ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143675 topics in this forum
-
கோவை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கருகில் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து விளம்பரப்பலகை வைக்கப்பட்டுள்ளது. வைக்கப்பட்டுள்ள விளம்பரப்பலகையில் படம்..... http://www.tamilseythi.com/tamilnaadu/peri...2008-10-12.html தமிழகத்தில் இருந்து வ.அகரன்
-
- 1 reply
- 1.1k views
-
-
கிழக்கு தொடர்பில் பேச பசில் ராஐபக்சவுக்கு எந்தவித உரிமையும் கிடையாது: த.தே.கூ. கண்டனம் [ஞாயிற்றுக்கிழமை, 12 ஒக்ரோபர் 2008, 05:57 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] மகிந்தவின் சகோதரர் பசில் ராஐபக்சவுக்கு இலங்கையின் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தொடர்பில் பேசுவதற்கு எந்தவித உரிமையும் கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (12.10.08) வெளியிட்டுள்ள அறிக்கை: கிழக்கு மாகாண மக்கள் தமது அரசியல் மற்றும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இருந்து என்றுமே தளர்ந்தவர்கள் அல்லர். அவர்கள் எந்தவொரு சலுகைகளுக்கும் சோரம் போபவர்களும் கிடையாது. ஆனால் சிங்கள பேரினவாத அரசைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பின…
-
- 0 replies
- 566 views
-
-
ஜானக இலக்கு வைக்கப்பட்டது ஏன்? [12 - October - 2008] விதுரன் வடக்கில் யுத்தம் தீவிரமடைகிறது. யுத்தத்தின் பலாபலன்களைப் பெறுவதில் பெரும் போட்டி நிலவுகிறது. இந்த யுத்தம் அரசியலுக்கு எந்தளவு தூரம் பயன்படுகிறதோ அந்தளவு தூரம் அரசியலில் எதிரிகளைப் பழிவாங்கவும் பயன்படுகிறது. இதன் உண்மை நிலையை அறியாது மக்கள் குழப்பமடைகையில், இடம்பெறும் சம்பவங்களுக்கு எவர் மீது குற்றஞ் சுமத்துவதென்பது எவருக்குமே தெரியாதுள்ளது. இதனால்தான், நடைபெறும் படுகொலைகளுக்கான சூத்திரதாரிகள் யாரென்பது தெரியாது மக்கள் குழம்புகையில் அடுத்த கொலை நடந்துவிடுகிறது. முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரியும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் வடமத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான மேஜர் ஜெனரல் …
-
- 1 reply
- 2.3k views
-
-
புத்தக வெடிகுண்டு வைத்திருந்ததாக பண்டாரவளையில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 713 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள வம்மியடியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித்தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர். நால்வர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 797 views
-
-
புத்தகத்துக்குள் குண்டு வைத்திருந்ததாக ஆசிரியை கைது வீரகேசரி இணையம் 10/12/2008 1:38:56 PM - மலையகத்தில் பண்டாரவளைப் பகுதியில் புத்தகக்குண்டு ஒன்று தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. புத்தகங்களின் பக்கங்களுக்கு இடையிலான ஓட்டைக்குள் வெடிமருந்துகள் பொருத்திய நிலையில் இந்த குண்டு தயாரிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. குறித்த ஆசிரியை கடந்த 20 வருடங்களாக பண்டாரவளையில் வசித்து வருவதாகப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
-
- 0 replies
- 963 views
-
-
விடுதலைப் புலிகளை கிழக்கில் இருந்து அகற்றி அதனை முற்றாக மீட்டுவிட்டதாக சிறீலங்கா கேக் வெட்டி பெரும் கொண்டாட்டங்களை நடத்தி முடித்துவிட்ட நிலையில், தற்போது கிழக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சிறீலங்காவின் கிழக்கின் உதயம் பிரச்சாரத் திட்டத்தை நொருக்கும் வகையில் கிழக்கில் விடுதலைப் புலிகளின் உதயம் அதிகரித்துள்ளது. தினந்தோறும் நடைபெறும் தாக்குதல்களால் சிறீலங்கா அரச படைகளும் அதன் துணை இராணுவக் குழுக்களும் பெரும் இழப்புக்களைச் சந்தித்து வருவதால் அச்சமடைந்துள்ளன. இந்நிலையில், சிறீலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்புக்களை ஆட்டங்காண வைப்பதே தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய நோக்கம் என்று கொழும…
-
- 0 replies
- 2k views
-
-
http://www.uktamilnews.com/index.php?optio...60&Itemid=1
-
- 0 replies
- 1k views
-
-
கிழக்குமகாணத்தில் மதுபானம் மற்றும் கட்டிட ஒப்பந்தகார் ஆகியோரிடம் பெறும்தெகையான சட்டரீதியற்ற வரிவிதிக்கபடுவதாகவும் மாத குறைந்தது மூன்றுகோடிக்குமேல் அரசியல்கட்சிக்கு மக்கள்செலுத்துவதாகவும் தெரியவருகிறது . இப்பணத்தை வசூலிப்பவர்கள் பிள்ளையானின் வலது கரம் என கூறப்படும் சீலன் மற்றும் கருணாவின் விசுவாசியும் தமிழ்மக்கள் விடுதலை புலிகளின் பிரதி தலைவருமான ஜெயம் மாஸ்டர் என தெரியவருகிறது அரசு இவற்றை அறிந்தபோதிலும் எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103
-
- 0 replies
- 1.3k views
-
-
கிழக்கு மக்களை தேசியரீதியில் அங்கீகரிக்கவே கருணாவுக்கு எம்.பி. பதவி: பசிலின் கருத்துக்கு த.தே.கூ. கண்டனம் கிழக்கு மக்களுக்கு தேசிய ரீதியில் அங்கீகாரம் வழங்கவே கருணாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதாக ஐனாதிபதியின் சகோதரரும் ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஐபக்ச தெரிவித்துள்ள கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. அரச ஊடகமொன்றுக்கு பசில் ராஐபக்ச மேற்கண்ட கருத்தைத் தெரிவித்துள்ளமைக்கு கண்டனம் தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- கிழக்கு மாகாண மக்கள் தமது அரசியல் மற்றும் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இருந்து என்றுமே தளர்ந்தவர்கள் அல்லர். …
-
- 0 replies
- 740 views
-
-
தப்புக் கணக்கு சிங்களப் பிள்ளையள் கொடுக்கிற புலிச் சாவுக் கணக்கைப் பார்த்து உலகமும் ஒரு நாள் சிரிக்கும் எண்டது சரியாய்தான் போச்சுது. நாளுக்கு நாள் இவை கொல்லுற புலியளின்ரை சாவுக் கணக்கை பார்த்து சந்தோசப்பட்டவையும் இப்ப சலிப்படைஞ்சு போயிருக்கினம். சொன்ன கணக்குக்கு இப்ப புலியள் மட்டுமில்லை, தமிழரும் ஒட்டு மொத்தமாய் அழிஞ்சு போயிருக்க வேணும் எண்டதுதான் அவையளின்ரை கணக்கு. இதிலை பிரபல சர்வதேச ஊடகமொன்று சரியாய்தான் அதிர்ச்சியடைஞ்சிருக்குது. இவையள் சொல்லுற புலி அழிப்புக் கணக்கை நாளுக்கு நாள் போட்டு கூட்டிக்கொண்டு வந்த அந்த ஊடகம், இப்ப கூட்டின கணக்குத் தொகையைப் பார்த்து மிரண்டுபோய் நிக்குது. கடந்த ஜனவரியிலை இருந்து இவையள் கொன்ற புலியளின்ரை கணக்கு மட்டும் ஏழாயிரத்தை க…
-
- 0 replies
- 1.6k views
-
-
யுத்தத்தை நியாயப்படுத்த அமைச்சர் ரோஹித்த இந்தியாவிற்கு அவசர விஜயம்: தற்போது முன்னெடுக்கப்படும் யுத்தத்தை நியாயப்படுத்தும் நோக்கில், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம இந்தியாவிற்கு அவசர விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் இடம்பெற்றும் வரும் பாரிய மனிதப் பேரவலம் குறித்து தலைநகர் டெல்லியிலிருந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அடுத்து அமைச்சர் இந்தியா செல்லவுள்ளார். இந்திய வெளிவிவாகர அமைச்சர் பிரணாப் முகர்ஜீ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயண் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வடக்கில் இடம்பெற்றுவரும் இராணுவ முன்நகர்வுகள் மற்றும் மனிதாபிமான பணிகள் தொடர்பில் இந்திய மத்திய அரசிற்கு இதன் போது விளக்கமளிக்கப்படவ…
-
- 1 reply
- 889 views
-
-
கனடா தேசத்து `நேஷனல் போஸ்ட்' என்கிற பத்திரிகைக்கு, சிறீலங்காவின் இராணுவத் தளபதி வழங்கிய செவ்வி, சிங்களத்தின் ஆழ்மன பேரினவாதச் சிந்தனையை உலகிற்கு வெளிப்படுத்தியிருந்தது. சிறீலங்கா நாடானது, சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானதெனத் தான் திடமாக நம்புவதாக, மகாவம்ச வரலாற்று விளக்கமொன்றை அவர் அளித்திருந்தார். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை, இவையன்றும் புதிய விடயமல்ல. ஏற்கனவே சிங்கள மரத்தில் படரும் செடிகொடிகள்தான் தமிழினமென்று கூறிய டி.பி.விஜேயதுங்காவை விட, இராணுவத் தளபதியின் விளக்கம் மிகத் தெளிவாக இருக்கிறது. தமிழ் மக்களைப் பற்றிக் கவலைப்படாத யூலை - இன அழிப்பு சூத்திரதாரி ஜே.ஆரும், தமிழர் தோலில் செருப்புத் தைக்கப் புறப்பட்டவர்களும், விட்டுச் சென்ற பேரினவாதப் பாதையில் மகிந்த…
-
- 0 replies
- 951 views
-
-
தற்போதைக்கு ஆயுதங்கள் களையப்பட மாட்டாது – TMVP: தற்போதைய பாதுகாப்பற்ற சூழ்நிலையில் ஆயுதங்கள் களையப்பட மாட்டாதென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். அத்துடன், எதிர்வரும் தேர்தல்களில் கருணா தலைமையில் TMVP போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திடீரென ஆயுதங்கள் களையப்பட்டால் சுமார் 3000த்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா போன்ற முக்கிய இராணுவத் தலைவருக்கே பாதுகாப்பளிக்க முடியாத நிலையில் சாதாரண போரளிகளது பாதுகாப்பை எவ்வாற உறுதிப்படுத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்வரும் பொதுத…
-
- 0 replies
- 965 views
-
-
எப்பிடி இருந்த நான் இப்படி மாறிட்டன்
-
- 7 replies
- 2.1k views
-
-
சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவின் தலைமை அதிகாரி ரியர் அத்மிரல் சரத் வீரசேகரவுக்கு வழங்கப்பட்டிருந்த 15 கடற்படையினரின் பாதுகாப்பு விலகிக் கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் அறிவித்துள்ளது. சரத் வீரசேகர சிவில் பாதுகாப்பு படையின் பணிப்பாளராக நியமிக்கப்படும் போது, அமைச்சரவைப் பத்திரம் மூலம், அவர் ஏற்கனவே கூட்டுப்படை அதிகாரியாக கடமையாற்றிய போது வழங்கப்பட்டிருந்த வாகனங்கள், பாதுகாப்பு என்பன வழங்கப்பட வேண்டும் என கடற்படையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. புலிகளின் அச்சுறுத்தல் இருக்கும் கிராமங்களில் பாதுகாப்பு குறித்து ஆராயும் நோக்கில் அடிக்கடி அந்த பிரதேசங்களுக்கு செல்லும் வீரசேகரவுக்கு புலிகளின் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக…
-
- 0 replies
- 884 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் தனக்கு எந்தவிதமான தனிப்பட்ட விரோதமும் இல்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினர் ‘இரத்த தாகம்’ கொண்டவர்கள் என அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி விபரித்துள்ளார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு அல்லது சரணடையும் வரை அவர்களுடன் எந்தவிதமான சமாதானப் பேச்சுக்களுக்கும் இடமில்லையென அவர் தெரிவித்தார். “நாட்டைத் துண்டாடி அதனைப் பயங்கரவாதிகளிடம் எம்மால் ஒப்படைக்கமுடியுமா” என ஜனாதிபதி கேள்வியெழுப்பினார். ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையவேண்டிய சூழ்நிலையே தற்பொழுது விடுதலைப் புலிகளுக்குத் தோன்றியிருப்பதாகவும், மோதலில் இறுதியை அடைவதே இ…
-
- 2 replies
- 1.8k views
-
-
சிறீலங்காப் படையினரின் உயிர்கள் ஆபத்தில் இருந்தாலும் எதிர்காலத்தி வெற்றி பெறுவோம் என சிறீலங்கா தரைப் படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை சிறீலங்கா படையினரின் 59 ஆண்டு நினைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.விடுதலைப் புலிகளுடன் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை படையினருக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தியிருந்தது. மாவிலாறு ஆரம்பித்த வெற்றி கிழக்கு மாகாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி என வியாபித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் எமக்கு மரியாதையும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எமது படையினருக்கு உயிர் ஆபத்துக்கள் ஏற்பட்டாலும் நாம் பெற்றிவெறுவோம் என அவர்…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழ்த் திரையுலகத்தினர் இன்று முதல் கறுப்புப் பட்டி அணிந்து தங்களது பணிகளை மேற்கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
-
விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதல்களில் இருந்து அரசியல்வாதிகள் உட்பட முக்கியஸ்தர்களைப் பாதுகாக்கும் வகையில் முக்கியஸ்தர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல் தொடர்பாக புலனாய்வு ஆய்வு அறிக்கை ஒன்றை அவர்களுக்கு வழங்க பாதுகாப்பு சபை தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் அரச புலனாய்வு சேவை (எஸ்.ஐ.எஸ்) இராணுவ புலனாய்வு பணியகம் (டிஎம்ஐ) ஆகியவற்றின் மூலம் முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கு உள்ள அச்சுறுத்தல்கள் குறித்து தனித்தனியாக ஆராயப்பட உள்ளதுடன் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் முறைமை தொடர்பில் தெளிவுப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதேபோல் அரசாங்க அரசியல்வாதிகள், எதிர்க்கட்சியின் தலைவர்கள், பாதுகாப்பு உயரதிகாரிகள் ஆகியோருக்கும் போர் சிறப்பாய்வாளர்கள…
-
- 1 reply
- 1.9k views
-
-
இதுவரை மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இருந்து 180 பாகை கோணத்தில் இருப்பவர்களே கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்ததும் குண்டுதாரி தனது உடலின் மார்பு பகுதி மாத்திரம் உள்ளடங்கும் வகையில் வெடிகுண்டு அங்கியை அணிந்திருப்பதே இதற்கான காரணம். ஆனால், அனுராதபுரத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 360 பாகை கோணத்தில் இருந்தவர்களும் உயிரிழந்துள்ளனர். குண்டுதாரி, உடலின் இரண்டு பக்கங்களும் உள்ளடங்கும் வகையில் வெடி மருந்துகளை பொருத்தி இருந்தமையே இதற்கான காரணம் என இராணுவப் புலனாய்வுதுறையின் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வடமத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஜானக்க பெரேரா மீதான தற்கொலை குண்டுத் தாக்குதலின் ஆரம்ப இலக்கு இராண…
-
- 5 replies
- 2.5k views
-
-
ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து கோவையில் மாணவர்கள் நேற்று சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 865 views
-
-
பெண் விடுதலைக்கு வித்திட்ட 2 ஆம் லெப். மாலதி அன்று பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள், அடக்குமுறைகள் என்பன மேலோங்கியிருந்தன. எமது சமூகமோ சாதி, சமய கட்டமைப்புக்களால் இறுக்கமாக பின்னிப் பிணைந்திருந்தது. அவை எமது சிந்தனைகளுக்கும் தடைக்கல்லாகவே அமைந்தன. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை அன்று பெண்களுக்கான வரைவிலக்கணமாக எழுதப்பட்டன. அன்றைய சமூக அமைப்புக்களில் பெண்ணானவள் பலவீனமுடையவளாகவும், பயந்தவளாகவும், பணிவுமிக்கவளாகவும், வீட்டின் கடமைகளைச் செய்பவளாகவுமே கருதப்பட்டாள். உறுதியானவனாகவும் உயர்ந்தவளாகவும் ஆண் சமூகத்தில் போற்றப்பட்டாள். வீட்டின் ஆஸ்தான நாயகியாக விளங்கிய பெண்ணுக்கு அடுப்பங்கரைதான் அவளின் உறைவிடமானது. கரிப்பு…. அவளுடைய சுவாசத்தோடு ஊறிப்…
-
- 0 replies
- 943 views
-
-
நோர்வேயின் பீப்பல்ஸ் எட் நிறுவனத்தின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் ருக்மலே பிரதேசத்தில் வைத்து சிலரால் தாக்கப்பட்டுள்ளார். ஆனந்த ராஜகருண என்ற இந்த முன்னாள் அதிகாரி இது குறித்து கொட்டாவ காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு 36 வாகனங்களை கொடுத்துள்ளதாக இந்த நோர்வேயின் அரசசார்பற்ற நிறுவனத்தின் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103
-
- 0 replies
- 1.2k views
-