ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
பட்டினியடும் ஈழத் தமிழ் மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கி அவர்களை காப்பாற்ற புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க அவசர வேண்டுகோள். http://www.orunews.com/?p=1804#more-1804 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26759
-
- 1 reply
- 874 views
-
-
சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்று காணாமல் போவோர் தொகை அதிகரிப்பு [புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 09:19 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] அண்மைய நாட்களில் சிறிலங்காப் படையினரின் பகுதிகளிலும் அவர்களின் சோதனை நிலைகளிலும் காணாமல் போவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இது தொடர்பிலான முறைப்பாடு வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகத்திற்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அதன் விவரம் வருமாறு: 25.05.2008 அன்று வேலை தேடி மன்னாருக்குச் செல்வதாக கூறிச் சென்ற நாச்சிக்குடா கரியாலை நாகபடுவானைச் சேர்ந்த கணேஸ் குடியிருப்பைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கதிரமலை சிறீதரன் என்பவர் வவுனியா சிறிலங்காப் படையினரின் முகாமைத் தாண்டிச் சென்ற பின…
-
- 0 replies
- 711 views
-
-
ஊடகவியலாளர் சிவராம் கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் நோக்கில் நியமிக்கப்பட்டிருந்த சிங்கள அறங்கூறுனர் சபையை கொழும்பு மேல் நீதமன்றம் கலைத்துள்ளது. இந்த கொலைச் சம்பவம் குறித்த விசாரணைகள் நேற்று(26) கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி டப்ளியூ.ஏ.டி.ரத்னாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. சிங்கள மொழி பேசக்கூடிய உறுப்பினர்களைக் கொண்ட அறங்கூறுனர் சபையின் எதிரில் இந்த வழக்கு விசாரணைகள் நடைபெற வேண்டும் என குற்றவாளிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து இந்த அறங்கூறுனர் சபையை மேல் நீதிமன்றம் நியமித்திருந்தது. எனினும் வழக்கின் 4வது சாட்சியாளரான பிரசாந்த புபுது ரத்னாயக்க என்பவரைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இந்த அறங்கூறுனர் சப…
-
- 0 replies
- 763 views
-
-
ஐ.நா.செயலாளரை சந்தித்துப்பேச மகிந்த முயற்சி புதன், 27 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] எதிர்வரும் செப்ரெம்பவர் மாதம் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, அந்த வேளைகளில் பிரத்தியேகமாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பாங்கி மூனை சந்தித்துப்பேச முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்தச்சந்திப்புக்களில் தற்போதைய சிறி லங்கா நிலவரங்களை ஐ.நா. செயலாளருக்கு தெளிவுபடுத்துவதுடன், சிறி லங்கா தொடர்பாக மேற்குலக நாடுகளில் தோன்றியுள்ள காழ்ப்புணர்ச்சியை போக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மகிந்த திட்டமிட்டுள்ளதுடன், முக்கியமாக பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட ப…
-
- 1 reply
- 881 views
-
-
திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வான் தாக்குதலை நடத்தியிருப்பது, இலங்கைப் படைத் தரப்பினர் மத்தியில் மனோநிலையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னிப் பிராந்தியத்தை இந்த வருட இறுதிக்குள் தமது... கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என அரசாங்கம் பிரசாரம் செய்துகொண்டிருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல் அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமையை மறுக்கவியலாது. மறுபுறத்தில் தமிழர்கள் மத்தியில் இந்தத் தாக்குதல் ஒரு தெம்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகத் தமிழர்கள் மத்தியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னிப் பகுதிக்குள் படைத்தரப்புப் பிரவேசித்திருப்பது சற்றுக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து விடுவார்களோ? என்ற அச்ச…
-
- 0 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தித் தருமாறு, சிறீலங்கா அரசுத் தலைவரது சகோதரரும், ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஸ தன்னிடம் கேட்டிருந்த விடயம் தொடர்பாகவும், சிறீலங்காவின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரது விசாரணையின்போது நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியிருக்கின்றார். அத்துடன், சமாதான காலத்தில் வன்னிக்குச் சென்றமை தொடர்பாக தன்னிடம் அதிகம் விசாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். மக்கள் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் மனோ கணேசனை சிறீலங்காவின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்தவுடன், அடுத்த வாரம் சந்திக்க இருந்த சிறீலங்காவிற்கான நெதர்லாந்துத் தூதுவர், இன்று அவரை அவசரமாக அழைத்து சந்தித்துள்ளார். விடுதலைப…
-
- 0 replies
- 1.6k views
-
-
இடம்பெயர்ந்தோருக்கு 2,800 மெற்றிக்தொன் உணவு தேவை: உதவி அமைப்பு தெரிவிப்பு [புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 07:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காப் படையினரின் போர் நடவடிக்கை காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களுக்கு 2,800 மெற்றிக்தொன் உணவு தேவைப்படுவதாக உதவி அமைப்பொன்றின் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள நிலையில் இம்மக்களுக்கான உணவு வழங்கல் நெருக்கடி காணப்படுகின்றது. ஓமந்தை ஊடாக சிறிலங்காப் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் உணவுப் பொருட்களை உதவி அமைப்புக்கள் எடுத்து வருவதில் இடர்கள் கா…
-
- 0 replies
- 424 views
-
-
நெருக்கடிக்குள் இடம்பெயர்ந்த மக்கள்: முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர் [புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 07:20 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவில் ஐந்து உதவி அரச அதிபர் பிரிவுகளிலும் இடம்பெயர்ந்த மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்று முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் க.பார்த்தீபன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு திருமுறிகண்டியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற இடர்காலக் கூட்டத்தில் தலைமை உரையாற்றும் போது அவர் மேலும் கூறியதாவது: நேற்று கிடைத்த தகவல்களின் படி முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் 31,959 குடும்பங்களைச் சேர்ந்த 1,32,993 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். எறிகணை வீச்சுக்களினால் நாள்தோறும் 300 குடும்பங்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன. உல…
-
- 0 replies
- 538 views
-
-
"ஓயாத அலையாய் பொங்கியெழுவோம்" [புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 07:13 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] நம்பிக்கையை நாம் இழக்கிலோம் ஓயாத அலையாய் பொங்கி எழுவோம் என்று யாழ் மாவட்ட உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர் இணையம் அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஓயாத அலையாய் எழுந்த எம் உறவுகளே ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த வெள்ளையரின் வல்வளைப்புக்கு எதிராக கிளர்ந்தெழுந்து 205 ஆண்டுகளுக்கு முன்பே முல்லைத்த்தீவுக் கோட்டையை தகர்த்தெறிந்து வெற்றிக்கொடி நாட்டிய மாவீரன் பண்டாவன்னியன் வரலாறு பதித்த வன்னி மண்ணில் நாம் வாழ்கின்றோம் என்பது பெருமையல்லவா! வெள்ளையர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆட்சி அதிகாரத்தை தமக்கே சாதகமாகப் பயன்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
துணுக்காயில் கிளைமோர் தாக்குதல்: அப்பாவிப் பொதுமகன் பலி; மூவர் காயம் [புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 06:59 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] துணுக்காய் புத்துவெட்டுவானில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் அப்பாவி பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர். துணுக்காய் பிரிவுக்கு உட்பட்ட புத்துவெட்டுவானில் இன்று புதன்கிழமை காலை தமது வீட்டுப்பொருட்களை ஏற்றச்சென்றவர்களின் உழுவூர்தி மீது ஆழ ஊடுருவும் அணியினர் கிளைமோர் தாக்குதலை நடத்தினர். ஐயன்கன்குளத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்துவெட்டுவானில் தங்கியிருந்த குடும்பம் ஒன்று அங்கிருந்து இடம்பெயர்ந்த நிலையில் அதன் பொருட்களை ஏற்றிச்சென்ற உழுவூர்தி மீது கிள…
-
- 0 replies
- 615 views
-
-
புலிகளின யுத்த வியூக இரகசியங்கள் இராணுவப் படையினர் வசம் - அரச ஊடகம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் யுத்த வியூகம் தொடர்பான பல முக்கிய இரகசியங்கள் இராணுவத்தினருக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரசாங்கத்திற்குச் சார்பான சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. இந்த யுத்த வியூகங்களை மாற்றியமைப்பதற்காகவே புலிகள் யுத்த நிறுத்தமொன்றைக் கோரியதாகவும், அது பலனற்றுப் போனதாகவும் லண்டனில் உள்ள புலிகள் வலையமைப்பை மேற்கோள் காட்டிக் குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளைக் காப்பாற்றும் நோக்கில் லண்டனில் விசேட இரகசிய கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது அடைந்துள்ள பின்னடைவிற்குக் கருணா அம்மானே முழுப்பொறுப்பு …
-
- 13 replies
- 4.1k views
-
-
தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டு ஈழத் தமிழர்களை இந்தியா காப்பாற்றவேண்டும் - வீரமணி புதன், 27 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] அமெரிக்கர்களை சீனா கைது செய்தால் அமெரிக்கா தலையிடும் நிலையில், ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசு கண்டுகொள்ளாதது ஏன் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் விடுதலைப்புலிகளை வேட்டையாடும் சாக்கில் அப்பாவித் தமிழ் குடும்பங்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. சமீபத்தில் இலங்கை சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை அங்குள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து ஈழத்தமிழர் கொ…
-
- 0 replies
- 803 views
-
-
திருமலை வான் தாக்குதல்- ஆறு கடற்படையினர் பலி 24 பேர் காயாம், ஆனால் சேதம் இல்லையாம்? 6 killed, 24 injured in Air Tiger attack Wednesday, 27 August 2008 13:36 Six naval personnel were killed and 24 others injured in an air raid by the LTTE on the Trincomalee Naval Base last night (August 26th), defence sources said. Meanwhile, the Defence Ministry website, citing Navy sources, said the navy base was warned by the Air Force of an approaching Air Tiger aircraft around 9.00 pm. "After few minutes, naval troops detected the aircraft and engaged it with anti aircraft guns. The machinegun fire caused the aircraft to make away without entering the nava…
-
- 9 replies
- 3.8k views
-
-
வீரகேசரி இணையம் 8/27/2008 10:54:21 AM - ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்றுள்ள தெற்கு ஒசெத்தியா மற்றும் அப்காசியா பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரிக்கும் ஆணையை ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மேட்வேடேவ் கைசாத்திட்டுள்ளார். ஜோர்ஜிய ஜனாதிபதி மிகெல் சாகாஷ்விலி, கிளர்சியாளர்களுக்கு எதிராக இனப்படுகொலையை ஆரம்பித்ததன் காரணமாக இந்த நடவடிக்கையை எடுப்பதில் இருந்து தனக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது என்று ரஷ்ய ஜனாதிபதி பி பி சிக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டார். தெற்கு ஒசெத்தியா மற்றும் அப்காசியாவை ரஷ்யா அங்கீகரித்ததை மேற்குலம் கோசோவோவை தனி நாடாக அங்கீகரித்ததுடன் ரஷ்ய ஜனாதிபதி ஒப்பிட்டார். ரஷ்யாவுக்கும் மேற்குலகுக்கும் இடையேயான உறவு வேகமாக சீர்கெடுகிறது என்றும் புதியதொரு பன…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்க தூதரக அதிகாரியை கைது செய்யுமாறு சிறிலங்கா நீதிமன்றம் உத்தரவு [செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2008, 07:55 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] போலி அமெரிக்க விசா வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய அமெரிக்க தூதரக விசாரணை அதிகாரிக்கு எதிராக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் கைது உத்தரவை பிறப்பித்துள்ளது. கடவுச்சீட்டுடன் போலி அமெரிக்க விசா வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு சிங்களவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவதற்காக, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் விசா விசாரணை அதிகாரியை நீதிமன்றில் முன்…
-
- 4 replies
- 2k views
-
-
தேர்தல் வெற்றி மேலும் யுத்தத்தை நோக்கி...! 27 - August - 2008 வ.திருநாவுக்கரசு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளை முன்கூட்டியே கலைத்து தேர்தல்களை நடத்துவதற்குத் தலைப்பட்டது. வெற்றியீட்டுவதற்கே ஒழிய தோல்வியடைவதற்காக அல்ல. எத்தகைய வழிமுறைகளையாயினும் கையாண்டு வெற்றிவாகை சூடுவோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் (ஐ.ம.சு.மு.) கங்கணம் கட்டி நின்றனர். ""காவல்துறையினர், அரசாங்க அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் எல்லோரும் எம்பக்கம் இருக்கின்றனர். எனவே, எவ்வாறான தில்லுமுல்லுகளையாவது செய்து நாம் தேர்தல்களில் வெற்றியீட்டி விடுவோம்' என்று அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே பகிரங்கமாகக் கூறிவைத்த விடயமானது தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவின்…
-
- 0 replies
- 727 views
-
-
கார்கால மேகம் கண்டு பார் இன்று மழையேஎன்று யாரும் கூறிடலாம்- ஆனாலும் குறிப்பாக அந்த மேகம் தான் - வரபோகின்ற இந்த மழைக்கு காரணம் என்றே வெறும் யூகத்தால் கூறுவது -என்பது வரும் வேகத்தால் உறைப்பதன்றி வேறல்ல பார் போற்றும் இந்த வெற்றியின் துவக்கம் தார் போன்ற மேகத்தால் மறைத்தல் கண்டே தேறுதல் கூறிடும் தேர்ந்த நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகளை கொண்டு பாதியும் உண்மையில்லை - பாவி இவன் சேதியில் என்றே பரிகசிப்பது முறையாமோ? அவை விடுத்து - நம் மக்கள் அவலம் போக்க இவையே தேவைஎன கூறிடுவேன் - குற்றமில்லையென்றே வருங்காலம் நமக்கு வளமானதாக இருக்க தருங்காலம் இதுவென்றே - நமது பங்களிப்பை தருங்காலம் இதுவன்றோ! பார் முழுதும் பரவிய தமிழினத்தின் திரவியம் மட்டுமல்ல பரப்பு…
-
- 0 replies
- 1.7k views
-
-
தற்ஸ் தமிழ் இணையம் திரிகோணமலை: விடுதலைப் புலிகள் நேற்று இரவு அதிரடி விமானத் தாக்குதலை நடத்தினர். அடுத்தடுத்து நடந்த இந்தத் தாக்குதலில் திரிகோணமலை துறைமுகம் பலத்த சேதமடைந்தது. வீரர்களை ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்றும் சேதமடைந்தது. புலிகளின் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்தனர். இலங்கையில் நடந்து வரும் போரின் தீவிரம் உக்கிரமடைந்து வருகிறது. தற்போது கிழக்கை விட்டு விட்டு வடக்கில் ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அப்பகுதியில் சில முக்கிய இடங்களையும் ராணுவம் பிடித்ததாக செய்திகள் வந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் திரிகோணமலை துறைமுகத்தையும், அருகில் உள்ள கடற்படைத் தளத்தையும் குறி வ…
-
- 1 reply
- 3.3k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல்துறை நிபுணர் கேணல் ராஜூ - த.தமயா - தமிழீழத் தேசியத் தலைவருடன் நீண்ட காலம் உடனிருந்து தலைவரின் போரியல் வடிவங்கள் பலவற்றிற்குச் செயல் வடிவம் கொடுத்தவர் கேணல் ராஜூஃகுயிலன். முதலாவது சிறப்புக் கொமாண்டோப் படையணியை உருவாக்கியதுடன் விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளராகவும் கடமையாற்றினார். விடுதலைப் போரின் முதலாவது கனரக ஆட்டிலறிப் பீரங்கிப் படையணியின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர். இவர் 25.08.2002 அன்று சுகவீனம் காரணமாக வீரச்சாவடைந்தார். அவரின் நினைவாக இக் கட்டுரை பிரசுரமாகின்றது. தாய்மண் விடிவுக்காக வீரம் பொருந்திய பல மாவீரர்களை எம் தாய்த்திருநாடு இழந்திருக்கின்றது. பல மகத்தான வீரர்களை தமிழர் வரலாறு பத…
-
- 1 reply
- 2.5k views
-
-
”இலங்கையில் தமிழர்” வரலாற்று நூல் நெதர்லாந்தில் வெளியிடப்பட்டது திங்கள், 25 ஆகஸ்ட் 2008 [தாயகன்] ”இலங்கையில் தமிழர்” என்ற முக்கிய வராலற்று நூல் நேற்றும், நேற்று முன்தினமும் நெதர்லாந்தில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய இந்த நூல் முதன் முதலில் யேர்மனியில் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பிரான்சில் வெளியிடப்பட்டது. நெதர்லாந்தைத் தொடர்ந்து சுவிற்சர்லாந்து, நோர்வே போன்ற ஏனைய பல ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நூல் வெளியிடப்பட இருக்கி்ன்றது. ஈழத் தமிழர்களின் வரலாற்றை ஆதராங்களுடன் முழுமையாக எடுத்துரைக்கும் இந்த நூலை, தமிழ் மக்கள் அனைவரும் படித்தறிய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பதிவு இந்த நூலை …
-
- 1 reply
- 1.3k views
-
-
திருமலை துறைமுகத்தில் வான்புலிகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல் நடைபெற்று மிகக்குறுகிய நேரத்தில் தமிழ்வின் இணையத்தளம் ஒரு ஆய்வினை வெளியிட்டிருக்கிறது. மிகக்குறுகிய நேரத்தில் இந்த கள ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளருக்கு வாழ்த்துக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் புதிய "சிந்தனை" ஒன்றுக்கு வழிவகுத்துள்ளது. ( வாராந்த கள ஆய்வு) [ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 01:24.32 AM GMT +05:30 ] திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வான் தாக்குதலை நடத்தியிருப்பது, இலங்கைப் படைத் தரப்பினர் மத்தியில் மனோநிலையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னிப் பிராந்தியத்தை இந்த வருட இறுதிக்குள் தமது கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என அரசாங்கம் பிரசாரம் செய…
-
- 1 reply
- 2.2k views
-
-
ஆலங்குளம் நோக்கிய படையினரின் முன்நகர்வு முறியடிப்பு [புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 01:10 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] துணுக்காய் ஆலங்குளம் நோக்கிய சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. உயிலங்குளம் பகுதியிலிருந்து ஆலங்குளம் நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:00 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பெருமெடுப்பிலான முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக பிற்பகல் 4:00 மணிவரை நீடித்த விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதலில் படையினரின் முன்னகர்வு முறியடிக்கப்பட்டது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் ஒன்றும் படைப்பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
நாராயணன் குழுவினரின் இலங்கை வருகையும் அவர்களின்; உள்நோக்கங்களும் -தாயகத்திலிருந்து மு.திரு- இக்கட்டுரையானது முற்றிலும் ஒரு அறிவியற் கண்ணோட்டத்திலேயே முன்வைக்கப்படுகின்றது. விருப்பு வெறுப்புக்கு அப்பால் அரசியல் விஞ்ஞானத்தை அப்படியே யதார்த்தத்தில் கணித ரீதியாக கணக்குப் போட்டுப்பார்க்கும் ஓர் ஆய்வாகவே இது அமைகின்றது. தேசிய இனப்பிரச்சினை என்பது எப்போதும் முதலாவது அர்த்தத்தில் ஒரு சர்வதேசப் பிரச்சனை ஆகும். சர்வதேசம் என்பதற்குரிய ஆங்கிலப்பதம் International என்பதாகும். இதன்படி International என்றால் தேசங்களுக்கிடையானதெனப் பொருள்படும். எனவே International Relations என்றால் தேசங்களுக்கிடையான உறவுகள் என்பதாகும். ஆகவே இரண்டிற்கு மேற்பட்ட நாடுகளுக்கள…
-
- 1 reply
- 1.5k views
-
-
துணுக்காயிலும் வன்னேரியிலும் சிறிலங்கா சிறப்பு கொமாண்டோ தாக்குதல்கள் முறியடிப்பு [சனிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2008, 07:41 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] துணுக்காயிலும் வன்னேரியிலும் சிறிலங்கா சிறப்புப் கொமாண்டோப் படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படைத்தரப்பினரின் மூன்று உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. துணுக்காய் பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் சிறிலங்கா சிறப்பு கொமாண்டோப் படையினர் முன்நகர்வுத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலை விடுதலைப் புலிகள் முறியடித்தனர். படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் ஒன்றும் படைப் பொருட்களும் விடுதலைப் புலி…
-
- 15 replies
- 3k views
-
-
http://www.russiatoday.com/en Russian President Dmitry Medvedev has declared that Russia will recognise the independence of Georgia’s breakaway republics of Abkhazia and South Ossetia. He made the announcement in Sochi following a unanimous vote for the republics’ independence by both houses of the Russian Parliament in Moscow on Monday. Russia recognizes Georgian rebel regions Russian President Dmitry Medvedev said Tuesday he has signed an order recognizing the independence of South Ossetia and Abkhazia, two breakaway regions in the Republic of Georgia. full story Bush warns Moscow over rebels Special: Georgia Crisis http://edition.cnn.com/
-
- 8 replies
- 2.3k views
-