ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143410 topics in this forum
-
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் எழுந்துள்ள தமிழர் எழுச்சியை கொச்சைப்படுத்தும் விதமாக 'இந்து' நாளேடு நேற்று முன்தினம் தலையங்கக் கட்டுரை ஒன்றை எழுதியது. அக்கட்டுரை தமிழகத்தில் தமிழ் இன உணர்வாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இன்று(16.10.2008) காலை ஈரோட்டில் "இந்து"வின் அக்கட்டுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 'இந்து' நாளேட்டை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி & பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் தீவைத்துக் கொளுத்தினார்கள். இது தொடர்பாக தமிழகக் காவல்துறை 2 பேரை கைது செய்ததுடன் த.தே.பொ.க.வைச் சேர்ந்த செய பாஸ்கரன், பெரியார்.தி.க.வைச் சேர்ந்த குமரகுரு உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளது. http://www.tamil…
-
- 15 replies
- 1.6k views
-
-
ஈழத்தமிழர் பிரச்சனையில் இருந்தாற் போல் திடீர் அக்கறையும் பாசமும் கொண்டு தமிழக அரசியற்கட்சிகள் களங் குதித்திருப்பது, கனவு போலத் தோன்றினாலும்இதுவொன்றும் புதுமையில்லை. ஏனென்றால் தமிழகத்தின் அடிமட்டத் தொழிலாளிப் பாமரனிடம், அன்று முதல் இன்றுவரை, என்றும் மாறாமல் நிறைந்திருக்கிறதுஈழத்தமிழர
-
- 0 replies
- 1.4k views
-
-
http://vimbamkal.blogspot.com/2008/10/tami...du-support.html
-
- 1 reply
- 1.6k views
-
-
இலங்கை இராணுவம் நடத்தி வரும் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்திடக் கோரியும், தமிழக மீனவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கும் இலங்கை கடற்படையினரின் செயலுக்கு நிரந்தர தீர்வுகான கோரி வரும் 21ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் இளைஞரணியினர் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். webdunia photo FILE இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை இராணுவத் தாக்குதல்களிலிருந்து இலங்கைவாழ் தமிழ் இனத்தாரைப் பாதுகாத்திட, அங்கே உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்பட, தமிழர்கள் அனை…
-
- 0 replies
- 894 views
-
-
பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவரும், எழுத்தளாரும், பத்திரிகையாளரும், நவீன பாணி அரசியல் கட்டுரைகளின் முன்னோடியுமான குத்தூசி குருசாமி, இந்து நாளிதழை 1930களிலேயே, மவுண்டரோடு மகா விஷ்ணு என்றுதான் குறிப்பிடுவார். அந்த மகாவிஷ்ணு சமீபத்தில் வராக அவதாரம் எடுத்திருந்தது. அதைப் பற்றி பெரியார் திராவிடர் கழக வார ஏடான புரட்சி பெரியார் முழுக்கம் இப்படி குறிப்பிட்டு இருக்கிறதுது: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் கிளர்ந்தெழுவதை தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பன 'இந்து' ஏடு அக்.14 அன்று நஞ்சை கக்கும் தரம் தாழ்ந்த கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்துவின் ஆசிரியர் குழுவைச் சார்ந்த மாலினி பார்த்தசாரதி என்ற பார்ப்பனப் பெண் எழுதியுள்ள அக்கட்டுரையில் விரக்தியடைந்த விடுதலைப் புலிகள் தூண்டு…
-
- 0 replies
- 1.7k views
-
-
அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இலங்கை ராணுவத் தாக்குதல்களிலிருந்து இலங்கைவாழ் தமிழ் இனத்தாரைப் பாதுகாத் திட, அங்கே உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்பட, தமிழர்கள் அனைவரும் ஒரே உணர்வில் நின்று விடை காண வேண்டும் என்ற வேண்டுகோளை- தலைமைக் கழகத்தின் சார்பில் ``இலங்கைப் பிரச்சினையில் கழகத்தின் நிலையும்- மத்திய அரசுக்கு வேண்டுகோளும'' எனும் பொருளில் சென்னையில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் வேண்டுகோள் விடுத்த தோடு, இலங்கை ராணுவத் தாக்குதல் தமிழினப் படுகொலை இவைகளை தடுத்து நிறுத்திட, தமிழர்கள் அனைவரும் பிரதமருக்கு தந்தி அனுப்பிட வேண்டு மெனவும் கேட்டுக் கொ…
-
- 0 replies
- 595 views
-
-
இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா ஒரு ஆதிக்கச் சக்தியாகத் திகழவே இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி அளிக்கிறது என நடுவணரசு விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு அளிக்கப்படும் இராணுவ உதவிகளை முதல் முறையாக வெளிப்படையாக அறிவித்துள்ளது இந்திய அரசு. இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் இராணுவ உதவியை நிறுத்தக் கோரி, முதல்வர் கருணாநிதி தலைமையில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கர்நாடக மாநில பெங்களூருக்கு நேற்று வந்திருந்த மத்திய இராணுவ அரசாங்க அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜுவிடம் இந்த தீர்மானம் குறித்து நடுவணரசின் நிலை என்ன? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு எம்.எம்.பல்லம் ராஜு கூறியதாவது: இலங்கைக்கு உதவிகளும்,…
-
- 0 replies
- 703 views
-
-
இலங்கைக்கு ராணுவ உதவி ஏன்?-மத்திய அரசு விளக்கம் பெங்களூர்: இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா ஒரு ஆதிக்க சக்தியாகத் திகழவே இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி அளிக்கிறது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு அளிக்கப்படும் ராணுவ உதவிகளை முதல் முறையாக வெளிப்படையாக அறிவித்துள்ளது இந்திய அரசு. இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் ராணுவ உதவியை நிறுத்தக் கோரி, முதல்வர் கருணாநிதி தலைமையில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்று பெங்களூருக்கு வந்திருந்த மத்திய ராணுவ ராஜாங்க அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜுவிடம் இந்த தீர்மானம் குறித்து மத்திய அரசின் நிலை என்ன? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு எம்.எம்.பல…
-
- 5 replies
- 3.1k views
-
-
அம்பாந்தோட்டையில் சிறிலங்கா இராணுவம் - ஆயுததாரிகள் கடும் மோதல் [வெள்ளிக்கிழமை, 17 ஒக்ரோபர் 2008, 06:00 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள யால - 2 வனப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளுக்கும் இடையில் நீண்ட நேரம் இடம்பெற்ற கடுமையான மோதலில் இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பலர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: யால - 2 வனப்பகுதியில் உள்ள மாணிக்கை கங்கையிலிருந்து திஸ்ஸமகராகம பக்கமாக செல்லும் கடற்கரை வீதிப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:30 நிமிடமளவில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளுக்கும் இடையில் கடுமை…
-
- 0 replies
- 1.3k views
-
-
தென்னிந்திய தமிழ் தலைவர்களுக்கு அகண்ட தமிழீழத்தை உருவாக்கும் கனவு இருப்பதாக அல்லி மலர் அமைப்பின் தலைவர் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார். இதன் முன்னோடியாக இலங்கையின் வடக்கு கிழக்கில், பிரபாகரனின் ஊடாக ஈழத்தை உருவாக்குவதே அவர்களின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் இலங்கைப் படையினரால் பிரபாகரன் தோல்வியடைந்தால், அவர்களின் அகண்ட ஈழநாடு என்ற கனவு சீர்குலையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் இந்திய மத்திய அரசாங்கம் எவ்வாறு செயற்படப் போகிறது என்பதே இலங்கைக்கு முக்கியமான ஒன்றாக இருக்கும். எனினும் இந்தியாவுக்கு இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட எந்த உரிமையும் இல்லை எனவும் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று நடை…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிப்பாய் ஒருவன் உயர்ந்த கம்பத்தில் ஏறிக் கட்டிய சிங்கக்கொடி பறக்க கீழே குழுமி நின்ற படைச்சிப்பாய்கள் உணர்ச்சிப் பரவாகத்தில் கைதட்டி ஆர்ப்பரிக்கின்றனர். கூடுவிட்டு ஆவிபிரிந்த காட்சியாய் தமிழர் வாழ்விடங்கள் உயிர்ப்பிழந்து கிடக்கின்றன. அவற்றையும் பதிவாக்கி பெருமிதத்தோடு சிங்களத்தின் ரூபவாகினித் தொலைக்காட்சி அடிக்கடி காட்சிப்படுத்திக்கொண்டிருக
-
- 0 replies
- 937 views
-
-
ஈழத் தமிழர்களின் பிரச்னைக்காக தி.மு.க. அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ் இனம் என்ற ஒரே மையத்தில் அனைவரும் இணையாமல், அரசியல் காரணங்களுக்காக சில கட்சிகள் புறக்கணித்ததால் பிரபாகரன் வருத்தம் அடைந்துள்ளதாகக் கூறுகிறார் இயக்குநர் சீமான். அவரைச் சந்தித்தோம். ``ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராய, தி.மு.க. அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. `இது கண்துடைப்பு நாடகம்' என்று பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்தது. இதனைத் தொடர்ந்து ம.தி.மு.க., தே.மு.தி.க. பா.ஜ.க. ஆகிய கட்சிகளும் புறக்கணித்தன. அ.தி.மு.க. எப்போதுமே ஈழத் தமிழர் பிரச்னையில் எதிர்ப்பு நிலையில்தான் இருந்துள்ளது. அவர்களோடு இணைந்…
-
- 11 replies
- 3.1k views
-
-
ஈழத்தில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை நிறுத்தப்பட்டு அமைதி காண சென்னையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரமாண்ட மனித சங்கிலி அணிவகுப்பு நடத்தப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.2k views
-
-
இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் இந்திய மத்திய அரசாங்கம் தலையிடவேண்டும் என்ற கோரிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் தமிழகத்தில் இருந்து மத்திய அரசாங்க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 7 அமைச்சர்கள் தமது பதிவி விலகல் கடிதத்தை இன்று கையளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முதல்வருமான முத்துவேல் கருணாநிதியிடம் இதற்கான கடிதம் கையளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழ் நாட்டின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் தகவலின் படி மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் டி.ஆர். பாலு ஏ. ராஜா எஸ்.எஸ். பாலமாணிக்கம் சுப்புலக்சுமி ஜெகதீசன் எஸ். ரகுபதி வீ. வெங்கடாபதி மற்றும் ராதிகா செல்வி ஆகியோர் பதவி விலகியுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இ…
-
- 0 replies
- 1.8k views
-
-
"தமிழக முதல்வர் மு. கருணாநிதி மற்றும் விடுதலைப் புலிகள் சார்பு அரசியல்வாதிகள் கோரியிருக்கின்றமைபோல வன்னி இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவோ, யுத்தநிறுத்தத்தை நடைமுறைப்படுத்தவோ இலங்கை அரசு தயாரில்லை." "இதனை இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு அறிவித்திருக்கின்றார்." - இப்படி இலங்கை அரசின் உத்தியோகபூர்வ ஊடகமான இலங்கை வானொலி இன்று காலை அறிவித்தது. தன்னையும், தனது பாதுகாப்புச் செயலாளரையும், முப்படைத் தளபதிகளையும் கொல்வதற்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் தற்கொலைத் தாக்குதல் நபர்களை அனுப்பியிருக்கையில், தனது அரசு யுத்தநிறுத்தம் ஒன்றைச் செய்ய எண்ணவில்லை என்று ஜனாதிபதி கூறினார். இரண்டு வாரங்களுக்குள் வன்னி இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி, யுத்த நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் …
-
- 2 replies
- 1.4k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இலங்கைக்குத் தொடர்ந்து கிடைக்கும் எனத் தாம் நம்புகிறார் என கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதுவர் பீற்றர் ஹெயிஸ் தெரிவித்தார். குறிப்பிட்ட சில விடயங்களை நிறைவேற்ற வேண்டும் என விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அரசு உரிய முறையில் செயற்படுத்தும் என்று தாம் எதிர்பார்க்கின்றார் எனவும் அவர் தெரிவித்தார். கெழும்பில் நேற்று இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சம்மேளனத்தின் வைபவம் ஒன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரித்தானியத் தூதுவர பீற்றர்ஹெயிஸ் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய அவர் மேலும் தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்பி. வரிச்சலுகை மிகவும் முக்கியமானது. …
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் இலங்கைக்கான இந்தியாவின் இராணுவ உதவிகளை நிறுத்தக் கோரியும் நடிகர், நடிகைகள் எதிர்வரும் 1ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தவுள்ளனர். இந்த உண்ணாவிரதத்தில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளும் பங்கேற்கவுள்ளனர் எனவும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. புலிகளின் ஆதிக்கத்தில் உள்ள கிளிநொச்சியைப் பிடிக்க அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அப்பகுதியிலிருந்தே வெளியேறி வருகிற இலங்கை இராணுவம். ஏராளமான தமிழர்கள் இதில் பலியாகி வருகின்றனர…
-
- 1 reply
- 2.1k views
-
-
சிறிலங்கா இராணுவத் தாக்குதல்களை கண்டித்து மலேசியாவில் இன்று போராட்டம் [வெள்ளிக்கிழமை, 17 ஒக்ரோபர் 2008, 12:23 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்காவின் இராணுவத் தாக்குதல்களைக் கண்டித்து மலேசியா வாழ் தமிழர்கள் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஜனநாயக செயல் கட்சியின் பிறை ஜாலான் பாரு கிளை செயலாளர் சத்திஸ் முனியாண்டி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் நடத்திவரும் இராணுவத் தாக்குதல்களை கண்டிக்கும் நோக்கத்துடன் ஒரு கண்டனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். ஜாலான் பாரு முனிஸ்வரன் ஆலயத்தின் முன்புறம் சிறிலங்கா அரசின் கண்மூடித்தனமான தமிழ் மக்களுக்கு எதிரான கொலைவெறி…
-
- 3 replies
- 1.1k views
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வினை சமாதான பேச்சு வார்த்தைகள் மூலம் எடுப்பததற்கு இந்தியா தன்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொள்ளுமென என இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவரம் தொடர்பில் இந்தியா ஆழ்ந்த கவனம் செலுத்தியுள்ளது.மேதல்களில் பொதுமக்கள சிக்கிக்கொள்வது குறித்து கவலையடைகின்றோம்.மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியம். அவர்களுக்கான உணவுகள் ,மற்றும் பாதுகாப்பு உரிய சமயத்தில் கிடைக்க வேண்டியது அவசியம். இலங்கையில் சகல சமூகத்தவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான அரசியல் தீர்வு சமாதான பேச்சு வார்த்தைகள் மூலம் எட்டப்பட வேண்டியது அவசியம்.அதற்கான சகல நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும் என அவ் அறிக்கையில் மேலும் த…
-
- 0 replies
- 950 views
-
-
இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் மோதல்களின் காரணமாக பொதுமக்கள் மீது ஏற்படும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து இந்திய மீண்டும் கவலை தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பவை வருமாறு:- அத்தியாவசியப் பொருட்கள் வன்னி மக்களை சென்றடைய அனுமதிக்கப்பட வேண்டும். இராணுவத் தீர்வு பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் ரீதியான தீர்வே காணப்பட வேண்டும். இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண…
-
- 0 replies
- 764 views
-
-
ஈழத் தமிழர் விவகாரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா கபடம் நாடகம் ஆடி வருகின்றார் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 749 views
-
-
ஈழத் தமிழர்களின் உரிமைப் போருக்கு ஆதரவு தெரிவித்தும் இந்திய மத்திய அரசு தலையிட்டு ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் சென்னையில் எதிர்வரும் நவம்பர் 1 ஆம் நாள் நடிகர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்த உள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 730 views
-
-
வடபகுதி மோதல்களை நிறுத்துவதற்காக, தமிழக அரசியல்வாதிகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் நடவடிக்கையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமே மேற்கொண்டதாக அறிய முடிகிறதென சிங்ளடகம் குறிப்பிட்டுள்ளது. தற்போது சென்னையில் தங்கிருக்கும் சிவாஜிலிங்கம், அண்மையில் தமிழகத்தின் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களான வைகோ, ராமதாஸ் ஆகியோரைச் சந்தித்து, இலங்கையின் வடக்கு தனிநாடாக வேண்டும் என கூறுமாறு கேட்டுள்ளதுடன், பெரியார் திராவிட கழகத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி உள்ளார். அத்துடன் சிவாஜிலிங்கம் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரையும் சந்தித்துள்ளதாக இலங்கையின் புலனாய்வுதுறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. …
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற இந்தியா முயற்சி – ஜே.வி.பி: இலங்கையில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இந்திய முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படக் கூடாது எனவும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது. பிரிவிணைவாத கொள்கைகளின் மூலம் இலங்கையின் அரசியல் ரீதியான அதிகாரத்தை கைப்பற்ற இந்தியா சதித்திட்டம் தீட்டி வருவதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி சாலிகா அரங்கில் நடைபெற்ற அகில இலங்கை போக்குவரத்து உழியர்களின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 1987ம் ஆண்டு முதல் இலங்கை விவகாரங்களில் இந்தியா அநாவசியமாக தலையீடு செய்து வருவதாக அவர…
-
- 0 replies
- 715 views
-
-
சம்பூர் அனல் மின்நிலைய நிர்மாணம் ஆராய இந்திய உயர் அதிகாரிகள் சில தினங்களில் இலங்கைக்கு விஜயம்: திருகோணமலை சம்பூரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள ஆயிரம் மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலக்கரி அனல் மின்நிலையம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்திய அரசின் உயர் அதிகாரிகள் சிலர் எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். இலங்கையின் முதலாவது நிலக்கரி அனல் மின் நிலையம் நுரைச்சோலையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மின்நிலையத்தின் ஊடாக ஆயிரத்து 500 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பூர் பிரதேசத்தில் அனல் மின்நிலையத்தை அமைக்க இந்திய இணக்கம் தெரிவித்தது. இதனடிப்படையில் இந்த இந்திய அதிகாரிகளின்…
-
- 0 replies
- 573 views
-