த்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் Published By: DIGITAL DESK 5 20 APR, 2023 | 02:31 PM பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை எதிர்த்து வவுனியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (20) காலை முன்னெடுக்கப்பட்டது. வடக்கு - கிழக்கு பெண்கள் கூட்டால் வவுனியா பத்தினியார் மகிழங்குளம், முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. இதன்போது 'சிறுபான்மையினரை அடக்குவதற்காக புதிய சட்டத்தை உருவாக்காதீர், இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு வழி விடுங்கள், இலங்கை அரசே பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்கதே' போன்ற வாசகங்கள் …

  7. யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளை ஈ தாக்கத்தினால் சுமார் ஐந்தாயிரம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்னை பயிர் செய்கை சபையின் வடபிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 75 வீதமான தென்னைகளுக்கு கட்டுப்படுத்தல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வெள்ளை ஈ தாக்கமானது இந்த வருடம் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் – ஆஸ்பத்திரி வீதி பகுதியில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அந்த நோய் தாக்கம் யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பரவியுள்ளது. தொடர்ச்சியாக இந்த வெள…

  8. Published By: VISHNU 21 APR, 2023 | 05:39 PM (எம்.மனோசித்ரா) வருடத்திற்கு 12 இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானத்தைப் பெருபவர்கள் வருமான வரியை செலுத்துவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தேசிய வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய தேசிய வருமான வரி திணைக்களத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பதிவுப் பிரிவிற்கு நேரடியாக வருகை தந்து அல்லது இணையதளத்தின் ஊடாக தமது ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. www.ird.gov.lk என்ற இணைய தளத்திற்குள் பிரவேசித்து ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மாவட்ட தேசிய வருமான வரி திணைக்களத்தின் கிளைகளிலும் இவற்றை கையளிக்க …

  9. முட்டைக்கு விலை நிர்ணயம் – அதிவிசேட வர்த்தமானி வெளியானது! முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிறையின் அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலையும் குறித்த வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 880 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 920 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வெள்ளை நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாயாகவும், சிவப்பு நிற முட்டை ஒன்றின் சில்லறை விலை 46 ரூபாயாகவும் காணப்படுகின்றது. ht…

    • 2 replies
    • 613 views
  10. Published By: T. SARANYA 21 APR, 2023 | 10:55 AM மட்டக்களப்பில் விசேட தேவையுடைய இரு சிறுமிகளை கட்டிவைத்து சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மற்றும் மனித உரிமை ஆணைக் குழுவினர் குறித்த பராமரிப்பு நிலையத்துக்கு வியாழக்கிழமை (20) சென்று விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான பராமரிப்பு நிலையத்தில் 22 பெண்கள் 4 ஆண்கள் உட்பட 26 சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் அங்குள்ள ஒரு சிறுமியின் இரு கைகளை பின்பக்கமாவும் இரு கால்களையும் கயிற்றினால் கட்டி அறையில் வைக்கப்பட்ட காட்சியும், இன்னுமொரு …

  11. Prednisolone சொட்டு மருந்தை பயன்படுத்த வேண்டாம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்துகளை உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்குமாறு சுகாதார அமைச்சு அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது. Prednisolone கண் சொட்டு மருந்துகளை மருத்துவமனைகளுக்கு வழங்குவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது. சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று நோயாளிகள் Prednisolone பயன்படுத்தியதன் பின்னர் சில சிக்கல்களை எதிர்கொண்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைகளின் பின்னர் ஒரே ச…

  12. Published By: DIGITAL DESK 5 21 APR, 2023 | 11:59 AM வவுனியா வடக்கில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 1500 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்களும், பயன்தரு ஏனைய மரங்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடும் வெப்பத்திற்கு மத்தியில் வவுனியா வடக்கில் நேற்று (20) மாலை திடீரென கடும் காற்றுடன் மழை பெய்துள்ளது. இதன்போது, வவுனியா வடக்கு ஓடைவெளி கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் காய்த்து அறுவடைக்கு சில வாரங்களே இருந்த 1500 பப்பாசி மரங்கள் காற்றில் முறிந்து விழுந்து அழிவடைந்துள்ளன. அத்துடன், ஒலுமடு கிராம அலுவலர் பிரிவில் உள்ள விவசாயிகள் பலரின் வாழ்வாதாரமாக இருந்த பப்பாசி, வாழை, புகையி…

  13. ஏப்ரல் 25 கடையடைப்பு போராட்டத்துக்கு யாழ். வணிகர் கழகமும் ஆதரவு Published By: Nanthini 20 Apr, 2023 | 09:56 AM தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழைப்பில் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள வடக்கு, கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்துக்கு யாழ்ப்பாண வணிகர் கழகமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. யாழ். வணிகர் கழகத்துக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை (19) வணிக கழகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது யாழ்ப்பாண வணிகர் கழகம் அனைத்து கடைகளையும் பூட்டி, போராட்டத்துக்கு பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த சந…

  14. மட்டக்களப்பில் அன்னை பூபதி நிகழ்வில் ஏற்பட்ட கருத்து மோதல்! Vhg ஏப்ரல் 20, 2023 தமிழர்களுக்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் நினைவு தினம் மட்டக்களப்பில் ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றுவரும் நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களுக்கும் தியாகதீபம் அன்னை பூபதி நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினருக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. மட்டக்களப்பு நாவலடியில் உள்ள தியாகதீபம் அன்னை பூபதியின் கல்லறையில் நேற்று(19.04.2023) கருத்துமோதல்கள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தியாகதீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரால் இம்முறை மட்டக்களப்பில் ஏற்பாடு …

    • 1 reply
    • 681 views
  15. எதிர்காலத்தில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்கள் சேவையை வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தனியார் பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளையும் ஒழுங்குபடுத்தும் புதிய டிஜிட்டல் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, அனைத்து பேருந்துகளையும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கும் வசதி, வீதி அனுமதி வழங்கும் போது முன்பு வழங்கப்பட்ட புத்தகத்திற்கு பதிலாக QR குறியீடு கொண்ட டிஜிட்டல் அட்டை என்பன அறிமுகப்படுத்தப்பட்டது. https://thinakkural.lk/article…

  16. Published By: DIGITAL DESK 5 18 APR, 2023 | 11:26 AM மத்திய வங்கியில் 50 இலட்சம் ரூபா திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுணாவெல கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், நீதிமன்றத்துக்கு இந்த விவகாரம் தொடர்பில் கோட்டை பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையை கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மத்திய வங்கியின் உயர்பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே திணைக்களத்தின் பல அதிகாரிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து வருவதாகவும் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk…

  17. “Onmax DT” என்ற நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்டுள்ள அமெரிக்காவில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் 8 கணக்குகளை 6 மாதங்களுக்கு உடனடியாக இடைநிறுத்துமாறு கொழும்பு நீதிவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (19) உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்காவின் “Binance.com” என்ற நிதி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை நீதிமன்றத்தினால் அமெரிக்க நிதி நிறுவனமொன்றுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இடைநிறுத்த உத்தரவிடப்பட்ட கணக்குகளில் இலங்கை “Onmax DT” தனியார் நிறுவனத்தின் நான்கு பணிப்பாளர்களின் கணக்குகளும் அடங்குகின்றன. மேலும் அந்த நான்…

  18. Published By: T. SARANYA 20 APR, 2023 | 04:59 PM இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். இன்று (20) காலை இடம் பெற்ற இச்சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்த சந்திப்பின் போது, இலங்கையுடனான கடனை மறுசீரமைப்பதில் இந்தியாவின் ஆதரவு உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன்கள் குறித்தும் கலந்துரையாடினர். சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இந்தியாவின் உறுதிமொழியை உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தினார். ம…

  19. அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று! Published By: NANTHINI 19 MAR, 2023 | 02:10 PM அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (19) அனுஷ்டிக்கப்படுகிறது. இவர் மட்டக்களப்பில், இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக நீரை மட்டுமே அருந்தி, சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த பெண்மணி ஆவார். இவரது உண்ணாவிரத போராட்டம் 1988 மார்ச் 19ஆம் திகதி தொடங்கி சரியாக ஒரு மாதத்தின் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவாறே ஏப்ரல் 19ஆம் திகதி உயிர் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/150895

  20. Published By: DIGITAL DESK 5 20 APR, 2023 | 02:32 PM அண்மைக் காலத்தில் அதிகளவான எரிசக்தி தேவை நேற்று (19) பதிவானதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது ட்விட்டரில் இட்டுள்ள பதிவில் , எரிசக்தி உற்பத்திக்கு 49.53 ஜிகாவோட்ஸ் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். இன்று (20) 50 ஜிகாவோட்டை தாண்டும் மின்சாரத் தேவை ஏற்படக்கூடும் என தாம் கணிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஹம்பாந்தோட்டை டீசல் நிலையத்தின் ஜெனரேட்டர்கள் உட்பட அனைத்து அனல் மின் நிலையங்களும் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/a…

  21. Published By: T. SARANYA 20 APR, 2023 | 02:45 PM (எம்.மனோசித்ரா) தேசிய கண் வைத்தியசாலையில் சகல சத்திர சிகிச்சைகளும் உடன் அமுலாகும் வகையில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட சிலருக்கு ஒரு வகை தொற்று இனங்காணப்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் பிரசாத் கொலம்பகே வீரகேசரிக்கு தெரிவித்தார். கண் சத்திர சிகிச்சைகள் திடீரென இடை நிறுத்தப்பட்டுள்ளமைக்கான காரணம் குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய கண் வைத்தியசாலையில் சத்திர சிகிச…

  22. Published By: T. SARANYA 19 APR, 2023 | 04:45 PM இந்திய அரசின் உதவியோடு பாடப்புத்தகங்கள் அச்சிடுவதற்கான பெருந்தொகையான காகிதாதிகள் கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளன. இதனை கல்வி அமைச்சின் மஹரகம களஞ்சியசாலையில் கையளிக்கும் மற்றும் கையேற்பு வைபவம் அண்மையில் இடம்பெற்றது. இதில் இந்திய அரசின் சார்பில் கலந்துகொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/153237

  23. கீரிமலை கடற்கரையில் நாவலரின் உருவச்சிலை திறந்து வைப்பு! நேற்று மாலை 5மணிக்கு கீரிமலை கடற்கரையில் நாவலர் பெருமான் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் முயற்சியால், கீரிமலை கடற்கரையில் நாவலர் பெருமான் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. நாவலர் பெருமான் சைவநெறி தழைத்தோங்கவும், தமிழ் மொழி செழித்து வளரவும் பெரும் பணியாற்றியவராவார். அவர் யாழ்ப்பாணம், நல்லூர் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஆகிய இருவருக்கும் புதல்வனாக 1822ம் ஆண்டு அவதரித்தார். இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப் பகுதியிலே தோன்றியவர் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். …

    • 12 replies
    • 1.5k views
  24. மிகநீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட வடக்குகிழக்கை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிற்கு சர்வதேசஉதவிகள் தேவை- வெளிவிவகார அமைச்சர் Published By: Rajeeban 19 Apr, 2023 | 09:42 AM நான் ஆரம்பித்து வைத்ததை ஜனாதிபதி தொடர்கின்றார் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக சர்வதேச நாணயநிதியத்துடனான ஈடுபாடுகள் ஒரு சிறப்பான வெற்றிகரமான முயற்சியாக காணப்படும் எனவும் அலிசப்ரி குறிப்பிட்டுள்ளார். நாடு மிகமோசமான நெருக்கடியை எதிர்கொண்டகாலத்தில் நான் நிதியமைச்சராக பணியாற்றினேன் என தெரிவித்துள்ள அலிசப்ரி நானே …

    • 8 replies
    • 485 views
  25. Published By: VISHNU 19 APR, 2023 | 06:14 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் இவ்வார இறுதிக்குள் தீர்க்கமான பதிலை உரிய அதிகாரிகள் வழங்க வேண்டும். அவ்வாறில்லை எனில் அடுத்த வாரம் கல்வித்துறையை அவசர நிலைமையின் கீழ் அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இன்று (19) புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ள ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : பரீட்சை விடைத்தா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.