ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
யாழ்ப்பாணத்தில் திடீர் தாக்குதலை நடத்த நகரும் புலிகளின் விசேட படையணிகள் ஜ02 - ழுஉவழடிநச - 2008ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ புலிகள் இயக்கம் யாழ்ப்பாணத்தில் அரச படையினரின் சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முகாம்கள் மீது திடீர் தாக்குதல்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக புலிகள் இயக்கத்தின் சில விசேட குழுவினர் தற்போது யாழ்ப்பாணம் நோக்கி நகர்ந்து வருவதாகவும் இவற்றில் சில குழுவினர் சாவகச்சேரிப் பிரதேசத்தை அண்டியுள்ள பற்றைகள் அடர்ந்த பகுதிகள் மற்றும் காட்டுப் பகுதிகளில் தங்கியிருப்பதாகவும் பாதுகாப்புத்துறையின் வடபகுதி புலனாய்வு பிரிவினருக்குத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி யாழ்ப்பாணம் பாதுகாப்புத்துறை வட்டாரங்களில் கூறப்படும் தகவல்களுக்கே…
-
- 5 replies
- 1.9k views
-
-
யாழில் சோதனை நடவடிக்கைகள் அதிகரிப்பு [வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2008, 10:16 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படையினரின் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது இடம்பெறுகின்ற தாக்குதல்களை அடுத்தே படையினர் தேடுதல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்கள் ஒன்றுகூடும் பொது இடங்கள், பேருந்து நிலையங்கள் கைவிடப்பட்ட வீடுகள், வீதியோரங்களில் உள்ள பற்றைகள் அனைத்தும் படையினரால் சோதனையிடப்படுகின்றன. அத்துடன் கிறிஸ்தவ, இந்து ஆலயங்களிலும் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். புதினம்
-
- 0 replies
- 711 views
-
-
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் தலைமையில் அனைத்து கட்சிகளும் திரண்டு நாளை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடத்தவுள்ள நிலையில், அக்கட்சிகளால் அழைக்கப்படாத திமுக 6ம் தேதி மாலை பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் முதல்வர் கருணாநிதி பேசுகிறார். தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தி வரும் அராஜகத் தாக்குதல்களைக் கண்டித்தும், இலங்கை அரசின் போக்கைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் நாளை மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த போராட்டத்திற்கு அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அத்தோடு பங்கேற்கவும் உள்ளன. ஆளுங்கட்சியான திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் மட்டும் இதி…
-
- 3 replies
- 1.3k views
-
-
சட்டமும் நீதியும் தப்பிக்கொள்ளுமா? 02.10.2008 ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து... பின்னர் மனிதனைக் கடித்ததாம் என்று பேச்சு வழக்கில் ஒரு வாசகம். மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் அதன் ஆழம் புலப்படுவதில்லை. ஆனால் நடைமுறையில் நோக்கினால் அது மெத்தவும் அர்த்தம் உள்ளது. முதலில் ஒரு தீய பழக்கத்தைச் செய்பவன், அதற் கான தண்டனையைப் பெறாவிட்டால், அல்லது தட்டிக்கேட்க எவருமில்லை என்றால் அதனைக் கட்டுப்பாடு இன்றி, தங்கு தடையின்றிச் செய்யத் தூண்டப்படுவான்; செய்வான். தட்டிக்கேட்க எவருமில்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் என்பதும் அதனையே வெளிப்படுத்தி நிற்கிறது. நாடுகளின் ஆட்சிக் கட்டிலில் இருப்போரும் அவர்களின் ஆதரவாளர்கள், அடியாள்களும் இந்த வகையைச் சார்ந்தவர்களே என்பதனை எடுத்துக…
-
- 0 replies
- 719 views
-
-
இலங்கை உட்பட பல நாடுகளிலிருந்து ஜப்பானில் அகதிகளாக புகலிடம்கோரி விண்ணபிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அகதிகளுக்கு உதவிவரும் தன்னார்வ நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம்வரையான காலப்பகுதியில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1,015ஐ அடைந்திருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது. “மியன்மார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்தே கூடுதலானவர்கள் விண்ணப்பிக்கின்றனர். இதனைவிட இலங்கை, நேபாளம் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் காணப்படும்ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக அந்த நாடுகளிலிருந்து புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என டோக்கியோவைத் தளமாகக் கொண்டியங்கும் அகதிகளுக்கான ஜப்பான் நிலையம் தெரிவித்துள்ளது. ஜப்பா…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையில் இராணுவ நடவடிக்கையில் சிக்கியுள்ள மக்களுக்கான எதிர்கால மனிதாபிமான உதவிகளை பிரிட்டன், இலங்கை அரசின் ஊடாக வழங்காது. அரசசார்பற்ற அமைப்புகள் ஊடாகவே இனி எந்த உதவிகளும் வழங்கப்படும், இவ்வாறு பிரிட்னின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் சஹீட் மலிக் தெரிவித்தார், நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை இரவு பிரிட்டனிலுள்ள தமிழர் அமைப்பு ஒன்றின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வன்னிக்கு கடந்த இரு வாரங்களாக உணவு விநியோகம் இடம் பெறவில்ல என்பது குறித்து பிரிட்டன் அரசு ஆழந்த கவலை கொண்டுள்ளதாக அமைச்சர் சாஹீட் மலிக் அப்போது கவலை தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை வன்னிக்குச் சென்றிருக்க வேண்டிய 60 உணவு லொறிகளும் ஏன் இன்னமும் செல்லவில்லை என்பது …
-
- 0 replies
- 1k views
-
-
அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் இலங்கையின் பாதுகாப்பபுச் செலவுக்கு 17ஆயிரத்து 710 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவிருக்கிறது. இது தொடர்பாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முப்படையினருக்காவும் அரசு 2009ம் ஆண்டில் 177.1 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யவுள்ளது. நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலமாக இது தெரியவந்துள்ளது. இராணுவத்திற்கான 8 ஆயிரத்து 390 கோடி ரூபா ஒதுக்கபட்டுள்ளது. இதே வேளை, கடற்படையினரின் தேவைகளுக்காக 2 ஆயிரத்து 750 கோடி ரூபாவும் விமானப் படையினருக்கு 2 ஆயிரத்து 50 கோடி ரூபாவும் அரசு ஒ…
-
- 1 reply
- 714 views
-
-
சுண்ணாகம் மின் உற்பத்தி நிலையத்தைத் திறப்பதற்கு ஜனாதிபதி யாழ் செல்கிறார் புதன், 01 ஒக்ரோபர் 2008 [செய்தியாளர் மயூரன்] யாழ்ப்பாணம் சுண்ணாகத்தில் திறக்கப்படவுள்ள மின்சார உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் செல்லவுள்ளார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் மின்வெட்டுக்கு உள்ளாகின்ற யாழ் குடாநாட்டுக்குத் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்கும் நோக்குடன், 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 36 மெகாவோல்ட் மின்சார உற்பத்தியை நிலையம் சுண்ணாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. புதிதாக அமைக்கப்பட்ட மின்சார உற்பத்தி நிலையத்தை இம்மாதம் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திறந்து வைக்க உள்ளார் என சிறீலங்கா ஊடகத்துறை அமைச…
-
- 9 replies
- 2.5k views
-
-
என் வணக்கத்திற்குரிய உலக மக்களே…. மான்புமிகு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அவர்களும், எப்போதும் அவரை கரித்துக்கொட்டும் வெனிசூலா ஜனாதிபதி ஷாவேசும், நான் ஆரத்தளுவி குசலம் விசாரித்த ஈரானிய ஜனாதிபதி மஹ்முத் அஹ்மடி நஜாத்தும் அமர்ந்திருக்கும் இந்த ஐக்கிய நாடுகள் சபை 63 ஆவது கூட்டத்தொடர் சரித்திர விழா மேடையில் நானும் பேச வாய்ப்பு கிடைத்த கதை பெரிய கதை…. உலகமே சம்பந்தப்பட்ட கதை…ஏன் இது ஒரு கேனைக்கதையும் கூட… சிறி லங்காவின் ஜனாதிபதி கேனைக்கதை சொல்கின்றானே! என்ற கேள்வி எழலாம்….இங்கு கொலுவீற்றிருக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்த கதையின் ஒரு முக்கிய பாத்திரம்.அதனால் இந்த சர்தாஜியின் கதையும் சொல்லவேண்டியதாயிருக்கின்றத
-
- 3 replies
- 1.3k views
-
-
பாரதிபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல் [புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2008, 06:07 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி பாரதிபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று பிற்பகல் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. வான்படையின் மிகையொலித்தாக்குதல் வானூர்திகள் இரண்டு இன்று புதன்கிழமை பிற்பகல் 2:30 நிமிடமளவில் பாரதிபுரம் 155 ஆம் கட்டை வீதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுத்தாக்குதலை நடத்தின. நான்கு தடவை மக்களின் வீடுகள் மீது வானூர்திகள் குண்டுகளை வீசின. இதில் ஆறு வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. 13 வீடுகள் சேதமாகியுள்ளதுடன் பயன்தரும் மரங்களும் அழிந்துள்ளன. கால்நடைகளும் அழிந…
-
- 0 replies
- 782 views
-
-
வன்னிக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட சரக்கு ஊர்திகளில் சீ4 வெடிபொருட்கள் காணப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானதென அமைப்பின் ஊடகப் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட சீ4 வெடிபொருட்கள் மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சரக்கு ஊர்தியிலேயே கண்டு பிடிக்கப்பட்டதாகவும், சில ஊடகங்களில் குறித்த தகவல் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவ
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழக அரசு இன்னும் பதினெட்டு நாள்களுக் குள் தமிழீழத்தை ஆதரித்து சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் தீவுத்திடலில் 1000 தமிழர்கள் தீப்பந்தம் ஏந்தி தமிழீழத்துக்கு வெளிச்சம் காட்டுவோம். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ். இலங்கைத் தமிழர்களை சுட்டுக்கொல்லும் சிங்கள அரசைக் கண்டித்தும் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் பா.ம.க. சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் சென்னை ஆழ்வார் பேட்டை இலங்கைத் தூதரகம் முன்பு நேற்று நடந்தது. போராட்டத்துக்கு பா.ம.க. நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்தார். அங்கு அவர் பேசியவை வருமாறு: ஈழத் தமிழர்களைக் கூண்டோடு ஒழித்து விடவேண்டும் …
-
- 1 reply
- 2.4k views
-
-
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அகதிகளுக்கு உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லவிருந்த லொறிகளில் ஒன்றுக்குள் இருந்து 2.5 கிலோ எடையுள்ள அதிசக்திவாய்ந்த வெடிபொருள்கள் நேற்றுப் பிற்பகல் 3.30 மணிக்கு மீட்கப்பட்டன என்று பாதுகாப்பு அமைச்சு நேற்று இரவு அறிவித்தது.வவுனியா செயலகத்தால் வாடகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 30 லொறிகளில் ஒன்றிலிருந்தே வெடி பொருள்கள் மீட்கப்பட்டன. இது குறித்து பாதுகாப்பு அமைச்சு பின்வருமாறு விவரித்துள்ளது. ஓமந்தைச் சோதனை நிலையத்தில் படையினர் லொறிகளை சோதனை செய்தபோது குறிப்பிட்ட ஒரு லொறியிலிருந்து வெடிபொருள் மீட்கப்பட்டது. அதனையடுத்து மேலதிக விசாரணைக்காக லொறியின் சாரதியை படையினர் தடுத்துவைத்துள்ளனர். லொறியும் தடுத்துவைக்கப்பட்டுள்ளது. நாளை …
-
- 5 replies
- 1.3k views
-
-
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் வீட்டின் மீது வெடிகுண்டு தாக்குதல் Grenade attack on TNA MP's house in Ampaa'rai [TamilNet, Wedensday, 01 October 2008, 05:56 GMT] Unidentified persons lobbed a hand grenade on the house of Tamil National Alliance (TNA) Ampaa'rai district parliamentarian, Chandra Nehru Chandrakanthan, on Thirukkoayil main street, Tuesday around 10:00 p.m, despite the presence of three policemen guarding the residence, the MP said. The blast had damaged only the front portion of the house and no one was injured, he said. Police said two attackers were riding in a motorbike. The MP said his house is located…
-
- 0 replies
- 1k views
-
-
கிளிநொச்சியில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: 2 அப்பாவி பொதுமக்கள் பலி; 2 சிறார்கள் உட்பட 13 பேர் காயம் [புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2008, 11:54 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி நகர் கனகாம்பிக்கைக்குளம் வீதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு சிறார்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுச்சிதறல்கள் கிளிநொச்சி பொதுமருத்துவமனைப் பகுதிகளிலும் வீழ்ந்துள்ளன. கிளிநொச்சி நகரில் உள்ள கனகாம்பிகைக்குளம் வீதி ஏ-9 சாலை அருகில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை முற்பகல் 10:20 நிமிடத்துக்கு சிறிலங்கா வான்படையின் இரண்டு கிபீர் வானூர்திகள் …
-
- 5 replies
- 1.1k views
-
-
நோர்வே நாடாளுமன்றம் முன்பாக 32 மணிநேரமாக நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு [புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2008, 10:22 மு.ப ஈழம்] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்] வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட அனைத்துலக உதவி நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டமையைக் கண்டித்து நோர்வேயில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை காலை 8:00 மணிக்கு தொடங்கப்பட்ட அடையாள உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு நிறைவுபெற்றது. தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலக சமூகத்தின், குறிப்பாக இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கரிசனை பேச்சளவில் மட்டும் நின்றுவிடுவதைத் தவிர்த்து, செயலளவில் அக்கரிசனையை வெளிப்படுத்த வேண்டிய காலம் இதுவெனவும், அவ்வா…
-
- 0 replies
- 665 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம்-திரளும் புதுக் கூட்டணி!- தட்ஸ் தமிழ் சென்னை: ஈழத் தமிழர்களைக் காக்கக் கோரியும், அவர்கள் மீதான ராணுவ அடக்குமுறையைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பையும், பல எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. தேரத்ல் நெருங்க நெருங்க தமிழக அரசியலில் என்னென்ன கூட்டணிகள், எப்படி எப்படி உருவாகப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே போகிறது. டீக் கடை, சலூன் கடை, பஸ் ஸ்டாப், அலுவலகங்கள் என எங்கு பார்த்தாலும் இதுகுறித்த அலசல்களில் வாக்காளப் பெருமக்கள் படு மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விஜயகாந்த்துடன் யார் சேருவார்கள், பாமக என்ன ஆகும், கம்யூனிஸ்டுகளை யார் சேர்த்துக் கொள்வா…
-
- 6 replies
- 2.9k views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழ்நாட்டின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு பற்றியும் இது தொடர்பில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும் எதிர்வரும் திங்கட்கிழமை (06.10.08) சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியவற்றின் பாதுகாப்புக்களை ஆட்டங்காண வைப்பதே தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய நோக்கம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
உலகநாடுகளின் கண்டனங்களின் பின் பயங்கரவாத சிங்கள அரசு நிர்ப்பந்தத்திற்காகவும் கண்துடைப்பிற்காக சில உணவு பாரவூர்திகளை வன்னிக்கு அனுப்ப நேற்று நடவடிக்கை எடுத்திருந்தது அறிந்ததே. வன்னிக்குச் செல்லவிருந்த உணவு பாரவூர்திகளை சோதனையிட்ட இராணுவத்தினர் அப்பாரவூர்தி ஒன்றின் உள் இருந்து பெருந் தொகையான வெடிப்பொருட்கள் கைப்பற்றியதாக இராணுவ பேச்சாளன் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். உணவுப் பொருட்களை எடுத்தச் செல்ல ஆயத்தமாயிருந்த ஒரு பாரவூர்யில் சூட்சுமமான முறையில் பெருந் தொகையான வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அத்துடன் 28,000 மேற்பட்ட சிறிய ரக பட்டறிகள் (பென் டொச் பற்றரிகள்) மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சோதனையிட்ட இராணுவத்தினர் கண்டுபிடித்திருப்பதாகவும், அப் பாரவூர்த…
-
- 1 reply
- 1.4k views
-
-
கிழக்கில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்க் காவற்துறையினருக்கு இந்தியாவில் விசேட பயிற்சி? இந்தியாவின் புதுடெல்லி காவற்துறைப் பயிற்சி மையத்தில் பயிற்சிகளை நிறைவு செய்த தமிழ்க் காவற்துறை அணி ஒன்று ஓரிரு தினங்களில் இலங்கை திரும்பவுள்ளதாக கிழக்கு தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு அரசாங்க கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்ட பின்னர் 2007ஆம் ஆணடு தனியே தமிழர்களைக் கொண்ட காவற்துறை அணி ஒன்று உருவாக்கப்பட்டது. மட்டக்களப்பில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் 90க்கும் மேற்பட்ட பெண்களும் 100க்கும் மேற்பட்ட ஆண்களும் தேர்வு செய்யப்பட்டு கல்லடி பயிற்சி முகாமில் 6 மாதகால பயிற்சி வழங்கப்பட்டபின்; கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி புதிய பதவிநிலைகளைப் பெற்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்…
-
- 3 replies
- 1.4k views
-
-
இலங்கையின் இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர அதிகாரப்பகிரலுடனான ஆட்சிமுறை அவசியம் - கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்: இலங்கையின் இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமானால் பரஸ்பர மரியாதை, அதிகாரப்பகிரலுடனான ஆட்சிமுறை, அசாதாரணமான திடசங்கற்பம் என்பன அவசியமாகிறது என கனேடிய லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பொப்ரே தெரிவித்துள்ளார். இதற்காக இலங்கையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைத் தீர்த்து பகைமையை களைய கனடாவினால் முயற்சிகளை மேற்கொள்ளமுடியும் எனவும் சுட்டிக் காட்டி உள்ளார். இலங்கையின் யுத்தம் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவித்த அவர், தன்னார்வு நிறுவனங்களுக்குப் பாதுகாப்பை வழங்கமுடியாது என்ற அடிப்படையில் அவர்களை யுத்தம் இடம்பெறும் பிரதேசங்களி…
-
- 1 reply
- 820 views
-
-
வன்னிப் பிரதேசம் மீது நடத்தபட்டு வரும் தரைவழி வான்வழித் தாக்குதல்களால் சுமார் இரண்டரைலட்சம் வரையிலான மக்கள் இடம் பெயர்ந்து அகதிகளாகி அல்லற்பட்டு வருகின்றனர். எனினும் பௌத்தம் பேசும் இந்த நாட்டு ஜனாதிபதியும் அவரது ஆட்சியயில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும் அந்த மக்கள் நிலை குறித்து கிஞ்சித்தும் கவலைப்படுகின்றவர்கள் அல்ல. இவ்வாறு புதிய ஜனநாயகக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் அரசியல் குழு சாhபாக அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில் வேல் அனுப்பிய அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்டிருப்பவை வருமாறு. வன்னியில் மேற்கொள்ளபட்டு வரும் யுத்த நடவடிக்கை காரணமாக இடம் பெயர்ந்துள்ள சுமார் இரண்டரை லட்சம் மக்களுக்கு உணவுப் பொருட்களும் மருந…
-
- 0 replies
- 644 views
-
-
இலங்கை இராணுவத்திற்கு ஆயுத உதவி செய்து வரும் இந்திய அரசை கண்டித்து திராவிட தமிழர் இயக்க பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை இராணுவத்திற்கு ஆயுத உதவி செய்து வரும் இந்திய அரசை கண்டித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொது செயலாளர் பேரா. சுப. வீரபாண்டியன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த விடுதலை ராசேந்திரன், திரைப்பட இயக்குநர் சீமான் உள்ளிட்ட ஏராளமான இன உணர்வாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்இந்திய அரசிற்கு எதிராகவும், சிங்கள பேரினவாத பாசிச அரசிற்கு எதிராகவும் முழக்கங்கள் எ…
-
- 1 reply
- 802 views
-
-
100 பில்லியன் ரூபாயை இழந்தது கொழும்பு பங்குச்சந்தை [புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2008, 03:41 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் பொருளாதாரம் கடுமையான பதிப்புக்களைச் சந்தித்து வருகையில் கொழும்பு பங்குச்சந்தை இந்த வருடத்தில் 100 பில்லியன் ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்த வருடத்தில் சந்தை முதலீடுகள் பெரும் இழப்புக்களை சந்தித்துள்ளது. இந்த வருடத்தின் சந்தை முதலீடுகளின் இழப்பு 100 பில்லியன் ரூபாய்களாகும். கொழும்பு பங்குச்சந்தை நேற்று செவ்வாய்க்கிழமை 14 பில்லியன் இழப்புக்களை சந்தித்ததை தொடர்ந்து இந்த வருடத்தின் அதன் மொத்த இழப்பு 104.8 பில்லியன் ரூபாய்களை தொட்டுள்ளது. இது கடந்த இரு வருடங்களில் ஏற்பட்ட மிகப்பெரும் இழப்…
-
- 0 replies
- 998 views
-