ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
95 வீதமான தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவளிக்கவில்லை என அமெரிக்கா மற்றும் கனடாவிற்கான சங்கசபைத் தலைவர் வல்பொல பியனந்த தேரர் இந்திய பிரதமருக்கு கடித மூலம் அறிவித்துள்ளார். ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு நியாயமான முறையில் செயற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் உலக அரங்கில் தமிழர்களது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகள், வடக்கு பகுதி இளைஞர் யுவதிகளுக்கு ஆயுதப் பயற்சிகளை வழங்கி அவர்களது எதிர்காலத்தை வீணடித்துள்ளதாக அவர் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடை…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரித்தானியாவின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த வாரம் பிரிட்டிஷ் வெஸ்ட் மினிஸ்டர் ஹாலில் நடைபெற்ற இலங்கை குறித்த விவாதம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். உண்மையான நிலைமைகளை புரிந்து கொள்ளாது மேற்கொள்ளப்படும் விவாதங்கள் இலங்கைக்கு எந்த வகையிலும் உதவியாக அமையாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார் உண்மைக்குப் புறம்பான பல குற்றச்சாட்டுக்கள் இந்த விவாதத்தின் போது முன்வைக்கப்பட்டுள்ளது. படையினர் சட்டவிரோதமான முறையில் தாக்குதல்களை மேற்கொள்வதாக வெளியிடப்பட்ட கருத்து அடிப்படையற்றதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 904 views
-
-
இலங்கை விவகாரம்:கன்னியாகுமரியில் மீனவர்கள் இன்று மாபெரும் கண்டன பேரணி கன்னியாகுமரி: இலங்கைத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கன்னியாகுமரியில் மாபெரும் பேரணி நடத்தினர். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, தமிழகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், இலங்கையிலும் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், இலங்கையில், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்தும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்தும் கன்னியாகுமரியில் இன்று கண்டனப்பேரணி நடைபெற்றது. இதில், இலங்கை அரசைக் கண்டித்து எழுதப்பட்ட அட்டைகளுட…
-
- 0 replies
- 706 views
-
-
சென்னையில் தொடர்;ச்சியான கன மழை காரணமாக தமிழக அரசினால் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மனித சங்கிலி போராட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈழத்தில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்படும் நிலையில், கட்சி பேதங்களை மறந்து தமிழ்நாடு அரசியல் கட்சிகளும், மக்களும் கொண்டுள்ள எழுச்சிக்கு, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் நன்றி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய தொலைக்காட்சியின் கிளிநொச்சி கலையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நேர்காணலில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். ஈழத்தில் தமிழ் மக்களிற்கு எதிரான சிறீலங்கா படைகளின் தாக்குதல்களைக் கண்டித்து 1983ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்து குரல்கொடுத்து வருவதாக அவர் இந்த செவ்வியில் கூறினார். ஈழத்தில் சிறிலங்கா படைகளின் தாக்குதல்களால் மக்கள் பாதிக்கப்படும்போது உடனடியாக தமிழகம் கொந்தளிக்கும் நிலை புதியது அல்ல எனவும் அவர் கூ…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் நடக்கும் சன்டையில் இராணுவத்தால் விடுதலைப் புலி வேங்கைகளை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. மஹிந்த அரசு ஈழத்தமிழர்களை காட்டுமிராண்டித்தானமாக மூர்க்கத்தனமாக விலங்குகளை விடக் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி அழித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அரசு அமைதியாக இருந்தமையால் தான் இப்போது இலங்கை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு நடக்கும் சண்டையில் இராணுவத்தால் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது. தமிழர்களை அழிக்க இலங்கை இராணுவத்திற்கு ராடர் உள்ளிட்ட ஆயுத தளவாடங்களை அளித்து தமிழ் மக்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் துரோகம் இழைத்து விட்டார். அ.தி.மு.க., ம.தி.மு.க கூட்டணி வலுவாகவுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணி தமிழகம்…
-
- 0 replies
- 942 views
-
-
இது ஒரு முக்கியமான தருணம். தவறவிடக் கூடாத அதி முக்கிய தருணம். தலைவன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பது போல், தமிழகத் தலைவர் முதல்வர் முதல், தமிழகத்துப் பாமரன் வரையுள்ள தமிழபற்றாளர்கள் அனைவரும் அணிதிரண்டுள்ள நேரமிது. இந்நேரத்தில் தவறிவிட்க் கூடாது , தடுமாறிவிடக் கூடாதென்னும் அக்கறையில் எழுதப்படுவது இது . ஈழத்தமிழர் பிரச்சனையில் ஏற்கனவே தவறவிடப்பட்ட தருணங்கள் சிலவற்றைசுட்டிக்காட்ட விரும்புவது. இனிலரும் பொழுதில் எடுக்கவேண்டிய அடியை தளம்பாது எடுத்து வைக்க எண்ணுவதுஈ என்ற வகையில் அமைகிறது. இலங்கையின் பெரும்பாண்மைச் சிங்களவர்களில், ஏழைத்தொழிலாளியாய் வாழ்வு நடத்தும் சராசரிச் சிங்களவரிடம் வேண்டுமானால் இல்லாது போகலாம் இனத்துவேசம்.மனிதாபிமானத்தின
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத அமைப்பு அல்ல என்று தமிழகத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 771 views
-
-
வீரகேசரி நாளேடு - இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற பெயரில் கூட்டமைப்பு அரசாங்கம் முன்வைத்திருக்கின்ற யுத்தவாதக் கொள்கையானது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதுடன் சர்வதேச பகைமையையும் சம்பாதித்துக் கொண்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். குடும்ப நிர்வாகமும் அதன் அரசாங்கமும் யுத்தத்தை விற்று அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார். ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறத்து மாகாண சபை, பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி அமைப்பாளர்களுக்கு தெளிவுபடுத்தும் மாநாடு கோட்டையில் அமைந்துள்ள தேசிய தொழிற்சங்க தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ம…
-
- 0 replies
- 889 views
-
-
மட்டக்களப்பில் ஹர்த்தால் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் இன்று அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் காரணமாக அப்பிரதேசங்களின் வழமைநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் மட்டக்களப்பு நகரில் பொலிசாரால் விசாரனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்டப்டதாகக் கூறப்பட்ட கடைச் சிப்பந்திகள் இருவர் சடலமாக கண்டுபிடிக்கபட்ட சம்பவத்தைக் கண்டிக்கும் வகையிலும், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தும் வகையிலும் 'கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள்' என குறிப்பிடப்பட்டிருந்தவர்கள
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழத்தமிழினத்தின் அவலமும் தாய்த்தமிழக எழுச்சியும்!!! குமுதம் இணையதள காணொளி http://www.kumudam.com/webtv_streaming.php...20&leftid=2 தமிழர்கள் அனைவரும் காண வேண்டிய காணொளி. நன்றாக தொகுத்து அமைத்திருக்கிறார்கள். குமுதம் இணையதளத்திற்கு நன்றி.
-
- 14 replies
- 2.7k views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கான பிரதான வீதிகள் 30 நிமிடத்துக்கு மூடப்படுகிறது [திங்கட்கிழமை, 20 ஒக்ரோபர் 2008, 10:20 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள கொள்ளுப்பிட்டிச் சந்தியில் இருந்து நாடாளுமன்றம் வரையான பிரதான வீதிகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நாளாந்தம் காலையும் மாலையும் 30 நிமிட நேரத்திற்கு முடப்படவுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. முற்பகல் 9:00 மணி தொடக்கம் முற்பகல் 9:30 நிமிடம் வரையும் பின்னர் மாலை 5:00 மணி தொடக்கம் 5:30 நிமிடம் வரையும் குறித்த பகுதிகளுக்கு இடைப்பட்ட வீதிகள் முடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் நாளை கூடவுள்ளமையினால் பிரதமர், மூத்த அமைச்சர்கள் ஆகியோரின் பாதுகாப்பை முன்…
-
- 1 reply
- 1k views
-
-
வன்னிக்களமுனையில் பின்புல மற்றும் வான் சூட்டாதரவுடன் படையினர் மேற்கொண்டுள்ள பெரும் ஆறு முனையிலான முன்நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் நடத்தி முறியடித்துவருவதாகவும் இதில் படையினருக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளாகவும் களமுனை தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான படையினரின் இந்த ஆறு முனை முன்நகர்வு முயற்சிக்கு எதிராக இன்று திங்கட்கிழமை காலை வரை தமிழீழ விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் நடத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் இதுவரை 33 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் இலங்கை படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இந்த மோதல்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட படையினர் கொ…
-
- 15 replies
- 5.2k views
- 1 follower
-
-
வீரகேசரி நாளேடு 10/20/2008 8:11:13 PM - இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாந்திகதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளளது. இதில் நடிகர் நடிகைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். உண்ணாவிரத ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. நடிகர் சங்க வளாகத்தில் மேடையும் பந்தலும் அமைக்கப்படுகிறது. நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு அனைவருக்கும் …
-
- 0 replies
- 1.8k views
-
-
போராட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை தாம் எதிரிகளுக்கும் உணவு அளிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டைத் துண்டாடும் சக்திகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய ஆய்வு மையத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட போது அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார். www.tamilwin.com
-
- 3 replies
- 1.6k views
-
-
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் ஓர் இராஜதுரோகி என ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதன் ஊடாக இலங்கையின் அரசியல் சாசனத்திற்கும், அரசாங்கத்திற்கும் எதிராக செயற்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. சந்திரசேகரனின் செயற்பாடு நாட்டின் இறைமைக்கும், பௌதீக ஒருமைப்பாட்டுக்கும் பங்கம் ஏற்படுத்தக் கூடியதொன்றென கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது அமைச்சர் சந்திரசேகரனின் செயல் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார் www.tamilwin.com
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் எடுத்த முயற்சிகள் வீண் போகவில்லை என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார். . பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அதிபருடன் பேசியதைத் தொடர்ந்து ஐ.நா. அனுப்பி வைத்த உணவுப் பொருட்கள் வன்னியில் 2 இலட்சத்து 30 ஆயிரம் தமிழர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டி முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார். முதலமைச்சர் கருணாநிதி இன்று கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நேற்று இராமேஸ்வரத்தில் பேரணியையும், பொதுக் கூட்டத்தையும் நடத்தியதைப் பாராட்டியுள்ளார். …
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழர்களுக்கு விபரீதம் நடந்தால் தமிழகம் கரையைத் தாண்டும் - கே.எஸ்.ரவிக்குமார் திங்கள், 20 அக்டோபர் 2008, 09:50 மணி தமிழீழம் [செய்தியாளர் அகரன்] ஈழத்தமிழர்கள் அவர்களுக்கு ஒன்று என்றால் கேட்பதற்கு யாருமற்ற நாதியற்றவர்கள் அல்ல என்பதை சிங்கள அரசுகள் புரிந்துகொள்ளவேண்டும், தமிழர்களுக்கு தொடர்ந்து விபரீதம் நடந்தால் தமிழகம் ராமேஸ்வரத்தின் கரையை நிச்சயம்தாண்டும் என இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்குமுகமாக இராமேஸ்ரவத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கவும், நியாயம் கேட்கவு…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆயுத வியாபாரம் [20 - October - 2008] சிறியரக ஆயுதங்களின் பரவலினால் உலகெங்கும் அதிகரித்திருக்கும் வன்முறைகள் தொடர்பாக ஆராய்வதற்கு அண்மையில் ஜெனீவாவில் கூட்டப்பட்ட சர்வதேச மகா நாடொன்றில் வெளியிடப்பட்ட தகவல்களை நோக்கும் போது உண்மையான பேரழிவு ஆயுதங்கள் சிறியரக ஆயுதங்களே என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. 60 கோடிக்கும் அதிகமான சிறியரக மற்றும் இலகு ஆயுதங்கள் உலகம் பூராவும் புழக்கத்தில் இருக்கின்றன. கடந்த வருடம் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களின் மரணத்துக்கு சிறியரக ஆயுதங்கள் காரணமாக இருந்திருக்கின்றன. அதாவது, சிறியரக ஆயுதங்களினால் கடந்த வருடத்தில் வாரமொன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். உலகில் இடம்பெற்று வருகின்ற மோதல்களில் பெரும் எண…
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழ் குடாநாட்டின் காங்கேசன்துறை, மயிலிட்டி கடற்பரப்புக்களில் 17 படகுகளில் சிங்களவர்கள் ஆயுதங்கள் சகிதம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு படகிலும் 6 வரையிலான சிங்கள கடற்றொழிலாளர்கள் இருப்பதுடன், இவர்கள் துப்பாக்கிகள், வாள்கள் என்பன வைத்திருப்பதாக நேரில் பார்த்த கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர். http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 1.8k views
-
-
அக்கராயன் களமுனையில் சனியன்று கடும் சண்டை! இராணுவத்துக்குப் பெரும் உயிரிழப்பு? [20 ஒக்டோபர் 2008, திங்கட்கிழமை 10:00 மு.ப இல] வன்னியில்,அக்கராயன்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடும் சமர் இடம்பெற்றிருக்கின்றது. At lt 33 troops were killed fighting Tamil Tiger rebels in northern over the weekend, the government says. The Tamil Tigers also suffered heavy losses, the defence ministry said. There has been no word from the rebels. The military claims to have breached a key rebel defensive line near the rebels' administrative headquarters in the northern town of Kilinochchi. The army'…
-
- 1 reply
- 2.6k views
-
-
பயங்கரவாதத்தை ஒழிக்க ரஷ்யா உதவுமென உறுதியளிப்பு 10/20/2008 3:31:09 PM - இராணுவ தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இலங்கைக்கு உதவுமென ரஷ்யா உறுதியளித்துள்ளது ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, ரஷ்ய அரசாங்கத் தரப்பினரைச் சந்தித்தபோது இவ்வாறு உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. உயர்மட்டக் குழுவொன்றுடன் ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அனடொலி செர்டியுகோவ், கோதபாய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பையேற்று ரஷ்யா சென்றிருக்கும் கோதபாய ராஜபக்ஷ, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்து பல்வேறு விட…
-
- 3 replies
- 1.3k views
-
-
2009ற்கான ஆண்டுக்கான வரவ செலவுத்திட்ட பிரேரணையினை நவம்பர் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது வீரகேசரி இணையம் 10/20/2008 3:54:28 PM - 2009ற்கான ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட பிரேரணையினை எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இம் முறை தேசிய பாதுகாப்பு , வீதி அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி மின்சாரம் , விவசாயம், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் தேச நிர்மாணம் போன்றவற்றிற்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 723 views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை அரசை கண்டித்து சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுர மாவட்ட சிவசேனா சார்பில் சென்னை திருவொற்றியூரில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அப்பாவி தமிழ் மக்களை கொன்றுகுவித்து வரும் இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை அரசிற்கு மறைமுகமாக ஆயுத உதவி அளித்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், தமிழ் மக்கள் கொல்லப்பட்டு வருவதை வேடிக்கைப் பாத்து வரும் மாநில அரசைக் கண்டித்தும் சிவசேனாவின் மாநில செயலாளர் வீர ஸ்ரீ பி. கர்ணன்ஜி தலைமையில் சென்னை திருசொற்றியூர் நகராட்சி அலுவலகம் அருகில் இன்று ஒரு நாள் அடையாள கண்டன உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
-
- 0 replies
- 775 views
-
-
கொழும்பு பங்குசந்தை சரிவில் வீரகேசரி இணையம் 10/20/2008 12:55:10 PM - கொழும்பு பங்குசந்தை நடவடிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அனைத்து பங்குகள் விலைச்சுட்டெண் 30 புள்ளிகளால் வீழ்ச்சி அடைந்துள்ளது.
-
- 3 replies
- 1.4k views
-